Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_062. Show all posts
Showing posts with label Athikaaram_062. Show all posts

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்


குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
தெய்வத்தான் - தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்.

ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன்.

ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆகாது - நடக்காது, அமையாது, நிகழாது, உண்டாகாது, வளராது

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்.

முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை.

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

வருத்துதல் - வருவித்தல்; பெருகுதல்; உண்டாக்குதல்; மனப்பாடஞ்செய்தல்; பயில்வித்தல்; வருந்தச்செய்தல்.

வருத்தக் - வருத்து - துன்பம்; காண்க:வரத்து.

கூலி - வேலைக்குப்பெறும்ஊதியம்; வாடகை; கூலிக்காரன்.

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
தெய்வம் என்றால் கடவுள். தெய்வத்தால் முடியாதது என்று ஏதுமில்லை. அதேப்போல் தெய்வம் என்றால் ஊழ் என்றும் அகராதி கூறுகிறது. ஒருவன் தன் ஊழினால் ஒன்றை அடையமுடியாது என்று இருக்கும். அப்படி என்றால் அவனால் அதை அடைவே முடியாது என்று அர்த்தம். ஆனால் ஒருவன் தன்னுடைய இடைவிடாத முயற்சியால் தன்னுடைய உடலையும் உயிரையும் வருத்தி செயலாற்றினால் அவன் துன்பப்பட்டாலும் தெய்வத்தை தாண்டியும் ஊழை தாண்டியும் அவன் செய்த முயற்சிக்கு ஊதியமாக பயன் வந்து சேரும். 

”தன்னுயிர் தான் அற பெற்றவன்” (குறள் 268, தவம்) கடவுள் என்று முன்னறே பார்த்தோம். அஹம் ப்ரம்மாஸ்மி (நான் கடவுள்) என்றால் தான் என்னும் அகங்காரம் நீங்கி கடவுள் என்ற நிலை. அத்தகைய நிலையில் அதாவது தானே கடவுள் என்ற நிலையில் ஒருவனால் (அவனால்) முடியாது என்றாலும் ஒருவன் (அவன்) சிறுக சிறுக ஒவ்வொரு அடியாக முயன்றால் அவன் அதன் பலனை கண்டிப்பாக பெறுவான்.

உதாரணமாக கண் தெரியாத குருடர்கள் இமயமலையை ஏறிய உண்மை சம்பவங்களை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். கண் தெரியாமல் மலை ஏறுவதே கடினம். பலருக்கு இயலாத காரியம். ஆனால் கடும் பனி பொழிவு, செங்கூத்தான ஏற்றம், உணவு தட்டுப்பாடு, பயங்கரமான பல்லத்தாக்குகள், பனிகட்டி சரிவுகள் என்று இடர்கள் இருக்கும் பொழுது கண் தெரிந்தவர்களுக்கே மிக கடினமான ஒன்று. அப்படி இருக்கையில் கண் தெரியாதவரால் முடியாது என்பதே பொதுவான நம்பிக்கை. ஆயினும் தளராது முயற்சி செய்தால் இலக்கை அடையலாம். Erik Weihenmaye என்பவர் 2001 ஆம் ஆண்டு Mount Everest என்னும் இமயமலையை வெற்றிகரமாக ஏறினார்.

அதேப்போல கால் இல்லாத சிலர் (amputees என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்) சபரிமலை போன்ற நீண்ட மலை பயணங்களை (சுமார் 48கி.மி)  தரையில் உட்கார்ந்தே கைகளைக்கொண்டு சிறுக சிறுக நகர்ந்து சபரிமலை சன்னிதானத்தை அடைந்ததை நான்1994 ஆண்டு முதலான பல பயணங்களில்  கண்டுள்ளேன்.

எல்லா வெற்றியும் முதல் அடியில் தான் தொடங்குகின்றன. எல்லா வெற்றியும் இடைவிடாத தொடர் பயணத்தின் இறுதியில் கிடைக்கின்றன.

இதையே “தெய்வத்துக்கு ஆகா தெனினும்” என்று கொண்டால், புராணங்களில் சொல்லப்படுகிற கதைகளுக்கும் விளக்கம் கிடைத்துவிடுகிறது. அசுரர்கள் இடைவிடாது முயன்று கோர தவமியற்றி, தம்முடலை வருத்தி செய்யும் தவங்களுக்கு, இறைப்பொருள், அதற்கு பிடிக்காததென்றாலும், தவமியற்றிய அசுரனின் முயற்சியின் உயர்வுக்காக வரங்களை அள்ளிக்கொடுத்து, தமக்கும், மற்ற உயிர்களுக்கும், துன்பங்களை வருவித்துக்கொண்டதையும் பார்க்கிறோம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தெய்வத்தான் ஆகாது எனினும் - முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் - முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

மு.வரதராசனார் உரை
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

Thirukkural - Management - Hard Working
Believe that all your efforts will have their corresponding rewards. If your hard working is not recognized and rewarded by the Supreme Being, or any other name you prefer to that, your hard working itself will be a reward. Kual 619 assures us of that gain.

Even if Fate will not, exertion will pay
The wages of effort.

Do not take into your heart, if the reward is not immediate. The foundation of Total Quality Management (TQM) is that ‘the process decides the product.' If the process is right, the product, that is the outcome, will be right. One's effort is the process and the result is the product. The relationship between effort and reward is similar to the front wheels and the rear wheels of a vehicle respectively. When you control the front wheels, the rear wheels will follow suit.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து


குறள் 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
பொறி - வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ்

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

யார் - யாவர், எவர்
யார்க்கும் - எல்லோருக்கும் , எவருக்கும், அனைவருக்கும்

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்; aṉṟu   அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else).

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆள்வினை - முயற்சி; மகிழ்ச்சி,  ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. 

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

முழுப்பொருள்
பொறி என்றால் உடலில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி, செல்வம், ஊழ் ஆகும். ஒருவர் உடலில் குறைப்பாடு இருந்தாலும், செல்வம் இல்லையென்றாலும், தலைவிதியால் அவர் முன்னேறாமல் இருந்தாலும் அவரை யாரும் குற்றம் கூறமாட்டார்கள். ஆனால் ஒருவர் நூல்கள் வழியாகவோ செவிவழியாகவோ கற்று உணர்ந்தும் அல்லது கற்று உணராமல் ஊக்கத்துடன் முயலாமல் செயலாற்றாமல் இருந்தால் அவர் மீது குற்றம் சுமத்துவர் பலர் அறிய பழிதூற்றுவர். அது அவரை வெட்கசெய்யும்.

“அறிவு அற்றங் காக்குங் கருவி” (குறள், 421) என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் இக்குறளில் வள்ளுவர் அறிவு அற்றம் காக்குமானலும், அது தாளாண்மை கொண்டவர்க்கேயென்றும் உணர்த்துகிறார். அக்கருத்தின் அடிப்படையில் இன்றைய குறளில், கற்றறிந்தும் ஊக்கமில்லார்க்கு அற்றமே என்று சிறப்பு ஏகாராத்தைச் சேர்த்துச் சொல்லப்படுகிறது. முயற்சியும் அற்றார்க்கு பழியும், வருத்தமும், அழிவும்தான் சேரும். 

”துருப்பிடித்து அழியறத விட தேஞ்சு தேஞ்சு அழியலாம்” என்ற சொலடை உண்டு. அதாவது சும்மா ஒன்னுமே செய்யாம துருப்பிடித்து அழிவதை விட, செயல் புரிந்து அதனால் தோல்வியுற்று தேஞ்சு தேஞ்சு அழிவது மேல்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கூட்டமொத் திருந்த வீரர் குறித்ததோர் பொருட்கு முன்னாள்
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்த தொத்தார்” (கம்ப.மராமரப்.60)

பரிமேலழகர் உரை
பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

சாலமன் பாப்பையா உரை
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


குறள் 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை.

திருவினை - நல்வினை, அறச்செயல்; முற்பிறப்பிற்செய்தபுண்ணியச்செயல்.

ஆக்கும் - ஆக்குதல் - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல்

முயற்று - முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

புகுத்தி - புகு-த்தல் - puku-   11 v. tr. Caus. of புகு¹-.1. To cause to enter; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 2. To insert, put in;உட்செலுத்துதல்.

விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
ஊக்கத்தின் கூடிய இடைவிடாத முயற்சி (அதற்கேற்ற கர்ம பலனாக) திருவினையை, நல்வினையை, செல்வத்தை, ஆக்கத்தை, பயனை தந்து ஒருவரை அவர் எண்ணிய இடத்திற்கு உயர்த்தும். அதேப்போல ஒருவர் முயலாது வினை செய்யாது இருந்தால் அவர் தன்னிடம் இருக்கும் செல்வத்தை (அறிவு உட்பட) சிறுக சிறுக இழப்பார். அதனால் வறுமை அவரது வாழ்வில் புகுந்துவிடும். இதனால் அவர் துன்பத்தை அனுபவிப்பார். 


இதையே ஔவையும் கொன்றை வேந்தனில், “ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு” என்று ஊக்கமிருப்பதன் சிறப்பைச் சொல்லுகிறார் ஊக்கும் விதமாக.

”செய்வினை மடிந்தோர்ச் சேர்ந்துறை விலளே
மையறு தாமரை மலர்மகள்” (பெருங்.2.17:39-40)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

Thirukkural - Management - Hard Working
A determined effort will get us fruitful results. The fruitful results include health, wealth, personal satisfaction, and professional success. Lack of that determined effort will get us poverty for sure. Kural 616 commands us to put in our best efforts to achieve things of significance in the end. Kural 616 is explained in Practice 30 'Perseverance' to reinforce the importance of consistency for sustained success.

Exertion leads to wealth,
Lack of it to want.

Determination terminates poverty and makes all the things a person desires possible. The word 'determination’ has other related phrases as ‘sustained effort,' 'deliberate action,' ‘conscious commitment.' So, be committed to converting your conception to a possibility.

Thirukkural - Management - Perseverance
As any outcome is the result of a corresponding perseverance, lack of perseverance will lead us to poverty instead of wealth, warns Kural 616.

Extension leads to wealth, 
Lack of it to want.

Kural 616 is discussed in 'Hard working' to highlight the importance of hard working for personal and professional success.

English Meaning - As I taught a kid - Rajesh
With perseverance, a determined effort will fetch us fruitful results that include health, wealth, personal satisfaction, professional success etc. Consistent deliberate action/efforts would grow us. However, Lack of effort, inaction will deplete our resources, put us in poverty and give us pain and difficulties. 

Questions that I ask to the kid
What does efforts leads to? What does inaction lead to?

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

குறள் 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.

விழையான் விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல்

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

விழைவான் - விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு..

கேளிர் - தோழர்; உறவினர்

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

துடைத்து - உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

ஊன்றும் - ஊன்றுதல் - நிலைபெறுதல்; சென்றுதங்குதல்; நடுதல்; நிலைநிறுத்துதல்; பற்றுதல்; தீண்டுதல்; தாங்குதல்; முடிவுசெய்தல்; அமுக்குதல்; தள்ளுதல்; உறுத்துதல்; குத்துதல்;

தூண் - தம்பம்; கட்டடத்தூண்; பற்றுக்கோடு; தறி.

முழுப்பொருள்
அறம், பொருள், இன்பம் வீடு - இவையே ஒருவன் தரிக்க வேண்டிய நான்கு வேடங்கள் எனப்படும். அறம் பொருள் இன்பம் ஆகியவை சமநிலையில் வாழ்வில் இருக்க வேண்டும் என்றால் இவை அனைத்தையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அறம் என்றால் தர்மம் அதாவது ஒருவர் ஆற்றவேண்டிய கடமைகள். ஒருவர் வாழ்க்கையில் தனது கடமைகளை ஆற்றவேண்டும். அவ்வாறு ஆற்றினால் அவர் பொருளை ஈட்ட முடியும். அவ்வாறு தேவையான அளவு பொருள் இருந்தால் இன்பம் வாழ்வில் பயனாய் கிட்டும். காமமும் சுவைக்கும். செயல் புரியாமல் வீண் செலவு செய்தால் பொருள் தங்காது தரித்திரம் ஒட்டிக்கொள்ளும். இன்பம் இருக்காது. அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றும் இருந்தால் தான் வீடுபேறு என்னும் நிலைக்கு நம்மால முயற்சி செய்ய முடியும். மேலும் இன்பம் என்பது நிலையில்லாதது. இன்பம் வந்து செல்வது.

ஆதலால் வாழ்வில் இன்பத்தை விழையாது தான் ஆற்றவேண்டிய கடமைகள் அதாவது செயல்களை செய்ய விழைந்து செய்கின்றவன் தன்னுடைய குடும்பத்தின் (மனைவி, மக்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், உறவுகள்) துன்பங்களை நீக்கி அவர்கள் வாழ்வில் அவர்களையும் அவர்களது துன்பங்களையும் தாங்கும் ஒரு ஊன்றுகோலாய் இருக்கும் தூணாக விளங்குவான். 

தூண் இயக்கமில்லாதது, தளராத முயற்சி என்பது இடைவிடாத இயக்கத்தைக் குறிப்பது. ஆனால் தூண் என்பது, மனவலிமை, உறுதியான நிலைப்பாடு இவற்றைக் குறிக்கவே இங்கு சொல்லப்படுகிறது.

தளராமுயற்சியும், தன் குடிகளுக்கான வினைகளை ஆற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஆள்வோர், அவர்க்கு உறவும் சுற்றமுமாகிய குடிமக்களைத் தன் ஆட்சியென்னும் கூரையின் கீழ் தாங்கக்கூடிய உறுதியான தூண் போன்றவர் ஆவார்கள்.

பொருளின் மீது சலனப்படும் பொழுது எல்லாம் கீழ்க்காணும் குறளை நினைவில் கொள்க

பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் (பில் கேட்ஸ் (Bill Gates), மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) போன்றோர்) பெரும்பாலும் மிக எளிமையான துணிகளை உடுத்துவர். ஆடம்பரமாக அணியமாட்டார்கள். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிறத்தில் துணி அணியமாட்டார்கள். அவர்கள் கூறும் காரணம் ஒவ்வொரு முடிவு எடுக்கும் பொழுது எனது மூளையின் ஆற்றல் செலவு செய்யப்படுகிறது. அவ்வாற்றலை துணியின் நிறத்தை முடிவு செய்ய செலவிட மாட்டேன். மாறாக எனது வேலையில் செலவிடுவேன். அவ்வாறு சிந்திப்பதனால் தான் அவர்கள் நிர்வாகத்தை உயர்த்துகின்றனர். அவர்களுடைய நிர்வாகத்தின் அங்கத்தினர்(அதாவது கேளீர்) நன்கு சம்பாத்தித்து நன்றாக வாழ்கின்றனர். [பி.கு: பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் போன்றோர் விலை உயர்ந்த கார்களை வாங்கி இருப்பார்கள். ஆனால் அவையாவும் அவர்கள் வருமானத்தில் 0.1% சதவிகிதம் கூட கிடையாது. அன்றாட வாழ்வில் அவர்கள் எளிமையையே பின்பற்றுகிறார்கள்]


அது லௌகீக உதாரணம்.

மஹாத்மா காந்தி போன்றோர் இன்பத்தை விழையாமல் வேலையை விரும்பியதால் தான் தன் நாட்டுமக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்து அவர்களுடைய துன்பத்தை துடைத்தனர்.

இதைப் பொதுவாக “வினையே ஆடவர்க்குயிரே” என்று குறுந்தொகை( 135.1) வரி சொல்லும்

”வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி” (அகநா 33.1)

“இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது) (முதுமொழிக் 8:6)

கண்ணனும் கோவர்த்தன கிரியினை ஏந்தி தன் குடிகளைக் காத்தான் என்னும் புராணச் செய்தியும் இச்செய்தியைச் சொல்லுகிற உருவகம்தான்.




மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்பம் விழைவான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம். (இஃது ஏகதேச உருவகம், 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், 'மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு' (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன் தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம். ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.

மு.வரதராசனார் உரை
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who does not seek pleasure and happiness, rather seeks/desires work would remove/reduce the sufferings of people (relatives, friends) around him and support them/their family like a pillar

Questions that I ask to the kid
Who lifts a family (Or WHO removes the difficulties of people in life) ? How?
What is the benefit of focusing on work?
If we desire pleasure, can we lift a family?

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

குறள் 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தாளாண்மை  - ஊக்கம்; விடாமுயற்சி
இல்லாதான் - இல்லாதவன் (உவமைகளுக்கும், இணைகளுக்கும் அப்பாற்பட்டவன்); வறியவன்,

வேளாண்மை பயிர்த்தொழில்; உதவிபுரிதல்; கொடை; உண்மை

பேடி  - பெண்தன்மைமிகுந்தஅலி; வீரியமின்மை; நடுவிரல்; அச்சம்.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

போல - ஓர்உவமவுருபு

கெடும் - கெடும்; கேடு விளைவிக்கும்

முழுப்பொருள்
வீரம் அல்லாத ஒரு பேடியின் கையில் கூர்மையான வாள் இருந்தாலும் அவன் போர்க்களத்தில் அழிந்துவிடுவான். கூர்மையான வாளுக்கு பகைவரை கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் அதனை பயன்படுத்த தெரியவில்லையென்றால் அந்த வாளினால் ஒரு பயனுமில்லை. அது அட்டக்கத்தியிற்கு சமம் என்று சொல்லலாம்.

அதுப்போல விடாமுயற்சியில்லாதவன் பிறருக்கு உதவுவேன் என்று சொல்வதும் ஆகும். ஏனெனில் விடாமுயற்சியில்லாதவன் செல்வத்தை ஈட்டமுடியாது. செல்வம் இல்லாதவன் பிறருக்கு உதவிபுரிய முடியாது.

முயற்சியில்லாதவன் தன்னை வீரன் போல் காட்டிக்கொள்ளும் பேடியிற்கு சமம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும் - படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர், பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாதுஎன்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும்ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும். இஃது அறம் செய்யமாட்டானென்றது.

மு.வரதராசனார் உரை
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person, who does not put efforts to perform his responsibilities, tells others that he will help them looks like a coward holding a sword in his/her hand. There is no use/result out of it. A coward despite having a tool like sword cannot fight. Similarly a person who doesn't work cannot help others because he doesn't earn wealth.

Questions that I ask to the kid
Can a person help without effort? Why? What it looks like?

தாளாண்மை என்னும் தகைமைக்கண்

குறள் 613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
தாளாண்மை - ஊக்கம்; விடாமுயற்சி

என்னும்  - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

தகைமைக் - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தங்கிற்றே - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்

வேளாண்மைபயிர்த்தொழில்; உதவிபுரிதல்; கொடை; உண்மை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

செருக்கு - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்.

முழுப்பொருள்
தாளாண்மை எனப்படுகின்ற விடாமுயற்சி மிகுந்த உயரிய குணம். அத்தகையவரிடம் செருக்கு எனப்படுகின்ற வளம், செல்வம் ஆகியவை வந்து சேரும். முக்கியமாக பிறருக்கு உதவிட வேண்டும் என்னும் வேளாண்மை எனப்படுகிற கொடைத்தன்மை அவரிடம் நிலைத்துநிற்கும். அது அவருக்கு மகிழ்ச்சியை தரும். ஆக்கம் கொண்டவர்க்கே அடுத்தார்க்கு உதவுவது சாத்தியமாகும் என்பதினால் வேளாண்மைக்குத் தாளாண்மை அவசியமாகிறது.

சம்பந்தரும் ஆக்கூர் தாந்தோன்றி மாடத்தேவாரத்தில் (3), “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர்” என்பர்.

"தாளாண்மை யில்லாதான் வேளாண்மை” (குறள் 614)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.


மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

உடைத்து -  உடைதல் - இருக்கும், செல்வமாக கொண்டது

என்று - என்று 

அசாவாமை - தளராமை

வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
ஒரு செயலை செய்வதற்கு முக்கியமான தேவை அச்செயல் நமக்கு நல்ல பலனை தரும் பெருமையை என்ற நம்பிக்கை. மேலும் அச்செயலை செய்வதற்கான தேவை (purpose). அப்படி அச்செயலின் மீது நம்பிக்கை (நம்பிக்கையும், அச்செயலின் தேவையின் மீது நம்பிக்கையும்) குன்றாமல் எப்பேர்ப்பட்ட இடர்கள் வந்தாலும் தளர்வடையாமால் சோம்பல்கொள்ளாமல் அச்செயலை செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்து கொண்டு இருந்தால் நம்முடைய முயற்சிக்கான பலனாக பெருமை எனப்படும் வல்லமை / மாட்சிமை நமக்கு கிட்டும். 

மேலும் ஆழ்ந்து யோசித்தால், நாம் ஒரு செயலை செய்யும் பொழுது அதன் குறிக்கோளைப் பற்றிய தெளிவு மிக அவசியம். அக்குறிக்கோள் அல்லது அச்செயலின் பலன் செறிவாக இருப்பின்  மனதிற்குள்ளே அதை அசைப்போட்டு கற்பனை செய்தால் நம் மனதிற்குள்ளே இயல்பாகவே ஒரு உத்வேகம் உண்டாகும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் (அதுவாய் வந்து மடியில் உட்காரும் என்று எதிர்ப்பார்க்காமல்) அப்பலனை எண்ணி ஊக்கத்துடன் தளராது உழைத்தால் அப்பலனை கண்டிப்பாய் பெறுவோம். ஆங்கிலத்தில் சொன்னால் It is worth dying for என்று கூறலாம். 

உதாரணமாக சொன்னால் -> சில நிமிடங்கள்/மணிநேரங்கள் (புத்தகம் வாசிப்பது (அறிவு திறனை வளர்க்கும்), உடற்பயிற்சி செய்வது (உடல் ஆரோக்கியத்தை பேணும்), இசை கற்பது (மனதிற்கு மகிழ்ச்சி தரும்), விளையாடுவது (உடல் ஆரோக்கியத்தை பேணும், நண்பர்களை பெற்றுத்தரும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கும்), சில நாட்கள் (நோன்பு இருப்பது மனதின் தவசக்தியை வளர்க்கும்) , சில வாரங்கள் (ஒரு படிப்பிற்குக்கோ தேர்விற்க்கோ படிப்பது நமது தொழில் சார் திறனை வளர்த்து வேலையை செறிவாய் செய்ய உதவும்), சில மாதங்கள் (உடலை சீர் அமைப்பது, நல்ல பழக்கங்களை வளர்ப்பது நெடுங்காலத்திற்கு உதவும்), சில வருடங்கள் (வீடு வாங்குவது (ஒரு வித நிதி சுதந்திரத்தை அள்ளிக்கும்), முதலீடு செய்வது, செமிப்பது, சிக்கனமாய் இருப்பது நெடுங்காலத்திற்கு நிதி தற்சார்பையும் நெருக்கடி வந்தால் சமாளிக்கும் வலிமையையும் தரும்). 

நாலடியார் பாடல் ஒன்றின் வரிகள் இயைந்த கருத்தைச் சொல்கின்றன. “இசையாதெனினும் இயற்றியோர் ஆற்றால், அசையாது நிற்பதாம் ஆண்மை“. பெருங்கதையிலும், “முயற்சியின் முடியாக் கருமம் இல்லென” என்று விடாமுயற்சியின் சிறப்புச் சொல்லப்படுகிறது.

கீழ்க்காணும் குறள்களையும் அருமை என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்தி செயல்புரிக

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இசையாதெனினும் இயற்றியோ ராற்றான்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று” (நாலடி 194)

”பெருமை உடையதன் அருமை பழியார்” (முதுமொழிக் 3.3)
“முயற்ச்சியின் முடியாக் கருமம் இல்லென” (பெருங் 5.4:14)

காளன் அர்ஜுனன் அருகே  வந்ததும் “இவர்கள் காலகுடியின் மூத்தவர்கள். இவர்களின் அருள் பெற்றுவிட்டாயா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். அவன் கையிலிருந்த கூழாங்கல்லை நோக்கியபின் சிரித்து “பாசுபதம் அளித்துவிட்டார்களா?” என்றான் காளன். அர்ஜுனன் மெல்ல புன்னகைத்து “ஆம், ஆனால் அது இத்தனை எளிதென்று நான் அறிந்திருக்கவில்லை” என்றான்.

அரியவை, அடைதற்கரியவை என்பது எளியமானுடரின் எண்ணம்” என்றான் காளன். “ஆனால் மெய்நோக்கினால் அரியதொன்றை உணர்ந்த ஒருவன் அதை சென்றடையாமல் ஓய்வதில்லை. அவ்வுணர்வை அடைவதே அரிது” என்றபடி அங்கிருந்த உருளைக்கல் ஒன்றில் அமர்ந்தான்.

பரிமேலழகர் உரை
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

மு.வரதராசனார் உரை
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

Thirukkural - Management - Hard Working
An often used and a convincing sentence is 'Hard working has its own rewards.’ The belief in the relationship between cause and effect has been valid since time immemorial. Even in dictionary, hard working appears before success. “Hard working,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 543), 
“is working with energy and care.”. Therefore, it is not a surprise to know that Valluvar has written on the concept of hard working too. Kurals teach us invaluable lessons in hard working.

Kural 611 encourages us not to give up executing a task just because the task is difficult to execute. A persistent and sustained effort will get us all accolades in the long  run. We will be proud of taking the task to its end. Our sincere efforts will overcome all hardships. In addition, there is merit in those efforts. Kural 611 also comes under ‘Perseverance' to reinforce the importance of consistency for sustained success.

Do not give up saying, “It is impossible.”
Effort will overcome.

The saying that ‘Winners never quit and quitters never win’ must be a sequel to the philosophy of this Kural. Giving up executing a task is easy and any one can do that. The real purpose and challenge of living is to persist until the end and achieve what one aspires to achieve.

Thirukkural - Management - Perseverance
Giving up a task when the task becomes a little challenging and complicate is easy. Anyone can give up or surrender when the going gets tough. Toughness of your mind makes you tough and helps you destroy all barriers in front of you. One needs tremendous courage and energy when the given task demands enormous efforts. Kural 611 advises us never to give up a task thinking that the task is very difficult to execute.

Do not give up saying, “It is impossible.”
Effort will overcome.

When you are determined, persistent, and courageous, you will put in your best efforts and your best efforts will bring you honor and fame. Remember the wise saying 'A knotty timber demands strong wedges.' If life is a knotty timber, you are a strong wedge. Kural 611 is presented in the Practice 'Hard Working' as hard working and persistence are interrelated.

English Meaning - As I taught a kid - Rajesh
One should have and believe that their goal/work/purpose/task has greatness/great value. When one believes on that great value, determined and doesn't deviate from it, remains focused and relentlessly puts efforts and tries it, has perseverance then one would achieve that greatness

Questions that I ask to the kid
How to attain greatness? (by doing great work) What factor is necessary? (Trying/perseverance) What drives greatness? (அருமை/great purpose) What factor is necessary to continue pursuing?

மடியுளாள் மாமுகடி என்ப

குறள் 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாளுளான் தாமரையி னாள்.
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
ஆள்வினை - முயற்சி; மகிழ்ச்சி
ஆள்வினையுடைமை -  முயற்சி உடைமை
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.
உளாள் - இருப்பது
மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்
மா - கருமை
முகடி - mukaṭi   n. prob. id. Goddess ofMisfortune; மூதேவி
மூதேவி - mū-tēvi   n. மூ- +. 1. Goddessof Misfortune, as the elder sister of Lakṣmi;[இலக்குமிக்கு மூத்தவள்] துர்ப்பாக்கியத்தின் அதிதேவதை. (பிங்.) சீதேவி யாள்பிறந்த செய்யதிருப்பாற்கடலில் மூதேவி யேன்பிறந்தாள் முன் (தனிப்பா.i, 179, 1). 2. Deformed person; குரூபி. (W.)
என்ப - என்பது ஆகும்
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.
இலான் - இல்லை என்றால்
தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.
தாள் - முயற்சி
உளாள் - இருப்பது
தாமரையினாள் - லஷ்மி தேவி

முழுப்பொருள்
சோம்பல் இருப்பவர்களிடம் மூதேவி இருப்பாள். அதாவது சோம்பல் இருந்தால் அங்கே தூர்பாக்கியம் இருக்கும். கேடு இருக்கும். அதுப்போல சோம்பல் இல்லாதவனிடத்திலும் முயற்சி உள்ளவன் இடத்திலும் லஷ்மிதேவி இருப்பாள். அதாவது வளம் பெருகும். துன்பம் அகலும்.

உதாரணமாக ஒருவன் வீட்டில் சோம்பலில் மூழ்கி ஒன்றும் செய்யாமல் இருந்தால் அவனை உலகமே ஏசும் - இவன் ஒன்னும் செய்யாம சாப்ட்டு சாப்ட்டு தூங்ரான். தருத்ரம்னு திட்டுவார்கள். அங்கே அவனுடைய புகழ் குன்றுகிறது. அதுவே முன்னேற முயற்சி செய்பவனை பார்த்து போற்றும். அவனை பார் அவன் எப்படி படிபடியாக கடின உழைப்பின் மூலம் முயற்சி செய்து முன்னேறுகிறான் என்று பாராட்டும். அவன் புகழ் ஓங்கும். இப்படி முயற்சி செய்பவர்களை உலக மக்களும் தக்க நேரத்தில் தோள் கொடுத்து ஊக்குவிப்பர்.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”மடியிலா அரசினான் மார்புளா ளோவளர்
முடியுளா ளோதெரிந் துணர்கிலா முளரியாள்” (கம்ப.எதிர்கோட் 8)

பரிமேலழகர் உரை
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர். இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

ஊழையும் உப்பக்கம் காண்பர்

குறள் 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
ஊழ் - முதிர்தல். பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பனபோல்(சீவக. 1560).
பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.

ஊழையும் -  தலைவிதியினையும்

உப்பக்கம் - உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி(வள்ளுவமா. 21). 2. The back; பின்பக்கம், முதுகு. ஊழையுமுப்பக்கங் காண்பர் (குறள், 620).

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

காண்பர் - காண்பிப்பர்

உலைவு - அழிவு; நடுக்கம்; வறுமை; கலக்கம்; தோல்வி; அலைவு; ஊக்கக்குறைவு

இன்றி - இல்லாமல்

உலைவின்றித் - உலைவு + இன்றி - நடுக்கமின்றி கலக்கமின்றி ஒருவித ஊக்கக்குறைவும் இன்றி

தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல்.

தாழ்²-த்தல் - 11 v. Caus. of தாழ்¹-. tr.1. To bow down, let down; to deepen, depress;தாழச்செய்தல். நின்றலையைத்தாழ்த் திருகை கூப்பு(திவ். இயற். பெரியதிருவந். 84). 2. To degrade;தாழ்மைப்படுத்துதல். இன்றிவட்டாழ்த்து (பெருங்.வத்தவ. 5, 45).--intr. 1. To wait, stay, delay;தாமதித்தல். தாழ்த்திடாமல் மின்னிடை வெந்தீத்தம்மின் (சேதுபு. சங்கர. 71). 2. To be slow, dull;மந்தமாயிருத்தல். (சூடா.)

தாழாது - ஒரு குறைவுமின்றீ, மனம்தளராமல், தாளாது, தாமதிக்காமல், மந்தமாக இல்லாமல்

உஞற்று - ஊக்கம்; முயற்சி; இழுக்கு; வழக்கு.

உஞற்றுதல் - முயலுதல்; செய்தல் தூண்டுதல்

உஞற்று பவர் - ஊக்கத்துடன் முயற்சிசெய்பவர்

முழுப்பொருள்
ஒருவர் செயலை செய்யும் பொழுது இது தான் நடக்கும் என்பதை தலைவிதி என்று கருதுகிறோம். அதனை மாற்ற முடியாது என்று பலர் சொல்வர். ஒரு செயலை எடுத்து முடிக்க முடியவில்லை என்றால் அது தலைவிதி, நாம் ஒன்றும் செய்ய இயலாது என்று அங்கு நின்று விட்டு, அச்செயலை கைவிட்டுவிட்டு அடுத்தச்செயலுக்கு தாவுகிறோம். ஒருவர் செயல்புரியாதற்கு பல காரணங்களை கூறுவார். அவை: “ஒருத்தன நம்பி இருந்தேன். கடைசி நேரத்தில கால வாரிட்டான்”, “அதுக்கெல்லாம் வசதி வேணும்”, “இவ்வளவுதான் என்னால முடியும்”,“நேரம் போதவே இல்லை”,“எனக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை”, "எனக்குச் சொல்ல யாருமில்லை”, “இருக்கிறது போதும். ரொம்ப ஆசைப்பட வேண்டாம்”, “எல்லாம் என் தலையெழுத்து!”, “எனக்கு நேரம் சரியில்லை”, “என் தலை விதி”, “நம் தலையிலே என்ன எழுதியிருக்கோ, அப்படித் தானே எல்லாம் நடக்கும்?”, “எனக்கு அதிர்ஷ்டம் இல்லை”, “நம்ம கையிலே என்ன இருக்கு?”, “என் துரதிர்ஷ்டம்”. 

மேற்சொன்னவைப்போல பல காரணங்கள்!  இதுபோல “தலை விதி” என்று நொந்து கொள்வது சுய பச்சாதாபத்திற்கும் கழிவிரக்கத்திர்கும் தான் (Self Pity) உதவும். வேறு எந்தப் பிரயோஜனமும் இல்லை. 

“ஆடத்தெரியாவதனக்கு மேடை கோணல்” (A bad worker blames the tools) என்னும் பழமொழிபோல. “யார் மீது பழி போடலாம். எதனால் இப்படி ஆனது என்று சொல்லலாம்” என்று இவர்கள் யோசிக்கும் நேரத்தில் அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து விடலாம்!

ஆனால் உண்மையில் ஒரு செயலை முடிப்பதற்கு இடையுறாக வருவதை ஊழ் என்று நாம் கருதலாம். ஒரு செயலையின் தோல்வியை இக்கணத்தில் ஊழ் என்று நாம் கருதலாம். அப்படி தோல்வியினை காணும் பொழுது அச்செயலினை கண்டு கலக்கம் கொள்ளாமல் (நடுக்கம் கொள்ளாமல், மனம் தளராமல்) அதனை தாமதிக்காமால் விடா முயற்சியுடன் ஊக்கத்துடன் செயல்படுபவர் அச்செயலை வெற்றியுடன் செய்து முடிக்கமுடியும். அப்படி செய்யும் பொழுது அவருக்கு வரும் ஊழ்களுக்கு (தோல்விகள், இடையுறுகள்) தனது புறமுதுகை காண்பிப்பார்.

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த  கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? என்று இறைவன் முருகனை நம்புவதைப் போன்று நாம் நமது செயலை நம்பினால் நாம் முன்னேறலாம். கண்ணுக்குத் தெரியாத விதியை நம்புவதைவிட நம் கைகளையும் கால்களையும் நம்பி உழைக்கலாம்!

நமது பிள்ளைகள் நாம் செய்யும் செயலைப்பார்த்து வளர்கிறார்கள். நமது பிள்ளைகள் நமது செயல்களின் விளைவு. ஆதலால் ஊழின் மீது பழியைப்போடாமல் மனம் தளராமல் செயலாற்றி முன்னேறவேண்டும்.

“நாம் செய்த வினைகள்தான் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. நாம் முன்பு செய்த செயல்களின் பலனைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.” என்பதையும் ”உன் வாழ்க்கை உன் கையில்” என்பதையும் நினைவில் கொள்க. உங்களுக்கான நேரம் வரும் பொழுது தகுதியுடன் இருக்க இப்பொழுதில் இருந்தே தொடர்ந்து நம்மை தகுதிப்படுத்துக்கொண்டே இருக்க வேண்டும். 

மேலும்


தன்னுடைய குடும்பத்திற்கு (அல்லது தனது நாட்டிற்கு) தேவையானவற்றை காலம் தாழ்த்தாமல் விரைந்து ஊக்கத்தோடு செயலாற்றிக்கொண்டு இருப்பவருக்கு அச்செயலை செய்து முடிக்கும் திறனும் அதற்கு தேவையான ஆட்களும் அவருக்கு தானாக கிடைக்கும்.

ஆதலால் ஒருவர் ஒரு செயலை செய்து முடிக்க அடிப்படையான தேவை எண்ணம், முயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, செயலாற்றுதல் மற்றவையெல்லாம் தானாக அமையும் என்பதை நாம் இங்கு அறிந்துக்கொள்ளலாம்.

When you want something all the universe conspires in helping you to achieve it - Paulo Coelho (The Alchemist) என்கிற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

தலைவனுக்கு தாளான்மை என்பது மிகவும் முக்கியமான பண்பு. அது அவனை சுற்றி உள்ள மக்களையும் உற்சாகப்படுத்தி அவர்களை முன்னே அழைத்துச்செல்லும். 

உதாரணம்: 
ஒரு போர் வீரன் போருக்கு செல்கிறான். யானை மீது வேலை எரிகிறான். அதன் பின்பு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பொழுது, எதிரி ஒருவன் அவன் மீது வேலை எரிகிறான். அந்த வேலை புன்னகையோடு பிடித்து, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று அதன் மீது மறுபடியும் எரிகிறான். அது தான் தாளான்மை என்று கருதுகிறேன். 

தலைவனுக்கு தாளான்மை என்பது மிகவும் முக்கியமான பண்பு. அது அவனை சுற்றி உள்ள மக்களையும் உற்சாகப்படுத்தி அவரகளை முன்னே அழைத்துச்செல்லும். 



மேற்காணும் காணொளியில் நாம் பல தலைவர்களை காண்கிறோம். அவர்கள் யாவரும் தங்களது செயலிற்கு முதலாவதாக முதல் அடியை எடுத்து வைத்தனர் (பலர் தங்களது வாழ்வில் அது சாத்தியப்படாது என்று முதல் அடியையே எடுத்து வைப்பது இல்லை). பின்பு அவர்கள் எடுத்த காரியங்களில் பல இடையுறுகளும் தடைகளும் வந்தாலும் அதனை எதிர்கொண்டனர். அவர்கள் செய்த தவறுகளை திருத்திக்கொண்டனர். தாங்கள் நோக்கங்களை நோக்கி இடைவிடாது விடா முயற்சியுடன் செயல்ப்பட்டனர். வென்றனர்.

”திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 38  நாள் என் செயும்”
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

......... சொற்பிரிவு .........

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

......... பதவுரை .........

நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.


மேலும்: அஷோக்

உற்றது கொண்டு மேல்வந்துறு பொருளுணருங் கோளார் 
மற்றது வினையின் வந்ததாயினும் மாற்றலாற்றும் 
பெற்றியர்” (கம்பராமாயணம் மந்திரப்படலம் 7).

“உதிக்கும் உலை....
விதிக்கும் விதியாகும்என் விற்றொழில்” (கம்ப.நகர்நீங்கு.134)


முயலாமையில்லார்க்கு முயலுக்கும் ஆமைக்குமான ஓட்டப்பந்தயத்தில் முயலுக்கு ஏற்பட்ட நிலைமைதான்

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது. 

பரிமேலழகர் உரை
ஊழையும் உப்பக்கம் காண்பர் - பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்; உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் - அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார்.

விளக்கம்
(தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் -தளர்ச்சியின்றித் தாழ்வற விடாது முயல்பவர்; ஊழையும் உப்பக்கங் காண்பர்-வெல்வதற்கரிய ஊழையும் வென்றுவிடுவர்.

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்."

(குறள். 380)

என்று முன்னரே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டமையால், இங்கு 'ஊழையும் உப்பக்கங் காண்பர்' என்பது எதிர்மறையும்மை கொண்டதே; அல்லது ஊழென்று தவறாக மக்களாற் கருதப்பட்டதை வெல்வதே. இதனால், திருவள்ளுவர் முன்னுக்குப் பின் முரண்படக் கூறினாரென்று இம்மியுங் கருதற்க. முந்தின குறளையே சற்று வலியுறுத்தி விடாமுயற்சியாளரை ஊக்கினதாகவே கொள்க.

உப்பக்கம் பின்பக்கம் அல்லது முதுகு. உப்பக்கங்காணுதல் புறங்காணுதல், அதாவது வெல்லுதல். தாழ்வறுதலாவது சூழ்ச்சியிலும் வலிமுதலியன வறிதலிலும் வினைசெய்வதிலுங் குற்றங் குறையின்மை. பல முறை தவறியபின் ஒரு வினையில் வெற்றி பெறுவதும் உயிரொடுங்கியிருந்தவர் இடுகாட்டிற் புதைக்கும் போது உட்செலுத்திய மருந்தால் மீண்டும் எழுந்து இயங்குவதும், தவறாகக் கணிக்கப்பட்ட பிறப்பியத்தில் (சாதகத்தில்) குறித்த காலங் கடந்து ஒருவர் வாழ்வதும், விடாமுயற்சியின் விளைவும் அறியாமையின் நீக்கமுமேயன்றி ஊழைவென்றதாகா. ஊழை ஒருவரும் வெல்ல முடியாது. வெல்லப்படுவது ஊழாகாது. "பணத்தைக் கண்டாற் பிணமும் வாயைத்திறக்கும்" என்னும் பழமொழி பணத்தின் பெருமை உணர்த்துவது போன்றே, "ஊழையும் .......... உஞற்றுபவர்." என்னுங் குறளும் விடாமுயற்சியின் வலிமையை உணர்த்துகின்றதென அறிக. ஈரிடத்தும் உம்மை எதிர்மறை யென்றும் அறிக.

'சாத்தன் வருதற்கு முரியன்' என்பது 'வராமைக்கும் உரியன்' என்று பொருள்படுவது போன்றே, 'சாத்தன் வராமைக்கும் உரியன்' என்பது 'வருதற்கும் உரியன்' என்று பொருள்படுவதால், இவ்விரண்டும் எச்சவும்மைகளேயன்றி எதிர்மறையும்மையும் உடன்பாட்டும்மையும் என்றாகா. 'பிணமும் வாயைத்திறக்கும்.' 'ஊழையும் உப்பக்கங் காண்பர்' என மேற்காட்டியனவே உண்மையான எதிர்மறையென வுணர்க. இவை எச்சப் பொருளை அடிப்படையாகக் கொண்டனவேனும், பிணம் வாயைத்திறக்காது, ஊழை உப்பக்கங் காண முடியாது, என்னுங் குறிப்பின வாதலால், "பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்" (புறம், 2) என்பவைபோல எதிர்மறையும்மையேயாம். "எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடிபின" ( தொல்.எச்.31) என்றது ஏகார வோகாரங்கட்கேயன்றி உம்மைக்கன்று.

ஊழ் என்பதும் தெய்வ ஏற்பாடு என்பதும் ஒன்றேயாதலின், மாந்தன் முன்பு தவறு செய்து பின்பு திருத்திக் கொள்வது போல் இயற்கையான முற்றறிவுள்ள இறைவனுஞ் செய்யானென்றும் , அவன் அங்ஙனஞ் செய்ததாகக் கூறுவதெல்லாம் மாந்தன் கட்டுக் கதையும் தற்குறிப்பேற்றமுமே யென்றும், அறிந்து கொள்க.

"அன்றெழுதினவன் அழித்தெழுதான் ."
என்னும் பழமொழியும்,

"உறற்பால நீக்கம் உறுவர்க்கு மாகா
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பிற் றருவாரு மில்லை யதனைச்
சிறப்பிற் றணிப்பாரு மில்."
என்னும் நாலடிச் செய்யுளும் (104) இங்கு நோக்கத்தக்கன.

மணக்குடவர் உரை
ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன்படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர். இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.

மு.வ உரை
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

Thirukkural - Management - Fate
Though Valluvar has written ten Kurals to educate his readers on the influence of fate in one's life, he has left the belief in the existence of fate to the readers themselves.  Valluvar's thought  in Kural 620 is contrary to the thoughts presented by him in the chapter 38 ‘Fate’ in Thiruhhural.

Those that strive undaunted  will see
The back of Fate itself.

A person with determination, persistence,  and relentless effort will defeat his fate that interferes with his life. Our relentless efforts can defeat our fate. Many people have fought against all odds to achieve significant feats in their lives. You can find thousands of them. Probably the quote, 'Winners never quit' is an offshoot of this thought.

வினைக்கண் வினைகெடல் ஓம்பல்

குறள் 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வினை தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வினைக்கண் - செய்யும் செயலின் (கடினமின்மையின்) மீது உள்ள கண்ணோட்டத்தில் 

வினை தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

கெடல் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

வினைகெடல் - செய்யும் செயல் கடினம் என்று எண்ணும் போது அல்லது இடர்கள் வரும்போது

ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல், 
ஓம்பல் - செய்யும் செயலை பேணவேண்டும்
ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

வினை தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
வினைக்குறை - ஒரு செயலை செய்யாமல் பாதியில் 

குறை - குற்றம்; குறைபாடு; வறுமை; எஞ்சியது; மனக்குறை; தவறு; நேர்த்திக்கடன்; இன்றியமையாப்பொருள்; செயல்; வேண்டுகோள்; வேண்டுவது:துண்டம்; ஆற்றிடைக்குறை; சொல்லின்எழுத்துக்குறை; ஆறாம்வேற்றுமை; உண்ணுந்தசை; அரசிறை.

குறை - இன்றியமையாதப் பொருள் (பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே' என்று  புறநானூறு [188]  கூறுகிறது. 

தீர்-தல் - tīr-   4 v. [T. tīru, K. tīr, M.tīruka.] intr. 1. [Tu. tīruni.] To end, expire,vanish; உள்ளதொழிதல். 2. To be completed,finished, consummated; முற்றுப்பெறுதல் வேலைதீர்ந்துவிட்டது. 3. To separate; to leave; tocease, as pain or disease; to be cleared up, as adoubt; to be freed, as from a curse or its effects;நீங்குதல். திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு (குறள்482). 4. To go, proceed; போதல் (பிங்.) 5.To be absent, non-existent; இல்லையாதல். பாய்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66). 6. To die, perish;அழிதல். சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ்சிந்தி (கம்பரா. முதற்போர். 238). 7. To pass; tobe spent; கழிதல் சிலதினங்க டீர்ந்துழி (கம்பரா.திருவவ. 43). 8. To be exhausted, used up;செலவாய்ப்போதல். கைப்பணமெல்லாம் தீர்ந்தது.ஆயிரயோசனையாழமுந் தீர (கம்பரா. சேதுபந். 45). 9.To belong absolutely; உரிமையாதல். திருமகட்கேதீர்ந்தவாறென்கொல் (திவ். இயற். 1, 42). 10. Tobe determined, decided; நிச்சயித்தல் தீர்ந்த  

தீர் - இறுதியை அடைதல்
தீர்ந்து - விலகியது, முற்றம் சோர்வடைந்த
தீர்ந்தாரின் - முற்றம் சோர்வடைந்து செய்யாது விலகியவர்

தீர்ந்தன்று - விலகிவிடும்

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் பொழுது, அது கடினம் (செயலின் கடினத்தினாலோ அல்லது நேரத்தினாலோ அல்லது இடர்களினாலோ) என்று எண்ணும் பொழுது செய்யும் செயலை பேணுதல் வேண்டும். 

அவ்வாறு செய்யாது செய்யும் செயலை பாதியில் விட்டுவிட்டு சோர்வடைந்து செயலில் இருந்து நீங்கியவரை இவ்வுலகமும் கைவிடும். 

மற்றும் ஒரு குறளில் இதை பற்றி கிட்டத்தட்ட இதே பொருளில் சொல்கிறார் திருவள்ளுவர்.
எண்ணுவம் என்பது இழுக்கு. (சுட்டியை சொடுக்கவும்)

இதனை கிட்டதட்ட இதே பொருளில் சற்று மாறுபட்டு உள்ள ஒரு ஆங்கில வாக்கியம்
"When you really want something to happen, the whole world conspires to help you achieve it". - The Alchemist (Paulo Cohoelo) 

பரிமேலழகர் உரை
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று-வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக் கண் வினைகெடல் ஓம்பல்-அதனான் செய்யப்படும் வினைக் கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. 

விளக்கம் 
(குறை-இன்றியமையாப் பொருள். அது ''பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே'' [புறநா. 188] என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.)

மணக்குடவர் உரை
வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று. இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது. 

மு.வரதராசனார் உரை
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

Thirukkural - Management - Perseverance
The world does not consider a person persistent who considers the task at hand as tough and gives up execution of that task. On the contrary, the world recognizes and accepts a person who perseveres to complete the task undertaken, supports Kural 612.

The world gives up those who give up: 
Stick to your task. 

One of the purposes of living is to have the responsibility to complete a task undertaken. The saying 'Winners never quit and quitters never win’ probably is an offshoot of this thought. 

English Meaning - As I taught a kid - Rajesh
While doing a work and moving towards a goal, one might find it difficult or get self doubts, one might face challenges, yet without deviating from the work and without giving up the work, one should continue pursuing the work. If one gives up in the middle of work, then world, scholars, managers will give up on him/her and not respect him/her

Questions that I ask to the kid
What happens if we don't do a work properly?
What happens if we don't complete a work?
What happens if we give up on our work/mission/goal?
Whom will the Scholars/world/(சான்றோர்கள்) not respect?