Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_046. Show all posts
Showing posts with label Athikaaram_046. Show all posts

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நல் - நல்ல; வறுமை; நன்மையான; மிக்க; கடுமையான.
நல் - nal   நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச).

இனத்தின் - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

ஊங்கும் - ஊங்கு-தல் - ūṅku-   5 v. intr. [T. ūgu.]To swing; ஆடுதல் பூங்க ணாய மூக்க வூங்காள்(நற். 90).  

ஊங்கு - சிறந்தது; மிகுதி; முன்; உவ்விடம்; விசேடம்.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

இனத்தின்- இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

அல்லற்படுப்பதூஉம் - அல்லல் - துன்பம்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
ஒருவனுக்கு நல்ல இனத்தைப் போன்று நல்ல நட்பு சுற்றத்தைப் போன்று மிக சிறந்த துணை வேறு இல்லை. ஏனெனில் நல்ல நட்பு சுற்றம் நம்மை தீவழிகளில் இருந்து அகற்றி நல்வழிப்படுத்தும். நமக்கு துன்பத்தில் தோள்க்கொடுக்கும். உரிமையுடன் நம்மை ஒரு அதட்டு அதட்டி சரி செய்யும். நாமும் சான்றோரின் (நல்ல சுற்றத்தின்) அவப்பெயரை பெறாமல் இருக்க நல்வழியில் செல்வோம். இல்லையில் அவர்களின் உறவை விரைவில் இழப்போம். அந்த உந்துதலாலும் நாம் நல்வழியில் செல்வோம். சோர்வுற்று இருந்தாலும் விரைவில் வெளியே வந்துவிடுவோம். நாம் நல்வழியில் சென்றுகொண்டு இருக்கும் பொழுது அதில் நமது ஆற்றலை வளத்துக்கொள்ள நமது சுற்றம் உதவும் பங்காற்றும். நம்மை மேலும் உயர்நிலைக்கு கொண்டு செல்ல நமது சுற்றமும் உற்சாகமூட்டும்.

ஆனால் தீய சுற்றம் போன்று வேறு ஒரு துன்பம் ஒருவனுக்கு இல்லை. ஏனெனில் அவா, ஆசை என்னும் துன்பம் எப்படி இன்பம் போன்று தலைத்தூக்குமோ அதுப்போல தீய சுற்றமும் இன்பம் போல் பழகுவதற்கு இருக்கும். ஆனால் இவையெல்லாம் துன்பத்துள் எல்லாம் துன்பமாகும். நாம் முன்னேறி நல்வழியில் சென்றாலும் நம் மனதில் சலனத்தை உண்டாக்கி நமது செயலை நமது தவத்தை கலைக்கும். நமது பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்து நம்மை மழுங்கடித்து நம்மை சோம்பலில் ஆழ்த்தும். இவை எதனையும் உணரும் முன்னர் காலம் வெகு நேரம் சென்று இருக்கும். துன்பம் அப்பட்டமாய் தெரியும் பொழுது மிக மிக வலிக்கும்.

அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் படித்த, “அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு” என்ற குறளைப் போன்றதே இக்குறள். அறத்திற்கு பதில் நல்லினம், தீயினம் இவை பயன்பட்டிருக்கின்றன.

ஒருவருக்கு நல்லோர், பெரியோர் இனத்தைச் சார்ந்திருப்பது போல துணையாயிருப்பது வேறு எதுவுமில்லை. அதேபோல, தீயோரைத் தம்மினமாகக் கொண்டு ஒழுகுதலைப்போல துன்பத்தைத் தருவதும் வேறு எதுவுமில்லை. இக்கருத்தினை ஒட்டிய நாலடியார் பாடல் இது:

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய். (நாலடி.247)

நாம் மனத்தில் நினைத்தைக் குறிப்பால் உணரும் அறிவாற்றல் உடையோரை நண்பராகக் கொண்டால் இன்பமும், நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தெரிந்தாலும், உணராத அறிவற்றோரை நண்பராகக் கொள்வோமானால், துன்பமும் உண்டாகும்; அத்துன்பமும் அத்தகையோரை விட்டுப் பிரிந்தால் தானே நீங்கும்.

”தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட தன்மையை மாற்றுவர்” (கம்ப.வரைக்காட்சி.8)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை. இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

Thirukkural - Management - Personality Development - Environment
A good, supportive, and influential company provides all the support a person needs to succeed in his life, substantiates Kural 460. No other support is greater than the support provided by a community of positive people. On the contrary, a bad company brings all the misery to a person. No other misery is worse than the misery caused by a mean or bad company.

There is no greater aid than good company
Now worse affliction than bad

Friends are fortune. Remember the old saying, “A friend in need is a friend indeed.” Right companionship brings you all the wealth and benefits. We always need the supports of others to achieve greater things. There is no such person as a self-made man. 

English Meaning - As I taught a kid - Rajesh
There is no greater support or good than a healthy, safe, good, supportive, positively influential environment/friends/mentors in order to progress and succeed in life. Also, there is no other bad /misery than a unsafe, unhealthy, bad environment/friends/acquaintances which can harm us, spoil us, slowly ruin us that brings us miseries, difficulties, pain etc., 

Good relations guide us, advise us and even scold us when we do bad things. However bad acquaintances/companionship slowly ruin us and enjoy our downfall.

Right companionship brings you all the wealth and benefits.

Questions that I ask to the kid
What is a great support? What is a bad support?

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

குறள் 459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மன - மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

நலத்தின் - நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

ஆகும் -  ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

மறுமை - மறுபிறவி; மறுவுலகம்.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

அஃதும் - அதுவும் 

இன - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

நலத்தின் - நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

உடைத்து - இருக்கும்

முழுப்பொருள்
நமது மனதின் நலம் நம்மை நல்ல செயல்களில் ஈடுபடுத்தும். நமது எண்ணங்கள் நாம் பெற்ற ஞானம் ஆகியவை நம்மை நல்வழிப்படுத்தும். நல்ல செயல்களை செய்து அறத்தை வளர்த்து சான்றோர்ப்பாதையில் சென்றால் இம்மையில் நல்லவற்றை கடைப்பிடித்ததனால் நமக்கு மறுமையில் நல்ல வாழ்வு அமையும். ஆயினும் நல்லதொரு மறுமையை அடைய இம்மையில் நமக்கு வலிமை சேர்பது நல்ல இனமே ஆகும். நமது நல்ல சுற்றம் நம்மை தக்க நேரத்தில் நம்மை பாதுக்காக்கும். அது இம்மைக்கு மட்டும் பயன் தராது, மறுமையில் நாம் நல்வாழ்வு வாழ்ந்திடவும் வழி வகுக்கும்.

ஆதலால் இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்வு வாழ்ந்திட மனதின் நலம் தேவை என்றாலும் இனத்தின் நலம் வலிமை சேர்க்கும் அரணாக நிற்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனநலத்தின் மறுமை ஆகும்-ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்று அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து-அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து,
(மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.).

மணக்குடவர் உரை
மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.

மு.வரதராசனார் உரை
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

குறள் 458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மன - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

உடையர் -  உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

சான்றோர்க்கு - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

இன - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். 

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

உடைத்து - இருக்கும்

முழுப்பொருள்
நம்மை சுற்றி எவ்வளவு கேடுகள் இருப்பினும் துன்பங்கள் இருப்பினும் மனதை நன்றாக பேணிக்கொண்டால் அதாவது நமது எண்ணங்களை நன்றாக பேணிக்கொண்டால் நமக்கு நன்மைகள் ஏற்படும், இன்பங்கள் ஏற்படும். இருந்தாலும் ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தாலும் அக்குடம் முழுக்க நஞ்சாகிவிடும். அதுப்போல நமது எண்ணங்களும் மனமும் நலமாக இருந்தாலும் மனதின் திட்பம் ஆழமாக இருந்தாலும் நம்முடைய சுற்றத்தில் நாம் வைத்துக்கொள்ளும் ஒரு உறவு முள்ளாக/நஞ்சாக இருந்தால் அது நாளடைவில் சிறுக சிறுக நம்மை அறியாமலேயே நஞ்சாக்கிவிடும் ஏனெனில் தீய பழக்க வழக்கங்கள் துவத்தில் இன்பம் போன்றே இருக்கும். துன்பத்தை இன்பம் போன்று தரும் அவா துன்பத்துள் துன்பம் என்று முன்பு அவா அறுத்தலில் பார்த்தோம். தீய உறவுகளும் அவாவை/ஆசையினை போன்று தான். ஆதலால் நமது மனதின் நலம் போல நமது இனத்தின் நலமும் முக்கியம். ஆதலால் ஒரு சான்றோர் அல்லது சான்றோர் பாதையில் செல்லும் ஒருவர் தனது இனத்தை நன்கு தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இனம் நம்மை தீயவற்றில் இருந்து பாதுக்காக்கும் நல்வழிப்படுத்தும். இகழ்ச்சி வராமல் காக்கும். 

மேலும் நமது மனம் ஒருவித குரங்கு போன்றதாகும். அது எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிழந்து தவறுகளை செய்யலாம். அப்பொழுதெல்லாம் நமது நல்ல நட்புகள் உறவுகள் வந்து தோள்க்கொடுத்து நம்மை நம்முடைய நல்வழிப்பாதையில் செலுத்தும். தேவையெனில் நம்மை ஒரு அதட்டு அதட்டி கண்டிக்கும் ஏனெனில் நமது உறவுக்கு/ நட்புக்கு அந்த உரிமை உண்டு. 

சிற்றினத்துடன் சேராதே. சான்றோர் இனத்து இரு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனநலம் நன்கு உடையராயினும் மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து
('நன்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.

மணக்குடவர் உரை
மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து. இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மன - மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

உயிர்க்கு - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல்

இன - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

எல்லாப் - எல்லாம் -  ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.  

புகழும் - புகழ் துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

தரும் - கொடுக்கும் 

முழுப்பொருள்
நமது மனதின் நலம் நம்முடைய உயிர் பெருமை / நிலைபேறு அடைவதற்கான ஆக்கத்தை தரும். ஆதலால் மனதின் நலம் மிக மிக முக்கியம். மனதை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ள ஒருவர் அக பயிற்சிகளான ஊழ்கம் / தியானம் அதற்கு தேவையான பிராணாயாமம் யோகாசனம் ஆகியவற்றை செய்யவேண்டும். மனமே நமது உடலை வழிநடத்துகிறது. வாழும் முனைப்பையும் காரணத்தையும் நம் மனமே நமக்கு தருகிறது. நம் மன நலத்தை இழந்தால் நாம் எல்லாவற்றையும் இழப்போம். ஆதலால் நம் மன நலத்தை பேணி காக்க வேண்டும். கழிவுகளை அகற்றவேடும். ஊழ்கம்/தியானம் போன்றவை துணைபுரியும். நமது மனதுக்கு ஒரு நோய் வந்தால் உடலில் பல நோய்கள் மிக எளிதாக வந்துவிடும் (ஏனெனில் மன நலம் குன்றியதால் எதிர்ப்பு சக்தி குறையும், மன அழுத்தத்தை சமாளிக்க தேவையற்ற அமிலங்கள் (stress fighting hormones such as  cortisol ) சுரக்கும். அவ்வமிலங்கள் அதிகமாக சுரக்கும் பொழுது நீரழிவு (diabetes), ரத்த அழுத்தம்(hyper tension) போன்ற நோய்கள் உடம்பில் வந்து நம்மை தாக்கும். 

நம்முடைய இனம் எனப்படும் சுற்றம் நமக்கு எல்லாப் புகழும் தரும். நாம் பெரியோரை துணைக்கொண்டால் நம்மை அவர்கள் நல்வழிப்படுத்தி நமக்கு பெருமை சேர்க்க உதவுவர். அதுவே அறிவும் ஒழுக்கமும் அற்ற தாழ்ந்தோர் எனப்படும் சிற்றினதுடன் நாம் சேர்ந்தால் நமக்கு இகழ்ச்சியே வந்து சேரும்.  சிற்றினத்திற்கு நமது மனதின் நலத்தை கெடுக்கும் ஆற்றல் உண்டு. தேவையில்லாத பொறாமை, ஆசை, வஞ்சம், அதீத காமம், ஒழுக்கமற்ற காமம்,  இச்சை, சலனம் போன்ற தீயொழுக்கங்களை சிற்றினம் நமக்கு அறிமுகம் செய்து நமது மனதின் நலனை கெடுக்கும்.  நாம் தவறான திசையில் சென்று வழி தவறிவிடுவோம். அது நம்மை கெடுக்கும். நமது புகழை கெடுக்கும். 

நமது மனதின் நலம் நம்மை பாதிப்பது போல நம்முடைய சுற்றத்தின் குணமும் நலமும் நம்மை பாதிக்கும். 
ஆதலால் சிற்றினதுடன் சேராதே என்கிறார் திருவள்ளுவர். 

மீண்டும் ஒருமுறை ஔவையாரின் மூதுரைப் பாடலை நினைவு கூறுதல் நல்லது.
நல்லோரைக் காண்பதுவும் நன்றே நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

”ஆன தூயவ ரோடுடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுவர்” (கம்ப.நீர்.விளையாட்டு.20)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“ஆன தூயவ ரோடுடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுவர்” (கம்ப.நீர் விளையாட்டு.20)

பரிமேலழகர் உரை
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
('மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என , அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும். இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.

மு.வரதராசனார் உரை
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தியானத்துக்கு உவமை
தியானத்துக்கு முண்டக உபநிடத்திலே ஒரு சிறந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. ‘தியானம் செயபவன் வில்லாளி. குருவிடத்திலே அடைந்த வேதாந்த ஞானமேவில். தியானம் செய்பவனுடைய ஆத்மாவே அம்பு. அம்பாகிய ஆத்மாவை - அதாவது, தன் உள்ளத்தை வில்லில் வைத்து நாணை இழுக்க வேண்டும். நாணை இழுப்பதென்றால் ஏகாக்கிரசித்தத்துடன் தான் அடைந்த ஞானத்தை உபயோகித்துத் தியானிப்பது. நாணை நன்றாக இழுத்துக் குறிபார்க்க வேண்டும். பரமாத்பாவே குறியாகும். நல்ல வில்லாளி வில்லை வளைக்கும் போது குறியும் அம்பும் ஒரு நேரில் அமையச் செய்கிறான். அந்த நிலையில் அம்பு குறியில் மறைந்து போகிறடு. பரம்பொருளைத் தியானம் செய்பவன் அவ்வாறே தன் ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றாகவே காண வேண்டும். தியானம் செய்யும் காலத்தில் பரமாத்மாவில் மன் ஆத்மா முற்றிலும் அத்துவிதீயமாகப் போகல் வேண்டும். 

Thirukkural - Management - Personality Development - Environment
Kural 457 brings out the importance of a beneficial company for the development of personality. Valluvar uses two different things to connect a point. The different  things are: 1) Healthy mind and 2) Environment. A healthy mind brings all the benefits to the life of a person. That is why it is said, 'As within, so without.' Similarly, a strong, positive, and influential environment brings all the positive things like fame and popularity to a person. 

A good mind is an asset to everyone 
While good company contributes to glory.

English Meaning - As I taught a kid - Rajesh
Mental health helps in keep us in peace, devoid of disturbances, thereby helping us in productivity and doing good and great works. Similarly, hanging out with good people will place us amidst a positive and conducive environment which would help us achieve all greatness and fame. 

Questions that I ask to the kid
Why is mental health important? Why is our friends environment important?
What is the similarity between mental health and friends?

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு

தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு.

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

தூயார்க்கு -  தூய்மையானவர்களுக்கு ; வலிமையானவர்களுக்கு

எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு

ஆகும் - நடக்கும்,
ஆகும்  - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

தூயார்க்கு - தூய்மையானவர்களுக்கு ; வலிமையானவர்களுக்கு 

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆகுதல் - ஆதல்.
ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன்.
ஆகா - ஆகாது

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
ஒருவர் தன் மனதை தூய்மையாக வைத்துக்கொண்டால் அவருக்கு நல்லவை எஞ்சி நிற்கும். அதாவது அறத்தின் பலனாக புகழ், பெருமையாகியவை நிற்கும். அது அவருடைய வருங்கால சந்ததியருக்கும் பயனை தரும். மனதை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஒருவிதத்தில் எளிதாயினும் அது ஒன்றும் எளிதல்ல. மாசுப்போல் சிறிது சிறிதாக தீமை மனதில் வந்துசேர வாய்ப்புகள் பல உண்டு. அம்மாசுகளை பொசுக்கி / நீக்கி மனதை தூய்மையாக வைத்துக்கொளல் அவசியம்.

அதுப்போல ஒருவர் தன்னுடைய சுற்றத்தை / குலத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் மிக அவசியம். அவ்வாறு ஒருவர் வைத்துக்கொண்டால் அவரால் செய்துமுடிக்க முடியாத நற்செயலே இல்லை என்று கூறலாம். ஏனெனில் கீழோர்களை சிறுமைகொண்டோர்கள நம்முடன் வைத்துக்கொண்டால் அது நமக்கு தீயவற்றை செய்யும். நம்முடைய ஒழுக்கத்தை கெடுக்க வாய்ப்புகள் நேரிடும். கவனத்தை சிதைக்கும். நற்செயலை செய்ய இடையூறாக அமையும். மேலும் சான்றோர்கள் சிறுமைகொண்டோருடன் உறவு வைத்துக்கொள்வதனால் நம்முடன் உறவு வைத்துக்கொள்ளாமல் போகலாம். அல்லது நம்மிடம் பெரிய செயல்கள் செய்துமுடிக்க வாய்ப்புகள் கொடுக்கப்படமாட்டாது. ஆதலால் தன்னையும் தன் சுற்றத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் நற்செயல்களை செய்ய இன்றியமையாததாகும்.

சிறுமைக்கொண்டோரிடம் பழகினால் சிற்றின்பங்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் பேரின்பங்களை அடைவதாற்கான வழியிலிருந்து விலகி பேரின்பத்தை மெய்யான இன்பத்தை மெய்ப்பொருளை அடைய மாட்டோம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) .

மணக்குடவர் உரை
மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.

இது மேலதற்குப் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

மனந்தூய்மை செய்வினை தூய்மை

குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

இரண்டும் - இரண்டு

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு.

தூவாத - tūvāta   n. து-. That which isunpalatable or undesirable; வேண்டாதவை தூவாத நீக்கி (குறள், 685).

தூவா - வேண்டாம் என்றாலும் / வேண்டாதவை

வரும் - உடன் வரும்

முழுப்பொருள்
நமது மனதின் தூய்மை நமது செயல்களின் தூய்மை ஆகிய இரண்டும் நமது இனத்தின் தூய்மையை பொறுத்தே உள்ளது என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் நமது இனம் அதாவது நட்பு, சூழல் ஆகியவற்றின் தன்மை நம் மீது வேண்டாம்/தூவா என்றாலும் அதனுடைய ஆற்றலை செலுத்தும். அந்த இனம் பெரியோராய் இருந்தால் அவர்கள் நல்வழிபடுத்த உதவுவர். நாம் தவறு செய்தால் நம்மை நல்வழியில் திரும்பி வர உதவுவர். அதுவே சிற்றினம் (அதாவது  அறிவும் ஒழுக்கமும் அற்றோர் கூட்டம்; நல்லறிவு இல்லாத தாழ்ந்தோர்) நம்மை நல்வழியில் செலுத்தாமல் தீய வழியில் செலுத்தும். அதனால் சிற்றினதுடன் சேராதே என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர். பெரியோர் துணைக்கொள் என்று அறிவுறுத்துகிறார்.

நமது எண்ணங்களும் நமது செயல்களும் நமது சுற்றத்தின் எண்ணங்களையும் செயல்களையும் பிரதிப்பளிக்கும். ஆதலால் நமது சுற்றத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் மிக தேவை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையாக சுற்றத்தின் தாக்கமே பெரும்பான்மையிடம் ஆதிக்கமும் செலுத்தும்.

உதாரணமாக ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில் மாணவர்கள் தங்கள் சக மாணவர்களின் தேடலுடன் ஒத்துப்போகும். விதிவிலக்காக இருக்கும் பட்சத்தில் அதுவும் அந்த மாணவனின் உற்றார் உறவினர் ஆசிரியர் என்போரின் வழிகாட்டுதலுடன் ஒத்துப்போகும். ஆதலால் நமது சுற்றத்தை நாம் மிக கவனமாக அமைத்துக்கொள்ளவேண்டும்.

”.................நெடுமனம்
தூயையா வுடையையால் உறவினைத் துணிகுவார்” (கம்ப.மராமரப்.52)

கம்பராமாயண சடாயு (54) படலத்தில், 
“தீயவர் சேர்தல் செய்தார் 
தூயவர் அல்லர் சொல்லில் தொன்னெறி தொடர்ந்தோர் என்றான்” என்பார் கம்பர்.

”மிக்குப் பெருகி மிகுபுனல் சேர்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் மிக்க
இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்” (பழமொழி 11)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும், இனம் தூய்மை தூவா வரும் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.
(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் 'தூவறத் துறந்தாரை (கலித். நெய்த ,1 )என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான்இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும். இனம் நன்றாதலைப் பற்றி வரும். இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.

மு.வரதராசனார் உரை
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

சாலமன் பாப்பையா உரை
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

Thirukkural - Management - Personality Development - Environment
Kural 455 adds value to the thought in Kural 454 that the environment  of a person plays a major role in shaping one's personality. It says that lofty or highest thoughts and meaningful or beneficial deeds or acts are always the influence or reflection of a company a person keeps.

The pure thought and the pure deed
Come from pure company.

There is an unconscious influence of environment  on one's personality. George Bernard Shaw's thought, “Show me your friends I will tell who you are” makes meaning and gains validity on the backdrop of Valluvar's thought.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனத்து - மனதில் - மனது - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

உளது - இருப்பது, உண்மை.

போலக் - pōl   போலு, I. v. t. resemble, be like, be similar, ஒ.

காட்டி - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

‘இனத்து’ - உறவாடும் மக்கள்

உளது - இருப்பது, உண்மை.

ஆகும் - ஆதல்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
அறிவென்பது நமது மனதில் எண்ணங்களில் உள்ளது போல நமக்கு தோன்றும். ஆனால் உண்மையில் நமது அறிவென்பது நாம் பழகும் மக்களின் இயல்பு போலவே இருக்கும். 

இக்குறள் முதலில் ஏழை எளியவரிடம் படிப்பறிவு இல்லாதவரிடம் உறவு வைத்துக்கொள்ள கூடாது என்று தோன்றினால் அது மடமை. எல்லோருடனும் பழகலாம். ஆனால் அறிவாற்றலுக்கு, ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்கு அதனை போன்றே ஆற்றலும், ஆக்கமும், எண்ணமும் உள்ளோருடன் பழக வேண்டும். அவ்வாறு இல்லாத சோம்பித்திற்கின்ற, குறுக்குவழியில் செல்கின்ற, உயர்வான எண்ணங்கள் அல்லாத, எதிர்மரை எண்ணங்கள் கொண்ட மக்களிடம் தினம் தினம் உறவாடினால் அவர்களுடைய எண்ணங்களே நமக்கு வரும்.

உதாரணமாக மஹாத்மா காந்தி-ஜி அவர்கள் எல்லோருடனும் எவ்வித பாகுபாடின்றி பழகினார்கள். ஆனால் அவர் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அவரை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அதனை போன்றே எண்ணங்களும், அறிவும் கொண்டவர்களாக இருந்தது.

ஒரு நாலடியார் பாடல் ஒன்று:

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.

வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது; அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந் தீயதாய்மாறும் வகை அரிதாயிருக்கும், என்பதே இப்பாடலின் கருத்து.
இக்கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியது. அரிது என்று சொல்லி, இது இப்படித்தான் என்று உறுதியாகக் கூறாது, மாற்றுக்கருத்துக்கும் சிறிது விழுக்காட்டினை உள்ளுரையாக விட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. வள்ளுவர் காலத்தைச் சேர்ந்தவர்களும், பின்புவந்த புலவோர்களும், வேற்றுக் கருத்துக்களைக் கொண்டு, அவற்றைக் கூறவும் செய்தார்கள் என்பதைக் காட்டுவது. பின்னால் வந்தவர்கள் போல் குருட்டாம்போக்கிலே வள்ளுவர் வாக்கை கேள்வி கேட்காமல், ஒத்துக்கொள்ளவில்லை.

வள்ளுவர் குறளினை இவ்வாறு பொருள் செய்யலாம்.  சார்ந்திருக்கும் இனமே ஒருவரின் அறிவை உருவாக்குகிறது. அவரவர் மனம் அல்ல. அதனால் நல்லினம் சேரவேண்டும் என்று சொல்வதாகக் கொண்டால், பொருந்தி வருகிறது.

பரிமேலழகர் உரை
அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் .
(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

Thirukkural - Management - Personality Development - Environment
The thought in Kural 454 is contrary to the thought, presented in Kural 373, that one's heredity or genetic factors have influences on one's personality. Even if a person displays, exhibits, or demonstrates that his mind is filled with rich knowledge, but that knowledge will be influenced much by the company to which that person belongs.

Wisdom which Seems to Come from the
Comes really from one's company.

A man is a reflection of his circumstances. Circumstances  shape a person's thinking, speaking, learning, and life style in general. Motivational speaker Jim Rohn meaningfully said, “We are the average of the five people we spend the most time with.” Is that observation true? Reflect on that. The quality of people you spend most of your time with influences whatever you read.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்

குறள் 452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.
இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.
இயல்பால் - தன்மை போல
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
திரி - முறுக்குகை; விளக்குத்திரி; தீப்பந்தம்; தீக்குச்சி; காதுக்குஇடும்திரி; எந்திரம்; மெழுகுவத்தி; புண்ணுக்குஇடும்திரி; காண்க:வெள்ளைப்பூண்டு; பெண்; மூன்று.
திரி-தல் -tiri-   4 v. [T. tirugu, K. tiri, M.tirikka.] intr. 1. To walk about, wander,go here and there; அலைதல் வண்டாய்த்திரிதருங் காலத்து (நாலடி, 284). 2. To turn, whirl,revolve, as the heavenly bodies; சுழலுதல் வலந்திரியாப் பொங்கி (பு. வெ 9, 12). 3. To be twisted,convolved; திருகுறுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி(கலித். 15). 4. To move; சலித்தல் நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55-6).5. To proceed; போதல் (பிங்.) 6. To return;திரும்புதல். ஒன்றைச் செப்பினை திரிதியென்றான்(கம்பரா. அங்கத. 10). 7. To change, vary;வேறுபடுதல். நாஅல்வேத நெறிதிரியினும் (புறநா.2). 8. To be substituted, as a letter byanother; எழுத்து மாறுதல் தோன்ற றிரிதல் கெடுதல்(நன். 154). 9. To perish; கெடுதல் (திவா.) 10.To change in quality; to become sour, as milk பால் தன்மைகெடுதல். 11. To be confused;மயங்குதல். திரிந்தயர்ந் தகன்றோடி (பரிபா. 3, 54).--tr. To abandon, leave; கைவிடுதல் இனந்திரியேறுபோல (சீவக. 2720).  
திரிந்து - கெட்டு
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
ஆகும் - நடக்கும்
மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.
மாந்தர்க்கு - மனிதர்களுக்கு
இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்
இனத்து’ - உறவாடும் மக்கள்
இயல்பது - இயல் - தன்மை; தகுதி சுகுமாரதை ஒழுக்கம் உழுவலன்பு செலவு ஒப்பு இயற்றமிழ் இலக்கணம் நூல் நூலின்பகுதி; திவ்வியப்பிரபந்தத்தைக்குழுவாகநின்றுஓதுகை; மாறுபாடு சாயல் பெருமை
ஆகும் - ஆதல்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
இது மிகவும் எளிமையான ஒரு குறள். ஒரு நீரின் இயல்பு அது வந்து சேர்ந்த நிலத்தின் தன்மைக்கேற்பதாகும். ஏன் எனில் ஒரு மாசு நிறைந்த நிலத்தில், விஷ அமிலங்கள் கொண்ட நிலத்தில், கழிவு நீர் தேக்கபட்ட நிலத்தில் மாசும் விஷமும் தான் மிச்சம். அந்த நிலத்தில் தண்ணீர் உற்றி, அதனை பின்பு எடுத்துக்குடித்தால் நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் அல்லது நமது அழிவு நோக்கி எடுத்துச்செல்லும். ஆக மொத்தம் ஒரு கேடான நிலத்தினால் நல்ல ஆரோக்கியமான நீர் திரிந்து கெட்டு விட்டது.

அதுபோல, மனிதர்கள் சிறுமை (சிறுமை, செருக்கு, சினம் என பல இழுக்குகள்) கொண்ட மனிதர்களிடம் உறவு வைத்துக்கொள்வதனால் அவர்களும் கெடுவர் அவர்களுடைய அறிவும் கெடும்.

அதேப்போல நல்ல நிலத்தில் இருந்தால் நீர் நன்றாக ஆரோக்கியமானதாக இருக்கும். அதுப்போல அறிஞர்களுடன் உறவு வைத்துக்கொண்டால் வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

”செம்புலப் பெயல்நீர் போல” (குறுந்.40:4)

கம்பராமாயணத்தில் கும்பகருண வதைப்படலத்தில் கும்பகருணன், இராவணனுக்குக் கூறும் அறிவுரையாகக் கீழ்கண்டபாடல் இக்குறளின் கருத்தை ஒட்டியே சொல்லப்படுகிறது.
புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்.
புலத்திய முனிவரின் வழிதோன்றல்களான வஞ்சனையற்ற நமது குலத்தின் தன்மை உன்னாலே ஒழிந்தது. நமது ஆட்சியே முடிவுறாதா? உனது செயல்களே நமது வெற்றிகள் வீழ்ச்சியடைய காரணமாகி விடும்.  குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரின் இயல்பும் அன்றோ? என்று இராவணனைக் கேட்கிறான் கும்பகருணன்.  ஔவையாரின் (எந்த ஔவையாரோ?) வாக்கான “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்பது பிறந்த குலத்துக்கு ஏற்றவாரே ஒருவரது குணம் அமையும் என்று வருவதால், பலரும் எதிர்ப்பு கூறுவர். இதை வருணம் என்ற பொருளில் பொதுவாகக் கூறுவது தவறுதான். ஆனால் நற்குடிப்பிறப்பே ஒருவருவக்கு நல்லவற்றைக் கற்பித்துவிடும் என்பதில் ஐயம் இருக்கமுடியுமா? குப்பையில் மாணிக்கமும் உண்டு, அதைப்போல நற்குடிப்பிறப்பினருக்கு, ஊழ் வினையாலும் சேர்க்கையாலும் சில சமயங்களில் நற்குடிப்பிறந்தோரும் பிறழ்வது உண்டு. இராவணன் பிறப்பிலே உயர்ந்தவனாயிருந்தாலும், பெண்ணாசையிலே அறநெறி பிறழ்ந்தான், தாழ்ந்தான், மடிந்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம். 
(எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.

மு.வரதராசனார் உரை
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

Thirukkural - Management - Personality Development - Environment
Valluvar resorts to a powerful simile in Kural 452 to substantiate his view on the role of environment  in shaping a person's personality.

The soil colours the water, and one's
One's mind.

The color of rainwater changes  according to the color of the soil that it comes into contact. The contents and the color of the rainwater are the same until that falls on earth. Once the rainwater falls on earth, it loses its originality and absorbs the characteristics of the earth. Similarly, a person has his originality until he connects with others. Once a person connects with another person or a group, that person loses his originality and gains the qualities of the other person or the group. The company he is frequently in influences his knowledge. Therefore, environment  is more powerful than the inherent or genetic qualities of a person.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி

குறள் 453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல்.
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

மனத்தானாம் - தன்னுடைய மனதால்

மனத்தானாம் - மனத்தான் ஆம் -  தம் மனம் காரணமாக உண்டாம்

மாந்தர்மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.
உணர்ச்சி - உணர்வு; அறிவு மனம்

மாந்தர்க் குணர்ச்சி - மாந்தார்க்கு + உணர்ச்சி - மக்களுக்கு பொது உணர்வு

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

இனத்தானாம் இன்னான் - இனத்தான் ஆம் - இவன் இத்தன்மையன்
- இவன் இத்தன்மையன்

இன்னான் - இத்தன்மையன்; துன்பம்செய்பவன்.

எனப்படும் - என்ற

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

எனப்படுஞ் சொல் - எனப்படும்சொல் - என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல்இனம் காரணமாக உண்டாம். 

முழுப்பொருள்
அறிவு என்பது இயற்கையாக அவரவர் மனதால் உண்டாகும். ஆனால் ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் கூறுவது அவன் சார்ந்து உள்ள மக்களை கொண்டே சொல்லபடும்.  அதாவது அவர் சார்ந்து உள்ள சேர்க்கையை பொருத்தே இருக்கும்.

உதாரணமாக, இயல்பாக ஒரே தன்மையுள்ள மழைநீர் தனை நன்னீர் என்றும் உவர் நீர் என்றும் வேறுபடுத்திச் சொல்லுவார்கள். அதற்கு காரணம் நீர் சேர்ந்துள்ள நிலமே காரணமாகும்.  அதுப்போலவே மக்களும். அவர் அவர் சார்ந்து உள்ள மக்கள்(இனம்) பொருத்தே அது சொல்லப்படுகிறது.

குறிப்பு: இது பிறப்பால் சொல்லப்படும் சமூகம் சாதியின் அடிப்படையால் சொல்லப்படுவது இல்லை. இது அவர் சார்ந்து உள்ள மக்களின் சான்றான்மையை பொருத்ததாகும்.

அதனால் தான் சொல்லுவார்கள் - சேருகிற சேர்கை சரியாக இருந்தா தான் இது (இவன்) சரியா இருக்கும்.

ஆங்கிலத்தில் - Show me your friends, I will tell who you are. உன் நண்பர்களை என்னிடம் அறிமுகம் செய், நீ யார் என்று நான் சொல்கிறேன்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
எந்தச் செயலும் எண்ணத்தால் நடைபெறுகிறது. செய்த செயல்கள் கருமையத்தில் பதிவாகி மீண்டும் மீண்டும் எண்ணங்களாகின்றன. எண்ணங்களும் செயல்களும் அவற்றின் விளைவுகளும் பதிவாகி அதுவே மனிதனிடம் தன்மையாக, ஆளுமைப் பேறாக அமைகின்றது. இதுவே வினைப்பயன் என்னும் நியதி. ஒருவர் பிறந்த பிறகு ஆற்றும் எல்லாச் செயல்களும் பதிவாகக் கொண்ட நிலை ஒன்று. பிறக்கும்போதே பெற்றோர்களிடமிருந்து கருத்தொடராக வந்த பதிவு ஒன்று. இதனை முற்பிறவி வினை என்பார்கள். இந்த இரண்டு வித வினைப்பயனை உடைய உருவமே மனிதன். கருத்தொடர்வினை, இப்பிறவி வினையென்ற இரண்டையும் கூட்டினால் என்ன தொகை வருமோ அதுவேதான் ஒருவருடைய குணநலப்பேறாக (Personality) அமைகின்றது. இந்த கூட்டுத் தன்மைக்கேற்ப அவ்வப்போது ஒருவருக்கு பொருள் மீதும் மக்களோடும் செயல்படும் விருப்பமும் செயலார்வமும் ஏற்படுகின்றது. இதனைத்தான் "உணர்ச்சி" என்று கூறப்படுகிறது. மன நிலைக்கேற்ப உணர்ச்சிகள் அமையும். ஆயினும் ஒருவர் மன உணர்ச்சியின் தன்மைகளைப் பிறர் கண்ணால் பார்த்து அறிந்து கொள்ள முடியாது. அவர் குணநலத் தன்மைக்கேற்ற குணநலம் உடையோர்களை விரும்பியும் சார்ந்தும் செயல்புரிந்து வாழ்வார். ஒருவர் எத்தகைய தன்மையுடையோர்களோடு கூடி செயல் புரிகின்றார் வாழ்கிறார் என்ற உண்மை கண்டால் அவர் மனநிலையில் பண்பாட்டில் அறநெறியில் எந்த நிலையில் உள்ளவர் என்று தெரிந்து கொள்ளலாம் என்பதே இக்குறள் கூறும் விளக்கமாகும். 

ஆத்திச்சூடி
சான்றோர் இனத்து இரு
சேரிடம் அறிந்து சேர்
பெரியாரைத் துணைக் கொள்
பையலோடு இணங்கேல்

மேலும் அஷோக் (நன்றி)

ஒப்புமை
சிற்றினச் சேர்க்கையினரை, அவர் மனத்தளவிலே நல்லோராயிருப்பினும் சிற்றினத்தவராகவே உலகு எண்ணும். அதேபோல, நல்லோர் சேர்க்கையிலிருக்கும் ஒருவர் மனத்துக்கண் மாசிருப்பினும் நல்லோராகக் கருதப்படக்கூடும், நல்லோர் சேர்க்கையில் நல்லோராகவே ஆகிவிடுவராதலால்.

நாலடியார் பாடலொன்று இக்கருத்தை இவ்வாறு கூறுகிறது.
மனத்தால் மறுவிலரேனும் தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் – புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால். (நாலடி.180)

காடு தீப்பற்றி எரியும்போது, மணம் வீசும் சந்தன மரமும், வேங்கை மரமும் கூட வெந்து போகும். அதேபோல, மனதில் ஒரு குற்றம் இல்லாத நல்லவராயினும், அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக, இகழப்படுவார்.

மற்றொரு  நாலடியார் பாடல் இக்கருத்துக்கு மாறாக ஒன்றைச் சொல்லுகிறது. அப்பாடல்:

கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலை சார்ந்தும்
உப்பு ஈண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல் தண் சேர்ப்ப !
மனத்தனையர் மக்கள் என்பார். (நாலடி 244)

இப்பாடலின் பொருள் எளிதில் விளங்கக்கூடியதே. கடல் அருகிலும் இனிய நீர் உண்டாகும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும்.ஆதலால் மக்கள் தாம் சார்ந்த இனத்தை ஒத்தவரல்லர். தத்தம் மன இயல்பை ஒத்தவராவர். மாசற்ற தெளிந்த அறிவுடையார் எந்தச் சூழலிலும் மனம் திரியார். இப்பாடல் சொல்லுவது, இனத்தைச் சாராதது குணம் என்பதாகும். இது என்ன கருத்து முரணாக இருக்கிறதே என்று தோன்றினாலும், இது புரிந்து கொள்ளக்கூடிய முரண்பாடுதான். நாலடியார் ஒருவரால் எழுதப்பட்டதல்ல. பல சமணத் துறவிகளால் எழுதப்பட்டது. மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களால் இவை எழுதப்பட்டிருக்கலாம். கருத்து முரணானதாக இருந்தாலும், கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது.

சிறுபஞ்ச மூலத்திலும் (80) இக்கருத்து அழகாகச் சொல்லப்படுகிறது,
தக்கார் வழி கெடாதாகும் தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவார் – தக்க
இனத்தினான் ஆகும் பழியும் புகழும்
மனத்தினான் ஆகும் மதி

இதன் பொருள்: தகுதியுடையவர் வழி மரபு கெடாது, ஆனால் நல்லவர்களல்லாதவர் மரபு கெடும். தீய சேர்க்கையால் பழியும், நல்லவர் சேர்க்கையினால் புகழும் உண்டாகும். அறிவானது ஒருவனது மனத்தளவே உண்டாகும்

”வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம் ஆங்கே
இனம்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனம்தீ தாம் பக்கம் அரிது” (நாலடி.245)

“முயலவோ வேண்டா முனிவரை யானும்
இயல்பின்னர் என்ப தினத்தால் அறிக” (பழமொழி.237)

பரிமேலழகர் உரை
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்; இன்னான் எனப்படும்சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல்இனம் காரணமாக உண்டாம். 
விளக்கம் (இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தான் ஆம்' என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது. 'அத் திரிபும் மனத்தான் ஆம்' என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் -மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணமாக உண்டாகும்; இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் -ஆயின், இவன் இத்தன்மையனென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும்.

கரணம் கருவி. இயல்பாக ஒரே தன்மையிலுள்ள மழைநீர் நன்னீ ரென்றும் உவர் நீரென்றும் வேறுபடுத்திச் சொல்லப் படுவதற்கு, அது சேர்ந்துள்ள நிலமே கரணியமாவதுபோல், இயல்பாக ஒரே தன்மையரான மாந்தரும் நல்லவரென்றும் தீயவரென்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுவதற்கு, அவர் சேர்ந்த இனமே கரணிய மென்பது கருத்து.

மணக்குடவர் உரை
மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம், ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம். இது பிறரால் பழிக்கப்படுமென்றது. 

மு.வரதராசனார் உரை
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

சிற்றினம் அஞ்சும் பெருமை

குறள் 451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
[பொருட்பால், அரசியல்,  சிற்றினஞ்சேராமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சிற்றினம் - அறிவும் ஒழுக்கமும் அற்றோர் கூட்டம்; நல்லறிவு இல்லாத தாழ்ந்தோர்.

சிற்றினம் - கீழ் குணத்தோடு உள்ள இனம் / குழு / மக்கள்

அஞ்சும் அஞ்சுதல் - பயப்படுதல்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

பெருமை - சான்றோர் (சுட்டியை சொடுக்கவும்) பண்புகள் உடையவர்கள் 

சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.

சிறுமைதான் - சிற்றினம் தான்; கீழ் குணத்தோடு உள்ள இனம் / குழு / மக்கள் உள்ள மக்கள்

சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்

சுற்றமாச் - தங்கள் இனமாக, உறவாக எண்ணி

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

சூழ்ந்து - அவர்களுடனே சூழ்ந்து, உறவாடி

விடும் - கொண்டு இருப்பர்.

முழுப்பொருள்
நல்ல பண்புகள், குணங்கள் கொண்ட சான்றோர்கள் பெரியவர்கள் ஆவர். அத்தகைய பெரியவர்கள் கீழ் குணங்களோடு உள்ள மக்களிடம் / இனங்களிடம் உறவு வைக்க பயப்படுவார்கள், அஞ்சுவார்கள். ஆனால்  கீழ் குணங்களோடு உள்ள சிற்றினம் அத்தகைய கீழ் குணங்களோடு உள்ளவர்களையே தங்கள் இனமாக, உறவாக எண்ணி அவர்களுடனே சூழ்ந்து உறவாடி வாழ்க்கையை கழிப்பர்.

இதனை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். சிற்றினம் எனப்படுபவர்கள் பெருமையை அஞ்சுவார்கள். ஏனெனில் பெருமை புகழ் கொண்டோர் இவர்களின் அகங்காரத்தை அற்பங்களை ஒரு நொடியில் பொசுக்கிவிடுவர். அதனால் சிற்றினம் பெரியோர்களை அஞ்சி ஒதுங்கியே இருக்கும். அதனால் இவர்கள் வசதியாக சிறுமையை சுற்றமாக கொண்டு சிற்றின்பத்தில் திளைப்பார்கள். இதுவே பெரியோர்கள் / பெருமை வாய்ந்தவர்கள் சிற்றினத்தை அஞ்சமாட்டார்கள். அவர்களுடனும் பரிவுடனே இருக்க முற்படுவார்கள். (உதாரணமாக காந்தியும் இன்னும் பல தலைவர்களும் எல்லோருடனும் பரிவாகவே இருந்தார்கள். எல்லோருடனும் உரையாடி செயலாற்றி அவர்கள் வாழ்வை மேம்படுத்தினார்கள்). 

மிக பரிட்சயமாக நாம் அறிந்தவை
- சகவாச தோஷம்
- கூடா நட்பு கேடாய் முடியும் 

ஒளவையார் அவர்கள் ஆத்திச்சுடியில் இன்னும் எளிதாக இரண்டு மூன்று வார்த்தைகளிலேயே கூறியிருப்பார் 
- சான்றோர் இனத்து இரு
- இணக்கம் அறிந்து இணங்கு
- சேரிடம் அறிந்து சேர்
- தக்கோன் என திரி
- பெரியாரைத் துணைக் கொள்
- மேன்மக்கள் சொல் கேள்


( புதுவை மதர் - டென்னிஸ் விளையாடுகையில்)

எனக்கு ஒரு உதாரணம் ஞாபகத்துக்கு வருகிறது. புதுவை மதர் (The Mother - Mirra Alfassa) அவர்கள் ஒரு கதை சொல்லி இருப்பார். ஒரு விளையாட்டு (உதாரணத்திற்கு : டென்னிஸ் (Tennis)) விளையாடும் பொழுது, (விளையாட்டுத் திறனில்) சிறியவர்களுடன் விளையாடக்கூடாது. அதுவும் சிறிய நேரத்திற்கு பிறகு கண்டிப்பாக விளையாடக் கூடாது. திறனில் பெரியவர்களுடனே விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் நாம் அதிக சோதனைகளை சந்தித்து நமது திறன் மேம்பட்டு (விளையாட்டில்) வளர்ச்சியடைவோம். அப்படி அல்லாமல் சிறியவர்களுடனேயே விளையாடிக்கொண்டு இருந்தால் அவர்களை எளிதில் வெற்றி பெற்று ஒரு பொய்யான இன்பத்தில் திளைத்து திறனில் மேம்படாமல் இருப்போம். ஆனால் இந்த உதாரணம் அனைத்திற்கும் பொருந்தும்.

மகாகவி பாரதியார் இன்னும் ஆக்ரோஷமாக சொல்லி இருப்பார்

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நன்றி: அஷோக்
கம்பர், விபீடணன் 74 “சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ?” என்று கேட்கிறார். மற்றொரு கேள்வியும் கேட்கிறார் அவரே ஊர்தேடு(154) படலத்தில், “தெளிந்த சிந்தையரும் சிறியார்களோடு அளிந்த போதறிதற்கு எளிதாவரோ?” என்று.

கீழ்மையான குணமுடையவர்களே வஞ்ச நெஞ்சம் கொண்டவர்களும் ஆதலின், “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்”, ‘நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்” என்றும் உலகநாதரின் உலக நீதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

மற்ற சில நல்ல சுட்டிகள்

சிற்றினம் சேர அஞ்சி
முற்றிலும் மறுப்பர் பெரியோர்...!
பற்றுக் கொடியாய் தழுவி
சுற்றமாய் ஏற்றுக் கொள்வர்
சற்றும் தயங்காமல் சிறியோர்...!.

In English there is proverb "Show me your friends, and I will show you who you are."

பரிமேலழகர் உரை
பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும். 

விளக்கம் 
(தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு ஆகாது' என்பது கூறப்பட்டது.) ---

மணக்குடவர் உரை
சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர். இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது. 

மு.வரதராசனார் உரை
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

சாலமன் பாப்பையா உரை
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Scholarly people, disciplined people, knowledgeable people, high achievers, reputed peoples, honorable peoples are cautious of / afraid of / fear trivial peoples (indiscipline, bad habits, bad intentions, bad thoughts, bad idea, lethargic people) because these trivial people can spoil scholarly people, bring bad reputation to them, make use of the acquaintance and do harm to others by cheating, fraud, crimes etc. Whereas trivial people (bad habits, bad thoughts) etc cherish being surrounded by and the friendship with trivial people and because they find comfort and solace in being with the same loafer group despite their wrong doings, non progress, no-achievements etc

Questions that I ask to the kid
What / whom does scholarly / discipline / reputed / knowledgeable people afraid of ? Why?
Why trivial people cherish their surroundings?