Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_105. Show all posts
Showing posts with label Athikaaram_105. Show all posts

துப்புர வில்லார் துவரத் துறவாமை


குறள் 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
துப்புரவு - தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு

இல்லார் - இல்லாதவர்

துவரத் - துவர - மிக; முழுதும்.

துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம்.
துறத்தல்  - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.
துறவாமை -  எல்லாவாற்றையும் துறக்காமல் இருத்தல் (மானத்தை மட்டும் துறந்து)

உப்பிற்கும் - உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு

காடிக்கும் - காடி - புளித்தகஞ்சி; புளித்தகள்; சோறு; கஞ்சி; புளித்தபழரசம்; ஊறுகாய்; ஒருவகைவண்டி; ஒருமருந்து; கழுத்து; நெய்; அகழி; கோட்டையடுப்பு; மாட்டுக்கொட்டில்; மரவேலையின்பொளிவாய்.

கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.

முழுப்பொருள்
அன்றாடம் ஒருவர் அடிப்படையாக நுகரும் பொருட்களான உணவு உடை ஆகியவைக்கூட இல்லாமல் வறியவராக இருப்பவர்கள் இல்லறத்தை முழுவதுமாக துறக்காமல் துறவறத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு காரணம் அவருக்கு உண்பதற்கு சோறு கஞ்சியும் உப்பும் தேவை என்ற கூற்றை / அறைகூவலை / பஞ்சப்பாட்டை முன்வைப்பதற்காக. அவர்(/அவ்வறியவர்) வாழ்வதற்கு உந்துதலுடன் இருக்கிறார் அதற்கு சற்று உணவு வேண்டும் என்பதற்கான அறைகூவல் அது. 

மேலும் வீடுபேறு நோக்கிய துறவறம் என்பது இல்லறத்தில் இருந்து தப்பிப்பதற்கானது அல்ல. இல்லறத்தில் இருந்து தப்பிப்பது என்றால் அது உயிரை மாய்த்துக்கொள்வது. அதனை செய்யாமல் உயிர் வாழ விரும்புகிறவர் அதற்கு அறைக்கூவலாகவே உணவு வேண்டுகிறார். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம். துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்


குறள் 1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
இன்றும் - இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

வருவது - வருதல் 

கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

நெருநலும் - நெருநல் - நேற்று

கொன்றது - கொல் -  கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

போலும் - pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச் சூழப்போடும் நெல்; மங்கலக்குறியாக நெல்வைத்து நிரப்பிய நாழி.

முழுப்பொருள்
என்னை(என்னையும் என் குடும்பத்தையும்) கொன்றதுப் போன்ற துன்பத்தை நேற்று (அதாவது கடந்த சில நாட்களாக சில மாதங்களாக சில வருடங்களாக) தந்த இந்த வறுமை இன்றும் வந்து என்னை கொல்லுமா? துன்புறுத்துமா? வறுமையில் உழலுவோர் அதனை விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. வறுமை எத்தனை கொடியது என்றும் அதனை அஞ்சியே தினம் தினம் இருக்கின்றனர் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர்.  

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்? (அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.).

மணக்குடவர் உரை
இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

சாலமன் பாப்பையா உரை
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்


குறள் 1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும் 
[பொருட்பால், குடியியல், நல்குரவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நற் - நல்ல- நன்மையான; மிக்க; கடுமையான

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

சொல்லினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

நல்கூர்-தல் - nalkūr-   4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. To be wearied; களைப்படைதல். நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் (மணி. 13, 72). 3. To suffer;துன்புறுதல். மாலைநீ யாயின் மணந்தா ரவராயின்ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை (சிலப். 7, 50).  

நல்கூர்ந்தார் - வறியோன்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பொருட்பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
நூல்கள் பல கற்று நன்கு உணர்ந்து அல்லது அனுபவத்தின் மூலமும்  பலருடன் கேட்டும் தர்க்கம் செய்தும் நன்கு உணர்ந்து மற்றவர்களுக்கு அதனை எடுத்து கூறினாலும் அதனை கூறுபவர் செல்வம் இல்லாத வறியவராக இருப்பின் அதனை கேட்பவர் அதனை தளர்ச்சியுடனே கேட்கக்கூடும். அதாவது வறியவர் கூறியதன் பொருளை முழுவதுமாக எடுத்துக்கொள்ளாமல் அல்லது கேட்ட உடன் சிறிது காலத்தில் மறந்துவிடுவார் அல்லது பொருட்படுத்தாமல் மதிக்காமல் அலட்சியம் செய்துவிடுவார். 

மேலும் தாம் சொல்வதை கேட்க ஆட்கள் இல்லை என்றாலும் அல்லது சொல்வதை மனதார கேட்டுணராதவர்கள் இல்லை என்றால் அதுவும் மன அழுத்தம் தரும். ஊக்கத்தை குறைக்க கூடும். 

ஆதலால் நல்லவை கூறினாலும் சொல்பவரிடம் செல்வம் இருந்தால் அதனை காது கொடுத்தும் மனம் கொடுத்தும் கேட்போர் விகிதம் அதிகமாக இருக்கும். அதுமட்டும் இன்றி, செல்வம் என்பது ஒரு செயல் செய்தலோ அல்லது வேலை செய்தாலோ அல்லது கடமையை ஆற்றினால் தான் கிடைக்கும். சும்மா வந்துவிடாது செல்வம். ஆதலால் சொல்பவர் செயலாற்றி செல்வம் ஈட்டுபவராக இருத்தல் வேண்டும். வறியவராக இருக்க கூடாது.

“ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற சொலவடையைக் கூறுவதே இக்குறள். 

இதையே ஒரு நாலடியார்(115) பாடல் இவ்வாறு கூறுகிறது. “உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும், ஆதலின் படியாதவரேயாயினும் செல்வரது வாய்ச்சொல் மதிக்கப்படும். வறிஞரது வாய்மொழி, அவர் கற்றவரே யாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும்”. அப்பாடலானது:

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். (நாலடி 115)

ஒரு இன்னா நாற்பது (29) பாடல்வரியும் இக்குறள் கருத்தை அடியொட்டியதே. “இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா”

மேலும் கீழ்க்காணும் குறளை நினைவில் கொள்க, ஒருவர் நற்பொருளை நன்கு உணர் சொல்கிறார் என்றார் அவர் முதலில் அதனை பின்பற்றி இருக்கவேண்டும். அப்படி பின்பற்றினால் அவர் வாழ்வில் நல்ல இடத்தில் இருப்பார். வறுமையில் வாடமாட்டார். ஆதலால் வறுமையில் இருப்போரை தோல்வியடைந்தவராக, பேதையாக, வாய்ச்சொல் வீரராக கருதி அவர் கூறுபவற்றை காதுக்கொடுத்து கேட்கமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can say noblest things, most valuable advise for business/work/life etc, highest wisdom etc in the most efficient manner with clarity. It might look agreeable to the listener too. However, if the person is poverty or doesn't have sufficient money then his words would be most taken for granted (because people would think that the person is only preaching and he didn't practise his words). Two important things 1) Poverty is not respected 2) Money is essential for life. One should not neglect money.

Questions that I ask to the kid
When does wise thoughts lose attention or value? Why?

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

குறள் 1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
நல்குரவு - வறுமை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

இடும்பையுள் - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.

பல் - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு.

குரைத் - ஒலி; பெருமை; பரப்பு; அசைநிலை; இசைநிறை; குதிரை

துன்பங்கள் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

சென்று - செல்லும்  ; செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
வறுமை எத்தகையது தெரியுமா? வறுமை என்பது துன்ப நிலை மட்டும் அன்று. வறுமை என்பது பல வேறு வகையான துன்பங்கள் அனைத்தும் வந்து சேர்ந்து மேலும் துன்பத்தை தரக்கூடியது. பல வேறு வகையான துன்பங்கள் என்றால் மனவருத்தம், உடல் வருத்தம், நோய், இகழ்ச்சி, சோர்வு என்று இன்னும் பல வேறு கேடுகள் உள்ளடங்கும். குற்றங்கள் செய்ய தூண்டுவது. குற்றம் புரிந்தால் அதற்கு தண்டனையும் உண்டு. அதுவும் துன்பமே.

ஆதலால் வறுமை வரமால் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வறுமை நிலை அடைந்தால் அதில் இருந்து விரைவில் வெளியே வர ஆவனவற்றை செய்யவேண்டும்.  வறுமையில் இருப்போர் வெளியே வர தன் கையினை கொடுத்து உதவ வேண்டும்.

வறுமை ஒரு கொடிய வியாதி. அது, உடம்பையும், மனதையும், ஆத்மாவையும் நலிந்து போகச் செய்துவிடுகிறது” என்று வைக்கம் முகம்மது பஷீர் கூறுகிறார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும். (குரை - இசை நிறை. செலவு - விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும். இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம்- இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.

மு.வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

குறள் 1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
இற்பிறப்பு - நல்லகுடியிற்பிறத்தல்; உயர்குடிப்பிறப்பு

இற்பிறந்தார் - நல்ல குடியில் ; உயர்குடியில் பிறந்தவர்கள் 

கண்ணேயும் - இடத்தே

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இளிவந்த - இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை

சொற் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பிறக்கும் - பிறத்தல் - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்

தரும் - கொடுக்கும் 

தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

முழுப்பொருள்
நற்குடியில் பிறந்தவர்கள் அல்லது தன்குடியை மேன்மையாக்கிக் கொண்டோர் இழிவான சொற்களையும் தீய சொற்களையும் பிற வாடக்கூடிய சொற்களையும் பேச மாட்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட நற்குடியில் இருந்தாலும் வறுமை என்னும் நோய் /துன்பம் வந்துவிட்டால் அவர்களுக்கு சோர்வு/ தளர்ச்சி வந்துவிடும். அந்த தளர்ச்சி அவர்களை இழிவான சொற்களை பேசச்செய்யும்.

ஆதலால் சோர்வின் இயல்பையும் வறுமையின் கேடுகளையும் உள்ளுணர்ந்து வறுமை வரவிடாமல் ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேப்போல் நம் நண்பர் அல்லது உற்றார் வறுமையில் இழிவான சொற்களை கூறிவிட்டால் அதனை பெரிதாக பொருட்படுத்தாது அவரை மன்னித்து அவருக்கு உதவ வேண்டும். 

வறுமை ஒரு கொடிய வியாதி. அது, உடம்பையும், மனதையும், ஆத்மாவையும் நலிந்து போகச் செய்துவிடுகிறது” என்று வைக்கம் முகம்மது பஷீர் கூறுகிறார்.

ஔவையார் நல்வழிப் பாடலில் பத்து சிறந்த குணங்களைச் சுட்டி, ஏழ்மையும், அதன் காரணமாகப் பசியும் வந்திட நற்குடிப் பிறப்பாளராயிருப்பினும் அவையெல்லாம் நில்லாமல் பறந்துவிடும் என்கிறார். இப்பத்துப் பண்புகளும் அழிதலாலே ஒருவரிடமிருந்து இழிசொற்களால் இரந்து வேண்டுதலும் பிறக்கின்றன. ஈயென இரத்தல் இழிது என்று முன்பே படித்திருக்கிறோம். இனி, அப்பாடலானது:

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.).

மணக்குடவர் உரை
நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.

மு.வரதராசனார் உரை
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

குறள் 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
தொல் - பழைய; இயற்கையான

வரவும் - வரவு - வருவாய்; வருகை; வரலாறு; விளைவு; வழி; வணங்குகை

தோலும் - சருமம்; உடம்பின்; மேலுள்ளதோல்'புறணி; விதையின்மேற்றோல்; கேடகம்; துருத்தி; மெல்லென்றசொல்லால்விழுமியபொருள்பயப்பச்செய்யும்நூல்; புகழ்; அழகு; சொல்; யானை; தோல்வி; நற்பேறின்மை; உடம்பு; பக்கரை; மூங்கில்.

கெடுக்கும் - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல்

தொகையாக - கூட்டம்; சேர்க்கை; கொத்து; மொத்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; தொகுத்துக்கூறுகை; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்

நல்குரவு - வறுமை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.

முழுப்பொருள்
வறுமையினை ஆசையாக ஒருவர் ஏற்றால் என்னவாகும்? அதாவது செயல் ஆற்றாது பொருள் ஈட்டாது இருத்தல். அறம் பொருள் இன்பம் வீடு என்பது மனிதன் ஆற்றவேண்டிய நான்கு வேடங்கள். அறம் என்னும் தர்மத்தை (தனது வேலைகளை, செயல்களை, பொறுப்புகளை) ஆற்றினால் தான் பொருள் ஈட்ட முடியும். அப்படி பொருள் ஈட்டாமல் இருந்தால் தொன்மையான தன் குடியின் செல்வங்களும் புகழும் மொத்தமாக அழிந்துபோகும். 

ஏழ்மை, அது தரும் வளமின்மை இவைத் தவறாக தூண்டும் ஆசையினால் திருடவும், பிறர் பொருளுக்கு ஆசைப் படுதலையும் தூண்டுமென்பது பொதுவாக உணரப்படுவது.

இப்படி (பொருள், கல்வி, உடல், உறவுகள் போன்ற) செல்வங்களை ஒருவர் இழந்தால் அவர் உடலாலும் மனதாலும் நோய்வாய் பட்டு துன்பப்படுவார் என்பதை சொல்லி அறியவேண்டியது இல்லை.

“பசி வந்திட பத்தும் பறந்துபோகும்” என்ற சொலவடை நன்கு அறியப்பட்ட ஒன்றே.

இன்மையைப்பற்றி நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது. பாய்ந்து ஒலிக்கின்ற அருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்ற கூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே! உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையுங் கெடும். இனி அப்பாடலானது.

பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் – கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு (நாலடி 285)

நான்மணிக்கடிகை பாடல் வரியும், “நலனும் இளமையும் நல்குரவின் கீழ் சாம்” (நான்மணி 81) என்று கூறுகிறது.

மணிமேகலை காப்பியத்தில், பாத்திரம் பெற்ற காதையில், கூறப்படும் வரிகளும் இதே கருத்தையே அழகாகக் கூறுகின்றன.

“குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் 
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் 
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் 
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் 
பசிப்பிணி என்னும் பாவி…” (மணி 11:76-80)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்' (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.).

மணக்குடவர் உரை
தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு. நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று. தொல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

இன்மை எனவொரு பாவி

குறள் 1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
நல்குரவு- வறுமை

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

பாவி - தீமையாளன்; சாது; வரக்கூடியது; பேதை.
பாவி - (வி)மதி; பாவனைசெய்.

மறுமையும் - மறுபிறவி; மறுவுலகம்.

இம்மையும் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு.

இன்றி - இல்லாமல்

வரும் - வரும் ; வந்து சேரும் 

முழுப்பொருள்
வறுமை என்னும் ஒரு தீமை ஒருவன் வாழ்விலே வந்துவிட்டால் அது இந்த பிறவியாக இருந்தாலும் மறுபிறவியாக இருந்தாலும் இனிமை இல்லாமல் தான்  வரும். அதாவது எந்த ஒரு பிறப்பிலும் வறுமை வந்துவிட்டால் அது இன்பம் இல்லாமல் தான் வரும். இன்பம் இல்லாத நிலையே வறுமை என்றும் நாம் உணரலாம். வறுமையில் பிறருக்கு கொடுத்து உதவவும் முடியாதவற்றவராகிவிடுவோம். மனதில் இன்பம் இல்லை என்றால் நமக்கு மோட்சமும் இல்லை.

ஆதலால் ஒருவன் அவனுடைய அறத்தை செய்து பொருள் ஈட்ட வேண்டும். வறுமை வந்து விட்டால் இன்பம் பொய் விடும். அதனால் தான் அறம் பொருள் இன்பம் வீடு என்று கூறுகின்றார்கள்.

அது மட்டும் இன்றி நம் மனதில் வறுமை இருக்கா கூடாது. அதாவது நாம் பிறருக்கு செய்த நல்ல காரியங்களை நினைத்து நாம் மகிழ்ச்சியடைய முடிந்தால் நமக்கு இன்பம். அப்படி நினைக்க முடியாத அளவிற்கு நாம் சுயநலமாக இருந்திருந்தால் நாம் வறுமையில் இருக்கிறோம் என்று உணரலாம். அவ்வெண்ணம் நம் எல்லா இன்பத்தையும் எடுத்துச்சென்றுவிடும். 

"துன்பம் இல்லாத நிலையே ஷக்தி" போன்று "வறுமை என்ற நிலையில் இன்பம் இல்லை"

அருளுடைமை அதிகாரத்தில் ஏற்கனவே 
“பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு”, (குறள் 247) என்று கூறி வறிஞர்க்கு இம்மை இல்லையென்று கூறியுள்ளார். 

குறுந்தொகைப் பாடலொன்றும், 
“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்” (63:1)
“இல்லோன் இன்பம் காமுற் றாஅங்
கரிதுவேட் டனையால்” (குறந் 120:11,2) 
என்று கூறுகிறது.

பசிப்பிணி என்னும் பாவி” (மணி 11:80)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.

மணக்குடவர் உரை
நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

இன்மையின் இன்னாதது யாதெனின்

குறள் 1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
நல்குரவு - nalkuravu   n. நல்கூர்-. Poverty,indigence, destitution; வறுமை நல்குரவென்னுநசை (குறள், 1043).

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

'இன்மையின் -  இல்லாமையில், வறுமையுள்

இன்னாது - iṉṉātu   n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.)

இன்னாதது - துன்பம் தருவது

யாது? - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

இன்மையின் - இல்லாமையில், வறுமையுள்

இன்மையே - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை;

இன்னாதது -  துன்பம் தருவது

முழுப்பொருள்
இல்லாமை/வறுமையானவற்றுள் வறுமை என்னவென்றால்? வறுமையே என்கிறார் திருவள்ளுவர். வறுமையை போல் துன்பம் தருவது வேறேதும் இல்லை. ஆதலால் வறுமையை போல் கொடிது வேறேதும் இல்லை என்கிறார் திருவள்ளுவர். 

பி.கு: ஆதலால் வறுமையை தடுப்பது மேன்மையான செயலாகும். இதனால் தான் என்னவோ ஈகை என்னும் கொடை செயலுக்கு அவ்வளவு மேன்மை உண்டு என்று சான்றோர்களும் அறநூல்களும் மறுபடி மறுபடி சொல்லுகின்றன.

வறுமையில் இருந்து விலக பொருள் ஈட்ட வேண்டும். ஒருவர் பொருள் ஈட்ட அறம் அதாவது தனது கடமையை (அன்றறிவாம் என்னாது) தக்க நேரத்தில் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் பொருள் ஈட்டில் வறுமையில் இருந்து விடுப்படலாம்.

ஔவையார் தனிப்பாடல் திரட்டிலே அரியது, பெரியது, கொடிது என்ற பொருள்களில், கொடிது யாது என்று இவ்வாறு கூறி துவக்குகிறார்.

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை.

வறுமையினும் கொடுமையானது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் கருத்தையே ஔவையும் வழிமொழிகிறார்.

டென்மார்க்கைச் சார்ந்த தற்காலக் கவிஞரான வேதா அவர்களின் அழகான கவிதை வெளிப்பாட்டையும் பார்ப்போம். கவிதை வறுமையைப் பற்றியதாயினும், அருமை, எளிமை.

இல்லாமை தரும் நிலைமை
வறுமை! பெரும் கொடுமை!
வெறுமை! இதிலில்லை பெருமை!
உண்மை உழைப்பு வறுமை 
வராமை காக்கும்! முயலாமை
இயலாமை இணைதலே வறுமை.

தனிமை ஒரு வகை வறுமை.
இனிமை வார்த்தை பேசாமை,
அன்பின்மை வேண்டாத வறுமை.
அறியாமை, அறிய மனமில்லாமை, 
ஈயாமை, ஆதரவு இல்லாமை,
உண்மை பேசாமையும் வறுமை.

மை போன்றிவை கருமைத்
தன்மை கொண்டு மேன்மை, 
பெருமை அழிக்கும் உண்மை.
செழுமை அழிக்குமிச் சிறுமை
வராமை காத்தல் வலிமை.
வறுமை தடுத்தல் மேன்மை.

ஒப்புமை
“அரிதுமன்றம்ம இன்மைய திளிவே”  (நற் 262.10)
“எற்றுள்ளும் இன்மையின் இன்னாத தில்லை” (நான்மணி. 30)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , நுகரப்படுவன யாவும் இல்லாமை .]
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று).

மணக்குடவர் உரை
 நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்

குறள் 1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
நெருப்பினுள் - நெருப்பு - அக்கினி; இடி; உடற்சூடு; கோபம் முதலியவற்றின் கடுமை; ஒழுக்கத்தில் ஒருபோதும் தவறாதவர்.
துஞ்சலும் - துஞ்சல், v. n. sleep, death.
ஆகும் - நடக்கும்
நிரப்பினுள் - நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி.
யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு
ஒன்றும் - ஒன்றும்
கண்பாடு - கண் இமை பொருந்துதல், உறக்கம், நித்திரை
அரிது - அரியது, அருமை; பசுமை

நல்குரவு - வறுமை

முழுப்பொருள்
நெருப்பு என்னும் அக்கினி உடலினை சுட்டெரித்து மனிதனை சாம்பலாக்கிவிடும். அத்தகைய நெருப்பினில் ஒருவர் அமர்ந்து கூட உறங்கவிட முடியும் [புராணங்களில் நாம் தவ ஆற்றலால் யோக வலிமையால் அது முடியும் என்று நாம் அறிவோம்], ஆனால் வறுமையின் நினைவால் (கவலையால்) கண் சோர்வடைந்து  உறக்கம் இல்லாமல் இருப்பது மிக மிக அரிதாகும் என்கிறார் திருவள்ளுவர். வறுமை அவ்வளவு கொடியது!!

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்-ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது-ஆயின், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது.

நெருப்பினும் வறுமை கொடிது என்றவாறு. இதுவும் அவன் துயரக் கூற்று. உம்மை யிரண்டனுள் முன்னது அருமை; பின்னது முற்று. இனி, ’யாதொன்றும்’ என்பது ஒரு சிறிதும் எனினுமாம். இவ்வும்மை இழிவு சிறப்பு. இத்தொண் (ஒன்பது) குறளாலும், வறுமையின் கொடுமை கூறப்பட்டது. ’நிரப்பு’ மேற் கூறியதே.

மணக்குடவர் உரை
நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது

மு.வரதராசனார் உரை
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா

குறள் 1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
அறம் தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

சார்தல் சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

அறஞ்சாரா - அறம் சாராமல் - அறத்தோடு பொருந்தாத

நல்குரவு -நல்கூர் - வறுமை; வறுமையை ஒருவன் உடைவான் என்றால்

ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்

ஈட்டுதல் - கூட்டுதல்; சம்பாதித்தல்

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல்.

ஈன்றதா யானும் - தன்னை வயிற்றில் ஈன்ற தாயாக ஆனாலும்

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

போல - போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

பிறன்போல - பிறர்களை / அன்னியர் / அயலார் / மற்றவர்கள் / உறவு அல்லாத முன் பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை போல

நோக்குதல்பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கப் படும் - பார்க்க படுவார் / கருதப் படுவர்

முழுப்பொருள்
அறத்துடன் பொருந்தாமல் (அநியாய வழியில் சென்று) ஒருவன் வறுமையில் வாழ்வான் என்றால் அவனை பெற்ற தாயானாலும் அவனை அன்னியராய் தான் கருதுவார். 

ஓர் அன்னையால் தன் குழந்தையின் பசியை பொறுத்துக்கொள்ள முடியாது. அவள் உடனே அக்குழந்தைக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வாள். ஆனால் அப்பெற்ற அன்னையே ஒருவனை அன்னியராய் கருதுவார் என்றால் அதைவிட தண்டனை வேறேதுமில்லை. 

(ஆனால், ஒருவன் அற வழியில் சென்று ஊருக்கு தருமம் செய்து செய்து வறுமையில் செல்வான் என்றால், அத்தாய் அவனை கண்டு நிறைவுற்று என் மகன் என் மகன் என்று மனம் நிறைவாள்)

ஒப்புமை
“இலாஅ அர்க் கில்லை தமர்” (நாலடி 283)
“வாழாதார்க் கில்லை தமர்” (நாலடி 290)

“பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்” (வளையாபதி)

“சுற்றமும் துணையும் மனைவாழ்க் கையும்
அற்ற போதணை யாரவர்” (அப்பர்.காட்டுப்பள்ளி.5)


குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
              உழைப்பாலும்  உண்மையாலும்  பணம்  படைத்து
                        உயர்ந்ததொரு  நற்குடும்பம்  வழி வழியாய்ச்
              சிறப்பாக  வாழ்ந்திடுவோர்  ஊருக்கெல்லாம
                        செய்வதிலே மனம்  நிறைந்து  வாழ்ந்திருப்போர்
              பொறுப்பாக  வாழ்ந்தவர்கள்  பிள்ளைகளும்
                        பொறுப்புணரச் செல்வத்தைப்  பிரித்தளித்தார்
              சிறப்பான  பிள்ளைகளில்  ஒருவர்  மட்டும்
                        செல்வமெல்லாம்  இழந்திட்டார்  ஆண்டு  ஒன்றில்


              வரப்  போகக் கூட  அந்தப்  பிள்ளை  தனக்கு
                        வழி  செய்தார் இல்லை அன்பாய்ப் பெற்ற  தாயார்
              கரம்  நீட்டி  ஊரினிலே  பிச்சையேற்று
                        கவலையிலே  வாழ்கின்றார் என்ற போதும்
              தரம்  இழந்து  அழிகின்ற  பிள்ளை  தன்னை
                        தன்  மகனாய்ப்  பார்க்கவில்லை  ஈன்ற  அன்னை
              வரம்  தந்த  வாழ்வதனில  அந்தப் பிள்ளை
                        வறுமையினைப்  பெற்ற  வழி  உணர்ந்த  அன்னை

              ஊரார்  போய்  அவருக்காய்  அன்னையிடம்
                        உதவி  கேட்டு நிற்கையிலே  அன்னை சொன்னார்
              பேரான  பேர்  பெற்ற    குடும்பம்  தன்னில்  பிறந்தானே
                        பெயரழிக்கும்  வழியிலெல்லாம
              ஊர்  ஊராய்ச்  சூதாடி  பெண்கள்  வாழ்வை
                        ஒழித்தவரை  அழித்தங்கு   வறுமை கொண்டான்
              சீராக  வாழ்ந்தங்கு  ஏழையரை  சீர்  படுத்தி
                        அதனாலா  வறுமை  கொண்டான்

              ஊரெங்கும்  குளக்கரைகள்  வெட்டினானா
                        உயர்  கல்விச்  சாலைகளைக்  கட்டினானா
              தேரோடும்  தெருக்களையைச்  சரி   செய்தானா
                        தெய்வ  வழி பாடுகளில்  அழிந்தொழிந்தானா
              சீரான  அறமற்ற  வழிகளிலே   தன்
                        செல்வமெல்லாம்  அழித்தான்  என்  மகனேயில்லை
              நேரான  வழிகளிலே  அழித்திருந்தால்
                        நெஞ்சமெல்லாம்  நிறைந்திருப்பேன் என்றாள்  அன்னை

             அறஞ் சார்ந்த  வழிகளிலே  வறுமை  வந்தால்
                        அன்னை  மனம்  பூரிக்கும் அதனை விட்டு
             புறம் போகி   தவறுகளால்  செல்வமெல்லாம்
                        போக்கி நின்றால்  மகன்  என்று சொல்லுதற்கே
             விரும்பாளாம்  அன்னையவள்  அவனைக் கண்டால்
                        வேறெவரோ  போல்  விலகி  விரைந்திடுவாளாம்
             தரும்  கருத்தைக்  குறுங் கருத்தாய்த்  தந்து  நின்றார்
                        தமிழ்த்  தாயின்  தலை மகனாம்  வள்ளுவரும்

பரிமேலழகர் உரை
அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.

விளக்கம் 
(அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறம் சாரா நல்குரவு-அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும்-தன்னைப் பெற்று வளர்த்த தாயாலும் அயலான்போல புறக்கணிக்கப்படுவான்.

அறஞ்சாராமை யாவது, முற்பிறப்பில் அறஞ்செய்யாமையால் கரணியத் தொடர்பும் , இப்பிறப்பில் அறஞ்செய்ய முடியாமையால் கருமியத் தொடர்பும் இன்மை. ’நல்குரவு’ ஆகு பொருளது. உயர்வு சிறப்பும்மை பெற்றதாயின் இயற்கையான அன்புச் சிறப்பைக் காட்டி நின்றது. கொள்வதொன்று மின்மையோடு கொடுக்கவும் நேர்தல் பற்றி, வறியவனை உறவினரெல்லாரும் துறப்பர் என்பதாம்.

மு.வரதராசனார் உரை
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.