Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_059. Show all posts
Showing posts with label Athikaaram_059. Show all posts

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

 

குறள் 590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

அறிய - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
அற்க - வேண்டாம்
ஒற்றின்கண் - ஒற்றரிடத்தில்

செய்யற்க -  எதுவும் செய்யாமல் 

செய்யின் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

புறப்படுத்தான் - புறப்படுத்துதல் - வெளிப்படுத்துதல்.

ஆகும் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.

முழுப்பொருள்
ஒரு ஒற்றர் சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு தகுந்த பரிசாக, பெருமைப் படுத்ததலாக, மதிப்பாக, பாராட்டாக ஏதாவது செய்வதாக இருந்தால் அதனை பிறர் அறிய செய்யக்கூடாது. மீறி பிறர் அறிய செய்தால் அவர் ஒற்றர் என்றோ அல்லது அவர் மறைவாக ஒற்றர் தொழில் புரிந்தார் என்றோ வெளியுலகிற்கு வெளிப்பட்டுவிடும். அது பல பிரச்சனைகளை உருவாக்கும். பிறர் அறிய சிறப்பு செய்வது ”எங்கள் அப்பன் குதிர்க்குள் இல்லை” என்பதுப்போல் ஆகிவிடும். ஆதலால் சிறப்பையும் மறைவாக செய்க. அப்படி ஒரு சிறப்பு செய்தாலும் அது வெளியுலகம் அறியக்கூடாது. ஒற்றர் மட்டும் அறிந்தால் போதும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம்.
(மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க: பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம். இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது

மு.வரதராசனார் உரை
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்


குறள் 589
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணராமை - அறியாமல்

ஆள்க - ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.  

உடன் - ஒக்க, ஒருசேர, அப்பொழுதே; மூன்றாம்வேற்றுமையின்சொல்லுருபு.

மூவர் - பிரமன், திருமால், சிவன்ஆகியமும்மூர்த்திகள்; அப்பர்; சுந்தரர், திருஞானசம்பந்தர்ஆகியமூன்றுநாயன்மார்கள்; காண்க:மூவேந்தர்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

தொக்க - tokka   adj. part. joined; united; see under தொகு. (தொக்கு+அ), rel. parti. Joined, united, சேர்ந்த; [ex தொகு, v. n.] (p.)

ஒக்க - ஒருமிக்க, கூட, ஒருசேர, சமமாயிருக்க, நிகர்க்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க.

தேற - tēṟa   adv. தேறு-. Thoroughly;கடைபோக. தேற விசாரிக்கவேணும்.  
தேற்று - tēṟṟu   III. v. t. console, comfort, ஆற்று; 2. strengthen, invigorate, nourish, பலப்படுத்து; 3. clarify, refine, சுத்தி கரி; 4. clear up, decide, தீர் VI; 5. (for. தேறு) know, know certainly, அறி.

தேற்றுதல் - தெளிவித்தல்; தெளிந்தறிதல்; சூளுறுதல்; ஆற்றுதல்; தேறுதல்கூறுதல்; தூய்மைசெய்தல்; குணமாக்குதல்; பலமுண்டாக்குதல்; ஊக்கப்படுத்துதல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
ஒற்றாடல் என்பது ஒரு நாடும் அதன் அரசும் செய்யவேண்டிய முக்கியமான ஒரு செயலாகும். அப்பொழுது தான் பகைவரிடத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். சில சமயங்களில் நட்பு நாடுகளும் பகைவராக மாறக்கூடும். நட்புப்போல் தோன்றும் பகைவரும் உண்டு. ஆதலால் உளவறிதல் மிக அவசியம். உளவறிய ஒற்றர்களும் தேவை. அதற்கு ஒரு மிக பெரிய ஒற்றர் வலையினை பின்ன வேண்டியுள்ளது. ஒரு நாட்டிற்கு அல்லது ஒரு நாட்டில் உள்ள முக்கிய நிர்வாக அமைப்புகளில் ஒற்றர்களை வைப்பது அவசியம். 

ஆனால் ஒரு நாட்டிற்கோ அல்லது ஒரு நிர்வாக அமைப்பிற்கோ ஒரே ஒரு ஒற்றரை நியமிப்பது சற்று ஆபத்தாகும். ஏனெனில் ஒற்றரும் மனிதரே. அவர் பிழை செய்ய நேரிடும் அல்லது பகைவரிடம் விலைக்குப்போய் தவறான செய்தி சொல்லக்கூடும் அல்லது  பகைவரிடம் அகப்பட்டு தவறான செய்தி அனுப்பக்கூடும். ஆதலால் குறைந்தது மூன்று ஒற்றர்களை நியமித்து அவர்கள் கூறும் செய்திகளை சரிபார்த்துக்கொள்ளலாம். முரண் இல்லையேல் அது நம்பத்தகுந்த செய்தி என்று நம்பலாம். ஆனால் இம்மூன்று ஒற்றர்களும் ஒருவரை ஒருவர் அறிந்தால் அவர்கள் கூட்டுக்களவானிகளாக மாறி கூட்டுச் சதி செய்யக்கூடும். ஆதலால் ஒற்றர்கள் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் உணரா வண்ணம் அவர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது, ஒற்றர் தம் தொழிலிலும் முனைப்புடன் இருப்பர். அப்படி நியமித்தப் பின்பு அவர்கள் கூறும் செய்திகளை சேகரித்து சரிபார்த்து நம்புக. 

பெருங்கதையும், சீவக சிந்தாமணியும் ஒற்றர்களை ஆள்வது பற்றி விரிவாகவே பேசுகின்றன. இக்குறளின் கருத்தை ஒட்டி அவற்றிலுள்ள பாடல் வரிகள்: 

“அறிந்தஒற் றாளர் செறிந்தனர் உரைப்ப
ஒற்று மாக்களை ஒற்றரின் ஆயா
முன்தனக் குரைத்த மூவர் வாயவும்
ஒத்தது நோக்கி மெய்த்தகத் தேறி” ( பெருங்கதை: 3.25: 47-50)

“ஒன்றிமுன் விடுத்தவர் மூவரொற் றாட்கள்வந்
தின்றி தாற் பட்டதென்றியம்புகின் றார்களே” (சீவக 1829)


“.......ஒற்றாளர்சொல்
கோத்தெனக் கொடுத்தனன் கொழுநிதி’ (சீவக.1845)

குறிப்பாக இரண்டு பாடலுமே மூன்று ஒற்றர்கள் கண்டு சொல்லியதை ஒப்பு நோக்குதலைக் கூறுவதைக் காணாலாம். மேலும் குமர குருபர சுவாமிகளின் பிரபந்தத் திரட்டிலே வருமொரு பாடல் வரியாம் “வேய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல விரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி” (ஒற்றர் மூலம் அறியப்பட்டுப் பொருளால் ஒத்த உண்மைச் சொற்களைப் போல) என்பது எண்ணைக் குறிப்பிடாது ஒத்த கருத்தைக் கூறுவதைக் காணலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.
('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக்கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப் படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.).

மணக்குடவர் உரை
ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால். இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.

மு.வரதராசனார் உரை
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்


குறள் 588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.

ஒற்றித் - ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.

தந்த - கொடுத்த

பொருளையும் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

மற்றும் - மேலும்; மீண்டும்

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.
ஓர் - (வி)ஆராய்; தெளி.

ஒற்றினால் - ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.

ஒற்றி ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
ஒரு ஒற்றர் ஒரு நாட்டிற்கு அரசருக்குச் சேகரித்துக் கொடுத்த செய்தியின் உண்மையினை வேறு ஒரு ஒற்றர் கொடுக்கும் செய்தியை வைத்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

ஏன் வேறு ஒரு ஒற்றர் மூலம் சரிப்பார்த்துக்கொள்ள வேண்டும்?
பொதுவாக ஒற்றர் கூறும் செய்திகள் மிக ரகசியமான செய்திகள். வெளியே எளிதாக கசியாத செய்திகள். இவை பெரும்பாலும் மற்றொரு நாட்டின் விருப்பதிற்கு எதிராகவே இருக்கும். ஆதலால் ரகசியம் காக்கப்படுகின்றன. தக்க சமயத்தில் எதிர்பாராத விதமாக பகைவர் தாக்குவர். ஒற்றர் கூறும் இச்செய்திகளை நம்பியே ஒரு அரசர் முடிவுகளையும் திட்டங்களையும் எடுக்கிறார். இது தவறாக இருப்பின் அதன் விளைவுகளும் பயங்கரமாய் இருக்கும். 

பெரும்பாலும் திறன் படைத்தவர்களே ஒற்றர்களாக நியமிக்கப்படுவர். ஆயினும் சூழ்நிலைகளால் ஒரு ஒற்றர் சில தகவல்களை தவறாக அறிந்துணர்ந்திருக்க கூடும். அல்லது முழு செய்தி கிடைத்து இருக்காது. அல்லது பகைவர் தவறான செய்திகளை வெளியே கசியவிட்டிருக்கக் கூடும். அதில்லாமல் ஒற்றர் வேண்டுமென்றோ அல்லது பகைவரிடம் விலைக்குப்போயோ அல்லது பகைவரிடன் அகப்பட்டோ தவறான செய்தியை கொடுத்திற்கக் கூடும். ஆதலால் தான் இரு ஒற்றர்களை வைத்து செய்தியின் நம்பகதன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலக்கிய மேற்கோள்கள் பெருங்கதையிலும், சீவக சிந்தாமணியிலும் காட்டப்படுகின்றன. “ஒற்று ஒற்றியவரை ஒற்றின் ஆய்ந்தும்”, “ஒற்று மாக்களின் ஒற்றரிந் ஆயா” என்ற வரிகளை பெருங்கதையில் (3.23:53,25.48) காணலாம். “ஒற்றர்தங்களை ஒற்றரின் ஆய்தலும் கொற்றங் கொள்குறிக் கொற்றவர்க் கென்பவே” என்ற வரிகளை சீவக சிந்தாமணியிலும் காணலாம் (சீவக 1921).

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.

மு.வரதராசனார் உரை
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

குறள் 587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
மறைந்தவை - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்

கேட்க -  செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக
கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

வற்று - கடல்நீர்வடிகை; கூடியது, ஒருசாரியை

ஆகி - ஆகுதல் - ஆதல்

அறிந்தவை - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்

ஐயப்பாடு - ஐயம், சந்தேகம்.

இல்லதே - இல்லை

ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.

முழுப்பொருள்
பிறர் மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாய் செய்யும் காரியங்கள் விவாதங்கள் பற்றியும் பலவாறு சேகரித்து அதனை ஐயமற அறிந்து  கொண்டு கொள்வதே ஒற்றரின் வேலையாகும். இவ்வாறு தான் அறிந்துகொள்வதனால் பிறர் தன்மேல் ஐயம் கொள்ளாதவாறு இருப்பதும் ஒற்றரின் குணமாகும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்” (திரி.85)

பரிமேலழகர் உரை
மறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.
(மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின் 'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான்.
இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.

மு.வரதராசனார் உரை
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

குறள் 586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார்; பற்றுவிட்டமுனிவர்

படிவத்தர் - படிவர் - முனிவர்.

ஆகி - ஆகுதல் - ஆதல்

இறந்து - இறந்துபடுகை; சாவு

இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

ஆராய்ந்து - ஆராய்தல் - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்; ஆய்வு; பரிசீலனம்; சோதனை தலையாரி

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்

செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

இலது - இல்லை

ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்

முழுப்பொருள்
ஒரு ஒற்றர் எப்படியெல்லாம் செயல்படவேண்டும்? தேவையெனில் துறவறம் வேடம் தரித்து முனிவர் போல் நடித்து தேவையான செய்திகளை அறியவேண்டும். ஆனால் மற்ற நாட்டவரிடம் (அல்லது பகைவரிடம்) பிடிபட்டால் அவர்கள் நெறிமீறி துன்பங்கள் (சித்ரவதை) செய்தாலும் மனதில் தளர்ச்சியடையாமல் தன்னுடைய நாட்டை காட்டிக்கொடுக்காமல் இருத்தல் வேண்டும். 

சீவகசிந்தாமணி (1845) படிவம் என்பதை வேடம் புனைதல் என்ற பொருளில் கையாளுகிறது. “பாத்தில்சீர்ப் பதுமுகன் படிவவொற்றாளர் சொற் கோத்தென்ன” என்னும் வரிகள் கூறுவது இதுவே: “நீக்கம் இல்லாத புகழையுடை பதுமுகன் மறைந்த வேடங்கொண்ட ஒற்றர் ஒருவர் கூறிய சொற்கு மற்றும் இருவர் சொல்லும் சேர்ந்தது என்று கருதி”

“படிவ ஒற்றின் பட்டாங்கு உணர்ந்து” (பெருங் 3.35:8)

“கல்விக்கண் மிக்கோன் சொல்லக் கருமன நிருதக் கள்வர்
வல்விற்கை வீர மற்றிவ் வானரர் வலியை நோக்கி
வெல்விக்கை அரிதென் றெண்ணி வினையத்தால் எம்மை யெல்லாம்
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்குநாம் கொள்க என்றார்” (கம்ப.ஒற்றுக் 30)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து - முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று - ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
(விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு.

மு.வரதராசனார் உரை
துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார்

குறள் 584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

செய்வார் - செயலை செய்பவர் / நடத்துபவர்

தம் - தன்னுடைய

சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

வேண்டாதார் - விரும்பாதவராய்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

அனைவரையும் - எல்லாரும்

ஆராய்வது - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்

ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.

முழுப்பொருள்
ஒரு அரசன் எவற்றையெல்லாம் ஒற்றரைக்கொண்டு ஒற்றாட வேண்டும் ?

1. வினைசெய்வார் - செயல்களை செய்கின்ற அமைச்சர் (மற்றும் அமைச்சரின் கீழ் உள்ளவர்கள். அவர்களின் நடவடிக்கைகள்). இது அமைச்சர்கள் அரசருக்கு எதிராக செய்கிறாரா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள உதவும். அதுபோல அமைச்சர்கள் அவர்களுடைய வேலைகளை செவ்வென செய்கிறார்களா என்பதை தெரிந்துக்கொள்ளவும் உதவும்.

2. தம்சுற்றம்  - அரசரின் சுற்றத்தில் உள்ளவர்கள்.

3. தம்சுற்றம் - நாட்டின் சுற்றத்தில் உள்ள நாடுகள் (அந்நாட்டின் அரசர், அமைச்சர்கள், நடவடிக்கைகள்)

4. வேண்டாதார் - அரசரையும் நாட்டையும் விரும்பாத பகைவர்கள்

மேற்சொன்ன நால்வர் என்று அவ்விடம் அனைவரையும் ஆராய்வதே ஒற்றர்கள் வேலை. ஆராய்வது என்றால் ஒரு குழுவாக மற்றவர்களைத் தேடி  சூழ்ந்து அவர்களையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் சோதிப்பது என்றுப்பொருள்.

மேலும் ஒற்றுத் தொழிலில் ஈடுபடுபவர்கள், சிலரைத் தமக்கு உற்ற சுற்றம் போன்றும், மற்றவர்களை நமக்கு வேண்டாதவர்கள் என்றுமில்லாமல் அனைவரையும் ஒன்றுபோல ஆராய்ந்து தகவல்களைப் பெறுவதே அவர்கள் செய்யும் ஒற்றுத் தொழிலுக்கு அழகாகும். அத்தகையவர்களே ஒற்றர்களாவார்கள் என்பதையும் நாம் இங்கு அறியலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது - தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே; ஒற்று - ஒற்றனாவான்.
('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.).

மணக்குடவர் உரை
தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன். இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.

மு.வரதராசனார் உரை
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை
அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

English Meaning - As I taught a kid - Rajesh
A king should spy on the following people without any confirmation bias and gather information 1) வினைசெய்வார்  - People who do the work especially ministers, other key in charges etc. 2) தம்சுற்றம்  - People close to him, friends, relatives, confidants etc. 3) தம்சுற்றம் - neighboring countries 4) வேண்டாதார்  - enemies, opponent countries . This spying is essential for efficiency of the systems and to prevent any major disaster, war, bribe, corruption, betrayal etc. 

Questions that I ask to the kid
On whom or How should espionage be implemented? Why is espionage important to a country/kingdom?

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா

குறள் 583 
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்
ஒற்றினான் - வேவு பார்த்தான் / தூது பார்த்தான்

ஒற்றி - ஒற்றிவை-த்தல் - oṟṟi-vai-   v. tr. ஒற்று³-+. [T. ottu.] 1. To place out of the way;தூரவைத்தல். 2. To adjourn, as a hearing தவணை தள்ளிவைத்தல்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

தெரியா - அறியாத

மன்னவன் - அரசன்

கொற்றம் - வெற்றி; வீரம்; வலிமை; வன்மை; அரசியல்.

கொளகொளத்தல் - தளர்தல்; இளகியிருத்தல்.

கொளக் கிடந்தது - வெற்றியும், சிறப்பும் பெறுவதற்கு எவ்வொரு வழியுமே

இல் - இல்லை

முழுப்பொருள்
ஒரு நாட்டிற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை ஒரு அரசன் அறியவேண்டும். ஏனெனில் ஒரு நாட்டிற்கு வெளியே அந்த நாட்டிற்கு எதிராக சதிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.  அதனை ஒற்றர்கள் துணை கொண்டு அறிந்துணர்ந்து தன ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தெரியாத அரசனுக்கு ஒற்றை அறிந்துகொண்டு செயல்படுவதை தவிர வேறு வழியில்லை.

அதுமட்டும் இன்றி மற்றநாடுகளில் உள்ள நல்லவைகளிலும் தீயவைகளிலும்  பாடம் கற்று அதனை தனது நாட்டிலும் பின்பற்றலாம். (அதற்கு ஒற்று தேவை என்று இல்லை. மற்றவர்களை கவனித்தாலே போதும்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன்னினிதே” (இனியவை 36)

பரிமேலழகர் உரை
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.
(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

குறள் 582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எல்லார் - ellār   n. எல் Devas of Hindumythology; தேவர் பனிவானத் தெல்லார் கண்ணும்(சீவக. 364).  
எல்லார்க்கும்  - எல்லோருக்கும்
எல்லாம் - ellām   s. all, the whole, முழுவதும்
நிகழ்பவை - நிகழ்காலம்; நிகழ்ந்துக்கொண்டு இருக்கும்
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.
வல்லறிதல் - வல் + அறிதல் - விரைவாக அறிதல்
வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.
தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு.

முழுப்பொருள்
பாரபட்சமின்றி எல்லா வித மக்களிடத்திலும் (ஏழைகள், வேலையாட்கள், விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், இராணுவவீரர்கள், அமைச்சர்கள், அரசர்கள்) [இம்மூவரை கம்பர் அரசியல் படலத்தில் “ஏவரும் இனிய நண்பர் அயலவர், விரவார் என்று மூவகை இயலோர் யாவர்” என்ற வரிகளில் குறிக்கிறார்]  பற்றியும், அவர்கள் (பொது) வாழ்விலும் தொழிலிலும் நிகழ்ந்துக்கொண்டு இருக்கும் நல்லவை கெட்டவை என்று முழுவதுமாக (அதனுடைய இன்றைய பாதிப்பு, நாளைய பாதிப்பு) பற்றியும் எல்லா காலங்களிலும் ( நாடு செழிப்பாக இருக்கும் காலங்களிலும், மந்தமாக இருக்கும் காலங்களிலும்)  விரைந்து (தகவல் சொல்லும் ஒற்றர்கள் மூலம்) தெரிந்துக்கொள்வது அந்த நாட்டை ஆளும் அரசனின் தொழிலாகும். 

அதை தெரிந்துக்கொள்வதுடன் அரசருடைய கடமை முடியாது. அதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் முடிந்த அளவு அறிவு பூர்வமாக அதனை அறிந்துக்கொண்டு அதனை தடுக்கவோ அல்லது அதனில் இருந்து தற்காத்துகொள்வது சிறந்தது. ”வரும் முன் காப்போம்” என்று சொல்வது உண்டு. 

இதனை விரைந்து அறிதல் மிக முக்கியம். பல அடுக்குகள் கொண்ட ஆட்சியில் அது அவ்வளவு எளிது அல்ல. ஆதலால் ஒற்றர்கள் இருப்பின் அது விரைவு தன்மைக்கு ஏதுவாக இருக்கும். 

உதாரணமாக: 1) ஒரு நாட்டில் பருவமழை, வெள்ளம், பஞ்சம் பற்றிய முன் கணிப்பு சொல்ல விஞ்ஞானிகள் உள்ளனர்.  2) ஒரு நாட்டின் வணிக சந்தை பற்றிய கணிப்பை சொல்ல வணிக மேதைகள் உள்ளனர். இவர்களுடன் இணைந்து விரைந்து வேலை செய்வதே சிறந்தது. 3) சுகாதாரத்துரையில் டெங்கு (Dengue) போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதிபடுகின்றனர். இக்காய்ச்சல் முதல் முதலாக வந்ததை ஒரு ஒற்றர் (இங்கே Informer என்று சொல்லலாம்) அறிந்துக்கொண்டு அக்காய்ச்சல் மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருக்கவும், வந்தால் விரைந்து சிகிழ்ச்சை கொடுக்க தேவையான முன் ஏற்பாடுகளை கவனிக்கலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்.
('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தம் சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை எல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்து அறிதல் வேந்தனது தொழில் என்றவாறு.

மு.வரதராசனார் உரை
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.


English Meaning - As I taught a kid - Rajesh
An espionage should gather all the information about all kinds of people (poor, employees, farmers, weavers, traders, military men, ministers, etc.) Without any prejudice /bias / partiality during both good and bad times and promptly pass the information to the king. It is duty of the king to swiftly act upon those information. King's duties doesn't end up in gather the information. Prompt action after diligently analyzing it is essential. This way one can prevent any upcoming issues or quickly resolve current issues. 

Questions that I ask to the kid
How should an espisonage act? What is the duties of King w.r.t the information collected by the espionage agent?

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது

குறள் 585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் 
உகாஅமை வல்லதே ஒற்று
[பொருட்பால், அரசியல்,ஒற்றாடல்]

பொருள் :
கடாவுதல் - செலுத்துதல்; ஆணிமுதலியனஅறைதல்; குட்டுதல்; வினாவுதல்; தூண்டுதல்; விடுதல்.

கடாதல் - கடாவுதல், வினாவுதல்.

உருவம் -  வடிவம்; உடல் அழகு நிறம் வேடம் சிலை மந்திரவுரு; கூறு தெய்வத்திருமேனி.

கடாஅ உருவொடு - யாரும் எளிதில் கண்டு பிடிக்க முடியாத உருவோடு 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.


அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சாது - அஞ்சாமல் 

கண்ணஞ்சாது - சந்தேகிக்கும் எந்த கண்களுக்கும் அஞ்சாமல்


யாண்டும் - எப்பொழுதும் 

உகாஅமை - மனதில்  உள்ளவற்றை வெளியே சொல்லாத உறுதி கொண்டமை 

வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள

ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.

வல்லதே ஒற்று - இவ் வலிமைகளே ஒற்று .

முழு விளக்கம்
ஒரு ஒற்றனானவன் எவ்வாறு இருக்க வேண்டுமானால், அவனை யாரும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒரு உருவம் கொண்டவனாகவும் அப்படியே சந்தேகித்தாலும் சந்தேகிக்கும் கண்களை கண்டு அஞ்சாதவனாகவும் எப்பேர்ப்பட்ட நேரத்திலும் மனதில் உள்ளவற்றை வெளியே சொல்லாமல் காக்கும் வலிமை உடையனவாகவும் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.

பண்டைய கால அரசாட்சிகளில் ஒற்று என்பது மிகவும் இன்றி அமையாத ஒன்று. பகை நாடு தனக்கு எதிராக சதி செய்கிறதாயினும் அல்லது பகை நாடுகளில் நிலவும் பொதுநிலவரம், அவர்களின் அப்போதைய படைபலம் ஆகியவற்றை கண்டு அறிவதாயினும், ஒற்றர்கள் மிகப் பெரும் பங்காற்றினர்.

இதனால் தான் ஒற்றர்களை ஐந்தாம் படைஎனக் கூறுவர் (யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை  மற்ற நான்கு படைகள்). 

இவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒற்றர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர்.

இக்குறளுக்கு உதாரணமாக பொன்னியின் செல்வனில் வரும் ஆழ்வார்க்கடியான்  (ர் ) நம்பி ஐ கூறலாம். ஒரு வைஷ்ணவராக, நாமமும் தடியும் கொண்டு, எவரும் சந்தேகமுறாது, சாதாரண தோற்றத்துடன் வளம் வருவதாக விவரித்து இருப்பார் கல்கி.



ஒப்புமை
”இற்றது காலமாக இலங்கையர் வேந்தன் ஏவ
ஒற்றர் வந் தளவு நோக்கிக் குரங்கென உழல்கின் றாரை” (கம்ப.ஒற்றுக்.24)

“தாயினும் பழகினாரும். தன்னிலை தெரிக்க லாகா
மாயைவல் லுருவத்தான்” (கம்ப.அணிவகுப்பு.3)

பரிமேலழகர் உரை
கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.

('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.).

மணக்குடவர் உரை
வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.

மு.வரதராசனார் உரை
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

ஒற்றும் உரைசான்ற நூலும்

குறள் 581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்
[பொருட்பால், அரசியல்,ஒற்றாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒற்றும் - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்

உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை

சான்ற - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்.

நீதிநூல் - அறம்பொருள்களைப் பற்றிக்கூறும் நூல்; சட்டக்கலை

நூலும் - நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.

இவை - அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டு தற்குரியசொல்.

இரண்டும் - இரண்டு

தெற்று - பின்னல்; வேலிஅடைப்பு; செறிவு; இடறுகை; மாறுபாடு; தவறு; தேற்றம்.
என்க -  என்கை - என்றுசொல்லுகை.

மன்னவன் - மன்னன்; இந்திரன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஒற்று- வேவு,உளவு 
உரை சான்ற - புகழ் கொன்ற 
இவையிரண்டும்  - இந்த இரு விஷயங்களும் 
தெற்றென்க மன்னவன் கண்- அரசனின் கண் போன்றது 

முழுப்பொருள்
ஒற்றும் அதாவது தன்னையும் தன நாட்டையும் நோக்கி வரும் ஆபத்துக்களை ஒற்றறிந்து, உளவு மூலமாக முன் கூற்றி தெரிந்து, அதற்கு தயார் நிலையில் இருப்பது, நாட்டை ஆழும் மன்னனுக்கு இன்றி அமையாதது ஆகும். நாட்டையும் நாடு மக்களையும் எவ்வாறு ஆள வேண்டும் என நல வழி படுத்தும் அற நூல்களும் அதற்கு இணையான முக்கியம் பெரும்.

இவை இரண்டுமே ஒரு மன்னனுக்கு கண்களை போன்று மிக இன்றி அமையாதது எனக் கூறுகிறார் வள்ளுவர் .

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இராணுவங்களிலும் உளவுத் துறை என்று ஒன்று தனியாக இருக்கும்.இது சரியாக செயல் படாமல் போனால் நாம் ஆபத்துகளை சரி வர கணிக்க இயலாது .

ஒப்புமை
”கடனறி காரியக் கண்ணவ ரோடு” (பரி.19:22)
“மண்ணியன் மன்னர்க்குக் கண்ணென வகுத்த
நீதி நன்னூல்” (பெருங்.4.10:13-4)
“காதிவேல் மன்னர் தங்கள் கண்ணென வைக்கப்பட்ட
நீதிமேற் சேரல் தேற்றாய்” (சீவக.233)

ஒற்றர்களும், தெளிந்த நூலறிவும் மன்னவனின் பார்வையைத் தெளிவாக்குகின்றன. நூலறிவு கண்போல் விளங்குகிறது என்றால், ஒற்றர்கள் தொலை நோக்கியாகவும் நுண்ணோக்கியாகவும் விளங்குகிறார்கள்.

இந்த ஒற்றர்களை நியமிப்பது குறித்து, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் விரிவான செய்திகளைச் சொல்கிறது.

காபாடிகன், உதாதித்தன், கிருகபதிகன், வைதேகன், தாபதன் என்று ஒற்றர்களை பலவகையினராகப் பிரித்துக் கூறுகிறது.

ஆசிரியர்த் தொழில் செய்து கொண்டு ஒற்று வேலையிலும் ஈடுபடுபவன் காபாடிகன். பிறர் உள்ளத்தை எளிதாக அறிந்து கொள்ளும் சக்திவாய்ந்தவன்.
உதாதித்தன் துறவு வேடத்தில் வாழ்பவன். துறவு வாழ்க்கையில் தோற்றுப் போனவன். ஆசிரமங்களை அமைத்துக் கொண்டும், பல சீடர்களை வைத்துக் கொண்டும் வாழ்பவன். சமண, பௌத்த வேடங்களிலும் உதாதித்தர்கள் இருப்பதுண்டு.

கிருபாதிகன் என்பவன் அறிவும், தூய்மையும் உடையவன். விவசாயத் தொழிலில் நஷ்டத்துக்கு உள்ளாகி, அரசருக்கு ஒற்று வேலை செய்து, வசதியை அடைந்தவன்.

வைதேகன் என்பவன், வணிகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒற்றன்.

தாபதன் என்பவன் அற்புதம் செய்யும் சாமியாராக வெளியே தோற்றம் தருபவன். சித்தர் என்று விளம்பரம் செய்து கொண்டவன். இவனுடைய மகிமையைக் கேள்விப்பட்டு, மக்கள் இவரிடத்தில் வந்து வழிபாடு செய்வார்கள். இவனோ தன்னை அண்டிவருகின்றவரை ஒற்று அறிந்து கொண்டிருப்பான்.

இவர்கள் அனைவரும் அரண்மனை வாழ்க்கையுடன் சம்பந்தப்படாதவர்கள் மாதிரி தோற்றம் அளிப்பார்கள். எவரும் சந்தேகப்பட முடியாது இவர்கள் ஒற்றர்கள்தாம் என்று.

இவர்களைத் தவிர, சத்திரிகள் என்னும் ஒருவகை ஒற்றர்களைப் பற்றியும் அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

ஆண்கள், பெண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கற்றவர்கள், சோதிடம், கைரேகை நிபுணத்துவம், பெற்றவர்கள். வசியம், இந்திரஜாலம், மறைதல், சகுணநூல், அறநூல், காமநூல் கற்றவர்கள் என்று இவர்களைப் பற்றி அந்நூல் கூறுகிறது.

ஒற்றர்கள் பல்வேறு வேடங்களில் அலைகிறவர்கள். அரண்மனைக்கு உள்ளும் அரண்மனைக்கு வெளியிலும் பிறநாட்டிலும் கூட வேவு பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.

இன்று அத்துறை நவீனமாகவும், வளர்ச்சி பெற்றும் இருக்கிறது. ஒவ்வொரு நாடும் உளவுத்துறை வைத்திருக்கிறது. விண்கோள்களும் வேவு பார்க்கின்றன. இது ஆட்சி செய்பவர்களுக்கு மிகவும் அவசியமும் கூட.


பரிமேலழகர் உரை
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.
(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

சாலமன் பாப்பையா உரை
ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

English Meaning - As I taught a kid - Rajesh
1) Espionage setup, 2) reputed books for knowledge with clarity that details what are the duties one king has to perform and about the administrates welfare of the country and people are like two eyes for a king. One eye (books) acts as a (internal) light what is to be done and one eye (espionage) acts as (external) light for what is going on around the king and the people. 

Questions that I ask to the kid
What are the two eyes of a king? why?