Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_083. Show all posts
Showing posts with label Athikaaram_083. Show all posts

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

 

குறள் 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
பகை - எதிர்,  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஆம் - ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

வருங்கால் - வரும் பொழுது

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

நட்டு - உப்புக்கொட்டிவைக்கும்மேடை; நாட்டியம்; காண்க:நட்டுவன், நாட்டியக்காரன்; கீழ்மை; சரிநடு; நட்டம்.

நடுதல் - ஊன்றுதல்; வைத்தல்; நிலைநிறுத்துதல்.

முக நட்டு – முகத்தளவில் மட்டும் நட்பைக் காட்டி

அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஒரீஇ -
ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள்
பகைவர் நம்மிடம் நட்பாக பேசினால் அப்பகைவர் இடத்தில் எவ்வாறு நட்புப் பாராட்ட வேண்டும்? 
பகைவர் ஏன் நம்மிடம் நட்புபாராட்டுகிறார் என்ற கேள்விக்கான பதிலை நாம் கண்டிப்பாய் ஆராயவேண்டும். அவரது தவறுகளை அவர் உணர்ந்தாரா? நம்மை வஞ்சிக்க ஏதாவது குழிபறிக்கிறாரா? அல்லது பிற்காலத்தில் மனம் மாறி மறுபடியும் பகைவராக மாறுவாரா? ஆனால் இதனை அறிய சிலகாலம் எடுக்கும்.  பச்சோந்திகள் நிறம் மாறுவதுப்போல பகைவரும் எப்பொழுது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதால் நாம் எக்காலமும் எச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு நல்லது. ஆதலால் பகைவரிடம் முகத்தளவில் சிரித்துப் பேசி மகிழ்ந்து அகத்தால் நட்பல்லாமல் விலகி இருப்பதே நல்லது. 

நட்பு அதிகாரத்தில் “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்று நட்பை இனம் காட்டும் வழியைச் சொல்லிவிட்டு இந்த குறளில், அகத்தளவில் கொள்ளாது முகத்தளவில் நட்பை பகைவரிடம் காட்டவேண்டும் என்கிறார் வள்ளுவர். 

கம்பரின் இராமாவதாரத்தில், கிட்கிந்தா காண்டத்தில், அரசியல் படலத்தில் வரும் பாடலொன்றில் இவ்வாறு கூறுகிறார். படிப்பதற்கு எளிதாகப் சொற்களைப் பிரித்தே கொடுக்கப்படுகிறது.

“புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர் வினயமும் வேண்டற் பாற்றே;
பகையுடை சிந்தை யார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன் உரை நல்கு, நாவால்” (கம்ப.அரசியல்.29)

அதாவது, இவ்வுலகம், ஓரிடத்தில் புகை இருக்குமானால், அங்கு கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பு உண்டு என்று ஊகித்து அறிகின்ற கருதறிவினைக் (inference) கொண்டது. ஆனால், அதனோடு நூல் வல்லோர் கூறிய சூழ்ச்சியறிவும் அரசாள்பவருக்கு வேண்டும். பகைமை உடையாரிடத்தும், அவரவர்க்கு ஏற்றார்போல், பயன் தருவதாக, அவர்தம் இயல்பறிந்து, தம் பண்பும் மாறாது, மலர்ந்த இன் சிரிப்புடைய முகமு, இன் சொற்களையும் சொல்வாயாக. இதனால் நல்லவர்க்கு நல்லவராய், பகைவர்க்கு, அவரை அடக்குவதற்கு நல்லவர்போன்று இருக்கவேண்டியது உணர்த்தப்படுகிறது. காலம் அறிதல் அதிகாரத்தில், ஏற்கனவே இக்குறளை ஒட்டிய கருத்தை இவ்வாறு கூறியுள்ளார். பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல் “பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள் வேர்ப்பர் ஒள்ளியவர். (காலம் அறிதல் – 487)”;

தமிழ் அகராதியில் பகைவர் என்பதைக் குறிக்க நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. இகழுநர் என்பது ஒன்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.

மு.வரதராசனார் உரை
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

 

குறள் 829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
மிகச் - Very much; abundantly; மிகவும்; பெரிய; ஓர்உவமவுருபு
மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

எள்ளுவாரை - எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

நகச் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

நட்பினுள் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

சாப் - சாதல் - இறத்தல்

புல்லம் - எருது; இடபராசி; வசைமொழி; மலர்
புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

புல்லற்பாற்று  - அவரோடு ஒட்டி ஒழுகுக (புல்லுதல் – நட்புறவாய் ஒட்டிக்கொள்ளுதல்)

முழுப்பொருள்
ஒரு சிலர் நம்மிடம் நெருக்கமாய் இருப்பதுப்போல் சிரித்து மகிழ்ந்து பேசுவர் விழாக்களில் இணங்குவர் முகஸ்துதி செய்வர் அகத்தில் அழிக்கும் எண்ணம் கொள்வர். ஆனால் உள்ளூர நம்மை இகழுவர். அவர்களை இனம் கண்டுக்கொண்டு, அவர்களிடம் அவர்கள் செய்வதுப்போலவே சிரித்து பேசி மகிழ்ந்து, நட்பை மனதில் அழித்துவிட்டு, அவர்களிடம் இணங்கி இரு. நாம் அவர்களை நம்பியதாக அவர்களை நம்பவைத்துவிடு. தக்க சமயத்தில் அவசியம் ஏற்பட்டால் தண்டித்துவிடலாம். அதுவே அவர்களுக்கு தண்டனை.

ஏன் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் எல்லா இடங்களிலும் நாம் நேர்மையாக இருந்துவிட முடியாது. சில இடங்களில் அது துவேஷத்தை வளர்த்து நமக்கு வெளிப்படையாகவே பல இன்னல்களை கொடுக்கும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறு. நாம் அவர்களை நம்பவில்லை என்று சொன்னால் உடனே அழுகை சிந்தி நாடகம் ஆடுவர் அல்லது நம்மை ஏசுவர். ஆதலால் இந்த நாடகத்தினை எல்லாம் பார்க்காமல் அந்நாடகத்தில் நாமும் ஒரு கதாபாத்திரமாகவே நடித்துவிட்டால் நாடகமும் சுமூகமாய் செல்லும். 

அதாவது வஞ்சகரை வஞ்சகம் செய்து வஞ்சிப்பதே தண்டிப்பது என்பது இக்குறளின் அடிநிலைக் கருத்து. ஆனால் வள்ளுவரே “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்றும் கூறியிருப்பதையும், ஒளவை சொன்ன, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்” என்பதையும் ஒப்பு நோக்கும்போது, கீதையில் கண்ணன் சொன்னது போல தருமத்தின் பாதை மிகவும் சிக்கலானது. வெவ்வேறு நேரங்களில் அது இடம், பொருள் இவற்றுக்கேற்ப மாறும் போலும். சாணக்ய நீதி சொல்லுவதுபோல், இக்குறள், “பகையை உறவாடிக் கெடு” என்கிறது. இதை இருவிதமாகக் கொள்ளலாம். அன்பின் வழி நின்று பகையை மாற்று என்றும், அல்லது அழி என்றும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச் செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி. ('நின்று' என்பதூஉம், 'அரசநீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார். அதன்மேல் வைத்துக் கூறினார். 'சாவ' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' (கலித். முல்லை.5) ¢என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.).

மணக்குடவர் உரை
பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மையிகழும் பகைவரைத் தாமும் அந்நட்பின்கண்ணே நின்று, புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணஞ் செய்து, அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி.

மு.வரதராசனார் உரை
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

 

குறள் 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
தொழுத - தொழுதல் - வணங்கல்

கையுள்ளும் - கைக்குள்ளும் 

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

ஒடுங்கும் - ஒடுங்குதல் - அடங்குதல்; குறைதல்; சுருங்குதல்; குவிதல்; சோர்தல்; கீழ்ப்படிதல்; பதுங்கல்; ஒதுங்குதல்; ஒளிமங்குதல்.

ஒன்னார் - பகைவர் 

அழுத - அழுதல் - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.

கண்ணீரும்கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்

அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

அனைய - அத்தன்மையான; ஒத்த. -

முழுப்பொருள்
பகைவர் இரு கைக்கூப்பி தொழும் பொழுது உயிரக்கொல்லும் ஆயுதம் அடங்கி ஒடுங்கி அக்கைகளுக்குள்ளே இருக்கக்கூடும். பகைவர் வணங்குகையில் கூட நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். பூவுக்குள்ளும் பூநாகம் இருக்கும் என்பதை நினைவில் கொள்க.

அதுப்போல சில கூடா நட்புகளின் / உறவுகளின் கண்ணீர் சிந்தும் அழுகைக்குள்ளும் நம்மை அழிக்கக்கூடிய ஒரு ஆயுதம் ஒரு தந்திரம் ஒரு திட்டம் ஓரு சூழ்ச்சி இருக்கக்கூடும் என்றென்பதை நினைவில் கொள்க. அத்தையோரிடம் இருந்து (மனதளவிலாவது) விலகி நிற்க. அவர்களை நம்ப வேண்டாம்.

இன்றைய காலங்களில் குறிப்பாக சில உறவுகளிடம் இது அதிகமாய் இருக்கக்கூடும். தன்னை நியாயமாக காட்டிக்கொள்ள தன்மீது தவறே இல்லை, அடுத்தவர்மீது தான் தவறு, தன்மீது வீண்பழி சுமத்துகிறார் என்றெல்லாம் அழுவர். சிலர் சில (நிதி) உபாயங்கள் பெறவேண்டி தான் செய்த தவறு எல்லாவற்றையும் அறியாமையால் செய்துவிட்டேன் என்றும், தன்னை மன்னித்துவிடு என்றும், எனக்கு உன்னைவிட்டால் வேறு யாருமில்லை என்றும் அழுகை சிந்தி நம்மை நம்பவைப்பர். ஆனால் கூர்ந்து நோக்கினால் அவர்கள் செய்கையில் ஒருவித மாற்றமும் இருக்காது எனதை அறியலாம். ஆதலால் அவர்களை எச்சரிக்கையுடன் எதிர்கொள்க. 

புறநானூற்று (10:1) வரியொன்று “வழிபடுவோரை வல்லறிதியே”, அதாவது, “வழிபட்டு நிற்போரின் உண்மை நிறத்தை விரைந்து அறிவாய்” என்று சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் பாடியது. சீவக சிந்தாமணிப் பாடல் இக்குறளின் கருத்தையே, இவ்வாறு கூறுகிறது.

“தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே” (சீவக.1891)

பகைவுறவோர் தொழுத தம் கையிலும், மயிர் நெருங்கிய முடியிலும், ஒழுக அழுத கண்ணீரிலும், அணிகலன்களிலும், கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; அதனை ஆராய்ந்து, அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி, யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக, அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர், என்பதே இப்பாடல் சொல்லுவது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¤யற்க'' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.

மு.வரதராசனார் உரை
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

குறள் 825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
மனத்தின் - மனது - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு

அமைதல் -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல், சம்பவித்தல் (.To occur, happen), மாட்சிமையுடையதாதல்

அமையாத - உண்டாகாத ; சம்பவிக்காத 

வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.

எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு

ஒன்றும் -  சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing  

சொல்லினான் - சொல்(லு)-தல் - col-   5 v. tr. [K. sol,M. colluka.] 1. To say, speak, tell, mention,utter, express; பேசுதல் சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்(குறள், 664). 2. To recite, repeat, relate, quote;திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை 3. [M. colluka.] To dictate, command; கட்டளையிடுதல் மூத்தோர் சொல்லியதைமீறாதே. 4. To advise; புத்திகூறல். 5. To inform; அறிவித்தல் யாருக்கென் சொல்லுகே னன்னைமீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7). 6. To praise;புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா.மாரீச. 73).  ; col-   v. tr. perh. kṣur. cf.சொலி¹-. To remove, alleviate, put away;களைதல். புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம்புக்கோன் (புறநா. 39). 

தேறல் - தெளிவு; தெளிந்தகள்; தேன்; சாறு.
பாற்று - உரியது.

அன்று -அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else).

முழுப்பொருள்
தன்னுடைய மனதிற்கு உடன்படாத பொருந்தாத ஒருவர் நமக்கு நண்பர் ஆகா மாட்டார். ஆதலால் அத்தகையவர் கூறும் எத்தகைய சொற்களையும் தெளிந்த சொற்களாக நம்பிக்கைக்கு உரியதாக எடுத்துக்கொள்ளாதே என்கிறார் திருவள்ளுவர். ஆதலால் அவற்றை அப்படியே நம்பி எச்செயலையும் செய்யாதே. நீ ஆழுந்து எண்ணி ஆராய்ந்து செயல்படுக என்கிறார் திருவள்ளுவர். 

Earn Trust  என்று வணிகம் நிர்வாகம் மேலாண்மை (MBA) படிப்புகளிலும் அலுவலக தலைமை பண்புகளிலும் பார்த்திருப்போம். அங்கே trust /நம்பிக்கை என்பது ஒருவர் செயல்புரிந்து ஈட்டும் தகுதி/குணம் ஆகும். பொதுவாழ்வில் நண்பர் என்பவர் நம்மிடம் அத்தகைய நம்பிக்கையை பெற்று இருப்பார். அதுவே மற்றவராக ஆகா இருந்தால் துவக்கத்தில் அந்நம்பிக்கையை பெற்று இருக்க மாட்டார். அவருடைய செயல்களை வைத்தே அவரை மதிப்பிட முடியும். அவர் செயல்களின் மூலம் நம்பிக்கையை பெற்று விட்டால் பின்பு அவர் பேச்சை கேட்கலாம். 

மேலும், நாம் ஒரு செயலை செய்தால் அதற்கு முழுப்பொறுப்பினையும் நாம் ஏற்கவேண்டும். பிறரை பொறுப்பாக்க கூடாது. அவர் சொன்னார் ஆதலால் செய்தேன். இதனால் இத்தீங்கு விளையும் என்று எனக்கு தெரியாது என்றெல்லாம் மழுப்பக்கூடாது. முழுப்பொறுப்பையும் நாம் தான் ஏற்கவேண்டும். முழுப்பொறுப்பையும் நாம் ஏற்பதால் எந்த ஒரு செயலையும் முழுமையாக ஆராய்ந்தப்பின் செய்க. அதுவும் நம்பிக்கைக்குரியவர் சொல்லவில்லையென்றால் கண்டிப்பாய் நன்கு ஆராய்ந்து செய்க.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று - யாதாரு கருமத்தினும் சொல்லால் தௌ¤தல் முறைமைத்தன்று, நீதிநூல். ('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தௌ¤தல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.).

மணக்குடவர் உரை
மனத்தால் பொருத்தமில்லாதவரை யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தௌ¤தற்பாலதன்று. இது சொல்லினால் அறிதலரிதென்றது.

மு.வரதராசனார் உரை
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை
மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

குறள் 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
முகத்தின் - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

இனிய - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

நகாஅநகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

அகத்து - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

இன்னா -  துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

வஞ்சரை - வஞ்சர் - வஞ்சகன் - சூழ்ச்சிக்காரன்; ஏமாற்றுபவன்; கயவன்; நரி.

அஞ்சுதல் -  பயப்படுதல்

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

முழுப்பொருள்
நம்மை காணும் பொழுது நம்மிடம் சிரித்து பேசி மகிழ்ந்து நமக்கு இனியவராக தோற்றுவித்துக்கொண்டு ஆனால் மனதளவில் நம்மை வஞ்சிக்க சூழ்ச்சி செய்வோரை நாம் அஞ்சவேண்டும். மனதால் நம்மை வஞ்சிக்க நினைப்போர் நம் பகைவர். பகை இருந்தால் நம் சிரிப்பும் மகிழ்ச்சியும் குறையும்.

அறநெறிச்சாரப் பாடல் ஒன்று இக்கருத்தையே நையாண்டியாக இவ்வாறு கூறுகிறது. தேவர்கள் விழித்தகண்மூடாமல் நிற்பதற்குக் காரணம், எதிரில் நின்று, உருகுமாறு வாயால் இன்சொற்கூறி ஒருவரைப் புகழ்ந்து, அவர் அகன்ற பின்னர், அவரையே இகழ்ந்து கூறுகின்ற, கயவர்களைக் கண்டு, கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே யாகும். இனி அப்பாடல்:

முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்துப்-பின்னின்
றிழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை (அறநெறி.48)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும். (நகையது வகை பற்றி 'இனிய' என்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முகத்தால் இனியவாக நக்கு மனத்தால் இன்னாதவாக நினைக்கும் வஞ்சகரை அஞ்சவேண்டும்.

மு.வரதராசனார் உரை
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

குறள் 823
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பல - ஒன்றுக்குமேற்பட்டவை.
நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான.
கற்றக் - கற்தல் -படித்தல் 

கடை - (வி)குடை; சிலுப்பு; தயிர்கடை; பருப்புமுதலியனகடை; மரம்முதலியனகடை; தீக்கடை

கடைத்தும் - kaṭai-   4 v. [K. kaḍa.] tr. 1.To churn with a churning rod; மத்தாற்கடைதல் பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் (சிலப். 17, 2).2. To turn in a lathe; to form, as moulds on awheel; மரமுதலியன கடைதல் கடைந்த மணிச்செப்பென வீங்கு (கூர்மபு. தக்கன்வே. 52). 3. To mash toa pulp, as vegetables, with the bowl of a ladle;மசித்தல். 4. To increase, as the passion of love;மிகப்பண்ணுதல். காதலாற் கடைகின்றது காமமே(சீவக. 1308).--intr. 1. To trickle, drip, as honey;அரித்தல். கடையுங் கட்குரல் (சீவக. 1202). 2. Torattle and wheeze, as the throat from accumulation of phlegm; கடைவதுபோன்ற ஒலியுண்டாதல்.தொண்டையிற் கபங் கடைகிறது. 

மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு

நல்லர் - நல்லவர் - அறிஞர்; நல்லோர்; நண்பர்; பெண்கள்;

ஆகுதல்  - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

மாணார்க்குமாணார் - மாட்சிமையற்ற பகைவர்

அரிது - அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

முழுப்பொருள்
நூல்கள் பல நன்கு கற்றுணர்ந்தும் மேன்மையற்ற /மாட்சிமையற்ற  (பகைவர்) ஒரு நபரிடம் மனதால் உற்ற நட்பாக கொள்வது மிக கடினமான ஒன்றாகும்.

உள்ளத்தால் மேன்மையல்லாதவர் நூல்கள் பல கற்றாலும் அவர் நல்ல உள்ளம் அடைவது மிக அரிதானது. அவர் நல்ல மனதுடன் பிறருடன் நட்பு பழகுவது கடினமாகும்.

நூல்கள் பல கற்றவராயினும் மாட்சிமையற்றவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது ஏனெனில் அவர் மனதால் நல்லவர் ஆவது கடினமாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்ற விடத்தும்; மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை. (நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர'¢ எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் - செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.).

மணக்குடவர் உரை
நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது. இது கல்வியால் அறிதல் அரிதென்றது.

மு.வரதராசனார் உரை
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person might have learnt so many books and be knowledge. Yet, if that person is not a person of good character and thoughts then we should not connect with that person by our heart. Because, a characterless person is harmful

Questions that I ask to the kid
Can a knowledgeable person be harmful to us?

இனம்போன்று இனமல்லார் கேண்மை

குறள் 822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்; s. Kindred, relations, con nections, affinity, relationship, சுற்றம். 2. Class, kind, species, caste, sort, குலம். 3. Association (with persons), union, fellow ship, சம்பந்தம். 4. A company, collective body, a society, association, கூட்டம். 5. Flock, herd, shoal, swarm, திரள். 6. At tendants of kings, royal household, அரசர்க் குறுதிச்சுற்றம். See உறுதிச்சுற்றம்.

போன்று -  போல - pōla   போல்) poola போல 1. like, similar (post. + acc.) 2. as (if) (post. + conditional; post. + pt. n.) [3. inf., stem of போல் `resemble'] 

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

அல்லார் - அல்லாதவர்கள்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

மகளிர் - பெண்டிர்

மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

போல - போல - pōla   போல்) poola போல 1. like, similar (post. + acc.) 2. as (if) (post. + conditional; post. + pt. n.) [3. inf., stem of போல் `resemble'] 

வேறுபடும் - வேற்று மையுடையது

முழுப்பொருள்
நமக்கு உற்றவர்கள்போல தோன்றும் படி நடந்துகொண்டு ஆனால் உண்மையில் நமக்கு தீங்கு விளைவிக்ககூடியவரிடம் நட்புறவானது நமக்கு ஏற்றதில்லை. ஏனெனில் மகளிர் மனம் நேரத்துக்கு நேரம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும் அதுபோலவே பகைவர் குணமும் மாறிக்கொண்டே இருக்கும். வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

வளையாபதிப்பாடல் இவ்வாறு கூறுகிறது “பெண்ணினது மனத்தியல்பினை மாற்றி ஒருமுகப்படுத்துவேன் என்று ஆராய்ச்சியில்லாத மடவோனுடைய தன்மையை நினையுங்கால், அம்முயற்சி எதனை ஒக்குமெனின், தெளிந்த நீரிலேபெய்யப்பட்டு நான்கு திசைகளினும் பரவிச் சென்று அழிந்து போன, எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கொண்டுவந்து சேர்த்தற்கு அவாவுதலையே ஒக்கும் என்பதாம்”. அதாவது பெண்ணின் மனது பொதுவாக மாறும் தன்மையுடைத்து, ஒருமுகப்படுத்தலுக்கு ஏலாதவொன்று என்பதே இப்பாடலின் மையக்கருத்து, குறளின் ஒப்புமைக் கருத்து. இனி அப்பாடல்,

தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண் டீட்டற் கிவறுதலென்னொக்கம்
பெண்மனம் பேதிக் தொருப்படுப்பெ னென்னு
மெண்ணி லொருவ னியல்பெண்ணு மாறே.

நீதிநெறி விளக்கப்பாடலொன்றும் இதே பொதுவாக பெண்களின் மனம் திரியும் இயல்பைக் கூறுகிறது.

“ஏந்தெழின் மிக்கா னிளையா விசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த 
நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க் 
கயலார்மே லாகு மனம்”

பெருங்கதை வரிகளும், “மாரியுந் திருவு மகளிர் மனமுந் தக்குழி நில்லாது பட்டுழிப் படும்”, என்று மகளிர் மனம் மாறுபடும் இயல்பைக் கூறுகிறது. எனினும், இன்றைய மாற்றுக்குறளில் பொதுவாக மகளிர் என்னாது பெண்டிருக்கும் ஏற்புடைய வகையில் “உளந்திரிபுற்ற பெண்டிர் போல்” என்று சொல்லப்படுவதை கவனிக்க.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உள்ளத்தால் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தால் நட்டார் கழிகிளைமை...
மனத்துக்கண் மாசாய் விடும்” (நாலடி.128)

“குறள் 920

“அன்னவள் உரைத்த லோடும் ஐயனும் அறிதற் கொவ்வா
நன்னுதல் மகளிர் சிந்தை” (கம்ப.சூர்ப்பணகை 44)

“குன்றிடை யிவரும் மேகக் குழுவிடைக் குதிக்கும்
...............நிதிவழி நேயம் நீட்டும்
மன்றலங் கோதை மாதர் மனம்எனப் போயிற் றம்மா” (கம்ப.மாரீசன்.243)

“வருமுலை விலைக்கென மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனமெனக் கறங்கெனத் திரிந்தான்” (கம்ப.சட்புமாலி.35)

பரிமேலழகர் உரை
இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை
வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

சீரிடம் காணின் எறிதற்குப்

குறள் 821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

காணின் - கண்டால்

எறிதல் - eṟi-   4 v. tr. 1. To rebuke; இடித்துரைத்தல். தெவ்வார்போலத் தீதற வெறிந்தும் (சீவக.1895). 2. To stroke, pat; தடவுதல். தாய்தன்கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . .குழவிபோல (சீவக. 930).
எறுப்பிடைச்செய்யுள் eṟuppiṭai-c-cey-yuḷ, n. எறும்பு + இடை +. (Pros.) A kind ofmetre; பிபீலிகாமத்திமம். (யாப். வி. பக். 481.)

எறிதல் - eṟi-   4 v. [M.eṟi.] tr. 1. Tothrow, cast, fling, discharge, hurl; வீசியெறிதல். கல்லெறிந் தன்ன (நாலடி, 66). 2. To hack,cut into pieces; வெட்டுதல் எறிந்து களம்படுத்தவேந்துவேள் (புறநா. 19, 12). 3. To chop, asmutton; அறுத்தல் எறிக திற்றி (பதிற்றுப். 18, 2).4. To shiver into pieces, smash; முறித்தல் கதவெறியாச் சிவந்து ரா அய் (புறநா. 4, 10). 5. To pick,as flowers; பறித்தல் எறியார்பூங் கொன்றையினோடும்(தேவா. 189, 5). 6. To destroy; அழித்தல் குறும்பெறிந்தன்று (பு. வெ 1, 8). 7. To beat, as adrum; அடித்தல் சிறுவரை நின்றே யெறிப பறையினை (நாலடி, 24). 8. To drive, as a nail;அறைதல். பொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு(புறநா. 15). 9. To sting, as a scorpion; கொடுக்காற் கொட்டுதல் விடத்தே ளெறிந்தா லேபோல(திவ். நாய்ச். 3, 6). 10. To reject, brushaside, as advice; ஒதுக்கிவிடுதல். 11. To leaveuneaten, said of part of food; உண்ணாமல்நீக்கிவிடுதல். ஏன் சோற்றை யெறிகிறாய்? 12. Todrive off, scare away, as birds from corn; ஒட்டுதல்  

எறிதற்குப் - வெட்டி எறிவதற்கு; முறிப்பதற்கு; அழிப்பதற்கு

பட்டடை - அடைகல்; கொல்லன்களரி; குவியல்; தானியவுறை; தோணிதாங்கி; தலையணையாகஉதவும்மணை; உட்காரும்பலகை; அதிர்வேட்டுக்குழாய்கள்பதித்தகட்டை; நரம்புகளின்இளியிசை; இறைப்புப்பாசனத்தால்விளையும்கழனி; கழுத்தணி
பட்டடை - 2. [K. paṭṭaḍi.] Smithy,forge; கொல்லன் களரி 3. Stock, heap, pile,as of straw, firewood or timber; குவியல் (W.)4

நேரா - நேரார் - nērār   நேரலர், s. see under நேர் v. enemies, foes, பகைவர்.
நேரா - நேர்மையாக இல்லாதவர்; உண்மையாக இல்லாதவர்
நேரா - உள்ளத்தால் நம்மை விரும்பாமல், கூடியிராது

நிரந்தம் - nirantam   s. being closely pressed by a pursuing enemy, நெருக்கிடை.
நிரந்தவர் நட்பு -  வெளியுலகில் நெருங்கிய நண்பரைப்போல் காட்டிக்கொள்ளுபவர் போன்றவரது நட்பு.

முழுப்பொருள்


 

உண்மை அல்லாது உறவிலே நேர்மை இல்லாத நட்பு என்பதே கூடாநட்பு. அதற்கு உதாரணம் என்பது கொல்லன் பயன்படுத்தும் பட்டடை என்கிறார் திருவள்ளுவர். 

கொல்லன் இரும்பை அடித்து வளைக்கும் கல் அடைகல், அல்லது பட்டடைக் கல் எனப்படும். கொலைக்களத்து சிரத்தை வெட்டுங்கல்லும் அதே போன்றதே. இரண்டுமே நம்மை தாங்கும் சுமைதாங்கிக் கற்களாய் தோன்றினும், தக்கநேரத்தில் நம்மை துன்புறுத்துவனவே. சிலநேரம் நம்மை வெட்டி எறிந்துவிடும்.

அதுப்போல நம்முடன் உள்ளத்தால் உண்மையான அன்புக்கொள்ளாமல் நம்மை தாங்கும் சுமைதாங்கிப் போல நம்முடன் நட்புக்கொள்ளுவோர் இனிதாக பேசுவர் ஆனால் நம்மிடன் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்ப்பர். இஃது பட்டறையில் உள்ள அடைகல் போன்று நம்மை தாங்கிக்கொண்டு பின்பு நம்மை அடித்து (அவர்கள் தேவைக்கு ஏற்ப) வளைப்பர் அல்லது கொல்லுவதற்கு சமம். இது நமக்கு துன்பத்தையே தரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , ஏனைக் கூடா நட்புக் கூறுகின்றார் .அஃதாவது , பகைமையான் அகத்தாற் கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும் புறத்தாற் கூடியொழுகுவார் நட்பு.]

நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம். (எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான், அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்'என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர்.).

மணக்குடவர் உரை
முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு. இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று. பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.

மு.வரதராசனார் உரை
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

சாலமன் பாப்பையா உரை
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

நட்டார்போல் நல்லவை சொல்லினும்

குறள் 826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
நட்டார்- நண்பர்; உறவினர்.
நட்டார்போல் - நண்பர் போல
நல்லவை - நல்ல அறிவுரைகள், நல்ல கருத்துக்கள், நல்ல வார்த்தைகள்
சொல்லினும் - கூறினாலும்
ஒட்டார்  - பகைவர்
சொல் - சொற்கள்
ஒல்லை - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு.
உணரப்படும் - உணர்ந்துவிடுவோம்

முழுப்பொருள்
நாம் அன்றாடம் நிறைய நபர்களுடன் பழகுகிறோம். சிலர் நல்லுணர்வுடன் பழகுவர். சிலர் தீய எண்ணங்களுடன் பழகுவர். ஆதலால் நாம் யாருடன் பழகுகிறோம் அவர்கள் எத்தகையவர் என்று அறிவது முக்கியம். போலி மனிதர்களை போலி நட்பு பாராட்டுபவர்களை களைவது முக்கியமாகும்.

நம்மிடம் இத்தகையவர்கள் நண்பர் போல பேசுவார்கள், நமக்கு நல்ல அறிவுரைகள் சொல்லுவார்கள் நம் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். ஆனால் வஞ்சத்தினை தன் மனதில் வைத்துக்கொள்வார்கள். இவர்கள் பகைவர் என்று நமக்கு மிக விரைவாகவே அவர்களின் சொற்கள் மூலமாகவும், அவர்களின் செயல்கள் மூலமாகவும், அவர்களின் நடவடிக்கை மூலமாகவும், அவர்களின் உடல் மொழி மூலமாகவும், அல்லது பிறர் மூலமாகவோ நாம்  தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் கூடியவற்றைச் சொன்னாரேனும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் நன்மை பயவாமை விரைந்து அறியப்படும்.

எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது (Concession). கூடா நட்பினர் சொல்லளவில் நல்லவற்றையே சொல்வராதலின், எதிர்மறைப் பொருள் விளைவையே தழுவும். ஒல்லையுணரப்படுதலாவது நல்லவை தீயவையாக விரைந்து வெளிப்படல்.

மணக்குடவர் உரை
உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும் பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்..

மு.வரதராசனார் உரை:
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை
நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

சொல்வணக்கம் ஒன்னார்கண்

குறள் 827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
[பொருட்பால், நட்பியல், கூடா நட்பு]

பொருள் 
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

வணக்கம் - வணக்கு; சிறப்பித்தல்; கீழ்ப்படிதல், வணங்குதல், நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்.

ஒன்னார் - பகைவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கொள்ளற்க - கொள்ளாதீர் 

வில் - அம்பெய்தற்குரியகருவி; வில்லின்நாண்; காண்க:விற்கிடை; வானவில்; மூலநாள்; ஒளி.

வணக்கம் - வணக்கு; சிறப்பித்தல்; கீழ்ப்படிதல், வணங்குதல், நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்

தீங்கு - தீமை; குற்றம்; துன்பம்.

குறித்தமை - குறித்து - kuṟittu   adv. id. With the intention of; towards; நோக்கி  

யான் - தன்மையொருமைப் பெயர்

சொல்வணக்கம் : சொற்களின் மூலம் வணக்கம் தெரிவிப்பது 
ஒன்னார் - பகைவர் 
கொள்ளற்க - கொள்ளாதீர் 

விளக்கம் :
வில்லின் வளைந்து (அதாவது வளைக்கப்பட்டு), இருக்கும் நிலை, வணக்கம் தெரிவிப்பது போல் இருந்தாலும், அது அம்பு எய்து தீமை விளைவிக்கவே. அதை போன்று, நம் பகைவர், நம்மிடம் சொல்லும் வணக்கமானது, தீமைக்காகவே எனக்  கருத வேண்டும். அச்சொற்களை ஏற்றுக்  கொள்ள கூடாது.

அம்பினை வைத்து வேறு ஒரு குறளில் இப்படி வருகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

பரிமேலழகர் உரை
வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க - பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க. '(தம் வணக்கம் அன்று என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும் வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லினது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான். ஒன்னாரது குறிப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தௌ¤யற்க' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாகத் தாழச்சொல்லுஞ் சொல்லைப் பகைவார்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளாதொழிக. இது தாழச்சொல்லினும் தேறப்படா ரென்றது.

மு.வரதராசனார் உரை
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.