Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_102. Show all posts
Showing posts with label Athikaaram_102. Show all posts

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை


குறள் 1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு

இல்லார் - இல்லாதவர்

இயக்கம் - இயங்குகை; குறிப்பு வழி இசைப்பாட்டுவகை; சுருதி பெருமை மலசலங்கள்; வடதிசை கிளர்ச்சி பரப்புகை.

மரப்பாவை - மரப்பொம்மை, சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை.

நாணால் - நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

மருட்டி - மயக்கந்தருவது; கள்; மயங்கும்படிமினுக்குபவள்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது

மருட்டியற்று - மயக்குவது போலாம்

முழுப்பொருள்
அகத்திலே (மனதிலே) நாணம் இல்லாதவர்கள் உயிருடன் வாழ்வது எப்படிப்பட்டது தெரியுமா? மரத்தாலான பொம்மைகளை கயிற்றில் கோர்த்து உயிருடன் இருப்பதுப்போல் காட்டி மயக்குவது போலாம். மயக்கம் தெளிந்த உடன் அவை உயிரற்றவை என்று தெரிந்துவிடும்.  ஆதலால் அகத்திலே நாணம் இல்லாதவர்கள் உயிர் இல்லாத மரப்பாவைக்கு சமம்.



ஒப்புமை
”மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள்” (கம்ப.கைகேசி சூழ்வினை 34)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். (கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.

மு.வரதராசனார் உரை
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person is not ashamed (i.e. he doesn't have shyness (for earning bad reputation) in his/her heart) and his/her existence is like wooden toys/puppets tied on a rope. A person who carefully observes it will know that they are dead organisms. [A dead organism cannot do anything productive by themselves. It is better for them to go under earth and decay]

Questions that I ask to the kid
How is a person who is not ashamed of bad repute is considered as?

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

 

குறள் 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

கொள்கை - கருத்து; கோட்பாடு; பெறுகை; நோன்பு; ஒழுக்கம்; நிகழ்ச்சி; இயல்பு; செருக்கு; நட்பு; பாண்டவகை.

பிழைப்பின் பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

நின்ற - நின்று - niṉṟu   id. adv. Always, permanently; எப்பொழுதும் நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை )

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

நின்றக்கடை -  நிலைத்து விடுமானால்

முழுப்பொருள்
ஒருவரிடம் ஒழுக்கம்/ கோட்பாடு இயல்பாக இல்லையென்றாலோ குற்றஞ்செய்தாலோ அவருடைய குலத்தின் பெயர் கெட்டுவிடும். அதுவே ஒருவரிடம் நாணம் இல்லையென்றால் அவருக்கு வரக்கூடிய நன்மையெல்லாம் கெட்டுவிடும். 

அனைத்து நன்மைகள் எனில் பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் ஆகியவை அடங்கும் என்றுகூறுவார் பரிமேலழகர்.

நாணம் இருந்தால் ஒழுக்கம் தானாய் வரும். ஏனேனில் நாணத்திற்கு அஞ்சி ஒழுக்கத்தை பின்பற்றுவோரும் உண்டு. பின்பு ஒழுக்கம் பழகி ஒழுக்கத்தை விரும்புவர். நாணத்திற்கு அஞ்சினால் சோம்பல், மறதி ஆகியவற்றிக்கு இடம் கொடுக்காமல் இருப்பர். நாணத்திற்கு அஞ்சினால் வினைத்திட்பத்தில் உறுதியாக இருப்பர். நாணத்திற்கு அஞ்சினால் கல்வி, கேள்வி, செல்வம், காலம், பெரியோர், சிற்றினம் சேராது இருத்தல், கண்ணோட்டம், ஆள்வினை, ஊக்கம் போன்றவற்றிற்கு உரிய மதிப்பு கொடுப்பர். நாணம் நல்வழிப்படுத்தும். ஆதலால் ஒழுக்கத்தை விட நாணத்தை சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தில் கொண்டு திருவள்ளுவர் கூறியதாக கொள்ளலாம். அதில் தவறில்லை.

மேலும்: அஷோக் உரை

“கலத்தினிற் பிறந்தமா மாணியிற் காந்துறு
நலத்தினிற் பிறந்தது நடந்த நன்மைசால்
குலத்தினிற் பிறந்திலை கோளில் கீடம்போல்
நிலத்தினிற் பிறந்தமை நிரப்பி னாயரோ” (கம்ப.மீட்சி.65)


பரிமேலழகர் உரை
கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person is indisciplined or commits mistakes, his family name will be deteriorated . However, if a person is not ashamed of bad name then he would not get any good things in life such as education, character, work, social groups etc.  Because if a person is ashamed of getting a bad name or reputation, then he will automatically follow discipline, will have bias for action, will not be lethargic, will be afraid to do mistakes, will be afraid of being part of wrong people, groups, habits. So the feeling of being ashamed itself will drive a person in good path

Questions that I ask to the kid
What happens to a person if he/she is not ashamed of bad repute? 
What happens to a person if he is ashamed of bad repute and stays away from it?

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்


குறள் 1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

வேலி - விலங்குகள் பயிரை அழிக்காதபடி முள் முதலியவற்றால் அமைக்கும் பாதுகாப்பு; மதில்; காவல்; நிலம்; வயல்; ஒருநிலஅளவை; பசுக்கொட்டில்; ஊர்; காண்க:முள்ளிலவு; ஓசை; காற்று; கொடிவகை.
கொள்ளாது, 

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?
 
வியல் - பெருமை; அகலம்; மிகுதி; பொன்; காடு; மரத்தட்டு; பலதிறப்படுகை.

ஞாலம் -  உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணலர்  -விரும்ப மாட்டார்

மேலாதல் - சிறத்தல்

மேலாயவர் - உயர்ந்த பண்புகளை உடையவர்

முழுப்பொருள்
இவ்வுலகில் மண்ணையும் பொன்னையும் விரும்புவோரே மிக மிக அதிகம். ஆனால் பழிபாவங்களுக்கு அஞ்சி நாணத்தை வேலியாக கொள்வதை வாழ்வியலாக கொண்டோரிடம் நாணத்தை விட்டுவிடு உனக்கு பொன்னும் பூமியும் தருகிறேன் என்று கூறினால் அவர்கள் பொன்னும் பூமியும் விரும்பாது நாணத்தை விரும்புவர். நாணத்தை விரும்பி அதனை பழகும் அத்தகையவர் உயர்ந்தோர் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார். (பழி பாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுதும் நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள், 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உயர்ந்தவர் தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.

மு.வரதராசனார் உரை
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

குறள் 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பிறர் -  piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர். பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் (குறள்,319).

பழியும் - பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

பழியும்  - பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

நாணுவார் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

நாணுக்கு - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

பதி - நகரம்; பதிகை; நாற்று; உறைவிடம்; வீடு; கோயில்; குறிசொல்லும்இடம்; ஊர்; பூமி; குதிரை; தலைவன்; கணவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள்.
உறைபதி - உறைவிடம், இருப்பிடம்.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
தனக்கு வந்த பழிக்கு நாணுவது இயல்பானது. ஆனால் பிறருக்கு வரும் பழியையும் தன் பழிப்போல் நினைத்து நாணுவார் என்றால் அவரிடத்திலே  இவ்வுலகத்தில் நாணம் உள்ளது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  

ஏனெனில் தனக்கு பழி வந்தால் மட்டும் நாணுவது ஒருவித சுயநல மனப்பான்மை. அவன் பிரச்சனை அவனது என்று இருப்பது பொறுப்பை தட்டிக்கழிப்பது போன்று ஆகும். 

பிறர் தவறு செய்தால் அறிந்தோ அறியாமலோ தானும் அதற்கு ஏதோ ஒரு வகையில் ஒரு காரணம் என்று உணர்வதே அறிவு. உதாரணமாக ஒரு குடும்பத்திலோ அல்லது ஒரு நிர்வாகத்திலோ அல்லது குழுவிலோ ஒருவர் தவறு செய்தால் அதற்கு நாமும் ஒருவகையில் காரணமே. ஏனெனில் அந்தச் சுற்றத்தில் நாமும் இருந்தோம். நாம் தேவையான அளவு சரியான பாதையில் அவர்களை வழிநடத்தவில்லை. நாம் சரியாக வழிநடத்தி இருந்தால் அவ்வப்போது அவர்கள் செய்வதை அவர்களிடம் இருந்தோ பிறரிடம் இருந்தோ கேட்டு அறிந்து ஆராய்ந்து சரிபார்த்து இருந்தால் தவறின் வேர்களை அறிந்து அவை வளரும் முன்பே களையலாம். குறைந்த பட்சம் நடந்த தவறுக்கு பரிகாரமாக தவறின் வேர்களை ஆராய்ந்து அவற்றை அறுக்க வேண்டும். மீண்டும் நடக்காமல் இருக்க தவறுகளில் இருந்து மீள தேவையானவற்றை செய்ய வேண்டும். 

இதனை தார்மீக தலைமைப் பண்பு என்பர் நிர்வாக மேலாண்மையில். அதாவது Ethical Leadership. இன்னொரு வகையில் Ownership அல்லது பொறுப்பேற்பு எனலாம். 

ஒருவர் வெற்றிபெற்றால் அவர் நமது சொந்தம் என்றும் நண்பர் என்றும் உறவு கொண்டாடுகிறோம் அல்லவா? அப்படி என்றால் அவர் தவறு செய்தால் அதற்கும் நாம் பங்கெடுக்க வேண்டும் அல்லவா? 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

பரிமேலழகர் உரை
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர். (ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

சாலமன் பாப்பையா உரை
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who feels ashamed for not just his mistakes but also for other mistakes (for e.g., siblings, family members, friends, etc. ) is the place where greatness lies in this world. Only because of them the thing call shame still exists. Only because of those people wrong doings are reduced not just self but also the people around them making the world a better places. hence, we say greatness lies in them in this world. For e.g., there are many leaders in the world (e.g., Gandhi, Martin Luther King etc.) who feel ashamed of the untouchability, racial discrimination etc that exited in the world and exists in the world. Only because of them it gained more attention and slowly those are reduced. Hence, we can say greatness lies in them.

Questions that I ask to the kid
Where does greatness lies in this world?
Why are people who are ashamed of their mistakes and the mistakes of others so important to this world?

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

குறள் 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

அன்றோ - அதுவல்லவா 

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

உடைமை - சொத்து (சொந்தம்), உரிமை, மதிப்பு, செல்வம்

சான்றோர்க்கு சான்றோர் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன்

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இன்றேல் - இல்லை என்றால்

பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை

அன்றோஅதுவல்லவா 

பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.

நடை - காலாற்செல்லுகை; பயணம்; அடிவைக்குங்கதி; வாசல்; இடைகழி; ஒழுக்கம்; வழக்கம்; நீண்டநாள்; நடைகூடம்; இயல்பு; அடி; கூத்து; தொழில்; செல்வம்; ஒழுக்கநூல்; நித்தியபூசை; கோயில்; கோள்முதலியவற்றின்கதி; கப்பல்ஏறும்வழி; மொழியின்போக்கு; வாசிப்பின்நோட்டம்; தடவை.

முழுப்பொருள்
நாணுடைமை எனில் பழி பாவங்களுக்கு அஞ்சி வெட்கப்படுதல் என்பதாகும். நீதிநெறியையும் அறத்தையும் பற்றி பணிவுடன் இருத்தல் ஆகும்.

கற்றுணர்ந்த செயலாற்றிய சான்றோர்க்கு நாணுடைமை அணிகலனாக அமையும். அவர்களுக்கு இன்னும் அழகு சேர்க்கும். ஆனால் அந்த நாணுடைமையில்லையெனில் அவர்களிடம் கர்வத்தின் வெளிப்பாடாக இருக்கும் (பெரிய) நடை / போக்கு / செல்வம் / தொழில் எல்லாம் ஒரு நோயாகவே இவ்வுலகம் கருதும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ? இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.

மு.வரதராசனார் உரை
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

சாலமன் பாப்பையா உரை
நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

குறள் 1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
ஊனைக் -ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு

குறித்த - நோக்கி

குறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

எல்லாம் - முழுதும்

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்.

குறித்ததுகுறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல்.

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

முழுப்பொருள்
உயிரானது உடலை பற்றிக்கொண்டு இருக்கும். ஆதலால் அவ்வுடலை பேண வேண்டியது நம் கடமை. உடல் இல்லையென்றால் உயிரும் இல்லை. அதுப்போல உயிர் இல்லையென்றால் உடலுக்கு பிணம்/சவம் என்றே அழைக்கப்படும்.

உயிரும் உடலும் எப்படி ஒன்றுக்குடன் தொடர்புடையதோ அதுப்போலவே சான்றாண்மையும் (மேன்மையும்) நாணமும் ஒன்றுக்குடன் தொடர்புடையது. மேன்மையெனப்படுவது நல்லவற்றை செய்து தீயவற்றை செய்யாது இருப்பது. தீயவற்றை செய்யாது இருக்க நாணம் அவசியம். அந்த நாணம்/வெட்கம் இல்லையெனில் ஒருவர் தீமை செய்ய கலங்கவே மாட்டார். ஆதலால் ஒருவர் சான்றாண்மை பெற நாணம் அவசியம். அதேப்போல் இந்த நாணம் மட்டும் இருந்து நல்ல காரியங்களை செய்யாது இருந்தால் அதுவும் மேன்மை தராது. ஒருவகையில் நல்லவனவற்றை செய்யாது இருந்தாலும் நாணம் நம்மை நாணச்செய்யும். நாணம் என்னும் நன்மை என்று கூறுகிறார் திருவள்ளுவர் ஏனெனில் நாணம் நமக்கு நற்பயன் தருகிறது, மேம்படச்செய்கிறது, நன்னெறிப்படுத்துகிறது.

உயிர் நீங்கினால் சவம் ஆவதுபோல ஆவோம் நாணம் நீங்கினால் மேன்மை நீங்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

மணக்குடவர் உரை
பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று. இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம்

குறள் 1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.
உடை (வி)ஒடி, தகர், உடைஎன்னும்ஏவல்.

எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

எல்லாம் - முழுதும்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்

அல்ல - இல்லை ; அன்று ; மாறுபாடு

நாண் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்; வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உடைமை -  உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

முழுப்பொருள்
எல்லோரும் உண்ணுகிறார்கள் உடை உடுத்துகிறார்கள் வாகனங்களில் செல்லுகிறார்கள் பலர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் ஆபர்கணங்கள் அணிகிறார்கள். ஆனால் இவையும் மற்ற (பொருள்) எல்லாமும் மனிதருக்கு சிறப்பு சேர்க்காது (வேறு என்றால் சிறப்பு என்ற பொருளும் உண்டு). ஏனெனில் மனிதர் எல்லோரும் சமமே. ஆனால் மனிதர்களுக்கு உண்மையான சிறப்பென்பது அவர்களின் நாணுடைமையாகும். அதாவது தீய செயல்களை செய்ய நாணுவது, நாணத்திற்கு அஞ்சி தீ செயலை செய்யாது இருத்தலே மனிதருக்கு சிறப்புடையதாகும் சிறப்பு சேர்க்கும். அவர்களின் செயலே அவர்களை வேற்றுமைப்படுத்தும். அவர்களின் செயல்களே அவர்களுக்கு புகழ் சேர்க்கும்.

என்பதையும் நினைவில் கொள்க.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

கருமத்தால் நாணுதல் நாணுந்

குறள் 1011
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

கருமத்தான் - செயலால்; வினைப்பயனால்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணு - நாணம், வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

திருநுதல் - அழகான நெற்றி

நல்லவர் - அறிஞர்; நல்லோர்; நண்பர்; பெண்கள்;

நாணு - நாணம், வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
ஒவ்வாத செயல்களை (கருமங்களை) செய்தால் உயர்ந்தோர் பழிப்பார்கள். ஆதலால் ஒரு இழிவான கருமத்தை செய்யும் முன்பு அதனால் விளையக்கூடிய பழிக்கு அஞ்சி வெட்படுவது (மானத்தை காப்பாற்றிக்கொள்ள செய்யாதிருத்தல்) ஒருவித நாணமாகும். மற்றொன்று, ஒரு பெண்ணின் அழகிய நெற்றியில் பொலியும் கூச்சமும் நாணமாகும்.

எதற்கு இக்குறள் என்று சற்று யோசித்தால், எனக்கு தோன்றுவது - நாணம் என்பது இயற்கையாக மனதில் (அறிவில்) இருந்து வரும். ஒரு பெண்ணுக்கு நாணம் வரும் தருணம் அமையும். பெரும்பாலும் அதனை அவளை அறியாமலே வெளிப்படுத்துவாள். ஆனால் அதனை அறிந்துக்கொண்டு வெட்கத்தை அடக்குவோரும் உண்டு.  அதுப்போல இழிவான செயல் செய்யும் பொழுது நமது மனதிற்கு அது தவறு என்று இயல்பாக தெரியும். ஆனால் அதனை உள்வாங்கிக்கொள்ளும் நுண்ணறிவு நம்மிடம் இருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் அதனை எளிதாக கடந்து சென்றுவிடுவோம். அது தவறு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பெண்ணென உற்ற பெரும்பழிக்கு நாணும்” (கம்ப.கைகேசிசிசூழ்வினை 15)

பரிமேலழகர் உரை
[அஃதாவது , மேற்சொல்லிய சால்பு பண்பு முதலிய குணங்களான் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையராந் தன்மை . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]

நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல, அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள். ('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக் குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்' என்று உரைப்பாரும் உளர், அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை 
தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம். அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

சாலமன் பாப்பையா உரை
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.

நாணால் உயிரைத் துறப்பர்

குறள் 1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் 
நாண்துறவார் நாணாள் பவர்
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்
நாணால் - நாணத்தினால் - வெட்கபடவைக்கும் உணர்வால்

உயிரைத் துறப்பர் - உயிரை மாய்த்துக்கொள்வார்கள்

உயிர்ப் - உயிருடன் வாழ

பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; மேம்பட்டது, நிமித்தமாக.

பொருட்டால் - மதிப்பிற்காக

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

துறவார் - துறவாதவர்கள்

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

ஆள்பவர் - ஆளுமை செய்பவர்கள்

முழுப்பொருள்
அறம் அல்லாத செயல்களை தீய வழி செயல்களை செய்தால் தனக்கும் தனது மதிப்பிற்கும் இழிவு என்று எண்ணம் உடையவர் நாணத்தின் சிறப்பை அறிவர்.  நாணத்தால் ஏற்படும் சிறப்பகளையும் அறிவர்.

உயிர் என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் மட்டுமே நீடிப்பது. ஆனால் நாம் இறந்த பின்பும் நம்மை பற்றி மக்கள் பேசுவர். ஆதலால் ஒருவரின் நாணம் உயிர் பிரிந்த பின்பும் வாழக்கூடியது. ஆதலால் நாணமே சிறந்தது. அது பல ஆண்டுகள்/நூற்றாண்டுகள் நிலைக்க தக்கது.

அப்படி நாணத்தை வேண்டுவோர் ஒரு நிலையில் வாழ உயிர் முக்கியமா நாணம் முக்கியமா என்றால் உயிரை துறந்து நாணத்தை பற்றுவர். நாணம் அல்லாது உயிர் வாழ்வ வெட்கபடுவர்.

ஆனால் சிறுமை வேண்டுவார் அதாவது சிறு ஆண்டுகள் மட்டுமே நிலைக்கத்தக்க உயிரை வேண்டுவோர் உயிரை ஒரு பொருட்டாக எண்ணி/வேண்டி நாணத்தை துறப்பார்கள். அவர்களை பற்றி அவர்கள் இறந்தபின்பும் இவ்வுலகம் இகழும்.

ஆதலால் பழிக்கு அஞ்சும் குணமுடையவர் பழி ஏற்பட்டால் உயிரை விடுவார்களன்றி, உயிர் வாழ்வதற்காக பழி வரும் செயல் செய்ய மாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நாணில் வாழ்க்கை பசித்தலில் துவ்வாது” (முதுமொழி.4:3)
“ஈன்றவர் இடர்ப்பட எம்பி துன்புறச்
சான்றவர் துயருறப் பழிக்கும் சார்வுமாய்த்
தோன்றலின் என்னுயிர் துறந்த போதலால்
ஊன்றிய பெரும்பழி துடைக்க ஒண்ணுமோ” (கம்ப.கவந்தப்.25)


பரிமேலழகர் உரை
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூற   ப்பட்டது.)

மணக்குடவர் உரை
நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர்.

இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நாண் ஆள்பவர்-நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணால் உயிரைத் துறப்பர் -நாணும் உயிருந் தம்முள் மாறானவிடத்து நாணைக் காத்தற் பொருட்டு உயிர் நீப்பர் ; உயிர் பொருட்டு நாண் துறவார் - உயிரை காத்தற் பொருட்டு நாணினை நீக்கார்.

'உயிரினும் நாண் சிறந்த்தென்பது கருத்து. உயிரினும் சிறந்தன்று நாணே.' (தொல், கள 22) இவ்விரு குறளாலும் நாணுடையார் செயல் கூறப்பட்டது. 'ஆல் ' அசைநிலை.

மு.வ உரை
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்

சாலமன் பாப்பையா உரை
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊர் தூற்றிச் சிரிக்கின்ற ஒரு செயலை
ஒரு நாளும் செய்து விடார் நாணம் கொண்டார்
பேர் கெட்டுச் சீர் கெட்டுப் போனால் கூட
பிழையுள்ளார் வாழ்வது போல் வாழ மாட்டார்
ஆர் கெட்டுப் போனாலும் நாணம் உள்ளார்
அவர் சிறப்பு பெருஞ் சிறப்பு நாணம் காக்க
பேர் பெற்றார் தம் உயிரைத் தந்திடுவார்
பெரிதங்கு நாணம் என்றே உணர்த்திடுவார்

குறட் கருத்து 2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அற வாழ்க்கை தன்னையே அகமகிழ்ந்து ஆளுவார்
அன்பிலே வாழ்ந்து நிற்பார்
புற வாழ்க்கை அவலங்கள் தன்னையே கண்டவர்
பொறுக்காது நாணி நிற்பார்
ஒரு வேளை வாழ்க்கையில் துன்பமே சூழினும்
உயிரையே விட்டு வாழ்வார்
திருவான நாணத்தை ஒரு போதும் விட்டிடார்
தெய்வமே போற்ற வாழ்வார்


மேலும்: இதழ் (நன்றி)
விளக்கம்
நாம் செய்யும் செயல்களை மனிதவாழ்க்கைக்கு தகுந்த செயல்கள், தகாத செயல்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். தகாத செயல்களைச் செய்ய நாணப்படுவதை திருவள்ளுவர் ‘நாண் உடைமை’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். அதில் நாணத்தை மதிப்பவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதை இக்குறளில் சொல்கிறார். 

நாணம் என்பது தனிமனிதப் பண்புகளிலே மிகமிக உயர்ந்த தனிச்சிறந்த பண்பாகும். நாணம்  என்னும் பண்பை எத்தகைய நிலையிலும் தனதாக வைத்திருப்பவரே நாண் ஆள்பவர் ஆவர். உடற்கூச்சத்தால் பெண்களுக்கு வரும் நாணம் வேறு, தகாத செயல்களைச் செய்ய மனம் கூசி, வெட்கிப் பின்வாங்கி நாணுவது வேறு. அத்துடன் தனக்கு தன்குடும்பத்துக்கு, தன் இனத்துக்கு நேர்ந்த பழியை, மாசை எண்ணி மனங்கூசி நாணுவதும் வேறு. இத்திருக்குறள் நாணம் என்று மனிதரின் மனக்கூச்சத்தையே குறிக்கிறது. சிலருக்கு தகாத செயல்களைச் செய்ய நாணப்படும் தன்மை இயல்பாகவே இருக்கும்.

இத்தகைய நாணம் உடையோர் உயிர்வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யத்தகாத செயல்களைச் செய்தும், மாற்றானிடம் கைகட்டி, வாய்பொத்தி நாணத்தை காற்றில் பறக்க  விட்டு உயிர் சுமந்து வாழமாட்டார்கள். அப்படி நாணத்தை ஆளும் பண்புடையோர், தாம் வாழும் வாழ்க்கைக்கும் நாணத்திற்கும் இடையே பெரும் சோதனை ஏற்படும் போது நாணம் எனும் உயர் பண்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தமது உயிரையே விட்டுவிடுவார்கள். 

நாணம் எனும் நற்பண்பை தன் உயர்பண்பாகக் கொண்ட பார்த்திபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபனும் தன் இனத்துக்கு வந்த துன்பத்தைக் கண்டு நாணி, அதைத் துடைத்து எறிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து நாணத்தை ஆள்பவனாக திருவள்ளுவரின் இக்குறளுக்கு இலக்கியமானான்.

திருவள்ளுவர் இக்குறளில் நாணம் உடையோருக்கு அவரது உயிரைவிட நாணம் மிகப் பெரியது என்று மிக  நுட்பமாகச் சொல்கிறார். 

பிறர்நாணத் தக்கது

குறள் 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 

பொருள்
பிறர் - மற்றவர்கள் / மேன்மக்கள், அயலார்

நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

தக்கது - தகுதி; தகுதியானது.
நாணத் தக்கது - செய்ய வெட்கப்படும் செயல்

தான் - ஒருவர்

ஆனா - ஆனாமை - An abstract noun be longing to a kind of defective negative verb--that which is inseparable; not leav ing, unceasing, நீங்காமை

நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணா னாயின் - வெட்கப்படாமல் செய்வார் என்றால்

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

அறம் நாணத் தக்கது - அறம் கொண்ட நபர்கள் அவரை கண்டு கூச்சபட்டு வெட்கப்படும் விலகி

உடையது - செல்வமாக கொண்டது; கொண்டது

உடையது  - நிற்பர்

முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலை செய்வான் என்றால் அது அறம் சார்ந்து இருக்க வேண்டும். அறம் என்றால் நேர்மை, ஒழுங்கு. அவன் செய்யும் செயல், மற்றவர்கள் செய்ய வெட்கப்படும் செயலாக இருக்க கூடாது.

அறம் இல்லாத செயல் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் சான்றோர்கள், மேன்மக்கள், நல்லவர்கள் செய்ய அஞ்சுகின்ற, வெட்கப்படுகின்ற, அறமற்ற (தீங்கு விளைவிக்கின்ற) ஒரு செயலை ஒருவர் கருணையின்றி கவலையின்றி வெட்கமேயின்றி செய்வார் என்றால், அவர்களுடைய செயல்களை கண்டு கூசி அத்தகையவரிடம் இருந்து நல்லவர்கள் விலகி நிற்பர்.

நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

“அஞ்சலள் ஐயன தல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் நாணிலள் என்ன நாண மாமால்” (கம்ப.கைகேசி சூழ்வினைப்ப் 17)

ஆத்திச்சூடி
அறம் செய விரும்பு.
இயல்பு அலாதன செய்யேல்.
அழகு அலாதன செய்யேல்.
பழிப்பன பகரேல்.
நன்மை கடைப்பிடி.
நாடு ஒப்பன செய்.
பீடு பெற நில்.
உத்தமனாய் இரு.
வேண்டி வினை செயேல்.
நிலையில் பிரியேல்.
நுண்மை நுகரேல்.
நேர்பட ஒழுகு.
பிழைபடச் சொல்லேல்.
காப்பது விரதம்.
சக்கர நெறி நில்.
சூது விரும்பேல்.
தூக்கி வினை செய்.
குணமது கைவிடேல்.
ஒப்புரவு ஒழுகு
அஃகஞ் சுருக்கேல்.
மண் பறித்து உண்ணேல்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரோடு உலகெல்லாம் அஞ்சுகின்ற
உயிர்க்கெல்லாம் கேடுகளே தந்து நின்ற
சீரில்லா அறமற்ற செயல்களையே
செய்வதற்கு நல்லவர்கள் நாணி நிற்பார்
காரற்ற வானம் போல் கருணையில்லார்
கவலையின்றி நாணம் விட்டு அதனைச் செய்வார்
பார் போற்றும் அறமதுவோ நாணம் கொண்டு
பாவியவன் தனை விட்டு விலகிச் செல்லும்

பரிமேலழகர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து 

விளக்கம் 
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணானாயின்- கண்டாருங் கேட்டாருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன்தான் நாணாது செய்வானாயின்; அறம் நாணத் தக்கது உடைத்து- அந்நாணாமை அறம் நாணி அவனைவிட்டு நீங்கத் தக்க குற்றத்தை யுடையதாம்.

நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

மணக்குடவர் உரை
உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது. 

மு.வரதராசனார் உரை
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.