Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_099. Show all posts
Showing posts with label Athikaaram_099. Show all posts

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

 

குறள் 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
சான்றவர் - அறிஞர்; சாணார், சான்றோர், அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்

குன்றின் - குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

இரு - பெரிய; கரிய; இரண்டு

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல்

தாங்காது - தாங்கிக்கொள்ளாது

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?
 
பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

முழுப்பொருள்
சான்றாண்மை பண்புகள் கொண்ட ஒருவரிடம் சான்றாண்மை குறைந்தால் இப்பெரிய உலகம் பொறுமை தாங்காது. பொதுவாக அகழ்வாரை தாங்குவது இந்நிலம். இவ்வுலகம் பொறையுடைமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது. ஆனால் சான்றவர்கள் சான்றாண்மையில் குன்றினால் இவ்வுலகம் பொறுக்காது என்கிறார் திருவள்ளுவர். அப்படியென்றால் இவ்வுலகமே சான்றவர்களின் சான்றாண்மை நம்பித்தான் இருக்கிறது என்றுப்பொருள். 

நல்லவர்கள் வாழவேண்டும். இல்லையேல் இவ்வுலகில் மக்களுக்கு தன்னம்பிக்கைக்கும் அறத்தின் மீது நம்பிக்கையும் இல்லாமல் போகிவிடும். உலகம் நரகமாய் தோன்றும்.

சில சொற்றொடர்கள் உலக நன்மைக்காகச் சொல்லப்படுவன. “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை அல்லவா?”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும். ('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான் அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பலகுணங்களானும் நிறைந்தவர் தம்தன்மை குன்றுவராயின் மற்றை யிருநிலந்தானுந் தன்பொறையைத் தாங்காதாய் முடியும்.

மு.வரதராசனார் உரை
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.

சாலமன் பாப்பையா உரை
சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

 

குறள் 989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
ஊழி - முடிவுகாலம்; யுகமுடிவு, கடல்பெருகிஉலகம்அழியும்காலம்; நெடுங்காலம்; பூமி; விதி; முறைமை; வாழ்நாள்

பெயரினும் - பெயர்தல் - போதல்; பிறழ்தல்; மீளுதல்; மாறுதல்; சிதைவுறுதல்; இணைப்புநெகிழ்தல்; கூத்தாடுதல்; சலித்தல்; அசையிடுதல்; இடம்விட்டுமாறுதல்; பிரிதல்; கிளர்தல்; தேய்தல்; நாணயம்வழங்குதல்; வசூலாதல்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

பெயர்தல் - போதல்; பிறழ்தல்; மீளுதல்; மாறுதல்; சிதைவுறுதல்; இணைப்புநெகிழ்தல்; கூத்தாடுதல்; சலித்தல்; அசையிடுதல்; இடம்விட்டுமாறுதல்; பிரிதல்; கிளர்தல்; தேய்தல்; நாணயம்வழங்குதல்; வசூலாதல்.

பெயரார் - மாறமாட்டார்

சான்றாண்மைக்கு- கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்.

ஆழி - சக்கரப்படை; ஆணைச்சக்கரம்; கட்டளை வட்டம் மோதிரம் சக்கரம் குயவன்திகிரி; யானைக்கைந்நுனி; கடல் கடற்கரை காண்க:ஆளி; குன்றி கணவனைப்பிரிந்தமகளிர்இழைக்கும்கூடற்சுழி.

எனப்படுவார் - என்றறியப் படுவார்

முழுப்பொருள்
சான்றாண்மை கொண்ட ஒருவர் காலங்கள் மாறினாலும் தன்னுடைய நிலை மாறினாலும் தன்னிடம் உள்ள செல்வங்கள் அழிந்தாலும் ஊழின் வலிமையால் தன்நிலை மாறினாலும் தனது சால்பினை மாற்றிக்கொள்ளாமல் இருந்தார் என்றால் அவர் சான்றாண்மைக்கு கடல்போன்றவராவார். ஏன் அவரை சான்றாண்மைக்கு கடலாக திருவள்ளுவர் கூறுகிறார்? ஏனெனில் மழையானாலும் வறட்சியானாலும் வற்றாமல் நீர் மிகுந்து கடல் காணப்படுகிறது. அதைப்போல் காலங்கள் மாறினாலும் சால்பு மாறாமல் இருக்கிறார் அவர்.

இன்னும் சற்று யோசித்தால், மனதில் எவ்வளவு வருத்தங்களும் கோபங்களும் சந்தோஷங்களும் இருந்தாலும், கடலின் முன்னே ஒரு நாழிகை அமைதியாக அமர்ந்து கடலை நோக்கினால் நம் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது. வருத்தமாக இருப்பவரும் கோபமாக இருப்பவரும் கடலின் அமைதியால் அமைதியாகிறார். அதுவே மிக சந்தோஷமாக இருப்பவர் பெரு வெற்றி குவித்தவரும் கடலின் அகலத்தாலும் ஆழ்ந்த அமைதியாலும் அவர் தன்னடக்கம் பெற்று அமைதியாகிறார். அதுப்போல் சால்பு உள்ள ஒருவர் முன்னே சென்று நின்றால் சிறிது நேரம் பழகினால் மனஅமைதி கிடைக்கும். அதுவே நேர்மறைப்பண்புக்கான ஷக்தி. அதனால் தான் என்னவோ உண்மையான துறவிகளுக்கும் சில மடாதிபதிகளுக்கும் (காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சந்தரசேகராச்சாரியார்) மற்றும் மஹாத்மா காந்தி போன்றோருக்கும் பலர் சரணடைந்து இருந்தார்கள். 

ஒப்புமை

“உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும் 
குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்”  (நாலடி 141)

“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர் 
செய்வர் செயற்பாலவை”  (நாலடி 147)

“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு 
ஒல்கார் குடிப்பிறந் தார்”  (நாலடி 148)

“செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன” (நாலடி 149)

“எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றவர்” (நாலடி 150)

“கொடைக் கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது” (நாலடி 184)

“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 185)

”ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன” (நாலடி 358)

“பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகையார்”  (பழமொழி 96)

“ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர் 
நிற்பவே நின்ற நிலையின் மேல்”  (பழமொழி 119)

“மறம்தி றம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ” (கம்ப.மந்தரை.66)

ஔவையாரின் மூதுரைப் பாடலும் இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

“சான்றோர் கடன்நிலை குன்றலும் இலர்” என்று நற்றிணைப் (327:4-5 பாடல் வரியொன்று கூறுவதும், 

“தோல் வற்றிச் சாயினும் சாகன்றாண்மை குன்றாமை” என்று திரிகடுகப்  (27) பாடல் கூறுவதும் இத்தகையோரைப் பற்றிதான்.

“...... தம்மின்
உறழா மயங்கி உறழினும் என்றும்
பிறழா பெரியோர் வாய்ச் சொல்” (பு.வெ.167)

“பழங்குடி பண்பில் தலைபிரிதல் அன்று” என்று ஏற்கனவே குடிமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறியிருக்கிறார் அல்லவா?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.).

மணக்குடவர் உரை
சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார், ஏனைக் கடலுங் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம்திரியார்.

மு.வரதராசனார் உரை
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

 

குறள் 988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை

அன்று- அல்ல, அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

சால்பு - சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்.
சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை.

உண்டாகப் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

பெறின் -  பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
ஒருவற்கு சான்றாண்மை எனப்படும் கல்வி கேள்விகளில் நிறைந்த ஒழுக்கம், பெருந்தன்மை, பொறுமை, மேன்மை, நற்குணம், மன அமைதி ஆகியவற்றில் வலிமையும் உறுதியும் உண்மையும் நிலையாக பெற்றால அவர் செல்வத்தில் வறியவராக இருந்தாலும் அவருக்கு வறுமை ஒரு இழிவு அல்ல.

ஒருவர் சால்பினை உடைமை பெற்றால் அவருக்கு வறுமை என்பது ஒரு இழிவு அல்ல. வறுமை என்பது செல்வத்தில் அல்லாமல் சால்பில் இருந்தால் அதுவே இழிவு என்று கூறாமால் கூறுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.

மு.வரதராசனார் உரை
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

குறள் 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
இன்னா -  துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்தார்க்கும் - செய்தவர்
செய்தல் -   இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

இனியவே  - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

செய்யாக்கால் - செய்யாது இருத்தல் ; இயற்றாமல் இருத்தல்

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.

பயத்ததோ - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

முழுப்பொருள்
வாழ்வில் நமக்கு துன்பங்களை தந்தவர்களுக்கும் வலிகளை தந்தவர்களுக்கும் த்ரோகங்களை செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றே சராசரி மனது கூறும். ஆனால் திருவள்ளுவர் வான்மறை எழுதுகிறார் அல்லவா. துன்பத்தை தந்தவர்களுக்கும் இனியவற்றையும் நல்லவற்றையும் நன்மைகளையும் செய். அதுவே சான்றாண்மை, மேன்மை குணம் கொண்டோரின் பண்பாகும். மேன்மையான குணங்கள் கொண்டும் துன்பம் செய்தவர்க்கும் நன்மை செய்ய முடியவில்லையென்றால் தன்னுடைய குணத்தினால் என்ன பயன் ?

சால்பு என்ற சொல்லுக்கு கல்வி என்ற பொருளும் உண்டு. ஆதலால் கல்வியின் பயனே துன்பம் கொடுத்தவருக்கு உட்பட பிறருக்கு தீங்கு நினைக்காது நன்மை நினைப்பது ஆகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

குறிப்பு: துன்பம் செய்தவர்களுக்கு நன்மை செய் என்று தான் சொல்கிறார். அவர்களுடன் இயைந்து இரு என்றெல்லாம் திருவள்ளுவர் கூறவில்லை. இயைந்து இருக்க வேண்டும் என்றால் அவருடைய குணங்களிலும் நல்மாற்றங்கள் ஏற்பட்டு இருக்க வேண்டும். இருவரும் இயைந்து நடக்க கூடிய சூழலும் இருக்க வேண்டும். 

நெல்சன் மண்டேலா (Nelson  Mandela) அவர்கள் தென்னாபிரிக்க நாட்டின் தலைவராக பொறுப்பு ஏற்கும் பொழுது  அவ்விழாவிற்கு அவர் சிறையில் இருந்த பொழுது அவரை தரக்குறைவாக நடத்திய காவலர்களை அழைக்கிறார். உங்களை தரக்குறைவாக நடத்தியவர்களை ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நெல்சன் மண்டேலா கூறுகிறார் நான் அவர்களை மன்னிக்கவில்லை என்றால் நான் (பகை என்னும்) சிறையில் அகப்பட்டு கொள்கிறேன் என்று தான் அர்த்தம். அவர்களை மன்னித்து என் நண்பர்களாக ஏற்றால் தான் நான் அதை கடந்து மனதளவில் சுதந்திரம் பெற்று இருக்க முடியும் என்று கூறுகிறார். 

நாலடியார் பாடல் ஒன்று இவ்வாறு இக்கருத்தையே வலியுறுத்துகிறது.

உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம்செய்வ தல்லால், தவற்றினால் தீங்கூக்கல்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல். (நாலடி 69)

தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும் அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல் உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

அதாவது, தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.

இப்போது பாரதியின் அருமையான ஒரு பாடலை முழுமையாகப் பார்த்துவிடலாம்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே – நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் – நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? – நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? – நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? – நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? – நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? – நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ? (பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் – நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? – நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ? (பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் – நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.

மு.வரதராசனார் உரை
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.

Thirukkural - Management - Not Hurting Others
Valluvar goes a step ahead to advice us on the importance of proactive action in turn to a destructive action, Kural 987.

What good is that good which does not return 
Good for evil?

Even if someone hurts you, harms you, or damages you, you in turn do a good deed, a pleasant act, and a beneficial act to him. The intention of doing that is not to insult, humiliate, or make him feel ashamed of what he did but to show him that you are a person of humility.

Responding positively to an insulting act is to satisfy your own self and make the other person know that you are a humble and wise person.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

குறள் 986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சால்பிற்குக் - சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

கட்டளை - அளவு; செங்கலச்சு; உருவங்கள்வார்க்கும்கருவி; ஒன்றைப்போலஅமைக்கும்உரு; உவமை; துலாம்; நிறையறிகருவி; துலாராசி; விதி; முறை; தரம்; கோயில்தருமம்; உரைகல்; ஒழுங்கு; எல்லை; குதிரைக்குப்பூட்டும்கடிவாளம்முதலியன; ஆணை; கட்டுப்பாடு; சமயமூலதத்துவம்உணர்த்தும்நூல்

யாது - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

தோல்வி - வெற்றியின்மை

துலை - நிறைகோல்; காண்க:துலாதானம்; துலாராசி; கிணற்றிலிருந்துஇறைக்கும்நீர்தங்குமிடம்; ஏற்றமரம்; மடைமுகம்; நூறுபலம்கொண்டநிறை; ஒப்பு; வெகுதூரம்; தூரப்பிரதேசம்; தோட்டம்.

அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கொளல் - கொள்ள வேண்டும்  ; அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
ஒருவருடைய மேன்மையின் எல்லையை (அல்லது அளவை) எவ்வாறு அறிந்துகொள்ளலாம் என்றால் தனக்கு ஒப்பில்லாதவரிடம் (ஈடு இணையில்லாதவரிடம்) தோல்வியுற்றால் அந்த தோல்வியை  கண்ணியமாக ஏற்றுக்கொள்வதாகும்.

பொதுவாக தோல்வியை ஏற்றுக்கொள்வதென்பது மிக கடினம். தம்மில் பெரியயோரிடம் உயர்ந்தோரிடம் வலிமையானவரிடம் தோல்வி அடைந்தால் அதனை ஒரு படிப்பினையாக ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பும். ஆனால் தனக்கு ஒப்பிலாதவரிடம் தோற்றால் மனம் எளிதில் ஏற்றுக்கொள்ளாது.

மேன்மையானவர் வெற்றி தோல்வியை சமநிலையுடன் ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பும். இதனை விளையாட்டுகளில் பல நேரங்களில் காணலாம். கத்துக்குட்டி எனப்படும் மிக சிறிய புதிய அணியிடம் ஜாம்பவான்கள் எல்லாம் தோற்றுப்போய் இருக்கிறார்கள். அன்றையநாள் வெற்றிபெற்றவர் தோல்வியுற்றவரை விட நன்றாக ஆடினார். வெற்றிபெற்றவர் அது சிலவற்றை நன்றாக செய்தார். தோல்வியுற்றவர் எதோ ஒரு தவறை அறிந்தோ அறியாமலோ செய்தார். அவ்வளவே. அத்தோல்வி வாழ்வின் இறுதி அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவதே சான்றாண்மை உடையவர்கள் செய்வது.

இது விளையாட்டுக்கு மட்டும் அல்ல விளையாட்டு, இசை, போர், வாழ்வு என்று அனைத்திற்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். (துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல்.

மு.வரதராசனார் உரை
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
What is the yardstick for magnanimity/scholarliness? If one loses to a person or a thing who cannot be compared with him in terms of success, experience, wealth, knowledge etc, yet gracefully accepts the loss. In away a sportsmanship. 

Normally, accepting failure is difficult. But if one has the grace and humility to accept the failure, one can learn from the failure and move on. Also, one has to understand that it is humanly impossible to win every single time. It may not be his day or his session or his match. Perhaps the other person had a better plan and executed very well. Perhaps, the other person is more knowledgeable. On the contrary people with ego/arrogance, find it difficult to accept failures and end up stagnated or dwell. 

Questions that I ask to the kid
What is the yardstick for magnanimity/scholarliness? 
How accepting failures helps?
How to accept failures to a person less experience than you?
Why it is advised not to not accept losses/failure? 

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

குறள் 985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர்

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல்.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

சான்றோர் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்; அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன்

மாற்றாரை - மற்றவர்களை

மாற்றும் - மாற்றுதல் - வேறுபடுத்துதல்; செம்மைப்படுத்துதல்; நீக்குதல்; கெடுத்தல்; ஓடச்செய்தல்; தடுத்தல்; மறுத்துரைத்தல்; அழித்தல்; ஒடுக்குதல்; மறைத்தல்; நாணயம்மாற்றுதல்; பண்டமாற்றுதல்; இருப்பிடம்வேறுபடுத்துதல்; பெருக்கித்துப்புரவுசெய்தல்; இடைவிடுதல்; ஒழிதல்; தாமதித்தல்; ஓரிடத்துச்சமைத்தஉணவைவேறிடத்துக்குஅனுப்புதல்.

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை

படை - (வி)உண்டாக்கு; படைஎன்ஏவல்.

முழுப்பொருள்
ஒருசெயலை வெற்றிகரமாக செய்து முடிப்போர் ஆற்றுவார் ஆவர். ஒரு செயலை தனிமனிதனாக செய்து முடிக்க முடியாது. அதற்கு பலரின் பங்கேற்ப்பும் இன்றியமையாததாகும். ஆதலால் இங்கே செயலை செய்வோருக்கு பணிவு இன்றியமையாத குணம்.

பணிவு என்றால் எளிமையாக பழகுதல், ஒத்து வேலை செய்தல், அடக்கி ஆளாமல் நுட்பமாய் பழகி வேலை வாங்குதல் ஆகும். அதுமட்டும் இன்றி வெற்றிகளை எல்லோருக்கும் சமர்ப்பித்து தோல்விகளை பிறர்மீது சுமத்தாத பணிவு வேண்டும்.

இந்தப் பணிவே அரியச்செயல்களை செய்ய ஏதுவாக இருந்து சான்றாண்மையை தந்து சான்றோராக்கும். இந்த பணிவே பகைவரையும் மாற்றக்கூடிய கருவியாக சான்றோருக்கு உதவும்.

அண்ணல் காந்தியடிகளிடம் இந்த பணிவு இருந்ததால் தான் அவரால் பிரிட்டிஷாருடன் பணிவாக பழகி அவர்களின் மனதையும் மாற்றி சுதந்திரத்தை இந்திய நாட்டிற்கு பெற்றுத்தர முடிந்தது.


அதேப்போல ராஜராஜசோழனிடம் இந்த பணிவு இருந்ததால் தான் அவரால் இலங்கையிலும் எல்லோருடன் பணிவாக பழகி அவர்களுக்கு தேவையான பல புத்த மாடங்கள் அமைத்து எல்லோர் மனதையும் வெல்ல முடிந்தது.  ஸ்ரீவிஜய ராஜா ஸ்ரீ மரவிஜயதுங்கவர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜராஜசோழன் புத்த சூடாமணி விஹாரத்தை கட்டி தந்தார்.   

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை


பரிமேலழகர் உரை
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே. (ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன்கூறினார்.).

மணக்குடவர் உரை
பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்: சான்றோர்தம் பகைவரை ஒழிக்கும் கருவியும் அதுவே.

மு.வரதராசனார் உரை
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who successfully executes and does a work is a doer. A doer's important ability or characteristic is humility. If one has this humbleness, one can even create a dialogue with the opposition, talk to their conscience and get things done by creating a win-win situation. 

Because, it is literally impossible for one person to do all the work. A task needs support from a group of people. Hence, the humbleness that 1) I am only one of the person doing the work, 2) there are many people who make this work possible and successful, 3) success is because of my fellow colleagues 4) taking responsibility of failure and not blaming others is very essential. Only with this humbleness, one can do rare and great things. 

For e.g., Mahatma Gandhi had the humility consult with many leaders and spearhead the freedom movement for India. Gandhi was able to create a dialogue with British empire because he didn't pain British as enemies and he spoke to conscience of the people in Britain.

Questions that I ask to the kid
Why is humbleness is required for a leader? 
What is essential for a leader to convince the opposition?

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

குறள் 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.
கொல்லா - எந்தஒரு நோக்கத்திற்காகவும் அல்லது தன்னுடைய சுயநலனுக்காகவும் பிற உயிர்களை மனிதர்களை கொலை செய்யாது இருத்தல் 

நலத்தது - நலத்தல் , நலமாதல்; விரும்புதல்.

நோன்மை - பொறுமை; வலிமை; பெருந்தன்மை; தவம்.

பிறர் - அயலார்

தீமை - கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன.

சொல்லா - சொல்லாமல் 

நலத்தது - நலத்தல் , நலமாதல்; விரும்புதல்.,

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

முழுப்பொருள்
பிறரை கொல்லுவது (கொலை செய்வது) என்பது தீயச்செயல். அது எவ்விதத்திலும் பயனளிக்காது. ஆதலால் பிறரை கொல்லாது இருப்பதே நன்மை பயக்கும். பிறரை கொல்லாமல் உயிருடன் விடுவதற்கு பொறுமையும் பெருந்தன்மையும் வேண்டும். அதுவே வலிமை ஆகும். கொல்வது வலிமைக்கு அறிகுறி அல்ல. ஆதலால் வலிமை, பெருந்தன்மை, தவம்(நோன்மை) என்பது ஓருயிரையும் கொல்லாத அறவாழ்க்கையாகும்.  

அதுப்போல பிறர் செய்த தீமைகளை கொடுமைகளை குற்றங்களை பிறரிடம் சொல்லாது இருப்பது அவர்களிடமே சொல்லிக்காட்டாமல் இருப்பது நன்மை அளிக்கும். அதுவே சான்றோரின் பண்பாகும். 

புறங்குறாமை பற்றிப்பேசிய வள்ளுவர் இங்கே ஏன் அதை  போன்றே சொல்ல வேண்டும்? 1. இங்கு சான்றோரின் பண்பாக அதை நெறிப்படுத்துகிறார். 2. இங்கே தீமைகளை சொல்லாதே என்கிறார். பிறரிடம் என்றோ சம்மதப்பட்டவரிடம் நேரடியாகவோகூட சொல்லாதே. ஏனெனில் சிலர் மற்றவர்கள் செய்த குற்றத்தை குத்தி காண்பித்து அவர்களை துன்புறுத்துவார்கள். அது தவறு. பிறரிடம் சொல்வதும் தவறு. அது சான்றோர் பண்பு ஆகாது. அப்படி பிறரிடம் சொல்வதானால் அல்லது குத்தி காண்பிப்பதனால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் சினத்தையே சம்பாதிப்பார்கள். அவர்கள் மனம்திருந்த மாட்டார்கள். 

அப்படி என்றால் ஒரு அலுவகத்தில் குற்றங்களை சுட்டிகாட்டாமல் இருக்கலாமா?  பல பேர் சம்மந்தபட்ட ஒரு நிறுவனத்தில், ஒரு செயலில் குற்றங்களை ஆராய்ந்து சொல்வதும் மிக அவசியம். இல்லையெனில் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக அதிகம். அதனால் தனி நபர்மீது தாக்குதல் செய்யாமல் பிரச்சனைகளையும்  அதனை சரி செய்யாவிட்டால் வரக்கூடிய விளைவுகளையும் மட்டும் நயமாக எடுத்துக்கூறவும். 

கொன்றை வேந்தனில், “நோன்பென்பது கொன்று தின்னாமை” என்பார் ஔவையார்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.).

மணக்குடவர் உரை
தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும் கொல்லாத நலத்தையுடையது தவம். அதுபோலச் சாண்றாண்மைக்கு உறுப்பான நற்குணங்கள் பல உண்டாயினும் பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு.

மு.வரதராசனார் உரை
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா உரை
பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

கடன்என்ப நல்லவை எல்லாம்

குறள் 981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து 
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.
கடன் - kaṭaṉ   s. a debt, loan of money or goods, இருணம்; 2. duty, கடமை; 3. nature, natural attribute, இயல்பு; "கடனென்ப நல்லவையெல்லாம்" குறள்; 4. order, plan, system, முறைமை; 5. observances such as the daily ablutions and other devotional exercises enjoined by religion, வைதிகக்கிரியை; 6. honour, மானம்; 7. measure, definite quantity அளவை; 8. tribute, tax, கப்பம், வரி.

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.  

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.
கடன் - kaṭaṉ   s. a debt, loan of money or goods, இருணம்; 2. duty, கடமை; 3. nature, natural attribute, இயல்பு; "கடனென்ப நல்லவையெல்லாம்" குறள்; 4. order, plan, system, முறைமை; 5. observances such as the daily ablutions and other devotional exercises enjoined by religion, வைதிகக்கிரியை; 6. honour, மானம்; 7. measure, definite quantity அளவை; 8. tribute, tax, கப்பம், வரி.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்.

மேற்கொள்(ளு)-தல் - mēṟ-koḷ-   v. tr. id. +. 1. To mount, as a horse; மேலேறுதல்.பரிமேற்கொண்ட பாண்டியனார் (திருவாச. 36, 3). 2.To gain prominence; to overcome, surpass; torise above; மேம்படுதல். அவனை நான் மேற்கொண்டுவிட்டேன். (W.) 3. (Log.) To assert, as a proposition; பிரதிஞ்ஞைசெய்தல். பிரபஞ்சம் உற்பத்திதிதிநாச முடைத்தென மேற்கொண்டது (சி. போ.பா. 1, பக். 43). 4. To embrace, as a doctrine;to accept; ஏற்றுக்கொள்ளுதல். அந்தக் கொள்கையைஅவன் மேற்கொண்டவன். 5. To undertake,attempt; முயலுதல். அவமதனை யஃதிலார் மேற்கொள்வது (குறள், 262). 6. To assume the responsibility of; பொறுப்புவகித்தல். அரசியலை மேற்கொண்டான். 7. To make a vow; to asseverate;வஞ்சினமுரைத்தல்.

மேற்கொள்பவர்க்கு - மேம்படுபவர், முயலுபவர்

முழுப்பொருள்
எது முறைமை, மானம், இயல்பு, கடமை என்றால் எது எது நல்லவை என்று நற்செயல்கள் எல்லாவற்றைம் அறிந்துக்கொண்டு அதனைப்பற்றி தெளிந்துத்தெரிந்துக்கொண்டு அதனை தன்னுடைய கடமையாக ஆற்றிக்கொள்ளுதல். அத்தகைய பண்பு சான்றான்மை (பெருந்தன்மை) அடைய முயலுபவரிடம் இருக்கும் குணம் ஆகும்.

எது நற்செயல்கள்? உண்மை அறிய முற்படும் தேடலே என்று சொல்லலாம். அறிவு, ஒழுக்கம் முதலிய உயரிய குணங்களே நல்லவை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , பல குணங்களானும் நிறைந்து அவற்றை ஆள்தல் தன்மை. ' பல குணங்களானும் ' என்பது , சாலுதல் தொழிலால் பெறப்படுதலின் ' அவற்றை ' என்பது , வருவிக்கப்பட்டது . பெருமையுள் அடங்காத குணங்கள் பலவற்றையும் தொகுத்துக் கொண்டு நிற்றலின் , இஃது அதன் பின் வைக்கப்பட்டது.]

கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று சொல்லுவர் நூலோர்.

மு.வரதராசனார் உரை
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்

குறள் 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம், அருள், கருணை,பக்தி,நேசம்  

நாண் - வெட்கம்; மகளிர்க்குரிய கூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு;

ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.

கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;), இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல்.

வாய்மையொடு - வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.

ஐந்து- இவை ஐந்து குணங்களும்

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

ஊன்றிய - (வி)வேரூன்று; நிறுத்து; நடு; சார்பு, தாங்கு; அழுத்து; நிலைபெறு; இறுகப்பிடி.

தூண் - தம்பம்; கட்டடத்தூண்; பற்றுக்கோடு; தறி; பற்றுக்கோல், ஆதாரம்

முழுப்பொருள்
இவ்வுலகில் சான்றாண்மை என்னும் நன்மதிப்புடன் வாழவேண்டும் என்றால் அதற்கு ஐந்து குணங்கள் தூண் போன்று ஒருவர் இடத்தில் இருக்க வேண்டும். ஒரு கட்டிடத்தில் ஒரு முக்கியமான தூண் இல்லையென்றாலும் அது கட்டிடத்தை பாதிக்கும். அது போலவே ஐந்து குணங்களில் ஒரு குணம் இல்லாவிட்டாலும் ஒருவருடைய சான்றாண்மை ஆட்டம் கண்டு விடும்.

அந்த ஐந்து குணங்கள் யாதெனில் 
1) அன்பு (அன்புடைமை) - பிற மனிதர்களிடம் அன்பு/நேசம் செலுத்தி வாழ்வது இன்றியமையாதது ஆகும். அது சமூதாயத்தில் இணைந்து வாழ முக்கியமான ஒன்றாகும் 

"நம்மவர் பாவத்துக்குக் கூச்சப்படுவதில்லை
அன்புக்குக் கூச்சப்படுகிறார்கள்" என்று நித்ய சைத்தன்ய யதி சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.அன்பு செலுத்துவதைப் பற்றி “அகம் மறைத்தல் (சுட்டியைத் தட்டவும்)” என்ற முக்கியமான கட்டுரையில் எழுத்தாளர் ஜெயகோகன் கூறியுள்ளார்

2) நாண் (நாணுடைமை) அறம் அற்ற (தீய) செயல்களை செய்ய வெட்கப்பட்டு, பழிக்கு அஞ்சி தன் செயல்களை மிகுந்த கவனுத்துடன் நல்வழியில் செய்வது. அதுமட்டும் இன்றி (குறள் 137 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி) ஒழுக்கத்தை எய்தவில்லை என்றால் இழுக்கை எய்தி நீங்காத பழியினை அடைவர். ஆதலால் பழிக்கு அஞ்சி நாணம் கொண்டு ஒழுக்கத்தை எய்துவர் 

3) ஒப்புரவு (ஒப்புரவறிதல்) உலகநடைக்கு  / உலக ஒற்றுமைக்கு, பிறருக்கு உதவி செய்து வாழும் பெருங்குணமே ஏற்றது, அவ்வாறு வாழ்கின்றவரே உயிரோடு வாழ்கின்றவர். மற்ற மாந்தரின் மகிழ்வும் துன்பமும் தனக்கு நேர்ந்ததுபோல் உணர்பவனே வாழும் மனிதன். மற்றையான் செத்தவனும் நிகரானவன். ”குறள் 214 ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான்  செத்தாருள் வைக்கப் படும்

4) கண்ணோட்டம்  (கண்ணோட்டம்) -  பிறரிடம் தாட்சிணியம் காட்டி அன்பு செய்தல் ஆகும். பிறர் மனம் வாட  நடந்துக்கொள்ள கூடாது. கண்ணோட்டத்துடன் இருப்பவனே மனிதன் இல்லையேல் அவன் மிருகம். கண்ணோட்டத்துடன் இல்லாதவன் மரத்திற்கு ஒப்பானவன்.

5) வாய்மை (வாய்மை) - நமது பேச்சில், செயலில், எண்ணங்களில் வாய்மை இருக்க வேண்டும். வாய்மையோடு இல்லை என்றால் பிறருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் தன்நெஞ்சுக்கு தெரியும் - அதுவே கொன்றுவிடும். மனதோடு வாய்மை மொழிகிறவன்  தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையவன்.பொய் சொல்லாது இருத்தலும், அறம் அல்லாதவற்றை செய்யாது இருத்தலும் நன்மை பயக்கும். வாய்மை எனப்படுவது விளக்கு போல் துணையாக வழிக்காட்டியாக சான்றோருக்கு உதவும். “குறள் 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

"சான்றோன் ஆக்குதல் தந்தை கடனே" என்று புறநானூற்றில் கூறப்பட்டு உள்ளது.  "குறள் 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" சரி அது என்ன சான்றோன் ஆக்குதல்? கற்றவன், அறிஞன், பணக்காரன், அரசன், மந்திரி என்றெல்லாம் கூறாமல் அது என்ன சான்றோன்? சான்றாண்மை அதிகாரத்தைப் படித்தால் அதற்கான விடை முழுவதமாய் கிடைக்கும். உதாரணமாக சொன்னால் “குறள் 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்” . அவ்வதிகாரத்தில் சான்றோன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய குணநலங்கள் கூறப்பட்டு இருக்கும். சரி, அது ஏன் சான்றோன்? ஏனெனில் சால்புடைய இயல்புகளே ஒரு கட்டிடத்தை பல நூற்றாண்டுகள் தாங்கி நிற்கும் தூணாய் அமையும். நான் “Build to Last: Successful Habits of Visionary Companies by Jim Collins" என்ற ஒரு புத்தகத்தை சில ஆண்டுகள் முன்பு படித்தேன். அதில் ஒரு நிர்வாகம் பல ஆண்டுகளாக (ஒரு 80+ ஆண்டுகள்) பல தலைமுறைகளாக நீடித்து நிற்பதற்கு காரணம் என்ற ஆராய்ச்சியைப் பற்றி கூறப்பட்டு இருக்கும். அது செயல்வியூகம், லாபம், பணம், யோசனைகள் (ideas), எல்லோரையும் கவரக்கூடிய தலைவர் என்றவற்றையெல்லாம் அல்ல ஏனெனில் பல வெற்றியடைந்த நிர்வாகங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளன. ஒரு நிர்வாகத்தை பலகாலம் நிலைத்து நிற்க அடிப்படையான தேவை காலாவதி ஆகாத நிர்வாக கொள்கைகள் (Core Values / Ideologies). அதுவே அந்நிறுவனத்தை வழி நடத்தும் வளர்ச்சிப்பெறச் செயும். அதுப்போல் ஒருவருக்கு வாழ்வில் குணநலங்கள் முக்கியம். அதுவே அவனையும் அவன் சந்ததினயரையும் சான்றோன் ஆக்கும். உதாரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் ஒரு தலைமுறையில் ஒருவர் சான்றோன் ஆக அல்லது பெரும் பணக்காரணாக இருப்பதை காணலாம். ஆனால் அடுத்த தலைமுறையிலோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையிலோ ஒரு பெரும் வீழ்ச்சியை காண முடியும். ஏனெனில் அவர்கள் தங்களை சான்றோன் ஆக்கிய அல்லது வெற்றிபெற்றவர்களாக்கிய நற்குணங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி (கற்றுக்கொடுத்து) இருக்க மாட்டார்கள். அதுவே சீராக அதை செய்து இருந்தால் அக்குடும்பம் பல தலைமுறைகளாக முன்னேறிக்கொண்டு இருப்பதை காண முடியும். அதனால் தான், ”குறள் 68  தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்றுக் கூறினார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. (எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்பு - எல்லார் மேலுமுள்ள அன்பும், நாண் - பழி தீவினைகள் செய்யப் பின்வாங்கும் நாணமும் , ஒப்புரவு - வேளாண்மையும் ; கண்ணோட்டம் - எளியார்க்கும் சட்ட நெறியறியார்க்குங் காட்டுஞ் சிறப்பிரக்கமும் ; வாய்மையொடு - உண்மை யுடைமையும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சான்றாண்மையென்னும் மண்டபத்தைத் தாங்குந் தூண்கள் ஐந்தாம்.

"என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி
ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே,"

என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (779), எண்ணோடு முன்னவற்றொடும் ஒன்றியது, இவ்வைங்குணமும் இல்லாவிடத்துச் சால்பு நில்லாமையின், இவற்றைத் தூணென வுருவகித்தார். சால்பை மண்டபமென வுருவகியாமையின் , இது ஒருமருங்குருவகம். இங்கு எளியார் என்றது செல்வம்,கல்வி, உடல்வலிமை, அகவை முதலிய பலவகையிலுந் தாழ்ந்தவரை.

மணக்குடவர் உரை
அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண். இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.

மு.வரதராசனார் உரை
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

English Meaning - As I taught a kid - Rajesh
1) Love/Kindness/Affection, 
2) Ashamed about Sin / Wrong Things / Bad reputation /, 
3) Benevolence / Helpful Generous to others/ 
4) Compassion /  benevolence / favour and 
5) Honesty / Integrity / Truthfulness; 
These are the five pillars on which perfect goodness rests.

Questions that I ask to the kid
What the 5 noble qualities ? 
What are qualities make goodness?
Why these qualities are pillars? (for the person and also for the legacy to last long (built to last))

குணநலம் சான்றோர் நலனே

குறள் 982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்

குணநலம் - பண்புகளின் / குணங்களின் சிறப்பே, பெருமையே

சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

நலன் nalaṉ   s. poetical change of நலம்.

சான்றோர் நலனே - சான்றோரின் சிறப்பு
சான்றோர் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன்

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

பிறநல -  (குணங்கள் அல்லாது) மற்ற புற அழகெல்லாம், அது அல்லாமல் உறுப்புகளின் அழகு

எந்நலத்து - எவ்வகை சிறப்பிலும்

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

உள்ளதும் அன்று - சேர்ந்தது இல்லை

முழுப்பொருள்
ஒருவரின் பண்புகள், குணங்கள் மட்டுமே ஒருவரை சான்றோராக ஆக்கும் மற்ற புற நலம் எல்லாம் எவ்வகையிலும் சிறப்பு சேர்க்காது. நற்பண்பே சான்றோரின் சிறப்பு அவையல்லாமல் வெறும் உறுப்புகளின் அழகு எவ்வகை சிறப்பிலும் சேர்ந்ததில்லை


If a man conquer in battle a thousand times a thousand men, and if another conquer himself, he is the greatest of conquerors. - The Buddha, The Dhammapada



நாம் நம்மை ஆள வேண்டும். அதுவே குணநலனை தரும். நமது உணர்வுகளை நாம் தான் அதிகாரம் செய்யவேண்டும். அதாவது அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். நம் உணர்வுகள் நம்மை கட்டுபடுத்தக் கூடாது. நாம் நமது உணர்வுகளை நமது மூளையில் இருந்துப் பெறுகிறோம். நமது மூளை ஐம்புலங்களில் இருந்து அவற்றைப் பெறுகிறது. ஆதலால் நாம் நம் மூளைக்கு என்னக்கொடுக்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். கோபம், காமம், பேராசை, பொச்சாப்பு, போன்ற உணர்வுகளுக்கு நாம் அதிபதியாக இருக்க வேண்டும். அவ்வுணர்வுகள் நம்மை ஆளக்கூடாது. 

சரி, உணர்வுகளை எப்படி அடக்குவது?  ”குறள் 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” என்ற குறளை நினைவில் கொள்க



பி.கு:
நலம்புனைந்துரைத்தல்’ என்ற அதிகாரத்திற்கு ’அழகின் சிறப்புரைத்தல்’ என்று பொருள். 'நலம்’ என்ற சொல் சிறப்பு, அழகு என்று பொருட்களிலும் வருகிறது.
பிறநலம் - இங்கு பிற என்ற சொல் உடலைக்குறிக்கிறது.

உதாரணம்

எனக்கு உதாரணமாக தோன்றுவது மகாத்மா காந்தி அவர்கள். அவருடைய ஆடையோ பெரும்பாலும் அரை நிர்வானமான் ஒரு எளிமையான விவசாயின் ஆடையாக தான் இருக்கும். அவரின் தங்கும் இடமும் எளிமையாக தான் இருக்கும். அவர் பயணப்படும் ரயில்களும் முன்றாம் வகுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அவர் கடைப்பிடித்த பண்புகள் குணங்கள் அவரை ஒரு மகாத்மாவாக ஒரு தலைசிறந்த சான்றோராக ஆக்கியது. ஆக பிற புற அழகெல்லாம் அவரை சான்றோராக ஆக்கவில்லை என்பது புரிகிறது.


அதேவேலையில், நாம் இலங்கை அதிபர் மஹேந்த சிங் ராஜபக்‌ஷேவை பார்த்தால் தூய வெண்ணிற ஆடையில் ஒரு புத்த துறவிப்போல் காட்டிக்கொள்வார். ஆனால் அப்பாவி இலங்கை ஈழ தமிழர்களை கொன்று குவித்ததில் அவர் பங்கு சொல்ல வார்த்தைகள் பத்தாது. 

மேலும் புற நலங்கள் தான் ஒருவரை சான்றோர் ஆக்குவது என்றால் எத்தனையோ அழகான நடிகர் நடிகைகள் இந்நாட்டை ஆளத் தகுதி வாய்ந்தவர்களாவர். ஆனால் அவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையே தொலைத்து உள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் ரசிகர்களால் கொண்டப்படுகிறார் மற்றும் சான்றோர்களால் போற்றபடுகிறார் என்றால் அவருடைய ஸ்டையிலையும் (பாணி) மீறி அவர் பண்புகள் தான் காரணம். அவ்வளவு புகழிலும் அவர் அன்பாகவும் எளிமையாக உள்ளார்.

பரிமேலழகர் உரை
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.

விளக்கம் 
(அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப்பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள் பொதுவகையான் கூறப்பட்டன.)

மு.வ உரை
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

சாலமன் பாப்பையா உரை
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

மணக்குடவர் உரை
சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்: குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று. இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.

குறள் பாட்டு (நன்றி:  தினமணி)
நல்ல குணத்தின் அழகுதான்
நல்லவர் நலன் ஆகுமே
வேறு எந்தச் செயலிலும்
நல்லவர் நலம் இல்லையே

நல்ல செயலில் மட்டுமே
நல்லவர் எண்ணம் செல்லுமே
தீமையான செயல்களில்
அவர்கள் மனம் செல்லாது.

மனிதனின் குணங்கள் மனிதனை உயர் மனிதனாக்குகின்றன.

மனிதனின் எண்ணங்கள், சொற்கள், செயல்கள், பழக்கங்கள், குணங்கள் நிர்ணயிக்கின்றன.

நற்குணங்களை தன்வயப்படுத்திக் கொண்டால், நல் மனிதர்களாக நாளும் வாழ இயலும்.

அதனால்தானோ வள்ளுவர்,

‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்’ என்கிறார்.

ஆனால் குணங்கள் அமைவதற்குப் பல காரணிகள் உள்ளன. கருவமைப்புப்பதிவுகள், பெற்றோரின் குணநலன்கள், சூழ்நிலை, கல்வி, சமுதாயம்,தொடர்பு கொள்ளும் மனிதர்கள், ஒழுக்க, பழக்க, வழக்கங்கள், நட்பு, தொழில், வாய்ப்புகள் எனப் பட்டியல் நீளும்.

சிறு வயது முதற்கொண்டு சீரிய பண்பு நலன்களை பழக்கமாக்கி விட்டால், வாழ்வு முழுவதும் அவை தொடரும். உயர் மனித மவளமே சமுதாய வளமாகும்.  மனிதவள உயர்விற்கு அத்தகைய மகத்தான குணங்களே வேண்டும்.

கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே! – சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’

என்ற பழமொழிகள் அவற்றை உறுதிப்படுத்தும்.

குணநலம் சான்றோர் நலனே’ என்பது வள்ளுவர் வாய்மொழி.

அத்தகைய குணங்களை, அவற்றை கைக்கொள்ளுதின் மூலம் நாம்பெற இருக்கின்ற மேம்பாட்டினை காண்போம்.

அனபு, கருணை, இரக்கம், தொண்டு, தானம், தவம், ஒழுக்கம், கடமை, ஈகை, வாய்மை, தூய்மை, நேர்மை, ஆக்கம், ஊக்கம், நல்நோக்கம், பணிவு, துணிவு, கனிவு, அடக்கம், அறிவு, அருள், உணர்வு, நல்நட்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம்… அவசியமான குணங்கள் தொடரும்.

இத்தனை குணங்களையும் மனிதன் பெற்ற, வாழ்வில் கைக்கொள்ள வாழ்நாள் போதுமா?

விடைகாண இயலாத வினா.

ஆனால், ஒவ்வொன்றும் மற்றொன்றோடு நேரிடையாகவும், முறைமுகமாகவும் இணைந்துள்ளதைக் காணும்போது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

அதிலும் முக்கியமான ஒரு சிலவற்றை கடைப்பிடித்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டால் மற்றவை தானே ஒட்டிக்கொள்ளும்.

முதலாவதும், முக்கியமானதுமான அன்பை எடுத்துக் கொள்வோம்.

வழக்கில் மிக அதிகமாகப் பயன்படுத்தும் சொல்லாக இருந்தாலும், உண்மையில் உயரய குணமாய்க் கைக்கொளப்படுவது  வெகு குறைவே.

அன்பு எனபதற்குப் பல விளக்கங்கள் தரலாம்.

வள்ளுவர் முதற்கொண்டு வைரமுத்து வரை மேற்கோள் காட்டலாம்.

ஆனால் அன்பை உணர வேண்டுமே!  வாழ்வின் உயிர் மூச்சாக்க் கொள்ள வேண்டுமே!   அன்பே நான், நானே அன்பு என்று வாழ்ந்து காட்ட வேண்டுமே.

அன்பெனும் தெய்வீக்க் குணத்தால்
மனித சமுதாயம் மலர்ச்சி அடையும்.
மனத வளம் மேம்பாடு அடையும்
என்று நிரூபிக்க வேண்டும்.

அன்பாய் வாழ்ந்தவர்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.அன்பில் தோந்தவர்களை தொழுது பார்க்க வேண்டும்.

அன்பை உணர்ந்து
அன்பாய் மலர்ந்து

அன்பாய் ஆன ஆத்மாக்களின் வாழ்வு வளம் பெற்றதை உணர்ந்து வாழ வேண்டும்.

அன்பு என்பது என்ன?

அன்புடையார் எல்லாம் உடையார் என்றார்களே எப்படி?

அன்பே தெய்வம் என்று சொல்லப்படுகிறதே..

அப்படியானால் அன்பானவர் தெயவீகமானராக அல்லவா இருக்க வேண்டும்.

அப்படி ஒவ்வொருவரும் இருந்தால், உலகமே அன்பு மயமானதாக, தெய்வீகமானதாக மாறிவிடாதா!

அப்படி வாழ்கின்ற மனித  சமுதாயம் எல்லாம் முடையதாக வளம் நிறைந்ததாக அல்லவா இருக்கும்.

நினைவே சுகமாக இருக்கிறதே.

அப்படிப்பட்ட அன்பு என்பது என்ன?

எப்படி இருந்தால் அன்பாய் இருப்பதாக அர்த்தம்?

English Meaning - As I taught a kid - Rajesh
Only a person's character, values, virtues, work can make him a scholar. All other aspects of a person irrespective of abundance or poverty doesn't matter. If a person is known for his character (, values, virtues, work) and lacks money, still the person is considered a scholar. If a person is wealthy and does not have character than the person is not considered scholar.

Hence, one must develop his character by being in control of his/her five senses and desires. 
For e.g., Mahatma Gandhi is a scholar despite his humble clothing's and finance. Whereas people like former Sri Lankan president Mahindra Rajapaksa despite spiritual clothing and finance are considered evil. 

Questions that I ask to the kid
What makes a person scholar? What doesn't make a person a scholar? Give me examples