Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_072. Show all posts
Showing posts with label Athikaaram_072. Show all posts

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

 

குறள் 719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி.

புல்லியர் - pulliyr   s. A tribe of low people as புலையர்; [ex புல்.] (p.)

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை

பொச்சாந்தும் - பொச்சா-த்தல் - poccā-   12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67)

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

சொல்லற்க - சொல்லாதே 

நல் - நல்ல; வறுமை.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

செலச்சொல்லித் - செலுத்தல்
செலுத்தல் - செல்¹(லு)-தல்
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல்
செலச் - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு
சொல்லுவார் - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர்

முழுப்பொருள்
நூல்கள் பல கற்ற சான்றோர்கள் பெரியோர்கள் கூடிய அவையில் நன்றாக கசடற செறிவாக உரைக்கக்கூடியவர்கள் நல்ல பேச்சாளர்கள். அவர்கள் கற்றோர்கள். அவர்கள் பல நூல்களை நுணுகி கற்று உணர்ந்தவர்கள். அவர்களின் சிறப்பு அவர்கள் அவையில் பேசியதில் தெரியும். அத்தகைய கற்றோர்கள் அறிவில்லாத கீழோர்கள் உள்ள அவையில் மறந்தும்கூட பேசமாட்டார்கள். 

கீழோர் / அறிவற்றோர் அவையில் கற்றார்ப்போல் பேசுவதில் பயன் என்ன? கீழோர் அவையில் பேசியதனால் நாம் கற்றவர்கள் ஆகிவிட மாட்டோம். 

ஆதலால் எப்படி பேசுகிறோம் என்பதைப் போல எந்த அவையில்பேசுகிறோம் என்பதும் பேசுகிறவரின் சிறப்பை பறைசாற்றும். 

ஏன் கீழோர் அவையில் பேசமாட்டார்கள்?
1. கீழோர்கள் நாம் பேசுபவற்றை உள்வாங்க மாட்டார்கள். நேரம் வீணாகும். ஆற்றல் வீணாகும்
2. கீழோர்கள் செறிவன பேசுக்களை கேட்கும் திறனற்றவர்கள்.
3. கீழோர்கள் வெட்டி விவாதம் செய்து கற்றோரை கீழ் இறக்குவர். 
4. கீழோர்கள் கற்றோரை மதிக்க மாட்டார்கள். அவமதிப்பார்கள். 
5. கீழோர் அவையில் பேசியதனால் நாம் கற்றவர்கள் ஆகிவிட மாட்டோம். கற்றோர் அவையில் பேசினால் தான் நாம் கற்றோர். 

ஆதலால் புல்லறிவாளர்களிடம் (அறிவில்லாதவர்களிடம்) பேசாதே.

கல்லாத மூடரிடம் பேசக்கூடாததைப் பழமொழிப் பாடலொன்று, கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை ஒருவற்குஎன்கிறது. நாலடியார் பாடலொன்றும், கைஞானம் கொண்டொழுகும் காரறிவாளர்முன் சொல்ஞானம் சோர விடல் என்கிறது. கைஞானம் என்பது சிறுமை காட்டும் அறிவு என்பதாகும்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.).

மணக்குடவர் உரை
புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.

மு.வரதராசனார் உரை
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

 

குறள் 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கற்று - கற்றுக்கொள்ளுதல் - பயிலுதல்

அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிந்தார் - கற்றவர்கள்,

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

விளங்கும்விளங்கு - viḷaṅku   n. Lesser galangal.See சிற்றரத்தை, 1. (மலை.)
விளங்குதாரணத்ததாகுதல் viḷaṅku-tāraṇattatākutal, n. விளங்கு- + உதாரணம் + ஆகு-+. Being furnished with appropriate illustrations, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது. (நன். 13.)

விளங்கு-தல் - viḷaṅku-   5 v. [T. veḷuṅgu,K. beḷagu, M. viḷaṅṅuga.] intr. 1. Toshine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர்விரித்தே (புறநா. 8). 2. To become renowned,illustrious; பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும்

கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு.

அறச் -  அறவே, அற்ற, அல்லாத, இல்லாமல்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

அகத்து அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
கற்றோர் சான்றோர் கூடிய அவையில் கசடற (குற்றங்கள், குறைகள்) அல்லாமால் சரியான சொற்களில் தெளிவாக பேசும் பொழுது பல நூல்களை நுணுகி கற்று அறிந்து உணர்ந்தோரின் ஆழ்ந்த நுண்ணறிவு புலப்படும்.  

ஔவையாரின் மூதுரைப் பாடலை மீண்டும் நினைவு கூறுவோம். இப்பாடல் கற்றோரையும், கல்லாதவரையும் யார் விரும்புவர் என்பதைச் சொல்லும் பாடல்.

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.).

மணக்குடவர் உரை
நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின். இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.

மு.வரதராசனார் உரை
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

சாலமன் பாப்பையா உரை
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
"A knowledgeable person's knowledge will be evident in the choice of words, which is appropriate and devoid of confusions/errors/possible-misinterpretations, providing clarity to the listeners in the hall. From those words, one can understand that the speaker has deeply read and analyzed many books to gain such a profound knowledge.

This thirukkural emphasis, reading and analyzing books, knowing the audience, choosing the right words, not providing room for misinterpretations and providing clarity to the audience. "

Questions that I ask to the kid
What can you infer by listening to a speaker?

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

 

குறள் 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
ஆற்றின்  - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

நிலைதளர்ந்தல் - நிலைகுலை-தல் - nilai-kulai-   v. intr. id. +.1. To be ruined in circumstances; நிலைமைதவறுதல். 2. To swerve from the path of virtue;நெறிவழுவுதல். 3. To be discouraged; to loseself-command; to be disconcerted, perplexed;தயங்குதல். 4. To lose hold; to be unstrung நிலைமை தளர்தல் வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்துவிழுதலின் (கம்பரா. முதற்போர். 55). 5. To berouted, as an army; சிதறுண்ணுதல்.  

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றே - அத்தமையானது, அப்படியானால்

வியன் - வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம்; எண்ணின்ஒற்றை.

புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.

ஏற்று - (வி)எழும்பு; உணர்த்து; பாரமேற்று; உள்ளேற்று; கற்பி; புகழ்.

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணர்வார்ப் - உணர்ந்து (அதன் படி நடப்பவர்)

முன்னர் - முன்பு; முற்காலத்தில்.

இழுக்கு -  குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

முழுப்பொருள்
பலதுறைகளில் இருந்து பலதரப்பட்ட நூல்களைக் கேட்டு உணரும் கூர்மதி உடைய பலர் கூடியுள்ள அவையில் ஒருவர் தவறாக பேசினால் அது குற்றாமாகும். அதனால் அவர் சொல்லால் சிறுமைப்படுத்தபடுவார். அது மேலான நெறியிலிருந்து நிலைதவறி சிதறி விழுவதைப் போல ஆகும்.

ஒழுக்க நிலைப்பாட்டில் நின்றவரின் மாண்பு அது பிறழ்ந்தபோது தாழுதல் எவ்வளவு இழிவாகுமோ, அந்த அளவுக்கு இழிவு என்று சொல்லி, அவையறியாப் பேசுதலின் இழிவை வலிமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்¢.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல். இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

குறள் 715
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

என்றவற்றுள்ளும்  - என்பதின் உள் 

நன்றே - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முதுவருள் - முதுவர் - மூத்தோர்; அறிவால்உயர்ந்தோர்; புலவர்; மலைச்சாதியார்; மந்திரிகள்.

முந்து - முற்காலம்; ஆதி; முன்பு; வெண்ணாரை.

கிளத்தல் - புலப்படக்கூறுதல்; விதந்துகூறுதல்.

கிளவாச்  - புலப்படாத 

செறிவு - நெருக்கம்; மிகுதி; கூட்டம்; உறவு; பொந்து; கலப்பு; உள்ளீடு; தன்னடக்கம்; எல்லைகடவாநிலைமை; நெகிழிசையின்மையாகியசெய்யுட்குணம்.

முழுப்பொருள்
கற்றோர் சான்றோர் கூடியுள்ள அவையினில் அவர்கள் நம்மை பேச அனுமதிக்கும் பொழுது பேச வேண்டும். சான்றோர்கள் பேசுவதற்கோ அல்லது நமக்கு வாய்ப்பு கொடுப்பதற்கோ முன்பே முந்தி பேசாமால் இருப்பது சிறந்தவற்றுள் எல்லாம் சிறந்தது. முந்திக்கொண்டு பேசாத இப்பண்பு / இவ்வொழுக்கம் அடக்கம் / பணிவு எனலாம்.

அன்றும், இன்றும், என்றும், அவையொழுக்கிலே அறியப்படவேண்டிய இன்றியமையாத பண்பு இது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். (தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

சாலமன் பாப்பையா உரை
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

குறள் 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
அவை மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியார்  அறிய மாட்டார்கள்.

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லல்சொல்வது; கூறுவது

மேற்கொள்பவர்  - மேற்கொள்வது - மேற்கொள்ளுதல் -மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

சொல்லின்கூறுபவற்றின் , கூறினால்

வகை கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அறியார்அறிய மாட்டார்கள்.

வல்லதூஉம் - வல்ல - வலிமையுள்ள; திறமையுள்ள

இல் - இல்லை 

முழுப்பொருள்
ஒரு சபையின் இயல்பை அறியாமல் அச்சபையின் முக்கியத்துவமும் பலர் ஒன்றுகூடியுள்ள கூட்டு நேரத்தின் மதிப்பையும் அறியாமல் தொடர்ந்து அளவுக்கு அதிகமா பேசிக்கொண்டு இருப்பவருக்கு சொற்களின் மதிப்பும் வலிமையையும் அதனை அவையில் பயன்படுத்தவேண்டிய முறையும் தெரியாது. அவ்வாறு அவையின் இயல்பு அறியாதவரும் சொல்லின் வலிமை அறியாதவரும் சொல்ல தக்க வலிமையான ஆக்கப்பூர்வமானது என ஏதுமில்லை. 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை. (அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.

மு.வரதராசனார் உரை
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

Management - Public Speaking - Audience Analysis
An important factor that decides the outcome of a speech is the audience. A speaker, according to Kural 713, must have a thorough knowledge of his audience before he speaks to them. 
Those are poor orators, unavailing, 
Who speak without knowing their audience. 

An audience is similar to the road on which we drive our vehicles. The condition of the road decides the speed of a vehicle and the comfort of driving. Similarly, the level of the audience influences the flow of a presentation and the accomplishment of objectives. The profile of the audience influences our speeches. Profile includes their age, gender, number, experience, education, exposure, and expertise.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

குறள் 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.

தெரிந்து - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

சொல்லுக - சொல்லுதல் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லின் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

நடை - காலாற்செல்லுகை; பயணம்; அடிவைக்குங்கதி; வாசல்; இடைகழி; ஒழுக்கம்; வழக்கம்; நீண்டநாள்; நடைகூடம்; இயல்பு; அடி; கூத்து; தொழில்; செல்வம்; ஒழுக்கநூல்; நித்தியபூசை; கோயில்; கோள்முதலியவற்றின்கதி; கப்பல்ஏறும்வழி; மொழியின்போக்கு; வாசிப்பின்நோட்டம்; தடவை

தெரிந்த தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

நன்மையவர்நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல். 

முழுப்பொருள்
பலர் கூடியுள்ள ஒரு அவையில் எவ்வாறு பேசவேண்டும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார் 

1) இடைதெரிந்து நன்குணர்ந்து - நாம் பேசுகின்ற இடத்தில் கூடியுள்ளவர்களின் திறன் அறிந்து அதற்கு ஏற்றாற்போலும், அவர்களின் கூட்டாக இருக்கும் நேரத்தின் மதிப்பையும் உணர்ந்தும், நாம் சொல்லும் சொல்லின் இடத்தையும் அறிந்தும் (அதாவது பலர் பேசுகின்ற இடத்தில முன்பு பேசியவர் கூறியதை மறுபடியும் கூறாமல்), நேரத்தின் மதிப்பை உணர்ந்தும் (அதாவது முக்கியமானவற்றை பிறர் ஐயமற எளிதில் விளங்கும் வண்ணம் சுருக்கமாக சொல்லுதல்), தவறாக பேசினால் அதனால் வரக்கூடிய துன்பத்தையும் அதன் விளைவுகளையும் உணர்ந்தும்  பேசவேண்டும்.  

2) சொல்லின் நடைதெரிந்த - சொல்லின் நடை என்றால் மொழியின் இயல்பு அது பயணிக்கக்கூடிய தொலைவு அது ஆற்றக்கூடிய தாக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அது மட்டுமின்றி சொல் என்பது செல்வத்திற்கு சமம். அதனை சிக்கனமாக செலவிட வேண்டும். ஆதலால் குறைவான ஆழமான பொருத்தமான ஆக்கப்பூர்வமான சொற்களை தேர்வு செய்து பேசவேண்டும். (பொருத்தமான சொற்களை தேர்வு செய்யவேண்டும் என்றால் அவருக்கு நல்ல வாசிப்பு பழக்கம் இன்றியமையாததாகும்). அதுமட்டுமின்றி நாம் கூறும் நடையில் தெளிவு இல்லையென்றால் பிறர் அதை தவறாக புரிந்துக்கொள்ளவும் ஐயங்களுடன் புரிந்துக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால் தெளிவாக பேசவேண்டும்.

மேற்சொன்னவனாரு ஒரு அவைதனில் பேசவேண்டும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தௌ¤ந்து சொல்லுக. (சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து நன்மையாமவற்றை யறிந்து சொல்லுக: சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார். இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.

English Meaning - As I taught a kid - Rajesh
While speaking to an audience follow the below
1) Know the place and know the audience. - The place here means, it can be a huge stage or an opportunity such as conferences, seminars, business review meetings etc. Audience here means, it can be scholars, scientists, business owners, investors, writers etc. So, when in an high profile gathering, one has to understand the value of all the audience's time. One has to speak with high content without beating around the bush. One can keep the speech dense with clarity and coherence. If one doesn't utilize the time effectively or one doesn't speak appropriate things then he or she will not be listened and might be punished or not given another opportunity so easily. 

In today's internet age, one might speak through radio, television, podcasts, youtube etc. These videos are listened or watched by millions of people around the world. If our speech doesn't deliver any value for the time they invest, people will soon unsubscribe. 

2) Know your words and language - One has to design the tone and language of his speech according to the audience. All the speeches should have the clarity and coherence. The speech can be and has to be dense if it is an high profile meeting. For layman, the speech has to be easily digestible without giving any room for misinterpretation. So, one has to choose the right set of words

Questions that I ask to the kid
When speaking to an audience what are the two things you should be aware of?

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக

குறள் 711
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆராய்ந்து - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்; ஆய்வு; பரிசீலனம்; சோதனை தலையாரி

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

சொல்தல் -கூறுதல் ; எடுத்துரைத்தல்  

சொல்லுக - கூறுக; உரைக; மொழிக 

சொல்லின் - கூறுபவற்றின் 

தொகை - கூட்டம்; சேர்க்கை; கொத்து; மொத்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; தொகுத்துக்கூறுகை; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.
மெய்மை -  உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

முழுப்பொருள்
ஒருவர் ஒரு கருத்தையோ உரையினையோ ஒரு அவையில் எடுத்துரைக்கும் பொழுது அந்த அவையில் கூடியிருப்பவர்களை பற்றி ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு சொற்களை தேர்ந்தெடுத்து பேசவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அவையை ஏன் ஆராய்ந்து பேச வேண்டும் என்றால் ஒரு சில அவைகளில் எளிதாக உள்வாங்கக்கூடிய சான்றோர்கள் அறிஞர்கள் கூடி இருப்பார்கள் ஒரு சில அவைகளில் எளிதாக கூறப்படவேண்டிய சாமான்யர்கள் கூடியிருப்பார்கள். 

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக என்று வள்ளுவர் நிறுத்திக்கொண்டு  இருக்கலாம். ஆனால் சொல்லின் தொகை அறிந்து என்று கூறியிருக்கிறார். ஏனெனில் சொல்லின் தொகை என்பது பேச்சாற்றலின் முக்கிய அம்சம் ஆகும். சான்றோர் அவையில் தேவையில்லாமல் நீண்ட நேரம் பேசக்கூடாது. சொல்பவற்றை சுருங்க சொல்ல வேண்டும். அவர்களின் நேரத்தை வீண் செய்யலாகாது. அதே போல் சாமான்யர்கள் மன்றத்தில் வளவள என கூறவும் கூடாது. அவர்கள் எளிதில் கவனம் இழக்க கூடும். அவைக்கு ஏற்றவாறு சொற்களின் தேர்ச்சியில் கவனம் செலுத்தி தேர்ந்து பேச வேண்டும்.  அவைக்கு ஒவ்வாத அநாகரிகமான சொற்களை பேசவும் கூடாது. 

அப்படி பேசினால் பேசுபவர்க்கு நன்மை ஏனெனில் கேட்போரின் நேரமும் வீணாகாது கேட்போருக்கு பேசுவது விளங்கும். அதுமட்டுமின்றி பேசுபவர்க்கு அடுத்த முறை வாய்ப்பும் வழங்கப்படும். 

பழமொழிப் பாடல், 
“கேட்பாரை நாடிக் கிளைக்கப் படும் பொருட்கண் 
வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் தோற்பன
கொண்டு புகாஅர் அவை” 
என்கிறது. 

சொல்லின் தொகையென்பது, அரசோடு பறிமாறிக்கொள்கிற அமைச்சர், தூதர் போன்றோர், கொச்சைச் சொற்கள், மற்றும் அவைக்கேற்பிலாத சொற்கள் இவற்றை விலக்கியே பேசவேண்டும், என்பதைக் குறிக்கிறது.

இன்னும் எளிதாக சொன்னால், நடிகர் ரஜினிப் போன்றோர் தனது படங்களில் வரும் (punch)வசனங்களில் மிக முக்கியமான கருத்துக்களை மிக மிக எளிமையாக பாமரர்களும் புரிந்துக்கொள்ளும் அளவில் வைத்திருப்பர். ஏனெனில் ரஜினிக்கு தெரியும் தனது படங்களை காணும் திரையரங்குகளில் இருப்பது பொழுதுப்போக்கிற்காக வரும் பாமரர்கள் அறிவு பெற வரும் மாணவர்கள் அல்ல என்று. அதனால் தான் பாடம் எடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் punch வசங்களை ஒரிரு முறைக் கூறுகிறார்.

உதாரணமாய் சொன்னால், நடிகர் ரஜினி அவர்கள் “அதிகமாய் ஆசைப்பட்ற ஆம்பளையும் அதிகமாக கோபப்படும் பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை” என்று  படைப்பா படத்தில் punch வசனம் பேசுகிறார். பொழுது போக்கிற்காக வரும் திரையரங்குகளில் திருக்குறள் சொல்வது பொருத்தமற்றது. ஆனால் நடிகர் தனுஷ் வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்தில் இரண்டு திருக்குறள்களை punch-ஆக சொல்லி இருப்பார். எத்தனைப்பேருக்கு அக்குறள் நியாபகம் இருக்கிறது என்றுப்பாருங்கள். அதனால் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக என்றுக்கூறுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக. (சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.).

மணக்குடவர் உரை
இருந்த அவை யறிந்தாரை யறிந்து அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து சொல்லுக: சொல்லின் தொகுதியை அறிந்த தூய்மையையுடையவர். தொகையறிதல்- திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

Thirukkural - Management - Public Speaking - Audience Analysis
A great speaker is one who understands the quality, qualification, experience, and expectations of his audience. He also knows the nature or quality of the words he chooses and the way he presents the message to suit the standard of his audience, expresses Kural 711. 

Meticulous masters of words 
Must suit them carefully to the council.

So, knowledge of the audience, knowledge of the words you select, and knowledge of your style of speaking are essentials of speaking in public. 
Those who do understand their audience and the effects of their words on their audience are great orators. They have mastered the art of public speaking.

English Meaning - As I taught a kid - Rajesh
Whenever one is speaking in front of an audience in a meeting / group / auditorum / mass gatherings etc, one should analyze the audience in terms of the intellect, mindset, the purpose of gathering, experience, value of their time, etc before speaking to the audience.  After analyzing, one should appropriately tailor the speech according to the target audience with right choice words at right length. For e.g, in a board meeting we can prioritze the points and give information in bullet points. CEOs, directors etc can undestand them easily. Whereas when speaking to a mass gathering oru speech should be simple and it might have to be explained with some stories and factors. If they don't understand, then they won't engage. They will loose interest and walk away.

Words have impact. So use it wisely. Others time have value. Take it into account as well. Don't waste your boss time. Similarly Don't waste mass gatherings time

Questions that I ask to the kid
How should one speak in front of an audience? Why?

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்

குறள் 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
அங்கணம் - சேறு; முற்றம் இருதூண்நடுவிடம்; சாக்கடை மதகு நீர்த்தாரை
அங்கணத்துள் - அங்கணத்திற்குள்; சேறு, சாக்கடை போன்ற நீர்த்தாரையினுள்

உக்க - ukku-   5 v. intr. உட்கு-. [M.ukku.] 1. To rot, decay, moulder; மக்கிப்போதல். உக்கினமரம். 2. To pine away, waste away;மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc.  
அமிழ்து - உணவு; ஆவின்பால்; நெய் மோர் நீர் மழை தேவருணவு வேள்விப்பொருள்களில்மிஞ்சியவை; இரவாதுவந்தபொருள்; நஞ்சுபோக்கும்மருந்து; இனிமை அழிவின்மை; வீடுபேறு நஞ்சு பாதரசம்
அற்று - aṟṟu   அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது. 
அற்றால் - போன்றது
தம் - tam   part. தாம் Flexional increment generally used along with the nouns ofthird pers. pl.; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை தம்மிடை வரூஉம்படர்க்கை மேன (தொல். எழுத். 191).  
கணத்தர் - கணத்தார் - ஊர்க்காரியநிருவாகிகள்.
அல்லார் - அல்லாதவர்கள்
முன் - முன் நின்று
கோட்டி - துன்பம்; பைத்தியம்; பசுடி; நிந்தை; சபை; குழு; கூட்டம்; பேச்சு; அழகு; ஒருவரோடுகூடியிருக்கை; கோபுரவாயில்; மனைவாயில்; கிட்டிப்புள்; விகடக்கூத்து.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
நாம் ஒரு தகவலை அல்லது தர்க்கத்தை அல்லது அவிப்ராயத்தை பற்றி மற்றவரிடத்தில் பேசுகிறோம் அல்லது ஒரு குழுவிலே விவாதிக்கிறோம் என்றால் குறைந்தபட்சம் அந்த தகவலை/ தர்க்கத்தை திறந்த மனதுடன் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் நபர்களை நம் முன்னே பெற்று இருக்க வேண்டும் இன்னும் சொல்லப்போனால் அதனை புரிந்துக்கொள்ளகூடிய அறிவும் ஆற்றலும் உடைய கற்றோரிடத்தில் தான் கூற வேண்டும். அப்படி அல்லாமல் கற்றோர் அல்லாதவரிடத்திலும் இதனை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் எண்ணமும் இல்லாதவரிடம் உரையாடிக்கொண்டு இருப்பது என்பது நம் வீட்டின் முற்றத்தில் உள்ள சாக்கடையில் (தனக்கும் பிறருக்கும் பயன் படக்கூடிய) அமிர்தத்தை கலப்பது போல் ஆகும். அந்த அமிர்தம் வீண் தான் ஆகும். அப்படி கலப்பது நமக்கும் அவப்பெயரை விளைவிக்கும். ஏன் என்றால், நம்மை பார்க்கும் பிறர், ஏன் இப்படிபட்ட கற்றோர் ஒரு மூடரிடம் போய் இதெல்லாம் சொல்லி தன்னுடைய நேரத்தையும் அறிவையும் வீண் செய்துக்கொள்கிறார் என்று ஏசுவார்கள். அது மட்டும் இன்றி நாமும் இந்த நேரம் விண் ஆகிவிட்டதே என்று வருந்துவோம்.

எல்லாரிடமும் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. கேட்கும் செவியும் கேட்கும் மனமும் எல்லாருக்கும் வாய்க்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கேட்பதைப்போல் கேட்பார்கள், நீங்கள் அகன்று சென்றதும் நீங்கள் சொன்னவற்றிலிருந்தே அவதூறு உருவாக்குவார்கள்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபரிடம் உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டியதுதான் இன்று நீங்கள் படும் பல பாடுகளுக்குக் காரணம். 

தகுதியில்லாரிடத்து சிறந்த பொருளைச் சேர்ப்பதை பலரும் கூறியுள்ளனர். “புல்லிடை உகுத்த அமுதேயும் போல்” என்பார் கம்பர், மந்தரைப் படலத்தில். “கல்வியினாய கழிநுட்பம் கல்லார்முன் சொல்லிய நல்லவும் தீயவாம்” என்கிறது பழமொழிப் பாடல். நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுறைமை அறிவுறுக்குமிடத்து அது, பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில் தேமாம்பழத்தைச் சாறு பிழிந்தாற்போல் தகுதியற்றதாகும்; அன்றியும், ஒரு மலைப்பாறையின்மேல் அறையப்படும் மரத்தாற் செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி சிதைந்து அதனுள் இறங்கிப் பொருந்தாமைபோல அவ்வறவுரையும் அவர் செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும் என்கிறது கீழ்வரும் நாலடியார் பாடல்.

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின். கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  அறிவதற்கு முயலாத மூடர் முன்னே
  அறிவுடையார் பேசாமை பெருமை தரும்
  அதை விடுத்து அவர் முன்னர் பேசல் என்றல்
  அறிவுடையார் பெருமையெல்லாம் குலைத்துவிடும்
  அறிவுடையார் மூடர்கள் முன் பேசல் என்றல்
  அங்கணத்தில் அமிழ்தம் அதைக் கொட்டினாற் போல்
  அறிவுடையார் அதை அறிவார் பேச மாட்டார்
  அதுவே தான் அவர் தமக்குச் சிறப்பளிக்கும்

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
நால்வர் ஐவராகக் கூடிப் பேசும் பழக்கமுள்ளவர்கள் என்றால் நீங்கள் குழுமிப் பேசுவது சபை கூடிப் பேசுவதற்கு நிகரானது. பெருத்த சபை கூடி அங்கே நீங்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு எப்போதும் அமையாது. குடும்பத்திற்குள், நண்பர்களுக்குள், விருந்தாடிச் சென்றவிடத்தில், அலுவலகத்தில், விட்டேத்தியான விடுமுறை தினங்களில் நாம் பலரோடு கூடியிருக்கிறோம். உலகப் பொருள் முதல் சொந்த இடர்வரை அனைத்தைப்பற்றியும் தொட்டுப் பேசிச்செல்வோம். உறவுகளால் நண்பர்களால் அல்லது மற்ற அந்நியர்களால் கூடும் சபையில் நீங்கள் ஒன்றை விவரித்துச் சொல்லும்போது உங்களுக்கே புரிபடாத ஒன்றின்மீது புதிய திறப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட சபையில் நீங்கள் அங்கத்தவர் என்றால் கொடுத்து வைத்தவர். 

என் பள்ளித் தோழன் சந்திரமோகன்பற்றி முன்னர் எழுதிய பதிவுகள் சிலதில் கூறியிருக்கிறேன். எதைப்பற்றியும் அவனிடம் சொல்லலாம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நம் பிரச்சனையின் வேர் என்னவென்று நமக்கே புரியும்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிடுவான். நான் பணிக்குச் செல்லத் தொடங்கிய புதிதில் ‘ஒரு வீடு கட்ட வேணும்டா’ என்று அவனிடம் புலம்பிக்கொண்டே இருந்தேன். ‘வீடு கட்டனும்னா என்ன பண்ணனும் தெரியுமா ?’ என்று திருப்பிக் கேட்டான். நான் விழித்தேன். ‘முதல்ல ஒரு இடத்த வாங்கனும். கோவணத்தூண்டு எடமானாலுஞ் சரி. அதை வாங்கிப் போட்டுடனும். எடத்தை வாங்கிப் போட்டுட்டா எப்ப வேணாலும் வீட்டக் கட்டிக்கலாம். சவுரியப்படறபோது ஒவ்வொரு செங்கல்லா அடுக்கி மெதுவா வீட்டக் கட்டு. யாரு கேட்பா ?’ என்றான். அவன் சொன்ன கணத்தில் எனக்கு எல்லாம் விளங்கியது. உடனடியாக மனையொன்றை வாங்கினேன். மற்றவை எல்லாம் தானாய்க் கனிந்தன. 

எங்கள் இலக்கிய நண்பர்களுக்குள்ளே ஓர் அருமையான சபை இருக்கிறது. தமிழினி பதிப்பக எழுத்தாளர்கள் அதில் அங்கத்தவர்கள். நண்பர் க.மோகனரங்கன் அக்குழுவில் கட்டாயம். நாங்கள் என்ன சொன்னாலும் அவர் இறுதியாக என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம். எதிர்பாராத ஒரு திசையிலிருந்து தம் தரப்பைச் சொல்லுவார். ஆயிரம் பக்கங்களுக்கு எழுதுவது எப்படி இயல்கிறது என்று ஒருமுறை கேட்டேன். ‘யானையை ஒரேயடியா முழுங்கப் பார்த்தா அது எப்பவும் முடியாது. ஆனா, கொஞ்சங் கொஞ்சமா கடிச்சு சாப்பிட்டா சுத்தமாச் சாப்பிட்டுடலாம்’ என்றார். தினமும் முடிகின்ற அளவுக்கு எழுதிக்கொண்டிருப்பதில்தான் அந்தச் சாதனை உருவாகிறது. ‘ஈன்ற நாள்முதல் கன்றுக்குட்டியைத் தோளில் தூக்கிப் பழகிவந்தால் அது வளர வளர ஒரு காளையைத் தோளில் தூக்கும் பலம் பொருந்தியவர் ஆகிவிடுவோம்’ என்பார். 

அதனால்தான் ‘அவையறிதல்’ என்ற அதிகாரத்தையே திருவள்ளுவர் அமைத்திருக்கிறார். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் தரம் மிக முக்கியம். எல்லாரிடமும் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. கேட்கும் செவியும் கேட்கும் மனமும் எல்லாருக்கும் வாய்க்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கேட்பதைப்போல் கேட்பார்கள், நீங்கள் அகன்று சென்றதும் நீங்கள் சொன்னவற்றிலிருந்தே அவதூறு உருவாக்குவார்கள்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபரிடம் உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டியதுதான் இன்று நீங்கள் படும் பல பாடுகளுக்குக் காரணம். 
 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல். 

அங்கணம் என்றால் சேறு, பண்ட பாத்திரங்களைக் கழுவுகிற வீட்டுப் பகுதி, சாக்கடை. 

உக்க என்றால் ‘பதமழிந்த, கெட்டுப்போன.’ 

அமிழ்து அற்றால் - அமிழ்தத்தைப் போன்றது.

தம் கணத்தார் - தம்மைப்போன்ற இணையான நிறையறிவு பெற்றிருப்பவர்கள்.

கோட்டி என்பதற்குக் ‘கூடியிருக்கும்போது பேசும் பேச்சு’ என்று பொருள். (அதனால்தான் தனியாகப் பேசுகின்றவனை அவனுக்குக் கோட்டி பிடித்துவிட்டது, கோட்டிக்காரன் என்கிறோம். அதாவது அவன் முன் சபை கூடியிருப்பதைப்போன்ற பிரம்மை தோன்றி பேசிக்கொண்டேயிருக்கிறான்.) 

தன்னையொத்த நிறையறிவு இல்லாதவர்கள் முன் பேசுவது சேற்றில் அமிழ்தத்தை ஊற்றி அதன் பதத்தை அழிப்பதைப் போன்றது.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல்

குறள் 714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒளி - மேன்மை, பிரகாசம், நட்சத்திரம்
ஒளியார் -  மேன் மக்கள் 
முன் - முன்பு
ஒள்ளியன் - அறிவுடையோன்; புகழுடையவன்; சிறந்தவன்; நல்லவன்.
ஆதல் - ஆகுதல்
வெளியார் - வெளி³. Senselesspersons; அறிவிலார், புறம்பானவர்
முன் - முன்பு
வான் - ஆகாயம், மழை, மேகம்
சுதை - சுண்ணாம்பு, மின்னல், கேடு
வண்ணம் - நிறம்
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
அறிவுடையவர்களுடன், சான்றோர்களுடன், மேன்மக்களுடன் இருக்கும் பொழுது, பழகும் பொழுது, அவையில் பேசும் பொழுது அறிவாக பேச வேண்டும். சிந்தித்து பேச வேண்டும். ஏனெனில் ஒருவர் சொல்லவருவதை இலகுவாக அவர்கள் புரிந்துக்கொள்வர். அவர்களுக்கு கிளிக்கு சொல்வது போல விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய நேரமும் மிக முக்கியம். ஆதலால் சொல்ல வேண்டியவற்றை தெளிவாக சொல்ல வேண்டிய அளவு சொல்லி முடித்தல் வேண்டும்.

ஆனால் அறிவில்லாதவர்களுடன் பழகும் பொழுது அறிவுள்ளவர் போல பேசக்கூடாது. அவர்களுக்கு அவ்வளவு எளிதாக விளங்காது. ஆதலால் எளிமையாக கருத்தை சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் தான் சொல்வதில் பயனுண்டு.

மேலும்: அஷோக் உரை

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அறிவார்ந்த அறிவுடையார் தமக்கு எல்லாம்
அறிவு வழி தருகின்றார் வள்ளுவனார்
செறிவான அறிவுடையார் முன்னர் சென்றால்
சிறப்பான உம் அறிவைக் காட்டி நில்லும்
அறிவற்றார் மத்தியிலே சென்று விட்டால்
அறிவற்றுச் சுண்ணாம்பாய் ஆகி நில்லும்
தெளிவான வழி சொன்னார் வள்ளுவரும்
திரு நாட்டில் நிம்மதியாய் அறிஞர் வாழ

குறள்
ஒளியார் முன் ஒள்ளியராதல் வெளியார் முன்

வான் சுதை வண்ணம் கொளல்

பரிமேலழகர் உரை
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க. ('ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.)

மணக்குடவர் உரை
ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும் வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல்-அறிவால் விளங்குவார்முன் தரமும் அறிவுச்சுடராக விளங்குக; வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல்-அறிவில்லாத வெள்ளைகள்முன் வெள்ளையான சுண்ணச்சாந்தின் நிறத்தைக் கொள்க.

'ஒளியார்' என்றது சொற்பொழியும் அறிஞரின் மிக்காரையும் ஒத்தாரையும். 'ஒளியார்' ஒள்ளியார் என்பதன் தொகுத்தல்.இனி, அகவொளியாகிய அறிவுடையார் எனினுமாம். ஒள்ளியராதல் மதிநுட்பமும் நூற்கல்வியும் உலகியலறிவும் சொல்வன்மையுந் தோன்ற விளக்கியுரைத்தல். 'வெளியார்' வெள்ளியார் என்பதன் தொகுத்தல். அறிவில்லாதவரை வெளியார் என்றது, வயிரமில்லாத மரத்தை வெள்ளையென்றும் வெளிறென்றும் சொல்லும் வழக்குப்பற்றி. அறிஞருக்கு அறிவு விளங்கித் தோன்றுவதுபோல் அறிவிலிகட்கு அறியாமையே விளங்கித் தோன்றுமாதலின், 'வான்சுதை வண்ணங் கொளல்' என்றார். அறியாமையின் இழிவுபற்றிக் கருத்துப் பொருள் வெண்மையைக் காட்சிப்பொருள் வெண்மையோ டிணைத்துக் கூறினார். அறிவிலிகட்கு அறிவிலியாகுக என்பது, சிறுபிள்ளை கட்குச் சிறுபிள்ளையாகுக என்பது போன்றதாம்.

மு.வ உரை: 
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்

சாலமன் பாப்பையா உரை
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

Thirukkural - Management - Values
Mental maturity of a person is known by the way he conducts himself in the presence of others, confirms Kural 714. 

Sparkle mid the sparkling, and be chalk-white,
Among the blank.

A knowledgeable person has to share his knowledge and exhibit his skills in the presence of people who are knowledgeable and skillful. By sharing and exhibiting  a person can have a common conversation among the knowledgeable people and become equals with them. Moreover, the knowledgeable people understand and appreciate the knowledge and skills of another knowledgeable person. 

On the contrary, a knowledgeable person has to pretend that he is ignorant and he lacks skills in the presence of people who are not knowledgeable and skillful. By pretending ignorance he can have a common conversation among the ignorant people and become equals with them. This perceptiveness, the ability to understand others, helps one build effective relationship.

Kural 714 directly advises us not to exhibit our knowledge in the presence of knowledgeable people and pretend ignorance in the presence of ignorant people.

English Meaning - As I taught a kid - Rajesh
Great minds talk about ideas because great minds can understand ideas easily. One doesn't have to explain the basics of the ideas. Great minds can comprehend the subject due to their knowledge, expertise, experience and grasp of broad things. So, knowledgeable people can share their knowledge with knowledgeable people and can have an conversation with them and become equals with them. Sharing ideas and conversing around knowledge is much better than discussing about events and gossiping about people. 

At the same time, a knowledgeable person has to pretend that he is ignorant and lacks skills in the presence of people who are not knowledgeable. By which, he can converse even with layman. This helps to build effective relationship. Remember, not all are equals. At the same time, we should not consider ourselves superior. We all are humans. We can step down be equals to them. Also remember, sometimes, some insensible people pull down the knowledge of knowledgeable people because of jealous, hatred etc. Rather loosing our energy in these petite fights, one can remain ignorant with them. 

Questions that I ask to the kid
How should you carry yourselves in front of knowledgeable and ignorant audiences? Why?

உணர்வ துடையார்முன் சொல்லல்

குறள் 718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உணர்வு - அறிவு; தெளிவு துயில்நீங்குகை; கற்றுணர்கை; ஒழிவு ஆன்மா புலன்

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின் பட்டப்பெயர் இலங்கையில் ஒருகிராம அலுவலர்.

உணர்வ துடையார் - கேட்பதை (செல்வதை) தாமாக புரிந்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் உடையவர்கள்

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

சொல்லல் - சொல்வது; கூறுவது
சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

முன் சொல்லல் - முன்பு சொல்வது

வளர்தல் - பெரிதாதல்; மிகுதல்; நீளுதல்; களித்தல்; உறங்குதல்; தங்குதல்.
அதன் - It's   It's   It's  

வளர்வதன் - தாமாய் வளரும்

பாத்தி - பகுதி; சிறுசெய்; பங்கு; வீடு.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

பாத்தியுள் - வயலில்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

சொரிதல் - உதிர்தல்; மழைபெய்தல்; மிகுதல்; பொழிதல்; கொட்டுதல்; மிகக்கொடுத்தல்; காண்க:சொறிதல், சுழலுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

சொரிந் தற்று - பொழிவது / விடுவது போல் ஆகும்.

முழுப்பொருள்
ஒரு அவையில் பல மாந்தர்கள் இருப்பர். ஒரு சில அவைகளில் எல்லோரும் (பெரும்பாலும்) அவையில் சொல்வதை தாமாக புரிந்துக்கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக கற்றவர்களாக இருப்பர். அவர்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இராது. 

அப்படிப் பட்டவர்கள் உழவு நிலத்தில் உழாமால் தாமே முளைந்தவர்கள் போன்றவர்கள். அத்தகைய பயிர்களுக்கு நீர் உற்றித் தான் வளரவேண்டிய அவசியம் இராது. அப்படிப் பட்டவர்களுக்கு விளக்கி சொல்வது தாமே முளைத்த பயிர்களுக்கு தண்ணீர் உற்றுவதுப் போல ஆகும்.

ஆக கற்றார் அவை அறிந்து நாம் சுருக்கமாக சொன்னாலே போதும், கற்றார் புரிந்துக்கொள்வர் என்கிறார் திருவள்ளுவர். அவர்களுக்கு விளக்கிச் சொல்லி நேரத்தை விரயம் செய்யவேண்டியதில்லை. 

மேலும்: அஷோக் உரை

உதாரணம்
ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார மாநாட்டில் பல பொருளாதார நிபுணர்கள், தொழில் அதிபர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு புதிய பொருளாதார கொள்கையை விளக்கும் பொழுது அடிப்படை பொருளாதார புரிதல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருளாதார கொள்கையை பற்றி ஒரு குறிப்பு கொடுத்தாலே போதும், அவர்களே அதனை புரிந்து, அதன் விளைவுகளை கற்பனை செய்யக்கூடியவர்களாக இருப்பர்.

சொந்த உதாரணம் 2
என்னுடைய Internship-இல் / வேலையில் சில வேலைகளை பற்றி ஆய்வுகளின் முடிவுகளை மூத்த அதிகாரிகளுக்கும் சக ஊழியர்களுக்கும் காட்சி பதிவு (ppt) தொடர் கொண்டு விளக்க வேண்டும். சில சமயம் தனி தனி யாக. ஆனால் மூத்த அதிகாரிகளின் நேரம் மிகவும் முக்கியமானது. பெரும்பாலும் அவர்கள் அரை மணி (30min) நேரம் மட்டுமே தருவார்கள். அவர்களுக்கு 30-40 காட்சி பதிவுகளை (slides) காண்பித்தால் அவர்கள் பொறுமை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு 6-10 காட்சி பதிவுகளே போதும். உதாரணமாக ப்ரிச்சனை என்ன, தீர்வு என்ன, திட்டம் என்ன என்று சுறுக்கமாக சொன்னாலே அவர்கள் புரிந்துக்கொள்ளு ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்கள் ஆவார்கள்.

மேலும்: இதழ்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கற்றுத் துறை போகிக் காமுற்றுக் கல்வியினைப்
பெற்றுத் துறை போகும் பேரறிவார் தம்மிடத்தில்
பெற்ற கல்வியினைப்பேசிப் பெருமையுறல்
நற்றவமாய்த் தானாய் வளரும் பயிரதற்கு
நலமாகத் தண்ணீரைத் தான் பாய்ச்சல் போலுயரும்
மற்றவரின் முன்னாலே வாய் திறத்தல் அய்யய்யோ
மலிவாக்கி அமுதமதை பாத்திரங்கள் கழுவுகின்ற
முற்றமதின் அங்கணத்தில் கொட்டுவதாய் வீணாகும்

குறள்
பொருட்பால் அவை அறிதல் குறள் 8ம் 10 ம்

உணர்வதுடையார் முன் சொல்லல்வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார் முன் கோட்டி கொளல் 

பரிமேலழகர் உரை
உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினையுடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும். 

விளக்கம் 
(தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உணர்வது உடையார்முன் சொல்லல் -பிறர் உணர்த்த வேண்டாது தாமே பொருள்களை யுணரவல்ல அறிவுடையாரவைக்கண் கற்றார் ஒன்றைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்த அற்று -தானாக வளரும் பயிர் நின்ற பாத்திக்குள் நீரை வார்த்தாற் போலும்.

தானே வளரும் அறிவு மிக விரைந்து வளரும் என்பதாம். இவ்விரு குறளாலும், ஒத்தாரவைக்கண் கற்றோர் தமக்குரிய இலக்கியநடையிற் பேசுக என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.

மு.வ உரை
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது

சாலமன் பாப்பையா உரை
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
While speaking to an high profile audience (scholars, scientists, business owners, etc.) who can understand and comprehend complex subjects without spoon feeding, one can speak densely with clarity and coherence. Explaining basics to them is like pouring water in an water irrigated field in which the seeds have already germinated and grown quite well. So, one doesn't have to beat around the bush. One doesn't have to explain the basics to the high profile audience. Because the high profile audience are knowledgeable and experienced in the subject are for which the gathering has been convened. By speaking coherently, one can make use of the time effectively and deliver lot of value to the audience. 

Questions that I ask to the kid
What is spoon feeding to a high profile audience is like?