Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_050. Show all posts
Showing posts with label Athikaaram_050. Show all posts

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

குறள் 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

ஆழ் - ஆழம், āẕ   ஆழு, II. v. i. be deep, profound, ஆழமாயிரு; 2. sink down, be drowned, அமிழ்.

களரில்  - களர் - உவர்நிலம், களர்நிலம்; சேற்றுநிலம்; கூட்டம்; கறுப்பு; கழுத்து

நரி - ஒருவிலங்குவகை; புலி; வைக்கோற்புரிக்கருவி

அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல் அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல் கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல் எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).  

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சா - அஞ்சாமல்; பயப்படாமல்

வேல் - நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்.

ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன் காலாள் கணவன் தொண்டன் ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம் அரசு தொட்டால்வாடி பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி.

முகத்த - முகத்தல் - மொள்ளுதல்; அளத்தல்; தாங்கியெடுத்தல்; விரும்புதல்; நிரம்பப்பெறுதல்; மணம்பார்த்தல்; காண்க:முகத்தலளவு(வை).

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்

களிறு - ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள்.

முழுப்பொருள்
வலிமை வாய்ந்த ஒரு யானை உடல் அளவிலும் எடையிலும் மிக பெரிது. அதன் உருவத்தை கண்டாலே எல்லோரும் அஞ்சுவர். யானையை கண்டால் அதன் பாகனும் அஞ்சுவான். அங்குசம் வைத்திருக்கும் பாகனையும் தூக்கி எறியும் யானை. வேல் படைத்த வீரர்களும் யானையிடம் தோற்றுப்போவார்கள். 

அத்தகைய வலிமை வாய்ந்த யானை அதன் கால் ஆழமாக செற்றுள்ள களரிலே அமிழுமாயின் அந்த யானையைவிட பல மடங்கு உடலாலும் வலிமையாலும் சிறிய நரி வென்றுவிடக் கூடும். குறைந்தபட்சம் அந்த யானையை நரி (அல்லது நரிகள்) ஒன்றுக்கூடி வருத்தும். [அடுத்தல் என்ற சொல்லுக்கு வருத்துதல் என்ற பொருள் உண்டு]. ஏனெனில் செற்றில் அமிழ்ந்துள்ள யானையின் கால் நடக்கவே சிரமப்படும். அது எப்படி நரியை விரட்ட முடியும்? அல்லது துதிக்கையால் தூக்கி எறியமுடியும். 

ஆதலால் பெரியோர் ஆயினும் (பெரிய படையை பெற்றவர் ஆயினும்) தனக்கு ஒவ்வாத இடத்தில் தனக்கு அச்சௌகரியமான இடத்தில் தோற்றுப்போவர். சிறியோர் தரும் வருத்தமே அவர்களை மனதளவில் நிலைகுலைய செய்யும். ஆதலால் இடத்தின் தன்மை அறிந்து செயல்படுக.

கால் புதைந்து போகும் அளவுக்கு உள்ள சேற்றில் கால் வைத்தால், பாகனுக்கும் அஞ்சாத, வேல்வீரர்களை மாலையாகக் தம் தந்தங்களால் குத்திக்கோர்க்கின்ற யானையும், நரிகளால் கொல்லப்படும். இடனறிதல் அதிகாரத்தில் மீண்டுமொரு குறள் வலிமையும் சிறுமைபட்டு சிதையும், இடம் தெரியாமல் செயல்பட்டால் என்பதை வலியுறுத்தி. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, கால்ஆழ் களரின் நரி அடும் - அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும் என்றவாறு.
('முகம் ஆகுபெயர்'. 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த என்று பாடம் ஓதுவாரும் உளர்: வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம். இது மேலதற்குக் காரணங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

சாலமன் பாப்பையா உரை
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.


Thirukkural - Management - Decision Making
Another simile is used by Valluvar to highlight the importance of location. Kural 500 means that a huge tusker that can fearlessly charge and attack the archers and spearmen in a battlefield will not and cannot fight against even jackals when it is stuck in quicksand, quagmire or slush. That is indeed an amazing observation by Valluvar. 

A tusker which defies spearmen 
Is filled in a bog by jackals.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

குறள் 499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
சிறை - காவல்; காவலில்அடைக்கை; சிறைச்சாலை; அடிமைத்தனம்; அடிமையாள்; பெண்டாகச்சிறைபிடிக்கப்பட்டஇளம்பெண்; அழகுள்ளவள்; அணை; நீர்நிலை; இடம்; பக்கம்; கரை; மதில்; வரம்பு; இறகு; யாழ்நரம்புக்குற்றவகையுள்ஒன்று.

நலனும் - நலன் - nalaṉ   s. poetical change of நலம்.; நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

சீரும் - சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

இலர் - இல்லை ;  who are not

எனினும் -  என்றுசொல்லினும்; ஆனாலும்.

மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

நிலத்தொடு - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

ஒட்டல் - ஒட்டுதல்; ஒன்றுசேர்த்தல்; உடன்பாடு; தாக்குதல்; கிடைத்தல்; வைத்தல்; குறுகல்; வற்றல்; பந்தயம்; உள்ளொடுங்குகை.

அரிது -  அருமை; பசுமை; aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.  

முழுப்பொருள்
நமது பகைவர்களுக்கு தன்னை காத்துக்கொள்கின்ற அளவுக்குப் பெரிய படையும் வலிமையும் ஆயுதங்களும் முன்பு போர்களில் வென்ற பெருமையும் இல்லை என்றாலும் அப்பகைவரை அவருடைய சொந்த நிலத்தில் வெல்லுதல் மிக மிக கடினம். ஏனெனில் அப்பகைவர் அவ்விடத்திலேயே பலகாலமாக இருந்தவர். அவருக்கு அவ்விடத்தை பற்றி அணு அணுவாக தெரியும். ஒவ்வொரு புல்லின் இலையின் தன்மையும் அவர்களுக்கு தெரியும். ஆதலால் அவர்களை வெல்லுதல் மிக கடினம். அவர்களுக்கு தட்ப வெட்பம், இடத்தின் சூழல் ஆகியவை கைக்கொடுக்கும். மேலும் சொந்த ஊரில் கிடைக்கும் உற்சாகமும் கைக்கூடுக்கும். ஆதலால் இவற்றை கருத்தில் கொண்டு செயல்புரிக.

இதற்கு மிக சிறந்த உதாரணம் கிரிக்கேட்டில் அடத்தப்படும் ஐந்து நாள் டெஸ்ட்/சோதனை ஆட்டம் (Test Match). பெரிய பெரிய ஜாம்பாவான்களும் உலக சாம்பியன்களும் அனுபவத்தில் சிறிய நாடுகளிடம் வெற்றிபெற திணரியுள்ளன. உதாரணமாக இந்திய போன்ற நாடுகளில் இந்திய அணி மிக வலுவற்ற நிலையிலும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகள் வலுவான அணியைக்கொண்டும் பெரும் தோல்விகளை சந்தித்துள்ளன. வெற்றிகளை அரிதாகவே சுவைத்துள்ளன.

புகைப்படம் - 2001ஆம் ஆண்டு கல்கத்தா ஈடன் கார்டன் டெஸ்ட் ஆட்டம் - இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது

புகைப்படம் - 2001ஆம் ஆண்டு கல்கத்தா ஈடன் கார்டன் டெஸ்ட் ஆட்டம் -  இந்திய வீரர்கள் வி.வி.எஸ்.லக்‌ஷ்மனன், திராவிட்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது.
('நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது. இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
சிறு - ciṟu   VI. v. i. same as சிறுகு; 2. v. t. make small, contract, குறை VI.
(an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று.

படை -  சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

படையான் - படை உடையவன்

செல் - போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான்.

செல் - cel   1. 1-2. poo 2. naTa 1-2. போ 2. நட 1. [arrive at (a destination)]; be current (of money) 2. have an effect  

இடம்  - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

சேரின்- சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

உறு  - மிகுதி; மிக்க; பகை; போர்.
படை -  சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

படையான் - படை உடையவன்

ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற்கொண்டஎண்ணம்; உண்மை.

அழிந்து - அழிதல் - நாசமாதல்; சிதைவுறுதல்; தவறுதல் நிலைகெடுதல் தோற்றல் மனம்உருகுதல்; வருந்துதல் மனம்உடைதல்; பெருகுதல் பரிவுகூர்தல்; செலவாதல்
 
விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
இக்குறளுக்கு இரண்டு அர்த்தங்கள் எனக்கு தோன்றுகின்றன. அவற்றை இங்கு தொகுக்கிறேன்

1. எதிரியின் படை அளவில் சிறியதுத்தானே என்று சற்று அலட்சியமாக எண்ணி எதிரியிடம் போருக்கு சென்றால் பெரியபடையும் வலிமையும் படைத்தவன் ஆயினும் அவனுடைய ஊக்கம் அதாவது முயற்சி வலிமை மனவெழுச்சி ஆகியவை குறைந்து அழிந்து அப்போரிலே கெடுவான் அவ்வரசன். அதனால் அவன் பெருமையும் கெட்டு அழியும். ஆதலால் யாரையும் சிறியோர் என எண்ணி உனது முயற்சியை குறைக்காதே. சிறியபடை ஆயினும் அவர்களின் களம்/இடம் அறிந்து செயல்புரிக.

2. அளவில் பெரிய படையும் வலிமையும் வைத்துக்கொண்டு, ஒரு அரசன் சிறிய படைகளை நோக்கி போருக்கு சென்றுக்கொண்டு இருப்பானாயின் அவனுடைய படையுடைய முயற்சி வலிமை ஆகியவை குன்றும். நாளடைவியில் அவர்கள் பெரிய படைகளையும் அவர்களைவிட வலிமை வாய்ந்தவர்களிடம் போராடும் தன்மையை/வீரத்தை/ஊக்கத்தை இழப்பர். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிவிடும். மேலும் வலிமை வாய்ந்தோர் வலிமையில்லாத சிறியோரிடம் போருக்கு செல்வது அவர்களின் பெருமையை அழித்துவிடும். சிறியோரிடம் காரணம் இன்றி போருக்கு செல்வது நாணத்தக்க செயலாகும்.

இதற்கு பல உதாரணங்களை விளையாட்டுப் போட்டிகளில் இருந்து கூறலாம். பல ஜாம்பவான்கள் சிறிய அணிகளிடம் பெரிய விளையாட்டுகளில் மிக மிக மோசமாக தோற்று இருக்கின்றன. அதற்கு காரணம் சிறிய அணியை குறைத்து மதிப்பிட்டு அவர்கள் முயற்சியை குறைத்துக்கொண்டது தான் காரணம்.

புகைப்படம்::: 1983 ஆம் ஆண்டு கிரிக்கேட் உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிறிய அணியான இந்திய அணி ஜாம்பவானான மேற்கு இந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது


மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உறுபடை மன்னர் தம்மை உடற்றிஒன் றானும் இன்றிச்
சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
செறிஎயிற் றாளிவேழப் பேரினம் செகுத்த தன்றே
உறுபுலி ஒன்று தானே கலையினம் உடற்றிற் றன்றே” (சீவக.814)

பரிமேலழகர் உரை
உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும்.
('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும் என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.

மு.வரதராசனார் உரை
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.


Thirukkural - Management - Decision Making
Even a small army has a greater advantage over a bigger and more powerful army when the small army 
is in the right location, locates Valluvar in Kural 498.

A large army in a small place 
Is demoralized and ruined.

The location influences the minds of soldiers of the big army and they will lose their motivation to fight and withdraw their efforts to fight out the small army. Though more powerful in size, the bigger army will have a disadvantage, if the location does not give it an advantage.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

குறள் 496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி

ஓடுதல் - ōṭu-   5 v. intr. cf. hōḍ. [T.K. M. Tu. ōḍu.] 1. To run, flee away,pass quickly; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலடி, 120). 2. To go,as a watch; to pass, as time; to sail; செல்லுதல் திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.).3. To operate, follow, as the mind; மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 4. To extend, go far; நீளுதல் வழி மிகவோடுகிறது. 5. Tosuffer, to be distressed; வருந்துதல் ஓடியதுணர்தலும். (சிறுபாண். 214). 6. To happen, occur; நேரிடுதல் இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 7. Toturn back, retreat; to be defeated; பிறக்கிடுதல் ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 8. To come off,as a ring; கழலுதல் ஓடுவளை திருத்தியும் (முல்லைப்.82). 9. To be endowed with; பொருந்துதல் கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 10. To be dismantled; குலைதல் (பிங்.) 11. To pass, as inthe mind; எண்ணஞ் செல்லுதல் திருவுள்ளத்தில்ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.).12. To hasten; விரைதல் அவன் எதைச் செய்யத்/  

ஓடா - ஓடாத ; செல்லாத 

கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

ஓடாகால் - ஓடாத 

வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.

நெடுந் - நெடும் - நெடுமை - நீளம், உயரம், காலம்முதலியவற்றின்நீட்சி; பெருமை; அளவின்மை; ஆழம்; கொடுமை; பெண்டிர்தலைமயிர்; நெட்டெழுத்து.

தேர் - இரதம்; சிறுதேர்; காண்க:கொல்லாவண்டி; உரோகிணிநாள்; கானல்; பௌத்தமுனிவர்.

தேர் - - tēr   தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 2. discriminate, know, அறி; 3. consider, deliberate, யோசி; 4. say, tell, சொல்லு; v. i. be well versed or proficient in, பயில்.

கடல - கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

ஓடும் -  - ōṭu-   5 v. intr. cf. hōḍ. [T.K. M. Tu. ōḍu.] 1. To run, flee away,pass quickly; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலடி, 120). 2. To go,as a watch; to pass, as time; to sail; செல்லுதல் திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.).3. To operate, follow, as the mind; மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 4. To extend, go far; நீளுதல் வழி மிகவோடுகிறது. 5. Tosuffer, to be distressed; வருந்துதல் ஓடியதுணர்தலும். (சிறுபாண். 214). 6. To happen, occur; நேரிடுதல் இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 7. Toturn back, retreat; to be defeated; பிறக்கிடுதல் ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 8. To come off,as a ring; கழலுதல் ஓடுவளை திருத்தியும் (முல்லைப்.82). 9. To be endowed with; பொருந்துதல் கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 10. To be dismantled; குலைதல் (பிங்.) 11. To pass, as inthe mind; எண்ணஞ் செல்லுதல் திருவுள்ளத்தில்ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.).12. To hasten; விரைதல் அவன் எதைச் செய்யத்/  

நாவாயும் - நாவாய் - உள்ளீடற்றகதிர்; மரக்கலம்; இரேவதிநாள்; காண்க:நாவாய்ப்பறை.

ஓடா - ஓடாத ; செல்லாத 

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. 

முழுப்பொருள்
நிலத்தில் வேகமாக ஓடக்கூடிய வலிமைவாய்ந்த உயர்ந்த தேர் கடலில் ஓடாது. ஆதலால் அது கடலில் பயணிக்க உதவாது. ஆனால் நிலத்தில் தேர் ஓடும். ஆழ்கடலிலும் ஓடும் மரக்கலத்திலான கப்பல் / படகு நிலத்தில் ஓடாது. ஆதலால் ஒரு பொருள் அல்லது ஒரு கருவியின் திறன் அதன் எல்லைக்கு உட்பட்டதே என்பதை அறிக. அவ்வெல்லைகளை அறிந்து அதற்குள் அக்கருவியை பயன்படுத்துக. ஒரு தளத்தில் ஒரு கருவியை பயன்படுத்தும் முன் அக்கருவி அத்தளத்தில் (இடம்) உதவுமா என்று ஆராய்ந்து பயன்படுத்துங்க. 

இங்கே கருவி எனப்படுவது பொருளாக இருக்கலாம் அல்லது மனிதர்களின் திறனாக இருக்கலாம். ஒரு காவல்துறை அதிகாரி மருத்துவம் படிக்காமல் மருத்துவ ஆலோசனை கூற முடியாது. 

ஆதலால் ஒரு செயலுக்கு ஏற்ற கருவியையும் ஏற்ற திறன் படைத்த மனித வளத்தையும் பயன்படுத்துவது அச்செயல் வெற்றிபெற/பயன்தர  இன்றியமையாதது ஆகும். இல்லையேல் அச்செயல் தோல்வி அடையும் அல்லது சில சமயங்களில் ஆபத்தாக கூட அமையும்.

மேலும் நமக்கு ஒரு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமெனில் தகுந்த நிபுணர்களை கேட்க வேண்டும். பெரியவர்கள் நண்பர்களிடம் ஆலோசனைப் பெற்று அந்நிபுணர்களை அடையாளம் காணலாம். 

இன்றைய காலகட்டங்களில் பலர் தங்கள் துறைகளில் (உதாரணமாக அலுவல் குமாஸ்தாக்கள்(clerk), மென்பொருள் பொறியாளர்கள்(software engineers)) நிபுணர்களாக இருப்பர். ஆனால் அவர்கள் வணிகத்தில் (business ) ஆர்வம் பெற்று அத்துறைக்கு முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். அப்படி ஈடுபடுத்திக்கொள்வது தவறில்லை. ஆனால் அவ்வணிகத்தை பற்றி சில காலம் நன்கு ஆராய்ந்து கற்று அதன் பின் அதில் இறங்க வேண்டும். 2-3 மாதங்கள் (வேண்டும் எனில் 6 மாதம் அல்லது ஒரு வருடம் அல்லது தேவையான நேரம்) அத்துறையை நன்கு கற்க வேண்டும். பின்பு வணிகத்தில் செயல்புரியும் பொழுது நாம் சரியான திசையில் பாதுகாப்பாக இருக்கிறோமா என்று குறிப்பிட்ட இடைவெளிகளில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். நிபுணர்களின் உதவியை நாட வேண்டும். திசை தெரியாமல் சென்றால் ஆபத்தான இடங்களுக்கு சென்றுவிட கூடும். அதில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகள் கூட ஆகலாம். சிலர் போகிற போக்கில் மாதிரிகளை (prototype) உருவாக்கி கற்றுக்கொள்ளலாம் என்பர் (கேட்டால் எல்லோரும் ஆதியில் இருந்து தொடங்க முடியாது என்பர்). ஆனால் அதுவும் எல்லைக்கு உட்பட்டதே. பாதுகாப்பு இல்லாமல் அகல கால் வைக்க கூடாது. சறுக்கி விடும் (உதாரணமாக ஒரு மாணவருக்கு பாடம் எடுக்கும் ஒரு இளைய ஆசிரியர் உடனே 60 மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடியாது. ஒரு இடத்தில் தங்கநகை கடை வைத்திருக்கும் ஒரு வியாபாரி ஒரே நேரத்தில் 100 இடங்களில் தங்கநகை கடை வைக்க கூடாது ஏனெனில் இரண்டின் (business model) தேவைகளும் அதன் அன்றாட இயங்குமுறைகளும் இடங்களும் வேறு வேறு. தங்கநகை வைத்திருக்கும் ஒரு வியாபாரி வீடுகட்டும் தொழிலுக்கு உடனே வர முடியாது). 2-3 மாதங்கள் கற்க சோம்பியோ அல்லது அவ்வப்போது பாதுகாப்பாக இருக்கிறோமா என்று சரிபார்க்கவில்லை என்றால் ஆபத்தை சந்திப்பர். 

பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு எப்போதுமே பாதுகாப்பாகத்தான் இருக்கும். கருடனும் கூட அதோடு சண்டைக்குப் போகமுடியாது. யாருமே அவருக்கு ஏற்ற களத்தில் இருந்தால், செயலாற்றினால்தான் பாதுகாப்பு! வெற்றி தோல்வியெல்லாம் பிறகுதான். எவ்விடத்தில் எச்செயலைச் செய்தால் அது கூடாதோ அவ்விடத்தில் அதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்ல உவமையை மட்டும் சொல்லி அமைந்த குறள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கால் வல் நெடுந்தேர் கடல் ஓடா - நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா, கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா - இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின் கண் ஓடமாட்டா. ('கடல் ஓடா' என்ற மறுதலை அடையான் 'நிலத்து ஓடும்' என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பது ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது. 'மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.).

மணக்குடவர் உரை
கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது: கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது. இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

சாலமன் பாப்பையா உரை
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

English Meaning - As I taught a kid - Rajesh
A chariot can run on land but cannot run on sea. A ship can run on sea but cannot run on land. Hence, we should not assume the object will work in another place just because it worked in one place.  We should research if the object /strategy/work would work in that location

Questions that I ask to the kid
Can car travel in sea? why? what does it signify? (bcos location plays a role. what works in one place will not necessarily work in other place)
Can ship travel in land? why? what does it signify?

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

குறள் 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எண்ணியார் - எண்ணங்கொண்டவர், நோக்கங்கொண்டவர்.

எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம்.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு.

இழப்பர் - இழப்பார்கள்

இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம் இருப்பவன்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

துன்னியார் - அடுத்தோர்; நண்பர்

துன்னிச் - துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

செயின் - செய்தால் / / செய்ய வேண்டும்

முழுப்பொருள்
ஒருவர் ஒரு செயலை செய்யும் பொழுது (/முன்பு) அதனை நன்கு ஆராய்ந்து அதற்கு வரக்கூடிய இடர்களையும் அதனை செய்யவேண்டிய தக்க காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து செய்வார் என்றால் அவரை வெல்லவேண்டும் என்று எண்ணிய பகைவர் அவ்வெண்ணத்தை கைவிடுவார்/இழந்துவிடுவார். ஏனெனில் அவ்வாறு எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்வோரை வெல்வது (அல்லது தோல்வியடையச் செய்வது) மிக அரிது/கடினம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இடன் அறிந்து துன்னியார் - தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர், துன்னிச் செயின் - அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் - அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.
(அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தம்மைக் கெடுத்தற் கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின். இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

சாலமன் பாப்பையா உரை
ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person/king rightly does a task by researching and analyzing all the attributes of the task w.r.t place/location, timing, channel, hurdles, resources etc., then an dismissive opponent who thought or wants to go against the king will drop/loose that thought /plot. Because they know that it is very difficult to defeat a person who thinks through in all directions including right place and does the task rightly.

Questions that I ask to the kid
When does a opponent loose a thought to defeat a person? Why?

ஆற்றாரும் ஆற்றி அடுப

குறள் 493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
ஆற்றுதல் வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாரும் -  வலிமை அற்றவர்

ஆற்றி ஆற்றுதல் வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அடுப - அடுதல் - கொல்லுதல்; தீயிற்பாகமாக்குதல்; சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல்; குற்றுதல் உருக்குதல்

இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

போற்றார் - பகைவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

போற்றிச் - துதிச்சொல்வகை; துதித்தல், புகழ்மொழி; கோயிற்பூசைசெய்யும்மலையாளநாட்டுப்பார்ப்பனன்; பாட்டன்.

செயின் - செய்தால் / செய்ய வேண்டும்

முழுப்பொருள்
"ஆற்றாரும் ஆற்றி அடுப" என்றால் வலிமை அற்றவர்கள் ஒரு செயலை ஆற்றி பகைவரை வெல்ல முடியும் (அல்லது தனது இயலாமையை வெல்ல முடியும்) என்கிறார் திருவள்ளுவர். எப்படி? செயலில் வரக்கூடிய இடர்களை அறிந்து அச்செயலை செய்வேண்டிய தக்க நேரத்தையம் இடத்தையும் அறிந்து பகைவரின் திறனை மதித்து அச்செயலை முழுகவனுத்துடன் செய்தால் அப்பகைவரை (அப்போரில் அல்லது தனது இயலாமையை) வெல்ல முடியும். இங்கே நேரத்தின் முக்கியத்துவத்தை கோடிடுகிறார் திருவள்ளுவர்.

ஆதலால் தன்னை வலிமையாய் கருதுபவர் தன் பகைவர் வலிமையில்லாதவர் ஆயினும் தன்னுடைய வீழ்ச்சிக்கும் தளர்வுக்கும் சோர்வுக்கும் காத்திருந்து தன்னை தாக்குவார் என்பதை உணர வேண்டும்.  ஆதலால் எப்பொழுதும் தன்னை எத்தகைய சூழலுக்கும் ஆயுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்.
('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.

மு.வரதராசனார் உரை
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.

சாலமன் பாப்பையா உரை
பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்

குறள் 492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
முரண் - பகை; போர்; வலிமை; பெருமை; மாறுபாடு; காண்க:முரண்டொ(தொ)டை; முருட்டுக்குணம்; கொடுமை; மாணிக்கக்குற்றங்களுள்ஒன்று.

சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

மொய்ம்பன் - moympaṉ   n. மொய்ம்பு.Warrior; வீரன். வாளி . . . மொய்ம்ப ரகங்களைக்கிழித்து (கம்பரா. முதற்போ. 145).

மொய்ம்பு - moympu   n. prob. மொய்¹-.[K. muyvu.] 1. Strength, valour, prowess;வலிமை. முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள்,492). 2. Shoulder; தோள். பூந்தாது மொய்ம்பினவாக (கலித். 88.)

மொய்ம்பினவர்க்கும் - தன் வலிமையால் உலகை வெல்ல நினைப்பவர்கள்

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

சேர்ந்து சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

பலவும் - ஒன்றுக்குமேற்பட்டவை

தரும் - தருதல் - trutl   v. noun. Giving, &c. See தா, v.,கொடை

முழுப்பொருள்
பகைவரை தன் வலிமையால் வெல்ல வேண்டும்  என்று நினைப்பவர்கள் அரசர்கள். அப்பொழுது போரில் இருதரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஆகக்கூடும். அப்போது அரசர் தன்பக்கம் பற்றிய உயிர் சேதங்களை பற்றி பெருவாரியாக கவலை பட மாட்டார். 

ஆனால் அந்த அரசர் தன் நாட்டை வளமாக ஆக்குவார். அதனால் பெருமையும் அடைவார். ஒரு பக்கம் வளம் சேர்த்தாலும். இன்னொரு பக்கம் அவர் பல உயிர்பலியிற்கு காரணமும் ஆகிறார். இது (வளம் சேர்த்தமையால் பெருமையும் போரினால் உயிர்பலியும் (அதனால் வெற்றியும் வாகையும்)) ஒரு முரண் ஆகும். அதனால் தான் முரண்சேர்ந்த மொய்ம்பினவர் என்கிறார் திருவள்ளுவர்

இத்தகைய அரசர்கள் பகைவரை வெல்லும் திறன் இருந்தாலும் தன்னுடைய நாட்டின் (உள் ) பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தன்னுடைய படையின் (அதனுள் உள்ளடங்கிய அனைத்தையும் உதாரணமாக ஒற்றர்கள், மதிவயூகிகள்) திறமையை உறுதி செய்யவேண்டும். அப்படி தனது திறனையும் தனது நாட்டின் பாதுக்காப்பையும் தனது படையையும் ஒருசேர வலிமையாய் வைத்துக்கொள்ளும் அரசருக்கு பல வெற்றிகள் பலனாய் கிட்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.
(மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.).

மணக்குடவர் உரை
பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும். இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா

குறள் 497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
அஞ்சாமை - பயப்படாமை, திண்மை
அல்லால் - இல்லாமல்
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
துணைவேண்டா - துணை தேவையில்லாமால்
எஞ்சாமை - குறையாமை, ஒழியாமை, முழுமை.
எண்ணி - எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம்
இடத்தால் - இடத்தில் / இடத்திற்கு தகுந்தாற்ப்போல்
செயின் - செய்தால் / செய்ய வேண்டும்

முழுப்பொருள்
ஒரு செயலை முழுமையாக எல்லா கோணங்களிலும் நன்கு ஆராய்ந்து திட்டமிட்டு அச்செயலை செய்வதற்கான தக்க இடத்தில் அல்லது அவ்விடத்திற்கு தகுந்தாற்ப்போல சரியாக செய்தால் எதற்கும் அஞ்சாத மன உறுதியுடன் யாருடைய துணையும் நாடாமல்/ வேண்டாமல் அக்காரியத்தை செவ்வென செய்யலாம்.

உதாரணமாக
என் வாழ்வில் சில சமயங்களில் இதனை யாராவது எனக்கு முன்னமே கூறி இருந்தால் நான் இதை முன்பே செய்து இருப்பேன் அல்லது தவறை இழைத்திருக்க மாட்டேன் என்று மனதிற்குள் கூறியது உண்டு. ஆனால் யோசித்து பார்த்தால் சோம்பலால் அக்காரியத்தை செய்யாது இருந்து இருக்கிறேன். அதனை நானே இணையதளத்தில் ஆராய்ந்து கற்றுக்கொண்டு இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இப்போது தான் புரிகிறது திருவள்ளுவர் ”எண்ணி இடத்தால் செயின்” என்று கூறியதை.

சோர்வுடன் அதை கீழே உதிர்த்துவிட்டு அமர்ந்த பிரபாவனிடம் “காலைமுதல் இதை கண்டுபிடித்தேன். இந்நாள் வரை நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான். அதில் திளைக்கிறேன். உன் கூரலகைக் கண்டுதான் உன் அருகே வந்தேன்” என்றது பூச்சி.

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.
('திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை. இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.

மு.வரதராசனார் உரை
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க

குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தொடங்கு - தொடங்கல் - n. தொடங்கு-.[Tu. toḍagelu.] 1. Beginning; ஆரம்பிக்கை 2.First creation; ஆதிசிருட்டி 3. Attempt; செய்யமுயலுகை.
அற்க - எதிர்மறை ஏவலைக் குறிக்கும் ஒரு கடைநிலை.
தொடங்கற்க -  செயலை தொடங்காதே / துவங்காதே
வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக் குறிக்கும் குழூ உக்குறி.
எவ் வினையும் -  எந்த ஒரு செயலையும் தொழிலையும்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளற்க - செயலின் தன்மையையும் தெரியாமல் இகழலும் செய்யாதீர்
முற்று - முழுமை; முழுமையானது; முதிர்ச்சி; முடிவு; வினைமுற்று; காண்க:முற்றுகை
முற்றும் - முழுவதும் அறிந்து; இச்செயலை இப்படி செய்தால் இறுதியில் என்ன விளைவு வரும் அறிந்து
இடம் - தானம்; வாய்ப்பு; வீடு; காரணம்; வானம்; விரிவு; இடப்பக்கம்; அளவு; ஆடையின்அகலமுழம்; பொழுது; ஏற்றசமயம்; செல்வம்; வலிமை; மூவகையிடம்; படுக்கை; தூரம்; ஏழனுருபு; இராசி.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டபின் - அறிந்த பின், ஆராய்ந்த பின்
அல்லது - தீவினை; தவிர.

முழுப்பொருள்
எந்த ஒரு செயலையும் முழுமையாக ஆராயாமல், செயலின் விளைவு (மற்றும் பக்க விளைவு) அறியாமல், செயலுக்கு தேவையான ஆயுத்தப்பணிகளை செய்யாமல், செயல் செவ்வன செய்வதற்கான இடத்தை அறியாமல், இடத்தின் தன்மை அறியாமல், செயலிற்கு இடத்தின் தன்மையறியாமல் துவங்காதே என்கிறார் திருவள்ளுவர். இங்கே இடத்திற்கு புறவயமான இடம் மட்டும் அல்லாமல் நேரம், செயல் செய்வதற்கு தேவையான வலிமை, தன்னுடைய வலிமை, எதிரியின் வலிமை, செல்வம் ஆகியவற்றும் அடங்கும். 

அதுமட்டும் அல்லாமல் எந்த ஒரு செயலையும் சிறிதாயினும் இகழாதே. ஒரு சிறிய விஷயமும் பெரிதான ஆபத்துக்களை உருவாக்கக்கூடியது. உதாரணமாக ஒரு எறும்பு யானையின் காதில் நுழைந்தால் அது யானையினையே மாய்த்துவிடும்.  ஆதலால் எந்த ஒரு செயலையும் துச்சமாக எண்ணாதே என்கிறார் திருவள்ளுவர்.

உலகின் மிகப்பெரிய வலிமைமிக்க அரசர்கள் நிகழ்த்திய போர்களெல்லாம் எதிரிகளின் வலிமையையும், போர் நிகழும் களம், மற்றும் முடிவுறும் இலக்கும் இவை அறியாமல் மேற்கொண்டதால் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்று:

வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை 
எள்ளி உணர்தல் இயல்பன்று – தெள்ளியார் 
ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார் 
நீறுமேல் பூத்த நெருப்பு. (பு.வெ.166)

கடல் போல் பெரிய படையை உடையேம் என்று எண்ணிப் பகைவரை இகழ்தல் நல்ல இயல்பன்று. அறிவு மிக்கோர் நீறுபூத்த நெருப்பை அது ஆறிவிட்டது என உறுதிசெய்த பின்பே கையில் எடுப்பர். தம் வலிமையொன்றையே பெரிதெனக் கருதாது பிறர் வலிமையையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்; அப்போதுதான் வெற்றி கிட்டும் என்பது இதன் கருத்து. இடம்பற்றிய கருத்து இதுவல்லவென்றாலும், எள்ளுதலை தவறென்று உணர்த்தும் பாடலிது.

பொது வழக்கில் "ஆழம் தெரியாமல் காலை விடலாமா?", "இடம் பொருள் ஏவல் தெரிந்து செய்க"  என்று கூறுவது உண்டு. 

மேலும்: அஷோக் உரை
மேலும்: குறள் இனிது: இடம்... ரொம்ப முக்கியம் குமாரு! (தமிழ் இந்து)

ஒப்புமை
வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை
எள்ளி யுணர்தல் இயல்பன்று (பு.வெ.166)

பரிமேலழகர் உரை
[அஃதாவது ,வலியும் காலமும் அறிந்து பகைமேற்செல்வான் , தான் வெல்லுதற்கு ஏற்ற நிலத்தினை அறிதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும் . ]

முற்றும் இடம் கண்ட பின்அல்லது - பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது, எவ்வினையும் தொடங்கற்க - அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக, எள்ளற்க - அவரைச் சிறியர் என்று இகழாதொழிக. (முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலொடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து. ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.)

மணக்குடவர் உரை
முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக.

இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முற்றும் இடம் கண்டபின் அல்லது - பகைவரை முற்றுகை செய்வதற்கேற்ற இடம் பெற்ற பின்னல்லது ; எவ்வினையும் தொடங்கற்க - அவருக்கு மாறாக எவ்வினையையுந் தொடங்காதிருக்க ; எள்ளற்க - அவரைச் சிறியரென்று இகழாதிருக்க .

முற்றுதல் வளைதல் . அதற்கேற்ற இடமாவது , பெருவாயில் களாலும் திட்டிவாசல்களாலும் சுருங்கைகளாலும் பகைவர்க்குப் புகலும் போக்குமில்லாவாறு அவர் நகரரணைச் சூழ்ந்து , நால் வகைப்படைகளும் அவற்றின் நடுவே பாதுகாப்பாக அரசனும் தங்கியிருத்தற்குப் போதியதும் , உண்ணீர் அண்மையிலுள்ளதும் , சதுப்பல்லாததும் , படமாடங்களும் பரசறைகளும் ஒரேபகலில் அமைக்கக் கூடியதுமான நிலப்பரப்பாம் .

மு.வ உரை
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது

சாலமன் பாப்பையா உரை
பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

நன்றி: Indian Finance Bazaar
தேர்வு செய்து சரியான கட்டுபாட்டுக்குள் இருக்கும் முதலீட்டு சேவை புரிவோர்களை ஆராய்ந்து தேர்ந்து எடுத்து முதலீட்டு முறைகளை தெரிந்து கொண்டு செயல்படுத்தும் முதலீடு பாதுகாப்பானதாக அமையும். அவ்வாறு இல்லாமல் பேராசை பட்டு எந்தவோரு அரசாங்க கட்டுபாட்டுக்குள் வராத அமைப்பு அல்லது தனியார் நபரிடம் பெரும் வருவாய் கருதி செய்யும் முதலீடு பெரும் ஆபத்தில் முடியக் கூடிய சூழ்நிலை நிறைய உள்ளது. அரசாங்க அமைப்பு கொண்ட நிறுவனங்களுடன் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கட்டுபாட்டு அமைப்பு முதலீட்டாளருக்கு உறுதுணையாக இருந்து நிவாரணம் பெற்று தரும். ஆதலால் முதலீட்டாளர் எந்த முதலீட்டையும் தொடங்குவதற்கு முன்பு இதை கருத்தில் வைத்து கொண்டு செயல்படுவது பல நன்மைகளை தரும்.

நன்றி: ரிஷ்வன்
எதிரியை வெல்லும் இடமறிந்தபின்
அறிவுடன் செயலைத் தொடங்குக
அதுவரை... அவரை அற்பமாய்
இகழ்வதை மனதில் அகற்றுக.

Thirukkural - Management - Decision Making
A person's possibility to exercise his strength is influenced by the location. Kural 491 is an addition to Kural 495. Never think that a task is easy to execute before you start and never start a task before you find the right place to execute the task.

Don't despise your foe, nor start action
Till you find a place to hem in and finish him.

English Meaning - As I taught a kid - Rajesh
Do not venture into a task without doing the following 1) analyzing the work and 2) identifying the appropriate place to execute the task. Do not take for granted even a small task. 
Hence, Never think that a task is easy to execute before you start and never start a task before you find the right place to execute the task.

Analyzing a tasks means  1) research the task well, 2) understand the value of the task, 3) estimate the skills , strengths, tools, equipment's required 4) estimate the resources required, 5) plan the communication mechanism between the members and team etc.  , 6) analyze the best time to optimally execute the task and to reap the rewards

Identifying the appropriate place to execute the task means 1) a place where a task can be executed without any hurdles 2) a place where the required resources, equipment, human resources would be available 3) a place where executing the task is viable 4) nature of the place - such as demographic, climate, geo-politics, culture etc 

Questions that I ask to the kid
Why should you decide on the place of execution of task before starting the task?

நெடும்புனலுள் வெல்லும் முதலை

குறள் 495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் 
நீங்கின் அதனைப் பிற.
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய் குறுகியகுப்பிகளில் நீர்மப்பொருளை ஊற்ற உதவுங்கருவி

நெடும்புனல் - ஆழமுள்ளநீர்நிலை

உள் -உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

வெல்லும் - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

முதலை - நீர்வாழ்உயிரி; காண்க:செங்கிடை; இறகின்அடிக்குருத்து.

அடுதல் - கொல்லுதல்; தீயிற்பாகமாக்குதல்; சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல்; குற்றுதல் உருக்குதல்

அடு - aṭu   IV. v. t. cook, சமை; 2. destroy, அழி. "அட்டாலும் பால் சுவையில் குன்றாது," though milk be boiled its flavour does not diminish.

அடு - aṭu   VI. v. t. approach, கிட்டு; 2. be near, close, adjacent, சேர்ந்திரு; 3. adhere, apply for protection, சார்; 4. v. i. (with dat.) belong to, be suitable to, be becoming, உரியதாகு; 5. happen, சம்பவி. அடுத்தவர்களும் தொடுத்தவர்களும், those near and dear.

புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய் குறுகியகுப்பிகளில் நீர்மப்பொருளை ஊற்ற உதவுங்கருவி

அடும்புனலின் - சேர்ந்துள்ள ஆற்றை 

நீங்கின் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

அதனைப் - அதனை

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
முதலைக்கு பலம் நீரில் என கூறுவர். அதன் பலம் அறிந்து அது நீர் நிலையில், மற்ற உயிர்களை எதிர் கொள்ளும் பொழுது எளிதாக அவற்றை வெல்லும். ஆனால் அந்நீர்நிலையை விட்டு வெளியே வந்தால் முதலையை மற்ற உயிர் இனங்கள் எளிதாக வெல்லும். 

நாம் நம் பலம் அறிந்து, அதற்கு ஏற்ற  களம் அறிந்து, எதிரிகளை எதிர் கொள்ள வேண்டும். களம் அறியாமல், நமது பலத்தை வெளிக்காட்ட முடியாத இடத்தை தேர்ந்தெடுத்தால் அது பகைவருக்கு சாதகமாகவே முடியும் என குறிப்பால் உணர்த்துகிறார் வள்ளுவர்.

இது எதிரியுடன் வெல்லுவதற்கான குறள் மட்டும் அல்ல. வாழ்வில் நமது அன்றாட செயல்களுக்கும் பொருந்தும். ஒருவருக்கு இசையில் ஆர்வம் இருந்தால் அவர் இசை துறையில் சாதகம் செய்து வெற்றி பெறுதல் அவருக்கு இயலும். ஆனால் அவருக்கு விளையாட்டு துறையில் நாட்டமோ அதற்கான பயிற்சியோ வலிமையோ இல்லையென்றால் அவரால் விளையாட்டில் அவ்வளவு எளிதாக பிரகாசிக்க முடியாது. ஒருவர் எல்லாதுறையிலும் பயிற்சியும் உழைப்பும் கொண்டு முயன்றால்  முன்னேறலாம் என்பதெல்லாம் மிகுந்த அபத்தம் வாய்ந்த சொற்றோடர்கள். அப்படி பிரகாசித்தவர்கள் மிக குறைந்த சதவிகிதத்திலேயே இருப்பார்கள். புலியை பார்த்து பூனை சுட்டுப்போட்ட மாதிரி ஆகிவிடும். உதாரணமாக எல்லோரையும் பொறியில் படிப்பில் சேர்ப்பது. அவரவர் அவரவருடைய வலிமைகளை நாட்டங்களை இலக்குகளை ஆழ்ந்து கருத்தில்கொண்டு, தன் செயலை யோகமென செய்தால் அச்செயலை வெல்ல முடியும்.  ஆங்கிலத்தில் "Now Discover your strenghts" என்று ஒரு புத்தகம் உண்டு. நமது வலிமைகளை அறிந்துக்கொள்ளுதல். அது நாம் எக்களத்தில் செயல்புரியவேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்தும்


ஒப்புமை
"வான்சேரின் புள்ளஞ்சா வல்லரில் சுற்றிய
கான்சேரின் மானின் கணம்அஞ்சா - வான்சேர்
சிகர வரைசேரின் தேன்அஞ்சா அஞ்சா
மிகுநீர்க் கயஞ்சேரின் மீன்” (பாரத வெண்பா)

“மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியதுண்டேல்
காட்டுள் நமக்கும் வலியாரையும் காண்டும்” (சீவக.446)

“கூருடை யெயிற்றுக் கோண்மாச் சுறவினம் எறிந்து கொல்லப்
போருடை யரியும் வெய்ய புலிகளும் யாளிப் போத்தும்
நீரிடைத் தோற்ற வன்றே தந்நிலை நீங்கிற் றென்றால்
ஆரிடைத் தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா” (கம்ப.சேது.23)

“உளையச் சிலைக்கும் உழுவையும் தான்தன்
அளையில் தீர்ந் தூரடைந்த தாக - இளிவந்
துயிரிழப்ப தென்றால் உறுமிடநீத் தென்கொல்
செயிருழுக்கும் தீங்கு செயல்” (பாரத வெண்பா)

“கல்லிடை யிட்ட காட்டகம் கடந்து
வெள்ளிடைப் புகுந்த வேட்டுவப் படையினை
ஆட்டுதும் சென்றென” (பெருங்.3.27:22-4)

உபரித்தகவல்
முதலைகளைப் அன்பிலாத ஒரு பிராணியாகிய சங்க இலக்கியமான ஐங்குறுநூறு தனது 41வது பாடலில் சொல்லுகிறது இவ்வாறு: “தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையொடு”. “பார்ப்பு” என்பது ஓர் இனத்தின் குட்டிகளைக் குறிக்கும். இது உண்மையா என்று ஆராயப் புகுந்தால், மெக்ஸிகோ நாட்டு முதலைவகையான “மோர்லெட்” என்பவை அப்படிப்பட்டவை. தம்மினத்தின் குட்டிகளைத் தாமே உண்ணக்கூடியவை.


யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

பரிமேலழகர் உரை
முதலை நெடும்புனலுள்(பிற) வெல்லும் - முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லாநிற்கும், புனலின் நீங்கின் அதனைப் 'பிற' அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.
(எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்; அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.

மு.வரதராசனார் உரை
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

சாலமன் பாப்பையா உரை
முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

Thirukkural - Management - Decision Making
Four Kurals highlight the importance of location for the success of any business venture. In real estate language, three things decide the success of real estate business. They are location, location, and location. Kural 495 supports the view that in addition to time, location also influences the outcome of a decision. The importance of  right location is highlighted in Kural 495. A crocodile gains advantage over any other animal when  the crocodile is inside water. The jaguar is an exception. On the contrary, other animals can challenge a crocodile when the crocodile is on land.

The Crocodile mins in deep waters-
Coming out others min against it.