Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_074. Show all posts
Showing posts with label Athikaaram_074. Show all posts

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

 

குறள் 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
[பொருட்பால், அரணியல், நாடு] 

பொருள் 
ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

அமைவு - அமைதி; ஒப்பு; amaivu   n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை-. Modesty;respectful behaviour; அடக்கம்.

எய்தியக் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

கண்ணும் -  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).  

கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)

பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை

இன்றே - இல்லை 

வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.

அமைவு -  அமைதி; ஒப்பு; amaivu   n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை-. Modesty;respectful behaviour; அடக்கம்.

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

இல்லாத - இல்லை

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
ஒரு நாட்டிற்கு எல்லா இயற்கை வளங்களும் (ஆறுகள், மலைகள், குளங்கள், ஏரிகள், விளை நிலங்கள், காடுகள்)  உழைக்கும் மக்களும் அமைந்திருந்தாலும் நன்றாக உற்பத்தியை உருவாக்கிக் குன்றாத செல்வத்தைப் பெருக்கினாலும் குற்றங்கள் இன்றி பசி இன்றி பிணி இன்றி உட்பகை இன்றி இருந்தாலும் ஒரு நல்ல வேந்தன் இல்லாத நாடு மேற்சொன்ன எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் பயனில்லை. ஏனெனில் ஒரு வேந்தனே ஒரு நாட்டை வழிநடத்துபவன். ஒரு வேந்தே நாட்டை முன்னேற்றுபவன். ஒரு வேந்தே ஒரு நாட்டிற்கு ஒளிவிளக்காய் நம்பிக்கையாய் விளங்குபவன். ஒரு வேந்தன் சரியாக அமையாவிட்டால் மக்கள் நம்பிக்கையின்றி மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு அவதிப்படுவதுப்போல் நிம்மதியின்றி அவதிப்படுவர். 

“வேந்து அமைவு” என்பதால் அரசின் மேல் மக்களுக்கு உள்ள அன்பும், அரசுக்கு மக்கள்மேல் உள்ள பரிவும், கனிவும் உணர்த்தப்படுகிறது.

இது நாட்டிற்கு மட்டும் அல்ல ஒரு வீட்டிற்கு பொருந்தும். ஒரு வீட்டில் ஒரு தலைவன் நன்றாக அமையாவிட்டால் அவ்வீட்டில் எல்லா செல்வங்களும் இருந்தும் என்ன பயன்?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று. (வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு. இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

 

குறள் 739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
[பொருட்பால், அரணியல், நாடு] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.


நாடா - நாடாமல் - தேடிச்செல்லாமல் வரும்

வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம்.

வளத்தன -  எல்லா வளத்தையும் தன்னகத்தே கொண்டதாம்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

அல்ல - இல்லை

நாட நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம்.

தரும் - தருதல் - கொடுக்கும் 

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
பிற நாடுகளை நாடாமல் தன்னகத்தே உற்பத்தியின் மூலமும் வணிகத்தின் மூலமும் வளங்களை பெருக்கி மக்களின் தேவைகளை பூர்த்தி(நிறைவு) செய்து சீரும் சிறப்புமாய் இருப்பதே நாட்டுக்கு சிறப்பாகும். அதுவே நாடாகும். அதேப்போல் தன் நாட்டை ஆள மக்களின் தேவைகளை பிற நாடுகளின் உதவியையும் செல்வத்தையும் வளங்களையும் நாடி நம்பி இருப்பது நாடாகாது. அது அந்நாட்டிற்கு சிறப்பாகாது. 

இது நாட்டிற்கு மட்டும் அல்ல. வீட்டிற்கும் பொருந்தும். ஒரு வீட்டின் (வீட்டு மக்களின்) தேவைக்கு வருமானம் ஈட்டு வாழ்வதே சிறந்ததாகும். வீட்டின் தேவைக்கு மற்றவர்களையும் கடன்களையும் நம்பி இருப்பது வீடாகாது. வருமானத்திற்கு மேல் செலவு செய்தால் அது வீட்டில் சமநிலையை விரைவில் கெடுத்து அழிவை கொடுக்கும். துன்பம் ஏற்படும்.

மேலோட்டமாக பார்த்தால் ஒரு நாடு பிற நாடுகளை சார்ந்து இருக்கக்கூடாது என்று மட்டும் தான் தோன்றும். ஆனால் பல நூற்றாண்டுகள் முன்பே தன் தேவைகளுக்காக பிற நாடுகளை நாடாத தன்னிறைவு நாடே நாடு என்னும் கோட்பாடே சிறந்த கோட்பாடு என்று (வள்ளுவராலும், தமிழர்களாலும்) நெறியாய் வகுக்கபட்டுள்ளது. இன்று வணிகத்திற்காக, வேலைவாய்ப்பை பெருக்கவதற்காக, நாட்டின் செல்வத்தை பெருக்குவதற்காக பல நாடுகளை நாடி பல நாடுகள் உள்ளன. இதற்கு உலகமயமாக்கல் (Globalization) என்று வசதியாக பெயர் வைத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் இரையாவது இயற்கை வளங்களே. இயற்கை வளங்களையை உலகிற்கே பங்கிட்டு தந்துக்கொண்டு இருப்பதால் எல்லா வளங்களும் குன்றுகிறது. மேலும் உலகமே வெட்பமயமாக்கலால் தவிக்கிறது. பல உயிரினங்கள் வாழ்விடம் உணவு முதலியவை குறைந்து அழிகின்றன. மேலும் வேலைவாய்ப்புகளுக்காக ஒரு நாடு மற்ற நாடுகளை சார்ந்து இருக்கின்றன. ஒருவிதத்தில் அவர்கள் சுயமாக ஆளமுடியாது. மற்ற நாடுகளை மகிழ்வித்து அவர்கள் மனம் நோகாமல் பாசாங்கு செய்தே காலம் தள்ள வேண்டும். மேலும் இதற்கெல்லாம் அடி நாதம் பேராசை. தமிழ் நாட்டில் வாழும் ஒருவர் ஏன் ராஜஸ்தான் சலவை கல்லையோ அல்லது இத்தாலியன் டைல்ஸையோ தன் வீட்டு தரையிற்கு பயன்படுத்த வேண்டும்? ஆடம்பரம் தானே? 

மஹாத்மா காந்தி இந்த தொழிற்சாலை புரட்சியின் பின்விளைவுகளை நன்கு உணர்ந்தே சிலவற்றை கூறியுள்ளார். அவை
உலகம் முழுவதிலும் இயற்கை வளங்கள் பாதிக்குமேல் நம் சுயநலத்தால் அழிக்கப்பட்டுவிட்டன. சுரங்கம் அமைத்தல், தொழிற்சாலை அமைத்தல். கட்டடங்கள் கட்டுதல் என, பல காரணங்களுக்காக வளங்களை அழித்து வருகிறோம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இயற்கை வளங்களை அழிப்பதுதான் தீர்வு என, பலரும் நினைக்கிறோம்.
இந்தியாவில் பிரிட்டிஷார் பெருவாரியான வளங்களைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இதுபற்றிக் காந்தி மிகவும் வேதனைப்பட்டார். இதுபற்றிக் காந்தியிடம் கேட்டபோது, “பூமியின் பாதியளவு இயற்கை வளங்களை அழித்து, பிரிட்டன் நாடு செழிப்பாக மாறிவருகிறது. இந்தியா போல் இன்னும் எத்தனை நாடுகள் தேவைப்படும்?” என்றார்.
காந்தி, சமூக மாற்றத்தை விரும்பியவர் தான். ஆனால், அது மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தொழிற்புரட்சிக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய நாடுகளே, இன்று உண்மையைப் புரிந்துகொண்டுவிட்டன. இயற்கையை அழிக்கக்கூடாது என்று கருதுகின்றன. வாழ்க்கையை வேறு மாதிரி பார்க்கப் பழகி வருகின்றன.
அதாவது, தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவது, விவசாயம் செய்வது, சுற்றுச்சூழலுக்குப் பாதகம் வராத வேலைகள் செய்வது என, மாற்றுப் பாதைகளைத் தேர்வு செய்கின்றனர்.
இதையே தான் காந்தியும் சொல்லி இருக்கிறார். “மக்கள் மீண்டும் அமைதியைக் கொடுக்கும் வாழ்க்கைக்குத் திரும்பும் நிலை வரும்”, "இயற்கையைவிட உத்வேகம் கொடுக்கும் விஷயங்கள் பூமியில் இல்லை. என்னுடைய மனத்தை மென்மையாக்க, இயற்கை ஒருபோதும் தவறியதில்லை” என்றார்.
அவர் சொன்னது இன்று நிஜமாகிறது. இந்தியாவில், பலரும் இயற்கை விவசாயம், தேவையான பொருட்களோடு மட்டுமே வாழ்வது என, காந்திய வழியில் வாழ்கின்றனர்.

"இயற்கையால் மனிதர்களின் தேவையினை மட்டுமே நிறைவு செய்ய இயலும்,பேராசையினை அல்ல" என்றார் காந்தி.



காந்தி: மகிழ்ச்சி பொருளியர்!
காந்தியின் கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது பலரும், “காந்தியின் மற்ற கொள்கைகளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவருடைய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது” என்று கூறுவது ஒரு க்ளிஷே. ஏதோ எல்லோருக்கும் கார் கிடைக்கப் பொருளாதார வல்லுநர்கள் திட்டமிடுவதுபோலவும், காந்திதான் அதைத் தடுத்துவிட்டார் என்பதுபோலவும் பேசுவார்கள். நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு அனைவருக்கும் கார் கொடுப்பது சாத்தியமா என்று யாரும் யோசிப்பதில்லை.

இயற்கை வளங்கள்
அளவான இயற்கை வளங்களை வைத்துக்கொண்டு, அளவற்ற வளர்ச்சி என்று திட்டமிடுவது சாத்தியமில்லை என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் காந்தியப் பொருளாதாரம். இது எவ்வாறு நடைமுறைக்குச் சாத்தியமில்லாதுபோகும்?

காந்தியின் பொருளாதாரச் சிந்தனை என்பது மக்கள் சார்ந்ததே தவிர, இயந்திரத்தையோ பெரும் தொழில்நுட்பத்தையோ சார்ந்தது அல்ல. காந்தி ‘அதிகமானோரால் உற்பத்தி’ என்னும் கருத்தை முன்வைத்தார். 

அதிகமானோர் உற்பத்தியில் ஈடுபடும்போது, உற்பத்தி பெருகுவதோடு, மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். உற்பத்திசெய்யும் பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கையும் கூடும்.

உயரிய தொழில்நுட்பம்
உயரிய தொழில்நுட்பம் மிகவும் தேவையான சில துறைகளுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள காந்தி ஆதரவு தெரிவித்தார். ஆனால், அதுபோன்ற நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமேயொழிய தனியாரிடம் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார் காந்தி. 

உற்பத்தியும் விநியோகமும் உற்பத்திசெய்யும் பகுதியிலேயே அதற்கான சந்தையை ஏற்படுத்துவதன் மூலம், போக்குவரத்துச் செலவு, சந்தைப்படுத்தல் செலவு போன்றவற்றைக் குறைக்கலாம் என்றார் காந்தி. ஓர் உதாரணத்துக்கு, உருளைக்கிழங்கு சிப்ஸை எடுத்துக்கொள்ளலாம். 

அதனுடைய மையப்படுத்தப்பட்ட உற்பத்தித் தொழிற்சாலை ஏதோ ஒரு மாநிலத்தில் உள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தயாரிப்புகள்தான் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கிடைக்கின்றன. 52 கிராம் ரூ.20. அதாவது, 1 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் சுமார் ரூ.400. ஆனால், நம்முடைய கடைவீதியிலேயே தயாரிக்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் கிலோ ரூ.250-க்குக் கிடைக்கிறது. விளம்பர மோகத்தால் 52 கிராம் சிப்ஸை ரூ.20 கொடுத்து வாங்குவதுதான் பொருளாதார முன்னேற்றம் என்று எண்ணுகிறோம்.

காந்தியப் பொருளாதாரம்
ஆனால், காந்தியப் பொருளாதாரத்திலோ அதிகாரத்தையும் உற்பத்தியையும் மையப்படுத்தாது பரவலாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இன்றைய வன்முறையான போக்குக்கும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆடம்பரமான வாழ்க்கை, வறுமை, பயங்கரவாதம் என்ற பல நோய்களுக்கும் அடிப்படையான காரணம், அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிவதுதான். அது உடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்திலும் உடைய வேண்டும்.

நிலைத்த வளர்ச்சியைப் பற்றியும், அதேசமயம் வளமான வாழ்வையும் அடைய ஏற்ற தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காத முன்னேற்றத்தைக் காண வழிவகை செய்வதுதான் காந்தியப் பொருளாதாரம். 

சாதாரண மனிதர்களுக்காக இயற்கையோடு இயைந்த, ஆரோக்கியமான வாழ்வுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதுதான் காந்தியப் பொருளாதாரம். நீங்கள் மகிழ்ச்சியுடன் பொருளாதாரத்தை இணைப்பது என்றால், காந்தியுடன்தான் பொருளாதாரத்தை இணைக்க வேண்டும்.

லாரி பேக்கரும் காந்தியும் (Laurie Baker and Gandhi)
லாரி பேக்கர் (முழுகட்டுரையை வாசிக்க எழுத்தாளர் ஜெயமோகனின் சுட்டியை இங்கு தட்டவும்)





1944ல் பர்மாவில் இருந்து லண்டனுக்குச் செல்ல கப்பலுக்காக கல்கத்தாவில் காத்திருக்கும்போது அவர் அங்கிருந்த குவாக்கர்களின் சந்திப்புக்குச் சென்றார். அப்போதுதான் அவருக்கு காந்தியைப்பற்றிய தகவல் கிடைத்தது. காந்தி அப்போது கல்கத்தாவில் இருந்தார்.சிரித்தபடி பேக்கர் சொன்னார் ”காந்தியின் காது விபரீதமாக இருக்கும் என்றார்கள். எனக்குச் சொன்ன நண்பர் ‘கெட்டில்பிடிக்காதுள்ள மனிதர்’ என்று சொல்லி கேலிச்சித்திரம் வரைவதற்கென்றே உருவாக்கப்பட்டவை அவை என்றார். அதுதான் என்னை அவரிடம் செல்லவைத்தது…”

பேக்கருக்கு கேலிச்சித்திரங்கள் ஒரு பொழுதுபோக்கு. அவை நூலாக வந்துள்ளன. கேலிச்சித்திரம் வரைவதற்காக அவர் காந்தியைப் பார்க்கச்சென்றார். காந்தியைச் சந்திக்கும்வரை அது ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்ற ஐயமே அவருக்கு இருக்கவில்லை. ஒரு சிறிய அறையில் தன் செயலாளருடன் காந்தி இருந்தார். யார் யாரோ அவரைச் சந்தித்துப் பேசிச்சென்றார்கள். குவாக்கர் குழுவைச்சேர்ந்த ஒரு நண்பர் காந்தியின் செயலாளரிடம் பேக்கரை அறிமுகம் செய்தார். காந்தியைச் சந்திக்க பேக்கர் உள்ளே சென்றார்

”நான் கண்டது மிக விசித்திரமான ஒரு கலவையை” என்றார் பேக்கர் ”மேற்கையும் கிழக்கையும் அற்புதமாக கலந்ததுபோல. அவரது தோற்றம் ஒரு மேற்கத்தியனுக்கு அதிர்ச்சியையும் ஒவ்வாமையையும் அளிக்கக் கூடியது. சட்டை போடாமல் பஞ்சக்கச்ச வேட்டி கட்டி மெலிந்த வெற்று மார்பைக் காட்டி  அமர்ந்திருந்தார். சட்டென்று அவர் குளியலறையில் இருக்கிறார் என்றே தோன்றும். ஆனால் அவரது புன்னகையும், மென்மையான நாகரீகமான குரலும் அவரை ஒரு நவீனகாலகட்டக் கனவான் என்றே சொல்லின. உங்களுக்குத் தெரியுமா, நான் நேருவையும் படேலையும் கூட சந்தித்திருக்கிறேன். ஒரு மேலைநாட்டானுக்கு மிக நெருக்கமாக ஆகக்கூடிய நுண்ணிய பழக்கங்கள் கொண்டவர் காந்திதான்…”

பேக்கர் சிரித்துக்கொண்டே சொன்னார். ”நான் அவரிடம் அதிகம் பேசவில்லை. முதலில் அவரது தோற்றமே என்னை அவரிடம் முழுக்க ஈடுபடுத்திவிட்டது. இப்போது அதைப்பற்றி என்ன சொன்னாலும் கற்பனையாகவும் மிகையுணர்ச்சியாகவும் தோன்றும். ஆனால் ஒருவர் தன் கொள்கைகளை தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் அவரது உடலே அவரது கொள்கை ஆக ஆகிவிடுகிறது. காந்தியின் உடல் அவர் சொல்லிவந்த எல்லாவற்றையும் எனக்கு உணர்த்தியது.”

பேக்கரிடம் காந்தி அவரது துறையைப் பற்றிக் கேட்டார். பேக்கர் அவர் எளிமையான வீடுகளை உருவாகக் விரும்புவதாகச் சொன்னார்.காந்தி சொன்ன இரு விஷயங்கள் பேக்கரை பின்னர் ஐம்பது வருடம் பின் தொடர்ந்து வந்தன. ஒன்று,  உணவு உடை வீடு ஆகிய மூன்றுமே மனிதனுக்கு எளிமையாகக் கிடைக்கவேண்டும். அவற்றுக்காக அவன் வாழ்நாள்முழுக்க போராடக்கூடாது. இரண்டு, நவீன வீடுகளின் மிகப்பெரிய சிக்கல் அவற்றில் பெரும்பகுதிச் செலவு போக்குவரத்துக்கு ஆகிறது என்பதே.

லண்டன் திரும்பிய பேக்கர் காந்தியின் வரிகளில் இருந்து மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டே இருந்தார். காந்தி சொன்னதன்படி ‘இந்தியாவின் கிராமங்களை தரிசிக்க’ அவர் கிளம்பி இந்தியா வந்தார். 

பேக்கர் வீடுகளைப் பற்றிய தன் சிந்தனைகளைச் சொன்னார். உலகமெங்குமே ஒரு நடுத்தர வற்கத்து மனிதனின் வாழ்க்கை சேமிப்பில் பெரும்பகுதியை வீடுகள் பிடுங்கிக் கொள்கின்றன. நாற்பது ஐம்பது வருடம் ஒருமனிதன் ஒரு வீட்டுக்காக உழைக்கிறான் என்பதே அதற்குப் பொருள். அதைவிட அபத்தமான ஏதும் இல்லை. ஏன் என்றால் அந்த வீட்டின் ஆயுட்காலம் அந்த அளவுக்கு நீளமானதல்ல. கடனைக் கட்டிமுடிக்க வீடு பழையதாகிவிடுகிறது. இடிக்க வேண்டியதுதான். புதிய நாகரீகத்தில் வீடு போல ஒரு மாபெரும் வீண் வேறு எதுவுமே இல்லை.

இதற்குக் காரணம் வீடுகட்டுவதில் உள்ள வணிகம். நம் வீடுகளின் பெரும்பகுதி தொழில்துறையால் உருவாக்கப்பட்ட பொருட்கள். தொழில்துறை அவற்றை நமக்கு தேவையானதாக ஆக்குகிறது. எளிய கடன் வசதிகள் மூலம் நம்மை அவற்றை வாங்கச்செய்கிறது. நமது வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உண்மையில் நமக்குத் தேவைதானா என்பதையே நாம் அறிவதில்லை. தொழில்துறை உற்பத்தியாக வீடு இருக்கும்போது அதற்கு ஒரு பொதுத்தன்மை தேவையாகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரே பொருட்கள். ஒரே வடிவமைப்பு.

இந்தக் காரணத்தால் வீட்டின் கட்டுமானப் பொருட்களின் விலையில் அறுபதுசதவீதம் வரை அந்தபொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் செலவாக இருக்கிறது. திருவனந்தபுரத்தில் ஒரு வீடு கட்ட ராஜஸ்தான் சலவைக்கல், மலேசிய மரம், பிகாரின் இரும்பு,  ஆந்திராவின் சிமெண்ட்,  தமிழ்நாட்டு மணல் என பொருட்கள் வருகின்றன. இந்தச்செலவைத்தான் நாம் வாழ்நாளெல்லாம் சுமக்கிறோம்!

‘ஒருபிராந்தியத்தில் கிடைக்கும் பொருட்களையும் திறமையையும் மட்டுமே பயன்படுத்தி அங்கே வீடுகளைக் கட்டுவது’ — ஒற்றை வரியில் இதுதான் லாரி பேக்கரின் கட்டுமானக் கொள்கை. கேரளம் உயர்தரமான களிமண் கிடைக்கும் இடம். நல்ல கிளிஞ்சல்சுண்ணாம்பும் கிடைக்கிறது. மரம் தேவைக்கு உள்ளது. இவையே தரமான கட்டுமானத்துக்குப் போதும். சிமெண்ட், இரும்பு ஆகியவை கேரளத்துக்கு வெளியே இருந்து வருகின்றன. அவற்றை கூடுமானவரை தவிர்க்கலாம்.

இதற்காக பேக்கர் உருவாக்கிய கட்டிட மாதிரிலென்பது சுவருக்குச் செங்கற்களை நடுவே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை [சுண்ணாம்பு மணல் கலவை] வைத்து கட்டி மேலே சிமிண்ட் பூச்சு இல்லாமல் அப்படியே விட்டுவிடுவதாகும். கூரைப்பரப்பை கொஞ்சமாக கம்பி வைத்து அவற்றின் மீது ஓடுகளை பரப்பி அவற்றுக்கு மேலே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை பூசி உருவாக்குவார்கள். செங்கல்லால் சாத்தியமான எல்லா இடங்களிலும் வளைவுகளை அமைத்தால் அவை கூரையின் எடையை அற்புதமாக தாங்கும். ஆகவே அதிகமான இரும்பின் உபயோகம் இல்லை.

மரபார்ந்த வீடுகளில் இருந்து உத்திகளைக் கற்றுக்கொள்வது பேக்கர் வீடுகளின் பாணி. உதாரணமாக கேரளம் அதிக மழையுள்ள பகுதி. ஆகவே கூரைகளை மிகச்சரிவாக அமைப்பது அங்குள்ள வழக்கம். பேக்கர் கூரைகளில் நிறைய கூம்புகளை பயன்படுத்தினார். வெக்கை கொண்ட கேரளச் சூழலுக்கு அதிக காற்று வரும்படி திறந்த பகுதிகள் அமைந்த வீடுகளை அவர் வடிவமைத்தார். பேக்கரின் கொள்கைப்படி வீட்டுக்கு பகலில் எந்தவிதமான  ஆற்றலும் தேவையாகக் கூடாது. காற்றும் ஒளியும் இயல்பாகவே இருக்க வேண்டும்.

பேக்கர் வீடுகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் அவை உட்கார்வதற்கான பலவகையான திண்ணைகளைக் கொண்டவை என்பதே. பேக்கரைப் பொறுத்தவரை இந்தியச் சூழலில் அமர்வதற்கு திண்ணைகளே மிகவும் ஏற்றவை.  குளிர்நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட சோ·பாக்கள் இங்கே மிக மிக வசதிக்குறைவானவை. சில்லென்ற திண்ணைகள் பல கோணங்களில் அமைந்த பேக்கர் வீடுகள் சட்டென்று பிரபலம் அடைந்தன.

இந்தியா சுதந்திரம்பெற்றபின் பேக்கர் கேரள அரசியல்வாதியான டாக்டர் பி.ஜெ.சாண்டியின் ஆதரவுடன் கேரளா வந்தார். 1948ல் சாண்டியின் சகோதரியான மருத்துவர் எலிஸபெத் ஜேக்கப்பை மணம் புரிந்துகொண்டார். அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிதோராகர் என்ற ஊருக்குச் சென்று குடியேறினார்கள். பதினாறு  ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பேக்கர் அப்பகுதியில் தன் செலவுகுறைவான சுதேசி வீடுகளை பலவகையிலும் பரிசோதனை செய்து பார்த்தார். குறிப்பாக சிமிண்ட் கூரைப்பரப்பை [டெரஸ்] போடுவதற்கு இரும்புக்கம்பிகளுக்குப் பதில் மூங்கில்களை பயன்படுத்த முடியும் என்று அவர் கண்டுபிடித்தார்.

1966ல் பேக்கர் பீர்மேட்டுக்கு வந்து தங்கி அங்கே பழங்குடிகளுக்கான வீடுகளை வடிவமைத்தார். 1970ல் அவர் திருவனந்தபுரத்துக்கு குடியேறினார். பேக்கரின் வீடுகள் மேல்  மக்களுக்கு ஓர் ஐயம் இருந்துகொண்டே இருந்தது, அவை உறுதியானவைதானா என்று. அதைப்போக்கும் வகையில் பேக்கர் பெரிய கட்டிடங்களை உருவாக்க ஆரம்பித்தார். 1971ல் அவர் திருவனந்தபுரத்தில் அமைத்த வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் [  Central for Development Studies ] அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.
திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் கா·பி ஹவுஸ் பேக்கர் பாணி கட்டிடத்துக்குச் சிறந்த உதாரணமாகும்.

லாரி பேக்கரின் கட்டிடங்கள் சடென்று பலவகையிலும் புகழ்பெற்றன. ஒன்று அவை மாறுபட்ட காட்சியழகை உருவாக்கின. தேவன் போன்ற ஓவியக்கலைஞர்கள் அவரிடம் பயிற்சி பெற்றபின் உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை அவரது பாணியில் கட்டிடங்களை அமைக்க ஆரம்பித்தன. குறிப்பாக  மருத்துவர்கள் அவரது கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக உணர்ந்தார்கள். லாரி பேக்கரின் கட்டிடங்கள்  மரங்கள் அடர்ந்த கேரளசூழலுடன் இணைந்து கண்ணுக்குத் தெரிபவை. ஆடம்பரம் இல்லாமல் அழகுடன் திகழ்பவை.

பேக்கர் கட்டிடக்கலையின் பல சிறப்பம்சங்களை சொல்லலாம். அவற்றில் ஒன்று கட்டிடங்களுக்காக தரையை சமப்படுத்தாமல் இருப்பது. தரை எப்படி இருக்கிறதோ அதற்கேற்ப கட்டிடத்தை வடிவமைத்துக்கொள்வது. பெரிய மரங்களை வெட்டாமல் அவற்றையும் தக்கவைத்துக்கொண்டு கட்டிடங்களை உருவாக்குவது. குளிரூட்டும் வசதிக்காக பேக்கர் உருவாக்கிய உத்தியும் புகழ்பெற்றது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்குவதுதான் அது. அதனருகே நீரில் தொட்டுக்கொண்டு சுட்டசெங்கல்லால் ஆன சுவர் இருக்கும். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியைச் செய்யும்!

பேக்கருக்கு களிமண்- சுண்ணாம்பு- கருங்கல் மேல் அபாரமான பிரேமை இருந்தது. அவர் திரும்பத் திரும்ப அதைப்பற்றிப் பேசினார். அவை சுற்றுச்சூழலுக்கு சாதகமானவை. ஒருபோதும் அவை பூமியை மலினப்படுத்தும் குப்பை ஆக ஆவதில்லை. ஒரு வீட்டை இடிக்க நேர்ந்தால் அவற்றை நாம் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அவை நம் மண்ணில் இருந்து உருவாகின்றவை ஆதலால் நம் சூழலுடனும் நம் உடலுடனும் மிக மிக ஒத்துப்போகின்றவை. ஒருபோதும் தீங்கு செய்யாதவை.

இத்தனை தரமான களிமண் கிடைக்கும் ஒரு தேசம் அதை மிகக்குறைவாகவே பயன்படுத்துவது ஒரு பெரும் பொருளியல் குற்றம் என்றார் பேக்கர். சிமென்ட் மேலைநாடுகளில்கூட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தியா மிக அதிகமாக சிமெண்டை பயன்படுத்துகிறது. அதன்மூலம் இயற்கை வளங்களை, ஆற்றலை, உழைப்பை அது வீணடிக்கிறது. சரியான வகையில் வடிவமைக்கப்பட்ட செங்கல் கட்டிடம் சிமிண்ட் கட்டிடங்களை விட பலமானது. சொல்லப்போனால் சிமெண்ட் இந்தியாவின் வெப்பநிலையில் நீடிக்கக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்று அவர் எண்ணினார். கடற்கரைப் பகுதிகளில் சிமெண்ட் மேலும் அழியக்கூடியதாக உள்ளது.

உற்பத்தி நுகர்வு இரண்டும் ஒரே இடத்தில் நிகழ வேண்டும் என்பதே காந்தியின் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படை. அவற்றுக்கு இடையே தூரம் அதிகமாகும்தோறும் செலவு அதிகரிக்கும். அதைவிட நுகர்வின் தேவைகள் உற்பத்தியை கட்டுப்படுத்தாமல் ஆகும். அடிப்படையில் காந்திய தரிசனம் என்பது ‘மையப்படுத்தலுக்கு நேர் எதிரானது’ எனலாம். அனைத்தையும் அது பரவலாக்க விழைகிறது. அதிகாரம்,  நிர்வாகம், உற்பத்தி எல்லாவற்றையும் . பேக்கரின் கட்டிடக்கலை அந்த சாராம்சத்தை ஏற்றுக்கொண்டது. அவரது வீடு என்பது ஒரு பிராந்திய மக்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப அங்கே கிடைக்கும் பொருட்களால் அவர்களே உருவாக்கிக் கொள்வது மட்டுமே.






மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.).

மணக்குடவர் உரை
தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.

மு.வரதராசனார் உரை
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

சாலமன் பாப்பையா உரை
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

English Meaning - As I taught a kid - Rajesh
A good state/country is the one which is self-sufficient. It should not be depended on external resources. i.e. a country should not depend on imports and exports. A state has to yield without toil and it should not toil hard to produce yields.  This doesn't mean a country should not import not export at all. A country should not find it difficult if import and export is stopped even for 2-3 years.

We can apply the same principle to an household also. One should be dependent on others or debts for running the household. One has to work and yield.

One of the major advantage of being self sufficient is natural resources will not be exhausted. Humans are greedy. They don't mind exploit resources from other countries. For e.g. Himalayan Salt, Sandalwood, teak wood, oil resources, tea, coffee, marble stones etc. For cultivating tea and coffee, many forests and mountains are deforested and their natural habitat is lost. Nature has everything for humans. But if humans wants everything from nature, then the nature cannot sustain. 

For e.g. Mahatma Gandhi said to architect Laurie Baker that one has to build houses and buildings using the resources available in 50km radius. A person should not use marble stones, sand, wood that has to be sources from a different state 

Also, a country should not depend on debts from foreign countries to carry out infrastructure projects and education projects. A minimal debt for few years is fine. But not regularly. We have seen how shrewd countries and multi national organizations lend loans through IMF (International Monetary Fund), United Nations, World Banks etc. to developing countries. And later, exploit those developing countries by taking ownership of those infrastructure projects (i.e. they enjoy the profits of doing the project as well as enjoy the bank interests from these projects) and making the countries pay interests for a huge number of years.

During the recent pandemic COVID-19 in 2020 and 2021, we saw how many countries were depended on other countries for COVID vaccines. Since 2008, recession has been a common topic every now and then because almost 70% of the world GDP is depended on global trade. 

Questions that I ask to the kid
What is a good state? What is not a good state? Why?

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

 

குறள் 736
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை
[பொருட்பால், அரணியல், நாடு] 

பொருள் 
கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியா - அறியாமல், உணராமல்

கெட்ட  - அழிந்த; தீய.

இடத்தும் -தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம்.

குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

குன்றா - குறைவில்லாத, குறையாத

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

நாட்டின் - நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.


தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள் 
பகைவர்களின் அச்சுறுத்தல்களான கேடுகளை அறியாத நாடு; வறட்சி,  பெரு வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளை சந்திக்காத நாடு, கேடுகளை சந்தித்தாலும் (இயற்கை அழிவுகளான வறட்சி, பெருவெள்ளம், புயல், சுனாமி) தன்னுடைய செல்வம் குன்றாமல் தன்னுடைய இயற்கை வளங்களின் செழுமை குன்றாமல் பார்த்துக்கொள்ளுமானால் அந்நாடே சிறந்த நாடு. தனது செல்வத்தையும் தன் இயற்கை வளங்களின் செழுமையையும் பேணும் நாடே சிறந்த நாடு. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார். இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும் பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.

மணக்குடவர் உரை
கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர். ('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.).

மு.வரதராசனார் உரை
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

குறள் 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு
[பொருட்பால், அரணியல், நாடு] 

பொருள் 
பல்  - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு

குழுவும் - மக்கட்கூட்டம்; மகளிர்கூட்டம்; ஆடுமாடுமுதலியவற்றின்கூட்டம்; தந்திரம்; சாதுரியச்சொல்; தொகுதி.

பாழ் - அழிவு; இழப்பு; கெடுதி; இழிவு; அந்தக்கேடு; வீண்; வெறுமை; இன்மை; ஒன்றுமில்லாதஇடம்; தரிசுநிலம்; குற்றம்; வானம்; மூலப்பகுதி; புருடன்.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

உட்பகையும் - நட்புப்பாராட்டிக்கெடுக்கும்பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு.

வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்

அலைக்கும் - அலைத்தல் - அசைத்தல்; அலையச்செய்தல்; நீரைக்கலக்குதல்; வருத்துதல் அடித்தல் நிலைகெடுத்தல்; உருட்டுதல் அலைமோதுதல்.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

குறும்பும் - பாலைநிலத்தூர்; ஊர்; குறுநிலமன்னர்; பகைவர்:சிறியதுணுக்கு; அரண்; வலிமை; குறும்பர்சாதி; குறும்புத்தனம்; போர்

இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது.

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
ஒரு நாடு கொள்ளக்கூடாதவை எவை ? 
1. பல்குழு - மக்களை பல பெயர்களில் பிரிக்கும் பல குழுக்களை ஒரு நாடு கொள்ள கூடாது. ஏனெனில் அது ஒற்றுமையை வளர்க்காது 

2. பாழ் செய்தல் - நாட்டையும் நாட்டு மக்களையும் அழிக்கும் எத்தகைய செயலும், பூசல்களும் ஒரு நாட்டில் இருக்க கூடாது 

3. உட்பகை - உடம்பினுள் உள்ளிருந்து அழிக்கும் நோய் போன்ற உட்பகை ஒரு நாட்டில் மக்களுக்குள்ளும், அமைச்சர்களுக்குள்ளும், நிர்வாகத்திற்குள்ளும் இருக்க கூடாது 

4. வேந்தலைக்கும் - மன்னரை அலைக்கழிக்கும் வருத்தும் எத்தகைய குற்றங்களும், சமூக சீர்கேடுகளும் ஒரு நாட்டில் இருக்க கூடாது 

5. கொல்குறும்பும் - கொலை தொழில் புரிவோரும், பகைவரும், நம்மை அழிக்கக்கூடிய குறுநில மன்னர்களும் ஒரு நாட்டிற்கு இருக்க கூடாது. 

மேற் சொன்னவை இல்லாத நாடே நாடு. 

துரியோதனனுக்கு பல நல்ல குணங்கள் இருந்தன. அவன் மனைவி பானுமதி மீதும், தன் தாய் தந்தையர் மீதும், தம்பிமார்கள் மீதும், தன் மக்கள் மீதும் கர்ணன் மீதும் கொண்ட அன்பு எல்லையற்றது. ஆனால் அவன் அவனுக்கு நிகரான பகையை என்றும் தேடிக்கொண்டு இருந்தான். அவன் அரசை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தாமல் போர் செய்வதிலும் பகைவரை கொள்வதிலும் தான் நாட்டம் அதிகம் கொண்டான். அதனாலேயே அழிவை கண்டடைந்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பல்குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது. (சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.).

மணக்குடவர் உரை
பலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும் இல்லாதது நாடு.

மு.வரதராசனார் உரை
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

சாலமன் பாப்பையா உரை
சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

குறள் 734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உறுuṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதி செய்யும் பொருள் (தொல். சொல் 301).

பசியும்  உணவுவேட்கை; வறுமை; தீ (பசியாறிப் போயிற்று - ஆறி என்ற வார்த்தை தீயினை ஆற்றுவதற்கோ ?))

ஓவா - ஓயாது / நீங்காது

பிணியும் - பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை

செறு வயல்; குளம்; பாத்தி; கோபம்; ceṟu   IV. v. t. kill, destroy, கொல்லு; 2. hate, detest, வெறு; 3. (fig.) subject the senses, subdue the passions.

பகையும்பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை


சேர்-தல் - cēr-   4 v. [T. cēru, K. Tu. sēru,M. cēruka.] intr. 1. To become united,incorporated; to join together; ஒன்றுகூடுதல் செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்துமின்ன (கம்பரா. பூக்கொய். 5). 2. To becomemixed, blended; கலத்தல் நீரும் பாலுஞ் சேரும்.3. To have connection, as with a society oran institution; சம்பந்தப்படுதல். சங்கத்தில் அவன்சேர்ந்தவன். 4. To be in close friendship orunion; நட்பாதல். அவனோடு சேர்ந்துகொண்டான்.5. To fit, suit; to be adapted to, as the tenonto the mortise; இயைதல் 6. To be incident,co-existent; to appertain, as a quality; உரித்தாதல். இந்த நிலம் அவனுக்குச் சேர்ந்தது. 7. Tobe collected, to become aggregated; சேகரிக்கப்படுதல். நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்துவிட்டது. 8. To be well-rounded, plump; திரளுதல் மால்வரை யொழுகிய வாழை . . . என . . சேர்ந்து (சிறுபாண். 20, உரை). 9. To be full,replete; செறிதல் அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை(குறள், 243). 10. To lie down; கிடத்தல் மீக்கோள 



சேராது - ஒன்று கூடாதது 

இயல்வதுஇயல் - தன்மை; தகுதி சுகுமாரதை ஒழுக்கம் உழுவலன்பு செலவு ஒப்பு இயற்றமிழ் இலக்கணம் நூல் நூலின்பகுதி; திவ்வியப்பிரபந்தத்தைக்குழுவாகநின்றுஓதுகை; மாறுபாடு சாயல் பெருமை


இயல் - iyl   --இயலு, கிறது, இயன்றது, இயலும், இயல, v. n. To be able, be possible, கூடியதாயிருக்க. 2. (p.) To be incident to, be exposed, பொருந்த. 3. To agree, suit, be adapted to, இசைய. 4. To be done, per formed, made or composed, ஆக. 5. To be destined, decreed, allotted, விதிக்கப்பட. 6. To happen, pass, to be in vogue, நடக்க.- Note. This word is often changed to ஏலு both in poetry and in the colloquial language. இயல்வதுகரவேல். Do not refrain from doing what is in your power. வெயிலியல்வெஞ்சுரம். The parched desert exposed to the scorching beams of the sun. தச்சனாலியன்றவீடு. A house made by the carpenter. என்னாலியலாது. I am not able, I cannot do it.  

நாடுநாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
ஒரு நாட்டுடன் செல்வமும் வளமும் மகிழ்ச்சியும் சேர்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டுடன் சேரக்கூடாதது எவை ?

1. அளவுக்கு அதிகமான பசியையை உண்டாக்கும் வறுமை. பசியால் வாடாமல் இருக்க அறம் தழைத்து, மழை பொய்க்காது, உழவு சிறந்து, விளைச்சல் பெருகியிருக்கவேண்டும்

2. நீங்காத துன்பம். நோய், பூசல், வணிக சரிவு, கொடும் ஆட்சி போன்றவற்றால் ஏற்படக்கூடிய நீங்காத துன்பம். முடியாது வளர்ந்துகொண்டே இருக்கும் நோய்கள் மக்களின் தீய பழக்கவழக்கங்களால் ஏற்படுவது. அத்தகைய தீய வழக்கங்களைக் கொண்டோர் வாழாத நாடாக இருக்கவேண்டும்.

3. வெறுப்பால் வரும் பகை - மற்ற நாடுகள் நம்மீதோ அல்லது நாம் பிறர் மீது வெறுப்பினால் கொள்ளும் பகை. பகை அழிவை கொடுக்கும். பகை இருந்தால் உள்ளத்தில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும் விலகிவிடும் என்று வேறொரு திருக்குறளில் பார்த்தோம். நல்ல அமைச்சர்களும், அரசனும், அரசனுக்குப் பின்னால் வரும் சிறந்த குடிமக்களும், உறுதியுடன் உடனிருப்பதால் கொல்லுகின்ற எத்தகைய பகையும் வெல்லமுடியாததாக இருக்கவேண்டும். 

என்று கொல்லாமை அதிகாரத்தில் வள்ளுவரே கூறியிருக்கிறார். பசி என்பது கொடியது. ஆதலால் அதனை போக்குவது அந்நாட்டின் கடமை. எல்லோர் பசியையும் போக்குவது ஒரு அரசங்காத்தின் அல்லது ஒரு ராஜ்ஜியத்தின் பொறுப்பாக்கிவிட்டு மக்கள் சென்று விட முடியாது ஏனெனில் எல்லோர் பசியையும் போக்குவது அவ்வளவு எளிதானதும் அல்ல. அதனை ஒரு அரசாங்கம் செய்வது நடைமுறையில் மிக மிக சிரமம். அதனால் தான் பசி தனை போக்குவதை ஒரு சமூக அறமாக திருவள்ளுவர் கூறுகிறார். அதனால் தான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று கொல்லாமை அதிகாரத்தில் கூறுயிருக்கிறார். அதனால் அதனை நாம் ஒரு விருந்தோம்பல் பண்பாகவும் கருத வேண்டும்.


இதையே சிலப்பதிகார வரிகளும் 
“பசியும் பிணியும் பகையும் நீங்கி 
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி” (சிலம்பு:5:72-3) என்கிறது. 

சீவக சிந்தாமணியும்,
பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையுமென்ன” (சீவக:2375) என்கிறது.

”உறுபசி” என்ற வார்த்தையை கொண்டு ஒரு நாவலை எழுதியுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.).

மணக்குடவர் உரை
மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

English Meaning - As I taught a kid - Rajesh
1) Rampant (/Excessive/intense/abundant/copious) hunger, 
2) constant diseases and sufferings - constant/regular onset of diseases (for e.g. communicable diseases or due to lack of health infrastructure), chronic diseases (due to poor lifestyle, less awareness), sufferings in life due to poverty, inflation, unemployment, poor policies, no-growth  etc
and 
3) enmity/hatred/anger to other countries (especially neighboring countries)
The above three should not be part of a good country/governance. The same can be applied to individual, families etc

Questions that I ask to the kid
What are the 3 things that should not be part of a good country? Does it apply to an individual or family?

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி

குறள் 733
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு]

பொருள்
பொறை  - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு

ஒருங்குதல் - ஒருபடியாதல்; ஒன்றுகூடுதல்; ஒருவழிப்படல்; ஒதுங்குதல்; ஒடுங்குதல்; அழிதல்.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

வருங்கால் - வரும் பொழுது

தாங்கி - தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல்

இறைவற்கு - அரசர்க்கு / ஆட்சிக்கு 

இறை  - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு.

ஒருங்குதல் - ஒருபடியாதல்; ஒன்றுகூடுதல்; ஒருவழிப்படல்; ஒதுங்குதல்; ஒடுங்குதல்; அழிதல்.

நேர்வது - நேர்தல் - பொருந்துதல்; நிரம்புதல்; நிகழ்தல்; எதிர்ப்படுதல்; இளைத்துப்போதல்; மென்மையாதல்; எதிர்தல்; நெருங்குதல்; தீண்டுதல்; பெறுதல்; கொடுத்தல்; உடன்படுதல்; ஒத்தல்; உறுதிசெய்தல்; அமர்த்தல்; நியமித்தல்; தண்டனைக்குஉட்படுத்தல்; வேண்டுதல்; செல்லுதல்; வேண்டிக்கொள்ளல்; எதிர்த்தல்; அறுத்தல்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
பொறை என்றால் பாரம், சுமை. ஒரு நாட்டிற்கு சுமையானது போர் (செலவுகள்), இயற்கை பேரிடர், வறட்சி/பஞ்சம், உயிர்கொல்லி நோய்கள், பொருளியல்/நிதியியல் நெருக்கடிகள், ஆகிய பல அடங்கும். இவற்றை போன்ற சூழ்நிலைகள் நாட்டின் தலை மீது வைத்த மலை (போன்ற பாரம்) போல் இருக்கும். 

இத்தகைய சுமைகள் நாட்டிற்கு வருமானால் அதனை தாங்குவதற்கு ஏற்ற 1) ஆட்சியையும் (திறம்பட்ட அமைச்சர் மற்றும் நிர்வாகம்).  2) ஆட்சியின் அரசரையும் (திறம்பட்ட அரசர்) 3) மக்களாட்சி என்றால் அத்தகைய ஆட்சியை தேர்ந்துதெடுக்கும் மக்களையும் மக்களின் கல்வியையும் 4) ஆட்சிப்புரிவதற்கும் பேரிடர் சுமைகளை தாங்குவதற்கும் தேவையான வரிகளை உழைத்து தவறாமல் அளிக்கும் மக்களையும் 5) பேரிடர்களை தாங்கி சமாளித்து அவற்றுக்கான தீர்வுகளை காண தேவையான கல்வி மற்றும் தேர்ந்தமக்களை கொண்டதே நாடு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.).

மணக்குடவர் உரை
குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு. குடிமையாவது கடமையொழிய வருவது.

மு.வரதராசனார் உரை
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

குறள் 732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பெரும் - பெரிதான; மூத்த; இன்றியமையாத, பெருமை

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பெட்டல் - விருப்பம்

பெட்டக்கது - பெட்டகம் - பெட்டி; வரிசைப்பெட்டி.

ஆகி - கொண்ட, ஆகுதல், ஆதல்.

பெட்டக்கது ஆகி   எல்லோராலும் (அயல் நாட்டினராலும்) விரும்பத்தக்கதாகி (பெட்டல் – விரும்புதல்)

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

அருங்கேட்டால் - பெரிய கேடுகள் இல்லாமல் ; கேடில்லாமை

ஆற்ற āṟṟa   adv. ஆற்று¹-. 1. Greatly, exceedingly; மிக அவனறி வாற்ற வறியு மாகலின்(தொல். பொ 147). 2. Entirely; முற்ற (குறள், 367.)  

விளைவது - விளைதல் - தானியம்முதலியனஉற்பத்தியாதல்; பயன்தருதல்; உண்டாதல்; முதிர்தல்; நிகழ்தல். 

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள்
செல்வங்களான அறிவு பொன் படை இயற்கை வளங்களான நீர்வளம் காடு  மக்கட் செல்வங்கள் (இன்னும் பல) என எல்லா செல்வங்களும் அதிகமாக இருக்கப்பெற்று மற்ற நாட்டவர்களும் நம்மை விரும்பும் படி (அதாவது நமது செல்வத்தின் மீதும் நமது நாட்டின் மீதும் நன்மதிப்பு கொண்டு நம் நாட்டிலேயே தங்கி விட வேண்டும் என்று வருவது) நம் நாட்டை உருவாக்க வேண்டும். அத்தகைய நாட்டில் வறுமை அழிவு கீழ்மை வேறுபாடுகள் கெடுதல்கள் அழகில்லாத செயல்கள் என்ற கேடுகள் முற்றிலும் நடக்காத அல்லது மிக அரிதாக நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும். அந்நாட்டில் நாட்டிற்கு தேவையான தானியங்களை செழிப்பாக விளைவித்துக்கொள்ளும் திறனையும் விவசாயிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்து தானியங்களை விளைவிக்க வேண்டும். அந்த தானியங்கள் பஞ்சகாலத்திலும் மக்களுக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். 

ஆக எல்லா செல்வங்களும் அதிகமாய் கொண்ட நாடாக கேடுகள் மிக அரிதாக நடக்கும் அல்லது கேடுகள் நடக்காத நாடாக அன்றாட உணவுதேவைக்கும் பஞ்சகாலத்தை தாக்குபிடிக்ககூடிய அளவிற்கு தானியங்களை செழிப்பாக விளைவித்துக்கொள்ளும் நாடாக அயல் நாட்டவர்கள் நம் நாட்டை விரும்பக்கூடிய நாடாக இருக்கும் நாடே நாடு எனப்படும். 

அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வங்கள் பல கொண்டாலும் அவற்றை நாடு என்று கூறி விட முடியாது ஏனெனில் அவை உலகிற்கு அளித்த கொடை என்பது மிக சில என்றே சொல்லலாம் அதுவும் அவர்களின் லாபத்திற்கு தான் கொடுத்தார்கள். வரலாற்றில் அவர்கள் கொன்றுகுவித்த மக்களின் எண்ணிக்கை போர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அவர்கள் கைகளில் உள்ள ரத்த கறைகளை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அழிக்க முடியாது. 

ஆனால் இந்தியா போன்ற ஒரு நாடு எல்லோரும் விரும்பக்கூடிய நாடாக வளர்ந்துவிடும். ஏனெனில் இந்தியா நான்கு நூற்றாண்டுகளில் இழந்த செல்வங்களை மீட்க இன்னும் சில காலம் ஆகும். ஆனால் வேதங்கள், உபநிடதங்கள், தமிழில் திருக்குறள் தேவாரம், திருவாசகம், பதஞ்சலி யோகா முறைகள், தியானம் என்று உலகிற்கு கொடுத்து கொடை மிக ஏராளம். பல வேற்றுமைகள் கொன்ற இந்தியா போன்ற ஒரு நாடு காலத்தின் பல மாற்றங்களையும் கண்ட போதிலும் மிக மிக குறைந்த உயிர் சேதங்களையே சந்தித்துள்ளது. உலகிற்கு அஹிம்சை முறையின் வலிமை பறைசாற்றியது. ஆதலால் தான் Martin  Luther  King, Steve Jobs, George Harrison போன்ற பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் பல நாடுகளில் இருந்து  இந்தியா வந்து  அல்லது இந்திய துறவிகளிடமும் தலைவர்களிடமும் இருந்து கற்றுக்கொண்டுள்ளனர். அமெரிக்கா போன்ற முன்னேறிய வல்லரசு நாட்டில் கருப்பினர்கள் அவர்களுக்கான உரிமைகளை போராடும் நிலை இன்னமும் உள்ளது. பல முன்னேறிய நாடுகளில் மிக பெரிய பொருட்ச்செலவில் பெரிய காவல் துறையை குற்றங்களின் விகிதாச்சாரம் மிக அதிகமாக இன்றும் உள்ளது. ஆனால் இந்திய போன்ற நாட்டில் குற்றங்களில் விகிதாச்சாரம் ஒப்பீட்டு அளவில் குறைவே. ஆனால் ஒரு நாடாக இந்தியா செல்லவேண்டிய தொலைவும் மிக அதிகம் என்பதும் உண்மை. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள'¢என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.) .

மணக்குடவர் உரை
பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு. பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.

மு.வரதராசனார் உரை
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.


English Meaning - As I taught a kid - Rajesh
A country should be 
1) Desirable due to its huge wealth by its citizens as well as foreigners 
Wealth here means the wealth generated due to their knowledge, production, agricultural produce, trade, etc., as well as natural resources mountains, forests, coastal resources, dams, rivers, animals, birds,  as well as in terms of knowledge w.r.t any field such as science, mathematics, medicine, pharma, arts, music, literature, philosophy etc., And this wealth is sufficient enough to eradicate hunger, poverty, as well as manage critical times such as pandemic, natural calamites such as heavy rain, droughts etc. 

2) Devoid of detriments
Detriments here mean heavy rain, scorching sun/summer, crime, poverty, poor governance, bribes, red tapes, inequality, injustice, dangerous animals and birds, etc., For e.g., countries such as USA, United Kingdom might be very wealth however, they have lots of blood stains in their hands which can never be removed because they have indulged in lots of wars, atom bombs, looting foreign resources/labor etc.,   Whereas countries like India despite being looted has bounced back strongly and has involved very very less collateral damage (and India has given abundance of knowledge, man power, yoga, Ayurveda, meditative techniques, non-violence movements to rest of the world) 

Questions that I ask to the kid
How should a country be?

இருபுனலும் வாய்ந்த மலையும்

குறள் 737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
[பொருட்பால், அரணியல், நாடு]

பொருள்
இரு - இரண்டு
புனலும் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி.
இருபுனலும் - தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்
வாய்ந்துகொள்(ளு)-தல் - vāyntu-koḷ-   v. tr. வாய்¹- +. To obtain by conquest;வென்று கைப்பற்றுதல்
வாய்ந்த  - உயர்ந்த
மலையும் - மலை - malai   n. perh. மல்லல். [K. male.] 1.Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது(குறள், 124). 2. Collection, aggregation; ஈட்டம்.சொன்மலை (திருமுரு. 263). 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq.
வருபுனல் - s. A river, the water of a river, ஆறு. (சது.) வருமட்டும்--வருமளவும். Until coming
வல் - வலிமையான
அரணும் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்
நாட்டிற்கு - நாடு நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

முழுப்பொருள்
1) ஆறு என்ற இயற்கையாக ஓடும் நீரும், அதனை அணைகளிலும் குளங்களிலும் ஏரிகளிலும் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் தேக்கி வைத்துக்கொள்ளுவது ஒரு நாட்டிற்கு தேவையானது. அது மட்டும் இன்றி நிலத்தடி நீரும் இன்றியமையாதது. 2) அது போல உயர்ந்த மலைகளும் தேவையானது. மலை என்பது பல இயற்கைவளங்களை ஒரே இடத்தில் கொண்டாது. வேர்களில் இருந்து சொட்டு சொட்டாக வீழ்ந்து ஆறாக உற்பத்தியாக தேவையான மரங்களை கொண்டது மலை. 3) வருபுனல் எனப்படும் பொழியும் மழை எனப்படுவது. மழை பெய்ய வேண்டும் என்றால் மரங்கள் வேண்டும். ஆதலால் ஒரு நாட்டில் மரங்கள் இருக்க வேண்டும். 4) மக்களை எதிரிகளிடம் இருந்து காக்க வல்ல கோட்டை சுவர் அரணாகும். இது திடமான சுவர் என்று மட்டும் அல்லாது, வலிமையான படைகளும் அடங்கும்.

மேற்சொன்ன நான்கும் (இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும்) ஒரு நாட்டிற்கு தேவையான உறுப்புகள் ஆகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.

மணக்குடவர் உரை
இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) .

மு.வரதராசனார் உரை
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

இருபுனல்: தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்.

‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு’

என்பது நாடு அதிகாரத்துக் குறள். இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும் நாட்டின் உறுப்புகள் என்பது பொருள்.

தள்ளா விளையுளும் தக்காரும்

குறள் 731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தள்ளா - தளர்ச்சி, சோம்பல்
விளையுளும்- விளைச்சல்; முதிர்கை; வயல்; உள்ளம்.
தக்காரும் - தக்கோர், மேன்மக்கள், சிறந் தோர், உறவினர்
தாழ்வு - பள்ளம், சாய்வு, அவமானம், குற்றம், துன்பம், கீழ்மை, நிலைகெடுதல்
இலாச் - இல்லாத
செல்வரும் - செல்வங்கள்
சேர்வது - சேர்வது
நாடு - ஒரு நாடு ஆகும்

முழுப்பொருள்
நாடு எனப்படுவது யாது என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் திருவள்ளுவர். நாடு எனப்படுவதற்கு மூன்று அடிப்படைகளை கூறுகிறார். 1) உழவு 2) சான்றோன்மை 3) செல்வம். 

1) தள்ளா விளையுளும் - மனிதன் வாழ்வதற்கு உணவு அடிப்படை தேவையாகும். ஆண்டு தோறும் மக்கள் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆதலால் மக்களுக்கு தேவையான அளவு உணவை தளர்ச்சியில்லாமல் குறைவில்லாமல் உற்பத்தி செய்யும் நாடே நாடு. உணவிற்கு மற்ற நாட்டை நம்பி இருக்கும் நாடு நாடே அல்ல.

2) தக்காரும் -  மனிதன் வாழ்விற்கு கல்வி அவசியம். அனைவரும் கற்றக்கவில்லை என்றாலும் நாட்டை சிறப்பாக வழி நடத்த கற்றவர்கள், சான்றோர்கள், மேன்மக்கள் மிக தேவை. அவர்களே சரியான திட்டம் வகுக்க உதவுவார்கள். உதாரணமாக மழை நீர் சேகரிப்பு திட்டம், ஆறு அருகே அணைக் கட்டும் திட்டம், கால்வாய்களை சரியான நேரத்தில் தூர் வாரும் செயல்கள், நிதி, சுற்றுசூழல், போன்ற எண்ணற்ற தேவைகளில் சான்றோரால் மட்டுமே நாட்டை வழி நடத்த முடியும். 

3) தாழ்விலாச் செல்வரும் - இங்கே செல்வத்திற்கு பல பொருள்களை கூறலாம். முதலாவதாக பொருட்செல்வம். நிதி என்பது நாட்டை நடத்த திட்டங்களை நிறைவேற்ற மிக முக்கியம். அத்தகைய செல்வமானது குறைவில்லாமல் இருத்தல் வேண்டும். ஆனால் தாழ்வில்லா செல்வம் என்று திருவள்ளுவர் சொல்லுவது நற்வழியில் ஈன்ற செல்வமாகும். அற நிலையில் இருந்து கெடாமல் ஈன்ற செல்வமாகும். (போர்) குற்றம் புரியாமல் ஈன்ற செல்வமாகும். செல்வம் ஈன்ற வழியினை அவமானம் இல்லாமல் வெளிப்படையாக கூறும் முறையில் ஈன்ற செல்வமாகும்.

ஆக, குறைவில்லா விளைச்சலும், சான்றோரும், அறவழியில் ஈன்ற குறைவில்லாத  செல்வம் இவை மூன்றும் ஒரு நாட்டிற்கு தேவையான ஒன்று என திருவள்ளுவர் கூறுகிறார். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அதிகாரம் 74. நாடு

[இனி , அவ்வரசனாலும் அமைச்சனாலும் கொண்டு உய்க்கப்படுவதாய ஏனை அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய நாடு ஓர் அதிகாரத்தாற் கூறுகின்றார்.அஃதாவது இன்னதென்பதூஉம் அதிகார முறைமையும் இதனுள் விளங்கும்.]

தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.)

மணக்குடவர் உரை
தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு.

தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தள்ளா விளையுளும்- குறையாத விளைபொருளும்; தக்காரும் - தகுதியுள்ள பெரியோரும்; தாழ்வு இல்லாச் செல்வரும் - கேடில்லாத செல்வமுடையோரும்; சேர்வது நாடு - முன்கூறப்பட்ட செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் பொருந்தியிருப்பதே நல்ல நாடாவது.

தள்ளாவிளையுள் என்பது தாழ்ந்த வகையினதாகத் தள்ளப்படாத விளையுள் என்றுமாம். விளையுள் என்பது உழவரையும் ஒருமருங்கு குறிக்குமேனும், இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை விளையுள் இருப்பதனாலும், 'சேர்வது' என்பது கூடி அல்லது பொருந்தியிருப்பது என்றே பொருள்படுதலாலும், "பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்" (தொல். கிளவி.51) வழுவன்மையானும், "மற்றை யுயர்திணைப் பொருள்களோடுஞ் சேர்தற் றொழிலோடும் இயையாமையின், விளையுளென்பது உழவர்மேனின்றது." என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தக்காராவார் புலவரும் அடியாரும் முனிவரும். தாழ்விலாச் செல்வரென்றது காலினுங் கலத்தினும் பொருளீட்டும் இருவகை வணிகரை. செல்வத்திற்குத் தாழ்வின்மை வழங்கத் தொலையாமையும் வருவாய் குன்றாமையும் பல்துறைப்பட்டிருத்தலும். செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் என்பது பாலால் வந்தது. ஆகவே, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப்பாராலும் விளையும், அறிவு காவல் செல்வம் உணவு ஆகிய நால்வகைப் பொருளும் சிறந்தது நன்னாடு என்பதாம்.

மு.வ உரை
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar defines a country based on three important pillars Farming, exemplariness, wealth. Unfailing crops, exemplary people, the wealth with untarnished and undiminished wealth constitute a country.  For humans to live/survive, food is esential. Hence, it is important to take care of agriculture and irrigation so that crops don't fail. For a humans as a society to flourish and progress, we need exemplary people with knowledge and experience. Only such people can guide and lead the nation by their vision, plans, execution, issue handling etc. Humans also needs wealth that is earnt through in dignified way and with integrity. Such wealth will last long. If in case a wealth is earnt through wrong means such as war, remember, we would face another war through our enemies. 

Questions that I ask to the kid
What are the three things that constitute a nation? Why?

பிணியின்மை செல்வம் விளைவின்பம்

குறள் 738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் 
அணியென்ப நாட்டிவ் வைந்து.
[பொருட்பால், அரணியல், நாடு]

பொருள்
பிணி நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை

இன்மை இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

செல்வம்கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

விளைவு நிகழ்ச்சி; விளைகை; முதுமை; விளைபொருள்; பழம்; பயன்; கைகூடுகை; ஆக்கம்; விளையுமிடம்; வயல்; மேகம்; நாடகச்சந்திஐந்தனுள்ஒன்று.

விளைதல்தானியம்முதலியனஉற்பத்தியாதல்; பயன்தருதல்; உண்டாதல்; முதிர்தல்; நிகழ்தல்.

இன்பம் மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

ஏமம் இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி.

அணிவரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

என்ப - என்று சொல்லப்படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

நாட்டிற்கு -நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

இவ் - இந்த 

ஐந்து ஐந்தும்

முழுப்பொருள்
நோய் இல்லாமை ,நல்ல பொருளாதார வளம் (செல்வம்), விளைச்சல் வளம் மிக்க இருத்தல் , இன்பமான வாழ்வு , பாதுகாப்பான சூழல் என இந்த ஐந்து குணங்களே ஒரு நாட்டிற்கு அழகாகும்  எனக் கூறுவர்.

அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை உதாரணமாக கொண்டால்    இவ்வைந்தும் அதற்கு அமைந்து இருப்பது தெளிவாக தெரியும்.

நாட்டில் மக்கள் எந்த மன நிறைவுடன் வாழ நோயற்ற சூழ்நிலை வேண்டும். நல்ல விளைச்சல் மூலம் நல்ல பொருளாதார வளமும் வேண்டும். இவைகள் ஒருங்கே அமைய பெற்றாலும் , நம்மை சுற்றி இருக்கின்ற நாடுகளால் எந்த தொந்தரவும் இல்லாமல் பாதுகாப்பான சூழ்நிலை வேண்டும். இவை அனைத்தையும் நோக்கி ஒரு நாட்டின் செயல் திட்டங்கள் அமைய வேண்டும். 

பரிமேலழகர் உரை
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப- நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர். (பிணியின்மை, நில நலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும்,நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும் அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.

மு.வரதராசனார் உரை
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.