Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_040. Show all posts
Showing posts with label Athikaaram_040. Show all posts

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

குறள் 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
ஒருமை - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஒருமைக்கண் - ஒரு பிறப்பில்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கற்ற - கற்கை - படித்தல்

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

ஒருவற்கு -  ஒரு மனிதனுக்கு

எழுமையும் - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு.

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
ஒருவர் தன்னுடைய பிறப்பில் கற்றவை அந்தப் பிறவியில் மட்டும் பயன் தராமல் மேலும் பிறக்கப்போகும் ஏழுபிறவிக்கும் பயன் தரும் தன்மையை சிறப்பை வாய்ந்தது. கற்கைக்கு அவ்வளவு பலன் (சிறப்பு) இருக்கிறது. ஆதலால் கல் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

இயற்கை விவசாயம் பற்றி ”ஒற்றை வைக்கோல் புரட்சி” (The One-Straw Revolution) என்கிற புத்தகத்தை எழுதிய மசானபு ஃபுகோகா (Masanobu Fukuoka) என்பவர் அப்புத்தகத்தில் ஒரு கருத்தை கூறுவார் - வாழ்வு என்பது ஒருதடவை பிறந்து முடிவது அல்ல. அது ஓர் தொடர் சங்கிலி. நெற்பயிற்கள் எப்படி தொடர்ந்து வளர்ந்து மடிந்து மறுபடியும் வளர்ந்து தொடர்கிறதோ அதுப்போன்றது.

நெற்பயிற்கள் போன்று நம் வாழ்வை நாம் நோக்கினால் நமது சந்ததியாக நமது வாழ்வின் தொடர்ச்சியாக நமது பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, கொள்ளிப்பேரபிள்ளைகளை, எள்ளுப்பேரப்பிள்ளைகளை காணலாம்.  நாம் கற்றால், நாம் பல இன்னல்களை களைந்து கற்காததை இருந்ததைவிட இன்பமாக வாழலாம். இதனால் நமது பிள்ளைகளும் நன்றாக வாழ்வர். அதுவே நாம் நன்றாக இல்லையென்றால் நமது பிள்ளைகளும் சிரமப்படுவர். 

நாம் பூஜ்ஜியமாக (0) பிறந்து கற்றால் நாம் +1 ஆக முன்னேறுவோம். நமது பிள்ளைகள் கற்றால் +2 வாக முன்னேறுவார்கள், பேரப்பிள்ளைகள் கற்றால் +3வாக முன்னேறுவார்கள். இவர்களை பார்த்து இவர்கள் அருகில் உள்ளோரும் மேம்படுவார்கள். முக்கியமாக என்னவெனில் நாம் செய்த தவறுகளை நமது பிள்ளைகள் செய்யாமல் பார்த்துக்கொள்ளலாம். நமது அறிவும் அனுபவமும் அவர்களுக்கு உதவும்.

அதனால் தான் ஒருபிறவியில் கற்றது ஏழுப்பிறவிக்கும் பயன்படும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஆதலால் கல்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
குறள் 126

பரிமேலழகர் உரை
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.) சி இலக்குவனார் உரை: நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி ஒருவர்க்கு மிகுதியும் வலிமை ஆதலை உடையது.

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.


Thirukkural - Management - Learning
There are questions and debates on life after death. Even the belief that a person has seven ages is debatable. However, Valluvar, through Kural 39 8, highlights the importance of learning by assuring that the learning that one acquires in the present life will serve him and help him for seven lives in future.

The learning acquired in one birth
Helps a man in seven.

Therefore, proper learning is essential as that sort of learning lasts for many ages.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

குறள் 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.
ஆனும் - ஆயினும்; ஆவது
யாதானும் - எதுவாயினும்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

ஆல் - அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம்இவற்றைக்குறிக்கும்இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறைவியங்கோள்விகுதி; எதிர்காலவினையெச்சவிகுதி.

ஆமால் - போன்றதாம்

ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

ஆமால் - போன்றதாம்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

சாதல் - இறத்தல்

துணையும்துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

கல்லாதவாறு? - கற்காமல் இருப்பது ஏன்?

முழுப்பொருள்
நூல்களை கற்ற ஒருவனுக்கு அவன் செல்லும் இடமெல்லாம் அவனுடைய இடமாக அவனுடைய பிறப்பிடம் போன்று மாறிவிடும். ஏனெனில் கற்றோரை எல்லோரும் ஏற்பர். கற்றோருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு (என்பது பழமொழி). கல்விக்கு அவ்வளவு சிறப்பு உள்ளது. ஆனால் இவ்வளவு சிறப்பு இருந்தும் இறப்பு வரைக்கும் கற்காமல் பலர் இருப்பது ஏனோ? கற்காமல் ஏன் இருக்கிறாய் என்று திருவள்ளுவர் கேட்கிறார்.

கற்றவர்களுக்கு யாதுமூர் என்றாகிவிடும் ஏனெனில் அறிவு என்னும் ஒளி இருக்கும் பொழுது எத்தனை இருளானாலும் அதனை அவ்வொளி களைய முடியும். கற்றோர்களை எல்லோரும் ஏற்பர். அதுவே கல்லாதவர்கள் தான் அவ்விருளில் செல்ல பயப்படுவர். 

இதனை சில ஆண்டுகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்திவிட்டு பின்பு வாழ்வில் கற்காமல் தேங்கி நிற்கும் குட்டைப்போன்றவருக்கும் பொருத்திப்பார்க்கலாம் ஏனெனில் அவர்கள் எவ்வளவு கற்றார்களோ அவ்வளவே எல்லை. அதனைத் தாண்டி அவர்களால் செல்ல முடியாது. 

எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.

இப்பழமொழியை வைத்து, எழுதப்பட்ட பழமொழிநானூறுப் பாடலொன்று இதோ.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னரிற் கற்றோன் சிறப்புடையன் –மன்னர்க்குத்
தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு.

மற்றுமொரு பழமொழிநானூறுப் (55) பாடலொன்றும் இக்கருத்தை இவ்வாறு கூறுகிறது.
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறநா.192.1)
“மரங்கொல் தச்சன் கைவல் சிறார்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செவினும் அத்திசைச் சோறே” (புறநா.206:11-3)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?
(உயிரோடு சேறலின், 'சாம்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?. இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.

மு.வரதராசனார் உரை
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

சாலமன் பாப்பையா உரை
கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

குறள் 396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
[பொருட்பால், அரசியல், கல்வி]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
தொட்டல் - தீண்டல்; உண்டல்; கட்டுதல்; தோண்டல்.

அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

அனைய - அத்தன்மையான; ஒத்த.

ஊறும் - உறுகை - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்

தொட்டனைத்தூறும் – தோண்டத்தோண்ட நீர்சுரக்கும்

மணற் - மணல் - பொடியாயுள்ளபிதிர்மண்; மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று

கேணி - கிணறு; சிறுகுளம்; அகழி; தொட்டில்.

மாந்தர்க்குக் மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்

கற்றல் - கற்கை - படித்தல்.

கற்றனைத்து - அவர்கள் கற்றுக்கொள்ளும் அனைத்தும்

ஊறும்உறுகை - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
ஒரு கிணற்றில் தோண்ட தோண்ட நீர் சுறக்கும். ஆனால் எவ்வளவு தோண்டுகிறோமொ அவ்வளவு நீர்தான் சுறக்கும். நம் முயற்சியின் அளவிற்கு தான் பலனும் இருக்கும். அதுப்போல ஒரு மனிதருக்கு அவர் கற்க கற்க அவரது அறிவு பெருகும். மக்கள் அவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவே அறிவும் வளரும். ஆங்கிலத்தில் இதனை தொடர்க்கல்வி / “continuous learning"என்றுக்கூறுவார்கள். 

ஒரு நூலில் இருந்து ஒரு ஆசிரியரிடம் இருந்து கற்கும் பொழுது நாம் எவ்வளவு உழைப்பையும் முயற்சியையும் போடுகிறோமோ அந்த அளவிற்கு நமது கற்கும் திறனும் மிகும் அறிவும் மிகும். இல்லையென்றால் நுனிப்புல்லை மேய்ந்ததுப் போன்று ஆகிவிடும். 

அதுமட்டுமின்றி நாம் கற்கும் முன்பு கூட நமது உழைப்பு அவசியம் தேவை, அப்பொழுது தான் நாம் ஆசிரியரிடம் இருந்தோ அல்லது பிறருடன் இருந்தோ கற்கும் பொழுது கசடற கற்க முடியும். ஒரு வகுப்பிற்கு செல்லும் பொழுது படிக்கபோகிற பாடத்தைப் பற்றி வாசித்து உணராமல் கற்பதை விட வாசித்து விட்டு செல்லும் பொழுது நாம் கற்கும் அளவே வேறு மாதிரி இருக்கும். அப்பொழுது அறிவோம் நம் உண்மை அறிவே மிகும் என்று. ஆதாவது நாம் வகுப்பிற்கு முன் என்ன கற்றோமோ அதை தான் வகுப்பிற்குப்பினும் கற்று இருப்போம் ஆனால் வகுப்பிற்குபின் அது ஆழமாக வேரூண்றி இருக்கும். அதுவே கற்காமல் வகுப்பிற்கு சென்றால் நாம் கற்பது மிக குறைவாகவே இருக்கும். 

மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி அறிவையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான தனக்கான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். கற்கப்படவேண்டும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.

மணல் கேணியில், தோண்டிய பின், சிறிது காலத்தில்  மண் சரிந்து உள்ளே விழும். நீர் கலங்கும். உள்ளே விழுந்த மண்ணை தோண்டி எடுத்து வெளியே போட வேண்டும்.  அப்போதுதான், அதில் உள்ள நீரை பயன் படுத்த முடியும்.

அது போல,  ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் இருக்கும். எப்போதோ , பள்ளியில், கல்லூரியில் படித்தோம், அதுவே போதும் என்று இருந்து விடக் கூடாது. படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

'தூறும்' என்பது ஒரே சொல் தான். இதன் பொருள் 'ஆழமாகுதல்' என்பதாகும். கிணறு முதலானவற்றை ஆழப்படுத்தும் செயலான 'தூர்வாருதல்' என்னும் சொல்லாடல் இன்றும் நம்மிடையே உள்ளது அல்லவா?. தூறிய பகுதியே 'துறை' ஆகும். இது ஆற்றுத் துறை, படித்துறை முதலான அனைத்து நீர்த்துறைகளையும் குறிக்கும். ஆழமாகுதல் என்ற பொருளில் கொண்டால் இப்பாடலின் பொருள் இவ்வாறு வரும். ' தோண்டிய அளவே மணற்கேணி ஆழமாகும். அதைப் போல கற்ற அளவே மாந்தர்க்கு அறிவு ஆழமாகும்'.

நிலத்தில் தோண்டப்படும் கிணறுக்கும் ஆற்று மணலில் தோண்டப்படும் கிணறுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. மணல்கிணறு மிக விரைவாக மூடிக்கொண்டு விடும். அதை அடிக்கடி தோண்டிக்கொண்டே இருந்தால் தான் ஆழமாகவே இருக்கும். அத்துடன் நிலக்கேணியைப் போலன்றி மணற்கேணியைத் தோண்டுவதும் எளிதே ஆகும். அதனால் தான் வள்ளுவர் நிலக்கேணியைக் கூறாமல் மணற்கேணியை அறிவுக்கு ஒப்பாகக் கூறுகிறார். இந்த மணற்கேணியைப் போலத்தான் நமது அறிவும். கல்வி கற்பது என்பது எளிதான செயலே ஆகும். ஆனால் காலத்தின் தேவைக்கேற்ப நல்ல நூல்களைக் கற்றுக் கொண்டிருந்தால் தான் நமது அறிவு மூடிக்கொள்ளாது இல்லையேல் மணற்கேணி போல அறிவு மூடிக்கொள்ள நாம் 'மூடனாகி' விடுவோம். அத்துடன் நாம் கற்கின்ற அளவே நமது அறிவின் ஆழமும் இருக்கும். இக்காலத்துச் சொல்லாடலான ' உனக்கு மண்டையில் என்ன களிமண்ணா இருக்கிறது?' என்பது எதைக் குறிக்கிறது? நிச்சயம் மூடிப்போன அறிவினைத் தான்.

”ஆழமாகத் தோண்டத் தோண்டா ஊறும் நீர்ப்போல” என ஆழத்தை மட்டும் சொல்ல முனைந்திருந்தால் வள்ளுவர் கேணி என்றோ கிணறு என்றோ சொல்லியிருப்பார். ஏனெனில் மணற்கேணியை அதிக நீர்வேண்டி ஆழமாகத் தோண்ட முற்பட்டால் பக்காவட்டிலுள்ள மணல் சரிந்து விழுந்துக்கொண்டே இருக்கும். பக்கவாட்டில் அகலமாக அகழ்ந்துவிட்டு பின் ஆழமாக தோண்டினால் தான் மண்சரியாமல் இருக்கும். மணற்கேணியைப் பொறுத்தவரை ஆழத்திற்கும் அகலத்திற்குமான விகிதம் மணலைப் பொறுத்து சரியாகப் பேணப்படுதல் நன்று. கேணி அல்லது கிணற்றைப் போல செங்குத்து வடிவம் கொண்டதல்ல மணற்கேணி. அது ஒரு அரை நீள்கோள வடிவத்தை தானே அமைத்துக்கொள்ளும். ஊறிய நீரை குவளைக்கொண்டு முகக்கையி சிறிது மண் சரியும். மீண்டும் தோண்டிவிட்டு முகக்க வேண்டும். அந்தச் சிறிய ஊற்றிலிருந்து எத்தனைக் குடங்கள் வேண்டுமானாலும் வடிகட்டப்பட்ட, தூய்மையான, கசடு இல்லாத நீரைப் பெற முடியும். தனி ஒருவரே எந்தப் கருவியுமின்றி கைகளாலேயே இதை தோண்டிவிடமுடியும் என்பது இதன் சிறப்பு. 

“கற்றனைத் தூறும் அறிவு” என்பதோடு பொருத்திப் பாருங்கள். கற்றறிதல் ஆழமானதாக மட்டுமின்றி அகலமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் ஆசைப்போலும். அதனாலேயே ஆழமான, செங்குத்தான, பலருடைய உழைப்பின் பயனான கேணியை விடுத்து இந்த எளிய மணற்கேணியைத் தெரிவுசெய்தார் போலும். “கசடறக் கற்க” இது ஒரு வழி போலும். நம் பட்டறிவிலிருந்தே இதற்கான எடுத்துக்காட்டுகளைப் பெற முடியும். பெரிய கண்டுப்பிடிப்பாளர் என அறியப்பட்ட எடிசனும், அவர் வளர்த்த பூனையும் அதன் குட்டிகளும், அவர் கதவில் போட்டுவைத்த மூன்று துளைகளும் செங்குத்து அறிவின் சான்றுகள். தாய்ப்பூனை வந்துசெல்ல ஒரு துளையும், இரண்டு குட்டிகள் வந்து செல்ல இரண்டு துளைகளும் என மூன்று துளைகளை அமைத்த அறிவாளர் அவர். அறிவு அகலமானதாகவும் இருத்தல் வேண்டும். 

மணற்கேணியின் பக்காவாட்டிலும், ஆழத்திலும் தோண்டாடும் அளவிற்கு நீர்நிறையும். அதுப்போல ஆழமாகவும், விரிவாகவும் கற்குந்தோறும் அறிவு நிறையும். 


அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும் மேலும் அறிவு வளரும். கற்றது எனக்கு மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு இருந்தால், நாளடைவில் மணல் உள்ளே விழுந்து அந்த கேணி மூடிக் கொள்ளும். மூடிக் கொள்ளா விட்டாலும்,  தேங்கிய நீர் கெட்டுப் போய் விடும். படித்ததை பகிர வேண்டும்.



எல்லோரும் ஞானத்துடன் தான் பிறக்கிறோம். ஆனால் மணல் என்னும் அழுக்கின் தோண்டி எடுத்து நீக்க வேண்டும். அப்பொழுது அறிவு/ஞானம் வரும்.







நினைவில் கொள்க ”கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்” என்பது பழமொழி.

ஆனால். சிலர் இப்படியும் கூறுவர்: “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அதுபோலப் படிப்பு வெற்றிக்கு வழி வகுக்காது.” “எத்தனையோ பேர் படிக்காமல் பெரிய ஆளாகி இருக்கிறார்கள். நம் காமராஜர் இல்லையா? ஆறாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர் நாடு போற்றும் நல்ல முதல்வராக இல்லையா?” “பள்ளியில் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு வகுப்பில் கடைசியாக வந்தவர்கள் முதல் மதிப்பெண் எடுத்தவர்களை விட அதிகமாக முன்னேறியதில்லையா?. இதற்கு பதில்: சில விஷயங்களை நாம் இங்குப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில், விதி விலக்காக உள்ளவர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் வேறு ஏதாவது ஒரு சிறப்புத் திறமை இருந்திருக்கும். அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.உதாரணமாக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மத்திய உணவுத் திட்டமும் இலவசக் கல்வித் திட்டமும் நெ.து.சுந்தரவடிவேல் என்னும் அரசாங்க கல்வி ஆலோசகர் மற்றும் பொதுகல்வி இயக்குனரால் வடிவமைக்கப் பெற்றது. அவர் பல நூல்களை கற்றவர் பல நாடுகள் சென்று அந்த அனுபவங்கள் மூலம் இந்த திட்டத்தை வடிவமைத்தார். 

மேலும் அறிவு என்பது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் பெறுவது அல்ல. அவை வாழ்க்கை பாடமாகவும் அமையக்கூடும். புத்தகங்களைப் படிப்பது பல மனிதர்களின் அனுபவத்தை படிப்பதற்கு சமம். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் இவற்றிடம் இருந்தும் கற்கலாம். ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கு “21 குரு” என்றார். அதில் பூமி, ஆகாயம், புறா, மீன், யானை போன்றவையும் அடக்கம்!.

அறிவு வளர மேலும் மேலும் படிக்க வேண்டும். படித்ததை மறக்காமல் இருக்க, அதன் படி நடக்க, மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.

கம்பராமயணத்தில் (கம்ப்.நகரப்.8) 
“நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி 
நுணங்கிய நுவலரும் உணர்வே” கம்பர் கூறுவது, கற்றனைத்தூறும் அறிவு என்பதையே!

‘தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்ற வரியை கற்கும்தோறும் அறிவு,தோண்டும்தோறும் ஊற்று என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் வள்ளுவர் மணற்கேணி என்கிறார். தோண்டுவதை நிறுத்தினால் விரைவிலேயே தூர்ந்து இல்லாமலாகி விடும் ஊற்று அது என எண்ணும்போது மேலதிகப் பொருள் சாத்தியமாகிறது.

இவ்வரி வருகிறது “நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. ”

இன்றைய முதலீட்டிய உலகில் பிற அனைத்து துறைகளிலும் சுதந்திரம், தனித்துவம், வணங்காமை, தன்முனைப்பு ஆகியவை ஒருவகைப் பண்புகளாகவே நிலைகொள்கின்றன. கற்றுக்கொள்ளும் இடத்தில் மட்டும் உரிய இடத்தில் வணங்குதலும் உரிய முறையில் பணிதலும் அங்கே அவசியமானவை என்று தோன்றுகிறது. நாம் நமது வணக்கத்தின் மூலம், பணிதலின் மூலம் நாம் நம்து எல்லையைக் காணமுடியும். நமது பலவீனங்களையும் குறை பாடுகளையும் அளந்து அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின்னரே நம்மை நாமே உடைத்து மறுவார்ப்பு செய்ய முடியும்.

நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. அதனூடாகவே வெளியிலிருந்து வரும் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் நம்முள் இடமளிக்க முடியும். அவற்றை நம்முள் நாமே வளர்த்து எடுக்க முடியும் அதனூடாக நாம் வளர்ந்து நாம் பணிந்தவர்களையும் வணங்கியவர்களையும் உண்மையிலேயே நிகரெனக்காணும் இடத்தை அடைய முடியும். கடந்து செல்லவும் கூடும்

ஆனால் நம்மைச்சுற்றி எழுதப்படும் கவிதைகளில் மிகப்பெரும்பாலானவை மிகமிக எளிமையான அன்றாட உணர்வுகளால் ஆனவை. உறவும் பிரிவுமென, அறிதலும் மயக்குமென இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை திரும்ப நமக்கே சொல்பவை. அறிந்தவற்றை அவற்றில் கண்டுகொண்டு, ஆம் நானுமறிவேன் என்று சொல்வதையே இங்கே எளிய கவிதைவாசகர் கவிதையனுபவமென அடைந்துகொண்டிருக்கிறார்கள். உச்சங்கள் என எழும் கணங்களை அடையும் கவிதைகள் அரிதாகிக்கொண்டிருக்கின்றன. மெய்மைநாட்டத்தையும் மெய்மையைத் துறத்தலையும், அறிதலையும் அறிதலின்மையில் அமைதலையும் முன்வைக்கும் ’சற்றே ஆழ்ந்த’ கவிதைகளை எப்போதோதான் வாசிக்க இயல்கிறது.

ஏனென்றால் வாசகர் அறிவை அல்ல, கவிஞனிடமிருந்து தங்கள் அறிதலுக்கொரு சான்றை விரும்புகிறார்கள். அறிந்ததை அறிவதென்பது அறிவல்ல, பலசமயம் அது அறிந்தவற்றைக் கொண்டு கவசங்கள் செய்து அறிதலை தடுத்துக்கொள்ளும் முயற்சிதான். எந்த இலக்கியப்படைப்பும் நாம் சற்றுமறியாத ஒன்றைச் சொல்லப்போவதில்லை. நாம் அறிந்த துளியை பெருக்கி மலையென நிற்கச்செய்வதே இலக்கியத்தின் வழி. நம் புறம் அறிந்தவற்றில் இருந்து நம்மை நம் அகமறிந்தவற்றை நோக்கி படைப்புகள் கொண்டுசெல்கின்றன. அவற்றை உணரும் கூருணர்வு கொண்ட வாசகர் சிலரே எச்சூழலிலும் இருக்க இயலும். ஆகவே பெருவாரியானவர்கள் விரும்புவது ஒருபோதும் கவிதையென ஆவதில்லை. கவிதை ஒரு சூழலின் பொதுரசனையின் எல்லைக்கு நீடுதொலைவு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வழிகாட்டி விண்மீன்.


கேணி என்றால் தண்ணீர் சுரக்கும் கிணறு. கேணி என்பது பெருங்கிணறு எனலாம். பொதுவாக ஆழமாகத் தோண்டப்பட்டு நிலையானக் கட்டுமானத்தால் நிறுத்தப்பட்டிருக்கும். பழங்காலத்தில் கேணிகள் வட்டாமாக இருந்தன. செங்கற்களால் ஆன வட்டாமன கேணிகளை சிந்துவெளியில் இருப்பதாக அகழ்வாராய்ச்சியில் கண்டுப்பிடிக்கபட்டுள்ளன. கேணி நல்ல உறுதியான மண்வாகு அமைந்த நிலங்களில் சாத்தியப்படும். 




ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க (குறுந்தொகை 399)
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் (நற்றினை 92)
தண் கேணிக் தகை முற்றத்து (பட்டினப்பாலை)
நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி (பெரும்பாணாற்றுப்படை)

மணற்பாங்கான இடங்களில் “சுடுமண் உறைக் கேணி” அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கீழடி, காஞ்சிபுரம், கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம், அரிக்கமேடு, புகார், மட்டக்களப்பில் வந்தாறுமூலை என ஏராளமான உறை கேணிகள் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. மணற்பாங்கான இடங்களில் செங்கற்கட்டுமானத்தைவிட சுடுமண் உறைகளை எளிதாக அமைத்துவிட முடியும்.


உறைக் கிணற்றுப் புறச்சேரி (பட்டினப்பாலை)
இவையிரண்டும் நிலை நீர்வாழ் இடங்கள். செங்குத்தான, ஆழமான அமைப்பைக் கொண்டவை. பலரின் உழைப்பும், பொருட்செலவும் கொண்டவை. சில வேளைகளில் உப்பு நீரே கிடைக்கும். நீண்டகாலம் பயனளிக்கும். நீரின்றிப் போனாலோ பாழ்பட்டுப் போனாலோ கைவிடப்பட வேண்டியவை.


மேலே படத்தில் காணப்படும் கூவல் என்றொரு தோண்டப்படும் நீர்நிலையும் சங்க இலக்கியங்களிலே காணக்கிடைக்கிறது. பாலைநிலங்களைக் கடந்துபோவோர், அங்கேயே வாழும் நிலையிலிருப்போர் குடிநீருக்காக மண்ணில் அகழும் சிறு நீர்நிலை இது. பாலைநிலங்களில் தோண்டப்பட்டிருக்கும் கூவல் ஒன்றில் நீர் செம்மண் நிறத்தில், கலங்கி இருந்ததென்று புறப்பாட்டொன்று தெரிவிக்கிறது.

பூவல் படுவில் கூவல் தோண்டிய
செங் கண் சில் நீர் பெய்த சீறில் (புறம் 319)

வெயில் காயும் பரல் கற்களையுடைய பள்ளத்தில் கணிச்சி (குந்தலம்) கொண்டு குழிபறித்த கூவல் ஒன்று இருந்ததை நற்றிணைப் பாடலொன்று அறியத்தருகிறது.

வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்க்கில், 
கணிச்சியில் குழித்த கூவல் (நற்றினை 240)

கூவலில் நீரை அப்படியே அருந்த இயலாது. அதை வடிகட்டி பின்னரே குடிக்க முடியும். இந்த இரண்டு அன்றி மூன்றாவதாக ஒரு அமைப்பு உண்டு. அது மணற்கேணி. கருப்போருள் உரை செய்கையில் இறையனார் களவியலுரையும், நச்சினார்க்கினியர் உரையும் நெய்தலுக்கான நீர் வரைய்றையில் “மணற்கிணறு” எனக் குறிக்கின்றன. ஆனால், நெய்தலின் மண்வாகு, சுடுமண் உறையின்றி கிணறு அமைக்கபட்டால் குறுகிய காலத்திற்குள் தூர்ந்துவிடும் தன்மையுடையதாய் இருக்கும். இவை வள்ளுவர் சொல்லும் மணற்கேணியாக இருக்க முடியாது.

பூம்புகாரில் கடலோரத்தில் வானகிரியில் உறைகிணறு ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. “கடற்கரை மணலில் குடிநீருக்காக தோண்டப்படுகின்ற கிணறுகள் மண் சரிந்து தூர்ந்து போகாமல் இருக்க கட்ட மண் வளையங்கள் கொண்டு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன”. கொற்கை, நந்தன் மேடு, அரிக்க மேடு ஆகிய பகுதிகளில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனில், வள்ளுவர் சொல்லும் “மணற்கேணி” ஒடும் நீர்வாழிடமான ஆற்றின் கரையோரங்களில் கைகளால் தோண்டப்படும் சிறு குழிகளாகும். ஊற்றுநீர் எடுத்துப் பயன்படுத்துவதே ஏராளமான ஊர்களில் குடிநீருக்கான வழிமுறையாக இருந்தது. புழக்கடைப் பயன்பாட்டிற்கு ஆற்று நீரையோ, குளத்து நீரையோ, கிணற்று நீரையோ எடுத்துக் கொள்வார்கள். ஊற்றுநீரே குடிநீர்.

பழையாற்றங்கரையில் நீண்டகாலமாக மணற்கேணி தோண்டி நீரெடுத்துவந்தது சிலருக்கு நினைவில் இருக்கலாம். அது ஒரு காட்டாறு. எப்பொழுதும் நீர் ஓடிக்கொண்டேயிருக்கும். கோடையிலும் கூட. ஓடும் நீரிலிருந்து இரண்டு முதல் நான்கடிகள் தள்ளி மணலில் கையால் சிறு குழி ஒன்றைத் தோண்டுவார்கள். விளிம்பு மணலை கையால் தட்டித் தட்டி பலப்படுத்திக் கொள்வார்கள். பழையாற்றில் நீர் ஓடிக்கொண்டிருப்பதால் கையால் தோண்டிய அந்தச் சிறுகுழியில் நீர் ஊறிவிடும். ஆற்றின் மட்டத்திற்கு மேலாக நீர் ஊறாது. சிறு குவளை கொண்டு முகந்து குடங்களில் ஊற்றிக்கொள்வார்கள. ஆற்றின் நீர் கலங்கலாக இருந்தாலும் ஊற்று நீர் தெள்ளிய மணலால் வடிகட்டப்பட்டு தூய்மையானதாய் இருக்கும். வேகமாக நீர் நிறைக்க வேண்டுமெனில் என்ன செய்வது? “குழியை ஆழப்படுத்துவோம்” என்று சிலர் நினைக்கலாம். ஆனால் வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை.



”ஆழமாகத் தோண்டத் தோண்டா ஊறும் நீர்ப்போல” என ஆழத்தை மட்டும் சொல்ல முனைந்திருந்தால் வள்ளுவர் கேணி என்றோ கிணறு என்றோ சொல்லியிருப்பார். ஏனெனில் மணற்கேணியை அதிக நீர்வேண்டி ஆழமாகத் தோண்ட முற்பட்டால் பக்காவட்டிலுள்ள மணல் சரிந்து விழுந்துக்கொண்டே இருக்கும். பக்கவாட்டில் அகலமாக அகழ்ந்துவிட்டு பின் ஆழமாக தோண்டினால் தான் மண்சரியாமல் இருக்கும். மணற்கேணியைப் பொறுத்தவரை ஆழத்திற்கும் அகலத்திற்குமான விகிதம் மணலைப் பொறுத்து சரியாகப் பேணப்படுதல் நன்று. கேணி அல்லது கிணற்றைப் போல செங்குத்து வடிவம் கொண்டதல்ல மணற்கேணி. அது ஒரு அரை நீள்கோள வடிவத்தை தானே அமைத்துக்கொள்ளும். ஊறிய நீரை குவளைக்கொண்டு முகக்கையி சிறிது மண் சரியும். மீண்டும் தோண்டிவிட்டு முகக்க வேண்டும். அந்தச் சிறிய ஊற்றிலிருந்து எத்தனைக் குடங்கள் வேண்டுமானாலும் வடிகட்டப்பட்ட, தூய்மையான, கசடு இல்லாத நீரைப் பெற முடியும். தனி ஒருவரே எந்தப் கருவியுமின்றி கைகளாலேயே இதை தோண்டிவிடமுடியும் என்பது இதன் சிறப்பு. 

இதை அப்படியே “கற்றனைத் தூறும் அறிவு” என்பதோடு பொருத்திப் பாருங்கள். கற்றறிதல் ஆழமானதாக மட்டுமின்றி அகலமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் ஆசைப்போலும். அதனாலேயே ஆழமான, செங்குத்தான, பலருடைய உழைப்பின் பயனான கேணியை விடுத்து இந்த எளிய மணற்கேணியைத் தெரிவுசெய்தார் போலும். “கசடறக் கற்க” இது ஒரு வழி போலும். நம் பட்டறிவிலிருந்தே இதற்கான எடுத்துக்காட்டுகளைப் பெற முடியும். பெரிய கண்டுப்பிடிப்பாளர் என அறியப்பட்ட எடிசனும், அவர் வளர்த்த பூனையும் அதன் குட்டிகளும், அவர் கதவில் போட்டுவைத்த மூன்று துளைகளும் செங்குத்து அறிவின் சான்றுகள். தாய்ப்பூனை வந்துசெல்ல ஒரு துளையும், இரண்டு குட்டிகள் வந்து செல்ல இரண்டு துளைகளும் என மூன்று துளைகளை அமைத்த அறிவாளர் அவர். அறிவு அகலமானதாகவும் இருத்தல் வேண்டும். 

மணற்கேணியின் பக்காவாட்டிலும், ஆழத்திலும் தோண்டாடும் அளவிற்கு நீர்நிறையும். அதுப்போல ஆழமாகவும், விரிவாகவும் கற்குந்தோறும் அறிவு நிறையும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.).

மணக்குடவர் உரை
அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

சாலமன் பாப்பையா உரை
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Thirukkural - Management - Learning
Valluvar is profusely known for resorting to similes to help his readers understand the meaning of his writings. He is great, as his work, in employing them. The process of learning is referred to the process of digging a spring in sandy soil to get water. The more or deeper we dig in sandy soil, the much water we get. Similarly, the more and deeper we learn the better and the sharper will be our wisdom. That is Valluvar's wisdom in Kural 396. The fountain of knowledge keeps flowing as the fountain of water keeps flowing.

A well dug in sand yields water as dug- 
So learning wisdom.

The more we know about Thirukkural, the more there is to know. Cardinal Newman said, “Every new reader finds a new meaning in a new reading.” That concept is true with reference to Thirukkural. Every time we read, we become new readers and we find a new meaning in our reading. When we delve deep into Thirukkural, we will evolve as complete people.

English Meaning - As I taught a kid - Rajesh
When we dig a sand-well, we get/gain water. Similarly when we learn, we gain knowledge.  If you do not dig the well, sand will come in and you will not get the water. Similarly, if you do not study or revise you will not gain any knowledge.
Learning process is equated to digging in sand-well because 
1) Learning process is not accumulation of knowledge as mountain. Rather learning process is like digging information, understanding it and using it. 
2) When one digs a sand well, we get both sand particles as well as water. One has to filter out the sand and consume only the water. Similarly, when one learns, we are bound to have mixed understanding. So, one has to analyze and learn without mistakes.
3) The water we gain from a sand well is a just a fraction of water in ocean. Similarly the knowledge we can learn in this world is only a fraction. So, one must not feel egoistic about learning or gaining knowledge. Rather one must be humble enough to learning continuously 
4) In sand-well, after taking water, if one stops taking water, after some time, the sand slowly gets into the well again. Thereby the well is now plugged with sand. Similarly, if one stops learning, his/her knowledge gets stagnated or outdated. So, one must always be a learning. Continuously learning is the best
5) In sand well, if we take water and give it to others, there is still water in the well. So is knowledge. If one is sharing knowledge with others, one does not loose knowledge. So, one must always share knowledge with others. 

Questions that I ask to the kid
What is knowledge?
How should gain knowledge?
Is knowledge a regular activity? Will knowledge be permanent in your brain? If not why? How can you keep your knowledge fresh?

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

குறள் 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
[பொருட்பால், அரசியல், கல்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

உடையவர் - ஆன்மாக்களை அடிமையாக உடையவர்; சுவாமி ஆன்மார்த்தலிங்கம்; செல்வர் இராமானுசர்;

உடையவர் - uṭaiyavar   n. உடைமை Hon. pl. 1. Master, lord; சுவாமி உடையவர்கோயில் (பெரியபு. திருஞான. 664). 2. Šiva-liṅgaused in private worship; ஆன்மார்த்த லிங்கம் 3. Rāmānuja, the Guru of Šrī Vaiṣṇavas; இராமானுசர் (ஈடு, 10, 7, 1.) 

உடைமை - உடையனாகும்uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

முன் - முன்பு; முன்னே; இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

இல்லார் - இல்லாதவர்

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

ஏக்கற்றும் ஏக்கறுதல் - இளைத்துஇடைதல்; ஆசையால்தாழ்ந்துநிற்றல்; விரும்புதல்.

கற்றார் - கற்றவர்கள் ;சான்றோர்

கடையரே - கடையர் - கீழானவர், இழிந்தோர்; மருதநிலத்தவர்; வாயிற்காப்போர்; பள்ளருள்ஒருவகுப்பார்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி

கல்லாதவர் - கற்காதவர்

முழுப்பொருள்
செல்வந்தர்கள் முன்பும் கொடையாளிகள் முன்பும் தன் தேவைக்காக யாசகம் செய்யும் வறியவர்கள் போல அறிவிற்சிறந்த சான்றோர்களிடம் கற்க விரும்பி ஆசையாக அவர்களிடம் தாழ்ந்து/பணிந்து நின்று கற்பவர் கற்றார் எனப்படுவார்கள். மாறாக விரும்பியும் பணிந்தும் கற்காதவர்கள் கீழோர் ஆவர். 

கற்காதவர்கள் யாசித்தாவது கற்க வேண்டும். அப்படி தான் தன்னுடைய அறியாமை என்னும் இருளில் இருந்து வெளிவர முடியும். அப்படி கற்கவில்லையென்றால் அறியாமை என்னும் இருளில் துன்பப்படும் கீழோர் எனவே கருதப்படும்.

மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்ற வாக்கினை நினைவில் கொள்ளவும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.
(உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.

இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

மு.வரதராசனார் உரை
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

சாலமன் பாப்பையா உரை
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

English Meaning - As I taught a kid - Rajesh
When in extreme poverty, one would beg for food from people who can provide food. When a person (irrespective of any factors such as age, experience, titles etc) is having knowledge, experience, ideas, suggestions, etc then listen to and learn from him/her as though you don't have the knowledge. All it matters is 1) having ears to listen 2) having the appetite to learn. Such persons are learned person or learners. However, the person would be considered stupid if he/she lives within his/her shell (and in darkness) and has an attitude of why should I learn from the other person. Also, remember schools and universities can only teach a limited knowledge. Self education through reading, listening to people, debates, discussions only would help a person for the long run.

Questions that I ask to the kid
How should knowledgeable people learn? When is a literate people is considered stupid ?

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

குறள் 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
உவப்பத் - உவப்பு - மகிழ்ச்சி; களிப்பு; பொலிவு; விருப்பம்; உயரம்; விளையாட்டு; மேடு

தலைக்கூடி - தலைக்கூடுதல் - ஒன்றுசேர்தல்; நிறைவேறுதல்

உள்ளப் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

அனைத்தே - அனைத்து - அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

புலவர் - புலமையோர்; பாவாணர்; ஞானிகள்; தேவர்; குறுநிலமன்னர்; கூத்தர்; கம்மியர்; ஓவியம்முதலியகலைவல்லார்; சாளுக்கியர்; ஒருவகைச்சாதியார்; சிலஇனத்தவரின்பட்டப்பெயர்

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு

முழுப்பொருள்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது அவ்வையாரின் மூதுரைப்பாடல். அதுவும் நற்றாமரைக் குளத்தில் நல்ல அன்னப்பறவை வந்து சேருவது போல. யாரோடு யார் சேர்வர் என்பதைச் சொல்லும் அழகான பாடல்

“நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

விளம்பிநாகனாரின் நான்மணிக் கடிகைப் பாடலொன்று, “கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்” என்கிறது. அதாவது கல்வி அறிவை உடையவர்களை விரும்பிச் சேர்பவர்களும் கற்றவர்களே.

ஞானிகளின் புலவர்களின் புலமைபெற்றவர்களின் செயல் அல்லது அவர்களின் பெருமையென்ன?
மற்றவர்கள் கூடி வரும் பொழுது அவர்கள் உள்ளம்  மகிழுமளவு கலந்து பேச வேண்டும். உள்ளம் எப்பொழுது மகிழும்? இருவரும் ஒருவருக்கொருவர் தாங்கள் கற்றதையும் பெற்றதையும் பகிர்ந்துக்கொள்ளும் பொழுது ஏற்படும். அது கற்பதனால் ஏற்படும். இப்படி கலந்து பேசி உள்ளம் உவகையில் இருக்கும் பொழுது பிரிய நேரிடும். அப்போது மீண்டும் இவரை  எப்பொழுது சந்திப்போம் என்று ஏங்க வேண்டும். அத்தன்மைவாய்ந்ததே புலவரின் பெருமையாகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தவலரும் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்
தும்பர் உறைவார் பதி” (நாலடி 137)

பரிமேலழகர் உரை
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில்.
(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.

மு.வரதராசனார் உரை
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர்

குறள் 393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

என்பவர் -என்கின்றனர்

கற்றோர் - தெளிந்தோர், சான்றோர், நூல்பலக் கற்றுஉணர்ந்தோர்

முகத்து - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

இரண்டு - இரண்டு'என்னும்எண்; சில உகரஎழுத்து; மலசலம்

புண் - உடல்ஊறு; தசை; வடு; மனநோவு. காயம்; ஊன்

உடையர் - உடையவர்கள்

கல்லாதவர் - கற்காதவர்கள்

முழுப்பொருள்
முகத்தில் எல்லோருக்கும் இரண்டு கண்கள் உள்ளது.  அதனால் என்ன பயன் ? ஏனெனில் கண் என்பது அறிவை குறிக்கும் சொல்லும் ஆகும். என் 'கண்ணை திறந்துட்ட' னு சொல்லாட்சி உண்டு. அது மட்டுமின்றி கண் என்றால் பீலிக்கண் (அழகிய மயில் தோகைக்கண்)  என்ற பொருளும் அடங்கும். ஆதலால் கண் இருந்தால் அவர் (அந்த சொல்லிற்கு தகுந்தாற்போல்) கண்டிப்பாக கற்று கற்றோராய் விளங்க வேண்டும். அப்படி ஒருவர் கற்று கற்றோராய் விளங்கவில்லையென்றால் அவர் கண்ணில் இரு புண் கொண்டவராவார் என்கிறார் திருவள்ளுவர். புண் என்றால் காயம் என்று மட்டும் பொருள் அல்ல மனநோய் என்றும் விளங்கும். ஆதலால் கல்லாதவரை மனநோய் கொண்டவர் புண் (காயம்) உடையவர் என்கிறார் திருவள்ளுவர்.

இங்கே திருவள்ளுவர் கற்க வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. கற்று அதற்கேற்றாற்போல் நிற்கும் கற்றோராய் விளங்கவேண்டும் என்று தெளிவாக கூறுகிறார்.

அறிவுடையவர்களே உலகில் அதிகம் பார்க்க-புரிந்து கொள்ள ஆற்றலுடையவன். அறிவு இவர்கள் வாழ்வு. அறிவற்றவர் வாழ்வைவிடப் பொருண்மை "பொலிவு" நிறைந்தது என்படத்தில் ஐயமில்லை. இவர்களே "கண்ணுடையவர்கள்". இவர்கள் பிறநலச் சார்புடையவர்கள். இவர்கள் உலகிற்காகப் பாடுபடுபவர்கள். 

ஏன் கண்களையும் கல்வியையும் திருவள்ளுவர் தொடர்புபடுத்தவேண்டும்? ஏனெனில் கண்ணே மனிதன் முதலில் கற்க பயன்படுத்தும் கருவி. ஒரு குழந்தை வளரும் பொழுது தான் காணுபவற்றின் மூலமாக கற்கிறது. உதாரணமாக இன்று எனது 10 மாதமே ஆன எங்கள் பெண் குழந்தை உமையாள் நாங்கள் சப்பாத்தியிற்கு கையை ஒரு கோப்பையில் தோய்த்து உண்ணுகிறோம் என்பதை நாங்கள் கற்றுத்தராமால் தானாகவே கற்கிறாள். அவளுக்கு வெறும் சப்பாத்தி வேண்டாம் என்று செய்கை காண்பிக்கிறாள். உமையாள்  அதைப் பார்த்துத்தான் கற்றாள். ஆதலால் கண்களே கற்க இங்கு கருவி. அதனால் தான் திருவள்ளுவர் கல்வியையும் கண்ணையும் தொடர்புபடுத்திக் கல்லாதவர் கண் புண் என கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

வள்ளுவரே மற்றுமொரு அதிகாரத்தில், 

“குறள் 575
கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் 
புண்ணெண் றுணரப் படும்” என்கிறார். 

கலித்தொகை (130:6) பாடலொன்று,  “கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்” என்கிறது.

“கண்ணில்புன் மாக்கள்” 
“கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்றபின் கண்ணும் ஆகும்” (சீவக.1595)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே, கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.
(தேயம்இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய்முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மைகூறியவாற்றான், பொருள் நூல்களையும் கருவிநூல்களையும்கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.

மு.வரதராசனார் உரை
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

சாலமன் பாப்பையா உரை
ற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப

குறள் 392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
'எண்'  -  எண்ணிக்கை; கணக்கிடுதல்; எண்ணம்; ஆலோசனை; அறிவு; மனம்; கவலை; மதிப்பு; இலக்கம்; கணக்கு; சோதிடநூல்; இலக்கியம்; வரையறை; தருக்கம்; மாற்று; மந்திரம்; அம்போதரங்கம்; எளிமை; வலி; எள்; (வி)எண்என்னும்ஏவல்; நினை, கருது.

என்ப  - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.

எழுத்து’ - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம்.

என்ப  - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

இவ் இரண்டும் - இவை இரண்டும்

‘கண்’ - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

என்ப  - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

வாழும் - வாழ் - vāẕ   வாழு, II. live, sustain life, சீவி; 2. flourish, prosper, live happily, செழி; 3. live together (as husband and wife.) வாழாவெட்டி, a married woman not living with her husband.

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
இக்குறள் எனக்கு இரண்டு அர்த்தங்களை தருகிறது. ஏன் எனில் ”எண்’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்களை அகராதி கூறுகிறது.
1) எண்ணம், மனம் ஆகிய பொருள்கள் மனதின் எண்ணத்தை ஒட்டி இருப்பதால் இவை (கல்வி அதிகாரத்தில் வரும்) இக்குறள் சொல்லும் பொருளாக இல்லாமல் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
2) கணிதம் என்ற பொருள் இருக்க வாய்ப்புகள் உண்டு ஏனெனில் ஒருவர் சிற்பம், விவசாயம், கட்டுமானம், சமையல், இசை என்று எந்த துறை கற்றாலும் ஏதோ ஒருவித கணக்கு அத்தியாவசியம் ஆகிறது. உலகில் எழுத்து தெரியாதவர்கள் கூட உண்டு எண்ணத்தெரியாதவர்கள் இல்லை.
3) அதேப்போல் தருக்கம் என்ற பொருளுக்கும் வாய்ப்புகள் அதிகமே. ஏனெனில் முறையான தருக்கமே நமக்கு தெளிவினை கொடுக்கும். தெளிவுப் பெருதலே கல்வியின் குறிக்கோள். ”குறள் 355: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வள்ளுவர் முன்பே கூறியுள்ளார்.

எழுத்தினால் பெரும் கல்வியும் மிக முக்கியம். ஏனெனில் ஒருவருக்கு எழுத்தினை படிக்கத் தெரிந்தால் அவரால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னுள்ளோ அல்லது பிறருடனோ தருக்கம் செய்தே கற்றுக்கொள்ளலாம். எழுத்து இல்லையென்றால் கல்விக்காக நாம் பிறரை நம்பியே இருக்க வேண்டியது இருக்கும்.

இவை இரண்டும் கண் என்கிறார் திருவள்ளுவர். ஏன் கண் என்கிறார்? கை அல்லாது கால் என்று சொல்லலாமே? ஏன் கண் என்கிறார் என்றால் நம் அறிவென்பது வெளியுலகத்தை அறிவது கண்களினாலே. கையும், காலும் நமது அன்றாட வேலைகளை செய்வதற்காக. கண் என்பது மிக சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருந்தால் கண்ணில் ஒரு ஒளி குடிக்கொள்ளும்

எண்ணும்  (கணிதம், தருக்கம் (தருக்கத்தினால் வரும் தெளிவும்)) மற்றும் எழுத்தும் (எழுத்தினால் வரும் கல்வி, அறிவு) ஒரு மனிதனுக்கு இரு கண் போன்றது. இவை வாழும் உயிர்க்கு மிக அவசியம். வாழ்தல் என்றால் மகிழ்ச்சியாக செழிப்பாக வாழ்வது. ஆதலால் வாழ்வதற்கு எண்ணும் எழுத்தும் கண்ணை போன்று அவசியம். உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர் வாழ்வதில்லை என்பதையும் அறியவேண்டும்.

மேலும் 
எழுத்தறிய தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின்  முட்டறுப்பா னாகும் – மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்

என்ற பாடல் மொழியறிதலின் சிறப்பைக் .கூறுகிறது. சிறுபஞ்சமூலப் பாடல்வரியும் “கண்ணுங்காற் கண்ணும் கணிதம் எழுத்து” என்று ஒருவரியில் இக்கருத்தையே சொல்கிறது. அப்பரும் கண்ணுதற் கடவுளை, “எண்ணும் எழுத்தும் குறியுமறிபவர்” (அப்பர்.வேதிகுடி.6) என்கிறார்.

ஒப்புமை
”அண்ணலும் நாலும் பொருளும் நிகழ்வும் இவைஎனலும்
எண்ணினும் ஏனை எழுத்தினும் மிக்காங் கிருந்தவர்” (நீலகேசி 679)

“கண்ணுங்காற் கண்ணும் கணிதம் எழுத்து”  (சிறுபஞ்ச் 93)

“கண்ணெனப்படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல ஓடும் வெய்யவன் என்னும் பேர்” (சூளா.மந்திர.30)

ஜெயமோகன் தளத்தில் இருந்து
தமிழில் திருக்குறள் சார்ந்து அப்படி பல திறப்புகள் இருப்பதைக் காணலாம்.  திருக்குறள் இங்கே பலரால் பேசப்படுகிறது, மேடையில் மேற்கோள்காட்டப்படுகிறது. ஆகவே அது சார்ந்து ஒரு திறப்பு சட்டென்று உருவாகிறது. உதாரணமாகச் சிலநாட்கள் முன்னால் ஒரு பேருந்தில் ஒரு கிழவர் சொன்னார், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப- ன்னு குறள் சொல்லுது. எழுத்து இல்லாட்டிக்கூட வாழ்ந்திடலாம். எண் இல்லாம இருக்க முடியுமா?. எழுத்து தெரியாத லட்சம்பேரு இருப்பாங்க. எண்ணத்தெரியாதவன் மெண்டல் ஆஸ்பத்திரியிலே இல்லா இருப்பான்?’

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும், வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர். 
(எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்,அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், கண் எனப்பட்டன.அவை கருவியாதல் 'ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி. நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடுஎன்று இவற்றின் , திறமாமோ எண்ணிறந்தால் செப்பு'. 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து , கட்டறுத்து வீடு பெறும்'. இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.) .

மணக்குடவர் உரை
எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.

மு.வரதராசனார் உரை
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

கற்க கசடறக் கற்பவை

திருக்குறள் 391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
[பொருட்பால், அரசியல், கல்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கற்க - கற்றல்; படித்தல்; பயிலுதல்
கற்க - கற்கத் தகும் நூல்களைப் கற்க
கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு; பிழை
அற - அல்லாமல் கற்க
கற்பவை - நூல்களில் இருந்து கற்றவை, கற்ற அறங்கள்
கற்றபின் - கற்ற பிறகு
நிற்க - நடக்க வேண்டும், பயில வேண்டும்
அதற்குத் தக - அதற்குத் தகுந்தார்ப்போல்

முழுப்பொருள்
வாழ்வில் பிறந்து இறந்தோம் என்றால் இவ்வாழ்விற்கு ஏதாவது அர்த்தம் உண்டோ? இல்லை என்பதே பதில். வாழ்வின் மெய்ப்பொருள் கண்டு வீடு அடைவதே வாழ்வின் சிறப்பாகும். அத்தகைய மெய்ப்பொருளை அறிய நாம் பல நூல்களை கற்க வேண்டும்.  இந்த உலகில் பிறந்துவிட்டால் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆகவே தான் ”கற்க” என்று கட்டளையாக கூறுகிறார் திருவள்ளுவர். [குறள் 356: கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் என்பதை நினைவில் கொள்க].

நாம் பல நூல்களை கற்றாலும் அவற்றை முறையாக கற்க வேண்டும். ஒரு ஆசான் அல்லது சான்றோரின் உதவியுடன் கற்றுக்கொள்ளுதல் உதவியாக இருக்கும். இங்கே நம்மிடம் இருக்கும் ஐயங்களை (கசடுகள்) நீக்கும் அளவிற்கு கற்தல் வேண்டும். நாளை நம்மை யாராவது வந்து உதவி கேட்டால் அவரிடம் இருக்கும் எத்தகைய ஐயங்களையும் களையும் அளவிற்கு கற்தல் வேண்டும். [குறள் 353: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு என்பதை நினைவில் கொள்க].

பாலில் கொஞ்சம் மோர் ஊற்றி உறையவிட்டல் அது தன் நிலையை மாற்றித் தயிராகிவிடுகிறது. அதை நாம் கெட்டுப்போன பால் என்று சொல்லுவதில்லை. உறைந்த தயிரை கடைந்தால் மோரும் ஆகும். அப்பொழுது வெண்ணெய் மேலே மிதக்கிறது. வெண்ணையை காச்சினால் (உருக்கி காச்சினால்) நெய் கிடைக்கும். அப்படி உருக்கிய நெய்யின் அடியில் கசடுகள் இருக்கும். ஆதலால் பாலில் இருந்து நெய்யை பிரித்து எடுக்க நாம் பலவற்றை பிரித்து எடுக்க வேண்டும். அதுப்போலவே கற்றலும், நமது ஐயங்களை பிரித்து எடுத்து நீக்க வேண்டும்.

இப்படி கற்றால் நம்மிடம் இருக்கும் அறிவு சிறப்பானதாக அமையும். ஆனால் அப்படி கற்பதனால் மட்டும் என்ன பயன்? ஒன்றுமில்லை. அது அகந்தைக்கே வழி வகுக்கும். அந்த நூல்கள் சொன்ன அறம் படி வாழ்க்கையை வாழ்தலே அவ்வறிவிற்கு சிறப்பாகும். அதுவே படித்தவருக்கும் சிறப்பாகும். அப்படி கற்ற அறம் படி வாழ்தலே மெய்ப்பொருள் உணர்ந்து வீடு அடைய உதவும்.

வாழ்வில் எதைவேண்டுமானாலும் கற்கலாமா? இல்லை என்பதே பதில். வாழ்வின் கால அளவு மிக சிறியது. ”நிற்க அதற்கு தக” என்று கூறுகிறார். பிறர் நம்மை சான்றோன் என்று கூறும் அளவிற்கு நிற்க (வாழ) வேண்டும். அதற்கு தேவையான அறிவு தரும் நூல்களை கற்தல் வேண்டும். அதனால் தான் கற்றதை மறவாதே அதன்படி நில் (வாழ்) என்பதனை ”பொச்சாவமை” அதிகாரத்தில் கூறியுள்ளார்
குறள் 538

உதாரணமாக உடற்பயிற்சி செய்வது நல்லது, அதனை எப்படி செய்யவேண்டும் செய்யக்கூடாது என்று ஐயமற கற்றப்பின்பு அதனை செய்யவில்லை என்றால் கற்றதனால் என்ன பயன்? அதனை கடைப்பிடித்தால் தான் பயன். அதேப்போல் ஒருவர் பலபலக்கபட்ட அரிசி (polished rice) அதீத மாவு சத்துக்கொண்டாது (refined carbohydrates), சர்க்கரை உடம்பில் தேவைக்கு அதிகமான பசியை தூண்டக்கூடிய தன்மைக்கொண்ட அம்மிலம் (chemical) உடம்புக்கு கேடுவிளைவிப்பது என்று அறிந்துக்கொண்டப்பிறகும் அவற்றை முற்றிலும் நிராகரிக்கவிட்டாலும் குறைந்தது  அவற்றின் உட்கொள் அளவை குறைக்கவில்லை என்றால் கற்றதனால் என்னப்பயன்?

மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஒரு குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.

நாலடியார் (135) பாடலொன்று, கற்றலின் சிறப்பை இவ்வாறு கூறுகிறது.
“கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைப்பிற் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலூண் குருகிற் றெரிந்து”

அறநெறிச் சாரப்பாடல் (141) கற்றலின் பெருமையை இவ்வாறு கூறுகிறது.
“எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவதற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை – அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்”

மேலும்: அஷோக் உரை

கல்லாப் பிழை சொல்லாப் பிழை நில்லாப் பிழை (நன்றி: ஜெயமோகன் / பொன்னியின் செல்வன் டீசர் வெளியிடு உரை @2:20)
1) கல்லாப் பிழை - நாம் நமது முன்னோர்கள் பெருமையை, வரலாற்றைப் கற்க வேண்டும். கற்கவில்லையென்றால் அது கல்லாப் பிழை. 

2) சொல்லாப் பிழை - நாம் நமது முன்னோர்கள் பெருமையைப் பற்றி வரலாற்றைப் பற்றி அடுத்த தலைமுறையினர்க்கு சொல்ல வேண்டும். அப்படி பெருமைகளை எடுத்துச் சொல்லவில்லையென்றால் அது சொல்லாப் பிழை

3) நில்லாப் பிழை - நாம் கற்றவற்றில் இருந்து அதற்கேற்ப நடக்கவில்லை என்றால், நமது முன்னோர்களின் பெருமையடைய காரணமாய் இருந்த வழி நிற்கவில்லையென்றால் அது நில்லாப் பிழை

நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
மூளையின் செரியாமை
நமது உடலால் அல்லது செரிமான உறுப்புகளால் எவ்வளவு செரிக்க முடியுமோ அவ்வளவு நாம் உண்பதில்லை. ஒருநாளும் அளவறிந்து உண்பதில்லை. நமக்கு அளவு தெரியவும் தெரியாது. 

அளவறியாமல் உண்பதினாலே நாம் பிணிகளால் பின்னப்படுவது போல நாம் அளவறிந்து படிப்பதும், கேட்பதும், சிந்திப்பதும் இல்லை. நம்முடைய மூளையாலும், மனதாலும் எவ்வளவு வாங்கி செரிக்க முடியுமோ அந்த அளவுக்கு மூளைக்கு வேலை, செய்தி கொடுப்பதில்லை.

வயிற்றுக்கு எப்படி செரிக்க முடியாத அளவுக்கு உணவு கொடுத்து வயிற்றையும், உடலையும் கெடுக்கிறோமே அது போல மனதிற்கும் செரிக்க முடியாத அளவிற்கு செய்திகளை கொண்டு போய்க் கொட்டிக் கொண்டே இருக்கிறோம். எவ்வளவுதான் செரிக்க முடியும் நம் மனதால். அளவு நமக்குத் தெரியாது. வயிற்றுக்கே தெரியவில்லை என்றால் மனதிற்கு எப்படித் தெரியும்?

எப்படி வயிற்றில் செரிக்கா விட்டால் பேதி ஆகிறதோ, வாந்தி ஆகிறதோ அது போல மூளை செரிக்காவிட்டால் அவன் பேசிக் கொண்ஏ இருப்பான். எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். அப்புறம் பைத்தியமாகத் திரிவான். பைத்தியம் என்பது வேறொன்றும் இல்லை. மூளையின் செரியாமையினால் ஏற்பட்ட ஒரு எதிர் விளைவு. 

மனதின் உள்வாங்கும் சக்திக்கேற்ப சரியான அளவு செய்திகளை, சிந்தனைகளை அளிக்க வேண்டும். வள்ளுவரும் கசடற கற்க, அதை அளவோடு கற்க, கற்றபின் எவ்வளவு உண்ணால் நிற்க முடியுமோ அதற்கேற்ப கற்க. கற்றலிலும் எந்த அளவிற்கு நம்மால் பின்பற்ற முடியுமோ அந்த அளவிற்குக் கற்க என்று வைத்துவிட்டால் படிக்க வேண்டிய நூல்கள் எவ்வளவு இருக்கும்? தெளிவான சிந்தனை ஒன்று இருந்தது என்றால் அவன் படிக்க வேண்டிய வேலையே இருக்காது. நாமே நூலாக மாறுகிறோம். ஆசிரியராக மாறுகிறோம். செயலாக மாறுகிறோம்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , அவ்வரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல் , அவையாவன , அறநூலும் , நீதிநூலும் , யானை குதிரை தேர்படைக்கலம் என்ற இவற்றின் நூல்களும் முதலாயின . அரசன் அறிவுடையன் ஆயக்கால் தன்னுயிர்க்கே அன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி , இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும் பொதுப்படக் கூறுகின்றார் . மேல் ' தூங்காமை கல்வி ' (குறள் . 383 ) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின் , இஃது இறை மாட்சியின் பின் வைக்கப்பட்டது .]
கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

Thirukkural - Management - Learning
Learning is a lifelong process. It is a continuous process. One of the differences between human beings and animals is that human beings have the ability to learn and apply what they learn. “Learning is a relatively permanent change in behavior that occurs as a result of experience,” (Robbins, 2001).  Learning is a relatively permanent change as no change is permanent. That relatively permanent change must occur because  of experience. Experience can be through reading, doing, observing, and listening. 

Valluvar has detailed on how to learn, the need to learn, and the challenges a person faces in the  process of efficient and effective learning. Kurals reinforce the importance and advantages of learning for life. According to Valluvar, the process of effective learning involves two stages, as he presents in Kural 391.

Learn well what should be learnt, and then
Live your learning.

Stage one is to learn, whatever you learn, a thing thoroughly with involvement, concentration, and conviction. Learning should be holistic and faultless. Most of the time learning does not last long  as people do not resort to purposeful learning. Purposeful learning is learning with an objective to assimilate and apply what one learns. 

Stage two is to follow or practice what you have learned according to stage one. Any learning is incomplete without application or implementation of learning. In training language, this practice is called transfer of learning. So, just knowing is not learning. Learning includes both knowing and doing. Doing what one learns gives one experience. Experience in itself is learning. So, knowing and doing are interrelated  in learning.

English Meaning - As I taught a kid - Rajesh
Learn well, learn good things, learn without mistakes and stand by what you have learnt and act accordingly.

Questions that I ask to the kid
How should you learn? What should you do after studying?

கேடில் விழுச்செல்வம் கல்வி

குறள் 400
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
[பொருட்பால், அரசியல், கல்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

இல் இல்லாத, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

விழு - சிறந்த; துன்பமான; பகல்இரவுகள்நாழிகைஅளவில்ஒத்தநாள்

செல்வம் கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

விழுச்செல்வம் - விழுச்செல்வம், viḻu-c-celvam   n. id. +.Great fortune, immense wealth; பெருஞ்செல்வம்.கேடில் விழுச்செல்வங் கல்வி (குறள், 400).

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி

யொருவற்கு - ஒருவருக்கு

மாடு - எருது; பக்கம்; இடம்; ஏழனுருபு; செல்வம்; பொன்; சீதனம்; அகன்மணி.

மாடல்ல - மாடு அல்ல - செல்வம் அல்ல

மற்றை யவை - மற்ற / பிற யாவும் 

முழுப்பொருள்
ஒருவனுக்கு செல்வங்களில் அழிவில்லாத செல்வமாக கல்வி அறிவு மட்டுமே இருக்கம். மற்ற செல்வங்கள் (நிலம், பணம், வீடு, பொருள், நகை) யாவும் இயற்கையினாலோ செயற்கையினாலோ நிலையில்லாது அழிய கூடியது ஆகும். ஆதலால் அவைகள் செல்வங்களே அல்ல. ஆதனால் கல்வியே சிறந்த செல்வமாகும். 

உதாரணம்
1) ஒருவனுக்கு உணவு அருந்த மீன் கொடுத்தால் அவன் அடுத்த நாள் உன்னிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ வந்தி நிற்பான். ஆனால் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுவதும் யாரிடமும் போய் கையேந்த மாட்டான்.

2) கஷ்டகாலம் வந்துவிட்டதென்றால் வீடு, வாசல், சொத்து, சொந்த பந்தம் எல்லாம் பறந்துவிடுகிறது. ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, நாம் கற்ற கல்வி மட்டுமே. 
ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம்(மாடு) அல்ல!

மேலும்
அறியாமை என்னும் நோயகலவேண்டுமெனில் அறிவாகிய மருந்துதான் தேவையானதாகும். “அறிவால் மக்களுக்குச் செய்யப்படும் உதவியே மிகச் சிறந்த உதவியாகும். உணவு, உடைகளால் செய்யப்படும் உதவியைக் காட்டிலும் மேலானது. ஏனென்றால் ஒருவனுடைய உண்மையான வாழ்க்கை அறிவால் மட்டுமே அமைந்துள்ளது. அறிவுதான் வாழ்வு. அறியாமை மரண அறிவின் ஒளி இல்லாமல் அறியாமையிலும் இருளிலும் மூழ்கி வாழ்கின்ற வாழ்க்கை பயனற்ற வாழ்க்கை“ என்கிறார் பாரதத்தின் ஞான ஒளியாம் விவேகானந்தர்(கர்மயோகம், ப., 4).

சமய அறிவினை ஆலயங்களின் வழி கொடுத்து வாழ்க்கையின் உண்மையினை மக்கள் உணரும் வண்ணம் செய்யலாம். மூட பக்தியினை ஒழிப்பதற்கு இக்கல்வியறிவு மிகவும் அவசியமானதாகும். அறியாமை அகல அகல மக்களை, யாரும் எளிதில் ஏமாற்ற முடியாத நிலை ஏற்படும். ஆலயங்கள் இறைபக்தியுடன், உலகியல் நிலைகளையும் உணர்த்தும் சமுதாய உணர் வுமையங்களாக மாறி சமுதாயக் கடமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

மேலும் அஷோக்


ஒப்புமை
“கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்றபின் கண்ணு மாகும்
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கோர் துணையுமாகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழுமாம் துணைவியாக்கும்
இப்பொருள் எய்தி நின்றீர் இரங்குவ தென்னை யென்றான்” (சீவக.1595)

பரிமேலழகர் உரை
ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி; மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும், முதலாயின செல்வமல்ல.
விளக்கம்
(அழிவின்மையாவது: தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும், வழிப்பட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை: தக்கார்கண்ணே நிற்றல். மணி, பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி -ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன வாதலின் சிறந்த செல்வங்களாகா.

கல்வியின் கேடின்மையை,

"வெள்ளத்தாற் போகாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியெனும்
உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வதேனோ"


என்னும் பழந்தனியனால் அறிக.கல்விச் சிறப்பு அறிவொழுக்கமும் அரசனாலும் மதிக்கப்பெறுதலும் மறுமையில் நற்பதப்பேறுமாம்.
"அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும்-உறுங்கவலொன்
றுற்றுழியுங் கை்கொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை".


என்பது நீதிநெறி விளக்கம்(2).
முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. மேலைநாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப்பெற்றது.

மணக்குடவர் உரை
ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல. இது கல்வி அழியாத செல்வமென்றது.

மு.வ உரை
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

சாலமன் பாப்பையா உரை
கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

Thirukkural - Management - Learning
Kural 400 highlights the importance of learning. The only wealth that is long lasting and eternal for a person is his learning. The other material wealth is not true wealth in comparison to the wealth of knowledge a person acquires through learning.

The wealth which never declines
Is not riches but learning

The wealth of learning never declines but keeps accumulating instead. On the contrary, other physical possessions have chances to decline and disappear.

English Meaning - As I taught a kid - Rajesh
Knowledge is incomparable. Because 1) There is no harm or loss in learning or gaining a knowledge. 2) With knowledge, a person can grow and get better. 3) A person can loose anything but a person won't loose his knowledge. With knowledge one can gain everything back. 4) Even failure is a knowledge (for e.g. Thomas Alva Edison made 1,000 unsuccessful attempts at inventing the light bulb. When a reporter asked, "How did it feel to fail 1,000 times?" Edison replied, "I didn’t fail 1,000 times. The light bulb was an invention with 1,000 steps). Hence, is there anything comparable to (the incomparable) knowledge?

Questions that I ask to the kid
Why is knowledge incomporable? 
Why failure is a knowledge? 
Why there is no harm in knowledge?

தாமின் புறுவது உலகின்

குறள் 399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு 
காமுறுவர் கற்றறிந் தார்.
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
தாம் - தனக்கு ; அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

இன்புறல் -  v. noun. Enjoying plea sure, being happy, rejoicing, experiencing, delight, being satisfied, மகிழ்ச்சிபொ ருந்தல்.

இன்புறவது - இன்பம் தருகிற ஒன்றை

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

உலகு + இன்புறக்கண்டு - பகிரும் பொழுது உலகில் உள்ளவர்களுக்கும் இன்பம் தருவதை கண்டு 

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.
காமுறுவர்  - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல்.

காமுறுவர் - காமுறு - காமம் + உறு - விரும்புதல், வேண்டிக்கொள்ளுதல்

கற்று - கற்கை - படித்தல்; பயிலுதல்

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கற்றறிந் தார் - கற்றதனால் வரும் சிறப்பை/இன்பத்தை அறிந்தவர்கள்

முழுப்பொருள்
கற்றறிந்தார் எனப்படுபவர் நூல் பலவற்றை கற்று, அதனின் மெய்ப்பொருள் கண்டவர். தான் அறிந்ததனால் தான் பெற்ற பயன்களை அவர் நன்கு அறிவார்.
"அறிவதொவ்வொண்றும் அறியாமையையே" (நன்றி: ஜெயமோகன்) என்பது போல், கற்பதனால் வரும் முதல் பயன் அறியாமை நீங்கி தெளிவு. அவர் அறிந்ததனால் பிறருக்கு நன்மை செய்து அவர்கள் இன்பம் கொள்வதை கண்டவர். உதாரணமாக ஒரு அரசன் நெறி நூல்கள் பலவற்றை கற்று மக்களுக்கு நல்லூழ் செய்ய விழைகிறவன்.

ஆதலால் தானும் இன்பம்/நன்மை பெற்று மற்றவரும் இன்பம்/நன்மை கொள்கிறப் பொழுது அதனில் லயிப்பு வருவது இயல்பே. கரும்பு தின்ன கூலி வேண்டுமா ? அதைப்போல் கற்றறிந்தவர் மேலும் கற்கவே விழைவார் என்கிறது இக்குறள்.

உதாரணமாக - ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர நாளும் புது புது மேம்பாடுகளை கற்று தங்கள் அறிவை உயர்த்திக்கொள்வார்கள், (இன்றைய காலகட்டங்களில்) மக்களவை உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் (Policy Makers) நூல்பலவற்றை கற்றும், உலகலில் செயலாற்றப்படும் நல்ல திட்டங்களை கற்று மக்களுக்கு நன்மை பயவிக்கும் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் வரையறை செய்வார்கள். அப்படி மக்கள் நன்மை பெருவதை கண்டு இன்புற்று மேலும் பல நல்ல செயல்திட்டங்களில் முனைய மேலும் பலவற்றை கற்கவே முனைவர். 

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்கிறது மூதுரை

மேலும் அஷோக்

உதாரணம் (நன்றி: தனமணி)
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்- என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி, உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும் அந்தக் கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்று கருத்தினை வழங்கினார் வள்ளுவர். அவர் வழங்கிய கருத்துக்கேற்ப டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தான் கற்ற கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்கும் வகையில் நல்லாசிரியராகப் பணியாற்றி சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிடப் பாடுபட்டார்.

பரிமேலழகர் உரை
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி; கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர். 

விளக்கம் 
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும், "யாண்டு பலவாக நரையில் மாயினேம்" (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகையாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்று அறிந்தார் - சிறந்த நூல்களைக் கற்று அவற்றின் பொருளைச் செவ்வையாக அறிந்தவர்; தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு - தம் கல்வியால் தாம் இன்புறுவதொடு உலகமும் இன்புறுவது கண்டு; காமுறுவர்-மேன்மேலுங் கற்கவும் கற்பிக்கவும் விரும்புவர்.

தாமின்புறுதலாவது, நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளாலும், தாம் இம்மையிற்பெறும் புகழ் பொருள் போற்றுதலாலும், மறுமையிற்பெறும் நற்பத நம்பிக்கையாலும், இடையறாது மகிழ்தல். உலகின்புறுதலாவது, இன்று செவிக்கினிய சிறந்த விருந்துண்டோ மென்றும், அறியாதபல அரும்பொருள்கள் எளிதாயறிந்தோம் என்றும், இத்தகைய சொற்பொழிவு கேட்டது எம் தவப்பேறேயென்றும், இன்னுஞ் சிலமுறை கேட்பின் யாமும் புலவராய் விடுவேமென்றும், பாராட்டி மகிழ்தல். தாமின்புறுவதை உலகுமின்புற்றுப் போற்றுவது, கரும்பு தின்னக்கைக்கூலி கொடுத்தாற்போன்று ஊக்குவதால் மேலுங் காமுறுவர் என்றார்.

இனி, இக்குறளை, கற்றறிந்தார் தாம் இன்புறுவது கண்டு உலகு.இன்புறக் காமுறுவர் என்று, கொண்டு கூட்டுப் பொருள்கோள் நடையாக மாற்றின், கண்டு என்னுஞ் சொல்லொடு பொருந்தாமையால், அது ஆசிரியர் கருத்தன்றென விடுக்க.

மு.வரதராசனார் உரை
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

சாலமன் பாப்பையா உரை
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

நன்றி ரிஷ்வன்
தான் பெறும் கற்றறிவு
தனக் கின்பம் தருவதுடன்
ஊர் உலகிற்கும் தருவதால்
மேலும் கற்கவே விரும்புவர்
நாலும் அறிந்த அறிஞர்கள்.