Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_045. Show all posts
Showing posts with label Athikaaram_045. Show all posts

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
பல்லார் பலர்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

கொளலின் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்

பத்து - ஓர்எண்; தசமிதிதி; காண்க:பற்று; வயல்; கடவுள், பெரியோர்முதலியோரிடத்துஉள்ளபத்தி; நாலாயிரப்பிரபந்தத்தில்பத்துப்பதிகம்கூடியபகுதி; சீட்டுக்கட்டில்பத்துக்குறியுள்ளசீட்டினம்.

அடுத்த - aṭutta   aTutta அடுத்த next; (with time words) the one after the coming one  
அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.

தீமைத்தே - தீமை- கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன.

நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர்.

தொடர் - தொடர்கை; சங்கிலி; விலங்கு; பஞ்சு; வரிசை; பிசின்; பூமாலை; மரபுவழி; சொற்றொடர்; பழைமை; நட்பு; உறவு; உலோகங்களைஉருக்கஉதவும்மட்பாண்டம்.

கைவிடல்கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல்

முழுப்பொருள்
ஒருவருக்கு பகை என்பது என்றும் தீயதையே நிகழ்த்தும். அதனால் துன்பமும் இழப்பும் தான் அதிகம். முகத்தில் புன்னகையும் மனதில் மகிழ்ச்சியும் மறையும். ஆனால் இவையாவும் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிந்த புறப்பகை. பகைவர்களை பெரியோர் துணைக்கொண்டு தவிர்க்கலாம், வீழ்த்தலாம். 

பல பகைவர்கள் இருந்தால் துன்பத்தின் அளவும் பன்மடங்கு உயரும். ஆனால் பல பகைவர்கள் இருக்கும் பொழுது வரும் பன்மடங்கு தீமையைவிட பத்துமடங்கு தீமை பயப்பது பெரியோர் சான்றோரின் உறவை/ தொடர்பை விட்டொழிதல் ஆகும். ஏனெனில் பெரியோரது துணையின்றிப் போகுமாயின், அகப்பகைகளும் வளர்ந்து, ஆட்கொல்லியாக மாறி அழித்துவிடும். அதனாலேயே பெரியோரின் அணுக்கமும், அறவழி நடத்துதலும் ஒருவருக்குத் / ஒரு அரசருக்குத் தேவை. புறப்பகையைக்கூட துணையின்றி வென்றுவிடலாம் ஆனால் அகப்பகையை பெரியோர் துணையின்றி வெல்லுதல் மிக கடினம். அதனால் தான் பெரியோர் துணைவிட்டொழுகல் பத்துமடங்கு தீமைத்தரும்.

பெரியோர்கள் உடன் இந்தால் நம்மை நல்ல கேள்விகள் கேட்டு சிந்திக்கவைப்பர். அதனால் அகப்பகையால் நாம் செய்த தவறுகளை அறிந்து உணர்ந்து அதன் வேர்களை அறுத்து மீண்டு வருவோம்.

இன்னா நாற்பது பாடல் (27), “பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா” என்று அதை ஒரு துன்பமாகவேச் சொல்லுகிறது.

நாலடியார் பாடலொன்று, பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கரிய பெரியோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே என்று அங்கலாய்க்கிறது. அப்பாடலாவது:
பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் – அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.
(பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.

மு.வரதராசனார் உரை
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

குறள் 449
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம்.

இலார்க்கு - இல்லாதவர்க்கு 

ஊதியம் - இலாபம்; கல்வி; பயன்.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

மதலை - மகன்; குழந்தை; மழலைமொழி; பாவை; பற்றுக்கோடு; தூண்; வேள்வித்தூண்; வீட்டின்கொடுங்கை; பற்று; மரக்கலம்; கொன்றைமரம்; காண்க:சரக்கொன்றை.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

இலார்க்கு  - இல்லாதவர்க்கு 

இல்லை - இல்லை

நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

முழுப்பொருள்
முதல் என்னும் மூலதனம் இல்லாதவருக்கு இல்லை அதன் பயன்/இலாபம். உழைப்பு அடித்தளமாக இருப்பினும் அங்கு மூலதனமே தூண் தான். மூலதனம் என்னும் அத்தூண் இல்லையென்றால் உழைப்பால் அந்த மேற்கூறையை (நிர்வாகத்தை, வணிகத்தை) சில நாட்களுக்கு மேல் தாங்க முடியாது. செல்வமில்லாமல்/ பணமில்லாமல் இடிந்து விழும்.

ஒன்றை தாங்கும் சார்பாக தூண் இல்லையென்றால் மேற்கூரை நிலையாக நிற்காது கீழே விழும். அதுப்போல ஒருவருக்கு, ஒரு அரசனுக்கு தூணாக பெரியோர்கள் சான்றோர்கள் துணையில்லையென்றால் அவ்வரசனுக்கு நிலையான ஏதும் கிடையாது. நிலையான என்றால் உறுதித்தன்மை. ஒரு அரசனுக்கு ஆளும் பூமி, மரபுரிமை ஆகியவை அடங்கும். பெரியோர் துணையில்லாமல் நாட்டை சரியாக வழிநடத்தாமல் ஒரு அரசர் தடுமாரி அரசப்பொறுப்பை இழப்பார். பகைவரும் படையெடுக்க நேரிடும். தனிநபர் வாழ்வில் பெரியோர் சான்றோர் துணையில்லை என்றால் இக்கட்டான நேரங்களில் தனியாக தவித்து கெடுவர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
முதலிலார்க் கூதியம் இல் (பழமொழி 312)

”கணையுலாம் சிலையி னீரைக் காக்குநரில்லை யேனும்....
துணையிலா தவர்க்கும் இன்னா பகைப்புலம் தொலைத்து நீக்கல்” (கம்ப.கவந்தப்.54)

பரிமேலழகர் உரை
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.
(முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.).

மணக்குடவர் உரை
முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.

மு.வரதராசனார் உரை
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

Thirukkural - Management - Mentoring
Every business has an investment. No business can come to fruition without initial investment,  affirms Kural 449. Business investments are done to scale up the business. Similarly, individual investments are done to increase professional success. The investment for professional success is the support of one who can support you professionally.

There can be no gain without Capital,
And no stability unpropped by wise counsel.

Therefore, there cannot be personal and professional success without proper guidance. There are hundreds of examples of successful mentor and mentee relationships in management practices. In Indian context, the all time great leader Dr. A.P.J. Abdul Kalam was mentored by Professor Satish Dhawan.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

குறள் 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

இடிப்பாரை - தம்மை தக்க சமயத்தில் கண்டித்துச் சொல்லித் 

இல்லாத - தம்மைச் சூழ வைத்திராத, இல்லை

ஏமருதல் - திகைத்தல்; களிப்புறுதல்; காக்கப்படுதல்.

ஏமரா - காவலற்ற

மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

கெடுப்பார் - கெடுப்பவர்கள்

இலானும் - இல்லை என்றாலும்

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
ஒருவருக்கு அல்லது ஒரு மன்னருக்கு பெரியோர்கள் சான்றோர்கள் துணை மிக மிக அவசியம். இன்றியமையாதது. ஏனெனில் ஒரு மன்னரை சரியான பாதையில் வழிநடத்த வல்லவர்கள் அறிவிலும் அனுபவத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கும் பெரியோர்களே. சரியான பாதையில் வழிநடத்துவது மட்டும் அல்லாது இக்கட்டான் அல்லது இடர்பாடுகள் துன்பங்கள் சூழ்ந்துள்ள பொழுது நம்மை அதில் இருந்து வெளியே கொண்டுவர துணைப்புரிபவர்கள் அவர்கள் மட்டுமே. நாம் தவறு செய்தாலும் நம்மை கோபித்துக்கொண்டு ஒரு தட்டு தட்டி நம்மை நசுக்கி நம்மை முன்னே செலுத்துவர். சோம்பல், மறதிப் போன்ற பல தீய பழக்கங்களில் நாம் இருந்தால் நம்மை கண்டித்து நல்வழிப்படுத்துவர்.

ஒருவனை இடித்து நல்வழிப்படுத்தும் அத்தகைய பெரியோர் உடன் இல்லையென்றால் அவன் காவலற்ற ஒருவன்/மன்னவன். அத்தகைய காவலற்ற மன்னவனுக்கு கேடுகள், பகை இல்லையென்றாலும் அல்லது வேறு யாரும் துன்பம் கொடுக்காவிட்டாலும் அவனே/அம்மன்னவனே அழிந்துவிடுவான்/கெடுவான். ஏனெனில் தீயவற்றை பிறர் தான் செய்யவேண்டும் என்றில்லை தனக்கு தானே செய்துக்கொள்ளலாம் ஒருவர். மேலும் அவா, வெகுளி/சினம், மயக்கம் போன்றவை ஒருவனை தன்வசப்படுத்தி கெடுத்துவிடும்.

கம்பர் நிந்தனைப் படலத்தில், “
”கடிக்கும்வா ளரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும்ஈ தடாதென் றான்ற வேதுவோ டறிவு காட்டி
இடிக்குநர் இல்லை நீயே யெண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்கின்ற போது முன்னின் முடிவன்றி முடிவதுண்டோ” (கம்ப நிந்தனை 59) என்று கூறுகிறார்

கம்பர் கும்பகருணன்  படத்தில்,
உளைவன வெனினும் மெய்ம்மை யுணர்ந்தவர் முற்றும் ஓர்ந்தார்
விளைவன சொன்ன போதும் கொள்கிலை விடுதல் கண்டாய்
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மைநம் கல்வி செல்வம்
களைவரு தானை யோடும் கழிவது காண்டி யென்றான்” (கம்ப. கும்பகருணன் 33) என்று கூறுகிறார்

மேலும்: அஷோக் உரை

ஒருபோதும் விமர்சனம் செய்யும் உரிமையை, இடித்துரைக்கும் தகைமையை எழுத்தாளன் விட்டுவிடலாகாது. அரசியல்வாதிகளின் மிரட்டல்களாலோ பாமரர்களின் கும்பல்தாக்குதல்களாலோ அவன் விமர்சனங்களை தவிர்ப்பான் என்றால் இலக்கியத்தை இழப்பான். வளையவேகூடாது என்று நான் சொல்ல வரவில்லை. எழுதுவதே எழுத்தாளனுக்கு முக்கியம், அதன்பொருட்டு அவன் வாழ்ந்தாகவேண்டும். ஆனால் தன் பணி என்ன என்பதைப்பற்றிய தெளிவு அவனிடம் இருக்கவேண்டும்.

இதன் மறுபக்கமாக ஒன்றைச் சொல்லவேண்டும். பாமரத்தனம் மீதான எழுத்தாளனின் ஒவ்வாமை என்பது ஒரு போதும் மக்கள் மீதான ஒவ்வாமை அல்ல. எளியோர் மீதான ஏளனம் அல்ல.  உயர்வுமனப்பான்மையோ திமிரோ அல்ல. பாமரரை விமர்சிக்கும்போதுகூட அது காழ்ப்போ கசப்போ அல்ல. அது இன்னும் மேலான அறிவுத்தளத்தில், ஆன்மிகத்தளத்தில் நின்றுகொண்டு செய்யப்படும் ஒருவகை இடித்துரைத்தலோ அறிவுறுத்தலோ மட்டுமே.

எழுத்தாளன் சமூகத்தில் ஒருவனாகவே இருக்கிறான். மக்களில் ஒரு துளிதான் அவனும். அந்த தன்னுணர்வு அவனுக்கு இருக்கும். தன் மக்கள் இன்னும் மேலான நிலையை அடையவேண்டும் என்னும் ஆதங்கமும் கனவுமே அவனை அவ்வண்ணம் ஒவ்வாமைகொள்ளவும் இடித்துரைக்கவும் செய்கிறது. மக்கள் மீதான ஒடுக்குமுறையும் சுரண்டலும் அநீதியும் அவனை கொதிக்கச் செய்கின்றன. அதன் விளைவாகவே அவன் தீவிரம்கொண்டு எழுதுகிறான்.

மக்களை வெறுப்பவனால் இலக்கியம் படைக்கமுடியாது. ஏனென்றால் இலக்கியத்துக்குத் தேவை நுண்மை. நுண்மைகள் எல்லாம் கூர்ந்த அவதானிப்பால்தான் அமையும். கூர்ந்த அவதானிப்பு பெரும் ஈடுபாட்டில் இருந்து எழுவது. மக்களை பெருவிருப்புடன் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பவனால்தான் அவர்களை இலக்கியத்திற்குள் கொண்டு வர முடியும்.

பாமரர்கள் என்னும்போது எளியோர், வறியோர், அடையாளமற்றோரைக் குறிப்பிடவில்லை. பாமரத்தனம் என்பது செல்வந்தர்கள், செல்வாக்கானவர்கள், புகழ்பெற்றவர்களிடமும் நிறைந்துள்ளது. அறிவுக்கு , நுட்பங்களுக்கு, முழுமைநோக்குக்கு எதிரான அன்றாடப்பார்வை, உலகியல்பார்வை , தன்னலப்பார்வை மட்டுமே கொண்டவர்களையே பாமரர்கள் என்கிறோம். பாமரர்களின் மேல் எழுத்தாளன் வைக்கும் விமர்சனத்தை மக்கள்மேல் வைக்கும் விமர்சனமாக திரிப்பவன் ஏமாற்றுக்காரனாகிய அரசியல்வாதிதான்.

மக்கள் அனைவரும் பாமரர்கள் அல்ல. பிள்ளைகளைப் பெற்று உளம் கனிந்த அன்னை, நிலத்தை நுண்ணிதின் அறிந்த விவசாயி எல்லாம் பாமரர்கள் அல்ல. அவர்களைப்பற்றித்தான் எழுத்தாளன் எழுதுகிறான். ஏழாம் உலகம் நாவலின் ராமப்பன் ஓர் அரிய மனிதர். சான்றோன் என்ற பேருக்கு தகுதியானவர். அவரை எழுதுவது எழுத்தாளனின் கடமை. கெத்தேல் சாகிப், பாமரர் அல்ல. அத்தனை எத்தனை நூறு மானுடரை நான் எழுத்தில் காட்டியிருப்பேன். எளிமையான மக்கள் திரளில் இருந்து வருபவர்கள்தான் அவர்கள். அவர்கள் மக்கள் என்று நாம் சொல்லும் பெருந்திரளின் அறிவுத்திறன், அறம், கருணை, ஆன்மிகம் ஆகியவற்றின் உதாரணங்கள்.
.........
.........
மக்களில் உள்ள குறைகளை, சரிவுகளை சுட்டிக்காட்டுவதும் அதே பெரும் அன்பினால்தான். அந்த அன்பே அவர்களைப்பற்றி எழுதும் கலைஞனாக என்னை வைத்திருக்கிறது
-- ஜெ
பரிமேலழகர் உரை
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.
('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.).

மணக்குடவர் உரை
கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

Thirukkural - Management - Mentoring
Kural 448 is very strong on the relevance of a mentor who can monitor the other person's performance. Valluvar resorts to yet another simile here. If a king does not have someone who can mentor or monitor the king's activities, especially when the king goes wrong, the king will ruin himself soon. That act is similar to self-destruction. Even if there is no enemy to destroy the king, the king will destroy himself.

A King unguarded by trenchant counsel
Needs no foes to come to grief.

Every person must have someone to monitor, control and direct him. If there is no external control, there is a possibility for derailing, as it is human tendency to choose the path of least resistance.

English Meaning - As I taught a kid - Rajesh
When  one (an individual / king) does not have a support system system of people (parents, family, friends, teachers, mentors, ministers, scholars, experts, specialists, advisors etc) who would inform us, caution us, (if required) get angry with us and scold us) about upcoming danger or current danger and advise, then the individual/king would get destroyed/destructed even if he doesn't have a betrayer with him.

Our mentors might scold us when we do wrong. But, if we don't have mentors in our lives, then no one can save us. Even if a betrayer is not with us, our own internal devils which were silent, will betray us and lead to destruction

Questions that I ask to the kid
What happens when you do not have mentors who can scold us?

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடிக்கும் - இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

துணையாரை - துணையார்
- உதுவுவோரை 

ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.  

ஆள்வாரை - ஆள்வார்
- ஆட்கொள்வோர்; அடக்கி ஆள்வோர் ; சான்றோர் ; வழங்குவோர் ; கையாள்பவர் 

யாரே - எவரும்

கெடுக்கும் - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல்

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

யவர்அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

முழுப்பொருள்
நாம் தவறு செய்தாலோ அல்லது தவறான சுற்றத்தாருடன் இருந்தாலோ அல்லது தீயது/கேடு நம்மை நெருங்கினாலோ நம்மிடம் கடிந்துக்கொண்டாலும் நம்மை தற்காக்கும் பெரியோர் நமக்கு நல்லவற்றையே தருவர். மேலும் கேடு வராமல் இருக்க வேண்டியவற்றை செய்யச்சொல்வர். அத்தகைய பெரியோர் நமக்கு துணையாக இருக்கும் பொழுது நமக்கு கேடினை விளைவிக்கக்கூடியவர் யார் இருக்க முடியும்?  

ஆதலால் பெரியோர் துணைக்கொண்டு அவர் கூறுவதுபோல் ஒழுகு என்று சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இடிக்குங் கேளிர்” (குறுந்.58)
“மேனின்று மெய்கூறும் கேளிர்” (கலி.3:21)

பரிமேலழகர் உரை
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?
(தீயன: பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது , தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர். இது கேடில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை
தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.

English Meaning - As I taught a kid - Rajesh
When  one (an individual / king) has a support system of people (parents, family, friends, teachers, mentors, ministers, scholars, experts, specialists, advisors etc) who inform us, caution us, (if required) get angry with us and scold us) about upcoming danger, hurdles or current danger and advise us to prevent it, control the damage, rebuild etc, then what danger or who can destroy that individual / king?
This kural says that mentors help to alerts us, advise us. If required, mentors can also get angry with us because their intention is to prevent the danger and avoid destruction.

Questions that I ask to the kid
When you have mentors who can scold us, what is the advantage of it?

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

குறள் 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
தக்கார் - தரமும், தகவும் (நடுவாண்மை குணநலம்); மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்.

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

இனத்தனாய் - இனத்தான் - உறவினன்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

ஒழுக - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வல்லானைச் - வல்லான் - வலிமையுள்ளவன்; திறமையானவன்; கடவுள்; சூதாடுபவன்.

செற்றார் - பகைவர்

செயக்கிடந்தது -செய்யக் கூடியது

இல் - ஒன்றுமில்லை

முழுப்பொருள்
தக்கார் என்றால் பெரியோர் சான்றோர் என்று மட்டும் அல்லாது நடுவுநிலைமையுடையோர் என்ற பொருளும் அடங்கும். ஆதலால் (ஒரு அரசர்) ஒருவர் நடுவுநிலைமையுடையோரான சான்றோர்களுடன் ஒழுகி உறவு வளர்த்து அவர்கள் அறிவுரைகளை ஏற்று நடக்கக்கூடிய திறமையுள்ளவனை பகைவர்கள் ஒன்றும் செய்ய இயலாது. சான்றோர்கள் நாம் தவறு செய்தால் நம்மை திருத்தி நல்வழிப்படுத்துவர். நம்மில் பகை வளராது நம்மை காக்கப்பர்.

உதாரணமாக மஹாபாரதத்தில் துரியோதனனிடம் பீஷ்மர் போன்ற பிதாமகர் இருந்தும் துரியோதனன் பலர் அறிவுரைகளை கேட்கவே இல்லை. தன் சித்தத்திற்கு வேண்டியதை தவிர பிறர் சொல்லும் நல்லதை கேட்கும் திறனற்றவனாக இருந்தான். அதனால் தான் பகையை வளர்த்துக்கொண்டு அழிந்தான். ஆனால் பாண்டவர்கள் அறத்தில் சான்றோர் சொன்னவற்றை மதித்தார்கள். பாண்டவர்களுக்குள் உள்ளே தருமன் / யுதிஷ்ட்ரன் சொன்னவற்றை மற்ற நால்வரும் (பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்) என்றும் மதித்து நடந்தனர். தருமன் பகை வளராது பாதுகாத்தார்.

நாலடியார் பாடல் ஒன்று,
புன்செய் நிலத்திலும், நன்செய் நிலத்திலும் மரக்கட்டையைச் சார்ந்து முளைத்திருக்கும் புல்லானது, உழவர்களின் கலப்பைக்குச் சிறிதும் அசையாது. அதுபோல, வலிமை அற்றவராயினும் வலிமை மிக்காரைச் சார்ந்திருப்பாராயின், பகைவர் சினம் அவர்மேல் செல்லாது என்கிறது. அப்பாடல் கீழே:
கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
செல்லாவாம் செற்றார்சினம். (நாலடி 178)

ஆத்திச்சூடி சொல்வதும், “சான்றோர் இனத்திரு” என்பதுதான். பகையென்பது புறப்பகை மட்டுமல்லாது, உடனிருந்து அழிக்கும் அகப்பகையும் என்பது பெறப்படும்.

”....... தோள்வலி தாங்கினராயினும்
அமைச்சர் சொல்வழியாற்றுதல் ஆற்றலே” (கம்ப.மந்தரை.15)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.
(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்¢த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.).

மணக்குடவர் உரை
தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.

இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.

மு.வரதராசனார் உரை
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான்

குறள் 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
சூழ்வார் -சூழ்வோர் - அமைச்சர்; உறவினர்; சூழ்ந்துநிற்பவர்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஆன் - ஆன் - āṉ   part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.)

ஒழுகலான் -  நடந்துக்கொள்பவன்

மன்னவன் - மன்னன், இந்திரன், அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

சூழ்வாரைச்சூழ்வார் -சூழ்வோர் - அமைச்சர்; உறவினர்; சூழ்ந்துநிற்பவர்.

சூழ்ந்து - சூழ்தல்  - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
அரசர் தன்னை சூழ்ந்து இருக்கும் அமைச்சர்கள் துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியே மக்களும் நாட்டுக்கும் ஏற்ற நல்ல முடிவுகளை திட்டங்களை தீட்டி நிறைவேற்றும்படி இருக்கும். ஏனெனில் ஒரு தனிமனிதனால் எல்லாவற்றையும் அதுவும் இது போன்ற பெரும்பணியை செய்ய இயலாது. ஆதலால் மக்களின் நலனையும் நாட்டின் நலனையும் தன்னுடைய மனதில் எப்பொழுதும் வைத்துக்கொண்டு சிந்திக்கும் அமைச்சர்களை பெரியோர்களை துறை சார்ந்த நிபுணர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தன்னுடைய அமைச்சர்களாக தன்னை சூழ அரசர் வைத்துக்கொள்ளவேண்டும்.

இது தனி நபர்களுக்கும் பொருந்தும். நமது தாய் தந்தை சகோதரர் சகோதரிகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் பெரியோர் சான்றோரை நம்மால் தேடி தேடி தேர்ந்தெடுக்க முடியும். ஆன்மீக வாழ்விற்கு நல்ல ஒரு குருவையும். வேலை செய்யும் இடத்தில நல்ல ஒரு நிபுணரையும் துணை கொள்ளுதல் மிக மிக பயனுள்ளதாக அமையும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கற்றார் பலரைத்தம் கண்ணாக இல்லாதான்” (பழமொழி 228)

“கண்போற் காதல்நின் கழிபே ரமைச்சன்” (பெருங்.2.11:166)

“உற்றது முடிக்கும் உறுதிநாட்டத்துக்
கற்றுப்பொருள் தெரிந்த கண்போற் காட்சி
அருமதி அமைச்சர்” (பெருங்.3.3:93-5)

“கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும்..
கொற்றம் கொள்குறிக் கொற்றவற் கென்பவே” (சீவக.1921)

“மற்றவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலிய சால்பும்
அற்றமில் புகழும் கோலும் ஆபவர் அமைச்ச ரன்றே’ (சூளாமணி.மந்திர.6)

“மந்திரக் கிழவர் கண்ணா” (சூளாமணி.தூது.135)


பரிமேலழகர் உரை
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்.

மு.வரதராசனார் உரை
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

குறள் 443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
அரிது - aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.  

அரியவற்றுள் - அருமையானவற்றினுள்
எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

அரிதே - அரிதானது; அருமையானது

பெரியாரைப் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பேணித் - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

தமராக் - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி

கொளல் - கொள்ள வேண்டும் ; அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
அரிதான செல்வங்கள் பல உண்டு ஆனால் நமக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கும் நல்வழியை காண்பிக்கும் உயர் எண்ணங்களை விதைக்கும் நல் சிந்தனைகளை கூறும் குரு இடத்தில் இருக்கும் பெரியோர்களும் சான்றோர்களும் மிக அரிதே. கல்வி, கேள்வி, அறிவு போன்ற செல்வங்களுக்கு எல்லாம் ஊற்றாய் அவர்களே இருப்பார்கள். பெரும்பாலும் அவர்களுடன் இருந்தாலே அவர்களின் மேன்மையை கண்டு நாம் அவர்களிடம் கற்றுக்கொள்வோம். அவர்களிடம் உரையாடுவது நமக்கு தெளிவைக்கொடுக்கும். ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும். (எனக்கு பொதுவாக எனது பாட்டியுடனும், எனது நண்பர்களின் பெற்றோர்களிடமும் பாட்டி தாத்தாகளுடனும் உரையாடுவதில் அவர்களின் விவேகம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அன்று எனக்கு புரியவில்லை என்றாலும் பின்னாளில் அதை எண்ணிப் பார்க்கும் பொழுது எனக்கு அதில் இருக்கும் விவேகம் புரியும்).  பெரியோர்களின் வாழ்வே நமக்கு பாடம்.

முற்றிலும் புதிதாய் சாலை (வழித் தடம், Road)போடுவதை விட அந்த சாலையில் சென்றவரிடம் கேட்டு அவர்கள் சந்தித்த இடர்களை  கற்று அந்த சாலையில் செல்வதோ அல்லது அந்த பாடங்களை ஏற்று ஒரு புதிய சாலை போடுவது சிறந்ததாகும். முற்றிலும் புதிய சாலை போடுவது தவறில்லை. ஆனால் மற்றவரின் பாடம் நமக்கு உதவியாக இருக்கும் என்பது இங்கே கூற விரும்புவது.

ஆதலால் அத்தகைய பெரியோர்களை உபசரித்து போற்றி பாதுகாத்து அவர்களிடம் வாழ்க்கையை அறிந்துக்கொள்ள வேண்டும். அவர்களை நம்முடைய உறவினர்கள் என்று எண்ணி நம்மை அவர்களின் வட்டத்திற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

‘‘பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையான்-இலங்கைக்கே
போந்து இறைஆயதூஉம் பெற்றான்;பெரியாரைச்
சார்ந்து கெழீஇ இலார் இல்” (பழமொழி 92)

மேற்கண்ட பழமொழிப்பாடல் கூறுங்கருத்து இதுதான். இலங்கைக்குரியவன் இராவணன்; அவன் தம்பி விபீஷணன்; அவன்இராமனே தனக்குத் துணையாவான் என்று எண்ணி அவனிடம் வந்தான். பின்பு இலங்கைக்கே அந்த இளையவன் மன்னவனாகிவிட்டான். ஆகையால்பெரியாரைச் சார்ந்து பயன் பெறாதவர்கள் யாரும் இல்லை

“தீர்வில் அன்பு செலுத்தலிற் செவ்வியோர்
ஆர்வ மன்னவற்காயுதம் ஆவதே” (கம்ப.மந்தரை 20)

பரிமேலழகர் உரை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.).

மணக்குடவர் உரை
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.

மு.வரதராசனார் உரை
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

அறனறிந்து மூத்த அறிவுடையார்

குறள் 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
அறன் - aṟaṉ   n. அறம்; தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).  
மூத்த - மூத்தோர்; முதியோர்; அறிஞர்
mūttōr   n. மூ-. 1. Aged persons; elders; முதியவர். விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை (ஆசாரக். 22). 2. Learned persons;பண்டிதர். (திவா.) 3. Ministers; மந்திரிமார்.(திவா.)
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
உடையார் - செல்வர் 
கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.
திறன் -  திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.
அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognise, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).  
தேர்ச்சி, v. n. investigation; 2. learning discernment; 3. progress, proficiency.
தேர்ந்துபார்க்க, to deliberate, to examine in the mind.
tēr   தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்; அவர்களைத் துணைக் கொள்ள வேண்டும்; அவர்க்ளின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

முழுப்பொருள்
வாழ்வை வாழ வகுக்கப்பட்டுள்ள நெறிகளை கூறும் பல நூல்களை, வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை கற்று தேர்ந்து வாழ்வில் அன்றாடும் பயின்று ஞானமாய் உடைய அறிஞர்களுடன் நட்பு பாராட்டி அவர்களுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது அவர்களுடைய திறமையை ஒழுக்கத்தை வலிமையை கற்று அதில் தேர்ச்சி பெற உத்தேசங்களை பெற்று அவற்றை வாழ்வில் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றவற்றை வாழ்வில் பயின்றால் நம் வாழ்வு மேம்பட ஏதுவாக இருக்கும். 

சம்பந்தர்.வீழிமிழலை(3) தேவாரம் ஒன்று, “சிறியவர் அறிவினில் மிக்க விருத்தரை அடிவீழ்ந்திடம் புகும்”. ஆட்சிமுறையிலே, தலைமைப் பொறுப்பிலே இருப்பவருக்கு அறிவில் சிறந்த அமைச்சர் குழாமும், பெரியோர்களின் நட்பும் தேவை என்பதை எல்லா ஆட்சிமுறைகளுமே இந்திய துணைகண்டத்தில் உணர்த்தியிருக்கின்றன. தம் கட்டிலில் களப்பின் காரணமாக அயர்ந்து தூங்கிவிட்ட மோசிகீரனாருக்கு, சாமரம் வீசிய மன்னன், அவரது புலமைக்கும் அறிவுக்கும், அதன்காரணமாக ஏற்பட்ட நட்புக்கும் மதிப்பு கொடுத்ததாலன்றோ அவ்வாறு செய்தான்?

”பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே” என்ற புறநானூற்றுப் பாடல் சொல்லும் கருத்து: வயதில் முதிர்ந்ததற்காக மட்டும் ஒருவரை வியப்பதும், சிறியவர் என்பதனால் அறிவில் சிறந்தோரை இகழ்தலும் இல்லாதது தமிழர் பண்பாடு. இதை “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.

பெரியோரின் பெருநட்பைக் கொள்ளவேண்டியது ஏன்? அவர்கள் தாம் செய்யும் பிழைகளைப் பொறுப்பதால்தானே? தவிரவும் நல்லன உணர்த்தி நல்வழி நடத்துவதால்தானே? குற்றங்கள் தவிர்த்து நல்லன செய்வோர் அத்தகு நட்பு அடைதல் அரிதா? இல்லை, என்கிறது நாலடியார் பாடலொன்று.
“பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ – அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்”

மூதுரை பாடல் ஒன்றில் ஔவையார் பெரியோருடன் இணங்கி இருத்தலை பற்றி கீழ்கண்ட வாறு கூறுகிறார்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , மூவிருகுற்றமும் முறைமையின் கடிதலின் ,காவற் சாக்காடு உகைத்தற்கு உரியனாய அரசன் , தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாக் கோடல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். பேரறிவுடையராவார்: அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமல் காத்தற்கு உரிய அமைச்சர் ,புரோகிதர்.]

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
(அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.).

மணக்குடவர் உரை
அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அற வழிதான் வாழ்க்கைக்கு ஆக்கங்கள் தரும் என்று
அவ்வழியைத் தம் வழியாய்க் கொண்டொழுகும் பெரியோரை
உறவாக்கி அவர் காட்டும் உயர் வழிகள் தனில் நடத்தல்
உற்றாராய் ஆட்சியிலே இருப்பாரின் பெருங் கடமை
திறமாக இதைக் கொண்டு தெளிவாக ஆளுபவர்
தெய்வமென ஆவார்கள் மக்களுக்குப் புரிவாரா?
அறமெல்லாம் தெளிவாக ஆக்கிவைத்த வள்ளுவனாம்
அப்பெரியார் துணை கொள்ளல் அழகான நல் வழியே

Thirukkural - Management - Mentoring
Mentoring has been practiced for ages. Many writers consider the origin to be that of the mentoring done to the son of the great Greek warrior Ulysses. So far, the practices were of general nature. Now, the practice of mentoring has gained a strong footing in organizations. Mentoring helps mentees improve their personal and professional productivity. Hence, organizations are investing to establish effective mentoring systems. 

Kurals show that 1) Mentoring has existed for a long period, 2) The practices of mentoring will be more professional, and 3) The needs for mentoring will increase because of organizational changes and challenges.

Mentoring is defined as, “...a relationship between two individuals, usually a senior and a junior employee, whereby the senior employee takes the junior employee ‘under his or her wing' to teach the junior employee about his or her job, introduce the junior employee to contacts, orient the employee to the industry and organization, and address social and personal issues that may arise on the job,” (Tammy, Lisa, and Mark, 2009).

Kurals that highlight the relevance of the practice of mentoring  for increased personal and professional productivity. Kural 441 advises a young person to relate with a senior person who has knowledge, wisdom, skills, and positive qualities so that the younger person will gain a lot of knowledge from the senior person.

Value and Secure the friendship
Of the virtuous, mature, and wise.

There is a belief that one conversation with a learned person is worth a month's study. So, a series of conversations in the process of mentoring will be worth years' study for a younger employee. However, Valluvar cautions us to carry out a thorough research to find a knowledgeable person. There are cases in medical history that cures become worse than diseases. A wrong mentor is worse than a disease. He will become, instead of a mentor, a tormentor. This is one of the reasons that mentoring has not gained a strong footing across industries. 

தம்மிற் பெரியார் தமரா

குறள் 444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. 
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தம்மிற் - தம்மை விட ஞானத்திலும், அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும்

பெரியார் -  பெரியவர்கள், மேன்மக்கள், சான்றோர்கள்; மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

தமரா - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி

ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வன்மையுள் - வன்மை - வலிமை; கடினம்; வன்சொல்; ஆற்றல்; வலாற்காரம்; சொல்அழுத்தம்; கோபம்; கருத்து; வல்லெழுத்து.

எல்லாம் - முழுதும்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
ளெல்லாந் தலை - எல்லாவற்றிலும் சிறந்தது / தலையானது

முழுப்பொருள் 
அறிவிலும்/ஞானத்திலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் தம்மை விட சிறந்தவர்கள், பெரியவர்கள், மேன்மக்கள், சான்றோர்கள் உடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களை நமது மக்கள், உறவினர் போன்று எண்ணி அவர்களுடன் பழக வேண்டும். அவர்களிடம் நன்கு பழகி, நல்லவற்றை கற்றுச் செயல்பட வேண்டும். அதற்காகவே ஒழுகுதல் என்று கூறியிருக்கிறார். ஒழுகுதல் என்பதற்கு வளர்தல், ஒழுங்குபடுதல் என்ற பொருள்களும் உண்டு.

ஆதலால் அப்படி நம்மை வளர்த்துக்கொள்ளும் பொழுது நாம் நல்வழியில் செல்ல முடியும், துன்பங்கள் வராது. துன்பங்கள் வந்தாலும் பெரியோர் துணைக்கொண்டால் அதில் இருந்து மீள பல வழி கிடைக்கும். அது மட்டும் இன்றி நாம் நமது அளவுகோல்களை உயர்த்திகொண்டு, நமது எல்லைகளை விரிவாக்கி, பலமடங்கு உயர்வாக செயலாற்ற முடியும்.

ஆதலால் பெரியோர் உடன் உறவு கொண்டு துணைக்கொள்ளும் பண்பானது வலிமையான பண்புகளிலேயே சிறந்ததாகும். அதனால் தான் அன்று அரசர்களால் திறம்பட பல செயலகளை தங்களது காலத்திலேயெ செயல்படுத்த முடிந்தது.

Nurturing Relationships என்று ஆங்கிலத்தில் சொல்லலாம்.

மேலும்
தெரிந்துகொள்ளும்போது சலிப்பும் சோர்வும் உண்டு. நம் கல்விக்கூட வகுப்புகள் பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் அறிந்துகொள்ளுதல் ஒருபோதும் சோர்வோ சலிப்போ அளிப்பதில்லை. சொல்லப்போனால் மனித வாழ்க்கையிலேயே உச்சகட்ட இன்பம் என்றால் அறிதலின் இன்பம்தான். ஆகவேதான் உண்மையான குரு சீடனுக்கு அளிக்கும் ஆனந்தத்தை வேறெந்த மனிதரும் அளிப்பதில்லை என நம் மரபு சொல்கிறது.

மேலும்: 
சுற்றந்தழால் - நம் உறவினர்கள் மட்டுமல்ல. நம்மை சுற்றி உள்ளவர்கள் அனைவரும். (all stakeholders). நம்மைச் சுற்றி இருக்கிறவர்களிடம் இருந்து தேர்ந்து எடுத்து (நன்கு ஆராய்ந்து தேர்ந்து எடுத்து) நல்ல துணைவர்களை தேர்ந்து எடுத்து, எப்படி அவர்களிடம் உறவுகளை வளர்த்துக்கொள்வது.

நம்மை விட உயர்ந்தவர்களை தேர்ந்து எடுத்து, நாம் அவர்களோடு உறவு வைத்துக்கொள்ள முடிந்தால் சிறப்பு. பல மேலாளர்கள் தனது ஆணவத்தால் தன்னுடைய குழுவுடன் உறவுகளை ஒழுங்காக வளத்துக்கொள்வது கிடையாது. எப்படிக் குழுவை சமாளிப்பது என்று யோசிப்பத்தை நாம் அன்றாடும் பார்க்கலாம். ஆனால் உலகில் உள்ள மிகச்சிறந்த தலைவர்கள் (காந்தி, காமராஜார் போன்றோர்) தம்மை விட பல மடங்கு உயர்ந்தவர்களிடம் இணைந்து செயல்பட தயங்குவதில்லை. அப்படி தயங்காமல், அவர்களையும் நிர்வகிக்கிற நேரம் வரும்போழுது நம்முடைய தளத்திலிருந்து பல மடங்கு உயர்ந்து செயல்படுகிறோம். அப்பொழுதுத் தான் நமது எல்லைகளை தாண்டி செயலாற்ற முடியும். இல்லையேல் நாம் நம்மை ஒரு எல்லைக்குள் நின்றுவிடுகிறோம். அப்படிப்பட்ட பெரியோர்களிடம் உறவு வைத்துக்கொள்ளும் பொழுது நாம் வேறு ஒரு உயர்ந்தத்தளத்தில் செயலாற்றுவோம். 

இன்று தொழில் நுட்பம் நாம் எண்ணியதைவிட அளவுக்கதிகமாக வளர்ந்து இருக்கிறது. Google இருப்பதனால் உலகில் எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ளலாம் என்றில்லை. பிறரின் துணை தேவையில்லை என்ற ஆணவம் கூடாது. 

இவ்வுலகில் எந்த ஒரு துறையாக இருப்பினும் அதில் சிறந்து விளங்குபவர், உதாரணமாக சொன்னால் சச்சின் டெண்டுல்கர் (cricket), சுந்தர் பிச்சை(google ceo), பில் கேட்ஸ் (microsoft ceo), எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி (carnatic singer), சஞ்சய் சுப்ரமணியம் (carnatic singer) போன்ற பலர் அவர்களை விட பெரியவர்களை ஆசிரியராக கருதினர்.  தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு செயல்புரிந்த அறிவுரையாளர் Mentor தேவை. 

நாம் நேரடியாக பலவற்றை பயிற்சிகள் மூலம் கற்கலாம் அல்லது அனுபவம் மூலமாக கற்கலாம். ஆனால் எல்லாவற்றை துவக்கத்தில் இருந்து செய்துப்பார்த்து கற்பதை காட்டிலும் பெரியோர்களிடம் இருந்து கற்பது நன்று. Do not reinvent the wheel என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். நாம் புதிதாகப் பாதை அமைப்பதை விட ஏற்கனவே போடப்பட்டப் பாதையில் செல்வது சுலபம்தானே!

“நாம் செல்லும் பாதை சரிதானா? எடுக்கும் முடிவுகள் சரியா? பிரச்சினைகள் வரும்போது எப்படி எதிர்கொள்வது? நாம் செய்யும் செயல்களில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா?” என்று நமது Mentorஐ கேட்கலாம். இதன் மூலம் நாம் நம் லட்சியத்தை நோக்கி மிக உற்சாகத்துடன் செல்லலாம்! நமக்கு வழிகாட்டிகள் தேவை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். நம்மைச் சுற்றி, நம் வீட்டில், நம் நண்பர்கள் குழுவில், நம் உறவினர்களில், நம் துறையில் வெற்றி பெற்றவர்கள் என்று எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களை நாம் தெரிந்து கொண்டு அவர்களுடன் பழகி நல்லவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் அனுபவம் மற்றும் அறிவினால் நாம் சோதனைகளை எப்படிக் கடந்து நம் இலக்கை அடைவது என்று நமக்குப் புரிய வைப்பார்கள்.

Mentor என்பவர் வெறுமென எப்படிச் செய்வது என்று சொல்லாமல் நம்மை உயர்த்துபவராக இருப்பதும் அவசியம். Bar-Raiser என்று நிர்வாகங்களில் கூறுவார்கள் (Amazon  போன்ற நிர்வாகங்களில் ஒரு நபரை 10 பேர் நேர்காணல் செய்வார்கள். அதில் ஒருவர் Bar Raiser. அந்த Bar Raiser வேலை என்னவென்றால், புதிதாய் வேலைக்கு எடுக்கப்போகும் ஆள், ஏற்கனவே நிர்வாகத்தில் இருப்பவரை விட குறிப்பிட்ட அளவு திறனும் தகுதியும் அதிகம் இருக்க வேண்டும். Bar-Raiser என்பவர் நம்முடைய இலட்சியங்களையும், சிந்தனைகளையும் உயர்த்துவார். நமது குறிக்கோள்களை (Goal) உயர்த்துவார். நம்மை நமது சொகுசான சுலபாமான வசதியான இடத்தில் இருக்க விடமாட்டார். நமக்கு புது புது சவால்களை கொடுத்து நம்மை முன்னேற்றுவார். 

நமது தந்தை தாய் நல்ல நினைப்பார்கள். ஆனால் அவர்களின் உலகம் சிறியதாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அதுவே ஒரு அல்லது சில பல பெரியோர்களை (mentor) துணையாகக்கொண்டாள் நமக்கு விஸ்தாரமான (அகலமான) பார்வையும் ஆழ்ந்தப் புரிதலும் கிடைக்கும். மேலும், பெரும்பான்மையான தந்தை தாய் மார்கள் நாம் ஒரு நல்ல நிலையில் இருந்தால் சந்தோஷபடுவார்கள். அதிலேயே நிறைவுக்கொள்வார்கள். ஆனால் Mentor என்பவர் தன்னுடைய நிலையை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொண்டு நம்மை முன்னேற்ற முனைப்பைத்தருவார்.

உதாரணம்: 
காமராஜர் அவர்கள் பள்ளிக்கூட கல்வி கூட இல்லாமல், செல்வமும் இல்லாமல், குடும்பப் பின்னனியும் இல்லாமல் எப்படி அவரால் அவ்வளவு உயர்ந்த பதவிக்கு வர முடிந்தது ? தனது நாற்பது வயதிற்கு முன்னாலேயே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்கள் என் எல்லோருடனும் ஆழமான உறவு வைத்து இருந்தார். பேர் சொல்லி அழைத்து தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு ஆழமான உறவை வளர்த்துக்கொண்டு உள்ளார்.  அவரிடம் இருந்து குறைகளையெல்லாம் தாண்டி ராஜாஜி போன்றோர்களுடன் இணைந்து அவர்களுக்கு இணையாக செயல்பட முடிந்தது என்றால் அந்த உறவுகள் தான் காரணம்.










காந்தி தென் ஆப்ரிக்காவில் உண்ணாவிரதம் இருந்தபோதிலும் அது இந்தியாவில் தெரியப் படும் அளவிற்கு இருந்தது என்றால் அதற்கு உறவுகள் தான் காரணம். காந்தி அவர்கள் ப்ரிடிஷ் அரசிடம் விடுதலைக்கு போட்டியிட்டாலும் எதிர் அணியில் உள்ளவர்களிடமும் ஆழமான உறவு வைத்து தனது கருத்துக்களை அவர்கள் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு. அம்பேத்தகருடன் மனதார ஆத்மாத்தமார்கா உரையாடி, செவி சாய்த்த ஒரே தலைவர் காந்தி. அதனால் தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் பொறுப்பை அம்பேத்தகார் பெற்றார். பின்பு நேருவும் காந்தி தேர்ந்து எடுத்த தலைவர் அம்பேத்தகார் என்பதனால் காந்தி இறந்தப்பிறகும் அம்பேத்தகர் முன்வைத்த பல அரசியல் சாசனங்களை முதல் முயற்சியில் முடியாவிட்டாலும் ஒரு குறிப்பிட காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றினார். 










மேலும்: அஷோக்

“கற்றல் வழியாக உருவாகும் உறவே இவ்வுலகில் இதுவரை மானுடர் ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொள்ளும் உறவுகளில் மகத்தானது. பெற்றோர், துணைவி, குடும்பம் என உருவாகும் எல்லா உறவும் இரண்டாம்நிலையில் உள்ளதே. இன்று சாக்ரடீஸ் பிளேட்டோ அரிஸ்டாடில் என்றே நாம் அறிகிறோம். அவர்களின் பெற்றோரை அல்ல.”

இது ஏன் இவ்வாறு இருந்துகொண்டிருக்கிறது? மனிதனுக்குள் அறிதலுக்கான பெரும்விழைவு உள்ளே பொறிக்கப்பட்டுள்ளது. அறிதலின்போது மட்டுமே அவன் அடையும் நிகரற்ற இன்பம் ஒன்று உண்டு. அறிவின்பமே மனிதனை விலங்குகளில் இருந்து பிரித்தது. மானுடக்கலாச்சாரமே அவ்வாறு உருவானதுதான். அந்த அடிப்படை இல்லையேல் மானுடமே இல்லை. இங்கே மானுடம் இவ்வண்ணம் திகழ்வதற்கான ஆணை அறிவின்பம் எனும் வடிவில் மானுடனுக்குள் என்றோ எவ்விதமோ வந்து சேர்ந்தது

அந்த அறிவின்பத்தால்தான் ஆசிரியனும் மாணவனும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்புவியில் இருக்கும் முதன்மையான விசை ஒன்றால் அவர்களின் உறவு நிகழ்கிறது. பிறப்புத்தொடர்ச்சியை உருவாக்கும் பொருட்டு மானுடனுள் பொறிக்கப்பட்டுள்ள காமமும், குழந்தைப்பற்றும், தன்னலமும் எல்லாமே அதற்கு அடுத்த நிலையில் இருப்பவைதான்.

ஆசிரியனுக்கு அடுத்த உயர்படியில் இருப்பது தெய்வம் மட்டுமே. தெய்வம் எனும்போது பிரபஞ்சசாரமான ஒன்று எனக் கொள்ளலாம். இங்கனைத்திலும் நாம் உணரும் ஒன்று. ஒரு மலருடன், காலையொளியுடன், விரிவானுடன், நதியுடன் நம்மை இணைக்கும் பேருணர்வாக அது நம்மில் நிகழ்கிறது. நம்மை கடந்து நாம் அறியும் ஒன்று.

எழுத்தாளனை ஆசிரியன் என்றே நம் மரபு சொல்லிவருகிறது. இலக்கியம் எப்படி எந்நிலையில் நிகழ்ந்தாலும் கற்பித்தல் என்னும் அடிப்படையை விட்டு அது விலகவே முடியாது. ஆனால் இலக்கியம் கற்பிக்கும் விதம் வேறு. அவ்வகையிலேயே பிற ஞானங்களில் இருந்து அது வேறுபடுகிறது. பிற ஞானங்களை அளிக்கும் ஆசிரியர்கள் போதனை வழியாக கற்பிக்கிறார்கள். அவர்கள் கடந்து சென்றவற்றை நமக்கு அளிக்கிறார்கள். அவர்கள் கற்பிப்பனவற்றில் இருந்து வெளியே அவர்கள் இருக்கிறார்கள்.

இலக்கியம் போதிப்பதில்லை, அது ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் காட்டி அதை வாசகன் வாழச்செய்கிறது. வாசகன் கற்பன அனைத்தும் அவனே வாழ்ந்து அறிவன. ஆகவே அவை அவனுடைய ஞானங்களே. புனைவிலக்கியத்தை எழுதுபவனை அவ்வெழுத்தினுள் நாம் கண்டடைகிறோம். அவனுடன் வாழ்கிறோம். ஆகவே அவனும் நம்முடன் ஓர் உரையாடலில் இருப்பதாக எண்ணுகிறோம். கற்பிக்கும் ஆசிரியனிடம் உருவாகும் மதிப்பு மிக்க விலகல் பலசமயம் இலக்கிய ஆசிரியனிடம் உருவாவதில்லை. அணுக்கமும் நெகிழ்வுமான உறவே உருவாகிறது. நம் துயரங்களைப் பகிர்ந்துகொண்ட, நம் இன்பங்களில் உடனிருந்த, நம்முடன் வாழ்ந்த ஒருவருடன் நாம் கொள்ளும் உறவு போன்றது அது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

நல்லவரைப் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
நடப்பவர்க்குத் துன்பங்கள் வந்த போதும்
வல்லவராய் அதை மாற்ற வழிகள் சொல்லி
வகைப்படுத்தி தொகைப்படுத்தி வாழ வைப்பார்
அல்லவராய் அவர் தம்மை விட்டு விட்டால்
ஆயிரம் பேர் பகையை விடத் தீமை அது
நல்லவரைப் பெரியவரைத் துணையாய்க் கொள்ளல்
நலம் பயக்கும் வலிமை தரும் உணர்வீர் நன்கு

குறள்
உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கை விடல்

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுளெல்லாம் தலை


பரிமேலழகர் உரை
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு. எல்லா வலி உடைமையினும் தலை. 

விளக்கம் 
(பொருள், படை, அரண்களான்ஆய வலியினும் இத் துணைவலி சிறந்தது என்றது, இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் -அறிவு முதலியவற்றால் தம்மினும் பெரியவர் தமக்குத் துணைவராமாறு அவர் வழிநின் றொழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை -அரசர்க்குரிய வலிமைக ளெல்லாவற்றுள்ளுந் தலையானதாம்.

படை, அரண், பொருள், நட்பு முதலிய வலிமைகளால் நீக்கப் படாத தெய்வத்துன்பங்களை நீக்குதற்கும், அடையப்பெறாத வெற்றியை அடைதற்கும், உதவும் பெரியார் துணை அவ்வலிமைகளினுஞ் சிறந்தது என்பதாம்.

மணக்குடவர் உரை
தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி. 

மு.வரதராசனார் உரை
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

Thirukkural - Management - Mentoring
The greatest strength for a young person is to associate himself with people who are more knowledgeable than he is, confirms Kural 444.

The great strength is kinship 
With one greater.

A confident leader chooses people who know more so that he can learn more. Whereas an insecure person avoids people who know more than what he knows as they become threats to his power and position. Unfortunately, we are confident in the company of people who know less than we know. Always associating with people who know less than you know may not make you more knowledgeable. Associating with knowledgeable people and following the directions shown by them are the two most important essentials for one's personal and professional growth.

English Meaning - As I taught a kid - Rajesh
We should nurture relationships with older, experienced and wiser people because they would mentor us with their knowledge and experience and guide us in the right direction. Such nurtured relationships are one of the biggest strengths we can have.

Questions that I ask to the kid
What is one of the biggest asset/strength/tool we can have?

உற்றநோய் நீக்கி

குறள் 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல் (உற்றதெல்லாஞ் சொன்னபின் (கம்பரா. கைகேசி.5)); உண்மை (உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும்.); இடுக்கண்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

உற்றநோய் நீக்கி  - முன்பு வந்த துன்பங்களை நீக்கி

உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

உறாஅமை - பின்பு துன்பங்கல் அமையு(யாது)

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

கா-த்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

முற்காக்கும் - முன்பே காக்கும்

பெற்றி - இயல்பு; தன்மை; குணம்; விதம்; செயல்முறை; பெருமை; நிகழ்ச்சி; பேறு; நோன்பு.
பெற்றிமை - பெருமை; செய்யவேண்டும்முறை; சாதி.

பெற்றியார்ப் - அத்தன்மை உடையவர்கள் - சான்றோர்கள் / மேன்மக்கள் / பெரியார்

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணிக் - நன்குமதி, கவனி, கருது, குறி

கொளல் - அவர்களைத் துணைக் கொள்ள வேண்டும்.

முழுப்பொருள்
நம் வாழ்வில் பல துன்பங்கள் நாம் செய்த வினைகளால் (செயல்களால்) நமக்கு நிகழும். அதுவே உற்றநோய் ஆகும். அத்தகைய துன்பங்களை ஆராய்ந்து அதில் இருந்து விடுபட நமக்கு மாற்று வழி சொல்லும் சிந்தனையை உடையவாராக ஒருவரை துணைக்கொள்ள வேண்டும்.

அதுப்போல நமக்கு வருங்காலத்தில் நம்மை நற்பாதையில் அதாவது துன்பங்கள் நேராத பாதையில் நம்மை வழி நடத்த ஒருவரை துணைக்கொள்ள வேண்டும். ஆதலால் தான் உறாஅமை முற்காக்கும் என்று சொல்லபட்டது.

நம்மை நற்வழியில் நடத்த தன்மைகளைக் கொண்ட மேன்மக்களை சான்றோர்களை துணை கொள்ள வேண்டும். அவர்களைப் விரும்பி, பேணி அவர்களிடம் உறவு / நட்புக் கொள்ள வேண்டும். அத்தகைய மேன்மக்களிடம் துணை கொள்ளாது நமக்கு ஆயிரம் தீமைகளை நமக்கு நாமே செய்துக்கொள்வது ஆகும்.

ஆக அத்தகைய ஆற்றலையும் அனுபவத்தையும் உடைய பெரியோர்களை, மேன்மக்களை, சான்றோர்களை துணைக்கொள்ளவது நமக்கு நலம் பயக்கும் வலிமை தரும் என்று உணர்வீராக.

நமக்கு வாழ்நாள் எல்லாம் ஒரு குரு இன்றியமையாதவர். கல்விக்கூடங்களுக்கு பிறகு குரு தேவையில்லை என்ற மனப்பான்மை தவறானது என்பது இக்குறளில் இருந்து நமக்கு நன்கு விளங்குகிறது.

மேலும்: அஷோக்

ஒப்புமை
“தன்னை அடைந்தார் வினை தீர்ப்ப தன்றோ
தலையா யவர்தங்கட னாவதுதான்” (அப்பர்.அதிகை.4)

“பெரியார்த் துணைக்கொள்” (ஆத்திச்சூடி)

ஆத்திச்சூடி
சான்றோர் இனத்து இரு
மேன்மக்கள் சொல் கேள்
பெரியாரைத் துணைக் கொள்
தக்கோன் எனத் திரி
சேரிடம் அறிந்து சேர்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
நல்லவரைப் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
நடப்பவர்க்குத் துன்பங்கள் வந்த போதும்
வல்லவராய் அதை மாற்ற வழிகள் சொல்லி
வகைப்படுத்தி தொகைப்படுத்தி வாழ வைப்பார்
அல்லவராய் அவர் தம்மை விட்டு விட்டால்
ஆயிரம் பேர் பகையை விடத் தீமை அது
நல்லவரைப் பெரியவரைத் துணையாய்க் கொள்ளல்
நலம் பயக்கும் வலிமை தரும் உணர்வீர் நன்கு

குறள்
உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கை விடல்

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுளெல்லாம் தலை

பரிமேலழகர் உரை
உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி; உறாமை முற்காக்கும் பெற்றியார் . பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக் கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. 

விளக்கம் 
(தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று, தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாமபேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறித்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றான் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம்; ஆகவே, புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்ரின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம், கொள்ளுமாறும் கூறப்பட்டன.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உற்ற நோய் நீக்கி -தெய்வத்தால் அல்லது மக்களால் நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி; உறாமை முன் காக்கும் பெற்றியார்- அத்தகையன பின்பு நேராவண்ணம் முன்னறிந்து காக்க வல்ல தன்மையுடையாரை; பேணிக் கொளல் -அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க.

தெய்வத்தால் வருந்துன்பங்கள் மழையின்மை, மிகுமழை, கடுங்காற்று, கொள்ளைநோய், நிலநடுக்கம், கடல்கோள் முதலியன . அவை இறைவனை நோக்கிச்செய்யும் விழாக்களாலும் வேண்டுதல் களாலும் நோன்பினாலும் நீக்கப்படும். மக்களால் வருந்துன்பங்கள் பகைவர் செய்யும் போர், கள்வர் செய்யுங்களவு, கொள்ளைக்காரர் செய்யுங் கொள்ளையடிப்பும் ஆறலைத்தலும், சுற்றத்தாரும் வினைசெய்வாரும் செய்யும் களவுங் கொடுமையும் முதலியன. அவை இன் சொல் (சாமம்) பிரிவினை (பேதம்) கொடை தண்டம் ஆகிய நால்வகை ஆம்புடையுள் (உபாயத்துள் ) ஏற்ற ஒன்றால் அல்லது பலவற்றால் நீக்கப்படும். முற்காத்தலாவது, தெய்வத்தால் வருபவற்றைத் தீக்குறிகளால் அறிந்து விழவு நோன்பு முதலிய சமந்தியால் (சாந்தியால்) தடுத்தலும், மக்களால் வருபவற்றை அவர் குணம், குறிப்பு (இங்கிதம்), தோற்றம் (ஆகாரம்), செயல், சொல் முதலிய வற்றாலறிந்து நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றால் தடுத்தலும், ஆம். குறிப்பு உறுப்பின் தொழில்; தோற்றம் உடம்பின் பார்வை வேறுபாடு.மகிழ்வன செய்தலாவது, முற்றூட்டும் பட்டமுமளித்தலும் கண்ணியமாக நடத்துதலும் கூறிய அறிவுரையைக் கடைப் பிடித்தலுமாம்.

"கடவுளரையுந் தக்கோரையும் நோக்கிச் செய்யுஞ் சாந்தி" என்று சிறுதெய்வ வணக்கத்தையும், ஆகவே, "புரோகிதரையும்-----------கூறியவாறாயிற்று " . என்று பிராமணப்பூசாரியரையும், பரிமேலழகர் இங்குக் குறித்திருப்பது தவறாம்.

தானம் என்னுஞ் சொல் தமிழேயாயினும், அது அறப்புறங்கட்குக் கொடுப்பதையே சிறப்பாய்க் குறித்தலின் இங்கு விலக்கப்பட்டது. 'உறாஅமை' இசைநிறையளபெடை.

மணக்குடவர் உரை
அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று. 

மு.வரதராசனார் உரை
எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.