Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_085. Show all posts
Showing posts with label Athikaaram_085. Show all posts

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

 

குறள் 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உலகத்தார் - உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு

என்பான் - என்று சொல்லப்படுபவன், அப்படிப் பட்டவர்கள், என்று சொல்பவன், என்கின்றவன்

வையத்து - வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்.

அலகை - பேய்; பேய்க்கொம்மட்டிக்கொடி; காட்டுக்கற்றாழை அளவு

அலகையா  - உருவிலாத அருவமான பேயாகக்

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்

வைக்கப்படும் - வணங்கப்படும்

முழுப்பொருள்
சான்றோர்களும் உலகத்தோரும் அறிஞர்களும் அறிந்துணர்ந்த அறிவினை/மெய்யினை ஏற்காமல் அது அறிவில்லை என்பான் அறிவில்லாதவன். அத்தகைய அறிவில்லாதவன் இவ்வையகத்தில் உருவமற்ற பேய் என கருத்தப்படுபவற்றின் வரிசையில் வைக்கப்படுவான்.

தான் கண்டதே அறிவு பிறர் கூறுவது அறிவாகாது எனவும் பிறர் கூறுவதையும்  துளியும் செவிக்கொடுத்து கேட்காத தன்மையுடைவர்கள் ஒருவிதத்தில் இறுமாப்பு (தலைக்கனம்) உடன் இருப்பவர்கள். அவர்களும் ஒருவிதத்தில் அறிவில்லாதவர்களே. 

கம்பர் இத்தகையோரையே விபீடண சரணாகதி படலத்தில், இவ்வாறு கூறுகிறான்: “
மையற நெறியின் நோக்கி மாமறை நெறியின் நின்ற 
மெய்யினைப் பொய்யென்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார்”. (கம்ப.வீபிடணன்,117)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும். (கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன். இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல்லறிவென்றது.

மு.வரதராசனார் உரை
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who doesn't accept or who rejects the knowledge or findings of the scholars and experts,who considers his findings as the only knowledge and who doesn't listen to others will be placed in the series of formless brainless ghosts. Because a person who doesn't listen to others knowledge and has the ego to consider his knowledge as the only knowledge is a stupid ignorant person. 

Questions that I ask to the kid
Who will be placed in the order of ghosts? Why?

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்


குறள் 849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
காணுதல் அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்
காணாதான் - அறிவிலிக்கு, பேதைக்குப்

காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.

காட்டுவான் - ஈதறிவு என்று காட்டி போதிப்பவன் (தம்மை எல்லாமும் அறிந்தவன் என்று நினைப்பதால்)

தான்காணான் -  தானே அறிவிலியென்றாவன், அதாவது பேதையாவான்

காணாதான் - அவ்வறிவிலியோ

கண்டானாம் - தான் எவ்வாறு காணுகிறானோ, அதையே அறிவென்று

தான்கண்டவாறு - நினைத்து பாசாங்கிலோ, அறிவு மயக்கத்தின் போதையிலோ இருப்பான்

முழுப்பொருள்
அறிவில்லாதவன் ஒன்றையும் அறிந்து உணர்ந்துக்கொள்ளாதவன். அவன் தானும் அறியமாட்டான் (காணமாட்டான் / காணாதான்), அவனுக்கு தெரிந்ததையே அறிவென நம்பி பிறருக்கு உரைப்பான் (காட்டுவான்). ஆனால் பிறர் சொன்னாலும் கேட்டுக்கொள்ளமாட்டான்/அறிந்துக்கொள்ளமாட்டான் (தான்காணான்). அத்தகைய அறிவில்லாதவன் (காணாதான்) தான் கண்டதையே (கண்டானாம்) அறிவென (தான்கண்ட வாறு) நம்பி அறியாமையில் வாழ்வான்.

புல்லறிவாளராம் அறிவிலிகளுக்கு நல்லறிவை ஊட்டுதல் ஒருவழியிலும் இயலாது என்பதைச் சொல்லும் குறள். இதைப் “பேதைக்கு உரைத்தாலும் செல்லாதுணர்வு” என்கிறது சிறுபஞ்சமூலப் (22) பாடல் ஒன்றும். இன்னும் தெளிவாக, பழமொழிப்பாடலொன்று (168) இக்குறளைக் கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது.

ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க – மூர்க்கன்றான்
கொண்டதே கொண்டு விடானாகும் ஆகாதே
உண்டது நீலம் பிறிது. (பழமொழி 168)

அறிவிலார்க்கு, இவையே நல்ல வழிமுறைகள் என்று காட்டுபவன், தாமே அறியாமையில் மூழ்கியவனாகிறான். அறிவில்லாதவனோ, தான் கற்றுக் கொண்டுவிட்டதாக எண்ணி பாசாங்கிலோ, அறிவு மயக்க போதையிலோ, தாம் செய்பவற்றையே செய்துகொண்டிருப்பான். கொடுத்தாலும் கொள்ளார்க்குக் கொடுத்து, அவர் கொள்ளாதிருக்கும் போது கொடுத்தவனும் முட்டாளேயாகிறான். “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்று சொல்லுவதும் இதைத்தான்.

சரி, நமது பேதைமையை குறைத்துக்கொள்ள என்ன செய்வது? பொதுவாக எல்லோருக்கும் விவாதம் செய்வதில் நாட்டம் அதிகம் இருக்கும். ஏனெனில் நமக்கு ஒன்று அதிக பேசப்பிடிக்கும் அல்லது அதிக பார்க்கவோ கேட்கவோ பிடிக்கும். அதனால் தான் அடுத்தவரை பேசவிடாமல் தான் பேசுவதையே பேசுகிறோம் அல்லது கேளிக்கை நிகழ்ச்சிகளை பல ஊடகங்களில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அரிதாகவே உரையாடவோ ஆரோக்கியமாகவோ விவாதிக்கிறோம். உரையாட வேண்டும் என்றால் முழுமையாக மனதையும் காதையும் கொடுத்து கேட்க வேண்டும். இங்கே பதில் சொல்வதற்காக கேட்கக் கூடாது. புரிந்துக்கொள்வதற்காக கேட்கவேண்டும். பிறர் நம்மிடம் சொல்லியவற்றையும் சொல்லாமல் விட்டவற்றையும் புரிந்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கேட்கவும் புரிந்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டால் நமது பேதைமையை குறைத்துக்கொள்ளலாம் அல்லது வெளிக்காட்டும் அளவையாவது குறைத்துக்கொள்ளலாம்.




மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.).

மணக்குடவர் உரை
அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

 

குறள் 848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
ஏவவும் - ஏவுதல் - கட்டளையிடுதல்; தூண்டிவிடுதல்; செலுத்துதல்; சொல்லுதல்; அனுப்புதல்.

செய்கலான் - செய்யவதற்கறியான்; செய்யாதவன்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

தேறான் -  தேற மாட்டான் ; தெளிய மாட்டான் ; துணிய மாட்டான் 

அவ் - அந்த 

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

போதல் - செல்லுதல்; அடைதல்; உரியதாதல்; பிறத்தல்; நீண்டுசெல்லுதல்; தகுதியாதல்; நெடுமையாதல்; நேர்மையாதல்; பரத்தல்; நிரம்புதல்; மேற்படுதல்; ஓங்குதல்; நன்குபயிலுதல்; கூடியதாதல்; பிரிதல்; ஒழிதல்; நீங்குதல்; கழிதல்; மறைதல்:காணாமற்போதல்; மாறுதல்; கழிக்கப்படுதல்; வகுக்கப்படுதல்; சாதல்; முடிவாதல்; ஒலியடங்குதல்; தொடங்குவதைக்குறிக்கும்துணைவினை; பகுதிப்பொருளையேவற்புறுத்தும்துணைவினை

போஒம் - அவன் இறந்துபடும்

அளவும் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அளவுதல் - கலப்புறுதல்; கலத்தல் உசாவுதல்

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு

முழுப்பொருள்
தனக்கும் எதையும் செய்யும் அறிவும் தேர்ச்சியும் இல்லாமல், பிறர் சொன்னாலும் அதனை புரிந்து அதன்படி செயல்படாதவன் அறிவில்லாதவன் எனப்படுவான். அத்தகையவன் இறக்கும் வரையில் ஒரு நோயே. அவனை நினைத்து இவ்வுலகம் வருந்தும் (அவன் உற்றோர் வருந்துவர்.) அவன் துன்பத்தையே தருவான். அவன் ஒரு பிணி.

“தனக்கும் தெரியாது தெரியாது, சொன்னாலும் புரியாது” என்று பேச்சு வழக்கிலே நாம் கூறுவதையே இக்குறள் கூறுகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அறிவுடைமையே குறைவற்ற செல்வம். அறிவின்மை ஒருவருக்கும் நோயைப் போன்றதே, போக்கிக்கொள்ள முயலாதவரை, உடனிருந்தே, வளர்ந்து, உடம்பில் புரையோடிக் கொல்லவும் செய்யும் என்பதை உள்ளுறையாகச் சொல்வது இக்குறள். 

உதாரணமாக சொன்னால் உடல்நலத்தை பற்றி தனக்கும் தெரியாது பிறர் சொன்னாலும் கேட்டுக்கொள்ளவில்லையென்றால் அவருக்கும் நோய் வரக்கூடும். அவரும் பிறருக்கு துன்பத்தையே தருவார். 

இது உடல்நலம் என்றல்ல எல்லா துறைகளுக்கும் எல்லா தளங்களிலும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம். (உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தௌ¤யான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன். இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல்லறி வென்றது

மு.வரதராசனார் உரை
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

குறள் 847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அரு - உருவமற்றது; கடவுள் மாயை சித்தபதவி; அட்டை புண்

அரு - aru   (ம்) rare, dear  

மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.

சோரும் - சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

இலான்  - இல்லாதவன்

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

பெரு - peru   VI. v. i. grow thick, stout, numerous etc., see பரு.

பெரிய - periya   adj. id. [T. M. peru,K. piriya, Tu. pēr.] 1. Large, great; பெரிதான.பெரிய மேருவரையே சிலையா மலைவுற்றார் (தேவா.1114, 9). 2. Elder; மூத்த. பெரிய தாயார். 3.Important; great; முக்கியமான. பெரிய காரியம்.

மிறை  - அச்சம்; குற்றம்; வருத்தம்; வேதனை; வளைவு; அரசிறை.

தானே - தானே

தனக்கு - தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

முழுப்பொருள்
அறத்தையும் நெறிகளையும் கூறும் அரிய நூல்களான வேதங்கள், உபநிடங்கள், திருக்குறள், நாலடியார், பகவத் கீதை, பைபிள், குரான் மற்றும் பலவற்றை அறிந்து உணர்ந்து உள்ளத்தில் வைத்து அவற்றை பின்பற்றாதவன்  (எத்தனை நூல் கற்றும் அல்லது நூல்கள் கற்காதவனும் அல்லது சான்றோரிடம் கற்றோ/கற்காதவன்) அறிவில்லாதவன் எனப்படுவான். அவ்வாறு நூல்கள் கூறுவதை பின்பற்றாதவன் தனக்கு தானே மிக பெரிய தீமையை செய்துகொள்கிறான். அது அவனுக்கு துன்பத்தையே தரும். 

உதாரணமாக ஒருவன் அவன் செய்யும் தொழிலில் நன்கு பொருள் ஈட்டலாம். ஆனால் அவன் குடும்பத்தில் தன் பிள்ளைகளை சான்றோனாக வளர்க்கவில்லையென்றால் என்ன பொருள் ஈட்டி என்ன பயன்? அதுவே ஒருவன் நூல்களை கற்று இருந்து அதன் படி நடந்தால் அவன் கடமைகளை (உதாரணமாக சான்றோன் ஆக்குதல் தந்தை கடனே) முழுமையாக ஆற்ற முடியும். குற்றங்கள் நடக்காது. துன்பங்கள் குறையும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கண்போல்வார்.....
சொல்லார்க் கருமறை சோராமை” (ஏலாதி 15)

பரிமேலழகர் உரை
அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும். ('சோரும'¢ என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம் - பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.).

மணக்குடவர் உரை
அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.

மு.வரதராசனார் உரை
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who doesn't follow all the dharma/duties, values/principles (which improves a person and yields great things in life) that are said by great books/scriptures (such as vedas, upanishads, thirukkural, bhagavat gita, bible, quran etc) is a stupid person. By not following these dharma and values one only does damage to himself which would only give pain and difficulties in life. 

Questions that I ask to the kid
Who is does do damage to himself? How?

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குறள் 846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை

மறைத்து - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்; ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

மறைத்தலோ -

புல்லறிவு - அறியாமை

தம் - தன்னுடைய - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

வயின் - இடம்; பக்கம்; வீடு; வயிறு; பக்குவம்; முறை; எல்லை; ஏழனுருபு; ஓர்அசைச்சொல்.

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

மறையா - மறையாத

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

முழுப்பொருள்
ஒருவர் செய்த குற்றத்தால் ஒரு அழிவு / துன்பம் உண்டாகிவிட்டது. அவ்வழிவையும் (அல்லது அதனால் வருகின்ற துன்பத்தையும்) வெளியுலகிற்கு மறைத்துவிட்டால் தான் செய்த குற்றம் மறைந்துவிடும் என்று நினைப்பது அறியாமையாகும்.

ஆதலால் ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நீக்க முயற்சி செய்யவேண்டுமே தவிர குற்றத்தால் விளைந்த அழிவைக்க மறைக்க  முயற்சிசெய்ய கூடாது. ஏனெனில் அவ்வழிவு ஒரு சுவடை  (தன் நெஞ்சிலேயே) உருவாக்கியிருக்கும். அதனை அழிக்க முடியாது. மேலும் "தன்நெஞ்சே தன்னைச் சுடும் (குறள் 293)" என்பதை நினைவில் கொள்க.

அற்றம் மறைத்தல் என்றால் ஆடையால் மறைத்தல் என்ற பொருள் கூறப்படுகிறது. "முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு" என்ற பழமொழியுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் அவ்வர்த்தமும் பொருந்துகிறது. அதாவது குற்றம் புரிந்த பிறகு குற்றத்தை நீக்காமல் ஆடையால் மறைப்பது அறிவின்மை.

இவ்விரண்டு பொருள்களில் எதுவாயின் அடிப்படை ஒன்றே குற்றம் புரிந்தால் குற்றத்தை தான் ஒருவர் நீக்க வேண்டும்.

1) உதாரணமாக ஒருவர் ஒரு பூந்தொட்டியை அலட்சியமாய் கீழே போட்டு உடைத்துவிடுகிறார். அவர் இங்கே முதலாவதாக செய்யவேண்டியது அதற்கு மனதார வருந்துவது. இனிமேல் கவனமாய் இருக்க சங்கல்பம் எடுப்பது. இரண்டாவதாக பரிகாரமாக வேறொரு பூந்தொட்டியில் வைக்கலாம். அதற்கு மாறாக ஆணவத்தில் ஒரு பூந்தொட்டியை வாங்கி வைப்பதனால் தான் செய்த குற்றம் நீங்கிவிடும் என்றில்லை. ஏனெனில் அதனை பார்த்தவர் மனதில் குற்றம் செய்தவரின் அலட்சியம் என்றும் இருக்கும்.

2) உதாரணமாக ஒருவர் ஒரு தெருவில் ஒரு கோழி குஞ்சை மிதித்து அதனை கொலைசெய்துவிடுகிறார். இறந்த கோழியை யாருக்கும் தெரியாமல் மறைப்பதனாலோ அல்லது எரித்துவிடுவதாலோ தான் செய்த குற்றம் மறைந்துவிடும் என்றில்லை. ஏனெனில் அக்கோழி குஞ்சை வளர்பவர்க்கு தெரியும் ஒரு கோழி குஞ்சு குறைவாக இருக்கிறது என்று.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

பரிமேலழகர் உரை
தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.

மு.வரதராசனார் உரை
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

குறள் 843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலார் - இல்லாதவர்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

தம்மைப் - tmmai   s. Mother, தாய். See தம்; ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

பீழிக்கும் - பீழித்தல் - pīẕittl   v. noun. Afflicting, distress ing, paining, வருத்துதல்; [ex பீழை.] (குறள்.)

பீழை - துன்பம்

செறுதொழில் - தீச்செயல்.
செறுவார்க்கும் - தீச்செயலை செய்வார்க்கும்

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அரிது - அரியது, அருமை; பசுமை; குறைவு

முழுப்பொருள்
அறிவில்லாதவர்கள் பேதையர்கள் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் வருத்தம் அளிக்கும் துன்பத்தின் அளவு தெரியுமா? பேதையருக்கு பகைவர் இருப்பாராயின், பகைவர் பேதையருக்கு ஆற்றக்கூடிய துன்பத்தை விட பேதையர் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் துன்பம் அதிகமாவே இருக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”..................காமநோய் கல்வி நோக்கா
மதியிலி மறையச் செய்த தீமைபோல் வளர்ந்த தன்றே” (கம்ப.மாரிசன்.86)

பரிமேலழகர் உரை
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது. (பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம் பார்த்திருந்துசெய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும்எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் செய்தல்அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல்அறிவர் என்பது கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, பகைவர்க்கும் செய்தல் அரிது. இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று.

மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல்

குறள் 842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்

புல்லறிவாண்மை - அறிவின்மை

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலான் - இல்லாதவன்

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

உவந்து - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

பிறிது - வேறானது; மற்றது

யாதும் - Anything and everything; anything; எதுவும்.

இல்லை -உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பெறுவான் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

முழுப்பொருள்
அறிவில்லாதவன் கற்காதவன் மனம் மகிழ்ந்து விரும்பி மற்ற ஒருவனுக்கு அளிக்கும் பொருளோ அல்லது உதவியோ அல்லது உணவோ எதுவாக ஆயினும் அதற்கு காரணம் அவன் அல்லவே அல்ல. அதற்கு காரணம் பெறுகின்றவன் செய்த புண்ணியம் அல்லது தவம்.

இது அறிவில்லாதவர்களை ஏளனம் செய்வது போல தோன்றும் குறள். இதனை மற்றொரு மாதிரியும் பார்க்கலாம். அதாவது பிறருக்கு உதவி செய்யும் பொழுது அது தன்னால் என்று நினைத்தால் அது அறிவிலித்தனம். ஏனெனில் அது அவ்வுதவியை பெறுகின்றவரின் புண்ணியத்தினால் ஆன செயல். ஈதவர் வெறும் கருவி மட்டுமே. அத்தகைய பணிவு வேண்டும் அறிவுடையோருக்கு அப்படி இல்லையென்றால் அது அறிவின்மையே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை. (ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

அறிவின்மை இன்மையுள் இன்மை

குறள் 841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
புல்லறிவாண்மை - அறிவின்மை

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

இன்மையுள் - இல்லாமையில், வறுமையுள்

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

பிறிது - வேறானது, மற்றது

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

இன்மையா -இன்மையாக; வறுமையாக

வையாது - கருதாது

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
அறிவு என்ரென்பது அறியாமையில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு ஞான ஒளி ஆகும். அறிவது ஒவ்வொன்றும் அறியாமையே என்று சொல்லுவார்கள். உலகத்தில் உள்ள எல்லா ஞானத்தையும் ஒரு மனிதனால் கற்பது என்பது முடியாத செயல். ஆதலால் அறியவேண்டியவற்றை அறிந்துக்கொள்ளவேண்டும். ஆதலால் அறிவு என்பது அறியவேண்டியவை.

இத்தகைய அறிவு நேரடியாக நம்முடைய முளைக்குள் வந்து உட்காராது. அறீவினத்தை போக்கும் ஞானம் தனை நாம் தேடிச்செல்ல வேண்டும். அதற்கான முயற்சிதனை செய்ய வேண்டும். இல்லையேல் அது பேதைமை எனப்படும். அதற்கு தண்டனையும் உண்டு.

ஒருவருக்கு நல்ல ஆரோக்கியம், உணவு, தங்கும் இடம், உறவினர்கள், மக்கள், சுற்றுப்புறம், உடுத்த ஆடை, பொன், பொருள் என்ற யாவும் இல்லாமல் இருக்கலாம். அத்தகைய நிலையை வறுமை என்று சொல்லுவர். ஆனால் இவ்வறுமையெல்லாம் வறுமை என்று கருதப்பட மாட்டாது. உண்மையில் அறிவின்மை என்பது வறுமையானவற்றுள் எல்லாம் வறுமை ஆகும். ஆக அறிவு / ஞானம் என்றென்பதே நிலையான செல்வம் மற்றவை யெல்லாம் பொருளற்ற நிலையில்லா செல்வம் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.

எது அறிவு?


நீ செய்யவேண்டியவற்றை அறிந்து செய்தால் பொருள்கிட்டும். வறுமை அகலும் என்பதை நினைவில்கொள்க.

ஒப்புமை


நாலடியார் பாடல், அறிவின்மையை, 
“நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” (நாலடி 251) என்கிறது. 

பழமொழிப்பாடலும், 
அறிவினால் மாட்சியொன்றில்லா ஒருவன் 
பிறிதினால் மாண்ட தெவனாம்” (பழமொழி 271) என்னும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , ஏனைப் புல்லறிவாண்மை கூறுகின்றார் . அது புல்லிய அறிவினை ஆள்தல் தன்மை என விரியும் .அஃதாவது , தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர்கூறும் உறுதிச்சொல் கொள்ளாமை.]

இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை; பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார். (அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும் நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்: அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான்.

மு.வரதராசனார் உரை
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

English Meaning - As I taught a kid - Rajesh
Among all poverties having no knowledge is the poorest thing. Because No knowledge gives more sufferings that all other poverties. Hence, world will not consider other things as poverty. World considers no knowledge as the only poverty. If one has knowledge, one can earn anything. If one doesn't have knowledge, one cannot protect whatsoever wealth he has

Questions that I ask to the kid
What is considered as true poverty? why others are not considered as poverty?
Why no knowledge is real poverty? Consequence of no knowledge? Consequences of knowledge?

வெண்மை எனப்படுவ தியாதெனின்

குறள் 844
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
வெண்மை வெண்ணிறம்; தூய்மை; ஒளி; இளமை; மனக்கவடின்மை; அறிவின்மை; புல்லறிவுடைமை
எனப்படுவது - அறியப்படுவது
யாது?' - எது?
எனின் - என்றால்
‘ஒண்மை - விளக்கம்; இயற்கையழகு; நன்மை; மிகுதி; ஒழுங்கு; நல்லறிவு.
உடையம் - உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.
யாம் - தனக்கு
என்னும் - என்கிற
செருக்கு - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்.

முழுப்பொருள்
அறியாமை (அறிவின்மை, புல்லறிவு) என்பது என்னவென்றால் தனக்கு நல்லறிவு (மிகுதியாகவோ) இருப்பது என்று நினைத்துக்கொள்ளும் மன மயக்கம்  (அகந்தை, மாயை, தற்பெருமை). இவ்வகந்தை மற்றவர்களிடம் காண்பிக்க வேண்டும் என்று இல்லை. தன்னுள் அந்த மயக்கம் இருந்தாலே அது அறியாமை ஆகும். (சில நாட்களில் வெளியேயும் வெளிப்பட்டுவிடும் என்பது வேறு விஷயம்).

தன்னுணர்வு இருப்பதில் தவறில்லை. ஆனால் மயக்கம் கொள்ளுதல் அறிவின்மையாகும். 

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம். (வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.).

ஒப்புமை
“ஒண்மை உடையார்” (நாலடியார் 196)
“ஒண்மையும் நிறையும்” (பெருங் 1.34.151)
“ஒப்பின் மாநகர் ஒண்மை” (சீவக 535)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வெண்மை எனப்படுவது யாது எனின்-புல்லறிவுடைமை யென்று சொல்லப்படுவது,என்னது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னுஞ் செருக்கு--அது யாம் விளங்கிய அறிவுடையேம் என்று தாமே தம்மை உயர்வாக மதிக்கும் மடம் பட்ட ஆணவம்.

'வெண்மை' என்பது இங்கு விளையா மரம் போன்ற முதிரா அறிவு; பண்பாகுபெயர். ஒற்றுமைபற்றிக் காட்சிப் பொருளின் தன்மையாகச் சார்த்திக் கூறப்பட்டது. ஒண்மை ஒளியுடைமை;அதாவது விளங்கிய அல்லது தெளிந்த அறிவுடைமை. புறக்கண்ணிற்குப் பொருளை விளக்கும் ஒளிபோல் அகக் கண்ணிற்குப் பொருளை விளக்கும் அறிவு , புறவொளிக்கு இனமான அகவொளியாகக் கொள்ளப்பட்டது செருக்கு உண்மையொடு கூடியதும் கூடாததும் என இருவகைப்படும். ஒரு நல்லறிவாளன் தன்னை உயர்வாக மதிப்பது உண்மையொடு கூடியது ;ஒரு புல்லறிவாளன் அங்ஙனம் தன்னை மதிப்பது உண்மையொடு கூடாதது. இரண்டுங் குற்றமே. ஆயின் ,பின்னது இருமடிக் குற்றமாம்.

மேலையாரியர், சிறப்பாக அமெரிக்கர், யாம் அறிவியலைக் கண்டு வளர்த்தேமென்றும் , திங்களை யடைந்தேமென்றும், எல்லாத்துறையும் வல்லேமென்றும், தருக்கியும் செருக்கியும் வரலாற்று மொழிநூலைப் புறக்கணித்து, ஆரிய அடிப்படையில் வண்ணனை மொழி நூலை வளர்த்து வருவதும் வெண்மையின்பாற் பட்டதே.

மணக்குடவர் உரை
புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு.

மு.வரதராசனார் உரை
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

கல்லாத மேற்கொண் டொழுகல்

குறள் 845
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற 
வல்லதூஉம் ஐயம் தரும்.
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
கற்கை - படித்தல், பயிலுதல்
கல்லாத - (முழுமையாக) கற்காத வற்றை (கற்காத நூலினை பற்றி)

மேற்கொண்டு - மேலும்; இனிமேல்.
மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல் பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

மேற்கொண்டு - மேலோட்டமாக அதைப்பற்றி நன்கு தெரிவது போல்  பேசுவது

ஒழுகல் - அவருடைய நடத்தைய பற்றி
ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

கசடற - கசடு + அற

கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு.

அற - முழுவதும்; மிகவும் தெளிவாக செவ்வையாக.

அற - அறவே 

வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள

வல்லதூஉம் - வலிமையான (நூல்) வற்றின் மீதும்

ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

தரும் - தருதல்

முழுப்பொருள்
ஒருவர் ஒரு பொருளை பற்றி (குறிப்பாக நூல்,  நபர், இடம்) கல்லாமல் பேசினால் அதுவும் அதைப் பற்றி நன்கு தெரிந்தவர்ப் போல் பேசினால், அவருடைய பேச்சு மற்றவருக்கு ஐயம் தரும். அத்தகைய ஐயம் அவருடைய பேச்சு மேல் மட்டும் அல்லாமல், அவர் மேலும், அவர் பேசும் பொருள் (நூல், நபர், இடம்) மீதும் நம்பகமின்மையை உருவாக்கும்.

இங்கே வல்லதூஉம் என்று குறியமைக்கு காரணாம், அந்த நூல் மிக மிக நல்ல நூலாக இருந்தாலும் பேசுவரின் பொருளற்றப் பேச்சினால் அதன் மீது நம்பகமின்மை உருவாகும் என்பதை குறிக்க.

ஆதலால் ஒருவரின் பேச்சை வைத்து ஒரு நூல் (புத்தகம்) மோசம் என்று என்ன வேண்டாம்.

ஆகவே கல்லாத வற்றைப் பற்றி பேசாமல் இருப்பதே சிறந்தது.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
பொய்யா ஒழுக்கத்தின் மேன்மையையும் அதன் சிறப்பையும் அறிவுறுத்துவதும், வலியுறுத்துவதும் இக்கவியின் நோக்கம்.

ஒருவர் ஏதேனும் ஒரு துறையில், செயலில் திறமையில் நன்றாகக் கற்றுத் தேறாமல், அத்துறையில் தேர்ந்த நிபுணர் போலக் காட்டிக் கொண்டு, செயல் புரிந்தால், காலமும் சூழ்நிலையும் அவரது உண்மையறிவை உணர்த்தி விடும். இவர் பாசாங்குக்காரார், பொய்யர் என்ற கருத்து, அவர் மீது மக்களுக்கு உருவாகி விடும். மனிதன் மதிப்பே போய், அவர் மீது இழிவான கருத்தே நிலைத்து விடும். இதனால், அவர் வேறு ஒரு துறையில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தவரானாலும், அதைக் காட்ட சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அவர் ஒரு செயல் திறம் உடைய நிபுணர் என்ற கருத்து எடுபடாது. முன்னர் செய்த பாசாங்கு நடிப்பு இவர் எந்த செயலில் ஈடுபட்டாலும், சந்தேகத்தையே விளைவிக்கும். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் செய்யும் பாசாங்கு, இருப்பனவற்றை மதிப்பிழக்கச் செய்து விடும். ஒருவர் சத்தியம் தவறி நடந்து விட்டால், பொய் சொல்லி அது அனுபவத்தில் வெளியாகிவிட்டால், அவர் ஏதேனும் ஒன்று உண்மைதான் என்று உறுதி செய்வதற்கு நான் சத்தியமாகச் சொல்கிறேன் என்றால், அந்த சத்தியம் என்ற சொல்லுக்கு மதிப்பு ஏது ? உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும், அல்லது காட்டிக் கொள்ளும் பாசாங்கு இழிவைத் தரும் என்று அறிவுறுத்துகிறது இக்குறள்.

ஆத்திச்சூடி
கண்டொன்று சொல்லேல்.
சித்திரம் பேசேல்.
பிழைபடச் சொல்லேல்.
மிகைபடச் சொல்லேல்.
மொழிவது அற மொழி.
ஓரம் சொல்லேல்.
வல்லமை பேசேல்.

பரிமேலழகர் உரை
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன் கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும்.

விளக்கம் 
(வல்லது என ஏழாவது இறுதிக்கண் தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ!' என்பது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கல்லாத மேற்கொண்டு ஒழுகல்-புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையுங் கற்றதாகக் காட்டிக்கொண்டு ஒழுகுதல்;கசடு அற வல்லதும் ஐயம் தரும்-அவர் பிழையின்றிக் கற்றுத் தேர்ந்த நூலறிவு பற்றியும் பிறர்க்கு ஐயுறவை யுண்டு பண்ணும்.

'கசடு' ஐயந்திரிபு குறைவுகள். குறைவாவது , பாம்பைப் பாம்பென்றறிந்தும் உயிருள்ளதா செத்ததா என்றும் , நச்சுப்பாம்பா நற்பாம்பா என்றும், பிறவாறு நிறைவுற அறியாமை. 'ஐயம்' இவர் தேர்ச்சி பெற்றதாகச் சொல்லப்பெறும் துறையறிவும் இத்தகையதுதானோ எனக் கருதுதல். 'வல்லதூஉம்' இன்னிசையளபெடை. உம்மை இறந்தது தழுவிய எச்சம்.

மணக்குடவர் உரை
தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற்கொண்டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும். இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது. 

மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.