Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_088. Show all posts
Showing posts with label Athikaaram_088. Show all posts

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

 

குறள் 880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
உயிர்த்தல் - உயிர்பெற்றெழுதல்; தொழிற்படுதல் மூச்செறிதல் மூச்சுவிடல்; ஈனுதல் மோத்தல் கூறுதல் வெளிப்படுத்துதல் இறந்துபடுதல் சொரிதல் இளைப்பாறல்.

உயிர்ப்ப - மூச்செறிதல்

உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்

அல்லர் - அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)

மன்ற - maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக

செயிர் - குற்றம்; கோபம்; போர்; வருத்துகை; நோய்
செயிர்ப்பு - குற்றம்; சினம்.
செயிர்த்தல் - வெகுளுதல்; வருத்துதல்; குற்றஞ்செய்தல்.
செயிர்ப்பவர் - பகைவர்

செம்மல் - தலைமை; வலிமை; தருக்கு; பெருமையிற்சிறந்தோன்; இறைவன்; சிவன்; அருகன்; புதல்வன்; சாதிபத்திரி; முல்லைப்பூவகை; பழம்வகை; வாடாப்பூ; நீர்.

சிதைதல் - தன்மைகெடுதல்; சிதறுதல்; அறுபடுதல்; கோபித்தல்; சொல்சிதைந்துவழங்குதல்; பொய்யாதல்; குலைதல்; வரம்பழிதல்; இசைமுதலியனகெடுதல்

சிதைக்கலாதார் - அழிக்காதவர்

முழுப்பொருள்
அகங்காரம்: இவ்வுலகில் பல பகைகளுக்கு போர்களுக்கு அகங்காரமே காரணம். காமகுரோதமோகங்கள் அல்ல, அவற்றுடன் இணையும் அகங்காரமே பல பெரிய அறவீழ்ச்சியின் காரணம் ஆகும். மகாபாரதம் ஆனாலும் சரி இராமாயணம் ஆனாலும் சரி இதுவே காரணம். 

பகைவரின் அகங்காரம் அவரின் வலிமையில் இருந்து பிறப்பது. அதேப்போல் பகைவரின் அகங்காரம் நமது வலிமையின்மையாலும் பிறப்பது. ஆதலால் பகைவரின் அகங்காரத்தை முளையிலேயேக் கிள்ளி எறிந்துவிடவேண்டும்.

பகைவரின் அகங்காரத்தை ஒருவர் ஒரு பொருட்டாக கருதி அதனை அழிக்கவில்லையென்றால் அந்த ஏளனத்திற்கு பரிசாக நமது அழிவே அமையும் ஏனெனில் மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்ப்டுவோம். ஆதலால் தமது பகைவரது செருக்கினை தெளிவாக அழிக்காதவர் உயிரோடு வாழ்வோருக்கு ஒப்பார் அல்லர். அவர் வாழ்க்கை முடிவுற்றதாகவே கருதப்படும். 

பகையென்பது எத்தகைய வலிமை கொண்டது என்பதைச் சொல்லி இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார். இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.

மு.வ உரை
பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை
நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்


குறள் 879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
இளைது - இளையது, முதிராதது

இளைதாக - பிஞ்சாக இருக்கையிலே

முள்-மரஞ்செடிகளில்கூர்மையுடையதாய்ச்சிறுகுச்சிபோற்காணப்படும்பகுதி; குத்தக்கூடியகூர்மையுடையபொருள்; தாற்றுக்கோல்; கடிவாளம்; இறகினடி; முள்வடிவாகச்செய்யப்பட்டகருவி; துலாக்கோலின்நடுவில்சமனிலையைக்காட்டும்ஊசி; கடிகாரத்தில்காலத்தைக்காட்டும்ஊசி; கூர்மை; நுண்மை; புறாவின்ஆண்குறி.

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

முள்மரம் - முள் மரத்தை

கொல்க - கொல்லுதல்- வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

களைதல் - பிடுங்கியெறிதல்; நீக்குதல்; ஆடையணிகழற்றல்; அழித்தல்; குழைதல்; அரிசிகழுவுதல்; கூட்டிமுடித்தல்

களையுநர் -  இல்லையெனில், அது களைபவரின்

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்

கொல்லும்கொல்லுதல்- வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

காழ்த்த - காழ்த்தல் - முற்றுதல்; மனவயிரங்கொள்ளுதல்; அளவுகடந்துமிகுதல்; உறைத்தல்

இடத்து - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்


கருவேலம் மரம்

கருவேலம் மரம் போன்ற முட்களை கொண்ட முள்மரங்களை அவை பிஞ்சாக இருக்கும் பொழுதே கொன்று விட வேண்டும். அம்மரங்களை வெட்டி எறிய வேண்டும். ஏனெனில் 1) அவை முதிர்ந்துவிட்டால் அவற்றில் ஏராளமான முற்கள் இருக்கும். ஏராளமான முற்கள் இருக்கும் பொழுது வெட்டி/களைந்து எறிய முற்பட்டால் நமது கையில் கீறி புண்கள் ஏற்படும் 2) வேர் ஆழ் ஊன்றி முதிர்ந்த மரத்தை முழுவதுமாக வெட்டி எறிவதற்கும் நிறைய உழைப்பும் நேரமும் கருவிகளும் தேவைப்படும் 3) அம்மரமும் பல விதைகளை தூவி இருக்கும் அவற்றை அழிப்பதற்கும் உழைப்பு தேவைப்படும். 4) அம்மரம் முதிர்ந்துக்கொண்டு இருக்கின்ற நேரங்களில் நிலத்தடி நீரை உறுஞ்சி அருகில் உள்ள பல தாவரங்களுக்கு தண்ணீர் இல்லாமல் செய்துவிடும். அதுவே பிஞ்சாக இருக்கும் பொழுது முட்கள் அவ்வளவாக வளர்ந்திருக்காது, குத்தினாலும் கையைப் பதம் பார்க்காது.

முள்மரங்களை போல பகையை ”முளையிலேயே கிள்ளியெறிந்து” நீக்கிவிடவேண்டும். வளர்ந்தபின் நீக்குவோம் என்று வாளாயிருப்பது, பின்னர் நீக்க முயற்சிக்கும்போது பெரிய துன்பத்தைத் தந்துவிடும்.

இது புறப்பகை என்று மட்டும் இல்லை. அகப்பகைக்கும் பொருந்தும். மனதில் பகை இருந்தால் அதனை முளையிலேயே நீக்கிவிட வேண்டும். இல்லையேல் அது வளர்ந்தப்பின்னர் அழிவை தரும். 

பழமொழிப்பாடலொன்று கீழ்வருமாறு கூறுகிறது.

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனி நயப்பச் செய்தவர்” (பழமொழி 390)

மற்றிக் காலத் தல்லது மேற்சென்று
வெற்றிக் காலத்து வீட்டுதல் அரிதென” (பெருங் 4.8:53-4)

சீவகசிந்தாமணி கூறுவது:

பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிதென எண்ணவேண்டா – 
அஞ்சி தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான்”. (சீவக.1894)

“எரியும் தீத்திரள் எட்டுணை யாயினும்
கரியச் சுட்டிடும் காந்திக் கனலுமேல்
தெரியில் தொல்பகை தான் சிறி தாயினும்
விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே” (சூளாமணி, சீயவரை 71)

“முட்கொள் நச்சு மரமுளை யாகவே
உட்க நீக்கின் உகரினும் நீக்கலாம்
வட்க நீண்டதன் பின்மழுத் தள்ளினும்
கட்கொடாமன்ன யார்களை கிற்பவே” (சூளாமணி.சீயவரை 72)

”அருப்பம் என்று பகையையும் ஆரழல்
நெருப்பை யும்இகழ்ந் தால்அது நீதியோ” (கம்ப.முதற்போர்.92)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். (களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முள்மரத்தை இளைதாகவே களைக: முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால். இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டுமென்றது.

மு.வ உரை
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்


குறள் 878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
வகை  - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).

தற் - தன் - தான் என்னும் சொல்வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும்திரிபு.

செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

தற்செய்-தல் - taṟ-cey-   v. intr. id. +.1. To occur in natural course; to prosper byprovidence; தானே இயலுதல் (J.) 2. To beadvantageous, profitable; பலித்தல் வியாபாரம்அவனுக்குத் தற்செய்யவில்லை. (J.) 3. To makeone's position strong; தன்னைப்பெருக்குதல். வகையறிந்து தற்செய்து தற்காப்ப (குறள், 878).  

தற்செய்கை - தன்னைச்செப்பமுடையவனாக்குகை; தனதுசெயல்.

தற் - தன் - தான் என்னும் சொல்வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும்திரிபு.

காப்ப - காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.

மாயும் - மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.
பகைவர்

கண்பட்ட  - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

செருக்கு -  cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
பகைவரின் திறன் அறிந்து இயல்பறிந்து, பகைவரின் பலங்கள் பலவீனங்கள் அறிந்து, தன்னையும் தன் படைகளையும் வலிமை படுத்திக்கொண்டு, அறிந்தவற்றிற்கு ஏற்றார்ப்போல் தன் வீயுகங்களை தீட்டிக்கொண்டு, தன்னையும் தன் நாட்டுமக்களையும் பாதுக்காத்துகொள்ளக் கூடிய ஒரு அரசனை (நாட்டை) (அல்லது அரசனின் மேன்மையை நாட்டின் மேன்மையை) நினைத்தால் பகைவரின் ஆணவமும் அழிந்துவிடும். அதனால் வலிமை பொருந்தி இருந்தாலும் பகைவர் போர் தொடுக்க அஞ்சவும் (அல்லது மறுபடியும் தீர எண்ணுவார்).

கி.வா.ஜவின் ஆராய்ச்சி உரை சில பழம் பாடல்களை, புறநானூறு, பழமொழி நானூறு மற்றும் கம்பராமாயணம் இவற்றிலிருந்து முற்றுக் கருத்தையும் ஒத்ததாக எடுத்துக்காட்டுகிறது. அவற்றுள் கீழ்வரும் பழமொழிப்பாடலின் இறுதி இரண்டு வரிகளும் மிகவும் அழகான்வை, பொருத்தமானவை.

நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.

நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல், தீராப்பகை, ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் தானே அழிந்து விடும், இதிலேயே வகையறிந்து, தற்செய்து, தற்காத்து என்பவையெல்லாம் அடங்கிவிடுகின்றன.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” (புறநா.35:32, 4)

“உற்றதற் கெல்லாம் உரஞ்செய்தல் வேண்டுமா
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்” (பழமொழி 83)

“நேற்ஓ டுங்கலில் பகையினை நீதியால் வெல்லும்
சோர்வி டம்பெறா வுணர்வினன் சூழ்ச்சியே போல” (கம்ப.வரைக்காட்சி.2)


பரிமேலழகர் உரை
வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும். (வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்கப் பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும். இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.

மு.வ உரை
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்.

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

குறள் 876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தேறினும் - தேறுதல் - தெளிதல்; நீர்தெளிதல்; துணிதல்; ஆறுதல்; பலித்தல்; மனத்திண்மையுறுதல்; முதிர்தல்; செழித்தல்; தேர்ச்சியடைதல்; தங்கல்; கூடுதல்; சோறுமுதலியனவிறைத்தல்; நம்புதல்; மயக்கம்தெளிதல்

தேறாவிடினும் - தெளியாது இருந்தாலும்; துணியாது இருந்தாலும் ; தேர்ச்சியடையாது இருந்தாலும் 

அழிவு - கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக

அழிவின் - அழிவில் இருந்து

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தேறான் - தேற மாட்டான் ; தெளிய மாட்டான் ; துணிய மாட்டான் 

பகுதல்- பிளவுபடுதல்; பாகமாய்ப்பிரித்தல்.

பகாஅன் - விலக மாட்டான் 

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்.

முழுப்பொருள்
ஒருவன் அவன் மற்றவரிடம் கொண்ட பகையை பற்றி முழுவதமாக அறிந்திருந்தாலும் அல்லது அறியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தனக்கு நெருக்கடியோ அல்லது அழிவோ வரும் காலகட்டங்களில் தனக்கு ஒரு லாபம் வரும் அல்லது உதவி வேண்டும் என்று இருந்தாலும் கூட அப்பகையிடம் உறவை புதுப்பிக்க நட்பு பாராட்ட துணியக்கூடாது. அதேப்போல் அப்பகையிடம் மேலும் விலகாது இருந்தால் வேண்டும். அப்பகையை அப்படியே விட்டுவிட வேண்டும். 

ஏனெனில் அழிவில்  இருந்து அந்நேரத்தில் தப்பித்துவிடலாம் ஆனால் அப்பகையிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் ஒரு சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்த அந்த பகை மெல்ல கொல்லும் தன்மை வாய்ந்தது. அதற்கு பகை உடன் கூடாமல் இப்பொழுதே அழிந்துவிடுவது மேல். 

அப்பகையிடம் மேலும் விலக்கம் கொண்டால் பகை நம்மிடம் சினந்து நாம் வலுவற்று இருக்கும் இந்நிலையில் நம்மை தாக்கி நம் அழிவை விரைவு படுத்தும். அதாவது "எரிகிற விளக்கில் எண்ணெய் விட்ட மாதிரி" ஆகிவிடும்.  

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தௌ¤ந்தானாயினும் தௌ¤ந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் 'தௌ¤ந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தௌ¤ந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.

மு.வ உரை
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

English Meaning - As I taught a kid - Rajesh
Whether 1) you know completely or partially about your enemy or 2) you dont know anything about your enemy, even at the time of death or grave danger do not ask for help from your enemy. Because you can even escape from the danger/death by some means but you can never know when your enemy will back stab you, betray you, attack you and destroy you.

Questions that I ask to the kid
Why should you not ask for help from your enemy even at the time of death?

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

குறள் 875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

இன்று - iṉṟu   . Third person sing. neut. of இல், it is not, இல்லை. 2. An expletive, ஓரசைச்சொல். இன்றேல். If not, if wanting.  

இன்றால் - இல்லை

பகை  - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை

இரண்டால் - இரண்டு இருந்தால்

தான்  - தானே - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

ஒருவன் - ஒருத்தன், ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்

இன் - இனிமை ; இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

துணையாக் துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

கொள்க - கொள்ள வேண்டும்

அவற்றின் - அவற்றினுள்

ஒன்று - ஒன்று

முழுப்பொருள்
தனக்கு துணையாக யாரும் இல்லை மேலும் இருவர் பகைவராக இருக்கின்றனர். தானும் தனித்து ஒருவனாக இருக்கிறோம். [அதாவது அப்பகைவர்க்கு வேறு பகைவர் இல்லை ஆதனால் பகைவருக்கு பகைவர் என்று நட்பு என்று கூட்டுசேரவும் முடியாது]. அப்படியெனில் இரு பகைவர்களுள் தனக்கு நெருங்கி பொருந்தக்கூடிய ஒருவரை இனிய துணையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் துணையில்லாமல் இருவருடன் போர்புரிந்து வெற்றிபெறுவது மிக கடினம்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.

மு.வ உரை
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

குறள் 874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
பகை -  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

நட்பாக் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

கொண்டு - கொள் - koḷ   கொள்ளு, I v. t. take, receive in the hand, வாங்கிக்கொள்; 2. contain, hold, பிடி; 3. have, bear, வைத்திரு; 4. buy, வாங்கு; 5. take food, medicine etc. உட்கொள்; 6. marry, take a wife, பெண் கொள்; 7. get, obtain, பெறு; 8. resemble, ஒத்திரு; v. i. suit or befit, பொருந்து; 2. strike, hurt:-Note-As an auxiliary it either has a reflexive sense or denotes continuation. In the latter sense often கொண்டிரு & கொண்டுவா is used (see examples below).

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

உடையாளன் - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

தங்கிற்று - தங்குதல் -  வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
பகை என்பது எல்லோரையும் கொல்லும். ஆக்கப்பூர்வமான செயல்களை அழிக்கும். ஆனால் நட்பென்பது வளர்ச்சியை கொடுக்கும். பகையென்பது பல சமயங்களில் சமீபத்தில் தோன்றியப் பகையாக அல்லாமல் நெடுங்காலமாய் தொடரும் பகையாக இருக்கும்.

பகையை முடிக்க மனதால் எண்ணிப் பகைவரிடம் சென்று அவர் மனதில் இடம் பிடித்து அவர் நம்பிக்கையை பெற்று நட்பு வளர்த்து இருவருக்கிடையே உள்ள உறவை ஆற்று நீர்போல பெருகியோடச்செய்யும் ஆற்றலும் பண்பும் படைத்தோரின் தன்மையான /இயல்பான பொறுமையில் இவ்வுலகம் நிலைபெற்று அடங்கியிருக்கிறது. பகைவரிடம் நட்புப்பாராட்ட வேண்டும் என்றால் ஒருவருக்கு எவ்வளவு பொறுமை தேவை. அந்த பொறுமை வெற்றிபெறுவதாலே இவ்வுலகம் நிலைத்து நிற்கிறது.

மூதுரையில்,  இவ்வுலகமானது, “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்வது போல”, நிலை பெறுகிறது என்கிறார் ஒளவையார்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.).

மணக்குடவர் உரை
பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும். இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.

மு.வ உரை
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

குறள் 873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
ஏமுறு-தல் - ēmuṟu-   6 v. intr. ஏமம்¹ + உறு-.1. To be delighted; மகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ 147). 2. To bechanged in nature or disposition; தன்மை திரிதல் ஏமுற விரண்டு முளவென மொழிப (தொல். பொ 109). 3. To be vexed; வருத்தமுறுதல். ஏமுறு கிளவி(தொல். பொ 146). 4. To be mad, insane; பித்துறுதல். ஏமுற்றவரினு மேழை (குறள், 873). 5. Tobe perplexed, bewildered; மயக்கமுறுதல். ஏமுறுஞாலந் தன்னிற் றோன்றி (திருமுரு. 163). 6.To be protected, saved; காப்படைதல். எஞ்சியபொருள்களை யேமுற நாடி (திருமுரு. 97). 7. Tobe suited, be appropriate; பொருத்தமுறுதல். காமமும் பொருளு மேமுறத் தழுவி (இலக். வி 704).

ஏமுற்றவரினும் - மதி மயங்கி பித்துற்றுற்றிந்தாலும்

ஏழை  - அறியாமை; அறிவிலான்(ள்); வறியவன்; பேதை; பெண்

தமியன் - திக்கற்றவன்; தனித்தவன்.

தமியனாய்ப் - திக்கற்றவனாய் ; தனித்தவனாய்

பல்லார் - பலர்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

கொள்பவன் - உடையவன் ; உருவாக்குபவர்

முழுப்பொருள்
பகை கொள்பவர் எப்படி பட்டவர் என்று இக்குறளில் கூறுகிறார் திருவள்ளுவர். ஒருவருக்கு பித்துப்பிடித்து இருந்தால் அவரை அறிவில்லாதவர்கள் என்று சொல்வோம். ஆனால் அப்படிபட்ட பித்துபிடித்தவரைவிட அதாவது புத்திஸ்வாதீனம் இல்லாத அறிவில்லாதவரை விட அறிவில்லாத அறிவிலி யார் என்றால் அது தனித்திருந்தும் தனியாய் விடப்பட்டிருந்தும் துணையில்லாமல் இருந்தும் பலரிடம் பகை கொள்வோர் ஆவர்.

அப்படி என்றால் சற்று கூட்டத்துடன் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பகை கொள்ளலாமா? இல்லை. மற்றவரிடம் பகை கொள்ள கொள்ள நாம் தனித்துவிடபட்டுக்கொண்டு இருக்கிறோம். அவ்வாறு இருப்பின் அது அறிவிலித்தனம். உதாரணமாக ஒரு நாடு மற்ற சில நாடுகள் தனக்கு உறவாக இருப்பதனால் தனது அண்டை நாட்டுடன் நியாயமற்று சண்டையிட்டுக்கொண்டு இருந்தால் உலகளவில் பிறநாடுகளின் ஆதரவை பெறமுடியாமல் தனித்துவிடப்படுவார்கள். ஒரு சில நாடுகளை நம்பி உலகநட்பை இழப்பார்கள். அரசரை நம்பி புருஷனை விட்ட கதையாகிவிடும். ஆதலால் பகை என்பது தீதே. பகை கொள்பவர் பித்துபிடித்த அறிவில்லாதவரைவிட அறிவில்லாதவர்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன். (தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பித்து உற்றவரினும் அறிவிலன், தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன். இது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.

மு.வ உரை
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

பகைஎன்னும் பண்பி லதனை

குறள் 871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
பகை  - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை

என்னும்  - என்கிற/ என்று சொல்லப்படும்; , யாவும், எல்லாம்; யாதும்; சிறிதும்.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இலதனை - அல்லாத வற்றை

ஒருவன் -  ஒருத்தன், ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்

நகை - நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்லறு; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.

நகையேயும் - வேடிக்கைக்காக கூட

வேண்டற்பாற்று  - வேண்டுதல் - விரும்புதல், விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
தீங்கு, எதிர்ப்பு, காமகுரோதம், உட்பகை என்கின்ற பகை என்னும் தீய பண்பு, தீய குணம், தீய மனத்தன்மை ஆகியவற்றை ஒருவன் எக்காரணம் கொண்டும் சிறிது நேரத்திற்காக கூட விளையாட்டாக வேடிக்கைக்காக கூட (சிறவர் போன்று) செய்யக்கூடாது.  

பிறரை வெறுப்பதும், அழிக்கத்தூண்டுவதுமான, பகையென்பது பண்பிற்கொவ்வாதது; அதனால் வெறும் விளையாட்டுக்குக்கூட ஒருவர் அதை விரும்பக்கூடாது என்கிறது இக்குறள். 

பகை கொள்ளுதல் என்றுமே தீமையே பயப்பதால், அது பண்பற்றதாகிறது. அதை விளையாட்டுக்காகவே கொண்டாது, அது வினையாகி விடக்கூடுமாதலால், அதை வேடிக்கைக்காகக் கூட கொள்ளக்கூடாது என்று சொல்வதன் மூலம், பகையென்பதன் தீத்திறத்தை தெளிவாகக் காட்டும் குறள்.

"விளையாட்டு வினையாகக் கூடும்" என்று ஒரு பழமொழி உண்டு. அதனை அறிக. அதுமட்டுமின்றி பிறருடைய மனநிலை எவ்வாறு உள்ளது என்பதனை நாம் அறிவது அவ்வளவு எளிதல்ல. அது பிறருக்கு அந்த மனநிலையில் துன்பம் தரலாம்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, மாணாதபகையை ஆக்குதற் குற்றமும், முன் ஆகிநின்ற பகையுள் நட்பாக்கற்பாலதும், நொதுமலாக்கற் பாலதும், அவற்றின்கண் செய்வனவும், ஏனைக்களைதற் பால தன்கண் செய்வனவும், களையும் பருவமும், களையாக்காற் படும் இழுக்கும் என்று இத்திறங்களை ஆராய்தல். 'இரட்டுற மொழிதல்' என்பதனாற் பகையது திறமும், பகையிடத்து ஆக்கும் திறமும் என விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மாணாப் பகைய ஆகலின், இது பகை மாட்சியின் பின் வைக்கப்பட்டது.]

பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.).

மணக்குடவர் உரை
பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று. இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.

மு.வ உரை
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

சாலமன் பாப்பையா உரை
பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.

நோவற்க நொந்தது அறியார்க்கு

குறள் 877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நோவு - நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம்.
நோவற்க - இரக்கம் கொள்ளாதே

நொந்துதல் - அழிதல்; தூண்டுதல்

நொந்துபோ-தல் - நிலைகெடுதல்
நொந்தது - துன்பட்ட காலங்களை

அறிவு- ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
அறியார்க்கு - அறிவு இல்லாதவர்

மேவு - விருப்பம்; மேம்பாடு

மேவுதல் - அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்; பொருந்துதல்.
மேவற்க - 

மென்மை - நுண்மை; மென்மைத்தன்மை; தாழ்வு; வலியின்மை; அமைதி; காண்க:மெல்லெழுத்து.

பகைவரகத்து- பகைவர் + அகத்து (உள்ளம்) - பகைவரின் உள்ளம் உணரும் படி

முழுப்பொருள்
நம் நண்பன் எனப்படுபவன் நம்மை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பார். நமது துன்பங்களை பொதுவாக தெரிந்து இருப்பார். தெரிந்துக்கொள்ளாமல் இருந்தால் அது அவரது பிழை என்று சொல்ல முடியாது. சூழ்நிலைகளால் அப்படி இருக்கலாம். ஆதலால் நண்பருக்கு தெரியாத நமக்கு நேர்ந்த துன்பத்தை சொல்ல கூடாது. (நண்பருக்கு சொல்வது தன்னிரக்கம் ஆகாது எனினும் - தன்னிரக்கம்  கூடாது). ஏனெனில் அது முடிந்து போன ஒன்றாகும். மேன்மக்கள் தங்களது துன்பங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள் - பட்சாபதாம் தேட மாட்டார்கள்.

அதே போல நமது வலியின்மை, நமது மென்மையான அமைதி குணத்தை, நமது பலவீனங்களை பகைவர் மனம் அறிந்துக்கொள்ளும் அளவுக்கு காண்பித்துக்கொள்ள கூடாது. 

மேலும், இது சற்று சிக்கலான விஷயமும் கூட. நமது நண்பர்கள் கூட நமக்கு உட்பகை காரணமாகவோ அல்லது சினத்தாலோக் கூட பகைவராக மாறக்கூடும். சில சமயம் வஞ்சனையாலும் நண்பர் துரோகியாகவும் வாய்ப்புகள் உண்டு (அதற்கு வரலாற்றில் பல சாட்சியங்கள் குவிந்துள்ளன). ஆதலால் பொதுவாக நமது பலவீனங்களை பிறரிடம் காண்பிக்காது இருத்தல் நல்லது. 

பெரிய பலவீனம் அல்லது தோல்வி எனில் அதனை உங்கள் நண்பரே அறியநேரிடும் (அவர் அறிந்துக்கொள்ளவேண்டும்). நல்ல நண்பர் எனில் அவரே உங்களை திருத்துவார். ஆதலால் வலிய சென்று யாரிடமும் வாக்குமூலம் கொடுத்து ஒரு பயனுமில்லை. உண்மையான நண்பர் என்றால் நீங்கள் கூறாவிட்டாலும் உங்களை ஏற்றுக்கொள்வார். அதனை ”விழைதகையான் வேண்டி இருப்பர்” என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். உங்கள் பலவீனங்களை, தோல்விகளை, சங்கடங்களை கடந்து வர பல வழிகள் உள்ளன. குருமார்கள், பெரியோர்கள் என பலர் இவ்வுலகில் உள்ளனர். உன் பலவினங்களை பகைவரிடம் கூறாதே

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்¢ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க. ('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நொந்தது அறியார்க்கு நோவற்க - தான் துன்புற்றதை அறியாத நண்பர்க்குத் தன் துன்பத்தைச் சொல்லற்க; பகைவரகத்து மென்மை மேவற்க - வலியின்மைபார்த்திருக்கும் தன் பகைவரிடம் தன் வலிமையின்மையை மேலிட்டுக்கொள்ளற்க.

நோதல்வினை இங்கு நோதலைச் சொல்லுதலைக் குறித்தது சொல்லும் போதும் உள்ளத்தில் நோதல் தோன்றுதலின் அரசியல் வாழ்க்கையில் நட்புப் பெரும்பாலும் நிலையில்லாததும் உண்மை யற்றதுமாதலின் பகைவரிடம் வெளிப்படுத்தக் கூடாததைச் சொல்லும்போதே நண்பரிடம் சொல்லக்கூடாததையும் உடன் கூறினார்.

மணக்குடவர் உரை
தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக. இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.

மு.வரதராசனார் உரை
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

English Meaning - As I taught a kid - Rajesh
Do not tell (and earn sympathy) your friend who is not aware of your sufferings (because a good friend would automatically be aware of your sufferings even if you didn't tell him) and do not give/display slightest clues about your weakness to your enemeies because once your enemy (even your friend can turn to an enemy due to infighting) knows your weakness he will hit you there and destroy you in no time

Questions that I ask to the kid
Should we tell our sufferings to our friends/relatives? Why?
Why should we not display our sufferings/weakness to your friends and enemies?

வில்லேர் உழவர் பகைகொளினும்

குறள் 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க 
சொல்லேர் உழவர் பகை
[பொருட்பால், நட்பியல் , பகைத்திறந்தெரிதல்]

பொருள் 
வில் - அம்பெய்தற்குரியகருவி; வில்லின்நாண்; காண்க:விற்கிடை; வானவில்; மூலநாள்; ஒளி.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

உழவர் - உழவன் - உழுபவன்; மருதநிலத்தவன்; உழவுமாடு; வீரன்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறை ஏவலொருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர்அசை.

இனும் - இன்னும்

கொள்ளற்க - கொள்ளாதீர் 

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

உழவர் உழவன் - உழுபவன்; மருதநிலத்தவன்; உழவுமாடு; வீரன்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை

முழுப்பொருள்
உழவருக்கு முதன்மையான கருவி ஏர் .அதை போன்று வில்லை பயன்படுத்துபவர்கள் அதாவது வீரர்கள்/அரசர் போன்றவர்களிடத்து பகை கொண்டாலும் கொள்ளலாம் ,அனால் சொல்லை உழவர்களின் ஏர் போன்று பயன்படுத்துபவர்கள் அதாவது அறிஞர்கள்/ அமைச்சர்கள்/ புலவர்கள் போன்றவர்களிடத்து பகை கொள்ளல் கூடாது என உரைக்கிறார் வள்ளுவர் .

இக்குறளில் அரசர்/வீரர்களையும் ,புலவர்/அறிஞர்களையும் உழவரொடு ஒப்பிட்டு உழவருக்கும் வள்ளுவர்.

இவ்வாறு புலவரையும் வீரரையும் உழவராக வள்ளுவர் உருவகம் செய்ய சிறப்பை உணர்ந்து மகிழ்ந்த பரிமேலழகர் இக்குறளில் உள்ள அணியை "உருவக விசேடம்' என்றார். அதாவது "சிறப்பு உருவகம்' என்றார்.

நன்றி : தினமணி 

ஒப்புமை
”வில்லே ருழுவர் வெம்முனைச் சீறார்” (நற் 3:5)
“வில்லுழு துண்மார்” (புறநா. 170:4)
“வில்லேர் வாழ்க்கை” (புறநா 331:2)
“வில்லேர் உழவின்நின் நல்லிசை” (புறநா 371:13)
“வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்” (அகநா 35:6)
“வானம் வேண்டா வில்லேர் உழவர்” (அகநா 193:2)
“மாரி வளம்பெறா வில்லே ருழவர்” (சிலப்.11:210)
“வில்லேர் உழவர்” (பெருங் 1.52:26)

”வரிசிலை யுழவனும் மறையுழ வனை” (கம்ப.சரபங்கர்.38) 

பரிமேலழகர் உரை
வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. ('சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.).

மணக்குடவர் உரை
வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும் சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது.

மு.வ உரை
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.