Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_056. Show all posts
Showing posts with label Athikaaram_056. Show all posts

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி


குறள் 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
முறை -  நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

கோடி - கோடுதல்- வளைதல்; நெறிதவறுதல்; நடுவுநிலைமைதவறுதல்; வெறுப்புறுதல்.

மன்னவன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

செய்யின்- செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

கோடி -  கோடுதல்- வளைதல்; நெறிதவறுதல்; நடுவுநிலைமைதவறுதல்; வெறுப்புறுதல்.

ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

ஒல்லாது- பொருந்தாது ; உடன்படாது; தகாது, இயலாது, ஆற்றாது

வானம்  - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

பெயல் -  பொழிகை; மழை; மழைத்துளி; மேகம்.

முழுப்பொருள்
நூல்கள் கூறியுள்ள அரச நீதி தவறி, ஒழுக்கம் தவறி, நடுவுநிலைமை தவறி ஒரு மன்னன் ஆட்சி செய்தால் அந்நாட்டின் பெருமை புகழ் செல்வம் உணவு ஆயுதங்கள் மழை ஆகியவை தவறும். மழை பொழியாமல் போனால் நாடு வறண்டு விடும். மிகுந்த துன்பம் நிலவும். அத்தகைய ஆட்சி ஒரு கொடுமையான ஆட்சி. 

“வேதம் ஓதும் வேதியற்கொரு மழை, நீதி வழுவா செங்கோலுக்கொரு மழை, பத்தினிப் பெண்களுக்கொரு மழை” என்று மாதம் மும்மாரி பொழிவதற்கான காரணங்களைச் சொன்ன அறிஞர்கள், நீதிவழுவாத செங்கோலை, நடுவிலே வைத்தனர்.

கி.வா.ஜவின் ஆராய்ச்சிப் பதிப்பு, ஆசிரியமாலையினின்றும், திரிகடுகத்தினின்றும் இரண்டு மேற்கோள்களைக் காட்டுகிறது.

“கொண்மூ மழைக்கால் ஊன்றா, வளவயல் விளையா கொடுங்கோல் வேந்தன் காக்கும் நாடே” (ஆசிரியமாலை)

“கொள்பொருள்வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்… வல்லே மழை அருக்கும் கோள்” (திரி: 50)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
(இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.).

மணக்குடவர் உரை
முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.

மு.வரதராசனார் உரை
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா


குறள் 558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
இன்மையின் இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இன்னாது - தீது; துன்பு

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

செய்யா - செய்யாமல்

மன்னவன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

கோற் - கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

கீழ்ப்படின் - அடங்கிநடத்தல், இழிவுபடுதல், தாழ்வுபடுத்தல்; 

முழுப்பொருள்
வறுமையில் இருப்போருக்கு எப்பொழுதும் துன்பங்கள் இருக்கும். (நல்ல ஆட்சியாளர்கள் வந்து அவற்றை நீக்கக்கூடும்.) அது அவர்களுக்கு பழகிப்போன ஒன்று என்றுக்கூட கூறலாம்.  ஆனால் வறுமையில் செல்வம் இல்லாது இருப்பதை விட செல்வத்தை உடைய நேர்மையான செல்வந்தோர் துன்பத்தை அனுபவிக்கும் காலம் இருந்தால் அது கொடுமையான காலம். ஏனெனில் அந்த நாட்டின் மன்னன் மிக தவறான கொடுமையான ஆட்சியை நிகழ்த்துகிறான். 

இல்லாரிடம் எடுத்துக்கொள்ள ஏதுமில்லாததால், அவர்களுக்கு மேலும் வருந்துன்பம் ஒன்றுமில்லை. ஆனால் செல்வம் உள்ளார்க்கு, எப்போது அரசன் அவற்றை எடுத்துக்கொள்ளுவானோ என்ற பயமும், அதனால் துன்பமும் இருந்துகொண்டே இருக்கும்.

ஆதலால் தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

உதாரணமாக நாம் இன்றைய ஆட்சிகளில் பல செல்வந்தர்கள் தங்களது அழகிய வீடுகளை ஆட்சியாளர்கள் அபகரித்த கதைகளை கேட்டுள்ளோம். உதாரணமாக திரைப்படங்களில் பணிப்புரியும் பல்கலை கலைஞர் கங்கை அமரனின் வீட்டை அபகரித்த கதைகளை சிலர் அறிந்திருப்பர். கங்கை அமரன் அவருடைய உழைப்பில் பெற்ற இடம் அது. ஆனால் ஆட்சியில் இருக்கும் சகோதரிகள் அதனை அபகரித்த கதை ஒரு கொடுமையான ஆட்சியின் கதை. அதுப்போல சினிமா துறையில் பல ஓடக்கூடிய வெற்றிப்பெறக்கூடிய சினிமாக்களை தயாரிப்பார்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ”வாங்கி” விநியோகித்து எவ்வித உழைப்பும் இன்றி இலாபத்தை மட்டும் அனுபவித்த ஆட்சியாளர்களின் பேரன்கள் மச்சான் பிள்ளைகள் (அவர்களின் நிர்வாகங்கள்) எல்லாம் உண்டு. இவற்றைப்போல் பல கதைகள் உள்ளன. பல செல்வந்தர்கள் தங்களது பல ஏக்கர் நிலம், பங்களா வீடு, பனை விடு, வணிக வளாகங்கள், நிர்வாகங்களை அபகரித்த கதைகள் பல உண்டு. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின், இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
(தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்குரவினும் செல்வம் துன்பமாகும்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின். இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.

மு.வரதராசனார் உரை
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்


குறள் 557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
துளி - திவலை; மழை; ஒருசொட்டுஅளவு; சிறிதளவு; நஞ்சு; பெண்ணாமை; துளித்தல்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

ஞாலத்திற்கு - ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல்.

எற்று - எற்றுதல் - eṟṟu-   5 v. [M. e&tacute;&tacute;u.] tr. 1. Tostrike, cuff, hit with the fist; அடித்தல் எற்றியவயிற்றள் (கம்பரா. மாரீசுன். 63). 2. To kick;உதைத்தல். 3. To butt, as an elephant; to dashagainst, as the waves of the sea; மோதுதல் எற்று தெண்டிரை (தேவா. 92, 2). 4. To throwout, as water from a vessel; எறிதல் நீரெற்றும் மரம் 5. To cut, cleave, rend; வெட்டுதல் எற்றாமழுவும் (கலித். 85). 6. To pierce, stab; குத்துதல் (திவா.) 7. To kill; கொல்லுதல் (திவா.) 8.To cast away, get rid of; நீக்குதல் எற்றுவமே பாசமெலாம் யாம் (சைவச. பாயி. 7). 9. To snap, as acarpenter's line for marking a board; நூல் தெறித்தல் எற்றுநூல்போன்று (நைடத. சந்திரோ. 33). 10.To raise; எழுப்புதல் (திவா.)--intr. 1. To cease;நீங்குதல். இடைக்கொட்கி னெற்றா விழுமந்தரும் (குறள்,663). 2. To feel compassion; இரங்குதல் எற்றியகாதலினாலிசைத்தாள் (தஞ்சைவா. 224).  ;;eṟṟu-   5 v. tr. To lift, take;எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி.23).

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றேல் - அப்படியானால்.
அற்றே - அப்படியானால்
அற்றுப்போதல் - முழுதும்ஒழிதல்
அற்றேம் -  ஒன்றும் இல்லாத ஒரு நிலை

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

அளி  - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம்.
அளி  - (வி)கொடு; காப்பாற்று

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

வாழும் - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
மேகத்தில் இருந்து மழைத்துளிப் பொழியாமல் போனால் இவ்வுலகம் வறண்டுப்போகும். அது உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் கடும் இன்னல்களை ஏற்படுத்தும். அதனை யாரும் விரும்பமாட்டார்கள். அத்தகைய நிலை விரைவிலேயே முடிந்து மலர்ச்சியான காலகட்டம் வரவேண்டும் என்று மக்கள் வேண்டுவர்.

அதுப்போல அன்பும் அருளும் எளிமையும் ஈகையும் மக்களை பகைவரிடமிருந்தும் உள்நாட்டு குற்றவாளிகளிடமிருந்தும் காப்பாற்றும் நேர்மையான மன்னவன் இல்லையேல் அந்நாட்டு மக்களும் மற்ற உயிரினங்களும் துயரத்தில் அவதிப்படுவர். அத்தகைய மன்னரை அத்தகைய ஆட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள். விரைவிலேயே அந்த ஆட்சி மடிந்து நல்லாட்சி அமைய எல்லோரும் வேண்டுவர்.

“எற்று”, “அற்று” என்னும் சொற்கள் துன்பத்தை உணர்த்தும் வியப்புச் சொற்கள், “அந்தோ” “ஐயகோ” என்னும் சொற்களைபோல்! 

இக்குறள் செங்கோன்மை அதிகாரத்தில் கண்ட, “வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி” என்ற குறளை மறுவாக்கம் செய்துள்ளது. “நீரின்றி அமையாது உலகு” என்பது வான் சிறப்பு அதிகாரத்தில் ஏற்கனவே வள்ளுவர் சொல்லியதுதான். இதை வேறுவிதமாக நான்மணிக்கடிகை இவ்வாறு கூறுகிறது.

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும் 
தவம்இல்லார் இல்வழி இல்லை; தவமும் 
அரசன் இலாவழி இல்லை; அரசனும் 
இல்வாழ்வார் இல்வழி இல் (49)

முறையாக ஆட்சி செய்பவனே சிறந்த அரசன். அரசன் நல்ல ஆட்சி செய்யவில்லையென்றால் நாட்டில் மழை பெய்யாது. மழையில்லா விட்டால் மக்களுக்கு நன்மையில்லை. மக்கள் இல்லையென்றால் அரசனும் இல்லை என்பதை மேற்கண்டபாடல் சொல்லி, மழையின்மையைக் கொடுங்கோன்மையின் விளைவாக உணர்த்துகிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வானம் துளிமாறு பொழுதினில் உலகம்” (கலி.25:28)
“பெயின்நந்தி வறப்பிற்சாம் புலத்திற்குப் பெயல்போல்” (கலி.78:19)

“வறன் உழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்வு இனிதே” (இனியவை.16)

பரிமேலழகர் உரை
'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
(சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது. மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

சாலமன் பாப்பையா உரை
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

குறள் 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
மன்னர்க்கு - மன்னர் - மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

மன்னுதல் - மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

செங்கோன்மை - அரசநீதி; Righteous rule

அஃது - அஃறிணை ஒருமைச்சுட்டு; அது அப்படி

இன்றேல் -  இல்லை என்றால்

மன்னாவாம் - நிலைபெறாது 

மன்னர்க்கு மன்னர் - மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

முழுப்பொருள்
ஒரு அரசர் அரசராக அப்பதவியில் இருப்பதனால் அவருக்கு புகழ் வந்துவிடாது. அரசரின் கீழ் அறத்தின் வழி நடைப்பெற்ற நெறியான ஆட்சியே அரசருக்கு நிலைபெறும் புகழை தரும். அரசரின் ஆட்சி நெறி தவறினால் அரசரின் புகழும் குன்றிவிடும். ஆதலால் நான் அரசன், நான் மந்திரி என்று கர்வம் கொள்ளாமல் தன் வேலையை செவ்வென செய்யதல் வேண்டும். 

இது அரசர் மந்திரிகளுக்கு மட்டும் பொருந்தாது. எல்லோருக்கும் பொருந்தும். அலுவகத்தில் மேலாளர், நிர்வாகளார், குழு தலைவர் என்றும் நிர்வாகத்தின் தலைவர் போன்ற பதவிகளால் ஒருவருக்கு புகழ் கிடைக்காது. அவர் அப்பதவியில் செய்த செயல்களின் அடிப்படையிலேயே புகழ். ஆதலால் செயலே புகழுக்கு காரணம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா.
(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக' (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால்ஒளி மன்னாவாம் : ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம். முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.

மு.வரதராசனார் உரை
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

குறள் 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அல்லல் - துன்பம்

பட்டு - படுதல் -  உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

ஆற்றுதல் -  வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாது - செய்யாது இருத்தல்

அழுத - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.

கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்

அன்றே -  aṉṟē   ind. அன்மை-று + ஏ Is itnot so?, a neg. interrogative, equivalent to anemphatic affirmative; அல்லவா? (தொல். சொல் 282, சேனா )

செல்வத்தைத் - செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு

தேய்க்கும் - தேய்த்தல் - உரைசச்செய்தல்; துலக்குதல்; குரைத்தல்; செதுக்குதல்; அழித்தல்; துடைத்தல்; எண்ணெய்முதலியனஅழுந்தப்பூசுதல்

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

முழுப்பொருள்
ஒரு நாட்டின் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றால் எதனால்? அந்நாட்டின் அரசரும் அரசும் நீதிநூல்கள் கூறுவதற்கு பதிலாக தவறான ஆட்சியை புரிந்து அதன் விளைவால் மக்கள் துன்பப்பட்டு அழுது கண்ணீர் விடுகின்றனர். ஆதலால் அக்கண்ணீரே இங்கு எதிரியின் படைப்போல அமைந்துவிடும். தன் செயல்களினால் ஒருவருக்கு பகைவர் அமைந்தால் அவருக்கு அழிவு துவங்கிற்று என்று கூறலாம். ஆதலால் மக்களின் அழுத கண்ணீரே அவ்வரசரின் செல்வத்தை அழித்துவிடும்.

உதாரணமாக சொன்னால், இன்றைய (2021) காலக்கட்டங்களில் இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் மோடி அரசு உலகெல்லாம்  உள்ள நாடுகளுக்கு கொரோனா (covid) தடுப்பூசிகளை தயாரித்து விநியோகித்து தனக்கும் நாட்டுக்கும் நற்பெயர் (என்னும் செல்வத்தை) (மோடிக்கு brand building) ஈட்ட மூற்பட்டார். ஆனால், அவருடைய அரசின் அலட்சியத்தால் கொரோனா-வின் இரண்டாம் அலை மிக மிக மோசமாக இந்தியாவை தாக்கியுள்ளது. தடுப்பூசிகளை உள்நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்யாமல் வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி செய்தார், தடுப்பூசிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிய அளவில் முனைப்புக்காட்டவில்லை. சமூக இடைவெளி கடைப்பிடிக்கவேண்டிய காலக்கட்டங்களில் பல மாநிலங்களில் தேர்தல் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் அதில் பேரணிகளை நடத்தினார். இத்தகைய அலட்சியத்தாலும் மேம்போக்காலும் இந்தியாவில் சராசரியாக அதிகாரப்பூர்வமாக நான்கு லட்சம் மக்கள் தினமும் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகிறார்கள். அதிகார்ப்பூர்வ கணக்கு மட்டும் நான்கு லட்சம். ஆனால் உண்மையான எண்ணிக்கை குறைந்தது இருபது லட்சம் இருக்கும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை, சுடுகாடுகள் நிரம்பி வழிகின்றன. 25 வயது இளைஞர்கள் எல்லாம் கொரோணாவுக்கு இறக்கிறார்கள். மக்கள் இப்படித் துன்பத்தில் அழுது விழும் கண்ணீருக்கு இந்த அரசாங்கம் கண்டிப்பாய் விலைக்கொடுக்கும். முதலாவதாக மோடி இத்தனை ஆண்டுகளாக ஈட்டிய அத்தனை நற்பெயரும்  (Brand Modi) கெட்டுப்போகும் என்பது தின்னம். மேலும் இது இந்தியாவிற்கும் கெட்டப்பெயரை வாங்கித்தருகிறது. 
(இந்தியாப் போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கொரோனா போன்ற நோய்களை கட்டுப்படுத்துவது சாதாரணம் இல்லை என்று சொல்வதெல்லாம் சால்ஜாப்பு. இந்தியாப் போன்றே தென்கொரியாவும் அடர்ந்த மக்கள்தொகை கொண்ட நாடு தான். அங்கு கொரோனாவின் இரண்டாவது அலை இவ்வளவு தீவரமாக வரவில்லை. மேலும், முதல் அலை துவங்குவதற்கு முன்புக்கூட மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற செயல்களுக்கு அளித்த முக்கியத்துவம் கொரோனாவிற்குக் கொடுக்கப்படவில்லை. இரண்டாவது அலை நடைப்பெறும் பொழுதும் கூட பாண்டிச்சேரியில் /புதுச்சேரியில் பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க முற்படுகிறது பாஜக அரசு. இவ்வரசுக்கு மக்களைவிட அதிகாரமே முக்கியம்). 

பழமொழிப் பாடலொன்றும் இக்கருத்தையொட்டி, குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவையிலாரை துன்புறுத்தும் போது, தாங்க இயலாது அவர்கள் தங்கள் கண்களிலிருந்து பெருக்கிய கண்ணீரே அவர்க்கு கூற்றமாய் வீழ்ந்துவிடும், என்கிறது.

தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்;
மாற்றத்தால் செற்றார் என, வலியார் ஆட்டியக்கால்
ஆற்றாது அவர் அழுத கண்ணீரவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்.

சிலப்பதிகாரம் (29:13) இவ்வாறுக் கூறுகிறது.
”கண்ணீல் நீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ”

மேலும்: அஷோக் உரை

நீதிமறுக்கப்பட்டவர்களின் கண்ணீர் வரலாறு முழுக்க அதிகாரமுற்றத்தில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் என்றார் வள்ளுவர். அபூர்வமாக சில கண்ணீர்த்துளிகள் உலராமலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவைதான் எப்போதுமே மானுடநீதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்கின்றன

எனக்கும் அக்குறள் பிடித்தமானதே. நான் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் முகப்புவாசகமாக அமைந்துள்ளதும் அந்தக்குறள்தான்.

அறம் என்பது தமிழ்ப்பண்பாட்டின் மகத்தான கொள்கைகளில் ஒன்று. அரசியல்பிழைத்தோர்க்கு அறம்கூற்றாகும் என்னும் சிலம்பின் வரியும் இதனுடன் இணைந்துகொள்ளக்கூடியது.



இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம் நாம் நம் ஆசிரியர்களை இயல்பாக நினைவுகூர்கிறோம். நான் நித்ய சைதன்ய யதியை நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நம் ஆசிரியர்கள் நம்மிடம் அடிப்படை விஷயங்களைப் பற்றியே உரையாடுகிறார்கள். இல்லை, அவர்கள் எதைப்பற்றி உரையாடினாலும் அதெல்லாம் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன.

நித்யா ஒருமுறை குருகுலம் வழியாக நடந்துகொண்டிருந்தார், கீழே சமையலறையில் யாரோ டீ போடும் வாசனை. ‘அங்கே டீ போடுகிறவன் முன்னரே தண்ணீரில் சீனியைப் போட்டுவிட்டான். டீ சுவை கெட்டுவிட்டது’ என்றார் நித்யா. சுவையறியும் மூக்கு. அவரது எல்லாப் புலன்களும் உலகச்சுவைக்காகத் திறந்திருந்தன. ஒரு நல்ல அவியல் வைக்கத்தெரியாதவனால் எப்படி அத்வைதத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று கேட்டவர் அவரது குரு.

இது ஓர் அன்றாட விஷயமாக இருக்கலாம். ஆனால் நித்யா தொடர்ந்துசென்றார்.  ‘அப்பா தன் பிள்ளைக்கு பொம்மையைக் கொடுத்து பத்திரமாக விளையாடு என்று சொல்வது போல இந்த உலகம் நமக்களிக்கப்பட்டிருக்கிறது. இதை நம் உச்சம் வரை சென்று அறிவதும் அடைவதும் நம் கடமை. இந்த உலகில் இருந்து மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் அடைவதென்பது மனிதனின் சலுகை அல்ல. மனிதனின் உரிமைகூட அல்ல. அது அவன் கடமை, பொறுப்பு.’

அடிப்படை விஷயங்களை அன்றாடவாழ்க்கையின் எந்தப்புள்ளியில் இருந்தும் தொடங்கலாம் என்று நித்யா சொல்வதுண்டு. எதை நாம் ஆழமாக வினவிக்கொண்டாலும் அது அடிப்படை வினாவாக ஆகும். ஓர் அடிப்படை வினாவை எழுப்பிக்கொள்வது எப்படி? நித்யா அதை எப்படிச்செய்வார்? அவரது அருகிருந்து அதை நான் கவனித்திருக்கிறேன். அதுவே நான் அவரிடம் பெற்ற கல்வி.

நித்யா அந்தச் சொல்லையே முதலில் கவனிப்பார். அதுதான் ஆணிவேர். நாம் சாதாரணமாக ஒன்றைச் சிந்திக்கும்போது அதன் சமகால, அன்றாடப் புழக்கத்தைக்கொண்டே புரிந்துகொள்ள முயல்வோம். அறம் என்ற சொல்லுக்கு இன்று இங்கே என்ன அர்த்தம் என்பதே நம் கேள்வியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாகப்போனால் அதன் வரலாற்றுப்புலம் சார்ந்து யோசிப்போம். வரலாறென்பது நம் கண்ணுக்கெட்டியதூரம் வரைதான். மொழி அதற்கும் அப்பால் செல்கிறது. அடிவேர் வரை செல்கிறது. ஆகவேதான் தத்துவத்தில் மொழியை எப்போதும் சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்கிறார்கள்.

அது ரஸ்ஸலின் வழி. இந்திய ஞானமரபில் நெடுங்காலமாக மீமாம்சகர்கள் அதையே கடைப்பிடித்தனர். அதற்கு வியாகரணம், சந்தஸ் என்னும் இரு முறைகளை வைத்திருந்தனர். இலக்கணம், ஒலியமைதி. ஒரு அறம் என்ற உருவகம் ஒரு ‘பேக்கேஜ்’. அதில் அறம் என்னும் சமூக அமைப்பு, சமூக ஆசாரம், சமூக நம்பிக்கை ஆகியவை உள்ளன. அவை எல்லாம் அச்சொல்லில் அடங்கியிருக்கின்றன. அச்சொல் அவற்றைக் கட்டும் பொட்டலமல்ல. அந்தக் கருதுகோள் ஒரு மரம் என்றால் அதன் விதை அது.

‘இவ்ளோ பெரிய விமானத்துக்கு எப்டிடா பெயிண்டடிப்பாங்க?’ என்று ஒரு பைத்தியம் கேட்டபோது ‘மேலே போறப்ப சின்னதாயிடும்ல. அப்ப அடிச்சிருவாங்க ‘ என இன்னொரு பைத்தியம் பதில் சொன்னதாகச் சொல்வார்கள். எதுவும் கொஞ்சம் மேலே, கொஞ்சம் தூரத்தில் சென்றால் சிறிதாகிவிடுகிறது. எளிமையாகக் கையாளக்கூடியதாக ஆகிவிடுகிறது. காலத்தில் பின்னகரும்போது விடைகள் கைக்கடக்கமாக ஆகிவிடுகின்றன. காலத்தில் பின்னகர சொல் ஒன்றே சுட்டுவழி.

சொல் என்பது சிலை, பொருள் என்பது தெய்வம். அளவிடமுடியாத ஒன்று அளவிடக்கூடியதாக நம்முன் அமர்ந்திருக்கிறது. காளிதாசன் சொன்னார் ‘சொல்லும்பொருளும் போல அமைந்தவர்கள் பார்வதிபரமேஸ்வரர்’ என. பிரிக்கமுடியாதவர்கள். ஒருவருக்கொருவர் ஊக்கவிசையானவர்கள்.

நித்யாவின் வழிமுறைப்படி நானும் அறம் என்ற சொல்லையே எடுத்துக்கொள்கிறேன். எந்தக் காலத்தில் இச்சொல் தமிழில் புழக்கத்தில் வந்தது? மொழியாராய்ச்சியில் அச்சொல்லை நோக்கிக் கேட்கவேண்டிய முதல்வினா அது காரணப்பெயரா இடுகுறிப்பெயரா என்பதே. காரணப்பெயர் என்றால் அது பின்னாளில் இங்கே வந்தது.

உதாரணமாக, புரட்சி. பாரதி உருவாக்கிய சொல்லாட்சி. பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய அரசியல் கிளர்ச்சிகளில் இருந்து பிறந்தது. முழுமையான மாற்றம், ஒட்டுமொத்தமான மாற்றம், தலைகீழான மாற்றம் என்பதைச் சுட்டுகிறது. புரள்வது என்ற சொல்லின் நீட்சியாக வந்தது. நாம் படிப்படியான மாற்றத்தையே அறிந்திருக்கிறோம். புரட்சி நமக்கு ஒரு புதிய செய்தியே.

இடுகுறிச்சொற்கள் அக்கருத்துக்கு இடப்பட்ட ஒலிக்குறிப்புகள் மட்டுமே. ஒரு குழந்தை உடலும் உயிருமாகப் பிறப்பதுபோலக் கருத்து சொல்லும் பொருளுமாகவே மானுட மனதில் உருவாகிறது. அதற்கு சொல்லால் பெயரிடப்படுவதில்லை. அந்தச் சொல்லே அதைக் கொண்டு செல்கிறது, விரியச்செய்கிறது.

இடுகுறிச்சொற்களை ஆராயும்போது சிறந்த வழி என்பது அச்சொல்லின் அருகே உள்ள சொற்களை கவனிப்பது. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி அதற்கு மிகச்சிறந்த சாதனம். அதன் அகரவரிசை நமக்கு ஒரு சொல் கூடவே கொண்டுவரும் பிற சொற்களை சுட்டிக்காட்டி அபாரமான மனவெளிச்சங்களை அளிக்கிறது.

அறம் என்ற சொல்லின் அருகே அமர்ந்த சொல் அறுதல். அதுவே அதன் மொழிமூலமாக இருக்கலாம். அற்றம் என்றால் இறுதி. அற்றுபடி என்றால் திட்டவட்டம். அதாவது அறுத்துச் சொல்லுதல், வரையறைசெய்து சொல்லுதல், கடைசியாகச் சொல்லுதல் என்ற தொனியில் இச்சொல் பிறந்திருக்கலாம்.

அறம்பாடுதல் என்கிறோம். பெரும் துன்பப்பட்ட கவிஞன் அதற்குக் காரணமானவர் அழியும்படியாகப் பாடும் பாடல். நந்திவர்ம பல்லவனை அவன் சகோதரன் அறம்பாடிக் கொன்றான் என்று நம் தொன்ம மரபு சொல்கிறது. அங்கே வரும் அறம் என்பது தர்மம் அல்ல. எதிக்ஸ் அல்ல. அது இறுதிதான். அறப்பாடுதல், அறும்படி பாடுதல். அற்றம் வரும்படி பாடுதலே அங்கே அறமாக சொல்லப்படுகிறது.

அறம் என்பது இதுதான். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம்.

நாம் நம் மொழிமரபில் அறம் என்ற சொல்லின் பிறப்புச்சூழலைப் பார்க்கையில் சங்க காலம் கண்ணுக்கு முன்விரிகிறது. புறநானூற்றுக்காலம் என்பது பெருங்குடி மன்னர்களான மூவேந்தர் சிறுகுடிமன்னர்களான வேளிர்களை, கடல்சேர்ப்பர்களை, குறவமன்னர்களை அழித்தொழித்துப் பேரரசுகளை உருவாக்கும் போர்ச்சூழல் என்பதுதான் வரலாறு. சங்கம் மருவியகாலத்தில் முடியுடை மூவேந்தர் மட்டுமே எஞ்சுகிறார்கள். அந்தப்போர்ச்சூழல் எல்லாவகை வன்முறையையும் அனுமதிக்கிறது.

எரிபரந்தெடுத்தல் என்று சங்க இலக்கியம் பேசும் போரழிவுகள் கொடூரமானவை. எதிரிநாட்டுப்பெண்கள் அறுத்தெறிந்த தாலிகள் சாலைகளில் மலையாகக் குவிகின்றன. புகை நகரை மூட பெண்களின் கண்ணீரில் யானைக்கால் வழுக்குகிறது. எதிரிநாட்டு ஊருணிகளை யானை வைத்து அழிக்கிறார்கள். வீடுகளை எரிக்கிறார்கள். எதிரி மன்னனின் பல்லைக்கொண்டுவந்து சுவரில் பதிக்கிறார்கள்.எல்லாமே அறம்தான்.

இன்றைய நம் அறவுணர்ச்சி கூசுகிறது. ஆனால் அறம் என்பது மெல்லமெல்ல சமூகத்தால் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு கருத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அறம் என்ற கருத்து ஒரு சிறு மக்கள் குழுவில் உருவாகிறது. அது அவர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஒரு குடும்பத்துக்குள் உருவாகும்போது அது குடும்ப அறம். குடும்பம் குலமாக ஆகும்போது அது குல அறம். குலம் நாடாக ஆகும்போது அது அரசியல் அறம். நாடுகள் மானுடமாகும்போது மானுட அறம்.

சங்ககாலத்தில் நாம் காண்பது குல அறங்கள் அரசியலறங்களாகத் திரளும் ஒரு பெருநிகழ்வை. போர்வெறியைக் கொண்டாடக்கூடிய, கொலையை கொள்ளையை அனுமதிக்கக் கூடிய, சங்ககாலத் தமிழ்ச்சமூகம் கொஞ்சம்கூட அனுமதிக்காத ஒன்றுண்டு. நன்னன் என்பவன் செய்த பெண்கொலை. ஒரே ஒரு பெண்ணைக் கொன்ற நன்னன் என்ற குறுநில மன்னனைப் புலவர்கள் மீண்டும் மீண்டும் சாபமிட்டுப் பாடியிருப்பதைக் காணலாம். தன் மக்களாலேயே நன்னன் ஒதுக்கப்பட்டான். ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்றே வரலாற்றில் அறியப்பட்டான்.

அது மானுட அறம். என்னதான் இருந்தாலும் ஒருபோதும் செய்யக்கூடாத விஷயம் அது என தமிழ்ச்சமூகம் நினைத்தது. அவ்வாறு ஒரு சமூகம் நினைப்பவற்றின் அளவு பெருகப்பெருக அச்சமூகம் மானுட அறம்நோக்கி நகர்கிறது. கால-இட-சூழலை மீறிய அறத்தையே நாம் ‘அறம்’ என்கிறோம்.சங்கப்பாடல்களில் பொருண்மொழிக்காஞ்சியில் மானுட அறம் நோக்கிய தேடலை, விவாதத்தைக் காண்கிறோம். ஆனால் சங்கம் மருவிய காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அந்த அறத்தை வந்தடைந்திருப்பதைக் காணலாம் . அரைசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக வரும் அறம் என்பது அதுவே.

அந்த அறம் ஒரு பலிவாங்கும் போர்க்கடவுளாக உருவாகி வந்திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரக் காலகட்டத்தில் பெருமன்னர்கள் உருவாகிவிட்டிருந்தனர். அவர்கள் கட்டற்ற அதிகாரமுள்ளவர்கள். குறுங்குடிமன்னர்கள் குல அறத்தால், ஆசாரமரியாதைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் பெருங்குடிமன்னனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவன் தவறுசெய்தால் தட்டிக்கேட்பது எது? அதுவே அறம். மானுட அறம். கூற்றாக அது வந்து வாசலில் நிற்கும் என்கிறார் இளங்கோ.

அதையே வள்ளுவர் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்றார். அந்த அறம் நோக்கி நம் சமூகம் நகர்ந்ததை நாம் வள்ளுவர் வழியாகப் பார்க்கிறோம். அறன் வலியுறுத்தல் என்று வள்ளுவர் சொல்வது மானுட அறத்தையே. இல்லறம் துறவறம் என்னும் சிறிய அறங்களுக்கு அப்பால் கோபுர உச்சிபோல மானுட அறம் எழுகிறது.

அறத்துக்கு மாற்றாக மறத்தைக் கூறும் ஒரு வழக்கம் நம்மிடம் உள்ளது. ஆனால் சங்ககாலத்தில் மறம் உயர்ந்த விழுமியமாகவே இருந்தது. அது அறத்தின் எதிர்மறைச்சொல் அல்ல. மறுத்தல், மறுத்து நிற்றல் என்பதே மறம். அது வன்முறை என்றும் ஆகவே அறத்துக்கு எதிரானது என்றும் கண்டவர் வள்ளுவர். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை என அந்த எதிரீட்டை அவர்தான் உருவாக்கினார். அது அவரது சமண அறம்.

அந்தத் தேடலின் உச்சியில் கம்பராமாயணம் நிகழ்ந்தது. அறத்தின் மூர்த்தியான் என கம்பன் ராமனைச் சொல்கிறான். ராமனின் குணம் அல்ல அறம். ராமன் அறத்தின் உடல்வடிவம். அறம் ராமனைவிட மேலானது. தருமம் பின் இரங்கி ஏக என்று சொல்லும்போது கம்பன் அதை ஒரு தனி இருப்பாக, தனி ஆளுமையாக உருவகிக்கிறான். அதுவே நம் மரபின் உச்சகட்ட அறத்தரிசனம்.

நாம் நினைப்பதுபோல நம் மன்னர்கள் முற்றதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அவர்களைக் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் சான்றோர் அவைகள் இருந்தன. சிற்றரசர்சபைகள் இருந்தன. தமிழகத்தின் மாபெரும் முடிமன்னனாகிய ராஜராஜனே சிற்றரசர் சபைக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நீங்கள் பொன்னியின் செல்வனிலேயே வாசிக்கலாம். கொடும்பாளூர் வேளார்கள், பழுவேட்டரையர்கள் என அந்த சபையில் பல சிற்றரசர்கள் இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து மன்னனைத் தலைவனாக அங்கீகரிக்கவேண்டும்.அவ்வாறு அங்கீகாரம் பெற்றவனே மன்னன்.ஆகவேதான் அவனுக்குக் குலசேகரன் — குலங்களைத் தொகுத்தவன்– என்ற அடைமொழி உள்ளது. குல அறத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பழைய மன்னன் மானுட அறத்தால் ஆளப்படுபவனாக ஆவதையே நாம் இலக்கியங்களில் காண்கிறோம்.

என் அண்ணா பொதுவாகக் குடும்பத்திற்குள் உதவிகள் செய்யக்கூடியவனாக இருந்தார். என் அம்மாவுக்குத் தோழியாக இருந்த ஒரு பெண்மணிக்கு அவர் உதவிகள் செய்வதுண்டு. படுகிழவி. ஒருமுறை அண்ணா சென்றபோது அவள் பழைய சாக்கைப் போர்த்திக்கொண்டு இருப்பதைக் கண்டார். உடனே ஒரு கம்பிளியை வாங்கிக்கொடுத்தார். அடுத்தமுறை போனபோது கிழவி அதே சாக்கைப் போர்த்திக்கொண்டிருந்தாள். ‘என் மூத்தமகனின் பிள்ளை தரையிலே கிடக்கிறது. அதற்குக் கொடுத்துவிட்டேன்’ என்றாளாம்.

அண்ணா இன்னொரு கம்பிளி வாங்கிக்கொடுத்தார். ஆனால் மறுமுறை செல்லும்போது அதுவும் இல்லை. ‘மகளுக்குக் கம்பிளி இல்லை. அவளுக்குக் கொடுத்தேன்’ மூன்றாம் முறையும் கம்பிளி வாங்கிக்கொடுத்தார். அதுவும் ஒரே வாரத்தில் ஒரு பேரனுக்குக் கொடுக்கப்பட்டது. அண்ணா சொன்னார் ‘ஆயிரம் முறை வாங்கிக்கொடுத்தாலும் இப்படித்தான் நடக்கும்…பிறந்தநாள் முதல் தனக்கென எதையும் தேடாத வாழ்க்கை…குழந்தையாக இருக்கும்போதே குழந்தை வளர்க்க ஆரம்பித்திருப்பாள்…அந்த நாள் முதல் அன்னைதான். கொடுத்துத்தான் பழக்கம்.’

அது குல அறம். தன் குலத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை. அதற்குமேல் ஓர் அறம் உண்டு. அதுவே மானுட அறம். என் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள டீக்கடையில் அய்யப்பண்ணன் என்பவர் டீ குடிக்க வருவார். நூறுவயது தாண்டியவர். விவசாயி. அய்யப்பண்ணனுக்கு பொய்கையாறு அணை இன்று இருக்கும் இடத்தில் வயல் இருந்தது. அங்கே செல்ல புலியூர்க்குறிச்சியில் பஸ் இறங்கி எட்டுமைல் நடக்கவேண்டும்.

அய்யப்பண்ணன் ஓட்டலில் நுழைந்து காலையுணவு சாப்பிடப்போகும்போது பஸ் வந்துவிட்டது. அடுத்த பஸ் மதியம்தான். ஆகவே பாய்ந்து ஏறிவிட்டார். கையில் தூக்குப்போணியில் பழையது இருக்கும் தைரியம். மதியம் வரை வெயிலில் வேலைசெய்துவிட்டு பசிவெறியுடன் சாப்பிட வரும்போது பார்த்தால் ஒரு நாடோடி அவரது போணிச்சோற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அருகே நின்ற கம்பைப் பிடுங்கிக்கொண்டு அய்யப்பண்ணன் ஓடி வந்தார்.

நாடோடிக்கும் பயங்கரமான பசி போல. அவன் போணியை வழித்து நக்கிக்கொண்டிருந்தான். பசியாறிய முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தான். ‘எப்டி நான் அவன அடிப்பேன்…பசியாறின மொகத்தில உள்ளது மகாலச்சுமியில்லா?’ என்றார் அய்யப்பண்ணன் என்னிடம். அய்யப்பண்ணனின் அந்த மனவிரிவே மானுட அறம்.

நண்பர்களே, மானுட வரலாறென்பது அறத்தின் பரிணாம வளர்ச்சிதான்.

பரிமேலழகர் உரை
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.
(அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம். இஃது அவ்வரசன் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

சாலமன் பாப்பையா உரை
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

English Meaning - As I taught a kid - Rajesh
If the citizens of a country/state are suffering (intolerable grief) then there must be a reason for it. The king/leader and his government is not ruling/administering the country as per the textbooks. They are not working or taking care of the people's problem. Hence, people suffer and shed tears. Such tears (intolerable grief or people's problem) will turn out to be an enemy/weapons for the king/leader/government and it would be ruin/erode the ruler (and his government) and its treasures/wealth. But it is not just w.r.t king or govt. It is also w.r.t the people. If overall society is not righteous i.e. it is not compassionate and it doesn't take care of fellow human beings, then society will not let fellow humans suffer in hunger, poverty, sickness etc. Over time, this will lead to increase in crime and law-and-order issues. This will slowly erode the country's wealth.  

We can see that in many epics such as Silapathikaaram, Mahabharata where all the war has happened or kings lost their lives when they let people or individuals shed tears by (kings) committing injustice or ignore their work. For e.g. Pandya King lost life when he gave injustice to Kovalan by not investigating the case properly and let Kannagi shed tear. Mahabharata happened and lots of war happened in which we say Duryodana was not keen on developing or administering the country rather he was keen on war. Also Bheeshma died because he let Amba shed tears by abducting her from another marriage while not settling her life

Questions that I ask to the kid
Which tears turnout as weapon for whom? (Follow up, does this apply to just individuals, kings, government etc.)
Which would ruin a country's wealth?

நாடொறும் நாடி முறைசெய்யா

குறள் 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நாள்தொறும் - ஒவ்வொரு நாளும்

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்யா  -  இயற்றாமல் இருத்தல்

மன்னவன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

நாள்தொறும்  - ஒவ்வொரு நாளும்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

கெடும் - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

முழுப்பொருள்
ஒரு அரசருக்கு அன்றாட கடமையாதெனில் ஒவ்வொரு நாளும் மக்களை நாடி மக்களுக்காக  தீவிர ஆராய்ந்து நூல்கள் கூறியுள்ளதுபோல் அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து மக்களின் இன்னலைகளை போக்குவது ஆகும். இதில் தனி நபர் தேவைகள் மட்டும் இன்றி நாட்டின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது விவசாயம், பாசனம், நீர்மேலாண்மை, உள்பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, வெளியுறவு, தொழில், வணிகம்,  வனம்/காடு, இயற்கை மேலாண்மை என்று எல்லா துறைகளிலும் அதன் தேவைகளை நாடி பூர்த்தி செய்யவேண்டும்.

அவ்வாறு ஒரு அரசன் செய்யவில்லை என்றால் அந்த நாட்டிற்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அழிவு உண்டாகும்.

இங்கே திருவள்ளுவர் நாள்தோறும் என்று இரண்டு தடவை கூறுவதற்கு காரணம் என்னவெனில் கடமைகளை தினம் தினம் ஆற்ற வேண்டும். ஒரு ஆறு மாதம் செய்து விட்டு மீதிநாட்களில் சும்மாக இருந்தால் பயன் ஒன்றும் இல்லை. ஒரு நாள் விடுபட்டாலும் அதனுடைய இன்னல்களை  சந்தித்தாக வேண்டும். அது மட்டும் இன்றி நாட்டின் பிரச்சனைகள் ஒரு நாளில் தீர்வதும் அல்ல அவற்றை களைவதற்கு சிறிது சிறிதாக செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு முடித்தாலும் அது மறுபடியும் வராமலிருக்க நாள்தோறும்  உழைக்க வேண்டும். ஒரு பழைய பிரச்னை முடிந்தால் ஒரு புதிய பிரச்னை இருக்கும். ஆதலால் வேலை என்பது எந்நாளும் இருக்கும்.

இக்குறள் அரசனுக்கு மட்டும் பொருந்தாது, இது ஒவ்வொரு குடும்ப தலைவனுக்கும் நிர்வாக தலைவனுக்கும் பொருந்தும்.  அரசன் என்ற சொல்லுக்கு கணவன் என்ற பொருளும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை அறிவோம் நாம்.  ஒரு தன்னுடைய அறத்தை கடமையை தர்மத்தை ஆற்றவில்லை தேவையான பொருளை  ஈட்டவில்லை என்றால் அவனால் இன்பத்தை ருசிக்க முடியாது. கேடு விளைந்து அழிவு உண்டாகும்.

நான்கு வேடங்கள் - என்ற ஜெயமோகன் கட்டுரையை வாசித்தால் அறம், பொருள், இன்பம், வீடு பற்றி இன்னும் ஆழமாக அறியலாம்.

முதுமொழிக்காஞ்சி 9:1, “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் முறையில் அரசன் நாடுதல் கூர்ந்தன்று” என்று இக்குறளை ஒட்டிச் சொல்கிறது.

திருமூலரின் திருமந்திரப்பாடல் 239, ஒன்றும் இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி 
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல் 
நாடோறும் நாடுகெடும் மூடம் நண்ணுமால் 
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே”

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் தேவர்கள் போற்றுந் திருவேடத்தாரையுங் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே” என்றும், செங்கோல்முறை தவறும் மன்னர்க்கு நரகமே என்றும், அவரே கூறுவார்!

“பழிபடர் மன்னவன் பரித்த நாட்டினூஉங்
கழிவதென் காரணம் அறிஞ கூறென்றான்” (கம்ப.தாடகை 20)

மேலும்: அஷோக் உரை
நாள்தொறும் நாடிழத்தலாவது,
"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்திய லிழந்த வியனிலம்

நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்து வதால்" . (சிலப். 11:60 - 45) வரவர வளங்குன்றுதலும் , குடிகளின் அரசப்பற்றுக் குறைதலும், பகைவரால் அல்லது அருள்பூண்ட செங்கோலரசராற் சிறிது சிறிதாக நிலங்கைப்பற்றப் பெறுதலுமாம் . நாடு அரசிற்கு உறுப்பாகலின், சினைவினை முதல்மேல் நின்றது.

பரிமேலழகர் உரை
நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும்.
(அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும். இது நாடு கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

சாலமன் பாப்பையா உரை
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

English Meaning - As I taught a kid - Rajesh
Everyday a King has to perform his duties in order to develop the country, improve the quality of life of the people, protect the country and prepare of the future. He should have appropriate teams in place to gather data , get plans done by experts, make decisions, approve plans, oversee the execution of plans and results of the plans etc. The King who fails to do perform his daily job will see his country ruining everyday. This applies to the head of a family, leader or CEO of a company etc

Questions that I ask to the kid
A country is ruining daily. Why?

ஆபயன் குன்றும் அறுதொழிலோர்

குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
இரண்டாம்உயிரெழுத்து; குரலிசையின்எழுத்து; பெற்றம் மரை எருமைஇம்மூன்றன்பெண்பாற்பெயர்; இடபம் ஆன்மா காண்க:ஆச்சா; விதம் ஆகுகை; ஆவது ஓர்இரக்கக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; இகழ்ச்சிக்குறிப்பு; புழுக்கக்குறிப்பு; நினைவுக்குறிப்பு; ஈற்றில்வரும்வினாவிடைச்சொல்; எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை; பலவின்பால்எதிர்மறைவினைமுற்றுவிகுதி; உடன்பாட்டுஇறந்தகாலவினையெச்சவிகுதி; தொடங்கிஅல்லதுவரையும்எனப்பொருள்தரும்ஒருவடமொழிஇடைச்சொல்.

பயன் பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

குன்றும் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

அறுதொழிலோர் aṟu-toḻilōr   n. ஆறு³+. Brāhmans; பிராமணர்.

நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை;
நூல் - ஒருவர் நூல்களால் பெற்ற அறிவு

மற-த்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).
மறப்பர்

காவலன் - பாதுகாப்போன்; அரசன்; மெய்காப்பாளன்; கணவன்; கடவுள்

கா - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஆ); சோலை; கற்பகமரம்; பாதுகாப்பு; காவடித்தண்டு; துலாக்கோல்; ஒருநிறையளவு; தோட்சுமை; பூமுதலியனஇடும்பெட்டி; அசைச்சொல்; கலைமகள்

காவான் - பாதுகாக்கவில்லை / கடமையை செய்யவில்லை

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
ஒரு அரசன் தனது கடமைகளை செய்யவில்லை என்றால், அதாவது மக்களையும், நாட்டின் செல்வத்தையும், செல்வம் எனப்படும் அறிவுச்செல்வத்தையும் பொருட்செல்வத்தையும், காக்கவில்லை என்றால் அந்த நாட்டில் எல்லா செல்வங்களும் குறையும், அறத்தொழில் செய்யும் பிராமணர்கள் தாங்கள் கற்ற நூலில் இருந்து பெற்ற அறிவினை மறந்துப்போவார்கள்.

பயன் என்ற சொல்லுக்கு பால் என்ற பொருளை பல உரைகள் கூறுகின்றன. பால் வளம் என்பது எல்லா தேசங்களிலும் பிரதானமான ஒன்று என்று சொல்ல முடியாது. ஆதலால் பயன் என்ற சொல்லுக்கு செல்வம் என்பதே பொருந்தும். செல்வம் என்றால் விவசாயம், விலங்குகள், மக்கள் என்று அனைத்துச்செல்வங்களும் அடங்கும். அரசன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் இச்செல்வங்கள் குறையும்.

அறுதொழிலோர் என்று இங்கு பிராமணர்களை கூறப்படுகிறது. ஆனால பிறப்பால் பிராமணர்கள் என்று கூறப்படவில்லை. மனுஸ்ம்ருதிகள் பிராமணர்களுக்கு வகுக்கபட்ட ஆறு தொழில்களை செய்யும் பிராமணர்களை குறிக்கிறது.  ஞானம் மூலமும் ஆசாரங்கள் மூலமும் உருவாகும் முதன்மை இங்கு குறிக்கிறது. ஆதலால் அரசன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் வேறு எந்த தொழிலையும் செய்யாமல் கல்வி கற்பதையும் வேள்வி செய்வதையும் மட்டும் கொண்ட பிராமணர்களை அரசால் சரிவர பாதுக்காக்க முடியாது. அப்படி பிராமணர்களை பாதுகாக்கவில்லை என்றால் அவர்கள் தலைமுறை தலைமுறையாக காத்து வரும் அறிவினை ஞானத்தினை மறந்துப்போவார்கள். ஞானம் ஒரு நாட்டின் மிக பெரிய சொத்து. அதனை ஒரு நாடு இழக்கும் என்றால் அதனை திரும்ப பெற பல நூற்றாண்டுகள் கூட ஆகும். அது ஆபத்தானது. அழிவானது.

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பது அரசனின் தலையாய கடமை. அதனை செய்யவில்லை என்றால் அது கொடுங்கோல் ஆட்சியாகும். அனைத்து செல்வங்களும் குன்றும்.

மேலும்: அஷோக் உரை

அதேபோல பிராமணர்களைப்பற்றி அல்லது பிராமணத்தன்மை பற்றி குறள் சொல்வதென்ன என்றும் பார்க்கலாம். அந்தணர் என்று குறள் சொல்வது பிராமணர்களை அல்ல என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. அறவழி நின்றவர் என்ற பொருளில் அது பயின்றுவருவதனாலும் குறளின் பொதுவான கருத்துநிலையாலும் அது அறிவர் என்றும் அறவோர் என்றும் சமணர்களால் சொல்லப்படும் துறவிகளையே குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். குறட்பாக்கள் அதற்குத்தான் பொருந்தி வருகின்றன.

ஆனால் குறள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் [ குறள் 560]

என்று சொல்லும் இடத்தில் அது பிராமணர்களையே குறிக்கிறது. இங்கே புராதன ஸ்மிருதிகள் வகுத்த ஆறு தொழில்களையே குறிக்கிறது என்பது தெளிவு. வேதங்களின் விளக்கநூலான சதபத பிராமணத்தில்தான் பிராமணர்களின் ஆறு தொழில்கள் சுட்டப்படிருக்கின்றன. பின்னர் யாக்ஞவல்கிய ஸ்மிருதி பத்துவகையான ஆசாரங்களை அவர்களுக்கு பட்டியலிடுகிறது.  பின்னர் வந்த ஸ்மிருதிகளில் பதினாறு ஆசாரங்களாக அவை மேலும் விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்துமே கல்வியையும் வேள்வியையும் மட்டுமே செய்து அதற்குரிய வாழ்க்கைநெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டியவர்களாக பிராமணர்களை வகுத்துரைப்பவை.

குறள் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்ற சொல்லாட்சியின் வழியாக பிராமணர்களின் இந்த செயல்சார்ந்த அடையாளத்தையே முன்னிறுத்துகிறது என்று சொல்லலாம். பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கு வரக்கூடிய மேலிடத்தையோ உரிமைகளயோ அது பொருட்படுத்தவில்லை. ஞானம் மூலமும் ஆசாரங்கள் மூலமும் உருவாகும் முதன்மையையே அது கணக்கில் கொள்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறளில் உள்ள செய்தொழில் என்ற சொல்லுடன் இங்குள்ள அறுதொழில் என்ற வரியை இணைத்துக்கொள்ளலாம்.

ஆக, முழுமையாக மனு முதலிய ஸ்மிருதிகளில் இருந்து வேறுபட்டுச் செல்கிறது குறள்.

பரிமேலழகர் உரை
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

சாலமன் பாப்பையா உரை
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே

குறள் 551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு 
அல்லவை செய்தொழுகும் வேந்து.
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
கொலை - kolai   n. கொல்-. [K. Tu. kole, M.kolli.] 1. Killing, slaying, murder, assassination; உயிர்வதை. கொலையே களவே (மணி. 24, 125).2. Vexation, teasing, tormenting; இமிசை படுகொலை புரிவ . . . குவளைக்கண்ணே (நைடத. நாட்டுப். 24).
கொலைக்கடம்பூட்டு-தல் kolai-k-kaṭam-pūṭṭu-, v. tr. கொலை + கடம் + பூட்டு-. Tocarry out capital sentence; கொலைத்தண்டனை நிறைவேற்றுதல் குற்றங் காட்டிக் கொலைக்கடம்பூட்டுதும்(பெருங். மகத. 25, 103).
மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.
மேற்கொண்டாரின்  - அச்செயலை செய்தோர்
கொடிதே - பொல்லாத, தீதே, கொடுமையானது
அலை - நீர்த்திரை; கடல் திரையடித்தொதுக்கியகருமணல்; நிலம் மது கண்டனம் வருத்துகை; மிகுதி கொலை
மேற்கொண்டு
அலைமகள், s. Lukshmi, இலக்குமி.

அல்லவை  - தீயவை; பயனின்மை.
செய்து - செய்வதனால்
ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.
வேந்து - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

முழுப்பொருள்
அலைமகள் என்றால் லஷ்மி. அதாவது செல்வத்திருமகள். ஆதலால் அலை என்றால் செல்வம் என்று இங்கே பொருள். மக்களுடைய செல்வத்தை அபகரிப்பது மிகுந்த தீய செயலாகும். இங்கே மக்கள் செல்வம் என்பது பொன், பொருள், இயற்கை வளம், உயிர் என்று எல்லாம் அடங்கும். இத்தகைய செல்வங்களை மக்களிடம் இருந்து அபகரித்து தனக்கென (தன் குடும்பத்தாருக்கும்) வைத்துக்கொண்டு அரசை நடத்தும் வேந்தனின் ஆட்சி மிக மிக கொடூரமானது. அத்தகைய வேந்தர் பல கொலைகளை மேற்கொள்ளும் கொலைகாரர்களை விட கொடுரமானவர்.

உதாரணமாக:
எனக்கு இக்குறளை பார்த்தால் முதலில் தோன்றுவது கருணாநிதி தான். அவரை போல மக்கள் செல்வத்தை வாரி அனைத்துக்கொண்ட முதலமைச்சர் தமிழகத்தில் வரவே கூடாது. அதற்கு அடுத்ததாக சோனியா காந்தி. இன்னும் பலர்

Image result for karunanidhi money

Image result for sonia gandhi

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன், அலைமேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும்வேந்து - பொருள்வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன். 
(அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும்துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால்மயக்கு உறழ்ச்சி .'வேந்து' என்பது உயர்திணைப்பொருட்கண் வந்த அஃறிணைச் சொல். 'அலை கொலையினும் கொடிது'என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன்.

மு.வரதராசனார் உரை
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

சாலமன் பாப்பையா உரை
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும்

குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு
[பொருட்பால்,  அரசியல், கொடுங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கூழும் - பொருள்; பொன்  (குடிமக்களின் ஈட்டுதலால் பெருகும், அருகும்)
குடியும் -  ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
ஒருங்கு -  ஒரு சேர (ஒன்றாக / ஒருங்கே / ஒருகாலத்திலே ) 
இழக்கும் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்.
கோல் - செங்கோல், அரசாட்சி
கோடி - நூறுநூறாயிரம், தேவைக்குஅதிகமானதண்ணீர், புதுமை,
11 v. tr. cf. krōḍīkāra.1. To adorn, decorate; அலங்கரித்தல். கோடித்தன்ன கோடுசால் வையம் (பெருங். இலாவாண.8, 185). 2. To make, form, build; அமைத்தல்.கடிமண்டபமுன் கோடிப்ப (காஞ்சிப்பு. திருமண. 4).3. To imagine, picture in mind; மனோரதஞ்செய்தல். கண்ணாலங் கோடித்து (திவ். நாய்ச். 10, 9).4. To beseech, supplicate; பிரார்த்தித்தல். (யாழ்.அக.)

சூழாது - ஆலோசனை; ஆராய்ச்சி
செய்யும் - செய்கின்ற
அரசு - அரசாட்சி, அரசன்

முழுப்பொருள்
ஒரு அரசன் தன் நாட்டிற்கும் தன் நாட்டு மக்களுக்கும் நல்லாட்சி அளிப்பது தன்னுடைய கடமை. அதற்கு நிகழ்காலம் மட்டும் அல்லாது வரும் காலங்களையும் வரும் சந்ததியனரையும் நினைத்து செயல் புரிய வேண்டும். உதாரணமாக நாட்டின் அரணை (கோட்டை மட்டும் அல்ல "குறள் 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்"). பாதுகாக்க  வேண்டும்"), நிதி நிலைமையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும், சுகாதாரத்தை காப்பாற்ற வேண்டும், பாதுக்காப்பான ஆட்சி கொடுக்க வேண்டும், எதிரியினரிடம் இருந்து காக்கும் அளவிற்கு அச்சுருத்தும் நெஞ்சுரம் கொண்ட படைகளை உருவாக்க வேண்டும்.

ஆனால் இவையாவும் நடக்க வேண்டும் என்றால் மன்னன் ஆலோசனை செய்து வியூகம் அமைக்க வேண்டும். அப்படி இல்லையேல் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் (நிதி சறுக்கும், சுகாதாரம் கெடும், பாதுகாப்பு குறையும்). மக்கள் அவதிக்கு உள்ளாகி ஆட்சியை வெறுப்பார். பலநாள் கசப்புக்குள்ளான மக்கள் வேறு நாட்டிற்கு குடிப்பெயர்ந்து விடுவார்கள். ஆதலால் நாட்டை கட்டி அமைக்கும் அறிவுச் செல்வமும் இழக்க நேரிடும். ஆதலால் பொருளாதாரம் மட்டும் அல்லாது மக்கள் செல்வத்திலும் அதனால் அறிவு செல்வத்திலும் இழப்புகளை ஒரே நேரத்தில் சந்திக்கும் நாடு.

இந்த மக்கள் நாட்டின் நிலைமை வளர்ச்சிப்பாதையில் பீடு/ கம்பீர நடை போடும் வரை மறுப்படியும் வர மாட்டார்கள். ஆதலால் நல் ஆட்சி கொடுப்பதை மன்னன் சிந்தித்துக்கொண்டு இருக்க வேண்டும்.

உதாரணமாக: இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அமேரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லு வதற்கு சொந்த நாட்டில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தராதது ஒரு முக்கிய காரணமே. ஆதலால் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இந்தியா செய்யவில்லை ஆனால் 2000ஆம் ஆண்டுகளில் அமேரிக்கா செல்லும் மோகம் குறைவதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் வாய்ப்புகள் உறுவாக்க பட்டமையே காரணம்.

மேலும்: அஷோக் உரை
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை செங்கோன்மை தவறிய அரசினால் வரும் தொடர் விளவுகளை இவ்வாறு கூறுகிறது.

“கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாறிவறம் கூரும்
மாரிவறம் கூரின் மன்னுயிர் இல்லை” (மணி.7:8-10)

“கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி
நீள்நில மாரி இன்றி விளைவஃகிப் பசியும் நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பின் கற்பழிந் தறங்கள் மாறி
ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடின் என்றான்” (சீவக.255)

இதை வேடிக்கையாகச் சொல்லுமிடத்து, கம்பன் குலோத்துங்கனிடம் கோபித்து சேரநாட்டுக்குச் சென்றதாகக் கூறுவார்கள். கம்பன் கோபித்துச் சொன்ன பாடல்:

“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்– என்னை
விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு”

ஒரு நாட்டின் அறிவுச்செல்வம் குறைவது, அழிவதும், அந்நாட்டின் அரசு சரியில்லை என்பதையே காட்டுகிறது, “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற சொற்படி, வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டினாலும், தாய்நாட்டிலிருப்பதையே மக்கள் விரும்புவர். அதற்கு மாறாக, நாட்டைவிட்டு அகலுவார்களேயானால், அந்நாடு அறிவு வளத்தையும், அறவளத்தையும், மற்றும் பொருள் வளத்தையும் மெல்ல இழக்கும். இதை பாரதியின் கோபம் வேறுவிதமாகச் சொல்லியது, “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று.

பரிமேலழகர் உரை
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)

மணக்குடவர் உரை
பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்.

இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோலாட்சி செய்யும் அரசன் ; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்.

வறட்சிக்காலத்து மக்கள் வானை ஆவலாக எதிர்நோக்குவது போல், கொடுங்கோலரசன் குடிகளும் செங்கோலரசனொருவன் வரவை எதிர்பார்ப்பராதலின், அத்தகைய அரசன் அக்கொடுங்கோலனை எளிதில் வென்று அவன் நாட்டைக் கைப்பற்றுவன் என்பதாம் . கூழ் என்றது தன் முன்னோருந்தானும் தேடிய பொருளை. குடியை இழப்பதனால் , அவரிடத்தினின்று இனிப் பெறக்கூடிய பொருளைமட்டு மன்றி அவரையாளும் ஆட்சியையே இழந்துவிடு பவனாவன்.

மு.வ உரை
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

சாலமன் பாப்பையா உரை
மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
The king who lets his sceptre tilt towards tyranny/repression/despotism/udemocratic rule/reign of terror
will lose (not just) all his wealth, (but also) people and state.

It is the responsibility of the king to give good governance to his citizens. For that the king should not just consider the present but also consider the future generations. He has to take care of the security w.r.t borders, forts. He has to improve the economy by developing schemes. He has improve the healthcare. He has to have the military defense that can attack any opponent. 

For all these, a king should consult with ministers, qualified and reputed scholars/advisors and make decisions. Or else, lots of confusion and chaos will happen. Economy will slow down and deteriorate over period of time, people will suffer. As people suffer they start hating the country and migrate to foreign countries that attract with better opportunities. Because of this the country loses its wealth, loses people which is loss of brain (brain drain. i.e. loss of capacity for a country to develop industries, technologies etc.), loss of tax revenues etc. 

For e.g. A country like India faced lots of brain drain since 1950s to even 2020s because despite good number of reputed educational institutions such as IITs and AIIMS, the policy makers failed to create opportunities that will give allow the educated engineers and doctors to express and develop their skills as well as benefit the financially. 
A country like Pakistan faced lots of financial trouble in 2020s because they focused more on wars with neighboring country India and they didn't focus on developing the country, resolving the problems faced by their people and uplifting the people. This led to increase inflation and people suffer a lot.
A country like Sri Lanka also faced lots of financial trouble in 2020s because they focused more on wars. They got more loans then they could repay. This led to inflation and the country almost went into bankruptcy.

Questions that I ask to the kid
If a king doesn't rule well, what all will he loose? Why? (follow up: a person migrates to another country. In what all ways it is a loss to the country)