Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_064. Show all posts
Showing posts with label Athikaaram_064. Show all posts

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

 

குறள் 640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள் 
முறைப்படச் - முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

சூழ்ந்தும் - சூழ்தல் -  சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

முடிவிலவே -  குறைபடவே (முடிபடாத)

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்வர் - செய்வார்கள்

திறப்பாடு - கூறுபாடு; சீர்ப்படுகை; திறமை.

இலாஅதவர் - இல்லாத அமைச்சர்கள்

முழுப்பொருள் 
ஒரு அமைச்சர் அரசருக்கு அடுத்த சில இடங்களில் (ஸ்தானத்தில்) இருப்பவர். ஒரு அரசர் மேலிருந்து ஆனையிடுபவர். திட்டங்களை முடிவுசெய்பவர். அவரால் எல்லாவற்றையும் செயல்படுத்த முடியாது. ஒரு அரசர் அவ்வப்போது வந்து கண்காணிக்க முடியும். அவ்வளவு தான் ஏனெனில் ஒரு அரசர் பல துறைகளில் பங்காற்றுபவர் இறுதி முடிவு எடுப்பவர். அவருக்கு செயல்படுத்த எல்லாம் நேரம் இருக்காது. அரசரின் கீழ் இருப்பவர்களே எத்தகைய திட்டத்தையும் நிகழ்த்தவேண்டும்.  

ஆதலால் ஒரு செயலை நிறைவேற்றும் பொறுப்பு அமைச்சரிடம் உள்ளது. இதே அமைச்சர்தான் ஒரு செயலை முறையாக ஆராய்ந்து எண்ணி கூறியிருப்பார். ஆனால் செயலாற்றும் களத்தில் திட்டத்தின் படி நிகழும் பொழுது அது பலவித சோதனைகளை சந்திக்கும். அத்திட்டத்தை செயலாற்றும் திறன் இல்லாத அமைச்சர் அச்செயலை அரைகுறையாகவே செய்வார். அதனால் எண்ணிய பலனும் கிடைக்காது பொருட்களும் உழைப்பும் நேரமும் வீணாகும். அத்தகைய அமைச்சரை அருகில் வைத்துக்கொள்ளாதே. ஒரு விதத்தில் அத்தகைய அமைச்சர் வாய்ச்சொல்லில் வீரர், மண்குதிரை. 

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார். (அக்கூறுபாடாவன: வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

சாலமன் பாப்பையா உரை
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்


குறள் 639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள் 
பழுது - பயனின்மை; குற்றம்; சிதைவு; பதன்அழிந்தது; பிணமாயிருக்குந்தன்மை; பொய்; வறுமை; தீங்கு; உடம்பு; ஒழுக்கக்கேடு; இடம்; நிறைவு.

எண்ணும்  - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

மந்திரியின் - மந்திரி - அமைச்சன்; வியாழன்; சுக்கிரன்; குபேரன்; வரும்பொருள்உரைப்போன்; படைத்தலைவன்; புதன்; பித்தம்; காண்க:திராய்.

பக்கத்துள்  - பக்கம் -  அருகு; இடம்; பாரிசம்; நாடு; வீடு; விலாப்புறம்; வால்; அரசுவா; சிறகு; அம்பிறகு; நட்பு; அன்பு; சுற்றம்; கொடிவழி, வமிசம்; சேனை; பதினைந்துதிதிகொண்டகாலம்; திதி; கூறு; நூலின்பக்கம்; கோட்பாடு; அவமானத்தின்உறுப்பினுள்மலைநெருப்புஉடைத்துஎன்றதுபோன்றஉறுதிசெய்வசனம்; துணிபொருள்உள்ளவிடம்; தன்மை; கையணி; ஒளி; நரை; உணவு.

தெவ் - பகை; பகைவன்; போர்; கொள்ளுகை.

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல், (வி)ஆராய்; தெளி.

எழுபது - eḻu-patu   n. ஏழு + பத்து Seventy.  

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்a; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

உறும் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

முழுப்பொருள் 
எத்தகைய அமைச்சனை ஒரு அரசன்/ தலைவன் தன் அருகில் வைத்திருக்கக்கூடாது? 
பயன் அல்லாதவற்றையும் தீங்கு விளைவிப்பதையும் ஒழுக்கமல்லாதவற்றையும் நாட்டையும் (நிர்வாகத்தையும்) சிதைக்கக்கூடியதையும் தவறான வழிகளையும் குற்றங்களையும் தன்னலத்தையும் நினைக்கும் ஒரு அமைச்சனை ஒரு அரசன் அருகில் வைத்துக்கொள்ளுதல் எண்ணிக்கையில் அடங்கா பகைவர்களை அருகில் வைத்துக்கொள்வதற்கு இணையாகும். அதனால் துன்பமே விளையும். ஆதலால் அத்தகைய அமைச்சரை அருகில் வைத்துக்கொள்ள கூடாது. ”மண்குதிரையை நம்பி சேற்றில் இறங்க கூடாது” என்பதில் நினைவில் கொள்க. 

பல உரைகள் பழுது என்ற சொல்லுக்கு கெடுக்கும் அல்லது தன்னலம் என்ற பொருள்களை மட்டும் எடுத்து உரையாற்றியுள்ளன. ஆனால் பயனற்ற எண்ணங்களும் கேட்டை விளைவிக்கும் முழுவதுமாய் நுணுகி ஆராயாமல் தீட்டிய திட்டம் தீங்கு விளைவிக்க கூடும். அது பெரும் பொருட்சிதைவுகளையும் தீமையையும் நிகழ்த்தும். 

பொதுவாக பார்த்தால், எண்ணாமல் (பழுதான எண்ணங்களை) கூறும் இத்தகைய அமைச்சர்கள் ஒரு விதத்தில் அறிவற்றவர்கள் அல்லது திறன் இல்லாதவர்கள் அல்லது சோம்பேரிகள் அல்லது அலட்சியமானவர்கள் அல்லது சிந்திக்கும் திறத்திலும் எண்ணங்களிலும் கிட்டபார்வை (Myopia) உடையவர்கள் அல்லது தன் கருத்தில் தேவைக்கு அதிகமான அதீத நம்பிக்கை உடையவர்கள் அல்லது பிடிவாதமானவர்கள் அல்லது பிறர் கூறும் அறிவுரைகளை கேட்காமல் உதாசீனம் / அலட்சியம் / நிராகரிப்பு செய்பவர்கள். இத்தகையவர்களை முழுவதுமாக நம்புவது மண்குதிரையை நம்பி சேற்றில் இறங்குவதுப்போல் ஆகும். 

இத்தகைய அமைச்சர்கள் அனுபவம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது தனக்கு திறன் இல்லாத துறைகளில் ஆலோசனை கூறுவர். பெரும் நிதியினை கையாளாத ஒருவரிடம் பெரும் நிதி சார்ந்த செயல்களில் கருத்து கேட்ககூடாது. ஏனெனில் ஒரு சிறு தவறும் பெரிய பொருளாதார நஷ்டத்தை கொடுக்கும். கருத்துகூறியவர் வணிகம் என்றால் பெரிய செயல் என்றால் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும் பொருளாதார நஷ்டங்கள் தவிர்க்க முடியாது. யாரும் வேண்டும் என்று செய்யவில்லை என்று சப்பைக்கட்டு கூறுவார்கள். முடிந்ததை பற்றி பேசி பயன் என்று தன் தவறுகள் பற்றி பேச அனுமதிக்கமாட்டார் அதாவது (நன்கு எண்ணாமல் கூறியது) தனது தவறு என்றென்பதை மறைப்பர். 

இது அரசக்கு மட்டும் பொருந்தாது. ஒரு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உதவியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பொருந்தும். அரசரும் தலைவரும் (அமைச்சரையும் உதவியாளரையும் மட்டும் நம்பாமல்) நன்கு ஆராய்ந்து எண்ண வேண்டும்.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓரெழுபதுகோடி தெவ்உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர். (எழுபது கோடி என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலான் காக்கப்படான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதலை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர். இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.

மு.வரதராசனார் உரை
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

 

குறள் 638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
அறி - அறிவு, ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

கொன்று - கொல் -  கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

அறியான் - அறியாதவன், உணராதவன்

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்.

உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன்.

உழையிருந்தான் - உடனிருப்போன்; அமைச்சன்; நோயாளிக்குஉதவிபுரிபவன்.

கூறல் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

முழுப்பொருள் 
ஒரு அரசன் அல்லது தலைவன் ஆட்சி செலுத்த நாட்டை நிர்வகிக்க அறிய வேண்டியவற்றையெல்லாம் தானாகவும் அமைச்சர்கள் மூலமாகவும் அறிய வேண்டும். அறிந்து அதற்கேற்றவண்ணம் செயலாற்ற வேண்டும். அதுவே அரசனின்/தலைவனின் கடமையாகும். 

ஆனால் ஒரு தலைவன் அமைச்சர்கள் கூறும் தகவல்களை ஆலோசனைகளை அறிந்து உணராமலும் தானாகவும் கற்று உணராமலும் இருந்தால் அது நாட்டிற்கும் நிர்வாகத்திற்கும் கேடுவிளைப்பதாகும். தலைவனின் அத்தகைய போக்கு அவருடன் வேலை செய்பவர்களுக்கு சோர்வை கொடுக்கக்கூடும். அவருடன் தொடர்ந்து வேலை செய்யவும் தோன்றாது. இது அரசு. நிர்வாகங்களை மாற்றுவதுப்போல் மாற்ற முடியாது. மேலும் நாம் சொல்பவனவற்றை அரசர் எடுத்துகொள்ளவேண்டும் என்றில்லை (அரசராவது தானாக கற்க வேண்டும். அது வேறு விஷயம்) என்பதையும் உணரவேண்டும். ஆதலால் ஒரு பொறுப்புள்ள வலிமையான நல்லறிவுள்ள அமைச்சர் நாட்டின் நாட்டு மக்களின் நலன் கருதி மனம் தளராமல் விடாமுயற்சியுடன் அவன் அரசனுக்கு/தலைவனுக்கு தனது தகவல்களையும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறிக்கொண்டு உடன் இருக்க வேண்டும். அதுவே அரசருக்கும் நாட்டிற்கும் அமைச்சர் செய்ய வேண்டிய கடமையாகும். 

மேலும் அமைச்சர் சொல்லவில்லையென்றால், பின்பு ஒரு நாள் அந்நாட்டு மக்கள் கூறுவர். அது இன்னும் சங்கடம் ஆகிவிடும்.

இது நாட்டில் உள்ள அமைச்சருக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. இல்லறத்தில் குடும்பதலைவர்கள் எல்லாவற்றையும் எப்போழுதும் கேட்கமாட்டார்கள். ஆனால் உடன் இருக்கும் பெரியோர்கள் சகோதரர்கள் குழந்தைகள் குடும்பதலைவருக்கு அறிவுரை சொல்லலாம். இவன் கேட்க மாட்டான் என்று சொல்லாமல் விட்டால் பின்பு யார் தான் சொல்வது? யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானலும் கேட்கும் மனநிலைக்கு வரலாம் அல்லவா.

இது நிர்வாகங்களுக்கும் பொருந்தும். ஒரு நிர்வாகத்தின் உரிமையாளர் தனக்கு அந்த வணிகத்தை பற்றி நன்கு தெரியும் என்று நினைப்பர். தான் நினைப்பதும் தனக்கு தோன்றுவதும் சரி என்று நினைப்பர். பிறர் கூறுவதை கேட்க மாட்டார்கள். கேட்டாலும் அதற்கு ஏற்றார்ப்போல் செயல்பட மாட்டார்கள். கேட்டால் நேரம் இல்லை ஆட்கள் இல்லை என்று ஆயிரம் காரணங்கள் கூறுவர். ஆனால் உடன் இருப்பவரகள் சொல்லி என்னப்பயன் இவன் செய்வதை தான் செய்வான் என்று நினையாமல் எது சரியோ அதனை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். கேட்பதும் கேட்காமல் இருப்பதும் அவரவர் முடிவு. குறைந்தது சொல்லிய கடமையாவது நிறைவேறும். உடனிருந்தோரின் மனசாட்சிக்கு விரோதமாக இருக்காது. 

விதுரர் அமைச்சனாக இருந்தும், காரியக் குருடன் திருதாராட்டினனும், பொறாமயால் கண்மறைக்கப்பட்ட துரியோதனனும் அவன் பேச்சைக் கேட்கவில்லையே, இறுதி வரையிலும். ஆனாலும், விதுரனும் அவர்களுக்கு முறையானவற்றை அறிவுறுத்துவதைத் தளராமல் செய்தான் என்றே மஹாபாரதம் சொல்லுகிறது. நல்ல விளவு ஏற்படும் என்னும் நம்பிக்கையால் அல்ல, அது அவனுக்கு கடமை என்பதால்.

இதிகாசம் காட்டும் உண்மை இதுவாயினும், வள்ளுவன், “அடிமேல் அடிவைத்தால், அம்மியும் நகரும்”, அல்லது “எறும்பூற கல்லும் தேயும்” என்கிற பழமொழிகளின் அடிப்படையிலே நம்பிக்கையையும் சொல்லுவதாகத் தெரிகிறது. வள்ளுவனைத் தவிர வேறு புலவர்கள், “அறிகொன்று” என்று சொல்லியிருந்தால் அதை தமிழ் புலவர்கள் ஏற்றிருப்பார்களா என்பது ஐயமே! சொற்சிதைவாகவே தூற்றியிருப்பார்கள்.

அமைச்சருக்கு இலக்கணம் வகுக்கும் பாடல்கள் இலக்கியங்களில் ஏராளம். பழமொழி நானூறு இவ்வாறு கூறுகிறது.

“உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக் 
குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க்கு உறுத்தல் 
மலைத்துஅமுது உண்ணக் குழவியைத் தாயர் 
அலைத்துப்பால் பெய்து விடல்” (பழமொழி 212)

”மூரித்தேன் தாரினாய்நீ முனியினும் உறுதி நோக்கிப்
பாரித்தேன் தரும நுண்ணூல் வழக்கது வாதல் கண்டே” (சீவக 214)

“அற்றமின் றுலகம் காக்கும் அருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகும்
மற்றவர்க் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி தெருண்டவர் கண்ட தன்றே” (சூளா.மந்திர.8)

”கதங்கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறிப்
பதங்கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பன்னூல்
விதங்க ளாலவன் மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்ததோர் யானை” (கம்ப.வரைக்காட்சி.4)

கம்பனின் மந்திரப்படலப் பாடல் (9) இக்குறள் கருத்தை இன்னும் தெளிவாகக் கூறுகிறது.

“தம்முயிர்க் குறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்று உரைக்கும் மெய்யர்”

கந்தபுராணப் பாடலொன்றும் அழகாக இதையே சொல்லுகிறது.

“மன்னவர் செவியழல் மடுத்த தாம்என 
நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச் 
சொன்னவர் அமைச்சர்கள்…”

ஒரு குறிப்பு, வள்ளுவர் அமைச்சர், உழையிருந்தான், மந்திரி என்ற சொற்களை, அமைச்சர் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளான். தவிரவும் நுண்ணியர், சாமந்தன் போன்ற சொற்களும் அமைச்சரையே குறிப்பன.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை. ('அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல். 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அரசன், அமைச்சன் கூறிய பொருளை யறிக: அவன் ஒன்றறியானாயினும் அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன். இஃது அரசன் கேளா னென்று சொல்லா தொழிதலாகாதென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
It is duty of the king to listen to the advise of the wise counsel and ministers and act accordingly. However, sometimes or regularly, a king might stub out the wise counsel or not listen to the ministers. Yet, it is the duty of the minister and the wise counsel to advise firmly. Because, there might be reasons or it be fault of King to not listen to. But, if the ministers don't do their duty, few laters, people would pass the information to the King. Hearing that, King might sack the ministers. Despite, the acceptance or rejection of our advise, one should advise firmly as a duty. Truth has to be said despite it is acceptance. We should not only say good things or sweet things. 

For e.g, in Mahabharata we can see that blind king Dridhrastra and his son Duryodana never listened to their minister Vidurar despite the world (and history) praised Vidurar as the most knowledgable and righteous person. Even Krishna paid respects to Vidurar by visiting his house. Despite all rejections from Duryodana and Dridharasta, Vidurar always did his duty. He gave right advises because he felt it is his duty. 

Questions that I ask to the kid
Your boss (or family member) is continuously rejecting your wise suggestions continuously. What  should you do ? Why?

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

குறள் 637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
செயற்கை - இயற்கைக்குமாறானது; காண்க:செயற்கைப்பொருள்; தொழில்; தன்மை

அறிந்தக் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கடை - (வி)குடை; சிலுப்பு; தயிர்கடை; பருப்புமுதலியனகடை; மரம்முதலியனகடை; தீக்கடை

கடைத்தும் - kaṭai-   4 v. [K. kaḍa.] tr. 1.To churn with a churning rod; மத்தாற்கடைதல் பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் (சிலப். 17, 2).2. To turn in a lathe; to form, as moulds on awheel; மரமுதலியன கடைதல் கடைந்த மணிச்செப்பென வீங்கு (கூர்மபு. தக்கன்வே. 52). 3. To mash toa pulp, as vegetables, with the bowl of a ladle;மசித்தல். 4. To increase, as the passion of love;மிகப்பண்ணுதல். காதலாற் கடைகின்றது காமமே(சீவக. 1308).--intr. 1. To trickle, drip, as honey;அரித்தல். கடையுங் கட்குரல் (சீவக. 1202). 2. Torattle and wheeze, as the throat from accumulation of phlegm; கடைவதுபோன்ற ஒலியுண்டாதல்.தொண்டையிற் கபங் கடைகிறது. 

உலகத்து - உலகத்தினுடைய
உலகு  -  உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

இயற்கை - இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை

அறிந்துஅறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

செயல் -  தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள் 
ஒரு அமைச்சர் தனது பயண அனுபவங்கள் மூலமாகவும் தான் கற்ற பல (நாட்டு) நூல்கள் மூலமாகவும் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப்பற்றி ஒற்றர்கள் மூலமாகவும் தான் அறிந்தவற்றை நுணுகி ஆராய்ந்துணர்ந்தாலும் அது ஒருவித செயற்கை அறிவே என்பதை உணரவேண்டும். 

தன்னாட்டு மக்கள், தன் நாட்டின் இயற்கை வளங்கள் ஆகியவற்றின் இயல்பறிந்து அதற்கு ஏற்றவாறு தான் கற்ற அறிவை பயன்படுத்த வேண்டும். ஒரு திறனோ அல்லது செயலோ நாட்டிற்கு எடுபடாது ஆகாது என்றால் அதனை செய்யக்கூடாது. அல்லது ஒரு திறன் அல்லது செயல் தன் நாட்டுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப சில மாறுதல்கள் தேவைப்படும் எனில் அவற்றை செய்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான் செயல் எடுபடும் வெற்றி அடையும் தீமையும் விளைவிக்காது.

We can take this Kural and apply in marketing for regionalization/localization of a product.

மேலும் : அஷோக் உரை 

1) ”இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும். ”

2) மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்.....

3) மூன்றுபொன்னும் முனிந்துவிட்டால் மிச்சம் ஏதுமுண்டோ

பரிமேலழகர் உரை
செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க. (கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க. உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

Thirukkural - Management - Learning
Kurals provide very high possibilities for learners to appreciate the process of learning. We need to use them in the right contexts, as timing is relevant for the effectiveness of Kurals. 

The chapters are named as ‘practices’ because Valluvar emphasized the importance of constant practice to make one’s learning permanent. However, most of us find the process of practicing what we have learnt difficult, as we can find umpteen excuses not to practice. A few excuses that Kurals are complex to understand and practice are:
1) We learn Kurals by memorizing-rote memory, 
2) We learn just to pass the exams – part of our education,
3
) We cannot understand the form and meaning since they are too complicate and written in ancient Tamil, 
4) We do not get opportunities to apply the learning and 
5) A few more excuses of your own.

As an outcome of these excuses, the learning does not last longer. 
Valluvar would have anticipated our excuses. Hence, he highlighted the importance of practicing what we learn through Kural 637
However well-versed in books, Be practical.
This Kural provides practical advice to us. Even if we read the best books and glean the best knowledge from those books, that knowledge may not be helpful when we do not apply the learning in real life situations. Knowledge plus application is achievement. Learning and experimenting develop expertise. Therefore, combining knowledge with practice makes one a professional.


English Meaning - As I taught a kid - Rajesh
A person might have lots of knowledge through reading books, education, experience, travel, information etc. However, one has to analyze and understand the situation deeply and act according to the nature of the world. Because nature also plays a role in a situation/world. A thing that works in another place may not work here. A thing that worked earlier in the same place may not work again now. Because the nature of the place might have changed. We have to adapt to the current situation. 

Questions that I ask to the kid
Despite all knowledge, how should we act in a situation? Why?

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

குறள் 635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள் 
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆன்று நிறைந்து:விரிந்து; நீங்கி.

அமைந்த  - அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

சொல்லான் - சொற்களை பயன்படுத்துபவனை 

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

திறன் - திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு, பசு, எருமை கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறிந்தான் - அறிந்தவன்

தேர்ச்சித் - ஆராய்ச்சி; கல்வி; தெளிவு; பயிற்சி; தேர்வில்வெற்றிபெறுகை; ஆலோசனை.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள் 
ஒரு அமைச்சரை எப்படி தேர்வு செய்யவேண்டும்?
1. அறம் அறிந்துணர்ந்தவாக இருத்தல் வேண்டும். அறத்தின்படி நடப்பவராக இருத்தல் வேண்டும். அறத்தின் படி செயலாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

2. அறிவு நிறை பெற்று கூறுபவற்றை சரியான தெளிவான குறைவான சொற்களில் அடக்கமாக கூறுபவராக இருத்தல் வேண்டும் 

3. எல்லாக்காலங்களிலும் எந்த ஒரு சூழலிலும் செயலாற்றக்கூடிய திறமை, வலிமை, மேன்மை, இயல்பு, மனஉறுதி கொண்டவராய் இருத்தல் வேண்டும். 

இம்மூன்று குணமும் திறனும் இருக்கிறதா என்று ஆராய்ந்து ஒரு அமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும். 

பாரதி அன்னைப் பராசக்தியை வேண்டுகின்ற பாடல் ஒன்று, அமைச்சருக்குச் சொல்லப்படும் குணநலன்களுக்கு மிகப் பொருத்தமாக இருப்பதைக் காணலாம்.

“எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும் ; தெளிந்தநல் லறிவு வேண்டும்;
………..
மனதி லுறுதி வேண்டும்; வாக்கினி லேனிமை வேண்டும்;”

உலகமக்களின் சார்பில் தனக்காக வேண்டுவது போல், ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியவற்றைப் பற்றி பாரதி பாடிய, பாடல், இவ்வதிகாரத்தில் அமைச்சருக்கு வேண்டிய குணநலன்களாக வள்ளுவர் சொல்லியிருப்பதை ஒத்திருக்கின்றன.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம். (தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.

மு.வரதராசனார் உரை
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்

குறள் 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள் 
பிரித்தலும் - பிரித்தல் - பிரியச்செய்தல்; முறுக்கவிழ்தல்; பகுத்தல்; வகுத்தல்; கட்டவிழ்தல்; பங்கிடுதல்.

பேணிக் - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

கொளலும் - கொளல் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

பிரிந்தார்ப் - பிரிந்தவர் ; பிரித்துக்கொண்டவர்

பொருத்தலும் - பொருத்து - இணைப்பு; உடல்மூட்டு; மரக்கணு; ஒன்றுசேர்க்கை; ஒப்பந்தம்; மரத்தின்இணைப்பு; கன்னப்பொட்டு

வல்லது - வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.

அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்.

முழுப்பொருள் 
திறமையான வலிமையான அமைச்சரவை எது ?அவற்றின் கடமைகள் யாவை ?

1. பிரித்தல் - நண்பனின் நண்பன் நண்பன். அதுபோல் நண்பனின் பகைவன் பகைவன். ஆதலால் பகைவரின் நண்பர்களை பகைவரிடம் இருந்து பிரித்தல் பகைவரின் பலத்தை குறைப்பதற்கு வழிவகுக்கும். அதையே ஒரு அமைச்சு செய்யவேண்டும்.

உதாரணமாக மகாபாரதத்தில் துரியோதனனும் பாண்டவர்களும் எதிரிகள். கர்ணனும் துரியோதனனும் நண்பர்கள். அதனால் பாண்டவர்கள் கர்ணனுக்கு எதிரி ஆனார்கள். கர்ணனை துரியோதனனிடம் இருந்து பிரிக்க கர்ணனின் அன்னை குந்தி மூலம் முயற்சி செய்தான் கிருஷ்ணன். அதில் வெற்றிபெறவில்லை என்றாலும் குந்தியின் மூலம் கர்ணனிடம் இருந்து சில வரங்களை பெற்று கர்ணனை வலுவிழக்க செய்தான்.

2. பேணுதல் நண்பனின் நண்பன் நண்பன். அதுபோல் நண்பனின் பகைவன் பகைவன். அது இங்கும் பொருந்தும். நமது அண்டை நாட்டினர்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருப்போரை நமது நண்பர்களாய்ப் பேணி காத்துக்கொள்ள வேண்டும். அது நமக்கு எப்பொழுதும் வலுசேர்க்கும் அரணாக அமையும். இல்லையென்றால் அவர்கள் நமக்கு பகைவராய் மாற வாய்ப்புண்டு. நண்பர் பகைவரானால் அது நமக்கு பேரிழப்பாகும்.

3. பிரிந்தார்ப் பொருத்தலும் - எக்காரணத்திற்காகவோ நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை பழைய காழ்ப்புகளை மறந்து மறுபடியும் (அவர்கள் முயற்சியாலோ அல்லது நமது முயற்சியாலோ) நம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். (கண்டிப்பாக அவர்களை உளவு/ஒற்றாடவும் வேண்டும்)

மேற்சொன்னவாரு திறமையாக செய்ய வல்லதே நல்ல ஒரு அமைச்சு. இவை அமைச்சின் கடமையும் ஆகும்.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.).

மணக்குடவர் உரை
மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான்.

மு.வரதராசனார் உரை
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை
நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

குறள் 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்

கற்று - கல்வி

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கற்றறிதல் - கல்வியினை கற்று அதனை அறிந்து பின்பற்றுதல் 

ஆள்வினை - முயற்சி; மகிழ்ச்சி

ஆள்வினையோடு - முயற்சியுடன் 

ஐந்துடன் - ஆகிய ஐந்து அங்கங்களை 

மாண்டது - மகிமைப்பட்டது
மாண்பு, v. noun. Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectability, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.
மாண்டார், appel. n. [pl.] The illustrious, the great, பெருமையோர். (நால.) 2. See மாள்.

அமைச்சு - அச்செயலை மகிமைப் பட செய்யவேண்டும் என்று எண்ணி அச்செயலை முடிக்கத்தக்கவன் அமைச்சன்

முழுப்பொருள் 
வன்கண் என்ற சொல்லுக்கு பல பொருள்களை இங்கே காணலாம். 1. வீரத்தன்மை, மனவலிமை ஆகியவற்றை கூறலாம் 2. கண் என்றால் கண்ணோட்டம் என்றும் கூறலாம். வன்கண் என்று கூறுவதானால் வலிமையான கண்ணோட்டம் என்ற பொருள் பொருந்தவில்லை.  ஆதலால் வன்கண் என்றால் எந்த செயலையும் எப்பேர்ப்பட்ட இன்னல்கள் வந்தாலும் செய்து முடிக்க கூடிய மனஉறுதி கொண்ட மனம் வேண்டும் என்று கூறலாம்.

இக்குறள் கூறும் கருத்து என்னவென்றால்  ஒரு அமைச்சர் என்பவர் முக்கியமான ஐந்து குணங்களை கொண்டிருக்க வேண்டும் 1) எந்த செயலையும் செய்து முடிக்கும் மனவலிமை 2) மக்களையும் ஊரையும் நாட்டையும் பாதுகாக்கும் திறன் (இங்கே பாதுகாப்பு என்றால் அந்நியர்களிடமும் இருந்து பஞ்சத்தில் இருந்து நோய்களில் இருந்து போன்று பல இன்னல்களில் இருந்து பாதுகாப்பது)  3) தன் துறை சார்ந்து கசடற கற்றுக்கொண்டே இருத்தல் 4) கற்றவற்றை ஆராய்ந்து மக்களுக்கு தேவையானவற்றை செய்தல் 5) தளராத முயற்சி. ஆக இந்த ஐந்து குணங்களும் ஒரு அமைச்சருக்கு இருப்பது தான் அவருக்கு மகிமையை தரும். 

அமைச்சர்கள் கற்றறிந்தவர்களாக இருக்கவேண்டியதை, “குலமுதல் தொன்மையும் கலையின் குப்பையும், பலமுதற் கேள்வியும் பயனும் எய்தினார்” என்று கம்பராமாயண மந்திரப்படலப் பாடல் ஒன்று கூறுகிறது. 

”குலமுதல் தொன்மையும் கலையின் குப்பையும்
பலமுதற் கேள்வியும் பயனும் எய்தினார்” (கம்ப.மந்திரப்.6)

ஏலாதிப் (17) பாடல் ஒன்று இக்குறளின் கருத்தை முழுவதுமாக கீழ்காணும் பாடல் வழி சொல்லுகிறது.

குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பும் ஆற்றல் உடைமை – முடியோம்பி
நாற்றம் சுவைகேள்வி நல்லார் இனஞ்சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வன்கண் - வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடிகாத்தல் - குடிகளைக காத்தலும்; கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு - முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு - மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான். (எண்ணொடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது,. அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும் 'கற்று அறிதல்' என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும் 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப.).

மணக்குடவர் உரை
அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை
செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

English Meaning - As I taught a kid - Rajesh
A capable minister should have 5 important characteristics and  1) Resolve/Mental Strength to execute tasks and face challenges despite hurdles and difficult circumstances on the field right from natural disasters, pandemic etc 2) Skill to protect the country and countrymen 3) Being curious and learning continously in his field of work 4) Doing work for the welfare of the people and country in his area of ministry 5) Undeterred Perseverance

Questions that I ask to the kid
What are the 5 important characteristics of a minister?

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு

குறள் 636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; அறிவு, இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.
நுட்பம் - நுண்மை; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை; நுட்பம்; பொருளின்நுட்பம்; காலநுட்பம்; கரந்துறைகோள்களுள்ஒன்று; ஓரணி; 3. subtle idea, யூகம்; 4. accuracy, திட்டம்;
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.
நூலோடு- நூல் அறிவோடு
உடையார்க்கு - உடையவர்களுக்கு
அதி - வலைச்சாதி; மிகுதிப்பொருளைத்தரும்ஓர்இடைச்சொல்; அதிகம் அப்பால் மேன்மை சிறப்புமுதலியபொருள்தரும்ஒருவடமொழிமுன்னொட்டு.
நுட்பம் - நுண்மை; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை; நுட்பம்; பொருளின்நுட்பம்; காலநுட்பம்; கரந்துறைகோள்களுள்ஒன்று; ஓரணி; 3. subtle idea, யூகம்; 4. accuracy, திட்டம்;
யா - யாது, எது
உள - உள்ளது; இருக்கிறது
முன் - முன்னே
நிற்பவை? - நிற்கின்றது

முழுப்பொருள்
இயற்கையான அறிவாற்றலும், அதனை பயன்படுத்தி ஒரு நுண்ணிய திட்டத்தை தீட்டும் ஆற்றலும், பல நூல்களை கற்று பெற்ற அறிவாற்றாலும், இவ்வனைத்தையும் பல நூல் கற்றுத் தேர்ந்த கற்றோரிடத்தில் ஆலோசித்து மெருகேற்றித் தீட்டிய ஒரு நுண்ணிய திட்டம் மிக சிறப்பானதாக அமையும். அத்தகைய நுண்ணிய திட்டத்தின் முன் அதைவிட சிறந்த திட்டம் என்று ஏதும் இருக்குமோ? இருக்காது என்றே பொருள்.

பி.கு: நூல் என்ற சொல்லுக்கு ஆலோசனை என்றும் பொருள் உள்ளது. ஆதலால் கற்றோரிடத்திலும் ஆலோசிக்க வேண்டும் என்று பொருள்.

கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சி உரையில், தோலாமொழித் தேவரின் சூளாமணி காப்பியத்திலிருந்து இரநூபுரச் சருக்கத்தில் வருமொருபாடலை ஒப்பு நோக்கிக் கூறுகிறார்.


ஒன்றுநன் றெனஉணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதன் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே. (சூளா.இரதநூ.118)

ஒருவர் அறிவுக்கு நல்லென்று தோன்றியவொன்று, நல்லதன்று என்று பிறருக்குத் தோன்றலாம். ஆக ஒன்றை உறுதிபட அறிவதற்கு தன்னுடைய சுயவறிவு மட்டுமல்லாது, அறநூல்களை அறிந்த அறிஞர் மொழியின்வழி ஒழுகின் உலகானது ஒப்புக்கொள்ளும் என்பததன் கருத்தாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள? ('மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.

சாலமன் பாப்பையா உரை
இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person or a minister or a leader 
A) 1) who has the vast, wide and deep knowledge on his subjects, 2) who can understand the problem holistically by getting the high level information as well by getting into the details of problem,  3) who can structurally approach a(/an ambiguous) problem by slicing the problem, 4) who can device a plan to attain the goal 
B) who can consult with subject experties, stakeholders and mentors
devices a plan (with aforementioned qualities), then is there any better brilliant plan that can stand infront of it in this world?

Questions that I ask to the kid
Upon whom it is doubtful that we would have a better plan in this world? Why do you say that?

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும்

குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள்
தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.
தெரிதலும் - ஒரு செயலை (தன்) மனம் உணரும் படி முழுமையாக ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுதல். அதற்கு தேவையான வலிமையையும் ஆராய்தல், செயலின் சிறப்பாக செய்வதற்கான மாற்றுகளை ஆராய்தல்
தேர்ந்து செயலும் - தேர்ந்துசெயல் - செயல்கை கூடும் வகையறிந்து செயல்புரிகை ஆற்றலும்
ஒருதலை - n. id. +. 1. One-sidedness; ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம்(குறள், 1196). 2. Positiveness, certainty; நிச்சயம். ஒருதலை யுரிமை வேண்டியும் (தொல். பொ. 225),
ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம்.
ஒருதலையாச் சொல்லலும் - கேட்போர் மறுக்க முடியாத அளவிற்கு நிச்சயமாக உரைத்தல்/ சொல்லுதல்
வல்ல(து) - வலிமையுள்ள(து); திறமையுள்ள(து).
அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்,  2. Office and functions of a minister;மந்திரித்தன்மை.

முழுப்பொருள்
இக்குறளில்  ஒரு அமைச்சர் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்கிறார்.

முதலாவதாக, ஒரு செயலை செய்யும் பொழுது அதனை பற்றிய தெளிவு அமைச்சருக்கு மிக முக்கியம். ஏனென்றால் அதனை செயல்படுத்த வேண்டும் மற்றவருக்கு  எளிதாக விளங்கும் அளவு தெரிவிக்க வேண்டும். ஆதலால் அச்செயலை பற்றிய புரிதலுக்கான ஆராய்ச்சியை திறம்பட செய்தல் மிக அவசியம். ஒரு செயலுக்கு தேவையான மாற்றுகளையும், செயலின் விளைவுகளையும், செயல் ஆற்றப்படும் இடத்தின் தன்மையையும், காலத்தின் தன்மையையும், சிறப்பாக செய்வதற்கு தேவையான வலிமையையும், செய்யும் பொழுது வரக்கூடிய இடர்களையும், இடர்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் ஆராய்ந்து இருக்க வேண்டும். செயல் அறம் சார்ந்த ஒன்றா என்றும் தெரிந்து இருக்க வேண்டும். ஆராய்ந்தப்பின் சிறந்த ஐயமில்லா (பெரும்பாலும்) நிலைப் பிரியா முடிவினை எடுத்தல் வேண்டும். ஆக ஒரு செயலை (தன்) மனம் உணரும் படி முழுமையாக எவ்வித ஐயப்பாடுகளும் இல்லாமல் அறிந்துக்கொள்ளுதல் மிக அவசியம். 

இரண்டாவதாக, ஒரு செயலை திறம்பட செயலாற்றுவது அமைச்சருக்கு அவசியம். ஒரு செயலை தெரிந்துக்கொள்ளுதல் வேறு அதனை களத்தில் ஆற்றுவது வேறு. களத்தில் பல சவால்கள் உள்ளன. உதாரணமாக செயலை ஆற்றும் மனித வளம், செயலுக்கு தேவையான நிதி, செயலுக்கு வரக்கூடிய இடர், காலத்தின் தன்மை, இடத்தின் தன்மை என்று பல உள்ளன. இவை அனைத்தையும் கற்று தேர்ந்து இருக்க வேண்டும். தன்னிடம் வேலை செய்வோரிடம் வேலையை செய்து முடித்துக்கொள்ளும் தலைமை பண்பு இருத்தல் வேண்டும். ஒரு செயலை துவங்கும் பொழுது எல்லோருக்கும் பரவலாக ஊக்கம் இருக்கும். ஆனால் சிறிது காலம் கழித்து ஊக்கம் குறையும். சில நேரங்களில் இடர்கள் வரும் பொழுது ஊக்கமே இல்லாமல் மக்கள் துவண்டு இருப்பர். அத்தகைய ஊக்கமில்லா நேரங்களில் ஊக்கமுடையச் செய்வது தலைமையின்/அமைச்சரின் பொறுப்பாகும். மேலும், செயலை செய்யும் பொழுது நாம் திட்டமிட்ட மாதிரி நடக்காது. நீண்ட கால நன்மையையும் தற்கால சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு எது நன்மை பயக்கும் அதனை செய்யவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி திட்டங்களை புதுப்பித்துக்கொண்டு செயலாற்ற வேண்டும்.

மூன்றாவதாக, ஒரு செயலை தலைவனிடமும், மற்ற அமைச்சர்களிடமும், செயலின் பங்கு வகிக்கும் முக்கிய தலைவர்களிடமும், மக்களிடமும் தொடர்புக்கொண்டு செயலை அவர்கள் எவ்வித ஐயப்பாடுமில்லாமல் தெளிவாக உணரும் படி  திறம் பட ஞயம் பட உரைத்தல் வேண்டும். ஆயினும் சொல்லும் கருத்தில் ஒரு தீர்க்கம் வேண்டும். அதாவது நிச்சயத்தன்மை. ஏனெனில் ஒரு செயலை விளக்கும் பொழுதோ ஆற்றும் பொழுதோ பிறர் பல கருத்தினை கூறுவர். ஒவ்வொருவர் கூறுவதுக்கு ஏற்றவாரு செயலை மாற்றிக்கொள்ள கூடாது. தன் நிலையில் இருந்து பிரியக்கூடாது. (அதற்காக அமைச்சர் பிறருக்கு செவி கொடுக்கக்கூடாது என்றில்லை. அவையெல்லாம் திட்டம் தீட்டும் பொழுதே ஆராய்ந்து இருக்க வேண்டும்). அப்படி செய்தால் (செயலை ஆற்றும்) மக்களிடம் குழப்பமே ஏற்படும். ஒரு அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் இருப்பர். நாம் ஒரு திட்டத்தை தீட்டினால் அதனால் இன்னொரு அமைச்சருக்கு வேலை அதிகமாக கூடும். அதனால் அவர் தனது வேலையை குறைக்க நமது திட்டத்தை குறைச்சொல்லக்கூடும். அந்த அமைச்சர் நமது நண்பர் அல்லது வேண்டியவர் என்பதற்காக ஒருதலையாக நடந்துக்கொண்டு செயல்படக்கூடாது. எது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதோ அதனை செய்ய வேண்டும். இது குறிப்பாக நிர்வாகத்திற்குப் பொருந்தும். 

ஆக இம்மூன்று பண்புகளும் அமைச்சருக்கு அவசியம் என்கிறார் திருவள்ளுவர். இது நிர்வாகத்தில் வேலை செய்யும் தலைவர்களும் பொருந்தும். 

ஒர் அமைச்சன் தன்னுடைய ஆற்றலால் அடுத்து வருவனவற்றை முன் கூட்டியே கூர்த்த மதியால் உணர்தலும், அதற்கு ஏற்றவாறு தாம் செல்லும் பாதையை திருத்திக்கொள்வதையும், கம்பர் மாரீசவதைப் 167 படலத்தில், “ஆற்றலால் அடுத்ததெண்ணும் அமைச்சரை”, என்கிறார்.

சிறுபஞ்சமூலப் 57 பாடல் இக்குறளில் பேராற்றல் உள்ள அமைச்சருக்கு இருக்கவேண்டியனவாக, அவன் அறிந்திருக்க வேண்டியனவாக இவ்வாறு கூறுகிறது.

“தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்
இல்நிலையும் ஈடில் இயல்நிலையும் – துன்னி
அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான்”

மேலும்
“செறிந்தவர் தெளிந்த நூலால் சிறந்தன தெரிந்து கூறி
அறிந்தவை ஆற்ற கிற்கும் அமைதியான் அமைச்சன்” (சூளா.மந்திரப்.9)

“செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியுங்  காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்” (கம்ப.மந்திரப் 9)


மேலும்: அஷோக் உரை

தூக்கி வினை செய்
அழகு அலாதன செய்யேல்
 நன்மை கடைப்பிடி.
பேதைமை அகற்று

செய்வன திருந்தச் செய்
பருவத்தே பயிர் செய்
கௌவை அகற்று
தோற்பன தொடரேல். 
வித்தை விரும்பு

ஞயம்பட உரை
சுளிக்கச் சொல்லேல்
மிகைபடச் சொல்லேல்
மொழிவது அற மொழி.

பரிமேலழகர் உரை
தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (தெரிதல், செயன் மேலதாயிற்று. வருகின்றது அதுவாகலின்.)

மணக்குடவர் உரை
ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தெரிதலும் -ஒரு வினையைச் செய்யும் வகைபலவாகத் தோன்றின் அவற்றுட் சிறந்ததை அல்லது முழுவாய்ப்பாகவுள்ளதை ஆராய்ந்து அறிதலும்; தேர்ந்து செயலும் -அங்ஙனம் அறிந்தபடி செய்யுங்கால் வெற்றிக் கேதுவான வழிகளைக் கையாளுதலும்; ஒருதலையாச் சொல்லலும் - சிலரைப் பிரித்தல் பேணுதல் பொருத்தல் பற்றி இன்னதே செய்யத்தக்க தென்று திட்டவட்டமாகச் சொல்லுதலும்; வல்லது அமைச்சு -வல்லவனே அமைச்சனாவான்.

ஐயுறவாகவும் கவர்படவும் சொல்லின் வெற்றியின்மையொடு கேடாகவும் முடியுமாதலின், 'ஒருதலையா' என்றார்.

மு.வ உரை
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்

குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு.
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள்
கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள்.

கருவியும் - ஒரு செயலை செய்வதற்கு தேவையான கருவிகள், துணை கருவிகள் - அறிவு, திறன்

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

காலமும் - சரியான நேரத்தில் சரியான ஒரு செயலை ஆற்றும் திறன்

செய்கை - தொழில்; செயல்; மனஉடல்செய்கைகள்; வேலைப்பாடு; ஒழுக்கம்; உடன்படிக்கை; செயறகைப்பொருள்; காண்க:செய்கைச்சூத்திரம்; பில்லிசூனியம்; வேளாண்மை; அரசாங்கஅனுமதிபெற்றுப்புதிதாகப்பண்படுத்தியநிலம்.

செய்கையும் - ஒரு செயலை செய்யும் விதம்/வகை

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

செய்யும் - தான் செய்கின்ற செயலின் 

அரு - அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

அருவினையும் - அருவினைகளை களைந்து; ஒரு செயலில் உள்ள ல் அச்செயல் உருவாக்கக்கூடிய உருவாக்கிய உபாயங்களையும், இடையூறுகளையும் நீக்கி அச்செயலை செய்ய தக்க

மாண்டது - மகிமைப்பட்டது
மாண்பு, v. noun. Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectability, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.
மாண்டார், appel. n. [pl.] The illustrious, the great, பெருமையோர். (நால.) 2. See மாள்.

அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்.
அமைச்சு - அச்செயலை மகிமைப் பட செய்யவேண்டும் என்று எண்ணி அச்செயலை முடிக்கத்தக்கவன் அமைச்சன்

முழுப்பொருள்
இக்குறளில் ஒரு சிறந்த அமைச்சர் எவ்வாறு செயல்படுவான் என்பதற்கான இலக்கணத்தை கூறுகிறார் திருவள்ளுவர்.

சிறந்த ஒரு அமைச்சர் தான் செய்யும் செயலின், இயல்புகள், பயன்களை, அது விளைவிக்க கூடிய தீங்குகளை பற்றி நன்கு ஆராய்வார். இதை தெரிந்திதெளிதல் அதிகாரத்தில் ”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்று கூறியிருப்பார். பின்பு தான் கொண்ட அறிவு, திறன், அனுபவம் கொண்டு அதனை சிறப்பாக முடிப்பதற்கான வழிகளை ஆராய்வார். செயலை செய்து முடிப்பதற்கான நிர்வாக திறமையை கொண்டவராவார். (எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு; எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.)

பின்பு அச்செயலை செய்வதற்கான சரியான நேரத்தை ஆராய்ந்து, அந்த நேரத்தில் செயல்படுத்துவார். செயப்படுத்தும் பொழுது வரும் இடையூறுகளை முன்பே ஆராய்ந்து இருப்பார். இடையூறுகள் வந்தாலும் அதனை கடந்து செல்ல தக்க வழிகளை ஆராய்ந்து செயல்படுத்துவார்.

அப்படி ஒரு செயலை எடுத்து மாண்புற (நீதி, மாட்சிமை, பெருமையோர்) செய்து முடிக்க தக்க மாண்பு கொண்டவர் அமைச்சர் ஆவார்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
”காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரியக் கற்ற
நூலுற நோக்கித் தெய்வம் நுனித்தறம் குணித்த மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்து கொண்டு
பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்” (கம்ப.மந்திரப்.8)

பரிமேலழகர் உரை
கருவியும்-வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும்-அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும்-அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு- வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். 

விளக்கம் 
(கருவிகள்-தானையும் பொருளும். காலம்-அது தொடங்கும் காலம். 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தனையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கருவியும் - வினைக்கு வேண்டுங் கருவிகளும்; காலமும் - அதற்கேற்ற காலமும், செய்கையும் - அதைச் செய்யும் வகையும்; செய்யும் அருவினையும் - அவ்வகையிற் செய்யும் அரிய வினையும்; மாண்டது அமைச்சு - வெற்றிபெற எண்ணும் ஆற்றலிற் சிறந்தவனே அமைச்சனாவான்.

'கருவிகள்' படையும் படைக்கலமும் பொருளும் துணையும். 'காலம்' தொடங்கி முடிக்குங் காலங்கள். 'செய்கை' நால்வகை ஆம்புடையும் (உபாயமும்), தொடங்கும் வகையும், கையாளும் விரகும் (தந்திரமும்), இடையூறு நீக்கும் வழியும் ஆம். பெரும் பயன்தரும் சிறந்த வினையென்பார் 'அருவினை' என்றார். 'அமைச்சு' சொல்லால் அஃறிணையாதலின் அத்திணை முடிபு கொண்டது. இதே பின்னுங் கொள்க.

"இவை யைந்தினையும் வட நூலார் மந்திரத்திற்கங்க மென்ப". என்று பரிமேலழகர் கூறுவதால், வடநூலுக்குத் தமிழ்நூல் முதனூ லானமைதெளிவாம். இக்குறளிற் கூறப்பட்டவை நான்கேயன்றி ஐந்தல்ல. செய்கையைத் தொடக்கமும் முடிவும் என இரண்டாக வட நூலார் பிரித்தது வீணான பிற்கால விரிவுபாடாகும். திருக்குறளை வட நூல் வழியாகக் காட்டல் வேண்டியே, ' செய்கை' எனவே, அது தொடங்கு முபாயமும் இடையூறு நீக்கி முடிபு போக்குமாறும் அடங்கின." என்று பரிமேலழகர் தம் நச்சுக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்க.

மணக்குடவர் உரை
செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல். 

மு.வரதராசனார் உரை
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.

Thirukkural - Management - Leadership
Valluvar has provided us with the four actions of an excellent minister. A minister is a leader. So, Kural 631 is presented in the Practice on Leadership. A leader has to have knowledge of the right tools, the right time to execute, the right techniques for execution and more importantly the right task to do, advices the Kural.

Call him minister who best Contrives
The means, the time, the mode and  the deed.

Though all the other needs are in right place, if the task to be done is irrelevant, doing that task will result in loss of all the other invaluable resources. Recollect the thought by Warren Bennis “Leaders are people who do the right thing; managers are people who do things right.” Doing 
the right thing is more important  than just doing things right.

There are many examples of exemplary leaders who were and are physically short. Though they were and are short in stature, they were and are tall in their thoughts. That is why they are called tall leaders. They were visionaries.  So, size does not matter for influential leadership.