Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_101. Show all posts
Showing posts with label Athikaaram_101. Show all posts

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

 

குறள் 1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
சீர் செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

உடை ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.

சீருடை  புகழ் பெற்ற செல்வத்தினை உடைய

சீருடைச் - uniform   சீருடை(பெ) மாணவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர் முதலியோர் அணியும் ஒரே சீரான உடை (https://ta.wiktionary.org/s/ayg)   Definition of uniform from https://www.merriam-webster.com/dictionary/uniform 1 :having always the same form, manner, or degree :not varying or variable uniform procedures 2 :consistent in conduct or opinion uniform interpretation of laws 3 :of the same form with others :conforming to one rule or mode :consonant 4 :presenting an unvaried appearance of surface, pattern, or color uniform red brick houses 5 :relating to or being convergence of a series whose terms are functions in such manner that the absolute value of the difference between the sum of the first n terms of the series and the sum of all terms can be made arbitrarily small for all values of the domain of the functions by choosing the nth term sufficiently far along in the series  

செல்வர் - செல்வம் உடையவர்கள்; செல்வந்தர்கள்

சிறு - (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று.

துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

துனித்தல் - வெறுத்தல்; சினத்தல்; கலாய்த்தல்; நெடிதுபுலத்தல்.
துனிப்பு - வெறுப்பு

மாரி - மழை; நீர்; மேகம்; மழைக்காலம்; பூராடநாள்; புள்வகை; சாவு; அம்மைநோய்; ஒருதேவதை; துர்க்கை.

வறம் - vaṟam   n. வறு-மை. [T. varaṭu,K. bara, varē, vara, varaḍu, M. varaḍi, Tu.varaṭe.] 1. Drying up; வற்றுகை. பெருவறங்கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 2. Drought;நீரில்லாமை. கயத்திட்ட வித்து வறத்திற் சாவாதுதழைக்கும் (புறநா. 137). 3. Hot season; கோடைக்காலம். வறந்தெற மாற்றிய வானம் (கலித். 146).4. Famine; பஞ்சம். 5. Poverty, barrenness;வறுமை. மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து (குறள்,1010). 6. Parched land, dry soil; வறண்ட பூமி.வறனுழு நாஞ்சில் (கலித். 8).

கூர்தல்- மிகுதல்; விரும்புதல்; வனைதல்; குளிரால்உடம்புகூனிப்போதல்
அனையது - அத்தன்மையான; ஒத்த.

உடைத்து - கொண்டது, உடைதல், இருக்கும்

முழுப்பொருள்
மழைப்பொழிகிற மேகத்தை நம்பியே இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் இருக்கின்றன. அம்மழை பொய்த்து உலகம் வறண்டால் உயிர் வாழ்வது கடினமாகிவிடும். ஒழுக்கம் கெடும். குற்றங்கள் அதிகரிக்கும். துன்பங்கள் பெருகும். அதுப்போல் செல்வம் படைத்த செல்வந்தர்கள் (குறிப்பாக மேன்மையானவர்கள் புகழ் பெற்றவர்கள்) தன்னிடம் இருக்கும் செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவ மனதளவில் சிறிது வெறுத்துதாலும்  அவர்களால் பிறருக்கு கொடுத்து உதவ முடியாது. பின்பு இவ்வுலகில் வறுமை மேலோங்கி துன்பப்படும். 

மேகம் மழை பொழியவில்லை என்றால் மேகத்தினால் பயன் என்ன? அதுப்போல் பெருஞ்செல்வத்தினை உடையவர்கள் ஈவதற்கு சிறிதளவே வெறுப்புற்றாலும், அவர்கள் செல்வம் நன்மை பயவாத செல்வமேயாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை; மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து - உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து. (துனி - வெறுப்பு, அதனைச் செய்தலால், துனி எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின், பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால் பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்புபடாமல் உரைப்பாரும் உளர். இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சீருடைய செல்வர் சிறுதுனியால் ஈயாதொழிதல், மாரி பெய்யாமை மிக்காற் போலும் மேற்கூறிய நன்றியில் செல்வமுடையாரன்றி நற்செல்வமுடையாரும் பிறர்க்கு ஈயாராயின், மழை பெய்யாதாயின் உலகம் துன்பமுறுமாறு போல அவர் துன்பமுறுவர் என்றவாறு.

மு.வரதராசனார் உரை
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

 

குறள் 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஏதம் - துன்பம், குற்றம், கேடு

பெருஞ் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

பெருஞ்செல்வம்  - பெரிய செல்வம்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

துவ்வான் - துவ்வாதவன் - வறிஞன், tuvvātavaṉ   n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன். 

தக்கார்க்குதக்கார் - தரமும், தகவும் (நடுவாண்மை குணநலம்); மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர். 

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

இலாதான் - இல்லாதவன்

முழுப்பொருள்
செல்வத்தை தேவைக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டு பிறருக்கு பகிர்ந்து கொடுத்து உதவாதவன் உதவ மனமில்லாதவன் வறிஞன். ஏனெனில் அவனிடம் கொடுக்க ஏதுமில்லையே. அவன் பிறரிடம் இலாபமாக உழைப்பாக பெறமட்டுமே முடிகிறது. கொடுக்க மனமில்லை. ஆதலால் அவன் வறிஞன். அதனால்தான் அவனை துவ்வான் என்று ஏளனப்படுத்துகிறார் திருவள்ளுவர். அத்தகையோரிடம் இருக்கும் பெருஞ்செல்வம் அவருக்கு துன்பத்தையே தரும். இன்பத்தை தராது என்று எச்சரிக்கைவிடுகிறார். ஆதலால் பெருஞ்செல்வம் அவனுக்கு ஒருவித நோயே. செல்வம் பெருக பெருக நோய் கூடிக்கொண்டே இருக்கிறது. 

சேர்த்த செல்வத்தை தகுந்தவர்க்கு ஈந்து உதவாதவர்க்கு அச்செல்வத்தைக் காக்கின்ற கவலையே நோயாக மாறிவிடும். ஈயார் தேட்டைத் தீயார் கொள்வரன்றோ?

ஈயார் தேட்டை தீயார் கொள்வர் [மூலம்: கொன்றை வேந்தன் - ஔவையார்]
ஈயார்         - கொடாதவருடைய (கருமி, கஞ்சன்),
தேட்டை     - சம்பாத்தியத்தை,
தீயார்        - (கள்வர் முதலிய) தீயவர்,
கொள்வர்  - அபகரிப்பர்

ஏழை மற்றும் யாசிப்பவர்களுக்கு உதவி செய்யாமலும், சேர்த்த சொத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யாமலும் இருக்கும் கருமியின் செல்வம், அவனுக்கும் பயன்படாமல், திருடர்களால் அபகரிகப்படும்.

உதாரணமாக முத்து திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். கீழே காணலாம்.



(முத்து திரைப்பட காட்சி)
பணக்காரர்: கும்புட்ரேன்ய்யா _/\_
வயதான (துறவியான ரஜினி): ஹ்ம்ம்

பணக்காரர்: என்னை ஞாபகம் இருக்கய்யா?
வயதான (துறவியான ரஜினி): இல்லை 
பணக்காரர்: 
பதினைந்து வருடம் முன்னால காசில உங்ககிட்ட  ஆசீர்வாதம் வாங்கினேன்ய்யா.
அதுக்கு அப்புறம் நான் ரொம்ப பெரிய ஆளாக ஆயிட்டேன்ய்யா. 
நீங்க இங்க இருக்கீங்கனு கேள்விப்பட்டேன் அதான் உங்கள பாத்துட்டுப்போலான்னு வந்தேன். 
அய்யா, அடியேனுடைய காணிக்கை. 

வயதான (துறவியான ரஜினி): என்ன இது? 
பணக்காரர்: (பண மூட்டையை திறந்து காண்பிக்கிறார்)

வயதான (துறவியான ரஜினி): (சிரிக்கிறார்)
வயதான (துறவியான ரஜினி): இத வெச்சுகிட்டு இந்த ஜடம் என்னய்யா பன்னப்போது?
பணக்காரர்:
எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லலாமாய்யா?
இந்த உலகத்துல இது இல்லாம உயிர் வாழவே முடியாதுயா.
இத வெச்சு எத வேணும்னா வாங்கலான்ய்யா.

வயதான (துறவியான ரஜினி):  (விழி விரித்து ஆச்சர்யமாக பார்க்கிறார்)
வயதான (துறவியான ரஜினி):  இப்ப உனக்கு என்ன வேணும்?
பணக்காரர்: உங்க ஆசீர்வாதத்துல்ல எல்லா வசதியும் இருக்குயா.. ஆனா வாழ்க்கைல எனக்கு நிம்மதி மட்டும் இல்லைய்யா

வயதான (துறவியான ரஜினி):  (கைக் தட்டி பலமாய் சிரிக்கிறார்)

வயதான (துறவியான ரஜினி):  ஹ்ம்ம்ம்.. இத வெச்சுகிட்டு உலகத்துல எத வேணும்னா வாங்கலாம்னு சொன்னீங்க? நிம்மதிய வாங்கிற்லாமேயா? ஹான்?
எல்லார் பணத்தையும் நீயே வெச்சுகிட்டா, நிம்மதி எப்படியா வரும்? 
உனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ அளவா வெச்சுகிட்டு மிச்சதை இல்லாதவங்களுக்கு கொடுத்துகிட்டே இருந்தா நிம்மதி தானா வரும்.
பணத்த சேத்துக்கிட்டே இருப்பாங்க, அவனுக்கு நிம்மதியே இருக்காது
புண்ணியத்த சேத்துக்கிட்டே இருப்பான்ல அவனுக்கு தான் நிம்மதி. 
ஹ்ம்ம்ம்
ஆமா, வருமோதும் எதுவும் கொண்டுவரல போமோதும் ஒன்னும் கொண்டுப்போ போறர்து இல்ல. நடுல என்னய்யா என்து என்து  என்துனு 
வயதான (துறவியான ரஜினி):  (தலையில் அடித்துக்கொள்கிறார்).  த த.. போ போ

வயதான (துறவியான ரஜினி): இத எடுத்துட்டு இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டுப்போ





மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்
குறைபதி மற்றப் பொருள் (நாலடி 280)

“.......ஒண்பொருள், செய்வம்என் பார்க்கும் துயில்இல்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்” (நான்மணி.7)

பரிமேலழகர் உரை
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.

மு.வரதராசனார் உரை
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person might have enormous amount of wealth that is lot more than required, yet, if he does not have the heart to help others who need help in the form of food, shelter, education, opportunity etc, then, such a person is considered to be in poverty, despite having enormous wealth and that wealth is a disease which will only give pain. Because, only a person in poverty cannot help others. A wealth that is not shared with others over a period of time would be stolen by people around him and would be lost through various means. Such a wealth will not give peace and would be a root cause of unhappiness.

Questions that I ask to the kid
A wealth person is called poor. Explain the paradox

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

 

குறள் 1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்றியில்செல்வம் - naṉṟi-y-il-celvam   n. id. +. Riches not used in doing good, useless wealth; உபகாரமற்ற செல்வம் (குறள், 101-ஆம்அதி.)  

நச்சு - ஆசை; 'விரும்பப்படும்பொருள்; தொந்தரவு; அலப்பல்; தாமதம்; சிறிய.

நச்சுதல் - விரும்புதல்; அலப்புதல்; தொந்தரவுசெய்தல்.

நச்சப் படாதவன்  - விரும்பப்படாதவன் 

செல்வம் -கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

நடு - இடை; மையம்; வானத்தின்உச்சி; நடுவுநிலை; இடுப்பு; நீதி; மிதம்; வழக்கு; பூமி; இடைப்பட்டது; அந்தரியாமியானகடவுள்.
நடுவூருள் - நடு ஊர் உள் - ஊரின் நடுவே

நச்சு -  ஆசை; 'விரும்பப்படும்பொருள்; தொந்தரவு; அலப்பல்; தாமதம்; சிறிய.

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

பழுத்தல் - பழமாதல்; முதிர்தல்; மூப்படைதல்; பக்குவமாதல்; கைவருதல்; பருமுதலியனமுற்றுதல்; மனங்கனிதல்; நிறம்மாறுதல்; நன்மையாதல்; செழித்தல்; மிகுதல்; பழுப்புநிறமாதல்; குழைதல்; காரம்முதலியனகொடாமையால்பிள்ளைபெற்றவயிறுபெருத்தல்.

அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது

முழுப்பொருள்
யாராலும் விரும்பபடாதவனிடம் (அனைவராலும் வெறுக்கபடுபவனிடம்) இருக்கும் செல்வம் ஒரு ஊரின் நடுவே யாராலும் விரும்பபடாத மரத்தில் காய்த்திருக்கும் பழங்களை போன்றதாம். யாருக்கும் பயன்படாமல் கனிந்திருக்கும் பல பழங்களும் தீண்டப்படாமல் அழியும். அதேப்போல் விரும்பபடாதவனிடம் யாரும் வந்து உதவி கேட்கமாட்டார்கள். ஆதலால் அச்செல்வம் பயனல்லாமல் போகும். பயனில்லாம அழியும் செல்வத்திற்கு என்ன மதிப்பும் இல்லை. 

ஆதலால் செல்வம் இருந்தும் எல்லோரும் விரும்பபடுபவனாக ஒருவன் இல்லாமல் இருந்தால் அவனுக்கு என்ன மதிப்பு? ஒரு மதிப்பும் இல்லை. மேன்மையும் இல்லை. புகழும் இல்லை. பெருமையும் இல்லை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதும்  கடப்பாட்ட தன்று” (நாலடி 261)

பரிமேலழகர் உரை
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து. இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
A affluent person who is not loved/liked by anyone or who is hated by everyone is like a tree bearing lots of fruits yet it is not consumed by any bird or animal or human in the center of the city. Those fruits go useless. Hence, the tree goes useless. Similarly the person's wealth would go useless. and the person also goes useless. Hence, there is no respect or value for the both the tree and the men. Hence, one has to remember that compassion, character, personality, helping tendency etc. are more important than wealth one accumulates

Questions that I ask to the kid
Who is considered as a poisonous tree?

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

குறள் 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
கொடுப்பதூஉம் - கொடுத்தல் -  ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை.

துய்ப்பு - நுகர்ச்சி.
துய்ப்பதூஉம் - துய்த்தல் - துய்த்தல் - புலன்களால்நுகர்தல்; உண்ணுதல்; நூல்நூற்றல்; நாடகச்சந்திஐந்தனுள்இறுதியானது.

இல்லார்க்கு - இல்லாதவர்
அடுக்கிய - அடுக்கு - அடுக்கப்பட்டது; ஒழுங்கு, வரிசை, அடுக்குச்சொல்.
அடுக்குதல் - அடுக்கல்; ஒன்றன்மேல்ஒன்றாகவைத்தல்; வரிசைப்படவைத்தல்.

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

உண்டாயினும் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

இல் - இல்லை 

முழுப்பொருள்
ஒருவருக்கு தன்னிடம் இருக்கும் செல்வத்தைப் பிறருக்கு கொடுத்து உதவும் மனம் வேண்டும் அல்லது அத்தகைய செல்வத்தை நல்வழிகளில் நுகரும் மனம் வேண்டும். செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவ மனம் அல்லாதவரும் நல்வழியில் நுகராதவரும் உயிர்வாழ்ந்தால் என்ன வாழாவிட்டால் என்ன? அத்தகையவர் உயிர்வாழ்வதாகவே கருதப்பட மாட்டார். அத்தகையவரிடம் எவ்வளவு பூர்வீக சொத்துக்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அதனால் பயன் என்ன? 

மேலும் ஒரு விவசாயி தான் உழுது ஈண்ட உணவு பொருட்களையெல்லாம் தானே உண்டால் என்ன ஆகும்? வயிறு வெடித்தோ அல்லது அதீத உணவினால் நோய்வாய்ப்பட்டோ உயிர் இழப்பான். அவ்விவசாயி உழைத்ததனால் தான் உணவு விளைவிக்க முடிந்தது. ஆனால் இயற்கையும் உலகமும் அதற்கு உதவியது. ஆதலால் இவ்வுலகிற்கு தான் உழுது ஈட்டிய உணவில் தனக்கு தேவையானவற்றை நுகர்ந்து மீதம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். இல்லையேல் அவன் உயிர் வாழ்ந்தோ அல்லது சொத்து சேர்த்தோ என்ன பயன்? 

செல்வம் ஈட்டுதலே பிறர்க்கு கொடுத்தலுக்கும் தான் நுகர்தலுக்கும் தான். சேமித்து சேமித்து பொருளற்றதாக ஆக்க அல்ல. செல்வம் நிலையில்லாதது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

பழமொழி  பாடல் இதை அழகாகச் சொல்லும்.

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப  அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்  
– பழமொழி 216

பொருள்
ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !

மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம்  நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”

நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.

கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.).

மணக்குடவர் உரை
பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்

குறள் 1004
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்.

என்று -எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

எண்ணும்  - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

ஒருவர் - ஓராள்; ஒருவன்;  அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை.

ஒருவரால் - ஒருவர் - ஒருவரினால் 

நச்சு - ஆசை; 'விரும்பப்படும்பொருள்; தொந்தரவு; அலப்பல்; தாமதம்; சிறிய.

நச்சுதல் - விரும்புதல்; அலப்புதல்; தொந்தரவுசெய்தல்.

நச்சப் படாதவன்  - விரும்பப்படாதவன் 

முழுப்பொருள்
தனது என்று நினைத்து எதனையும் (பொருள், கல்வி, உணவு, செல்வம்) பிறர்க்கு வழங்காதவன், பகிராதவனை இவ்வுலக மக்கள் விரும்பமாட்டார்கள். இப்படி பிறரால் விரும்பப்படாதவன் தான் இறந்த பிறகு தனது புகழ் என்று எதுவும் எஞ்சியிருக்காது என்று எண்ணுவான் (வருந்துவான்). ஏனெனில் பிறர்க்கு உதவாதவனுக்கு புகழென ஏதுமில்லை.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ? (ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.

ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்

குறள் 1003
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஈட்டம் - சம்பாதிக்கை, மிகுதி; திரள் கூட்டம் தேட்டம் பொருளீட்டுகை; வலிமை

இவறியார் - கைவிடாதவர்; ஆசைப்பட்டோர்.
இவறி - கைவிடாது; ஆசைப்பட்டு, விரும்பி

இசை - இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை

வேண்டா - வேண்டாது

ஆடவர் - இளையோர்;  ஆண்மக்கள்; 2. Men between the ages of thirty-two and forty-eight, புருடர்

தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்.

நிலக்குப் - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

முழுப்பொருள்
வாழ்வில் நிலையில்லாத பொருட்செல்வம் /ஊதியம் ஈட்டுதலை மட்டுமே விரும்பு அதை இடைவிடாதுப் பற்றிக்கொண்டு (இவ்வுலகிற்கு பயனுள்ளதை செய்வதனால் வரும்) மெய்யான அரிய புகழ் வேண்டாமெனும் மனிதர்கள் இந்த நிலத்திற்கு ஒரு சுமை.

ஊதியம் மட்டும் வேண்டும் என்று கூறி நிறுத்தாமல் புகழ் வேண்டாம் என்று கூறுவதால் அத்தகையவர் ஒரு சுயநல வாதி என்பதை நாம் இங்கு உணரலாம். சுயநல வாதிகள் இவ்வுலகிற்கு ஒரு சுமை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”..........ஒன்றீக லான்பொருள்
காத்தவன் புகழெனத் தேயும் கற்பினாள்” (கம்ப.சூர்ப்பனகை 26)

குறள் 572


பரிமேலழகர் உரை
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே. (இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.)'.

மணக்குடவர் உரை
பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர், தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர். இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who loves only earning money and does like to earn other things like respect, goodwill etc. by doing service to people, by being kind to people etc. is considered a burden to this land. Because they are selfish person. They only extract from the world. The world doesn't benefit anything from them. 

Questions that I ask to the kid
Who is considered a burden? Why?
How are the people who only extract from the world are considered by others? Why?

பொருளானாம் எல்லாம்என்று ஈயாது

குறள் 1002
பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளானா மாணாப் பிறப்பு
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள் 
பொருள் சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

ஆன் - āṉ   part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.)  ; பெற்றம், எருமை, மரைஇவற்றின்பெண்; காளை அவ்விடம் மூன்றனுருபு; ஆண்பாற்பெயர்வினைகளின்விகுதிஒருசாரியை

பொருளான்  - பொருளினால் எல்லாம் நடக்கும் என்று எண்ணுகிறவன்

ஆம் - ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

எல்லாம் - முழுதும்

என்று - என்று

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

ஈயாது -ஈதல் செய்யாது, பிறருக்கு உதவி செய்யாது

இவறும் - இவறுதல் - ஆசையுறல்; விரும்புதல் மறத்தல் மிகுதல் உலாவுதல் கைவிடாதிருத்தல்; வேண்டும்வழிப்பொருள்கொடாமை.

மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு.

மருளான் - மயக்கத்தில் உள்ளவர்

ஆம் -  ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

மாணாப் - மாட்சிமை இல்லாத

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

முழுப்பொருள்
செல்வம் / பொருள் / பணம் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் என்று செல்வதை ஈட்டுவது அதனை பேணுவதே எல்லாம் என்று இறுமாந்து பிறருக்கு உதவி என்று எதுவும் செய்யாது தன் செல்வதை பிறருக்கு பகிர்ந்தளிக்காமால் தன் செல்வதை இறுக பற்றிக்கொண்டு இருக்கின்றவர் பண மயக்கத்தில் உள்ள (பேய் போன்றவர்) மாட்சிமை இல்லாதவர். இவர் பிறப்பு என்றும் நிறை (முழுமை) அடையாத பிறப்பாகும் என்கிறார் திருவள்ளுவர். இறுகப் பற்றி செல்வத்தைப் பூட்டி வைக்கும் அறிவு மயக்கத்தில் உள்ளோர்க்கு மீண்டும் கருவறையில் உழண்டு பிறக்கும் விதியுண்டு அதுவும் மாட்சிமை இல்லாத ஈனப் பிறவியே என்கிறது இக்குறள்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம். (இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம். இது தீக்கதியுள் உய்க்குமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

சாலமன் பாப்பையா உரை
பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்

குறள் 1007
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
அற்றார் - aṟṟār   n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மை ஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).  

அற்றார்க்கு - பொருள் இல்லாதவர்களுக்கும், மக்கள் சேவை புரிகிறவர்களுக்கும்

ஒன்று - ஒன்று என்னும் எண்; மதிப்பிற்குரிய பொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாதான் - செய்யாதவன்; தேடாதவன்; உதவாதவன்

செல்வம்- கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

மிகு - miku   மிகு¹-. adj. Great; பெரிய.--part. A word of comparison; ஓர் உவமவுருபு.(தண்டி. 33.)

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெற்றாள் - பெற்ற பெண்

தமியள் - திக்கற்றவள்; தனியாயிருப்பவள்.
மூத்தற்று - முதுமை அடைந்தார்போலாம் (பயனிலா இளமையாய் கழிந்ததுபோலாம்)

பெண்கள் பற்றி
'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்றார் பாரதியார். 'ஒரு பெண் கல்வி அறிவு பெறுவது அக்குடும்பமே கல்வியறிவு பெறுவதற்கு சமம்' என்றார் நேரு. 'சமூகத்தில் ஏற்படும் முக்கியமான மாற்றங்கள் பெண்களாலே' என்றார் மகாத்மா காந்தி.

பெண்களின் பணிப் பங்கு : பெண் என்பவள் தன் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளை கடந்து வருகிறாள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என, பல பரிமாணங்களை எடுத்து வருகிறாள். குழந்தையாக இருந்து நடை பழக ஆரம்பித்த காலத்திலிருந்தே குடும்ப பொறுப்புகளை ஏற்க ஆரம்பித்து விடுகிறாள். சிறு வயது முதலே வீட்டை சுத்தம் செய்வது, வாசலில் கோலமிடுவது என, சிறிது சிறிதாக தன் பணிப் பங்கினை உயர்த்துகிறாள். 

அன்புள்ள செல்ல மகள் : பருவம் அடைந்த பிறகு பெண்மைக்கே உரித்தாகிய அழகையும், தாயின் அரவணைப்பையும் பெறுகிறாள். பெற்றோரின் அன்பைத் தட்டிச் செல்லும் செல்ல மகளாகவும், அண்ணனின் கட்டளைக்கு கட்டுப்படும் அன்புத் தங்கையாகவும், தாத்தா பாட்டிக்கு மரியாதை செலுத்துவதில் செல்ல பேத்தியாகவும் மாறுகிறாள். வீட்டிற்கு வரும் அனைவரையும் உபசரிப்பதிலும் தனிக்கவனம் செலுத்துகிறாள். வேலைகள் அனைத்தையும் நேர்த்தியாக செய்து, தனக்கே உரிய முத்திரையை பதிக்கிறாள்.

புகுந்த வீட்டு உறவுகள் : குடும்ப கஷ்டத்தை உணர்ந்து பெற்றோரின் கடன் சுமைகளை தன் தோளில் இளவயதிலேயே சுமந்து வாழ்கிறாள். இன்னும் பல பெண்கள் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள். புது உறவு முறைகள் பிறந்த வீட்டை விட்டு, புகுந்த வீட்டுக்கு செல்லும் தருணம் வாழ்வில் எந்த பெண்ணாலும் மறக்க முடியாத ஒன்று. அப்பா, அம்மா உடன்பிறந்தோர் என, அத்தனை உறவுகளையும் விட்டு திருமணம் மூலமாக தனக்கு கிடைக்கும் புது உறவுகளை அனுசரித்து செல்கிறாள். அறிமுகமில்லாத நபர்களை மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் என, தன் வீட்டு உறவுகளாக ஏற்றுக்கொண்டு, தன் கணவரின் சொந்தங்களை தன் சொந்தங்களாக எண்ணுகிறாள். தன் பிறப்பின் அங்கீகாரமாக ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அக்குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்து சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தருகிறாள். கணவனின் குடும்ப பாரத்தை குறைப்பதற்காக தானும் வேலைக்குச் செல்கிறாள்.

பெண் நடமாடும் கடவுள் : வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு, அலுவலக சுமை என, அனைத்தையும் சவாலாக ஏற்று சாதனை புரிகிறாள். வேலை நாட்களில் பம்பரமாக சுழன்று தன் கடமைகளை நிறைவு செய்கிறாள். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் அக்கறை காரணமாக, சமையலில் தனிக் கவனம் செலுத்தி குடும்ப ஆரோக்கியத்தை நிலைநாட்டுகிறாள். தன் உடல்நிலை சரியில்லாத காலத்திலும் ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் உழைக்கிறாள். இப்படி பல சொல்லப்பட்ட, சொல்லப்படாத நிலைகள் மாறுதல்கள் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இருக்கின்றன.இப்படிப்பட்ட பெண்கள் எல்லாம் 'லெமூரியா' கண்டத்தோடு அழிந்து விட்டார்கள் என்று எண்ண வேண்டாம். நம் வீட்டிலும், நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக அங்கீகாரம் நம் நாட்டைக் கூட தாய்நாடு என்றும், தாய்மண் என்றும் தான் கூறுகிறோம். நம் மொழியையும் தாய்மொழி என்று தான் அழைக்கின்றோம்.பெண் என்பவள் வற்றாத அன்பையும், உழைப்பையும் குடும்பத்திற்காக வழங்குபவள். அதனால் தான் வற்றாத  ஆறுகளுக்கும் நதிகளுக்கும் கங்கா, யமுனா, கோதாவரி, காவிரி என்று பெண்களின் பெயர்களை வைத்துள்ளனர். யாசகம் கேட்டு வீட்டிற்கு வருவோரும் அழைப்பது 'அம்மா தாயே' என்றுதானே. உயிரை படைக்கும் கடவுளான பிரம்மனே தன் வேலையை ஒரு பெண்ணிற்கே கொடுத்திருக்கிறார். ஆகவே பெண்களும் நடமாடும் கடவுள் தான்.

பெண்கள் குடும்ப பொக்கிஷம்: கணவன், மனைவியிடையே ஒரு ஞாயிற்று கிழமையில் போட்டி. தன் வீட்டிற்கு யார் வந்தாலும் கதவைத் திறக்கக் கூடாது என்றும் பேசக் கூடாது என்றும். போட்டி ஆரம்பித்தது கதவு தட்டப்பட்டது. குரலோ கணவனின் பெற்றோரிடமிருந்து. கணவன் போட்டியில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக கதவை திறக்கவுமில்லை, பேசவுமில்லை. அவர்களும் சென்றுவிட்டார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. இப்போது குரல் மனைவியின் பெற்றோரிடமிருந்து. ஆனால், மனைவி போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை என்று ஓடிச்சென்று கதவைத் திறந்துவிட்டு தன் பெற்றோரை உள்ளே அழைத்து உபசரித்தாள். கணவனுக்கோ முதலில் வெட்கம்; பின்பு மெதுவாக புன்னகை செய்து விட்டு கூறினான், 'இன்னும் 15 ஆண்டுகளுக்கு பின் எனக்காக கதவு திறந்துவிட எனக்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள்' என்று பெருமிதத்துடன் கூறினான்.பெண் சிசுக் கொலையைத் தவிர்த்துவிட்டு, பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்ற கவலையை அகற்றி, பெண் பிள்ளைகளை போற்றி வளருங்கள். திருமணத்திற்கு பின் தன்னால் முடிந்த உதவியை தன் பெற்றோருக்கு, கணவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் செய்பவள் அவள். பெண் பிள்ளை ஒவ்வொரு குடும்பத்தின் அடையாளம். பெண் பிள்ளை நம் குடும்பத்தின் பொக்கிஷம்.

முழுப்பொருள்
ஒரு பெண் என்பவள் பல பரிமாணங்களை - மகள், பேத்தி, தங்கை, அண்ணி, மனைவி, இல்லத்தரசி, தாய், பாட்டி - எடுக்கிறாள். அத்தகையவள் ஒவ்வொரு பரிமாணத்திலும்  குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பலவகையில் தொண்டாற்றுகிறாள். அதனாலே அவள் பெருமை அடைகிறாள். ஆனால் அத்தகையவள் இத்தகைய எல்லா நல்ல குணங்களையும் மிகுதியாகவும் பெற்றும் கூட அதனை வெளிப்படுத்தாமல் தனிமையில் தன்னை ஆழ்த்திக்கொண்டு திக்கற்று இருந்தால் அவள் முதுமையை மட்டுமே இறுதியில் அடைகிறாள். அவள் என்றும் மகள், தாய், தங்கை, இல்லத்தரசிப் போன்ற பரிணாமங்களை அடைவதில்லை. முதுமை என்ற சொல்லுக்கு பழமை என்ற பொருளும் உண்டு. பழமை என்றால் சிதைவு என்ற பொருளும் உண்டு. அதாவது இவ்வுடம்பு பிறந்து வளர்ந்து சிதைவடைந்து மரணம் ஏய்துகிறது.

அதுமட்டும் இன்றி அமுதூட்டும் அன்னை மட்டும் அல்ல அவள். அன்பு ஊட்டும் அன்னையும் அவளே. ஆதலால் பெண்கள் இல்லை என்றால் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றே சொல்லலாம். அத்தகைய பெண் இல்லை என்றால் இந்த சமூகமே சீர்கெட்டுப்போகும்.

ஆதலால் தான் திருவள்ளுவர் பெண்களை இக்குறளில் உவமையாக பயன்படுத்துகிறார். பெண்ணை போக பொருளாக இங்கே பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைப்பது தவறாகும்.

இப்போது குறளுக்கு வருவோம். எவன் ஒருவன் பொருள் இல்லாதவர்களுக்கு, பொருள் தேவையாக இருப்பவர்களுக்கு (அதாவது சில நேரம் நல்ல வேலைக்கு போவார்கள். ஆனால் அவர்களுடைய வருமானம் தங்கள் பிள்ளைகளின் குறைந்த செலவிலான படிப்பிற்குக் கூட போதாது. அப்போது பொருள் (பணம்) தேவையாக உள்ளது), பிறருக்கு சேவை செய்யும் அறக்கட்டளைகளுக்கு எவ்விதத்திலும் உதவி செய்யாமல் இருக்கிறானோ அத்தகையவரிடத்தில் இருக்கும் செல்வம் என்பது எல்லா குணங்களும் பெற்ற ஒரு பெண் பிறந்து முதுமையை மட்டுமே அடைந்து பயனில்லாது சிதைந்துப்போன உடம்பு போன்றதாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள்தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து. (நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி¢ தனியாளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

அழகுக்கே அழகாகும் அழகுப் பெண்ணாள்
அவள் போல அழகில்லை ஊரில் எங்கும்
உளம் கொண்டோர் மண வாழ்வில் பெண்ணவளை
உரிமை கொண்டு வாழ வைப்பார் யாருமில்லை
கிழமாகி அவ் வழகு அழிந்த தாங்கு
கேட்பதற்கு நாதியின்றி ஒழிந்ததது
வளம் கொண்டோர் தம் பொருளை மறைத்து வைத்து
வழங்காமல் அது அழிந்து ஒழிந்தாற் போல

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்

குறள் 1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வைத்தான் - உரிமையாகக் கொள்ளுதல்

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு

சான்ற - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

பெரும் பொருள் - பெருஞ் செல்வம்

அஃது - அஃறிணை ஒருமைச்சுட்டு; அது அப்படி

உண்(ணு)-தல் - சாப்பிடுதல், உட்கொள்ளுதல், அனுபவித்தல், பொருந்துதல்,  ஒத்தல்

உண்ணான் - உண்ண மாட்டான், பொருந்த மாட்டான், அனுபவிக்க மாட்டான்

செத்தான் - இறந்தவன்
செயக்கிடந்தது - செல்வத்தால் செய்யக் கூடியது
இல் - ஒன்றுமில்லை

முழுப்பொருள்
ஒருவர் வாழ்வில் செல்வத்தினை ஈன்று அதனை உரிமையாக்கிக் கொள்வர். இச்செல்வம் இன்றோ நாளையோ பிறருக்கோ அவருக்கோ பயன்பெரும். ஆனால் அளவு கடந்த செல்வத்தினை தனது தேவைக்கு மேலே சேர்த்த செல்வத்தினை சேர்த்து வைப்பதில் பயனில்லை. ஏன் என்றால் அந்த செல்வத்தினை அவனால் உண்ண முடியாது. சேர்த்து என்ன பயன்? அவன் சேர்த்த செல்வத்தினை பயன் படுத்தாதவன் (தனக்கோ, பிறருக்க்கொ). ஆதலால் இறந்த பிறகு அந்த செல்வத்தால் அவனை மறுபடியும் உயிர்க்கொள்ள செய்ய முடியாது. அது போல அந்த செல்வத்தால் ஒரு பயனும் இல்லை. அது போல தேவைக்கு மேலே ஆன செல்வத்தினை, பயன் படுத்தாத செல்வத்தினை சேர்ப்பதில் பயனில்லை.

கி.வா.ஜ-வின் ஆய்வுப் பதிப்பிலே நாலடியார் பாடலொன்றும், பழமொழிப் பாடல்கள் இரண்டும் இக்குறளின் முற்றுக் கருத்தையும் கூறுவதாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் – இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும். (நாலடி 274)

பிறர்க்குத் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத உலோப குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும். அதாவது கஞ்சனின் செல்வத்தை அயலாரே அனுபவிப்பர். இப்பாடல் சொல்லும் கருத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உவமை நயக்குறைவாகவும், ஓரளவில் முகத்தைச் சுளிக்கச் செய்வதாயும் உள்ளது, ஒரு வீட்டில் பிறந்த பெண்ணை பிறர் வீட்டுக்கு மணமுடித்து அனுப்பவது உலக வழக்கு. கன்னித்தன்மை நீங்குவதும் திருமண உறவில் ஒர் அங்கம். இதைவிட, “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்னும் பொருள் பட எழுதியிருக்கலாம்.

முழங்குகின்ற அருவிகளையுடைய, மூங்கில் முதிர்ந்து முத்துக்களைக்கொட்டுகின்ற மலையை யுடையவனே!, பிறர்க்கீதலும், தான் அடைதலும் முதலியன அறியாதவன் கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம், நாய்பெற்ற தேங்காயை அஃது ஒக்குமல்லவா? என்கிறது பழமொழிப்பாடல். அதாவது நாய்க்குக் கிடைத்த தேங்காயை அது உருட்டிக் கொண்டே அலையும்; தாமாக உடைத்துத் தின்னவும் அறியாது, பிறர் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்காது. அப்பாடல்.

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம், – தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம். (பழமொழி 151)

“படரும் பிறப்பிற்கொன் றீயார் பொருளைத் 
தொடரும்தம் பற்றினால் வைத்திறப் பாரே
அடரும் பொழுதின்கண் இட்டுக் குடரொழிய
மீவேலி போக்கு பவர்” (பழமொழி 379)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல் - உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான். ('வைத்தான்' என்பது முற்றெச்சம், உண்ணுதல்: அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி. அதன்கண் அவனாற் செய்யக்கிடந்ததோர் உரிமையில்லையாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும், இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனையிட மெல்லாம் நிறைதற்கேதுவான பெருஞ்செல்வத்தை ஈட்டிவைத்தும் ,கஞ்சத்தனத்தால் அதை நுகராதவன் , செத்தான் உடம்போ டுளனாயினும் செத்தவனாவன்; செயக்கிடந்தது இல் - அதைக்கொண்டு அவன் செய்யக் கிடந்ததொரு செயலுமில்லை.

செல்வமிருந்தும் அதை நுகராமையால் , செத்தவனுக்கு ஒப்பாவன் என்பது கருத்து. ' வைத்தான் ' முற்றெச்சம்.

"உண்ணா னொளிநிற னோங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும்."

(நாலடி.9)

மணக்குடவர் உரை
இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின் செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை

சாலமன் பாப்பையா உரை
தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can save his earnings and build assets that is required for his living, for his needs, family. But if a person accumulates enormous amount of wealth yet does not help others, then that wealth is considered useless. Because he cannot eat the wealth and after his death he cannot get back his life using that wealth. Hence, no point in accumulating a wealth that is neither useful for him nor for others.

Questions that I ask to the kid
When is enormous amount of wealth considered useless? Why?

அன்பொரீஇத் தற்செற்று

குறள் 1009
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
அன்பொரீஇ  - அன்பு + ஓரீ + இ
அன்பு - - தொடர்புடையார் மாட்டு உண்டாகும்பற்று, அன்பொத்த அவர் (பரிபா. 6, 21, உரை), நேசம்; ; நேயம் அருள் பக்தி

ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

தற்செற்று - தன் + செற்று
செற்று - கொல்லுதல், அழித்தல், செதுக்குதல், பதித்தல், செறிதல், அழுந்துதல்
செற்று - நெருக்கம்

அறநோக்காது - அறம் + நோக்காது
அறம் - நேர்மை; தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்

நோக்கம் - கண்; பார்வை; கிரகநோக்கு; தோற்றம்; உயர்ச்சி; அழகு; காவல்; கருத்து; அறிவு; கவனம்; விருப்பம்; குறிப்பு.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

அறநோக்காது நோக்காது - நேர்மை தருமம் விரும்பாமல்

ஈட்டுதல் - கூட்டுதல்; சம்பாதித்தல்
ஈட்டிய - பெற்ற, திரட்டியது, சம்பாதிக்க

ஒண்பொருள் - தன்னை வருத்தித் தேடிய/ ஈட்டிய செல்வம்
ஒண் - oṇ   ஒண்ணு, def. verb. be possible, able; 2. be proper, fit, பொருந்து.
ஒண்மை - விளக்கம்; இயற்கையழகு; நன்மை; மிகுதி; ஒழுங்கு; நல்லறிவு.
பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக் கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்கு மதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

கொள்வார் பிறர் - கவர்ந்து (கொள்ளையடித்து) செல்வார் கயவர் / கள்வர்

பிறர் - அயலார்.

முழுப்பொருள்
ஒருவர் தன் வியர்வை சிந்தி பொருள் ஈட்டுவது மட்டுமே வாழ்வின் மையமாக வைத்து பொருள் ஈட்டிக் கொண்டு இருப்பவர்கள் ஏராளம். 

அவ்வழியில் செல்பவர்கள் தன் சுற்றம் அதாவது உறவுகள், நண்பர்களை பொருட்படுத்தாது, அவர்களிடம் நெருக்கம் கொள்ளாது, அவர்களிடம் இருந்து தொலைவில் இருந்துக்கொண்டு பொருள் ஈட்டிக் கொண்டு இருப்பர்.

அத்தகையவர்கள் உறவுகள், நண்பர்கள், மக்கள் இன்பம் தனை நோக்காது செல்வத்தின் பின் ஓடிக் கொண்டு செல்வர். அவர்கள் தான் ஈட்டிய செல்வத்தை அவரும் முழுமையாக அனுபவிக்க மாட்டார்கள் அடுத்தவரும் அனுபவிக்க விட மாட்டார்கள். 

ஆனால் காலப்போக்கில் இவர்கள் (வியர்வைச் சிந்தி / வருந்தி தொகுத்த ) ஈட்டிய செல்வம் இவர்கள் அனுபவிக்காமல் பிற கயவர்கள், கள்வர்கள் இவர்களை ஏமாற்றி கொள்ளையடித்து அனுபவிப்பர். ஆக இவர்களின் செல்வம் இவர்களுக்கு பயன் இல்லாமல் அழிந்து போகும்.

ஆக வாழ்வில் பொருள் ஈட்டுவது மட்டும் இன்பம் ஆகாது என்றும், வாழ்வில் அனைவரையும் அரவனைத்து வாழவேண்டும் என்றும் குறியிடுகிறார் திருவள்ளுவர்.

நீ மட்டும் ஓடாதே. கூடி வாழ்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்கடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம்....
ஏதிலான் துய்க்கப்படும்” (நாலடி 274)

ஆத்திச்சூடி
ஙப் போல் வளை.
கூடிப் பிரியேல்.
ஊருடன் கூடி வாழ்.
தொன்மை மறவேல்.
கிழமைப்பட வாழ்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அன்பு இன்றி வாழ்வதிலே வெட்கம் இன்றி
அறம் தன்னைப் புறம் தள்ளி செல்வம் சேர்த்து
தன் குலத்தை உறவையெல்லாம் ஒதுக்கி வைத்து
தானும் எதும் அனுபவிக்க எண்ணம் இன்றி
புன் செயலாய்ப் பொருள் தேடி வைக்கும் மாந்தர்
புரியார் அச்செல்வமெல்லாம் வம்பர் கையில்
தன் அருமை தெரியாமல் கேவலமாய்த்
தடுமாறிச் சீரழியும் ஒழிந்தே போகும்

பரிமேலழகர் உரை
அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று - வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர். 


விளக்கம் (பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்புஒரீஇ - ஒருவன் தன் கஞ்சத் தனத்தினால்; உறவினரிடத்தும் நண்பரிடத்தும் அன்புசெய்தலை யொழிந்து; தற்செற்று - தனக்கு வேண்டியவற்றை நுகராது தன்னையுங் கெடுத்து ; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதலாகிய அறத்தைக் கருதவுஞ் செய்யாது ; ஈட்டிய ஒண் பொருள் பிறர் கொள்வார் - வருத்தித் தேடிய சிறந்த பொருளைக் கள்வரும் கொள்ளைக்காரரு மாகிய பிறரே கவர்ந்து பயன் பெறுவர்.

' ஈட்டிய ' என்பதால் சிறிது சிறிதாக நீண்ட காலம் வருந்தித் தொகுத்த தென்பதூம் ஒண்பொருள் என்பதால் நன்றாய் பயன்படக கூடிய தென்பதும், 'பிறர்' என்பதால் சிறிதும் தொடர்பற்றவ ரென்பதும்,பெறப்படும்.'ஒரீஇ' இன்னிசையளபெடை.

"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்".

என்று இரட்டுறலாகக் கூறினார் ஒளவையார் (கொ. வே. 4)

ஈயார்= ஈயாதவர், ஈக்கள். தேட்டு= தேடிய சொத்து , தேன்.தீயார்=கொடியவர். தீப்பந்தத்தை யுடைய குறவர்.

மணக்குடவர் உரை
பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி, அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர். 

மு.வரதராசனார் உரை
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.