Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_075. Show all posts
Showing posts with label Athikaaram_075. Show all posts

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

 

குறள் 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எனை - என்ன; எவ்வளவு; எல்லாம்.

மாட்சித்து - மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு

ஆகியக் -  பண்புருபு
ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

கண்ணும் -  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).  
கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு.

இல்லார் - இல்லாதவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது.

அரண்பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்.

முழுப்பொருள் 
எவ்வளவு பெரிய பெருமைகளையும் மாட்சிமைகளையும் கொண்ட கோட்டை / அரண் ஆக இருந்தாலும், தந்திரத்துடன் போர் செய்து பகைவரை வெல்லக்கூடிய திறன் உடைய விரர்கள் இல்லை என்றால் அந்த அரணால் என்ன பயன்? அது வெறும் அலங்காரமே.

குறள் 407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று” என்ற குறளுடன் ஒப்பிட்டு பார்த்தால், திறன் இல்லாத விரர்களை கொண்ட கோட்டை ஒரு மண் பொம்மை போன்று வெறும் அலங்காரத்திற்கே பயன்படும். வேறு எதற்கு பயன்படாது. அது ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றாது.

லும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அரண் - அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற்சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம். (வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும் வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை. இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.

சாலமன் பாப்பையா உரை
எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
However formidable it maybe, a fortress is futile/ineffective
for those not formidable in their deeds.

A fort or military defense might have any amount of fame such as numbers, cost, latest technologies etc. However, if the army men don't have the skills and acumen to strategically fight the opponents/enemies then what is the point of such a fort. A futile fort is just a decoration. 

One can recall that, In another kural 407, A person who has understood the concept and has gained knowledge can use the knowledge for something. A person who has a diploma but hasn't learnt it well or forgotten what they learnt is similar to a clay doll and his or her diploma is like doll in a showcase.

Effective Skills in action/execution matters the most and is more important that all the degrees, certifications etc. It doesn't undermine the need of optimal amount of team, technologies, etc because tools are of course necessary. 


Questions that I ask to the kid
Is a formidable fort sufficient? Why or Why not? (Follow up : That means skills in action/execution alone sufficient? All those tools etc. not required?)  Do you recall any other kural that is similar to this on a different context?

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

 

குறள் 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
முனை - நுனி; பகை; போர்; போர்க்களம்; பகைப்புலம்; வெறுப்பு; தவம்; துணிவு; திரள்; முன்; முகம்; தலைமை; கடலுள்செல்லும்நீண்டுகூரியதரைப்பாகம்.

முகத்து - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

மாற்றலர் - பகைவர்

சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல்.

சாய அழிய, மடிய

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முகத்து - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

முகத்தல் - மொள்ளுதல்; அளத்தல்; தாங்கியெடுத்தல்; விரும்புதல்; நிரம்பப்பெறுதல்; மணம்பார்த்தல்; காண்க:முகத்தலளவு(வை).

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வினைமுகத்து – தனது வடிவமைப்பிலும், உருவாக்கத்திலும் (உறுதிபெற்று)

வீறு - தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி.

எய்தி - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

மாண்டது  - மகிமைப்பட்டது
மாண்பு, v. noun. Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectability, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.

அரண்- பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 
போர் தொடங்கிய உடன் பகைவர் அழியும் வண்ணம் வீரர்களையும் ஆயுதங்களையும் படைகளையும் கொண்டுப் போர் செய்ய தந்திரம் கொள்ளுதலும் மன உறுதிக்கொண்டு போர் செய்து வீரமரணம் எய்த தயாராக இருக்கும் வீரர்களை உடையதே அரணாகும். கோட்டை அரணின் வலிமை பகைவரை உறுதி குலைய வைக்கும் பெருமையுடையதாக இருக்க வேண்டுமென்பதை அடிக்கோடிடும் குறளிது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.).

மணக்குடவர் உரை
முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது. அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல்.

மு.வரதராசனார் உரை
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

 

குறள் 748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
முற்று - முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.

முற்றியார் - முற்றுகைசெய்தவர், முற்று-. [T.muttadīnstuvāru.] Besiegers; முற்றுமை செய்தவர். முற்றியார் முற்றுவிட (பு. வெ. 6, 25).

முற்றுகை - கோட்டைமுதலியவற்றைவளைக்கை; சூழுகை; நிறைவேற்றுகை; நெருக்கடி
முற்றியவரையும் - -  முற்றுகையிட்டு வெல்ல நினைக்கும் பகைவரையும்

பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பற்றியெரி-தல் - paṟṟi-y-eri-   v. intr. id.+. 1. To catch fire; தீமூண்டெரிதல். 2. To getenraged; to become angry; சினம் மூளுதல்.

பற்றியார் - அரணுக்குள் வசிக்கும் வீரர்கள்

வெல்வது - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 
ஒரு நாட்டை பகைவர்களிடம் இருந்து முதலில் காப்பாற்றுவது அந்நாட்டின் அரண் ஆகும். ஏனெனில் அதுவே நாட்டின் எல்லைகளில் இருக்கிறது. அரண் வலிமையாக இருப்பது இன்றியமையாததாகும். ஆனால் புறச்சுவரோ நீர் நிலைகள் மட்டும் அரணாகிவிடுமா? ஆகாது.  ஏனெனில் அவற்றையும் பகைவர்களால் தகர்த்தெரிந்து வெல்ல முடியும்.

ஆதலால், நாட்டை காப்பாற்ற வேண்டும், அரசனை காப்பாற்ற வேண்டும், மக்களை காப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் (மன உறுதியுடன்) அரணில் இருந்து பாதுக்காக்க கூடியுள்ள வீரர்கள், படைமிகுதியால் அரனை சூழ்ந்து கொண்ட பகைவரையும், இடத்தை/அரணை விட்டுவிடாமல் காக்கும் கடமையாற்றி அங்கு நின்று பகைவரை வெல்வதே அரண். அவ்வீரர்களும் அந்நாட்டிற்கு அரண். மேலும் கடமையாற்றும் வீரர்கள் வெல்லுதற்கு ஏற்ப உள்ளதே நல்ல அரணாகும். வீரர்களுக்கு தேவையான ஆயுதங்களையும் கொண்டுள்ளதும் அரணிற்கு அவசியமாகும்.






மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முற்று ஆற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்; பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது. (உம்மை, சிறப்பும்மை. பற்றின் கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது. பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.

மு.வரதராசனார் உரை
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

குறள் 747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
முற்றியும் - முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.

முற்றாது - முதிராத, பெருகாது, அழியாது, முடியாது

எறிந்தும் - எறிதல்  - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல்.

எறித்தல் - ஒளிவீசுதல்; வெயிற்காலம்; தைத்தல்; உறைத்தல்; பரத்தல்.

அறைப்  - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை

படுத்தும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

பற்றற்கு - பற்றுதல் - பிடித்தல்; பயனறுதல்; ஊன்றிப்பிடித்தல்; ஏற்றுக்கொள்ளுதல்; மனத்துக்கொள்ளுதல்; தொடுதல்; உணர்தல்; தொடர்தல்; நிறம்பிடித்தல்; தீமுதலியனமூளுதல்; தகுதியாதல்; ஒட்டுதல்; பொருந்துதல்; போதியதாதல்; உறைத்தல்; உண்டாதல்; பொறுத்தல்.

அரியது - அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை; அரிது 

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 
பகைவர்கள் எல்லைகளில் முற்றுகையிட்டும் (சூழ்ந்தும்), போர் புரிந்தும், போர் கருவிகளால் உடைத்தெரிய முயன்றும், வஞ்சனை என்னும் சூழ்ச்சியை கொண்டும் (அதாவது உள்ளிருப்போரைக் கொண்டே வஞ்சத்தாலும் வீழ்த்த பகைவர்கள் முயல்வர்) ஒரு நாட்டை கைப்பற்ற முடியவில்லையென்றால் அத்தகைய கடுமையான அரணே/பாதுகாப்பே அரணாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை:
முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது. (இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும்உடைமையானும், ஏனைய நலலாளுடைமையானும் வாயாவாயின.).

மணக்குடவர் உரை
சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.

மு.வரதராசனார் உரை
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

குறள் 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எல்லாப்முழுதும்; விளிப்பெயர்; முன்னிலைப்பெயர்.

பொருளும்  - பொருள் சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

உடைத்தாய் - உடையது - செல்வமாக கொண்டது; கொண்டது

இடத்துஇடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

உதவும் - உதவு-தல் - utavu-   5 v. [T. K. odavu, M.utahu.] tr. 1. To give, contribute, as one'smite; கொடுத்தல் ஈக்காற் றுணையு முதவாதார் (நாலடி,218). 2. To help, aid, assist; துணைசெய்தல்.நம்மாட்டுதவிய நன்னர்க்கு (பெருங். வத்தவ. 3, 11). 3. Towithstand, as an invading army; தடுத்துநிற்றல்.இடத்துதவு நல்லா ளுடைய தரண் (குறள், 746). 4.To report, tell, inform; சொல்லுதல் அன்னையர்க்குதவல்வேண்டும் (கல்லா. 40).--intr. 1. To bepossible; கூடியதாதல். உதவியதேதும் பெரியோர்க்கூட்டி (சைவச. பாயி. 19). 2. To be of use; பயன்படுதல் இது மருந்துக் குதவும்.  

நல்லாள்குணத்திற் சிறந்த பெண், நற்குணமுடையவள்; தக்கவர்.

உடையதுசெல்வமாக கொண்டது; கொண்டது

அரண்பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 


நல்லாள் என்றால் குணத்தில் சிறந்து என்ற பொருள் பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் குணம் தகுதி பயிற்சி ஆகியவற்றியில் தக்கவர் என்ற பொருள் இக்குறளுக்கு பொருந்தும்.

ஒரு நாட்டில் போருக்கு தேவையான படைக்கலன்கள், உணவு பொருட்கள், ஊர்திகள், விலங்குகள் மற்றும் இதர பொருட்களை தன்னகத்தே உடையதாகவும், போர்காலங்களில் நாட்டிற்குள்ளே தேவைப்படும் உணவு மற்றும் அன்றாட வணிகம் போன்றவற்றுக்கு தேவையானவற்றை உடையதாகவும், போரின் பொழுது எதிரியை வீழ்த்தும் வலிமையையும் வீரத்தையும் அதற்குண்டான பயிற்சியும் மற்றும் அரசரின் வியூகத்தை செவ்வென செயலாற்றும் தன்மை கொண்ட தக்க வீரர்களை உடையதாவும் இருப்பதே நாடு. மேற்சொன்னவையே ஒரு நாட்டை பாதுக்காக்கும் அரணாகும்.  

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.).

மணக்குடவர் உரை
எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண். எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.

மு.வரதராசனார் உரை
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.

English Meaning - As I taught a kid - Rajesh
A country may have all resources (especially the equipments in military/army, navy, air force, human resources etc) in sufficient or in abundance. But it would serve as a fort/strength/protection only if they are in excellent condition and the human resources are well trained and can fight against enemies and win them. This doesn't apply only to military, it also applies to all industries, families etc. Basically QUALITY is very important not just QUANTITY.

Questions that I ask to the kid
What is more important than having all resources? Why?
Quality is very important than quantity. Why?

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

குறள் 744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
சிறு - சிறிய - ciṟiya   சிறு, (adj.) (சிறுமை) little, small, inferior, சின்ன, Note:- Before a substantive beginning with a vowel சிறு becomes சிற்று.

காப்பின் - காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.

பேர் - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு.

இடத்தது - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

ஆகி - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

உறு  - மிகுதி; மிக்க; பகை; போர்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

ஊக்கம்  - உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற்கொண்டஎண்ணம்; உண்மை

அழிப்பதுஅழிவு - கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம்

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 
இயற்கை வளங்களான மலைகள் ஆறுகள் கடல்கள் பாலைவனங்கள் காடுகள் நாட்டிற்கு அரண்களாக அமைந்தால் பகைவர்கள் அதனை கண்டு மலைத்துப்போய் அந்த நாட்டிடம் தரைமார்க்கமாக நெருங்க மாட்டார்கள். ஆனால் எல்லா நாடுகளுக்கும் இயற்கை வளங்கள் எல்லையில் அரணாக அமைய முடியாது.

ஆனால் நாட்டின் சில இடங்களில் முக்கியமாக எல்லைகளில் பாதுக்காப்பு பெரிய அளவில் இருக்கவேண்டும். அந்த பெரிய பாதுகாப்பின் உறுதியானதாக இருத்தல் வேண்டும். வலிமையான பகைவராயினும் அவர்களுடைய முயற்சிகளையும் மனவெழுச்சியையும் அழிக்கவல்லதாய் இருக்க வேண்டும். அவ்வாறான பாதுக்காப்பே நாட்டிற்கு சிறந்த அரண். 

இன்றைய காலகட்டத்தில் வான்வழி தாக்குதல்களும், கடல்வழி தாக்குதல்களும், அணுஆயுத தாக்குதல்களும் நடக்கிறது. ஆதலால் இவற்றுக்கு எதிராக பகைவரும் அஞ்சும்படியான பாதுகாப்புகள் இருப்பதும் அவசியம்.

நாட்டின் உள்ளே மெல்ல மெல்ல ஊடுருவி நாட்டிற்குள்ளேயே தீவிரவாதத்தை கட்டவிழுக்கும் கும்பல்களும் உண்டு. ஆதலால் அவற்றை தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து உடனுக்குடன் களைய நாட்டிற்குள்ளேயும் ஒரு நுண்ணிய அரண் அவசியமாகும்.  

கோட்டை வடிவமைப்பிலே நான்கு புறமும் வாயில்களை வைத்து எண்திசையிலுமிருந்தும் வரும் பகைவர்களிடமிருந்து குடிகளைக் காத்த வரலாறுகள் ஏராளம். முற்றுகை இட்டவர்களை மாதக்கணக்கில், அவர்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல், வாடிப்போகச் செய்து தோற்றுத் திரும்பிய அரசர்களும் ஏராளம்.


மகேந்திரபல்லவனின் கோட்டையை முற்றுகையிட்ட இரண்டாம் புலிகேசி மாதக்கணக்கில் காத்திருந்து, அவனுடைய படைகள் ஊக்கமிழந்து இருந்ததைப் பற்றிய பேராசிரியர் கல்கி அவர்களின் வருணனை நினைவுக்கு வருகிறது. பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டபோதும் பட்டினிபோட்டும் பணியவைக்க இயலாது சோர்ந்ததை சங்க இலக்கியச் சித்திரங்கள் காட்டுகின்றன. கபிலரின் பாடல் வரிகள், “கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே” (புறம் 110), அவர் பாரி மகளிர் வேண்டி, முற்றுகையிட்ட மூவர்க்கும், அவர் கூறியதைச் சொல்லுகின்றன. இது உணர்த்துவது பாரியின் கோட்டை வலிமை பற்றியும்தான்

இயற்கை அரண்களும் இவ்வாறே இருக்கவேண்டும். மலையாலும், கடலாலும் சூழப்பட்ட சிலநாடுகள் பகையரசர்களால் புகுதற்கரியதாக இன்றும் உள்ளதை நினைவுபடுத்தும் குறள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.) .

மணக்குடவர் உரை
காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது. சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.

மு.வரதராசனார் உரை
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

உயர்வகலம் திண்மை அருமை

குறள் 743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி

அகலம் - விரிவு; பரப்பு இடம் பூமி மார்பு விருத்தியுரை வித்தாரகவி பெருமை

திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை.

அருமை  -அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

இந் நான்கின் - ஆகிய இந்த நான்கை உடைய

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

அமைவரண் - அமைந்தால் அரண்

என்று - என்று

உரைத்தல் - சொல்லுதல்

உரைக்கும் - கூறும்

என்றுரைக்கும் - என்று கூறும்

நூல் - நெறி நூல்கள் ; பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.

முழுப்பொருள்
ஒரு நாட்டின் கோட்டை மதில்கள் எவ்வாறு நாட்டிற்கு அரணாக இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அஃதாவது, கோட்டை என்பது மிக உயரமாக இருக்க வேண்டும். எவ்வளவு உயரம் என்றால் பகைவர்கள் எளிதில் ஏறி கடக்கமுடியாத உயரமாக இருத்தல் வேண்டும்.

அஃதாவது, கோட்டை என்பது மிக அகலமாக இருக்க வேண்டும்.  தம் நாட்டுப் படைவீரர்கள் நடமாடுவதற்கும், தடவாளங்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் அகலமானதாக இருத்தல் வேண்டும்.

அஃதாவது, கோட்டை என்பது மிக உறுதியானதாக இருத்தல் வேண்டும். கல் போன்ற மிக திண்மை வாய்ந்தவற்றால் கட்டப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

அஃதாவது, கோட்டை என்பது மிக அருமையாக இருக்க வேண்டும். அப்படியென்றால் பகைவர்கள் எவ்வகைப் படைக்கருவிகள் மற்றும் பொறிகளாலும் உடைத்து எளிதில் புகுந்துவிடாததாகவும் இருக்கவேண்டும்.

இவ்வாறு மிக உயரமான அகலமான உறுதிவாய்ந்த மிக அரிதாக உடைக்கப்படக்கூடிய கோட்டையை ஒரு நாடு அரணாக கொள்ளவேண்டும் என்று நெறிநூல்கள் சொல்லும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர். (அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப., அடைக் 207-216) என்றிவை முதலாயின).

மணக்குடவர் உரை
உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர். திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.

மு.வரதராசனார் உரை
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.

ஆற்று பவர்க்கும் அரண்பொருள்

குறள் 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஆற்று - ஆற்றுதல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 

ஆற்றுபவர்க்கும் - வலிமையடைபவர்களுக்கும், 

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அஞ்சித் - அஞ்சித்து - பயப்படுதல்

தற் -தன்னை

போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்
போற்றுபவர்க்கும் - 

பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
தன்னுடைய நாட்டை, தன்னுடைய படைகளை வலிமையாக வளர்த்துக்கொண்டு, பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் போது அரண் என்னும் பாதுகாப்பு கோட்டை நாட்டிற்கு ஒரு கவசமாய் அமையும். குறிப்பாக திடீர் தாக்குதல்களின் போது ஒரு கவசமாய் அமையும். அதே போல பிற நாடுகள் தன் நாட்டின் மீது போர் தொடுத்தால், அவர்களை நாட்டின் எல்லையிலேயே தடுக்க ஒரு நல்ல தற்காப்பாய் அமையும். அவர்கள் உள்ளே வந்து நாசம் செய்து நாட்டின் வளங்களை அழிக்கும் முன்பே எல்லையிலேயே அவர்களை தடுப்பது நல்லது. ஆதலால் சிறந்த ஒரு அரண் நாட்டிற்கு இன்றியமையாதது.

திரிகடுகம், வேந்தர்களுக்கு தேவையான அங்கமாக அரணைக்கூறுகிறது. “...............பலர் தொகினும் 
எத்துணையும் அஞ்சா எயில் அரணும் ….
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு” (திரி.100)

புறநானூற்றுப் பாடலொன்று, “பாடல் சான்ற விறல் வேந்தனும்மே வெப்பு உடைய அரண் கடந்து துப்பு உறுவர் புறம் பெற்றிசினே” (புறம். 11) என்று பிறநாட்டின்மீது படையெடுத்துச் சென்று பகைவரது அரணை அழித்து வென்ற செய்தியைக் கூறுகிறது. மற்றொரு புறநானூற்றுப் பாடல், “ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி…” (புறம் 92) என்று நெடுமான் அஞ்சியின் வீரத்தைச் சொல்லுங்கால் கூறுகிறது. “நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,ஆங்கு இனிதிருந்த வேந்தனொடு…..” (புறம். 36) என்று பிரிதொரு புறப்பாடல் பாடுகிறது. சங்க இலக்கியங்களில் அரண் என்பதன் சிறப்பைப் பாடும் பாடல்கள் நிறையவே உள்ளன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , அந்நாட்டிற்கு உறுப்பாய் அடங்குமாயினும், பகைவரால் தொலைவு வந்துழி , அது தனக்கும் அரசன்றனக்கும் ஏமமாதற் சிறப்புப் பற்றிப் பிறிதோர் அங்கமாக ஓதப்பட்ட அரண் இவ்வதிகாரத்தால் கூறுகின்றார்.]

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது; (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.

மு.வரதராசனார் உரை
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

English Meaning - As I taught a kid - Rajesh
A fortress is vital for those 
1) on the offensive - i.e., when the country's well armed and well prepared military goes on war with other countries, fortress serves as a protection.

2) on the defensive to protect themselves - i.e., when the enemies attack the country without notice, fortress helps to stop the enemies at the fortress itself so that a) enemies don't spoil our resources and people and b) it gives an opportunity for the soldiers in the fortress to fight with the enemies and save the country. 

Hence, a fortress is inevitable. 

Questions that I ask to the kid
Is fortress vital? Why?
In today's times, is fortress inevitable? Why?

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி

குறள் 745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் 
நிலைக்கெளிதாம் நீரது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள் 
கொளற்கு - ஒரு பண்டத்தைக் கொள்ளும் நோக்கம்
அரிதாய் - அரியது, அருமையானது
கொண்ட - உடைய
கூழ்த்து - பொருள், பயிர், பொன், உணவு, மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை
ஆகி - ஆக்கம்
அகத்தார் - மனை, அஸ்திவாரம். (உறவினர்களை அகத்தார் என்று கூறுவர்) (புறத்தாருக்கு / வேற்று மனிதர்களுக்கு எதிர்சொல்)
நிலைக்கு - குணம்
எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது
ஆம் - அழகு
நீரது - நிலை
அரண் - கவசம், கோட்டை

முழுப்பொருள்
உணவு என்பது மக்களுக்கு இன்றியமையாததாகும். ஆதலால் அதன் கையிறுப்பு மிக மிக அவசியம். எல்லா ஆண்டுகளும் மழை செழிப்பாக இருக்கும் என்று சொல்ல இயலாது. சில ஆண்டுகள் வறட்சி நிலவக்கூடும். அத்தகைய நிலைகளில் வேறு எவரையும் நம்பி இருக்கக்கூடாது. வறட்சி காலகட்டதிற்கும் ஆயுத்தமாக இருக்க வேண்டும். நாட்டுமக்கள் பசி பட்டினியால் வாடக்கூடாது.

அத்தகைய வறட்சிகாலகட்டங்களில் வெளியில் இருந்து வந்து போரிட்டு உணவை களவாட முனைவர் புறவோர். உணவை எளிதாய் கண்டரிய முடியாத கோட்டையை உடையதே சிறந்தது. ஆதலால் உணவை பாதுகாப்பதும் அரண் என்னும் இலக்கணத்தில் அடங்கும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே” (புறநா.109:4-8)

“பற்பல தானியத்த தாகிப் பலருடையும்
மெய்த்துணையும் சேரல் இனிது” (இனியவை.18)

பரிமேலழகர் உரை 
கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.)

மணக்குடவர் உரை 
பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது.
எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கொளற்கு அரிதாய்-உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி- உள்ளிருப்பார்க்கு வேண்டிய பலவகை நுகர்ச்சிப் பொருள்களையும் உடையதாய்; அகத்தார் நிலைக்கு எளிது ஆம் நீரது-நொச்சிமறவனின் போர் நிலைக்கு எளிதான நிலைமையுடையதே; அரண்-சிறந்த கோட்டையரணாவது.

உழிஞையாராவார் உழிஞை மாலைசூடி நகரை முற்றுகையிடும் பகைவரான புறத்தார். நொச்சியாராவார் நொச்சிமாலைசூடி முற்றுகையிடப்பட்ட நகரைக் காக்கும் மறவரான அகத்தார். கொளற்கருமை, மரமடர்ந்த காவற்காட்டாலும் ஆழ்ந்து முதலைகள் பல கொண்ட அகழியாலும் அணுகுதற்கரிய மதிற்பொறிகளாலும் நேர்வதாம். கூழ் என்றது உணவும் நுகர்ச்சிப்பொருளும் செல்வமுமாகிய பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை. நிலைக்கெளிய நீர்மையாவது, நொச்சியார் விடுத்த படைக்கலங்கள் உழிஞையாரை எளிதாய்த் தாக்குமாறும் உழிஞையார் விடுத்தவை நொச்சியாரைத் தாக்கா வாறும், மதிலுயர்வும் மறைவிடங்களும் பதணப் பரப்பு முடைமை. பதணம் மதிலின் மேற்றளம் அல்லது மதிலுண்மேடை.

மு.வ உரை
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

சாலமன் பாப்பையா உரை
பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.

மணிநீரும் மண்ணும் மலையும்

குறள் 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மணி கோமேதகம்; நீலம்; பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம்என்னும்ஒன்பதுவகைஇரத்தினங்கள்; நீலமணி; காண்க:சிந்தாமணி; பளிங்கு; கண்மணி; உருத்திராக்கம்; தாமரைமணிமுதலியன; தானியமணிநஞ்சுநீக்குங்கல்; சந்திரகாந்தக்கல்; மணிமாலை; அணிகலன்; உருண்டைவடிவமாயுள்ளபொருள்; மீன்வலையின்முடிச்சு; ஆட்டினதர்; வீடுபெற்றஆன்மா; அழகு; சூரியன்; ஒளி; நன்மை; சிறந்தது; கருமை; கண்டை; அறுபதுநிமிடமுள்ளநேரம்; ஒன்பது; ஆண்குறியின்நுனி; பெண்குறியின்ஓர்உள்ளுறுப்பு.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

மணிநீரும் -> மணி போலும் நிறத்தினையுடைய நீரும்; அதாவது மணிபோல் தெளிந்த நீர்.

மணிநீர் - மணிபோலும்நிறத்தினையுடையநீர்; இரத்தினத்திலுள்ளநீர்.

மண் - நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

மண்ணும் -> வெள்புள்ளிடை நிலமும்;  அதாவது  நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும் (வெட்ட வெளியான நிலமும்).

மலை - alai   n. perh. மல்லல். [K. male.] 1.Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது(குறள், 124). 2. Collection, aggregation; ஈட்டம்.சொன்மலை (திருமுரு. 263). 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq.
மலையும் ->  உயர்ந்த மலை.

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.
நிழல் - சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்.

காடும் - காடு - வனம்; மிகுதி; நெருக்கம்; செத்தை; எல்லை; நான்குஅணைப்புள்ளஒருநிலவளவு; சுடுகாடு; இடம்; புன்செய்நிலம்; சிற்றூர்; ஒருதொழிற்பெயர்விகுதி.

அணிநிழற் காடும் -> குளிர்ந்த அழகிய நிழலையுடைய அடர்ந்த காடு; [செறிவுடைய காடென்று அர்த்தமாகும்].

உடையது - செல்வமாக கொண்டது; கொண்டது

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

அரண்  -> வலிமைமிக்க கோட்டை. பாதுகாப்புடைய நகரம் (Stronghold).

முழுப்பொருள்
வற்றாத மணி போன்ற தெளிந்த நீர், நிழலும் நீருமில்லாத் வெட்ட வெளியான நிலம் (தாணியங்கள் (உணவு) பயிறிடுவதற்காக), மலைகள் (மற்ற உயிரினங்கள் வாழ), குளிர்ந்த அழகிய நிழலையுடன் அடர்ந்த காடு (மூலிகைக்கள் செழிப்பாக வளர, மற்றும் காடுகள் தண்ணீரை ஓயாமல் கொடுக்க)  ஆகிய நான்கும் ஒரு நாட்டிற்கு பாதுக்காப்பிற்கு இன்றியமையாததாகும். அவையே நாட்டிற்கு கோட்டையாக விளங்கும். 

ஐம்பூதங்களினால் உருவானது இம் மானிட உடம்பு. அதனை வளர்ப்பது உணவு. அந்த உணவோ, நிலமும் நீரும் இணைந்த இணைப்பால் வருவது, என்பதே அப்பேருண்மையாகும். இதனால் நிலனும் நீரும் எவ்வளவு இன்றியமையாதன என்பதை உணரலாம். நிலமும் நீரும் உணவுப்பொருளை உருவாக்க மட்டுமா செய்கின்றன? மனிதனுக்கு வேண்டிய மருந்துப் பொருட்களையும் சேர்த்தல்லவா விளைவிக்கின்றன. அதனால் அவ்விரண்டின் தூய்மையும் கூட தனிக் கவனத்தைப் பெருகின்றன. ஒரு நாட்டின் பாதுகாப்பில் நீரும் நிலனும் இன்றியமையாததாகும்.

நீர், நிலம், மலை, காடு ஆகிய இந்த நான்குமே மருந்திற்கான மூலிகைகள் வளர்தற்கான நிலைக்களன்களாகவும் இருப்பன. மண்ணின் தன்மை பயிர்க்குளவாகுதலால் மூலிகைகளை விளைவிக்கும் இடம் மிகுந்த கவனத்திற்கு உரியதாகிறது. மருத்துவ முறைகள் தொடங்கியபோதே மண்-நீர் ஆகியவற்றின் தேர்வும் தொடங்கிவிட்டதைச் சரக சம்கிதை நன்கு உணர்த்துகின்றது.

சுற்றுச் சூழல் மாசடைகின்றபோது உயிர் இனங்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன என விளக்குவதன் வாயிலாகச் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வின் தேவை விளக்கப்படுகிறது. 


ஆக இவை நான்கும் கேடடையாமல் பாதுக்காப்பது ஒரு நாட்டிற்கு இன்றியமையாததாகும். ஆகவே தான் இது பொருட்பாலில் அரணியலில் வந்தது.

குறிப்பாக"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும். அவைகளில்லாத உலகில் நம்மாமல் ஒருபோதும் வாழ இயலாது"

”மணிநீர் வைப்பு மதிலொடு பெரிய” (சிறுபாண் 152)

”மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்” (மதுரைக் 351)

“மணிநீர கயநிற்ப” (கலித் 35:5)

காரியாசான் எழுதிய சிறுபஞ்சமூலப்பாடல் (48) இயற்கை அரண்களை இவ்வாறு கூறுகிறது.

நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும்
மாண்ட மலை, மக்கள் உள்ளிட்டு மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி

இப்பாடலும் மேலே சொல்லப்பட்ட நான்குவகை இயற்கை அரண்களையும், மற்றும் போர்களில் திறம்வாய்ந்த படையையும் அரணாகச் சொல்லுகிறது.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.) .

மணக்குடவர் உரை
தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம். தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.

மு.வரதராசனார் உரை
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வலைப்பில் இருந்து :
மூலம்: 
மணி நீர் என்பதற்கு மணி போன்ற நிறத்தினை உடைய, எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்றும், அணிநிழற் காடு என்பதற்குக் குளிர்ந்த நிழலை உடைய செறிந்த காடு என்றும் பொருள் தருகிறார் பரிமேலழகர். ஆங்கிலேயர் வரவுக்கு முன் நம்மிடம் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் காடுகள் இருந்தன என்கிறார்கள் பூகோள அறிஞர்கள். 200 நெடிய ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் தேசம்விட்டு ஓடியபோது, காடுகள் 26 சதவிகிதமாகக் குறைந்திருந்தது. இன்று நம்மிடம் இருக்கும் காடுகளின் பரப்பு 15 சதவிகிதமே!

ஆங்கிலேயர் 200 ஆண்டுகளில் அழித்த காடுகளின் பரப்பு ஒன்பது சதவிகிதம் எனில், சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளில் அழிபட்ட காடுகள் மேலும் 11 சதவிகிதம். அதை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் வந்து அழித்துவிட்டுப் போகவில்லை. நமது ஆண்ட வர்க்கம், அதிகார வர்க்கம், வணிக வர்க்கம்தான் அழித்தது என்று சொல்லக் கூசுகிறது நமக்கு.

காடு அழிவது பற்றி இவ்வளவு கவலை எதற்கு?

காடு என்பது தேக்கு, ஈட்டி, வேங்கை, கோங்கு, மருது எனும் மரங்களைக் கதவுகளாகவும், நிலைகளாகவும், கட்டில்களாகவும், மேஜை நாற்காலிகளாகவும், மரச் சிற்பங்களாகவும் மாற்றிக்கொள்ளத் தருவது. அகில், சந்தனம் எனும் நறுமணங்கள் தருவது. யானைத் தந்தம், புலித் தோல், மான் தோல், புலிப் பல், மான் கொம்பு போன்றவை தருவது. தேன் தருவது. காபி, தேயிலை தருவது. ஏலம், கிராம்பு, குருமிளகு தருவது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இன்னும் எண்ணற்ற மூலிகைகள் தருவது. காடு என்பது பெண்பால் என்கிறார் கவிஞர் சக்தி ஜோதி. நமக்கு எதையாவது தந்துகொண்டே இருப்பது.

எல்லாவற்றுக்கும் மேலாகக் காடு என்பது மனித குலத்துக்குத் தண்ணீர் தருவது. ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகள், விலங்குகள் பறவைகள், பிற உயிரினங்கள், நுண்ணுயிர்கள் எனக் காபந்து செய்துவைப்பது காடு.

காடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள், காட்டைப் பேணிக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டும்! அவர்களைக் குறிக்க மெத்தப் படித்த நாகரிகர்களான நாம் பயன்படுத்தும் சொற்கள் காட்டாளன், காட்டு மனிதன், காட்டுமிராண்டி, காட்டான். ஆனால், அவன் காட்டைக் காத்தான்; நாம் அழித்துக்கொண்டு இருக்கிறோம்.

வற்றாத ஜீவநதி என்றும், உயிராறு என்றும், தாயினும் சாலப்பரிந்து பயிர் பச்சைகளுக்கும் மானுடருக்கும் தண்ணீர் வழங்கும் தாய் என்றும் ஆறுகளைப் போற்றிப் பெருமைகொள்கிறோம். ஆனால், ஆற்றுக்குத் தண்ணீர் எப்படி வருகிறது என்று யோசித்தோமா? ஒன்று, தானே ஆறு ஊறிப் பெருகிக் கொப்பளித்து வரவேண்டும் மண்ணுக்குள் இருந்து. அப்படி ஏதும் தெரியவில்லை. அல்லது பனிமலைகள் உருகிப் பெருகி வரவேண்டும் கங்கை போல. அங்ஙனம் உருகி வருவதற்குத் தென்னிந்தியாவில் எங்கும் பனிமலைகள் கிடையாது. ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்றான் கம்பன். என் கட்டுரைத் தொகுப்பு ஒன்றுக்கு அந்தச் சொற்றொடரைத் தலைப்பாக வைத்தேன். ஆற்றில் நல்ல தண்ணீர் வராமல் இருப்பது நதியின் குற்றம் அல்ல. ஆற்றுக்கு நல்ல தண்ணீர் எங்கிருந்து வருகிறது? அகத்தியன் எனப்படும் கும்பமுனியின் காகம் கவிழ்த்த கமண் டலத்தில் இருந்து பெருகி வருகிறதா? விரிசடைக் கடவுளின் உச்சியில் இருக்கும் கங்கை பெருக்குகி றாளா நன்னீர்? அல்லது, பாற்கடலில் துயில் பயிலும் நாராயணன் நம்பி அபயக்கரம் காட்ட அதிலிருந்து பாய்கிறதா பன்னீர் போல?

காடுகளில் இருந்து ஊறிப் பெருகி வருகிறது தண்ணீர். முழுமுதற் கடவுளர்களின் வேலையைக் காடு செய்கிறது உவப்போடு, ஓயாமல் ஒழியாமல். பெய்கின்ற மழையைக் காடு பிடித்து வைத்துக்கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக, ஆறாக, பெரு நதியாகக் கசியவிட்டுக்கொண்டு இருக்கிறது.

காடு எனில் பெருமரங்கள், குறுமரங்கள், தாவரங்கள், குற்றுச்செடிகள், புதர்கள், கொடிகள், பேரணிகள், பாசிகள், காளான்கள் கொண்ட சோலைகள், புல்வெளிகள், பல்வகைத் தாவர மடிப்புகள், அடுக்குகள் ஆகும். பெய்யும் மழையை அவை மண்ணில் தக்கவைத்துக்கொண்டு, காலம்தோறும் சன்னஞ்சன்னமாகக் கசியவிட்டுக்கொண்டு இருப்பது காடு. நீரின் வழித் தடங்கள்தான் ஓடைகள், ஆறுகள் என்பன. ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டித்தான் நகர மக்களுக்குப் பிரித்து, பகிர்ந்து வழங்குகிறார்கள்.

ஆண்டுதோறும் மார்ச் 22-ம் நாள் ‘உலகத் தண்ணீர் தினம்’ எனக் கொண்டாடப்படுகிறது. கோவையில் ‘ஓசை’ என்ற அமைப்பு… அருந்தும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று போன்றவை அடுத்த தலைமுறைக்கும் தேவை என்பதை உரக்கச் சொல்லும் இளைஞர் இயக்கம். எழுத்தாளர்கள், ஓவியர்கள், செய்தியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை வனம் புகச் செய்தனர்.

கொங்குப் பகுதியின் வற்றாத ஜீவநதி பவானி. மேற்குத் தொடர்ச்சி மலையில், நீலகிரி மலை அடுக்குகளின் மேற்குப் பகுதியில் பிறப்பெடுத்து, தமிழ்நாடு விட்டு கேரளத்தினுள் 30 கி.மீ. பாய்ந்து, தமிழ் மக்களுக்கு உதவாமல் போகிறோமே எனும் பரிவு உணர்ச்சியால் திரும்பி, முள்ளி எனும் இடத்தில் மறுபடியும் தமிழ்நாட்டுக்குத் திரும்பி நுழைகிறது. பின்பு, அது சென்று சேர்வது காவிரியில்.

கோவையில் இருந்து புறப்பட்ட நாங்கள் மேட்டுப்பாளையம் சாலையில், அரங்கநாதன் அரசாளும் காரமடையில் இடது பக்கம் திரும்பி, தனவணிகர் குலம் காத்த குருந்த மலைக்குன்று உறையும் முருகன் கோயிலுக்குப் போகும் பிரிவு கடந்து, பல்லாண்டுகள் முன்பு வாழ்ந்து தமிழ் கூறும் நல்லுல கத்தாரால் அறியப்படாமல் மறைந்த தத்துவக் கவிஞர் ‘வெள்ளியங்காட்டான்’ வாழ்ந்த வெள்ளியங்காடு தாண்டி, அத்திக்கடவுப் பாலத்தில் இறங்கி, பவானி ஆற்றங்கரையோடும் ஒற்றையடிப் பாதையில் மரத்து வேர்களும், கற்குவியல்களும், புதர்களும் விலக்கி நடக்க ஆரம்பித்தோம்.

அந்தப் பகுதியில் மழை பெய்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. எனினும் பவானி, அசாவேரி ராகம் போல ஆடி அசைந்து, மரங்களின் பெருவேர்களும் பாறைகளும் குறுக்கிடும் இடங்களில் சலசலத்து, பள்ளங்களில் பாய்ந்து, பில்லூர் அணைக்கட்டு நோக்கிப் பெருகி வளர்ந்து வந்தது. தமிழகப் பசுமை இயக்கம் வெளியிட்டுள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனும் குறுநூல், இந்த மலைத் தொடரை கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கோவா, மராத்தியம், குஜராத் என்னும் ஏழு மாநிலங்களின் சொத்து என்று குறிப்பிடுகிறது. தென்முனையில் இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் எனும் முக்கடல் பகுதியில் தலை தூக்கும் இந்த மலைத் தொடர், வடக்கே குஜராத்தின் வடக்கு முனையான ‘தப்தி’ நதியின் உற்பத்தி இடம் வரைக்கும் நீள்கிறது. 1,600 கி.மீ. நீளமும், சில இடங்களில் 70 கி.மீ அகலமும் ஆனைமுடி, தொட்டபெட்டா போன்ற 2,600 மீட்டர் உயரமுள்ள சிகரங்களும் கொண்டது. எத்தனை நதிகள் பெருகிப் பாய்ந்து மக்களுக்குப் பயன் தருகின்றன?

‘நீரவர் கேண்மை’ எனும் எங்கள் பயணம் காடுகளையும் ஆறுகளையும் அறிந்துகொள்ளும் முயற்சிதான். கேரளத்தில் பாய்ந்திருக்கும் பவானியின் குறுக்கே முக்காலி எனும் இடத்தில் தடுப்பணை கட்டி, பன்னாட்டு குளிர்பான நிறுவனத்துக்குத் தாரைவார்த்து, கோவை – திருப்பூர் மக்களின் தொண்டைத் தண்ணீரை அபகரிக்க முயன்ற தைச் சுற்றுச் சூழல் அமைப்புகள் முனைந்து போராடி முறியடித்தன.

இந்தக் காடுகளைத்தான் பொது நல நோக்கம் அற்று, சொந்த லாபம் மட்டுமே கருத்தில்கொண்டு அழித்து ஒழித்துக்கொண்டு இருக்கிறார்கள். தண்ணீரற்றுப் போய்க்கொண்டு இருக்கிறது இந்தக் கண்ணீர் தேசம்.

நாட்டில் சராசரி மழைக்குக் குறைவில்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். பிடித்து வைத்துக் கொள்ளும் குளம், குட்டை, வாவி, நீராவி, பொய்கை, தடாகம், ஏரி யாவும் தூர்ந்தும் ஆக்கிரமிப்புக்கு ஆட் பட்டும் கிடக்கின்றன. தண்ணீர் வழித் தடங்கள் சுருங் கிக்கொண்டும் மாய்ந்துகொண்டும் போகின்றன. 100 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் 800 அடிக்குக் கீழே போய்க்கொண்டு இருக்கிறது. மேல் வலிக்காமல் கடல் நீரைத் குடிநீராக்கும் திட்டம் என்று வாரிவிடுகிறார்கள் வாக்குறுதிகளை. அதில் ஒரு லிட்டருக்கான விலை பற்றி யாரும் பேசுவது இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் தண்ணீருக்கு, திருப் பூரில் இன்று குடத்துக்கு ஒன்றே கால் ரூபாய

காடுகளை மரக் கூழுக்காகவும், தேயிலை, காபித் தோட்டங்களுக்காகவும், தட்டுமுட்டுச் சாமான்களுக்காகவும், உல்லாச வாசஸ்தலங்களுக்காகவும் அழித்துவிட்டு, நல்ல தண்ணீருக்கு நாக்கைத் தொங்கப்போட்டு நாய் போல எதற்கு அலைய வேண்டும் நாம்?

காடு, புல்வெளிப் பரப்புகள், சோலைகள் அழிந்தால் நீராதாரம் மட்டுமா அழிகிறது? எத்தனையோ நுண்ணுயிர்கள், பல்லுயிர்க் கோவைகள், புட்கள், விலங்குகள் யாவற்றின் இனங்கள் அழிகின்றன. ‘வேறெங்கும் காண இயலாத 16 பறவை இனங்களும், வரிக்கழுதைப் புலியும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழ்கின்றன’ என்றார் ‘ஓசை’ காளிதாஸ்.

‘சிட்டு’ எனும் ஆவணப் படம் எடுத்த கோவை சதாசிவம், கிங்ஃபிஷர் எனப்படும் பெருமீன் கொத்திப் பறவையைக் காட்டித் தந்தார். எனக்கோ, அந்தப் பெயரில் இருக்கும் பீர் மட்டுமே தெரியும். பாரதியார் பல்கலைக்கழகத் தாவரவியல் பேராசிரியர் ராமச்சந்திரன் சிறுநீரகக் கற்கள் நோய்க்கு மருந்தான ‘கல்லுருக்கி’ மூலிகை பறித்து வந்து தின்னத் தந்தார். இதய நோய்க்கு மருந்தாகும் நீர்மருது மரத்தின் உட்பட்டை பெயர்த்துக் காட்டினார். அவர் சொன்ன மற்றொரு சுவாரஸ்யமான தகவல், ‘அந்த மரத்தில்தான் அர்ச்சுனன் வில் பயிற்சி பெற்றான்’ என்பது. காட்டு மா, நாவல், புங்கு, கல் உச்சிக் கொடி, நீர் அத்தி எனும் மரங்கள்காட்டி னார் ‘ஓசை’ அவைநாயகன். இலக்கியத்தில் படித்திருந்த, ஏராளம் கேட்டிருந்த, ‘அருகு உளது எட்டியே ஆயினும் முல்லைப் படர்கொடி படரும்’ என மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை பாடிய எட்டி மரத்தையும் அதன் பழத்தையும் காட்டித் தந்தார்.

பத்திரிகையாளரும் சுற்றுச்சூழல் பாதுகாவற் போராளியுமான செல்வகுமார், மிக அரிதான பறவையான ‘இருவாய்ச்சி’ என்று தமிழிலும், ‘வேழாம்பல்’ என்று மலையாளத்திலும் அழைக்கப்படும் மழைக் காடு களின் அடையாளமான பறவை பற்றிச் சொன்னார்.

பவானி ஆற்றங்கரை ஓரமாக தட்டுத்தடுமாறி, வேர்களில் கால் சிக்கிக்கொள்ளாமலும், ஆற்றில் சரிந்துவிடா மலும் நாங்கள் தளர்நடை செய்தபோது, தொடர்ந்து பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தன. ஆள் நடமாட்டம் அறிந்து அரவம் செய்யும் அப்பறவைகளைக் ‘குக்குருவான்’ என்றும், ‘குக்குரு’ என்றும் சொன்னார்கள். அதிரடிப் படையினரின் நடமாட்டத்தை முன்னறிவிப்பு செய்தமையால், அவற்றுக்கு ‘வீரப்பன் தோழன்’ என்ற புதுப் பெயரும் உண்டு.

‘கனவு’ இதழாசிரியரும் நாவலாசிரியருமான சுப்ரபாரதி மணியன், சமீபத்தில் காலமான அவரது மனைவி சுகந்தி சுப்ரமணியன் நினைவுகளில் புதைந்து அடர் மௌனம் காக்க, ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவலாசிரியர் சி.ஆர்.ரவீந்திரன் இலக்கியக் கொள்கைகளைத் தாளித்து வந்தார். ஓவியர், சினிமாக் கட்டுரையாளர், புகைப்படக் கலைஞர் ஜீவா, எங்கும் எவற்றையும் கேமராவில்சுட்டுக் கொண்டு இருந்தார். சிறுகிணறு எனும் இருளர் குடி யிருப்பு… 15 வீடுகளும் 60 உறுப்பினர்களையும்கொண்டவை. அருகே, ஆற்றங்கரையின் தண்ணிழல் மணல் பரப்பில், கவிஞர் வேனில், ராகிக் களி உருண்டைகளை ‘ரக்ரி’ எனப்பட்ட காரசாரமான கீரைக் கடைசலில் தொட்டு, காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தது போல், வேகமாக விழுங்கிக்கொண்டு இருந்தார்.

காடு என்பது நகரத்து மனிதனுக்குத் தண்ணீர் வழங் கும் பேருயிர். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வகை யற்று அழிகிறது. மகாத்மா காந்தி சொன்னார், ‘இயற்கை மனிதனின் தேவைக்கான அனைத்தையும் தரும். ஆனால், மனிதனின் பேராசையை ஈடுசெய்ய அதனிடம் எதுவும் இல்லை’ என்று.

மலரைச் சிதைக்காமல் தேனைச் சேகரிக்கும் தேனீ போல, காட்டை அழிக்காமல் பயன்பெற்று வாழ மனிதன் கற்றான் இல்லை. உல்லாசப் பயணங்கள் போய், காதலியுடன் கைகோத்து, நண்பர்களுடன் பீர் பாட்டில் உடைத்து, பாலிதீன் பைகள் வீசிக் கெடுப் பதற்கானவை அல்ல காடும் மலையும் என்பதை இளைய தலைமுறைக்கு நாம் கற்றுத்தர வேண்டும். விதைப் பைகளை அறுத்துப் பொரித்துத் தின்றுவிட்டு, இனவிருத்தி செய்ய இயலாது.

மே நாள், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி, ஏ.பி.ஜே.அப்துல்கலாம்,

‘இயற்கை அழித்த கொடியோர் நாங்கள்
காற்றை விடமாய் மாற்றிய பாவிகள்
வளர்ச்சியின் பெயரால் வாழ்வை அழித்தோர்
நீரைக் கெடுத்த துரோகிகள்’

- என்று சுயம் இரங்கிப் பாடுகிறார்.

நாளை குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால், காடுகள் பெருகி வளர்ந்து, அவை காப்பாற்றப்படவும் வேண்டும் என்ற அடிப்படை விஞ்ஞானத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவீர் பெற்றோரே!

English Meaning - As I taught a kid - Rajesh
1) Pristine water flowing in the river, 
2) unpolluted land (through which river flows and under which rain is stored in groundwater table is there), 
3) mountains (which play a role in wind movements thereby impacting rain), 
4) dense forests (which has trees that store 1000s of gallons of water in the roots which is the starting point of river) serve as forts for country.
All these four are hyper-linked in the formation of river. River is essential for drinking water, irrigation, agriculture etc. Hence, river is essential for living of humans and all living organisms. Hence, four things river, land, mountains, forests are forts. It is essential to protect the environment. Also, if these serve as natural borders of a country, it is additional advantage because they make the entry difficult for the enemies.

Questions that I ask to the kid
What are the 4 things in nature considered as a fort? Why?