Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_069. Show all posts
Showing posts with label Athikaaram_069. Show all posts

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

 

குறள் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
இறுதி - முடிவு; சாவு வரையறை

பயப்பினும் பயத்தல் -  paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).  

எஞ்சாது - எஞ்சாமை - குறையாமை, ஒழியாமை, முழுமை

இறைவற்கு - அரசர்க்கு / ஆட்சிக்கு 

இறை  - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்

உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன்.

பயப்பது - பயத்தல் -  paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).  

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

தூது - இருவரிடையேபேச்சுநிகழ்தற்குஉதவியாகநிற்கும்ஆள்; இராசதூதர்தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூதுமொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக்காதலரைஇணக்கும்செயல்; செய்தி.

முழுப்பொருள் 
தூதாக செல்லுபொழுது உயிருக்கு ஆபத்து வந்தாலும், பகை அரசர்கள் கொலை செய்ய மிரட்டினாலும் அதற்கெல்லாம் அஞ்சாது மன உறுதியில் குன்றாது தன் அரசருக்கு வலிமையும் திடமும் சேர்ப்பவரும் அரசருக்கு நன்மை தரச் செய்ய தூதுமொழிவதற்கும் உறுதியுள்ளவனாவான் ஒரு நல்ல தூதர். 

தூதாக வந்தவரைக் கொல்லுதல் அரசர்க்கு அழகல்ல எனினும் சொல்லப்பட்ட செய்தி பிடிக்கவில்லையாயின் தூதனையே கொல்லுமளவுக்கு பகையரசர்கள் துணியக்கூடும். இராமாயணத்தில் அனுமனைக் கொல்லவே இராவணன் விழைந்தாலும், அதைத் தடுத்து, குரங்குக்கு வாலை எரித்தல் என்பது அதை கொல்வதற்குச் சமம் என்று கூறி மாற்று வழியை விபீடணன் கூறி, அவனை தூதனைக் கொல்லும் பாவத்திலிருந்து தடுத்துவிடுகிறான்.

மகாபாரதத்திலும் இத்தீய எண்ணம் துரியோதனனுக்கு உதித்தது; அதை அவன் தந்தை திருதராட்டினனும் அதற்கு உடன்பட்டு, விதுரன் வீட்டிலிருக்கும் கண்ணன், வேடன் வலையில் அகப்பட்ட புலி போன்றவன், அவனைக் கொல்வது தவறில்லை என்கிறான்; கௌரவர்களில் இருந்த ஒரே நல்லவனாம் துரியோதனின் தம்பியர்களில் ஒருவனான விகர்ணன் (விபீடணன் போன்றவன்) கொதித்து, அது தர்மமல்ல கூறுகிறான்.

இதுபோன்ற தருணங்களிலும் தூதர்கள் உறுதியுடன் தம்மை ஆள்பவர்க்கு நன்மை செய்யவேண்டும் என்று இக்குறள் கூறுகிறது.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.

மு.வரதராசனார் உரை
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

 

குறள் 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்கணவன்
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
விடு - பகலிரவுகள்நாழிகையளவில்ஒத்தநாள்.

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை

மாற்றம் - சொல்; விடை; வஞ்சினமொழி; மாறுபட்டநிலை; பகை; கழுவாய்; வாதம்.

வேந்தர்க்கு - வேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்ஆகியமூன்றுதமிழரசர்.

உரைப்பான் - உரை-த்தல் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)

வடு - தழும்பு; மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன்.

மாற்றம் - சொல்; விடை; வஞ்சினமொழி; மாறுபட்டநிலை; பகை; கழுவாய்; வாதம்.

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு

சோர் - சோர்வு; வஞ்சகம்; பகட்டு.
சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல்

வாய்சோரா – மறந்தும் தன் வாயில் கொள்ளாத

வன்கண்மை - கொடுமை; வீரம்

வன்கணவன் - உறுதியுள்ள சொற்களைப் பேசவல்லோன்

முழுப்பொருள் 
தன்னுடைய மன்னர் சொல்லி அனுப்பிய செய்தியை (சொற்களை) பிறர் மன்னரிடம் தூதாக சென்று சொல்பவன் குற்றம் பொருந்திய பிழையான சொற்களை தீய சொற்களை சோர்விலும் கூட மறந்தும் வாய்தவறி கூறாத மன உறுதியையும், உறுதியுள்ள சொற்களையும் உடையவனாவன். 

தூதுச் செய்தியைக் கொண்டு செல்வோன் வாய் தவறியும் தன் பொறுப்புக்கும், அதன் சிறப்புக்கும் பொருந்தாத, தாழ்வான குற்றமுள்ள சொற்களைப் பேசாத உறுதியும் திண்மையும் உள்ளவனாய் இருக்கவேண்டும்.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”தடுமாற்றம் இன்றித் தகைசான்ற சொல்லான்
வடுமாற்றம் வாய்சோரா னாகி - விடுமாற்றம்
எஞ்சாது கூறி இகல்வேந்தன் சீறுங்கால்
அஞ்சா தமைவது தூது” (பாரத வெண்பா)

பரிமேலழகர் உரை
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.

மு.வரதராசனார் உரை
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

சாலமன் பாப்பையா உரை
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

 

குறள் 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

துணைமை - உதவி; பிரிவின்மை; ஆற்றல்.

துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

இம் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு.

மூன்றின் - மூன்று - இரண்டுக்கு மேல் அடுத்துள்ளஎண்

வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

உரைப்பான் - உரை-த்தல் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

முழுப்பொருள் 
1) தூய்மை - கலங்கமற்ற உள்ளத்து தூய்மை / நேர்மை. அதாவது பிறர் ஆசை காட்டும் பொருள், போகம் போன்றவற்றில் நாட்டம் செல்லாதவனாக இருக்க வேண்டும். தனது அரசுக்கும் நாட்டிற்கும் நேர்மையாக / விசுவாசமாக இருத்தல் வேண்டும்.

2) துணைமை - ஆற்றல். தூதிற்கு தேவையான நட்புறவாடும் பண்பு இருத்தல் வேண்டும். பகையோரிடத்தும் உள்ள நல்லோர் துணையினை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3) துணிவுடைமை - பிற நாட்டு மன்னரை, அமைச்சர்களை, பகைவர்களை அஞ்சாது தான் கூறுவதை தெளிவோடு சொல்லும் ம்ன உறுதி வேண்டும்.

மேற்சொன்ன மூன்று பண்புகளும் உண்மையை (குறியவற்றை) மட்டும் தூதாக சென்று உரைக்கும் முறையை / நெறியை / ஒழுக்கத்தை பின்பற்றும் தூதானின் பண்புகளாகும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன'¢ ஒடுவின் பொருட்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்.


மு.வரதராசனார் உரை
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

சாலமன் பாப்பையா உரை
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

குறள் 687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை
[பொருட்பால், அமைச்சியல், தூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

கடமை - கடப்பாடு; ஒவ்வொருவருக்கும்உரியபணி; முறை; கடன்; தகுதி; குடிகள்அரசர்க்குச்செய்யும்உரிமை; காட்டுப்பசுஒருவகைமான்; பெண்ணாடு; குடியிறை.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

கருதி - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்.

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

அறிந்துஅறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

உரைப்பான் - உரை-த்தல் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)  

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள் 
ஒரு தூதுவனின் பொறுப்புகள் என்ன?
1. தான் ஆற்றவேண்டிய கடமைகளை / முறைமைகளை நன்கு ஆராய்ந்து அறிந்துக்கொள்ள வேண்டும். தான் தூதுக்கு செல்லுகிற நாட்டை பற்றியும் அந்நாட்டின் முறைகளை பற்றியும் அறிந்துக்கொள்ள வேண்டும். அந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு தன்னை பொருத்திக்கொள்ள வேண்டும். தான் தூதாக கூறுகின்ற செய்தியை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு வரக்கூடிய எதிர்வினைகளையும் கேள்விகளையும் ஆராய்ந்து அதற்கு தன்னை ஆயுதப்படுத்துக்கொள்ள வேண்டும். 

2. தூது செய்தியை சொல்ல வேண்டிய தக்க காலம் / பொழுதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் 

3. தூது செய்தியை சொல்ல வேண்டிய தக்க இடத்தையும் ஆராயவேண்டும். சில செய்திகள் நேரடியாக தனியே கூறவேண்டிய ராஜாங்க ரகசிய செய்திகள். ஆதலால் செய்திக்கும் நாட்டிற்கும் அவசரத்திற்கும் முக்கியத்துவத்திற்கும் ஏற்ப இடங்கள் மாறும். 

இவ்வாறு தூதை மேற்கொண்டு செய்பவனே சிறந்த தூதனாக விலங்குவான்.

ஒப்புமை
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ் (ஏலாதி 26)

செல்லுங்கால் தேயத் தியல்தெரிந்து சென்றக்கால்
புல்லிய சுற்றம் புணர்வறிந்து - புல்லார்
மனத்தால் பிரித்து வலியால் உதவும்
இனத்தால் தெரிவது தூது (பாரத வெண்பா)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கடன் அறிந்து - வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமை யறிந்து; காலம் கருதி - அவர் செவ்வி பார்த்து; இடன் அறிந்து - சென்ற கருமஞ் சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து; எண்ணி - சொல்லுமாற்றை முன்னே விசாரித்து; உரைப்பான் தலை - அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான். (செய்யும் முறையாவது: அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின. செவ்வி - தன் சொல்லை ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி. அது காலவயத்ததாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத் துணையாவார் உடனாய இடம். எண்ணுதல்: தான் அது சொல்லுமாறும், அதற்கு அவர் சொல்லும் உத்தரமும், அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை, என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணிச் சொல்லவல்லவன் தலையான தூதனாவான். இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை
தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

English Meaning - As I taught a kid - Rajesh
Following are the foremost responsibilities of an envoy
1) Know the task to be performed well, know the role and responsibilities very well - comprehensively in depth. Be aware of the culture, characteristics, power equations of the country, organization, people etc. 
2) Be conscious of the time - Know the right time to talk to the opponent, know the right time during the conversation to place your points and respond to the opponent. Make decisions at the right time
3) Be conscious of the place - Know where to talk and what to talk. Sometime, one has to communicate part of the message (Secret message) privately to the opponent. So, it one has to vigilantly look for private moments or create private moments.

Only the envoy who performs the above three responsibilities can perform well in his duties and succeed.

Questions that I ask to the kid
What are three foremost responsibility of an envoy?

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

குறள் 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
கற்று - கற்கை - படித்தல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சான் - அஞ்சாதவன் ; அச்சம் இல்லாதவன் ; பயம் இல்லாதவன்

செலச்சொல்லித் - செலுத்தல்
செலுத்தல் - செல்¹(லு)-தல்
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல் -

காலத்தால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

அறிவதாம் - அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தூது -  இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

முழுப்பொருள் 
கண் என்றால் அறிவு என்றும் பொருள் உண்டு என்பதை நினைவில் கொள்க. தூதருக்கு தேவையான தகுதிகள் என்ன?
1. நூல்கள் பல கற்று ஆராய்ந்து அறிவை பெற்று இருப்பது
2. பகைவரை கண்டு அஞ்சாது இருப்பது. தன் மன்னர் அல்லது அரசு கூறியதை பகைவரிடத்தில் எவ்வித அச்சமில்லாமல் கூறுவது.
3. பகைவருக்கு (பிறருக்கு) எளிதாக விளங்கும் வண்ணம் தெளிவான சொற்களை தேர்ந்தெடுத்து பிறருக்கு ஐயமற கூறுவது.
4. காலத்திற்கு சூழ்நிலைக்கு ஏற்றவற்றை அறிந்துகொள்ளுதல், வியூகங்களை அமைத்துக்கொள்ளுதல் இன்றியமையாததாகும். இது சில சமயம் பகைவரிடம் அகப்பட்டால் தப்பிக்க உதவும். மேலும் பகைவரிடத்தில் இருந்து அவர்கள் அறியாமல் அவர்களின் குறிப்பு சொற்கள் உடல்மொழி ஆகியவற்றின் மூலமும் மற்றவர்கள் மூலமும் அறிந்துக்கொண்டு அச்செய்தியை அரசிடம் கொண்டு சேர்ப்பது.

மேற்சொன்ன நான்கும் ஒரு தூதருக்கு தேவையான தகுதிகள்.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.).

மணக்குடவர் உரை
தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல

மு.வரதராசனார் உரை
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை
அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

குறள் 684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உரு - வடிவழகு; தெய்வத்திருமேனி; நிறம் அச்சம் அட்டை பலமுறைசொல்லுகை; பருமை தோணி உடல் எலுமிச்சை இசைப்பாடல்; நோய் உருவமுள்ளது; உளியாற்செய்தசிற்பவேலை; தாலிமுதலியவற்றில்கோக்கும்உரு; தன்மை அகலம்

உருவு - உருவம்; வடிவு அழகு அச்சம்

ஆராய்ந்த - ஆராய்தல் - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

இம் மூன்றன் -   இவை மூன்றிலும்

செறிவு நெருக்கம்; மிகுதி; கூட்டம்; உறவு; பொந்து; கலப்பு; உள்ளீடு; தன்னடக்கம்; எல்லைகடவாநிலைமை; நெகிழிசையின்மையாகியசெய்யுட்குணம்.

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

செல்க - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

வினைக்கு - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள் 
ஆழ்ந்த விஸ்தாரமான அறிவு, எல்லோராலும் விரும்பக்கூடிய தோற்றப்பொலிவு(முகமலர்ச்சி), ஆராய்ந்த (கற்க கசடற பெற்ற) கல்வி (அதாவது, எது ஒன்றையும் சுயமாக ஆராய்ந்து அறிந்துக்கொள்ளும் திறன் மற்றும் பயிற்சி) ஆகிய மூன்றிலும் செறிவு உடையவன் தூதிற்கு செல்ல வேண்டும்.

செறிவு உடையவன் என்றால் அறிவு, தோற்றப்பொலிவு, கல்வி ஆகியவற்றில் செறிவு என்ற கருத்தில் மட்டும் அல்லாமல் பிறருடன் தன்னடக்கத்துடன் நெருங்கிப் பழகி தூதருக்கு உண்டான எல்லையைத் தாண்டாமல்  தூதிற்கு சென்று வெற்றிபெறக்கூடியவன் என்று பொருள். (காண்க: செறிவு பொருள்)

பகைவரும் கண்டு வியக்கும் தோற்றப்பொலிவுடையவர்களாக அனுமனும், கிருஷ்ணனும் இருந்ததை இதிகாசங்கள் பலவிடங்களில் சொல்லுகின்றன.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க. (இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு.

மு.வரதராசனார் உரை
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

சாலமன் பாப்பையா உரை
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

குறள் 682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று
[பொருட்பால், அமைச்சியல், தூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

ஆராய்ந்த - ஆராய்ச்சி - ஆய்வு; பரிசீலனம்; சோதனை தலையாரி; சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்
சொல்வன்மை - பேச்சுவன்மை; சொல்திறம்.

தூது - இருவரிடையேபேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராசதூதர்தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூதுமொழி; தூதுவளைக் கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை

உரைப்பார்க்கு - சொல்வோர்க்கு; முழங்குவோர்க்கு 

இன்றி யமையாத  - இன்றியமையாமை - இல்லாமல்முடியாமை, அவசியம்

மூன்று - மூன்று பண்புகள் 

முழுப்பொருள் 
தன் அரசர் மீதும் (தன் மக்கள் மீதும்) (தன் அலுவலகத்தின் மீதும்) அன்பு, தூது செய்யப்போகும் தளத்தில் / கருத்தில் / subject ஆழ்ந்த நுண்ணிய அறிவு சாமர்த்தியம் மதிநுட்பம், மற்ற தரப்பினரிடையே சொல் தேர்ந்து உரைக்கும் சொல்வன்மை பேச்சுவன்மை ஆகிய மூன்று குணங்களும் தூது உரைப்பவர்க்கு மிக தேவையான அவசியமான பண்புகளாக திருவள்ளுவர் கூறியுள்ளார். 

இதிகாசத் தூதுவர்களிடையே அனுமனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு. ஒன்றில் அவதார புருடனுக்காக அசுரனிடம், வானரன் தூதுசென்றான். மற்றொன்றில் அவதார புருடனே நண்பர்களுக்காகத் தூதுசென்றான். இருவருமே இக்குறளில் சொல்லப்படும் மூன்று குணங்களையும் கொண்டவர்கள்.

அனுமன் இராமபிரானின் மீது கொண்ட அன்பினால் மட்டுமன்றி, கீர்த்தி பெற்ற இராவணன் ஒரு பெண்மேல் கொண்ட ஆசைக்காக அவனையும், அவன் குடிகளையும் அழித்துக்கொள்ளக்கூடாதே என்று பகைவனுக்காகவும் பரிவு கொண்டான். அவனுடைய கூர்ந்த மதிநுட்பமும், சொல்வன்மையும், இராமாயணத்தில் சுந்தரகாண்டம் முழுவதிலும் சொல்லப்படுகிறது. அவனே சொல்லின் செல்வன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒரு இடத்தில் இலங்கையில் இருந்து வந்து இராமனை சந்திக்கையில் "கண்டேன் சீதையை" என்று ராமனிடம் கூறுவான். "கண்டேன்" என்பதை முதலில் கூறியதில் இருந்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம் அனுமன் எவ்வளவு தேர்ந்து சொல் உரைப்பான் என்று.

கிருஷ்ணனோ, பாண்டவர், கெளரவர் என்ற இரு தரப்புக்கும் பொதுவானவன். துரியோதனுக்காக தன்னுடைய படையே கொடுத்த வள்ளல், சமத்துவவாதி. அன்பின் காரணமாகவே தூது சென்று ஐந்து நகரங்கள் என்று தொடங்கி, ஐந்து வீடாவது கொடுக்கவேண்டுமென்று வாதாடினான். அது குரு வம்சம் அழிந்துபடக்கூடாது என்ற அன்பினாலும், அக்கறையினாலும் விளைந்தது. அவனுடைய மதிநுட்பமும், அழகுற ஆராய்ந்து பேசும் பாங்கும் பாரத்தின் பக்கங்களில் பல இடங்களிலும் சொல்லப்படுகிறது.

மேலும் அஷோக் உரை 

ஒப்புமை
”மாண்டமைந்தார் ஆய்ந்த மதிவனப்பே வன்கண்மை
ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ்” (ஏலாதி 26)

பரிமேலழகர் உரை
அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.

மு.வரதராசனார் உரை
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன

English Meaning - As I taught a kid - Rajesh
An emissary/envoy/mediator should have the following qualities
1) Love - Love for the king, kingdom, people of the country he is representing because they are the ultimate beneficiaries, love for his family members/relative for whom he is mediating, love for his employees in his organisation, love for humanity because mediation is about creating a win-win situation

2) Knowledge and Wisdom - deep knowledge on the subject/area in which he is going to mediate and practical wisdom to handle difficult conversations and create a win-win situation

3) Sagacious speech - wise, sensible, prudent speech using right words,tone, tenour that helps to influence people and win arguments and hearts.


Questions that I ask to the kid
List three qualities for an emissary/envoy/mediator. Why love is essential quality for a mediator?

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்

குறள் 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி
உடைமை - உடையனாகும் தன்மை; உடைமைப் பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை
ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.
வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்
அவாம் -
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
உடைமை - உடையனாகும் தன்மை; உடைமைப் பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை
தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர்தன்மை; ஒரு நூல் வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.
தூது - s. Message, communication, er rand, notice, tidings, செய்தி. 2. Embassage. embassy, commission, mission, தானாபதித்து வம். (Sa. Dûtya.) 3. (fig.) A negociator in love-intrigues, &c., messenger, ஒற்றன். 4. (fig.) Ambassador, envoy, தானாபதி. 5. A kind of poem representing a lady sending messages to her lover by her female companion, or by a bird, a beetle, &c., ஓர்பிரபந்தம்; [ex Sa. Du. to go.] (c.)

உரைப்பான் - உரைத்தல் ; ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

முழுப்பொருள்
ஒரு தூதர் எனப்படுபவர் அடிப்படையில் மக்களுக்கும் அரசருக்கும் அல்லது இரு நாட்டு அரசருக்கும் நடுவில் இருக்கும் ஒரு தகவல் தொடர்பாலர் என்று அறிவோம். ஆனால் அதனை தாண்டி அவர்களுக்கென்று பண்பென்று சில உண்டு. 

1) முதலாவதாக - அன்புடைமை. தன் நாட்டு மக்களிடமும், மற்ற உயிரினங்களிடமும் நேசம் இருக்க வேண்டும். அவர்களை நேசித்தால் தான் அவர்களின் நலன் கருதி மன்னரிடம் உறவாட முடியும். தூதர் என்பவர் மக்கள் நலனில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.  

2) இரண்டாவதாக - ஆன்ற குடிப்பிறத்தல் - நல்ல / மாட்சிமை பொருந்திய குடிப் பிறப்பு

3) மூன்றாவதாக - வேந்தவாம் பண்புடைமை - ஒரு தூதர் பரந்து விரிவாக பயணம் செய்து மக்களின் எண்ணங்களை அறிந்து அதனை மன்னரிடத்தில் கூறுபவராக இருக்க வேண்டும். ஒரு வேந்தரின் நேரம் விலைமதிக்க முடியாதது. ஆதலால் ஏது முக்கியமாக சொல்ல வேண்டுமோ அதனை தரவரிசைப் படுத்தி மன்னர் முழுவதும் உணர்ந்துக்கொள்ளும் அளவிற்கு சரியான சொற்களை கொண்டு சொல்ல வேண்டும். அதற்கான தக்க நேரத்திலும் சொல்ல வேண்டும். அப்படி இருந்தால் அரசர் விரும்பும் தூதுவராக அவர் இருப்பார்.

ஒப்புமை
தூதன் இலக்கணம்
அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை - நன்கமைந்த
சுற்ற முடைமை வடிவுடைமை சொல்வன்மை
கற்றடங்கல் தூதின் கடன் (பாரத வெண்பா)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , சந்தி விக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை . அவ் விரண்டனையும் மேல் ' வினை செயல் வகை ' என்றமையின் , இஃது அதன்பின் வைக்கப் பட்டது . தான் வகுத்துக் கூறுவான் , கூறியது கூறுவான்எனத் தூது இருவகைப்படும் . அவருள் முன்னோன் அமைச்சனோடு ஒப்பான் ஆகலானும் , பின்னோன் அவனிற் காற்கூறு குணம் குறைந்தோன் ஆகலானும் , இஃது அமைச்சியலாயிற்று .]


அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.) .


மணக்குடவர் உரை
அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.

மு.வரதராசனார் உரை
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

சாலமன் பாப்பையா உரை
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

தொகச்சொல்லித் தூவாத நீக்கி

குறள் 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
[பொருட்பால், அமைச்சியல், தூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தொகுப்பு - தொகை; கூட்டம்; எல்லை
தொகை - கூட்டம்; சேர்க்கை; தொகுத்துக் கூறுகை (சுருக்குதல்) ;  கொத்து; மொ)த்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்

சொல்லி - அவைக்கு கூறுதல்
தூவாத -  வேண்டாதவை
நீக்கி - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

நகச் - நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.

சொல்லி - அவைக்கு கூறுதல்

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
பயப்பது - விளைதல், உண்டாதல், படைத்தல், பெறுதல்
ஆம் -
தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

முழுப்பொருள்
தூது எனப்படுவர் இருவரிடையே பேச்சு நிகழ்வதற்கு உதவியாக நிற்கும் ஒரு நபர். இத்தகையவர் இரு அரசர்களுக்கு நடுவில் இருப்பர். இன்றைய காலத்தில் இரு வணிக தலைவர்களுக்கு நடுவில் இருப்பர். இரு குடும்பங்களுக்கு நடுவில் இருப்பர். இப்படி தூது செய்வோரின் தூது ஆற்றல் என்று சில உண்டு. அதில் ஒன்று சொல்ல வேண்டிய கருத்துக்களை திரட்டி அதனை பற்றிய முழு புரிதலுடன் தெளிவாக தொகுத்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, தேவையில்லாதவற்றை விடுவித்து சொற்களை விரயம் செய்யாமல் சொல்லவேண்டும். இதனை நட்புடனும் பரிவுடனும் நயத்தக்க சொற்களில் (ஏனெனில் தகாத சொற்களால் இருவரிடையே ஆன உறவிற்கு பங்கம் வரக்கூடாது) உறவிற்கு நன்மை உண்டாக்கும் கருத்துக்களை(சொற்களை) சொல்பவரே தூது.

மேலும் அஷோக்  உரை
அனுமனைச் சொல்லின் சொல்வன் என்று சொல்லி, அவன் சுருங்கப் பேசும் திறனுக்கு, “கண்டேன் சீதையை” என்று அவன் தூது முடிந்து வந்து இராமனைக் கண்டுச் சொல்வதையே எல்லோரும் கூறூகிறார்கள். இது அவன் தூதின் பெருமையைக் காட்டுவதல்ல. அவன் தூது சொன்னதை கம்ப இராமாயணம் பதினேழு பாடல்களில் கூறுகிறது.

கம்பராமாயணம் பிணி வீட்டுப்படலத்தில் தூது செல்லும் அனுமன், இராவணனை வென்ற வாலியின் பெருமை, அவன் இராமனால் கொல்லப்பட்டது என்று பலவும் சொல்லி, அவன் செய்த தீச்செயலால் எப்படி அவன் அழிய நேரும் என்று விளக்கி, சீதையை ஏன் அவன் இராமனிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறான். 

இதில் சுருக்கமாகச் சொல்வதைவிட எவற்றைச் சொல்லவேண்டுமோ, எவ்வாறு சொல்லவேண்டுமோ, இராவணன் அவன் செய்யவேண்டிய முடிவுக்கு என்னவெல்லாம் கேட்கவேண்டுமோ அவற்றையெல்லாம் சொல்லுகிறான். மகாபாரதக்கண்ணனின் தூதும் இதைப்போன்றதே. சுருங்கச் சொல்வதே, தொகுத்து முறைபடச் சொல்வதே தேவையாகும்.

எல்லோரும் மகிழச் சொல்வது என்பது விரும்பத்தக்கதே ஆயினும், அது எப்போதும் நடக்கக் கூடியதல்ல. இதிகாசக் காட்சிகளாயினும், பாரிக்காய் ஔவையார் தூது சென்ற சரித்திர காட்சிகளாயினும் இது நடந்ததில்லை; இன்றும் நடப்பதில்லை. 

ஒப்புமை
”வயலைக் கொடியின்.............
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் அணிகளைந் தனவே” (புறநா.305)

பரிமேலழகர் உரை
தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான். (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தொகச் சொல்லி-வேற்றரசரிடம் பல செய்திகளைச் சொல்லவேண்டியிருக்கும்; போது மூலவகையாலும் ஒப்புமை வகையாலும் சுருக்கவகையாலும் தொகுத்துச் சொல்லியும் தூவாத நீக்கி நகச்சொல்லி-வெறுப்பான செய்திகளைச் சொல்லும்போது கடுஞ் சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூது ஆம்-தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே நல்ல தூதனாவன்.

பல செய்திகளை ஒவ்வொன்றாக வேறுபடச்சொல்லின், அவற்றின் பன்மைபற்றியும் நெடுநேரங் கேட்குஞ் சலிப்புப் பற்றியும் அவற்றிற்கு இசையார். ஆயின், அவற்றைத்தொகுத்து ஒரே செய்தியாய்ச்சொல்லின் சுருக்கம்பற்றியும் விளைவறியாதும் இசைவர் என்பதாம். வேற்றரசன் மகளைத் தன்னரசனுக்குப் பெண்கேட்பதும், வேற்று நாட்டில் தன்னாட்டு வணிகக்குழும்பு ஒன்று தங்கி வணிகஞ் செய்ய இடங்கேட்பதும், போன்றவை மூலவகையில் தொகுத்துக் கூறலுக்கும்; சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் வெட்டுதல், சுருங்கைகள் குடைதல் முதலியவற்றைப் போக்குவரத்து வாயிலமைப்பு என்று குறிப்பது, ஒப்புமை வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; கோமுட்டி ஒருவன் தனக்குத் தெய்வங்கொடுத்த ஒரே ஈவைக் கேட்கும் போது, "என் கொட்பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற் கலத்திற் பாற்சோறுண்பதை நான் பார்க்க வேண்டும்." என்று சொன்னதாகக் கதை கூறுவது போன்றது. சுருக்க வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; எடுத்துக்காட்டாம். இன்சொற்குப் பெரும்பாலார் வயப்படுதல் பற்றியே அது நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது.

மணக்குடவர் உரை
சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான். இது சொல்லுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
An emissary is an intermediate person playing a crucial role in helping to communicate message and negotiate. In olden days emissary played role in kingdoms; Today, between governments, between organizations, between groups, between people etc.

An emissary should have following capabilities 
1) Being coherent in communicating the message. This comes by understanding the message comprehensively and in depth, creating a structure and exhibiting purpose
2) Avoiding objectionable words. Not giving much information or unnecessary information. Because the purpose is to improve relations, improve the situation, bring positive outcomes, establish win-win situations. Not to deteriorate the situation further nor take it to irreconcilable state nor take it to too difficult to reach to take any step further
3) Evoke smiles - Main purpose is to improve relationships. So, being friendly in terms of words, conduct, body language, facial reactions is very important.

Only the emissary who follows the above three ways would be able to get desired results. 

Questions that I ask to the kid
What are the 3 ways through which an emissary get desired results?

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்

குறள் 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள்
நூலாருள் - பல நூல்களை கற்றவனில்
நூல் வல்லன் - கற்றோன் எனப்படுபவன்
ஆகுதல்- ஆவது என்பது; ஆதல்
வேலாருள் - அரசர்கள்
வென்றி - வெற்றி
வினை - செயல்
உரைப்பான் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

முழுப்பொருள்
நூல்கள் பல கற்றவர்களுள் கற்றவனாக (வல்லவனாக) ஆக வேண்டுமென்றால் தான் கற்றவற்றை தெளிவாக கற்று ஆழமாக கற்று தனக்கும் தெளிவாக சொல்லிக்கொள்ளும் அளவு மற்றவருக்கும் தெளிவாக சொல்லிக்கொள்ளும் அளவு கற்று இருக்க வேண்டும். முக்கியமாக வேல் ஏந்திய அரசரிடம் விளக்க அவருக்கு வெற்றியை உருவாக்கும் செய்திகளை கூறும் திறனை (இயல்பை) உடையவனாவான். இங்கே வெற்றியை உருவாக்கும் எனில் அது குறை நிறைகளை கூறுவது, அரசின் திட்டங்களுக்கு மெருகேற்றும் குறிப்புகளை கூறுவதும் ஆகும்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வேலாருள் வென்றிவினையுரைப்பான் பண்பு-வேற்படையுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்-அரசியல் நூலை அறிந்தவருள் தான் அந்நூலறிவிற் சிறந்தவனாயிருத்தலாம்.

கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' என்றும், இருவகைத்தூது வினையும் அடங்க 'வென்றிவினை' என்றும், கூறினார். 'வல்லனாகுதல்' அந்நூற் செய்தியெல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருத்தலும், தவறாகச் சொன்னவிடத்து அதைத் திருத்துதலுமாம்.

மணக்குடவர் உரை
எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.

மு.வரதராசனார் உரை
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.