Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_122. Show all posts
Showing posts with label Athikaaram_122. Show all posts

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

 

குறள் 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நம் - எல்லாம் என்னும் சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை; வணக்கம்

நீத்தார் - முனிவர்; துறவியர்.

என்பர் - என்பார்கள்

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணார்- காணாது - காணாமல்

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

இவ் - இந்த

ஊரவர் - ஊர் மக்கள், ஊரார்

முழுப்பொருள் 
பிரிந்து சென்றுள்ள தலைவன் காலைப்பொழுதுகளில் என்னுடன் இருப்பதில்லை. காலை பொழுதுகளை மட்டும் கண்டுவிட்டு என் தலைவன் என்னை துறந்துவிட்டார் என்று இவ்வூர் மக்கள் அவரை ஏசுகின்றனர். ஆனால் கனவுகளில் அவர் என்னுடன் வந்து சேர்ந்துவிடுகிறார். கனவுகளில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை இவ்வூர் மக்கள் காண்பதில்லை என்று தலைவி கூறுகிறாள்.

அதாவது தலைவன் பிரிந்து சென்றுள்ளான் என்ற ஏக்கம் அவளுக்கு இருப்பினும் இவ்வூர் மக்கள் அவரை ஏசுவதை அவள் விரும்பவில்லை. இரவில் என்னுடன் இருக்கிறார் அது எனக்கு மகிழ்ச்சி. அவர் என்னுடன் வந்து சேர்ந்துவிட்டால் காலைவேலைகளில் இவ்வூர்மக்களின் ஏசுகளை பொசுக்க முடியும். அதாவது தன் வருத்தத்தை ஊர்மக்களின் பிரச்சனையாக கூறுகிறாள் தலைவி. உண்மையில் அது அவளுடைய ஆதங்கம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.).

மணக்குடவர் உரை
இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?. இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.

சாலமன் பாப்பையா உரை
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

 

குறள் 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காரை - விரும்பாதவர் 

நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

நோவு - நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம்.

நோவர் - நோந்துக்கொள்வர்

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

காதலர்க்  -  கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணாதவர் - காணாது - காணாமல்

முழுப்பொருள் 
காலைப்பொழுதுகளில் விழித்திருக்கும் பொழுது தன்னை விரும்பாத, தன்னிடம் வந்து அன்பாக இல்லாத தலைவனை வெறுப்பார்கள் சில கன்னியர்கள். அவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது? அறியாமையா? ஆம். இவர்கள் கனவில் வரும் தலைவனிடம் இருந்து அன்பை பெறாதவர்களாக அவ்வின்பத்தை அறியாதவர்களாக தான் இருப்பார்கள் என்று தலைவி கூறுகிறாள். 

ஏன் அப்படிக் கூறுகிறாள் தலைவி? பிரிந்து சென்றுள்ள தலைவன் நனவுகளில் வரவில்லை. அதனால் அவர் என்னை விரும்பவில்லை என்றாகிவிடுமா? கனவுகளில் வருகிறாரே. அவ்வின்பம் இப்பொழுது போதும் என்று நினைக்கிறாள் அவள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார். இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்

 

குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காக் - விரும்பாத

கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel  

கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர் 

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

எம்மைப் - எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு.

பீழிப்பது - பீழித்தல் - வருத்துதல்.

முழுப்பொருள் 
தலைவன் தலைவியை பிரிந்து சென்றுள்ள பொழுது தலைவி காமநோயால் துன்பப்படுகிறாள். அப்பொழுது அவள் கூறுகிறாள்,  காலை பொழுதுகளில் விழித்திருக்கையில் என்னை பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வராமல் இருக்கின்றார். ஏனெனில் அவர் என்னை விரும்பவில்லை. விரும்பி இருந்தால் வந்திருப்பார் அல்லவா. ஆதலால் அவர் கொடியர் ஆனார். நனவினில் தான் அப்படி என்றால் இரவு கனவுகளில் தலைவன் வந்துவிடுகிறார்.  கனவில் தலைவன் வருவதால் எனது துன்பமே மிகுகிறது. நான் வருந்துகிறேன். ஏனெனில் தலைவனின் நினைவகள் என் உறக்கத்தை கெடுகிறது. அதனால் நானும் வாடுகிறேன். நனவில் வராதவர் கனவில் வந்து என்னை வருத்துவது ஏன்?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நனவெனப் புல்லுங்காற் காணாளாய்க் கண்டது
கனவென வுணர்ந்துபின் கையற்றுக் கலங்குமே” (கலி 126:6-7)

பரிமேலழகர் உரை
(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?. இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.

சாலமன் பாப்பையா உரை
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

ஆயின் -  ஆனால்; ஆராயின்.

கனவினால் - கனவில் 

கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.

காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

நீங்கு - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

அலர் - அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி.

நீங்கலர் - நீங்க மாட்டார்; பிரிந்து சென்ற பழிக்கு ஆளாக மாட்டார் 

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

முழுப்பொருள் 
தலைவி கூறுகிறாள், என் தலைவன் என்னை பிரிந்து சென்றுவிட்டான். அவன் எப்பொழுது மறுபடியும் வருவான் என்று தெரியவில்லை. பிரிவின் துன்பத்தால் வாடுகிறேன். நான் உயிர் வாழ்வதே அவன் நினைவுகளால் தான். அவன் என் கனவுகளில் வந்து என்னுடன் இருந்தான். அதனால் அக்கனவுகளில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் இந்த நனவு நிலை வந்து (அதாவது விழிப்பு வந்து) என் மகிழ்ச்சியை கெடுத்துவிட்டது. நனவு வந்து கனவு கலைந்ததால் கனவில் இருந்த தலைவனும் பிரிந்து விட்டான். இல்லையேல் என் தலைவன் கனவில் என்னை பிரிந்து சென்று இருக்க மாட்டான். 

என்னுடன் இருப்பதையே எப்பொழுதும் விரும்புவார். நானும் அதையே தான் விரும்புவேன். ஆனால் உலகியல் உலகில் என்னைவிட்டு பிரிந்து செல்ல நேரிடுவது தவிர்க்க இயலாது. கனவு நிலையில் எப்பொழுதும் இருப்பார். அவர் திரும்பி வரும் வரை கனவிலேயே இருக்க விரும்புவேன். ஆனால் பாழாய்ப்போன நனவு வந்து எல்லாவற்றையும் கெடுகிறதே. என் நேரம் அப்படி. 

நேரிலும் அவர் என்னுடன் இருக்க வாய்க்கவில்லை. கனவில் அவர் என்னுடன் இருக்க வாய்க்கவில்லை. துன்பம் தாங்கவில்லையே. என் செய்வேன் நான்? 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.).

மணக்குடவர் உரை
நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.

மு.வரதராசனார் உரை
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

குறள் 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்

உண்டாகும் - உண்டாகுதல்  - uṇṭāku   v. i. (for conjugation see ஆ, --ஆகு), be, begin to exist, come into existence, be made, grow, become.
உண்டாக்குதல் - படைத்தல்; தோன்றச்செய்தல்; விளைவித்தல் வளர்த்தல்

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நனவினான் - நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்..

நல்காரை - நல்கார் -விரும்பாதவர் 

நாடித் - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

தரற்கு - நாடுபவர்க்கு 

முழுப்பொருள் 
நான் விழித்திருக்கும் பொழுது என்னிடம் வந்து சேராத, என்னை விட்டு பிரிந்து இருக்கும் காதலர் என்னை விரும்பாதவர் (ஏனெனில் என்னை விட்டு பிரிந்து இருக்கிறார்).  கனவுகளே எனக்கு என் காதலரை கொண்டுவந்து தருகிறது. கனவில் என் காதலரால் எனக்கு இன்பம் கிடைக்கிறது. ஆதலால் இக்கனவுகளே எனக்கு காமத்தின் இன்பத்தை தர காரணமாக இருக்கிறது என்று கனவை புகழ்கிறாள் தலைவி. கனவுகளே எங்கள் காமம் நிலைபெற பாலமாக இருக்கிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கனவினாற் கண்டேன் தோழி காண்டகக்
கனவின் வந்த கானலஞ் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டென
அனைவரை நின்றதென் அரும்பெறல் உயிரே” (கலி. 128:23.6)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது. (காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

சாலமன் பாப்பையா உரை
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காதவரைக் - விரும்பாதவர் 

கனவினால் - கனவில் 

காண்டலின்  - கண்டால் ; காணும் பொழுது 

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள் 
நான் கண்விழித்திருக்கும் பொழுது தலைவன் என்னை விரும்பவில்லை. என்னை வந்து பார்க்கவில்லை. என்னிடம் உறவாடவில்லை. என்னைவிட்டு பிரிந்திருக்கிறான். இப்படி இருக்கையில் கண்ணுறங்கி கனவினில் ஆசைத்தலைவனை கண்ணார காண்கிறேன். இப்படியாவது அவரை காண்பதால்தான் நான் உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். கனவிற்கு நன்றி. இல்லையெனில் பிரிவு தரும் துன்பத்தால் இறந்திருப்பேன். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

சாலமன் பாப்பையா உரை
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற்

குறள் 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
கயல் - கெண்டைமீன்

உண்கண் - மைதீட்டியகண்

யான் - தன்மையொருமைப்பெயர்

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரப்பத் - விரும்பி

துஞ்சின் - துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்

கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

கலந்தார்க்கு - சேர்ந்தோர்க்கு ; புணர்ந்தோர்க்கு 

உயல் - தப்புகை; உளதாதல் உயிர்வாழ்தல்

உண்மை - உள்ளது; இயல்பு உள்ளதன்மை; மெய்ம்மை நேர்மை ஊழ்

சாற்று - cāṟṟu   -கிறேன், சாற்றினேன், வேன், சாற்ற, v. a. To say, speak, declare, tell, men tion, சொல்ல. 2. To publish, announce, to publish by beat of drum, பறைசாற்ற. (p.)
சாற்று, v. noun. Telling, saying, சொல் லுகை.

சாற்றுவேன்- விளம்பரப்படுத்துகை, ஓசை.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

முழுப்பொருள் 
தலைவி தலைவனை பிரிந்து இருக்கிறாள். அப்பொழுது அவளது உள்ளம் மட்டும் உறங்காமல் இல்லை அவளது மைதீட்டிய அழகிய கண்களும் மீன்கள்போல அங்குமிங்கும் அலைபாய்ந்து உறங்காமல் விழித்திருக்கிறது. அவள் தன் கண்களை  மன்றாடி உறங்க சொல்கிறாள் (வேண்டுகிறாள்). ஆனால் கண்களோ உறங்கமாட்டேன் என்கிறது. அவள் ஏன் உறங்கச் சொல்கிறாள் என்றால்? கண்கள் உறங்கினால் தான் தன்னுடன் கூடி புணர்ச்சியின்பம் தந்த காதலன் கனவில் வருவான். கனவில் வரும் பொழுது அவனிடம் சொல்வேன் நான் பிரிவாற்றாமையையும் தாங்கிக்கொண்டு தப்பிப் பிழைத்து இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன் என்று. என்னிடம் சீக்கிரம் வந்து சேர் என்று. கண்கள் உறங்கினால் கனவில் அவள்  தன்நிலையை காதலனிடம் உறைப்பால் . 

பி.கு: காதலில் இருக்கும் பொழுது அவள் உறுப்புகள் அவள் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறது. அவள் கட்டுப்பாடில் அவள் உடல் இல்லை. காதல் வந்த பின்பு பலர் கூடுவது (புணர்ச்சி கொள்வது) தங்களை (தங்கள் ஒழுக்க நெறிகளை) மீறி நடக்கும் இயற்கையான ஒன்று. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தூது விடக் கருதியாள் சொல்லியது, ) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன். ('கயலுண்கண்' என்றாள்,கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்'என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.).

மணக்குடவர் உரை
என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே. மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண்.

மு.வரதராசனார் உரை அல்லது சாலமன் பாப்பையா உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  இரந்து தான் நிற்கின்றேன் தினம் தினமும்
           இரு விழிகள் கேட்கிறதா எந்தன் பேச்சை
  வரந்தருக என்றெல்லாம் வாயிழந்தேன்
          வகை வைக்க மறுத்ததெந்தன் வேண்டுதலை
  நிரந்தரமாய் இவை தூங்க மறுத்ததென்றால்
         நெஞ்சத்தார் கனவினிலே வருவதெங்கே
  இறந்து பட மாட்டாமல் நானும் இங்கே
        இருப்பதனைச் சொல்லுதற்கு வழி தான் ஏது

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உறங்கென்று கண்களிடம் இரந்து நின்றேன்
உறங்கவில்லை மீன்கள் போல புரளுதிங்கு
வரங் கொண்டு வந்த எந்தம் காதலரின்
வரவின்றிச் செய்வதிந்தக் கண்கள் ரெண்டும்
தினம் கொஞ்ச நேரம் மட்டும் உறங்கி விட்டால்
தேடி அவர் கனவினிலே வந்திடுவார்
இனம் இங்கே உயிரோடு இருப்பதனை
எடுத்துரைப்பேன் உதவியில்லை கண்கள் தம்மால்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

குறள் 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
காதலர் - தலைவன்

தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராசதூதர்தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூதுமொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

தூதொடு வந்த - தூதைக் கொண்டு வந்த

கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.

கனவினுக்கு -  கனவிற்கு

யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

செய்வேன்கொல் - செய்வதென்று தெரியவில்லை

விருந்து! - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

முழுப்பொருள்
ஒற்றர்கள் தூது கொண்டு வந்து கொடுப்பர். இவ்வாறு தூது கொண்டு வந்து கொடுப்போர்க்கு விருந்து அளித்து உபசரிப்பது வழக்கம். ஆனால் இப்பொழுது என் காதலரை பிரிந்து உள்ள நான் வாடிப்போய் இருக்கிறேன். அவரை பற்றிய செய்தி ஒன்றும் எனக்கு வரவில்லை. 

இந்த சுகமான இரவில் சுந்தரி நான் கனவு காணும் பொழுது கனவில் அவரிடம் இருந்து செய்தி வந்தது எனக்கு. கனவிலாவது அவரை பற்றிய செய்தி எனக்கு வந்தது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த செய்தியை தூதாக கொண்டு வந்த கனவிற்கு நான் என்ன கைமாறு செய்வேன்? இக்கனவிற்கு நான் எப்படி விருந்து அளித்து உபசரிப்பேன்? என்று தலைவி நினைக்கிறாள்.  

கனவு இயல்பாக வருவது தான். இதற்கு முன்பு நாம் கண்டு இருக்கிறோம். ஆனால் அப்பொழுதெல்லாம் கனவிற்கு நன்றிகடமைப்பட்டு இருக்கிறோமா என்ன? இல்லையே. ஆனால் கனவிற்கு நன்றிகடன்படும் அளவிற்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் தலைவனை பிரிந்து ஏக்கமாக எவ்வளவு வாடுகிறார் என்பதை நாம் இங்கு உணரலாம்.

ஆண்டாளும் கனவு கண்டாள் “வாரணமாயிரம்” என்று தொடங்கி பத்துப்பாடல்களில். அவள் கூட கனவைப் பற்றிச் சொன்னாளே தவிர, கனவையே தன் காதற்தலைவனிடமிருந்து வந்த தூதாக எண்ணிப் பாடவில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல் . அக் கனவு, நனவின்கண் நினைவு மிகுதியாற்கண்டதாகலின் , இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது .]

(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.).

மணக்குடவர் உரை
நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்?. இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.

மு.வரதராசனார் உரை
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

சாலமன் பாப்பையா உரை
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.

தூதென வந்தார்க்கெல்லாம் துய்ய நல் விருந்தளித்தல்
மாதென வந்தார்க்கெல்லாம் மாபெருங் கடமையன்றோ
சூதிலாப் பெண்ணாள் நல்ல சுந்தரத் தோற்றம் கொண்டாள்
ஏது நான் செய்வேன் எந்த விருந்தினை நான் அளிப்பேன்
சோதனைஅய்யோ என்றாள் சுகமான இரவில் வந்தான்
காதலன் அவனைத் தந்த கனவிற்கு மங்கை நானும்
யாது தான் விருந்தாய்ச் செய்வேன் எப்படிப் போற்றி நிற்பேன்
தூதாக வந்த கனவு தூற்றாதா என்னை என்றாள்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி

குறள் 1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் 
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
[காமத்துப்பால்,  கற்பியல்,  கனவுநிலையுரைத்தல்]

பொருள்
துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்.

துஞ்சுங்கால் - தூங்கும் பொழுது

தோள் - புயம்; கை; தொளை.

மேலர் - மேல் படர்தல் 

தோள்மேலர் ஆகி - தோளின் மேல் படர்ந்து என் மேல் ஒருவராகி

விழித்தல் - viḻi-   11 v. intr. 1. To openthe eyes; கண்திறத்தல். இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால் (கலித். 144). 2. Towake from sleep; நித்திரை தெளிதல். உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 3. To watch; tobe vigilant; to be wide awake; சாக்கிரதையாயிருத்தல். அவன் சோர்வு போகாமல் விழித்துக்கொண்டிருப்பவன். 4. To look at attentively; கவனித்துநோக்குதல். நாட்டார்கள் விழித்திருப்ப . . . நாயினுக்குத் தவிசிட்டு (திருவாச. 5, 28). 5. To gaze,stare; மருண்டு நோக்குதல். விண்ணின்று மிழியாமலெப்போதும் வானோர் விழிக்கின்றதே (பிரபோத. 6,14). 6. To shine; பிரகாசித்தல். பொன்ஞா ணிருள்கெட விழிப்ப (சீவக. 2280). 7. To be clear; தெளிவாதல். மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா(தொல். சொல். 394). 8. To be alive; உயிர்வாழ்தல். அழற்கணாக மாருயிருண்ண விழித்தலாற்றேன்(மணி. 23, 70).

விழிக்குங்கால் - ஆனால் விழிக்கும் பொழுது

நெஞ்சம் - அன்ப், மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

நெஞ்சத்தர் - காதலர்

ஆவர் - ஆவார் ; ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

நெஞ்சத்தர் ஆவர் - நெஞ்சத்தில் என்னவர் ஆவார்

விரைதல் - வேகமாதல்; அவசரப்படுதல்; ஆத்திரங்காட்டுதல்; மனங்கலங்குதல்.

விரைந்து - மிக விரைவாக

முழுப்பொருள்
என் நெஞ்சில் உள்ள உறைந்துக்கிடக்கின்ற என் காதலர், நான் உறங்கும் பொழுது என் தோள் மேல் சாய்ந்து இருப்பான். கூடுவான். ஆனால் என் உறக்கம் நீங்கும் பொழுது மிக விரைவாக என் நெஞ்சுக்குள் மீண்டும் சென்று விடுவான்.

ஒப்புமை
“பாயல்கொண் டென்தோள் கனவுனார்’ (கலி 24:7)
“தோள்மேலாய் எனநின்னை மதிக்குமன் மதித்தாங்கே” (கலி 126:15)

“தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமைஎடுத்துப்
பற்றுவேன் என்றுயான் விழிக்குங்கால் மற்றும்என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யும் அறனில் லவன்” (கலி. 144:55-8)

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதல் என்னவெல்லாம் செய்யும். எல்லாம் செய்யும்.ஆமாம். அது எதை வேண்டுமானாலும் செய்யும்.

காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி தோழிகளோடு உரையாடிக் கொண்டிருக்கின்றாள். அனைவரும் மகிழ்வோடு அவரவர்அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் காதலர் குறித்தும் காதலனோடு தாங்கள் கொண்ட ஊடல் கூடல் குறித்தும் கலந்துரையாடுகின்றனர்.

ஒருத்தி சொன்னாள்.மெல்ல மெல்லத்தான் தொடுவான். ஆனால் அதிலேயே எனது மேனி மிக மிக வேகமாகக் குதிக்கத்தொடங்கும் என்று.

மற்றொருத்தி சொன்னாள். தொடவே மாட்டான். அந்தப் பார்வையிலேயே துவண்டு அவன் மார்பில் நானே போய்ச் சாய்ந்து கொள்வேன் என்றாள்.

இன்னொருத்தியோ ஒற்றை விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாவி படுத்தும் பாடு மொத்த மேனியும் அவனிடத்தில் தஞ்சம் அடைந்தால்தான் உயிர் பிழைக்கும் என்றாள்.

திரும்பி நின்று கொள்வேன். கட்டித் தழுவுவான் என்று நிற்பேன். அவனோ செவி மடல்களில் அவனது மூச்சுக் காற்றைப்படச் செய்வான். நானாகவே பின்னால் சாய்ந்து விடுவேன் என்றாள்.

இதெல்லாம் என்ன என்னவனின் வேகம் யாருக்கு வரும் என்றாள் ஒருத்தி.

வேகமா அத்தனை வேகமா என்றார்கள் அனைவரும்.

எடுத்தவுடன் வேகமென்றால் இனிக்காதே அது என்றாள் ஒருத்தி

இல்லை கூடி மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் எனது மூங்கில் தோள்களில் சாய்ந்து கொள்வான். அவன் தலையைக்கோதிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த வேகம் வேறு யாருக்கும் வராது என்றாள்.

ஏக்கத்தோடு மற்ற பெண்கள் கேட்டார்கள் சொல்லேன் சொல்லேன் அந்த வேகத்தைத் தான் சொல்லேன் என்று.

சொல்கின்றேன் பொறுங்கள் பொறுங்கள் என்றாள். பெருமை பொங்க.

தோளிலே தானே சாய்ந்திருப்பான். ஆனால் நான் கண் விழித்தேன் என்றால் அத்தனை விரைவாக எனது நெஞ்சுக்குள்போய் அமர்ந்து கொள்வான். ஆமாம் ஆமாம். விரைவு விரைவு அத்தனை விரைவு.

கண் விழித்தாலா. தோழிமார்கள்.

ஆமாம் கண் மூடித் துயில்கையில் தானே அவன் கனவில் வந்து களித்து எனது தோளிலும் சாய்ந்து கொள்வான்.அப்படித் தோளில் சாய்ந்திருப்பவன் நான் கண் விழிக்கும் கணப் பொழுதில் நெஞ்சுக்குள் போய் விடுவான். அந்த வேகம் யாருக்கு வரும் சொல்லுங்கள் என்றாள்.

சிரித்துக் களித்தார்கள் தோழியர்.

குறள்
துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தராவர் விரைந்து

குறட் கருத்து 2  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
விரைவோடு  வேகமதும்  கொண்டவனாம்
     வேல் விழியாள்  காதலனும் பெருமை சொன்னாள்
திரை  போட்ட  உள் அறையில்  இருவருமே
     தேடி  நின்றார்  கண்ட பின்னும்  கண்ட பின்னும்
வரையற்ற  காதலுக்குள்  இருவருமே
     வரம்பெற்ற வடிவத்தால்  திளைத்திருந்தார்
கரையேற  வழியின்றிக் காதலனும்
     கன்னியவள்  தோள்களிலே சாய்ந்திருந்தான்

நிறைவேறாக்  காதலினைக்  கொண்டு விட்ட
     நிம்மதியில்  பெண்ணவளும் கண் திறந்தாள்
விரைவென்றால்  அவ்விரைவு  காதலனும்
     வேல் விழியாள்  நெஞ்சதனைச் சென்றடைந்தானாம்
புரிகிறதா தமிழினத்தீர்  கனவின் போது
     பொறுப்பாகத் தோளினிலே  சாய்ந்திருந்தான்
விரி கனவு  முடிந்தவுடன்  மிக  விரைந்து
     வெள்ளை  மனப்  பந்தலுக்குள்  ஒளிந்திட்டானாம்

பரிமேலழகர் உரை
(தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர். (கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தானாற்றுதற் பொருட்டுத் தலைமகனை யியற்பழித்த தோழிக்கு. இயற்படமொழிந்தது.)

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி - என் உள்ளத்தில் இடைவிடா துறைகின்ற காதலர், யான் தூங்கும் பொழுது என் தோள்மேலமர்ந்திருந்து ; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின்பு விழிக்கும்போது விரைந்து பழையபடி என் உள்ளத்திற் புகுவர்.

நாள்தோறும் கனவில் வந்து கூடுபவரை நீங்கினாரென்று பழித்தல் தகாது என்பதாம். 'தோன்மேலராகி' இடக்கரடக்கல் விழிப்பின் திடுமைபற்றி 'விரைந்து' என்றாள்.

மணக்குடவர் உரை
காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர். இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

நன்றி: ரிஷ்வன்
நெஞ்சில் வாழும் என்னவர்
துஞ்சும் போது கனவில்வந்து
மஞ்சம் இன்பம் தருகிறார்
விழித்துக் கொள்ளும் போதோ
விரைந்து சென்று மீண்டும்
அமர்ந்து கொள்கிறார் நெஞ்சினுள்.

நனவினால் கண்டதூஉம்

குறள் 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் 
கண்ட பொழுதே இனிது.
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவினால் - நனவு -> மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; களம், போர்க்களம்; தேற்றம்; அகலம்.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

கண்டதூஉம்  - கண்டது  ; காண்பது

ஆங்கே  - அதைப் போன்றே; அங்கே

கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கனவுந்தான் - கனவிலும்; கனா; சொப்பனம்; உறக்கம்; மயக்கம்.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்.

கண்ட பொழுதே - கண்ட தருணம் (மட்டும்)

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

(அதிகாரம்: கனவுநிலையுரைத்தல், v. noun. The relation of dreams)

முழுப்பொருள்
விழிப்புடன் இருக்கும் பொழுது நனவில் காதலரை / காதலியை கண்ட பொழுது கொண்ட இன்பத்தைப் போன்றே அவரை / அவளை கனவில் காணும் பொழுதும் கொண்டேன். 

ஆக அவர் / அவள் நனவில் வந்தாளும் இன்பம் பயக்கிறான் / பயக்கிறாள், கனவில் வந்தாளும் இன்பம் பயக்கிறான் / பயக்கிறாள். 

இங்கு முதலில் நனவு சொல்ல படுகிறது. ஆதலால் முன்பு நனவில் கண்டால் இன்பம் பயக்கியதாவும், ஆனால் இன்றைய நாட்களில் கனவில் கண்டாலும் அதே அளவு இன்பம் பயக்கிறது என்று.

இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். அவரை நனவிலும் கனவிலும் காணும் பொழுது மட்டும் நான் இன்பமாக இருக்கிறேன் மற்ற நேரங்களில் இன்பமாக இல்லை என்று. 

உதாரணம்
நான் ஒரு பெண்ணில் காதல் கொண்டிருக்கையில் அவளை சந்திக்கும் பொழுது, அவளுடன் பேசும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் அவளை சந்திக்காத நாட்களில் சில நாள் கனவில் அவள் வந்தாள் அந்த கனவில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். அப்படி சில நாட்கள் கனவில் இருந்து கலைந்து நனவிற்கு வந்து அக்கனவினை மீட்டெடுத்து இன்புற்று இருக்கிறேன். :)

பரிமேலழகர் உரை
இதுவும் அது. நனவினான் கண்டதூஉம் இனிது ஆங்கே- முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று; அப்பொழுதே, கனவும் தான் கண்டபொழுது இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன. 

விளக்கம் ('இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு - ஆகுபெயர். 'முன்னும் யான் பெற்றது இவ்வளவே; இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.) 

மணக்குடவர் உரை
நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வ உரை
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

நன்றி: ஆத்தீகம்
எதுத்தாப்புல அவன் வர்றப்ப, அவனைப் பாக்கறப்ப, அவனோட பளகறப்ப, கிடைக்கற சந்தோசம் அந்த நேரத்துக்கு மட்டுமே இருக்கு. அவன் போனப்பறந்தான் அவன் சொன்னதுல்லாம் மனசுல வந்து கஸ்டத்தைக் குடுக்குதே!

அதேபோல, கனவுல அவன் வர்றதும், பளகறதும் அந்தக் கனவு இருக்கற வரைக்குந்தான் இன்பமா இருக்கு. முளிச்சவொடனே, நெசம் புரியறதால, மறுபடியும் தொல்லைதான்! துக்கந்தான்! 

இதைத்தான் சொல்றாரு ஐயன் தெளிவா இதுல. ரெண்டு பேருக்கும் ஒத்துப் போவலைன்னா, அல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தான் இன்பமா இருக்கும். அது பூடுச்சுன்னா, அப்பால ரோதனைதான்! 

வருகிற வரை புரிவதில்லை
காதலென்று!
கலைகிற வரை தெரிவதில்லை
அதுவும் கனவென்று!

நன்றி: ரிஷ்வன்
காதலரை
நேரில் கண்ட பொழுது
பேரின்பம் பெற்றதைப் போலவே
காணும் கனவிலும் இன்பத்தை
வாரி வழங்கி மகிழ்விக்கிறார்.