Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_109. Show all posts
Showing posts with label Athikaaram_109. Show all posts

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

 

குறள் 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்டார் - உண்டவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அல்லது - தீவினை; தவிர

அடு - (வி)சமை, தீயிற்பாகமாக்கு; சேர்

நறா - கள்; தேன்:மணம்.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டார் - கண்டவர், உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்

கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār   n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).

மகிழ் - இன்பம்; குடிவெறி; மது; மரவகை.

செய்தல்  -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

முழுப்பொருள்
காய்ச்சியக் கள் ஆனது அதனை உண்டவர்க்கு மட்டும் இன்பத்தை தரும். அதுவும் கள் உள்ளே இருக்கும் பொழுது மட்டும் இன்பத்தை தரும். கள்ளை கண்டாலோ அல்லது கள்ளை நினைத்தாலோ அல்லது கள்ளைப் பற்றிக் கேட்டாலோ இன்பம் தராது. ஆனால் என் காதலியை கண்டாலேப் போதும் எனக்கு இன்பம் வருகிறது. ஆதலால் இக்காதலைப்போல் இன்பம் தருவது வேறு இல்லை.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று. (அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. 'அரிமயிர்த் திரள் முன்கை'(புறநா.11)என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.).

மணக்குடவர் உரை
அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று. இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.

மு.வரதராசனார் உரை
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

சாலமன் பாப்பையா உரை
காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

 

குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
பிணை - இணைக்கப்படுகை; உடன்பாடு; பொருத்து; கட்டு; உத்தரவாதம்; விலங்குகளின்பெண்; பெண்மான்; பூமாலை; புறந்தருகை; விருப்பம்; தெப்பம்.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

மருளுதல் - மயங்குதல்; வெருவுதல்; வியத்தல்; ஒப்பாதல்.
வெருவுதல் - அஞ்சுதல்.
மடநோக்கும் - Bashful, timid look;  மருண்டபார்வை

நோக்கும் - நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நாணும் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

உடையாட்கு – உடைய பெண்ணவளுக்கு

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

எவனோ  - வேறு ஏது 

ஏதில - பிறமாது; மாற்றாள்; சக்களத்தி.

தந்து - தரும்?

முழுப்பொருள்
பெண்மான்கள் அழகுடன் கூடிய அச்சப்பார்வையைக் கொண்டு இருக்கின்றன. அதுப்போல் என் காதலியும் புறத்தே அழகுடன் கூடிய அச்சப்பார்வையையும் ஆனால் உள்ளத்தே நாணமும் கொண்டு இருக்கிறாள். இவை அவளை எவ்வளவு அழகாக காட்டுகின்றன. அப்படி இருக்கையில் அவள் அணிந்துள்ள அணிகலன்கள் / நகைகள் அவளுக்கு பிற எந்த அழகை தந்துவிடும்? அவள் அவற்றை ஏன் அணிந்துக்கொண்டு இருக்கிறாள்?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து? (மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய
வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.

மு.வரதராசனார் உரை
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை
பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்


குறள் 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
கடா - மதம் பிடித்த

கடாவுதல் - செலுத்துதல்; ஆணிமுதலியனஅறைதல்; குட்டுதல்; வினாவுதல்; தூண்டுதல்; விடுதல்.

கடாதல் - கடாவுதல், வினாவுதல்.

கடா - மதம் பிடித்த

அக் - அந்த

களிற்றின் - களிறு - ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள்.

கடாக்களிறு - மதயானை.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

படாம் - முகபடாம் - யானையின் முகத்திலிடும் அலங்காரத்துணி.

மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல்

படாஅ - தொய்வில்லாத, சாயாத

முலை - கொங்கை, தனம்; பாலூட்டுஇனங்களின்உடலில்பாலுண்டாகும்இடம்.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு-

துகில் - நல்லாடை; துணிக்கொடி; விருதுக்கொடி.

முழுப்பொருள்
மதம் பிடித்த யானையின் கண்களை மறைக்கும் துணியினைப்போல காதலியின் தொய்வில்லாத சாயாத முலைகளின் மேல் சேலை துணி உள்ளது. யானையின் கண்களை அத்துணிகள் மறைப்பதால் மற்றவர்கள் உயிர்ப்பிழைத்தனர். இல்லையேல் மதம்கொண்ட யானை மற்றவர்களை அடித்தோ அல்லது தூக்கிவீசியியோ கொன்று இருக்கும். அதுப்போல் காதலியின் முலைகள் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. அவற்றை சேலைதுணியே கட்டுப்படுத்துகிறது. 

ஏன் முலைகள் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன? மனம் காதலன் மேல் அளவுகடந்த காதல் கொண்டிருக்கலாம். காதலி காதலனிடம் முயங்க நினைக்கலாம். மனம் முயக்கம் கொள்ள நினைக்கிறது என்பதன் வெளிப்பாடாக முலைகள் கட்டுக்கடங்காமல் இருக்கக்கூடும். அதனை சேலை மறைக்கிறது. அது அப்பெண்ணின் நாணத்தையும் காப்பாற்றுகிறது. காதலனையும் காப்பாற்றுகிறது.

கி.வா.ஜ-வின் ஆராய்ச்சி உரை பெருங்கதையிலிருந்து (1.45:6.10) ஒரு காதையிலிருந்து சில வரிகளை முற்று கருத்தையும் ஒத்திருப்பதாகக் காட்டுகிறது.

“அமிழ்துபெய் செப்பின் அன்ன வெம்முலை
நுகர்பூங் காமத்து நுதிமுகம் முரிஞ்சிக்
கடாஅ யானைக் கண்ணகம் மறைத்த
படாஅத்து அன்ன படிவத்து ஆகிய
வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி”

"கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் நடிகை நந்திதா தாஸ் கல்யாணத்திற்கு புறப்படும் காட்சியில் மாப்பிளையின் பேர் தெரியுமா என்று கேட்ட உடன் பெயரைச் சொல்லுவாள், அப்பொழுது எதேச்சையாக அவள் தடுக்கி விழுவாள் (விழுவதுப்போல் காட்சி வரும்), அப்பொழுது உடன் இருக்கும் நபர் கேலியாக சொல்லுவாள், (மாப்பிளையின்) ”அவத பேர சொன்ன உடன் பயத்துல ச்சீலை(சேலை) கீழ விழுதுட போகுது”னு கேலியாக காட்சி.




மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும். (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.).

மணக்குடவர் உரை
மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.

மு.வரதராசனார் உரை
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

குறள் 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
கொடும்  - கொடுமை - கடுமை; முருட்டுத்தன்மை; தீமை; வளைவு; மனக்கோடடம்; அநீதி; பாவம்; வேண்டாதசொல்.

புருவம் - கண்ணின்மேல்உள்ளமயிர்வளைவு; புண்ணின்விளிம்பு; வரம்பு; குதிரை.

கோடு - வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்.

கோடா - வளையாத 

மறைப்பின் - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்.

நடுங்கு - நடுங்குதல் - அசைதல்; அஞ்சுதல்; மனங்குறைதல்; பதறுதல்; நாத்தடுமாறுதல்; தலையசைத்தல்; ஒப்பாதல்; அதிர்தல்.

அஞர் - துன்பம்; நோய் சோம்பல் வழுக்குநிலம் அறிவிலார்

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

அல - ala   same as அல்ல, see under அல்.  

செய்யல - செய்யாது 

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

இவள் - ivaḷ   pron. இ³. [K. M. ivaḷ.] Thiswoman or girl; she, used to denote the femaleamong rational beings.  

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
பெண்ணின் புருவம் எவ்வளவு அழகு வாய்ந்தது அது எவ்வளவு பேசுகிறது  ஆதலால் ஒரு காதலனுக்கு எவ்வளவு துயர் என்பதை குறிப்பதாகவே இக்குறள் தோன்றுகிறது. 

நான் பார்த்த பெண்ணிடம் காதலில் விழுந்தேன். வளைந்துள்ள அவளது புருவத்தாலும் கண்ணாலும் என்னுடன் பேசுகிறாள் வாயால் பேசாமல். அப்புருவங்களுக்கு எவ்வளவு வலிமை. அவள் மனம் பேசவேண்டியவற்றையெல்லாம் என்னிடம் பேசிவிடுகிறதே அப்புருவம். ஆதலால் நான் காதல் நோயால் தவிக்கிறேன். அது எனக்கு நடுங்கும் துயரை தருகிறது. 

இதுவே அவளது புருவங்கள் வளையாத கோடுகள் போன்று இருந்து இருந்தால் இந்த காதல் பேச்சுகள் எல்லாம் இருந்து இருக்காது. நானும் இந்த நடுங்கும் துயரை அனுபவித்து இருக்க மாட்டேன்.  

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா. (நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா. இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது

மு.வரதராசனார் உரை
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

சாலமன் பாப்பையா உரை
அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
கூற்றமோ - கூற்றம் - பகுதி; கொடும்பகைவன், யமன்; அழிவுண்டாக்குவது; நாட்டின்பகுதி; சொல்.

கண்ணோ - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பிணையோ - பிணை - இணைக்கப்படுகை; உடன்பாடு; பொருத்து; கட்டு; உத்தரவாதம்; விலங்குகளின்பெண்; பெண்மான்; பூமாலை; புறந்தருகை; விருப்பம்; தெப்பம்.
பிணையோ - பிணை - (வி)பிணையிடு; கட்டு.

மடவரல் - பெண்; மடப்பம்
மடப்பம் - பேதைமை; மென்மை; இணக்கம்; ஐந்நூறுஊருக்குத்தலையூர்; அரண்மனையிற்பெண்; மருதநிலத்தூர்.

நோக்கம் - கண்; பார்வை; கிரகநோக்கு; தோற்றம்; உயர்ச்சி; அழகு; காவல்; கருத்து; அறிவு; கவனம்; விருப்பம்; குறிப்பு

இம் - இவை 

மூன்றும் - மூன்றும் 

உடைத்து -  உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
என்னை கொள்ளும் யமனோ? என்னுடைய மேனி முழுவதும் படரும் கண்ணோ? அல்லது பயம் தெரியும் பெண்மானா? என்று அறியிலேன் நான். ஏனெனில் என்மீது இந்த பெண்ணின் பார்வை நான் சொன்ன மூன்றையும் கொண்டது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேற் கண்ணோ கடுங்கூற்றம்” (சிலப் 7:12)

“ஒன்றே உயிரை உடையீர் ஒருவிப் போமின் இவள்கண்
அன்றே கூற்ற மாகி அருளாது ஆவி போழ்வது” (சீவக 917)

“கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழிகொண்டாள்” (கம்ப.மிதிலைக் காட்சி 32)

“கூற்றுறழ் நயனங்கள்” (கம்ப.உண்டாட்டு 21)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது. (இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.).

மணக்குடவர் உரை
கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து. இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.

மு.வரதராசனார் உரை
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை
என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்

குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
கண்டார் - கண்டவர், உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்

கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār   n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்

தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்.

தோற்றத்தான் - தன்னுடைய தோற்றத்தினால்

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை

தகைப் - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

பேதைக்கு - அறிவிலி, அறிவிலான்,  தரித்திரன், எளிய வன்

அமர்த்தன - அமர்த்தல் - அமரச்செய்தல்; ஏற்படுத்தல்; மாறுபடுதல் பொருதல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். 

முழுப்பொருள்
தலைவன் தலைவியின் கண்களை காண்கிறான். அவளுடைய  அக்கண்களும் பொலிவும் அவன் உயிரை உண்ணும் அளவிற்கு ஈர்ப்புச்சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. உயிரைக்கொல்லும் அளவிற்கு அவனை ஆட்கொண்டுவிடுகிறதே!! அச்சச்சோ! பெண் என்றால் தகைமை/ அன்பு  குணம் கொண்டவள் என்று தானே நினைத்தோம். ஆனால் அதற்கு மாறாக இந்தப் பேதையின் கண்களும் பொலிவும் நம் உயிரை வாங்குகிறதே.

‘அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்’ என்றார் பாரதிதாசன். இப்படி அழகு உயிரை கொல்லுதலும் ஒருவித இன்பம் தான் போலும் 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன. (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது

மு.வரதராசனார் உரை
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

சாலமன் பாப்பையா உரை
பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.

பண்டறியேன் கூற்றென் பதனை

குறள் 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
தகையணங்குறுத்தல் - தலைவியின் அழகுதலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும் அகத்துறை
தகையணங்குறுத்தல், v. n. comparing a lady present with another, to annoy a lover (in love poetry).

தகை - அன்பு

அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய்; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு

உறுத்தல் - uṟuttal   n. உறுத்து-. 1. Increasing; மிகுக்கை. (பிங்.) 2. Bringing intocontact, clapping; ஒற்றுகை. (திவா.)

பண்டு - பழைமை; முற்காலம்; நிதி.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியேன் - அறியாதவன் ; நினைக்ககாதவன்

கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்

என்பதனை - என்பது அதனை

இனி - இனிமேல் , இப்பொழுது; இனிமேல் பின்பு இப்பால் இதுமுதல்.

அறிந்தேன் - உணர்ந்தேன்

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு

பெண்தகை - பெணின் குணங்கள் ஆகிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

யான் - தன்மையொருமைப்பெயர்

பேர்  - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு.

அமர்க் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

கட்டு - உறுதி; காவல்; அரண்; ஆணை; உறவின்கட்டு; தடைக்கட்டு; யாக்கை; மூட்டை; குறி; வரம்பு, கட்டுப்பாடு; மிகுதி; மலைப்பக்கம்; பொய்யுரை; வளைப்பு; திருமணப்பற்று; வீட்டின்பகுதி.
(வி)பந்தி, தளை, பிணி; வீடுமுதலியனகட்டு; தழுவு; மணஞ்செய்; தடைகட்டு; கதைகட்டு; சரக்குக்கட்டு; அடக்கு; இறுகு; மூடு.

முழுப்பொருள்
கூற்று என்றால் காலன் (உயிரை வாங்கும் எமன்) என்று பொருள். முன்பு நான் காலனை பற்றி அறியவில்லை உணரவுமில்லை (உதாரணமாக போர் செய்யும் உயிர்பயம் அற்ற ஒரு வீரன் உயிரை எடுக்கும் காலனை பற்றி அறியவில்லை உணர்ந்ததும் இல்லை). ஆனால் காலனை பற்றி அறிந்தேன் உணர்ந்தேன் இப்பொழுது. ஏனெனில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பெண்ணின் குணங்களைக்கொண்ட இந்த அழகிய பெண்ணிடம் நான் செய்யும் போராட்டத்தில் என்னை இழந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். இவள் என் உயிரை வாங்குகிறாள். ஆதலால் எமனை இப்பொழுது உணர்ந்தேன்.

இக்கருத்தைப் பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள் சிலம்பும், கலித்தொகையும், சீவக சிந்தாமணியும், கம்ப இராமாயணமும் அழகாகக் கூறுகின்றன.

”வலைவாழ்நர் சேரி.... வேண்டுருவம் கொண்டுவேறோர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது”, 
“கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே மடங்கெழுமென் சாயல் மகளா யதுவே” என்று சிலப்பதிகாரமும் (7:10.12), 

“கோமகள் உருவமாய்க் கூற்றம் போந்தது” (சீவக 2451), 
“கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினை.... 
பெண்ணுடையப் பேதை நீர்மைப் பெருந்தடங்கண்ணிற் றம்மா” என்று சீவக சிந்தாமணியும் (2458) என்று கூறினாலும், கம்பனின் மிதிலைப் படலப் பாடலொன்று அழகானது.

“வண்ணமேகலைத் தேரொன்று வாணெடும்
கண்ணி ரண்டு கதிர்முலை தாமிரண்
டுண்ணி வந்த நகையுமுண் டாமெனில்
எண்ணும் கூற்றினுக் கித்தனை வேண்டுமோ?”  (கம்ப.மிதிலைக்காட்சி 144)

”வேண்டுருவம் கொண்டதோர் கூற்றங்கொல்” (கலி.56:9)

“பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது
நாணுடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பில் திவவியாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென” (சிலப்.5:219-23)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து. (பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.).

மணக்குடவர் உரை
பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து. இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு.

மு.வரதராசனார் உரை
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

சாலமன் பாப்பையா உரை
எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ

குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
தகையணங்குறுத்தல் - தலைவியின் அழகுதலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும் அகத்துறை
தகையணங்குறுத்தல், v. n. comparing a lady present with another, to annoy a lover (in love poetry).

தகை - அன்பு

அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய்; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு

உறுத்தல் - uṟuttal   n. உறுத்து-. 1. Increasing; மிகுக்கை. (பிங்.) 2. Bringing intocontact, clapping; ஒற்றுகை. (திவா.)  

அணங்கு - தீண்டிவருத்தும் தெய்வப்பெண்; அழகு; விருப்பம்; மயக்கநோய்

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

ஆய் - அழகு; நுண்மை சிறுமை மென்மை வருத்தம் இடைச்சாதி; தாய் கடைவள்ளல்களுள்ஒருவன்; மலம் பொன் அருவருப்புக்குறிப்பு; முன்னிலைஒருமைவினைமுற்றுவிகுதி; ஏவலொருமைவிகுதி; ஆக ஒருவிளியுருபு.

மயில் - mayil   n. cf. mayūra. [M. mayil,Tu. mair.] 1. Peacock, peafowl, Pavo cristatus; பறவைவகை. பயில்பூஞ் சோலை மயிலெழுந்தாலவும் (புறநா. 116). 2. See மயிற்கொன்றை,1. 3. False peacock's-foot tree. See மயிலடிக்குருந்து. (மலை.) 4. See மயூராசனம். முத்த மயிறண்டு(தத்துவப். 107).

கொல்லோ?கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கனன்மரம் -  kaṉaṉ-maram   n. கனல் +.A kind of tree said to shine in the dark;சோதிவிருட்சம். (சங். அக.)  

குழை - kuḻai   n. குழை¹-. 1. Tender leaf,sprout, shoot; தளிர் பொலங்குழை யுழிஞை (புறநா.50). 2. [K. koḻaci.] Soft mud, mire; சேறு (திவா.)3. Hole; துளை கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக.1369). 4. Tube, pipe; குழல் (பிங்.) 5. Conch;சங்கு. (பிங்.) 6. Ear; காது மணித்தோடுங் குழையிலாட (அஷ்டப். சீரங்கநாயகி. ஊச. 3). 7. A kind ofearring; குண்டலம் மின்னுக்குழையும் பொற்றோடும்(சீவக. 1658). 8. Sky; ஆகாசம் (பிங்.) 9. cf.guhina. Jungle; காடு (பிங்.) 10. Indian water-lily, Nymphaea lotus alba; நெய்தல் (W.)  

கனங்குழை - kaṉaṅ-kuḻai   n. ghanaகுழை யணிந்த பெண் கனங்குழை மாதர்கொல் (குறள், 1081).  

மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல்.

கொல்! -   இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

மாலும் - மால் -பெருமை; பெருமையுடையவன்; திருமால்; அருகன்; இந்திரன்; காற்று; புதன்; சோழன்; மலை; வளமை; செல்வம்; பழைமை; மேகம்; கண்ணேணி; மயக்கம்; ஆசை; காமம்; கருமை; விட்டுணுக்கரந்தை; எழுதக்கருவி; செங்கற்கட்டளை; காளவாய்; மாதிரி; எல்லை; வலைவகை; இலாயம்; அரசிறைவகை; சொத்து; அரண்மனை.

மால்(லு)-தல் - māl-   3 v. intr. To beconfused, perturbed; மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செவி யெருவை (அகநா. 3).

என் - என்னுடைய 

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
ஒரு  தலைவன் என்னும் ஆண்மகன் தன் தலைவியை கண்டபின் அவளைப்பற்றி அவன் கொள்ளும் மயக்கம் அச்சம் பற்றிய பாடல் இது.

இக்குறளில் கனங்குழை என்னும் சொல்லுக்கு சிலர் கனமான குண்டலம் அணிந்த பெண் என்ற பொருள் பல உரைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. ஏனெனில், அணங்கு என்ற தெய்வத்தையும், மயில் என்ற பறவையையும் குறிப்பிடும் இடத்தில் கனல்(நெருப்பு) போன்ற ஒளி கொண்ட இளந்தளிரையே இதுகுறிக்கும் என்று நான் நினைக்கிறேன். மூன்றும் மானுடத்தைத் தாண்டியது.

நான் பார்த்த பெண் பெண்ணா? ஏனெனில் இவளை நினைத்தால் இவள் தெய்வப்பெண்ணோ என்று தோன்றுகிறது. அல்லது இவள் கொஞ்சும் அழகு மயிலோ? அல்லது கனல் போன்ற பிரகாசம் (மற்றும் வெப்பம்) கொண்ட இளந்தளிரோ? இப்படிப்பட்ட அழகிய பெண்ணை நினைத்து என்னுடைய நெஞ்சம் மயக்கத்தில் (ஆசையில், காமத்தில்) உள்ளது.

இந்த ஆண் தான் பார்த்த பெண்களில் யாரையும் அழகு என்று நினைத்தது இல்லை என்று நாம் கருதலாம். அவனை பொருத்தவரையில் மானுட பெண்கள் எல்லோரும் ஒரு சராசரி முகத்தை உடையோர் என்று நினைத்து இருக்கலாம். அல்லது இயற்கையுடன் ஒப்பிடுகையில் மற்றமானுடரின் முகம் அழகற்றவையாக அவனுக்கு தெரிகிறது. ஆனால் காதல்வயப்பட்ட உடன் அவனுடைய காதலியின் முகம் அவ்வளவு அழகாக அவனுக்கு தோன்றுகிறது. ஆதலால் இது மானுட முகம் என்று அவனால் நம்பமுடியவில்லை.

மேலும், இயற்கையை ரசிக்கும் நுண்ணுணர்வை உடைய ஒரு ஆண்மகனால் தான் ஒரு பெண்ணை அழகுணர்ச்சியுடன் பார்க்கமுடியும் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , பொழில் விளையாட்டு விருப்பான் ஆயம் நீங்க , அதன்கண் தமியளாய் நின்றாளை , வேட்ட விருப்பான் இளையார் நீங்கத் தமியனாய் வந்து கண்ணுற்ற தலைமகன் , அவள் வனப்புத் தன்னை வருத்தம் உறுவித்தலைச் சொல்லுதல் . இது , கண்ணுற்ற பொழுதே நிகழ்வதாகலின் , முதற்கண் கூறப்பட்டது .]

(தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?.

மு.வரதராசனார் உரை
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

சாலமன் பாப்பையா உரை
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே

குறள் 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 
நண்ணாரும் உட்குமென் பீடு
[காமத்துப்பால்,  களவியல்,  தகையணங்குறுத்தல் ]

பொருள்
ஒள் -  adj. Good, excellent, நல்ல. 2. Beautiful, அழகுள்ள. 3. Bright, glitter ing, luminous, பிரகாசமான. 4. Knowing, அறிவுள்ள. 5. Abundant, மிகுதியான. The ள் of this word is changed into ட் and ண் before appropriate letters, whence the nouns ஒட்பம், and ஒண்மை. ஒள்ளழல்கண்ணிற்கால. His eyes emitting bright sparks of fire through rage

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.
நுதற்கு - நெற்றி
நுதற்குறி - n. நுதல்³ +.Sacred marks on the forehead; புண்டரம் திலகம்முதலிய நெற்றிக்குறிகள். (திவா.)

 - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

ஒ - பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு

உடைந்ததே -> உடைதல் - பிளத்தல், தகர்தல், முறுக்கு அவிழ்தல், மலர்தல், வெளிப்படுதல், சாதல்

ஞாட்பு - போர்; போர்க்களம்; படை; கூட்டம்; கனம்; வலிமை.
ஞாட்பினுள் - போர்க்களத்தில் படைகள் மத்தியில் வலிமையாக

நண்ணார் - பகைவர்
நண்ணாரும் - பகைவரும்

உட்கு - அச்சம்; நாணம்; மிடுக்கு; மதிப்பு.
உட்கும் - மதிக்கும், அச்சம் கொள்ளும்

என் -  என்னுடைய
பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.

முழுப்பொருள்
இவ்வளவு அழகான ஒளிமிக்க நெற்றியை கொண்ட இப்பெண்ணின் முகத்தை கண்டால் நான் நாணுகிறேன். தலைகுனிகிறேன். ஆச்சர்யமாக உள்ளது!!

ஏன் ஆச்சர்யமாக உள்ளது என்றால்? நான் பெரு வலிமை வாய்ந்த அரசன். போர்க்களத்தில் என்னுடைய வலிமை பற்றி என்னுடன் போர் புரியாத பகைவர்க்கூட கேட்டுத் தெரிந்து என் மீது அச்சம் கொள்வர். 

இவ்வளவு வலிமை கொண்ட என்னை சிறுமையாக்கிவிட்டல் இந்த பேரழகி! ஆ ஆ! [நானும் மானுடன் ஆனேனே! (சொந்த வரி)]. காதல் காதல்!

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே” (குறுந் 129.5-6)

“பிறையென, மதிமயக் குறூஉம் நுதலும்” (குறுந் 226:2-3)

“நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே” (குறுந் 95:4-5)

“போருள், அடல்மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்
மன்றம் படர்வித் தவள்” (கலி 141:8-10)

“ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதியாகக்
கூசமூன் றுலகுங் காக்கும் கொற்றத்தேன் வீரக் கோட்டி
பேசுவார் ஒருவற் காவி தோற்றலென் பெண்பால் வைத்த
ஆசைநோய் கொன்ற தென்றா லாண்மைதான் மாசுண் ணாதோ” (கம்ப.மாயாசனகப்.13)

பரிமேலழகர் உரை
(நுதலினாய வருத்தம் கூறியது.) ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; ஒள் நுதற்குஓ உடைந்தது - இம்மாதரது ஒள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது. ('மாதர்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதானல், பகைவராதல் பெற்றாம்.. 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும் காய வலியும் கொள்க. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று.).

மணக்குடவர் உரை 
இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது, போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி. இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலம்நோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(அவள் நெற்றியினாலான வருத்தங் கூறியது)
ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு-போர்க்களத்திற்கு வந்து என் வலிமையை அறியாத பகைவரும் வந்தறிந்தார் வாய்க்கேட்டு அஞ்சுதற்கேதுவான என் பெருவலிமை; ஒள்நுதற்கு ஓ உடைந்ததே-இப்பெண்ணின் ஒளிபொருந்திய சிறு நெற்றியொன்றிற்கே ஐயோ! அழிந்துவிட்டதே!

பெண் என்பது அதிகாரத்தால் வந்தது. பீடு என்பது பெருமை பேர் முதலியவற்றையுந் தழுவும். 'ஓ' கழிவிரக்கம் பற்றிவந்தது. 'ஓஒ' இசைநிறையளபெடை, உம்மை எச்சம், ஏகாரம் தேற்றம், "பெருமையும் உரனும் ஆடூஉமேன" (தொல். கள. 7) என்று கூறிக்கொள்ளும் பெருமையெல்லாம் பெண்ணிடத்துச் செல்லா தென்று, காமத்தின் இயல்பு கூறியவாறு.

"கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும் 
பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே 
தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றா 
ளாம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே"

என்னுந் திருக்கோவைச்செய்யுள் (21) ஈங்குக் கவனிக்கத்தக்கதாம்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
போர்க்களத்தில் பகைக் குலத்தார் கண்டாலே அஞ்ச வைக்கும்
பொரு தடக்கை தடந்தோள்கள் பொலி மார்பு கொண்டு நின்று
ஆர்க்கின்ற பெரு வீரன் அணையில்லா வெற்றி கொண்டான்
நீர்த்துப் போய் நிற்கின்றான் நெஞ்சிழந்து வேர்க்கின்றான்
பார்த்தானாம் பாவையவள் பால் பிறையின் நெற்றியினை
படீரென்று உடைந்ததுவாம் பாவியவன் பீடெல்லாம்
வார்க்கின்றார் வள்ளுவராம் வாழ வைக்கும் பேராசான்
வகையாகக் காமத்துப் பாலதனில் சுவையாக

ஏங்க வைத்து விட்டதடி ....!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)
ஏங்க வைத்து விட்டதடி ....!!!

என்னை கண்டு அஞ்சாத 
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத 
மங்கையும் இல்லை .....!!!

அத்தனையும் ஒரு நொடியில் 
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய் 
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம் 
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம் 
ஏங்க வைத்து விட்டதடி ....!!!

மு.வ உரை
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!.

சாலமன் பாப்பையா உரை

களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே

போர்க்களத்துக்கு வராதவர்கள் கூட, பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவாகிய என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்துபோயிற்றே!


அடடா 
போர்க்களத்தில்
பகைவர்களைப்
பயந்தோடச் செய்யும் 
என் வீரம்
இவளின்
பேரொளி வீசும் 
நெற்றியினைக் 
கண்டதும்
ஒன்றுமற்றதாகிப்
போனதே


எப்பேர்பட்ட வீரனானாலும் கட்டழகிகளைக் கண்டால், வீரத்தை இழக்கக்கூடும்.ராமாயணம் கூட கைகேயி, சீதை,சூர்ப்பணகை என பெண்களை மையமாக்கியே அமைந்தது.மகாபாரதம், திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியியால் உருவானது.
ஆகவேதான் பெரியோர்கள் "ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே' என்றனர்.பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள்.ஆமாம்..அதற்கும் குறளுக்கும் என்ன சம்மந்தம்? என்கிறீர்களா..இருக்கிறது..

இக்குறளைப் பாருங்கள்..


ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்தில் (என் வீரத்தால்) என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், ஒளி பொருந்திய (அவள்) நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே! (என்கிறானாம் ஒருவீரன்)
(அதாவது..அவன் வீரத்தையே அழிக்கும் அளவு அவளது நெற்றி அழகே இருக்கிறதாம்)

எதிரியின்
படைகளை பொடியாக்கிய
என்
வெற்றியும் வீரமும்
ஒளிவீசும்
உன் 
நெற்றியின் முன்னால்
தோற்றுப்போனது.

நிலா 
தனக்கான ஒளியை
எதனிடம் கடன்வாங்குகிறது
சூரியநிடமா?
இல்லை
உன் சுந்தரவதனத்திடமா?

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்

குறள் 1082
நோக்கினாள்  நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள் 
நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கினாள் -  பார்த்தாள், கவனித்தாள், விரும்பினாள்

நோக்கு - கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு.

எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர்.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
 
தாக்கு - அடி; போர்; படை; வேகம்; பாதிக்கை; சாதனை; குறுந்தடி; இடம்; பெருக்கல்; நெல்வயல்; பற்று; வளமை; ஆணை; நிலவறை; மிகுசுமை; எதிர்க்கை; எதிரெழுகை.

தாக்குதல் - எதிர்த்தல்; மோதுதல்; முட்டுதல்; பாய்தல்; தீண்டுதல்; அடித்தல்; வெட்டுதல்; பற்றியிருத்தல்; எண்கூட்டிப்பெருக்கல்; குடித்தல்; சரிக்கட்டுதல்; உறைத்தல்; கடுமையாதல்; பழிவாங்குதல்; தலையிட்டுக்கொள்ளுதல்; பலித்தல்; பெருகுதல்; பாரமாதல்; நெளித்துப்போதல்.

அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய்; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு

தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத் திரைச்சீலை; முசுண்டி என்னும் ஆயுதம்.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

அன்னது - அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு.

உடைத்து - உடைதல் - இருக்கும்


முழுப்பொருள்:
நான் அவளை நோக்கி பார்க்கும் பார்வைக்கு எதிராக அவள் வீசும் பார்வையானது, தான் ஒருத்தி மட்டுமே தீண்டி தாக்கும் சக்தி உடைய ஒரு தெய்வம், துணைக்கு ஒரு படையும் கொண்டு தாக்குவதற்கு ஒப்பானது.

பெண்ணின் பார்வைக்கு உரிய வலிமையை, மிக அருமையாக எடுத்து உரைக்கிறது இக்குறள். வீழ்ந்தவர்கள் அல்லது வீழ்த்தப்பட்டவர்கள் அதிகம் உண்டானதால் தான் என்னவோ, பெண்ணின் கண்கள் ஆயுதங்களுக்கு ஒப்பாக அடிக்கடி கூறப்படுகிறது (வேல் போன்ற விழிகள் ) .

ஒப்புமை
”நோக்குங்கால் நோக்கின் அணங்காக்கும்” (கலி.131.5)
“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” (கம்ப.மிதிலைக்காட்சி 35)
“நோக்கிய நோக்கெனும்’ (கம்ப.மிதிலைக்காட்சி 36)

“தாக்கணங் காவ தெவன்கொல் அன்னாய்” (ஐங்குறு 23)
“தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு” (சிலப்.14:160)
“மூப்புடை முதுமைய தாக்கணங்குடைய” (மணி 3:57)
“தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே” (கம்ப.மிதிலைக்காட்சி.36)

பரிமேலழகர் உரை
(மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து. (மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும். தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது.

மு.வரதராசனார் உரை
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

என்னை தாக்கிவிட்டாய்....!!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)
நான் பார்த்த நொடியில்
பெண்ணே நீ என்னை
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!

உன்
கண் கண்ணாக இருந்தால்
தப்பி இருப்பேன் - பார்வையோ
அணுமின் கதிர்போல் திரட்டி
என்னை தாக்கிவிட்டாய்....!!!

அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை
தாக்கி விட்டாய் .....!!!