Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_129. Show all posts
Showing posts with label Athikaaram_129. Show all posts

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

 

குறள் 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
இளி-த்தல் - iḷi-   11 v. cf. இளி¹-. [M. iḷi.]tr. 1. To disgrace, condemn; அவமதித்தல் (W.) 2. To laugh, scorn, ridicule; பரிகசித்தல்.(W.)--intr. To grin; to show the teeth, as incringing or in craving servilely; பல்லைக் காட்டுதல் 

தக்க - takka   தகுந்த, adj. part. see under தகு.

இளித்தக்க -  இழிவைத் தரக்கூடிய

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

செயினும் - செய்தாலும் 

களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்

களித்தார்க்குக் - கள்ளுண்டு தற்காலிகமாகவாது கவலை மறந்து மகிழ்ந்திருந்தார்க்கு

கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

அற்றேல் - அப்படியானால்

அற்றே - அப்படியானால்

கள்வ - கள்வம் - திருட்டுச்செயல்; கவர்ச்சியுள்ளது.

நின் - உனது

மார்பு - நெஞ்சு; முலை; வடிம்பு; தடாகம்; அகலம்; கருப்பூரவகை; நான்குமுழஅளவுள்ளநீட்டலளவை.

முழுப்பொருள்
உண்பவர்க்கு மகிழ்ச்சியை தருவது கள். ஆனால் அது தற்காலிகமான மகிழ்ச்சியே. கள் உண்டதற்காக இவ்வூர் மக்கள் அவமதிப்பர். ஆக மொத்தம் கள்ளினால் பெற்ற தற்காலிக மகிழ்ச்சியைவிட பெற்ற இகழ்ச்சியே அதிகம். ஆயினும் கள்ளுண்பவர் இகழ்ச்சிக்குப் பின்னரும் கள்ளை நாடியே செல்கிறார்.

முன்னர் குறிப்பிட்டதுப்போல் கள்ளை பற்றி கூறிய தலைவி இப்பொழுது தனது தலைவனின் மார்பை கள்ளுடன் ஒப்பிடுகிறாள். அதாவது அவள் விரும்பிய தலைவனின் மார்பில் சாய்ந்து இன்பத்தை பெற்றாள். ஆனால் பிரிந்து சென்ற உடன் தலைவன் இல்லாமல் துன்பத்தில் வாடி இவ்வூராரின் ஏசுதலைப் பெற்றாளாம். 

ஆயினும் ம்கிழ்ச்சியை பெற்ற கள்ளுண்டோர் பின்பு இகழ்ச்சியைப் பெற்றாலும் கள்ளை நாடுவதைபோல், தான் விரும்பிய தலைவனுடன் கூடல் இன்பத்தை பெற்ற தலைவி, பிரிவின் துன்பத்தில் வாடியப்பிறகும் கூட, தலைவனின் மார்பையே நாடுகிறாள் அவனுடன் முயங்க. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மகிழ்ந்ததன் தலையும் நறவுண் டாங்கு” (குறுந்:165:1)
“நோயும் இன்பமும் ஆகின்றது மாதோ
....................................................
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே” (நற்.294:2-9)

பரிமேலழகர் உரை
(தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு. (அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.).

மணக்குடவர் உரை
பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

சாலமன் பாப்பையா உரை
இந்த வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

 

குறள் 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
கால் - ஒருவினையெச்சவிகுதி
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல்
காணுங்கால் - காணும் பொழுது

காணேன் - காணவில்லை 

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

ஆய - ஆகும்

காணாக்கால் - அவர் என்னைப் பிரிந்து நான் அவரை காணாதிருக்கும்போது

காணேன் - காணவில்லை  

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

அல்லவை -  தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை

முழுப்பொருள்
என் அன்பிற்கு இனிய தலைவனை காணும் பொழுது அவரது தவறுகளை நான் காண்பதில்லை. தவறுகள் இருப்பினும் என் கண்களுக்கு அவை தெரிவதில்லை. ஆனால் அவர் என்னை பிரிந்து சென்றுள்ள பொழுது, அவரை நான் காணாத பொழுது அவரது தவறுகள் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்று தனது சிக்கலை கூறுகிறாள் தலைவி. 

கூடி இருக்கும் பொழுது அவர் வருங்காலத்தில் பிரிந்து செல்லக்கூடும் என்ற அவரது தவறை அவள் காணவில்லை. அதுவே பிரிந்துள்ள பொழுது, கடந்தகாலத்தில் சேர்ந்திருந்த பொழுது தலைவன் செலுத்திய அன்பு எல்லாம் இப்பொழுது தெரியவில்லையாம். நாளை வந்து அன்பு செலுத்தக்கூடும் என்று கூட தோன்றவில்லையாம். இப்பொழுது அன்பு செலுத்தவில்லை என்ற தவறு மட்டும் தெரிகிறதாம். 

இது மிகுந்த அன்பின் காரணமாக வருவது. கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பிலே முத்தொள்ளாயிரத்தினின்றும், கலிங்கத்துப் பரணியினின்றும் இக்குறளை ஒட்டிய பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவையாவன:

“மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால்
பூணாகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன் பிறந்தநான்” (முத்தொள்ளாயிரம்)

“பேணும் கொழுநர் பிழைகள் எல்லாம்
பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனபொற் கபாடம் திறமினோ” (கலிங்கத்துப் பரணி 65)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

மு.வரதராசனார் உரை
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை
கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

 

குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் 
உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி.

பாய்தல் - தாவுதல்; நீர்முதலியனவேகமாய்ச்செல்லுதல்; மேல்நின்றுகுதித்தல்; நீருள்மூழ்குதல்; எதிர்செல்லுதல்; பரவுதல்; வரைந்துபடிதல்; விரைந்தோடுதல்; தாக்குதல்; விரைவுபடுதல்; அகங்கரித்தல்; மடிப்புவிரிதல்; கூத்தாடுதல்; ஓடிப்போதல்; தாக்கிப்பேசுதல்; குத்துதல்; வெட்டுதல்; முட்டுதல்.

பாய்பவரேபோல் -  பாய்பவரைப்போல; தாவுபவர் போல

பொய்த்தல் - பொய்யாதல்; தவறுதல்; பின்வாங்குதல்; கெடுதல்; பொய்யாய்ப்பேசுதல்; வஞ்சித்தல்

அறிந்துஅறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் 
உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.


முழுப்பொருள்
ஓடும் ஆற்றில் பாய்ந்தால் அது நம்மை அமிழ்த்தி கொண்டு செல்லும். அதனை அறிந்திருந்தும் ஆற்றில் பாய்பவர்போல் சிலர் உள்ளனர். யார் அது? 

தலைவனின் பிரிவால் வாடும் தலைவி தலைவன் வந்த உடன் பிரிவாற்றாமையை காரணம் காட்டி ஊடல் செய்யவேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் அப்படியே ஊடினாலும் இறுதியில் ஊடலில் இருந்து பின்வாங்க நேரிடும் என்பதை அறிவாளாம் தலைவி. பொய்யாக ஊடி பின்பு பின்வாங்கி தலைவனுடன் கூடுவாள் தலைவி. 

இதைத் தான் திருவள்ளுவர் இங்கு சுட்டிக்காட்டுகிறார். ஆறு அமிழ்த்துக்கொண்டுச் செல்லும் என அறிந்தும் ஆற்றில் பாய்பவர்ப் போல, பிரிவின் பின் வந்து சேர்ந்த தலைவனுடன் ஊடினாலும் இறுதியில் கூடல் தான் நிகழும் என அறிந்தும் எதற்கு தலைவி பொய்யாக ஊடவேண்டும்?

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.).

மணக்குடவர் உரை
தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

மு.வரதராசனார் உரை
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

குறள் 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
எழுதுங் - எழுதுதல் - எழுத்துவரைதல்; ஓவியம்வரைதல்; இயற்றுதல்; விதியேற்படுத்துதல்; பாவைமுதலியனஆக்குதல்; அழுந்தப்பதித்தல்; பூசுதல்.

எழுது - eẕutu   III. v. t. write, pain, draw, வரை; 2. predestine, foreordain (as Brahma by writing on the head); 3. engrave, சித்திரம் வெட்டு; v. i. become indented by pressure. அழுந்திப்பதி.

கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

எழுதுவரிக்கோலம் - மகளிர்ஆகத்துஎழுதுங்கோலம்.

எழுதுங்கால் - விழியில் அஞ்சனம் (மை) தீட்டும்போது

கோல் -  கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

கோல் - kōl   n. 1. Pencil to paint the eyewith collyrium; அஞ்சனக்கோல். (அக. நி.) 2.An unit of linear measure, of 24 feet; 24அடியுள்ள நீட்டலளவை. (திவ். பெரியாழ். 3, 2, 6.)

அஞ்சனக்கோல் - añcaṉa-k-kōl   * n. id.+. Pencil to paint the eyelashes with collyrium; கண்ணுக்கு மைதீட்டுங் கோல் அஞ்சனக்கோலி னாற்ற நாகம் (சீவக. 1894).  

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணாக் - காணாத ; காணாமல்

கண்ணே - கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

கொண்கன் - கணவன்; நெய்தல்நிலத்தலைவன்.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

காணேன் - காணவில்லை 

கண்ட - கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

இடத்து - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்
கண்ணுக்கு மை தீட்டும் பொழுது பெண்களால் மைத்தீட்டும் அஞ்சனக்கோலை அருகில் இருப்பதால் பார்க்க முடியாது  அல்லது பார்க்கமாட்டார்கள். அப்பொழுது அவர்கள் கண்ணுக்கு அழகு சேர்ப்பதையே கவனத்தில் கொள்வர். அஞ்சனக்கோலை கண்டு கொண்டு இருந்தால் மை வேறெங்காவது தவறாக பட்டு அவள் அழகு கலைந்துவிடும். பின்பு தலைவனும் அவளை பார்க்கமாட்டாள். 

அதுப்போல தலைவனை காணும் பொழுது தலைவி தலைவனின் குற்றங்களை பார்க்கவில்லையெலாம். ஏனெனில் குற்றங்களை பார்த்தால் சுற்றம் இல்லை. காதலும் இல்லை. கணவனும் இல்லை. ஆதலால் அவன் காதலை பெற குற்றங்களை பார்க்கவில்லையாம். அது பெரும் தவறு என உணர்கிறாள். ஏனெனில் தலைவன் பிரிந்து செல்வான் என்ற குற்றத்தை முன்னமே பார்த்து இருந்தால் அவள் காதலுற்று இருக்கமாட்டாள் அல்லவா? 

ஆனால் தலைவியை பிரியாத தலைவன் உண்டோ என்று தலைவியும் அறிவாள். அதனால் தான் குற்றங்களை அவள் பார்க்கவில்லை. ஆனால் இப்பொழுது உணர்ந்து தன்னை தானே இகழ்ந்துகொள்கிறாள். 

மைதீட்டும் கோலை கணவனின் குற்றங்களுக்கு ஒப்பாக கூறுவது மைதீட்டும் கோலின் கருமையை ஒட்டியே இருக்கவேண்டும். குற்றங்களை கருப்போடு ஒப்பிடுதல் சரிதானே.

புருவம் தீட்டுதலும், கண்ணுக்கு மையெழுதுதலும் சங்ககாலமோ அதற்கு முன்பிருந்தோ இருந்து வரும் பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ளும் வழிகள்தாம் போலும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை
முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

ஊடற்கண் - ஊடல் செய்ய நினைத்தேன்

செலுத்தல் - செல்¹(லு)-தல் 
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

சென்றேன்மன் -  காண்பதற்கு சென்றேன்

தோழி - பாங்கி; பணிசெய்பவள்; செவிலித்தாயின்மகள்; தேவி; அரக்கு.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

மறந்து - மற-த்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

கூடற்கண் - கூடவே / புணரவே

சென்றது - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

என் - என்னுடைய

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்துச் சென்றுவிட்டிருக்கிறான். அப்பொழுது தலைவியும் தோழியும் உரையாடிக்கொண்டிருக்க கூடும். அப்பொழுது தலைவி விளையாட்டாகவோ அல்லது திடமாகவோ இப்படிச் சொல்லியிருக்க கூடும் "தலைவன் திரும்பிவந்தால் அவனுடன் ஊடல் புரிவேன் (சண்டைப்போடுவேன்) என்று".

ஆனால் தலைவன் திரும்பிவந்தவுடன் உண்மையில் என்ன நடந்தது என்று தோழியிடம் கூறுகிறாள் தலைவி. "அவருடன் ஊடல் செய்ய நினைத்து அவரிடம் சென்றேன். ஆனால் அவரை கண்டவுடன் நான் நினைத்த எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். அவருடன் கூடு என் நெஞ்சம் சொன்னபடி கூடி மகிழ்ந்தேன்". என் அறிவை விட நெஞ்சமே வென்றது. பொய் பிணக்கை விட உண்மை அன்பே வென்றது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

சாலமன் பாப்பையா உரை
தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

குறள் 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணாது - போற்றாமல்  ; மதிக்காமல்

பெட்பவே - பெட்ப - peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662).பாதுகாப்பு.
பெட்பு - peṭpu   s. desire, lust, ஆசை.

செய்யினும் - செய்தாலும்

கொண்கனைக் - கணவன்; நெய்தல்நிலத்தலைவன்.

காணாது - காணாமல்

அமை - அமைதல்  - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அல - ala   same as அல்ல, see under அல்;

அமையல - அமையாது

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
காதலி என்னை விரும்பவேண்டும் போற்றவேண்டும் என்னுடன் நேரம் செலவிடவேண்டும் என்று நான் நினைக்கிறன் / எதிர்பார்க்கிறேன். ஆனால் அவ்வாறு என்னை விரும்பாது தன் தொழிலில் (அல்லது வேறு ஏதாவது ஒன்றில்) மிக ஈடுபட்டு தன்னலமாய் அவர் இருந்தாலும் பரவாயில்லை. என் அன்பிற்குரியத் தலைவனை காணமால் மூடாது என் கண்கள். அவர் வருவார் என்று காத்திருக்கிறேன்.

இந்நிலையைப் பல இலக்கியப் பாடல்களும் சுட்டுகின்றன.

பேணாய் நீ பெட்பச் செயல்” - (கலித்.91:24)

“துனிநீர் கூட்டமொடு துன்னாராயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்” என்று நற்றிணை (216:1-2) பாடல் கூறுவதும்,

“காதலர் நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக்கினிதே” என்று குறுந்தொகை (60:4-6) பாடல் கூறுவதும்,

“கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்த னாகிலும்
கொடியவென் நெஞ்சம் அவனென்றே கிடக்கும்”  என்று திருவாய்மொழி (5.3:5) பாடல் கூறுவது இந் நிலையைத்தான்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

மு.வரதராசனார் உரை
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா உரை
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; காண்க:சாமை; தினையளவு.

துணையும் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்

ஊடாமை - மனதளவில் வேற்றுமை / மாறுபாடு இல்லாது (இருத்தல் வேண்டும் )

வேண்டும் - வேண்டும்

பனைத் - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை.

துணையும் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்)

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நிறைய - நிரம்ப

வரின் - வரும்

முழுப்பொருள்
தினை என்பது மிக சிறிய அளவு உள்ள ஒரு சிறுதாணியம் ஆகும். அந்த சிறுஅளவுக்குக்கூட காதலிரடம் மன வேறுபாடு கொள்ள கூடாது. அவ்வாறு மன வேறுபாடு இல்லாது இருத்தல் வேண்டும் எப்பொழுது? தன் காதலரிடம் மிக பெரிய அளவு காமம் / காதல் / புணர்ச்சியின்பம் / அன்பு நிறைய பெற விருப்பமாயின்.

அதிக நாட்கள் கல்யாணம் "சிறந்து" நிலைக்க வேண்டுமாயின் சிறிது அளவு கூட மன வேறுபாடு இருக்க கூடாது என்பதை நாம் இங்கு கற்றுக்கொள்ளலாம். இதனால் கருத்து வேறுபாடுகள் இருக்க கூடாது என்பது இல்லை. நெடுநாள் நிலைத்த இன்பம் வேண்டுபவர்க்கு மனிதனால் சிறுஅளவு ஊடல் / பூசல் கூடாது என்று பொருள்.

இங்கு ஊடல் என்பது மன வேறுபாடு என்பதையே கூறுகிறது என்று படுகிறது. ஏனெனில் ஊடலில் தோற்றவர் கூடலில் வெல்வார் என்று திருவள்ளுவர் ஊடலுவகையில் கூறுகிறார்.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் எண்ணும்பொழுது [சிறுகதை] என்ற சிறுகதையில் எப்படி அக்கதையில் வரும் மாந்தர்கள் எண்ணும்பொழுது (சந்தேகப்பட துவங்கும் பொழுது) அவர்களுக்கிடையில் காமம் விலக துவங்குகிறது என்பதை காணலாம். அது ஒருவித நிரந்திர பிரிவின் தொடக்கம் என்றும் கூறலாம்.

அக்கதையில் அவர்கள் படுக்கையில் கூடும் நேரம் ஒரு கதையை பற்றி யோசிக்கும் துணுக்கு (snippet)
===
"அவள் வெறிகொண்டு அவனை இழுத்து அணைத்து அவன் உதடுகளை கவ்வி கடித்தாள். பற்கள் பதிந்தன. அவளுடைய அந்த வெறி மிக அரிதாகவே அவன் அறிந்தது. கைகளும் கால்களும் பரபரக்க மூச்சு சீறி ஒலிக்க ஊடே தொண்டையின் கமறல்போன்ற ஓசைகள் கலக்க அவள் மேலும் மேலும் கொந்தளிப்படைந்தபடியே சென்றாள்

பின்னர் மூச்சு சீராகிக்கொண்டிருக்க அவளுடைய உடல்மேல் அவன் குப்புறக் கிடந்தான். அவள் தோளின் வளைவில் முகம் அமைத்திருந்தான். அவள் மூச்சு அவன் தோள் மேல் பட்டுக்கொண்டிருந்தது. மென்மையான துணி ஒன்று தொட்டு அசைவதுபோல. அவன் முதுகில் அவள் கைநகங்கள் பதிந்ததன் எரிச்சல். தோளில் அவள் பற்கள் பதிந்த வலி

அவன் புரண்டு மல்லாந்து படுத்துக்கொண்டான். அவள் ஒருக்களித்து அவன்மேல் கையைப் போட்டுக்கொண்டு, இன்னொரு கையை மடித்து ஊன்றி அதில் தலைவைத்து எழுந்து அவனை பார்த்தாள். அவள் தோள்களில் கூந்தல் விழுந்து கிடந்தது. வெறுந்தோளில் சிறு தழும்பு ஒன்று. கழுத்தில் நீல நரம்பு ஒன்று புடைத்து மெல்ல துடித்தது. ஒரு மார்பு மெத்தையில் அழுந்தியிருக்க கரிய சுருக்கங்களுடன் காம்பு கூர்ந்திருக்க இன்னொரு மார்பு வெண்ணிற மென்மையுடன் ததும்பிச் சொட்ட முற்பட்டு நின்றதுபோல் தெரிந்தது

அவன் அதை தொடப்போக அவள் தோளை விலக்கி அவனை அகற்றினாள். “அந்தக் கதையிலே எனக்கு சந்தேகம்” என்றாள்

“என்ன?”

“ரெண்டுபேரிலே யாரு முதன்முதலா எண்ணிப்பாக்க ஆரம்பிச்சது?”

“ஏன்?”

”இல்ல கேட்டேன்”

“அது கதையிலே இல்லியே”

“யாரா இருக்கும்?”

“அதை கோணச்சிகூட சொல்லிட முடியாது” என்றான்

“அந்தாள்தான்”

“இல்லை… வேணுமானா இப்டி சொல்லலாம். ஒரே செகெண்டிலே. ஒரு செக்கண்ட்டோட ஒருபக்கம் இவ மறுபக்கம் அவர். ரெண்டுபேருமே சேந்து”

”சும்மா உளறிட்டு” என்று அவள் உதட்டைச் சுழித்து அவன் கையை தட்டினாள். உருண்டு மறுபக்கம்  எழுந்தாள். முதுகில் கூந்தல் கற்றைகள் விழுந்து அலைபாய பாத்ரூமுக்குச் சென்றாள்
====
நிகழ்காலத்தில் ஆண் கவித்தன்மையோடு உள்ளான். அவள் எதிர்துருவம். இருவேறு துருவங்களைச் சேர்த்து வைத்திருப்பது காமம் ஒன்றே. சுடச்சுடவே பொன் மேலும் சுடரும். காதல், காமத்தால் சுட்டால் ஒழிய ஒளிராது. தங்கம் வெளிறியே போகும். எப்போது அவர்கள் காமமின்றி பிரிய நேர்கிறதோ அப்பொழுதே அவர்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள்; அப்பொழுதே நிரந்திர பிரிவு தொடக்கம்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்’இன் வலைத்தளத்தில் கதைகள் செல்லும் பாதை- 9 - தலைகீழ் மாற்றம்  (சுட்டியைத் தட்டவும்என்ற தலைப்பில், பசை (Crazy Glue) என்ற உலக இலக்கியத்தில் இருந்து எடுக்கபட்ட ஒரு மொழிப்பெயர்ப்பு சிறுகதை பற்றி விவரிக்கிறார். அதில் கணவன் மணைவிக்குள்ளே இருக்கும் ஊடல் பற்றியும் காமம் எப்படிப் பட்ட பசை என்றும் இக்கதை கூறுவதாக விவரிக்கிறார். மேலும் கீழே.


எட்கர் கெரெட் (Etgar Keret ) இஸ்ரேல் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1967 இல் டெல் அவிவ் நகரில் பிறந்தவர்.

சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன.

நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இவரது பசை (Crazy Glue) என்ற குறுங்கதையை வாசித்தேன். சொல்வனம் இணையஇதழில் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

420 சொற்கள் கொண்ட மிகச்சிறிய கதை..

கதையின் துவக்கத்தில் புதிதாக ஒரு பசை டப்பாவை தன் வீட்டில் காணுகிறான் கணவன். அவன் மனைவியிடம் இது என்ன பசை என்று கேட்கிறான். அவள் அதைத் தொடாதே என்று சொல்கிறாள். எதற்காக இந்தப் பசை என்று மறுபடியும் கேட்கிறான் கணவன்.

இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன என்கிறாள்.

இந்தப் பதில் தான் கதையின் மையப்புள்ளி. வெற்று உரையாடலாகத் தோன்றும் இந்த வரிகளைக் கதை முடிந்தபிறகு வாசித்துப் பாருங்கள். எத்தனை முக்கியமானது என்று உணர்வீர்கள்.

இங்கே இருப்பவை எவற்றையும் ஒட்டத்தேவையில்லை. அநாவசியமாக இதை ஏன் வாங்கினாய் எனக் கணவன் கோவித்துக் கொள்கிறான். அதைக் கேட்ட மனைவி உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட அதே காரணத்திற்காக எனப் பதில் தருகிறாள்

இந்தப் பதில் வழியாக அவர்களுக்குள் நல்லுறவு இல்லை. அவள் கசப்பான அனுபவத்துடன் இருக்கிறாள் என்பது வெளிப்படுத்தபடுகிறது. அந்தக் கணவன் அவளுடன் சண்டையிட விரும்பாமல் அமைதியாகிறான்

பசை டியூப் இருந்த உறையில் ஒருவன் வீட்டின் உட்கூறையிலிருந்து  தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் படம் காணப்படுகிறது. இது போல எவரும் கூரையில் ஒட்டிக் கொள்ள முடியாது. இது வெறும் தந்திரம் என்று கணவன் சொல்கிறான்..

பின்பு வேலைக்கு நேரமாகிவிட்டது எனச் சம்பிரதாயமாக மனைவியை முத்தமிட்டுவிட்டுக் கிளம்புகிறான்.

அடுத்தப் பத்தியில் உள்ள உரையாடலில் வேறு ஒரு பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு இருப்பது வெளிப்படுத்தபடுகிறது. அதில் அந்தப் பெண் ஏன் அவளுடன் இருக்கிறாய். உங்கள் இருவரும் சேர்ந்து எதுவுமே செய்வதில்லை. சண்டை கூடப் போடுவதில்லை என்று சொல்கிறாள்

இந்த உரையாடல் வழியாக அவர்கள் ஒரே வீட்டிற்குள்ளாகத் தனித்தனியாக வாழ்கிறார்கள் என்பது தெளிவாக உணர்த்தபடுகிறது.

அன்றிரவு கணவன் வீடு திரும்புகிறான். வீட்டில் யாரும் இருப்பது போலவே தோன்றவில்லை. பசை டியூப் காலியாக உள்ளது. உட்காருவதற்காக அருகிலிருந்த ஒரு நாற்காலியை நகர்த்துகிறான். அது நகரவில்லை. தரையுடன் சேர்த்து ஒட்டப்பட்டிருக்கிறத. இது போலவே ப்ரிட்ஜைத் திறக்க முடியவில்லை. அதையும் அவன் மனைவி ஒட்டியிருக்கிறாள் . அவளைப் பற்றிக் குறை சொல்ல அவளது அம்மாவிற்குத் தொலைபேசி செய்ய முயற்சிக்கிறான். அதுவும் ஒட்டப்பட்டிருக்கிறது.

திடீரென ஒரு சிரிப்புச் சப்தம் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் வீட்டுக் கூரையில் இருந்து அவள் தொங்கிக் கொண்டிருந்தாள்.

பசை விளம்பரத்தில் இருந்த அதே காட்சி.

செருப்பில்லாமல் அவள் கால்கள் கூரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. தலைகீழாகத்தொங்கிக் கொண்டிருக்கிறாள்.

இதைக் கண்டு அதிர்ந்து போய் உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா எனக் கணவன் கத்துகிறான். அவள் பதில் சொல்லாமல் சிரிக்கிறாள்.

அவளைக் கிழே இறக்கிவிடுவதற்காக முயற்சிக்கிறான். ஸ்டுல் எதையும் நகர்த்த முடியவில்ல. அகவே தடிமனான புத்தகங்களை எடுத்துப் போட்டுக் கோபுரம் போலாக்கி அவளைப் பலம் கொண்ட மட்டும் கிழே இழுக்கிறான்

தலைகீழாக அவள் தொங்கும் போது மிக அழகாகத் தோன்றுகிறாள். அவளது நீண்ட கூந்தல் வசீகரமாக ஆடுகிறது. வெண்ணிற மேலாடையின் உள்ளே செதுக்கி வைக்கபட்ட சீரான இரு கண்ணீர்த் துளிகள் போல் அவளது மார்பகங்கள் தெரிகின்றன. அவளை வியந்து ரசிக்கிறான். .

பின்பு அவளை முத்தமிடுகிறான்.. அவளும் இணங்கி நாவோடு நாவு கவ்வ முத்தமிடுகிறாள். சட்டெனக் காலடியில் இருந்த புத்தகங்கள் சரிகின்றன. அவளது உதட்டினை கவ்வியபடியே அவன் தொங்கிக் கொண்டிருப்பதாகக் கதை முடிகிறது

••

கசந்த உறவை எந்தப் பசையால் ஒட்டமுடியும் என்று கதை கேள்வி எழுப்புகிறது. அதே நேரம் உறவை ஒட்டும் பசை காமம் மட்டுமே என்று அடையாளமும் காட்டுகிறது. தலைகீழான மாற்றத்தால் மட்டுமே அவர்களுக்குள் புதிய ஈர்ப்பு உருவாகிறது. இந்த மாற்றத்தை அவள் தான் ஏற்படுத்துகிறாள்.

அந்த வீட்டில் இருந்த பொருட்கள் யாவும் பசையால் ஒட்டப்பட்டுவிடுகின்றன. ஆனால் புத்தகங்கள் ஒட்டப்படவில்லை. அவற்றைக் கணவன் கையாளுகிறான். புத்தகம் ஏணி போலப் பொருளாக மாறுகிறது. அவனது படிப்பு இப்படி உருமாற வேண்டும் என்றே அவள் நினைக்கிறாள். தலைகீழாகத் தொங்கும் அவளைப் பார்க்கும் போது யாரோ ஒருத்தியை போலத் தெரிகிறாள். அவளது உடல் வசீகரமாகத் தெரிகிறது.

கதையின் கடைசிவரியில் அவன் உதட்டினை கவ்வியபடியே தொங்கிக் கொண்டிருக்கிறான். உடலின் ஒன்றிணைவு வழியாகவே உறவு வலுப்படுகிறது. காமம் குடும்ப உறவின் ஆதாரம். அதன் சீரான தன்மையே கணவன் மனைவி உறவை வலுப்படுத்துகிறது.

கதையின் முதல்வரிக்கு திரும்ப வாருங்கள்.

தொடாதே என்று அவன் மனைவி கூறுகிறாள்.

கதையின் கடைசி வரியில் அவளது உதட்டை கவ்வியபடியே கணவன் தொங்குகிறான்.

எவ்வளவு கச்சிதமாகக் கதை உருவாக்கபட்டிருக்கிறது. குறைவான சொற்களைக் கொண்டு அற்புதமான கதையை ஒரு மரச்சிற்பம் போலச் செதுக்கியிருக்கிறார் எட்கர் கிரெட்.

வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் அவள் பசை ஒன்றின் மூலம் நகரவிடாமல் செய்கிறாள். இதன் மூலம் நகர்வு எளிதானதில்லை என்பதை அவனுக்குப் புரிய வைக்கிறாள். பசை விளம்பரத்தை பார்த்த மாத்திரம் அது விரையம் எனக் கணவன் நினைக்கிறான். அது தான் அவளை அவன் புரிந்து வைத்துள்ள விதம். ஆனால் அவள் நிதானமாக, விசித்திரமாக, தனது எண்ணங்களைச் செயல்படுத்துகிறாள். கணவனிடம் காணப்படும் பதட்டம் அவளிடமில்லை.

இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை இப்படிப் பட்டது தான். ஆனால் தலைகீழ் மாற்றம் அவர்களுக்குள் நடப்பதேயில்லை.

சிறுகதை ஆசிரியன்  கதையில் நிறைய  சொல்லத்தேவையில்லை. குறைவான, கச்சிதமான உரையாடல்களின் வழியே கதையினை நேர்த்தியாக உருவாக்கிவிட முடியும். கனவுத்தன்மை கொண்ட இக்கதை யதார்த்தத்தை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. இது முக்கியமான உத்தி. சிறுகதை ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமிது.

இக் கதை 9 முறை குறும்படமாக்கபட்டுள்ளது. அதில் இரண்டு குறும்படங்களைப் பார்த்தேன்

கதையைப் போலக் குறும்படம் உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தவில்லை.

——


பசை - எட்கார் கெரட் (Etgar Keret) - தமிழில் :மாது

“அதைத் தொடாதே” என்றாள் அவள்.

“என்னது அது” என்றேன்.

“பசை. மிகச் சிறப்பான பசை. இருப்பவற்றிலேயே மிகச் சிறந்தது”

“எதற்காக வாங்கினாய் அதை”

“இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன”

“இங்கே இருப்பவை எவற்றையும் ஒட்டத் தேவையில்லை. இதையெல்லாம் எந்தக் காரணத்துக்காக அனாவசியமாக வாங்குகிறாய் என்று தெரியவில்லை”

“உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட அதே காரணத்திற்காகத்தான்….நேரம் கழிப்பதற்க்கு”

அவளுடன் சண்டையிட எனக்கு விருப்பமில்லை. அமைதியாய் இருந்தேன். அவளும் அமைதியாய் இருந்தாள்.

“இது என்ன அவ்வளவு நல்ல பசையா?” என்றேன். பசை டப்பாவின் மேல் ஒட்டப்பட்டிருந்த படத்தைக் காட்டினாள். உட்கூறையிலிருந்து ஒருவன் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தான்.

“எந்தப் பசையாலும் ஒருவனை அப்படிக் கூரையில் ஒட்ட வைக்க முடியாது. படத்தைத் தலைகீழாக எடுத்திருப்பார்கள். விளக்கை தரையில் வைத்து கூரையிலிருந்து தொங்குவதுபோல் காட்டியிருப்பார்கள்” என்று அவள் கையிலிருந்து பசை டப்பாவை வாங்கி உற்று நோக்கினேன். “இங்கே பார் இந்த ஜன்னலை. அதன் படுதாக்கள் மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கின்றன. கீழிருந்து மேல் தொங்குவது போல் கூடக் காட்டத் தெரியவில்லை இவர்களுக்கு.” அவள் பார்க்கவில்லை.

“அட எட்டு மணி ஆகிவிட்டதே ! நான் வேலைக்குக் கிளம்பவேண்டும்” என்று கூறி என் பெட்டியை கையிலெடுத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். “நான் வர சற்று நேரமாகும் … நான் …”

“ஓவர்டைம். எனக்குத் தெரியும்.”

~oOo~

அலுவலகத்திலிருந்து அபிக்கு போன் செய்தேன் “இன்றைக்கு வர முடியாது. வீட்டிற்குச் சீக்கிரம் போக வேண்டும்”

“ஏன் ஏதாவது நடந்ததா” என்றாள் அபி.

“இல்லை….அவள் சந்தேகப் படுகிறாள் என்று தோன்றுகிறது”

நீண்ட மொளனம். மறுமுனையில் அபியின் பெருமூச்சு கேட்டது.

“ஏன் அவளுடன் இருக்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை,” என்றாள் மெல்லிய குரலில். “நீங்கள் இருவரும் சேர்ந்து எதுவுமே செய்வதில்லை. சண்டைகூடப் போடுவதில்லை”. சிறு இடைவெளிக்குப் பின், “புரியவில்லை..” என்று மீண்டும் இழுத்தாள்.

“அபி கொஞ்சம் இரு…யாரோ உள்ளே வருவது போல் தெரிகிறது” என்று பொய் சொன்னேன். “சரி போனை வைக்கிறேன். சத்தியமாக நாளைக்கு வருகிறேன். எல்லாவற்றையும் பற்றி அப்போது பேசலாம்”.

~oOo~

சீக்கிரமாக வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்தவாரே “ஹலோ” என்றேன். பதில் வரவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடினேன். எந்த அறையிலும் அவள் இல்லை. சமையல் மேடையில் பசை ட்யூபைப் பார்த்தேன். காலியாய் இருந்தது. உட்காருவதற்காக அருகிலிருந்த ஒரு நாற்காலியை நகர்த்தினேன். அது நகரவில்லை. மீண்டும் முயற்ச்சித்தேன். அசைவதாய்த் தெரியவில்லை. தரையுடன் சேர்ந்து ஒட்டியிருக்கிறாள். ப்ரிட்ஜை திறக்க முடியவில்லை. அதையும் ஒட்டியிருக்கிறாள். என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. இப்படிச் செய்ய அவளைத் தூண்டியது எது. அவள் அம்மாவிற்குப் போன் செய்வதற்காகக் கூடத்திற்குச் சென்றேன். போனின் பேசு முனையைத் தூக்க முடியவில்லை. அதையும் ஒட்டியிருக்கிறாள். அருகிலிருந்த மேஜையை ஒரு எட்டு விட்டேன். அது துளியும் அசையவில்லை. என் கால் கிட்டத்தட்ட உடைந்ததுதான் மிச்சம்.

அப்போது அவளின் சிரிப்பைக் கேட்டேன். எனக்கு மேலிருந்து வந்தது சிரிப்பொலி. அன்னாந்து பார்த்தேன். அங்கே அவள். மேற்கூறையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாள். செருப்பில்லா அவளது கால்கள் மேற்கூரையில் ஒட்டியிருந்தன.

வாய் பிளந்து பேசாது நின்றேன். “என்ன…பைத்தியம் கியித்தியம் பிடித்துவிட்டதா” என்று மட்டுமே கேட்க முடிந்தது.

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள். புவியீர்ப்பினால் பிளந்த அவள் உதடுகளிலிருந்து வந்த புன்னகை இயற்கையாய்த் தோற்றமளித்தது.

“கவலைப் படாதே உன்னைக் கீழே இறக்கி விடுகிறேன்” என்று சொல்லியவாறே அலமாரியிலிருந்து தடிமனான புத்தகங்களை அவசரமாக எடுத்தேன். என்சைக்ளோபிடியா தொகுதிகளைப் கொண்டு ஒரு கோபுரம் அமைத்து அதன் மீது தட்டுத் தடுமாறி ஏறினேன்.

விழாமல் சுதாரித்த படியே “கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோ” என்றேன். அவள் புன்னகைத்தபடி இருந்தாள். பலம் கொண்ட மட்டும் அவளை இழுத்தேன். ஏதும் நடக்கவில்லை. மெதுவாகக் கீழே இறங்கினேன்.

“கவலைப்படாதே…பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூட்டி வர முடியுமா என்று பார்க்கிறேன்” என்றேன்.

“சரி…எனக்கு எங்கும் போக உத்தேசமில்லை” என்று கேலியாகச் சிரித்தாள்.

நானும் சிரித்தேன். பொருத்தமற்று தலைகீழாகத் தொங்கியதில் அவள் மிக அழகாகத் தோன்றினால். அவளது நீண்ட கூந்தல் தலைகீழாக ஊஞ்சல் ஆடியது. வெள்ளை நிற மேலாடையின் உள்ளே திறம்பட வார்க்கப்பட்ட சீரான இரு கண்ணீர்த் துளிகள் போல் தோன்றின அவளது மார்பகங்கள். அழகோ அழகு. மீண்டும் புத்தகக் குவியல் மேல் ஏறி அவளை முத்தமிட்டேன். அவளது நாக்கை என் நாக்கில் உணர்ந்தேன். என் காலின் கீழ் புத்தகங்கள் சிதறின. அந்தரத்தில் அவள் உதட்டிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தேன்

நன்றி
சொல்வனம் இணையஇதழ்

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின். இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது

மு.வரதராசனார் உரை
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை 
பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.

எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சில பத்திகள் கீழே
(அத்தியாயம் 9)
திருப்தியற்ற தாம்பத்ய உறவு
ஒருவருக்கொருவர் இணையாக துணையாக ஒருவர் தேவையை மற்றவர் கவனித்து வாழ்வதற்காகத்தான் திருமணம் என்ற ஒன்றை  செய்கிறோம். இது உடற்தேவையையும் உள்ளடக்கியதே. அன்பும் காதலும் தான் காமத்திற்கு அடித்தளமாகும் என்பதை நான் எவ்வளவு நம்புகிறேனோ அதே போல், திருப்தி இல்லாத உடலுறவும் அந்தக் காதலை அழித்து விடும் சக்தி உடையது என்பதையும் நம்புகிறேன். திருப்தி இல்லாத உடலுறவு, இல்லை உடலுறவே இல்லாத பட்சத்தில், சிறிது சிறிதாக, அன்பான கணவன் மனைவிக்கிடையே கூட ஒரு வேற்றுமைத்தன்மையை விதைத்து விடும். காமம் என்பதும் உணவைப் போல், மனிதனுக்கு ஓர் அடிப்படையான தேவை. மனதால் உடல் சேர்வதும், உடலால் மனம் நெருங்கியும் இருப்பதே ஒரு அழகான தாம்பத்திய உறவை ஏற்படுத்தும், நீட்டித்து வைக்கும். இந்த உண்மையை நாம் மறக்கலாகாது.

ஓர் ஆண் மிகவும் அன்புடையவனாகவும், மிகவும் நல்லவனாகவும் இருக்கலாம். ஆனால் உடலால் அவளை திருப்தி அடைய வைக்க இயலவில்லையெனில்? அதே போல் ஒரு பெண் மிகவும் அன்பானவளாகவும், அக்கறை எடுத்துக்கொள்பவளாகவும் இருக்கலாம். ஆனால், அவள் அவனின் உடற்தேவைகளை பூர்த்தி செய்ய ஒத்துழைக்காவிடில்?  இங்கு ஏதோ தவறு இருக்கிறது அல்லவா? ஒருவரிடமோ இல்லை இருவரிடமுமோ? காமத்தில், நமக்குப் பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என்பது குறித்து நம்மில் எத்தனை பேர் உரையாடுகிறோம்? உடலுறவின் பால், ஒவ்வாமை இல்லாதபோதும், அது குறித்து, பொதுவில் பேசாத நிலையைத்தான் நாம் கற்றுள்ளோம். நெருக்கமான உறவைக் கொள்ளல் அவசியம் என்னும் நிலையிலுள்ள கணவன்-மனைவியிடத்தும் இத்தகைய ஒவ்வாமைகள் இருக்கலாம். ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதில் ஒவ்வாது இருந்தாலும், கணவனுக்காக, அதை அவன் விரும்புகிறான் என்பதற்காக, அவனைத் திருப்தி செய்யவேண்டும் என்ற நோக்கில் மட்டும் அதைச் செய்பவளாக இருக்கலாம். அத்தகைய நிலையில் அந்தக் கணவன், அவளுக்கு  விருப்பமில்லை என்றாலும், தனக்காகவே செய்கிறாள் என்பதை அறியாதவனாக இருந்தால், நாளாக நாளாக, அவள் அச்செய்கையை மேலும் மேலும் வெறுக்க ஆரம்பிக்கிறாள். 

காமத்தின்பாலான தனது வேட்கையை ஆணிடம் வெளிப்படையாகத் தெரியப்படுத்துதல் தவறு என்னும் கருத்துடன் சில பெண்கள் உள்ளனர். அவ்வாறான வேட்கை இருந்தும் அவள், அதை வெளிக்காட்டாமல், இல்லாததுபோல் நடிக்கவேண்டியதாகிறது. அவளது கணவன் அவளிடம் மென்மேலும் இன்பத்தை நுகர்ந்து, அவள் மேலும் வெளிப்படையாக உறவில் ஈடுபட வேண்டும் என்று விரும்பலாம். ஆயினும் ஏற்கனவே பழக்கப்படுத்தப்பட்ட மூளை, அவளை அவ்வாறு வெளிப்படையாகச் செயலுறத் தடுக்கிறது. இந்த நிலையில், சில காலத்திற்குப்  பின்னர், அவளுடைய கணவன், மெல்ல அவள்பால் கொண்ட ஈடுபாட்டை இழந்து, ஒரு திருப்தியான உடலுறவிற்கு ஏங்க ஆரம்பிக்கிறான். இத்தகைய சூழல்களில், தயக்கமின்றி, உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினால், பயனுள்ளதாக அமையும். ஆயினும், காமத்தை  மறைத்து வைத்து மனம் திறந்து பேசுவது தவறு என வளர்க்கப்பட்ட விதம் நம்மை அவ்வாறு செய்வதிலிருந்து தடுக்கிறது. 

பெரும்பாலும் ஓர் ஆண் உச்சமடையும் நேரம் தான் ஒரு பெண்ணின் வேட்கையே கிளறப்படுகிறது. ஆதலால் பெரும்பாலும் பெண்கள் கிளறப்பட்டு அவள் நிறைவு பெறாத ஒரு செயலாகவே கலவி என்பது உள்ளது. அவளை சும்மா விட்டிருந்தாலும் சுகமாகப் படுத்து உறங்கியாவது இருப்பாள். அவள் வேட்கை உச்சத்தில் இருக்கும் நேரம் பொதுவாக அவன் குறட்டை விட்டுத் தூங்கியே இருப்பான். இப்படித்தான் பெரும்பாலான கலவிகள் முடிகின்றன. அந்தப் பெண்ணின் பரிதாபகரமான நிலை குறித்துக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். எவ்வளவு வெறுக்கத்தக்க நிலையில் அவள் வாழ்வு இருக்கும்?  இதை நான் சொல்ல வேண்டுமென்று சும்மா சொல்லவில்லை.  என் சொந்த அனுபவத்திலிருந்தும் இன்னும் நான் பேசிய பல பெண்களிடமிருந்தும், படித்தும் தெரிந்து கொண்ட விஷயம் தான். இதற்கு முரணான போக்கும் நடைமுறையில் உள்ளது 

என்பதை, நான் ஒரு பெண் என்கிற முறையில் தெரிந்துகொண்ட போது திடுக்குற்றேன். இந்த நூல் குறித்து நான், எனது ஆண் நண்பர்களுள் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் ஒரு விஷயத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நண்பர் அவர் மனைவியிடம் உடலுறவு கொள்ள முனையும் போதெல்லாம், அவர் மனைவி அதற்கு உடன்படமாட்டார். இருந்தாலும், எப்போதாவது ஒருமுறை அவரது மனைவி, நண்பரிடம், தனக்கு வேண்டியதைச் செய்யச் சொல்லி, தான் உச்சத்தை அடைந்ததும், எழுந்து சென்றுவிடுவார். 

அதுநாள் வரை, அத்தகைய சூழல்கள் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் என்றும், ஆண்கள் எப்போதும், தங்களுக்கு வேண்டியதை, பெண்களுக்கு விருப்பமில்லை என்ற போதிலும், பெற்றே விடுவர் என்றும் தவறாக நம்பியிருந்தேன். என் நண்பரிடமிருந்து அந்த முரணான வழக்கத்தைப் பற்றி அறிந்தபோது, நான் என் அறியாமையை உணர்ந்தேன். இந்த ‘உண்மையை’ நான் வேறொரு ஆணுடன் பகிர்ந்து கொண்டபோது, அவரும், தான் அவ்வாறே பல வருடங்களாக வாழ்வதாகக் கூறினார். அவரது மனைவி அவர் அருகில் ஒவ்வொரு முறை வரும்போதும், அவருடைய உடல்ரீதியான வேட்கை தணியும் என்று நம்பினாலும், ஒருமுறையேனும் அவ்வாறு அமைந்ததில்லை என்று அந்த நண்பர் கூறினார். இவ்விருவரில் ஒருவர், தற்போது திருமண வாழ்க்கையைத் தொடரவில்லை. அடுத்தவர், அவருக்குக் குழந்தைகள் உள்ளதால், திருமண பந்தத்தைத் தொடர்கிறார்.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

குறள் 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
உள்ளக் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

களித்தலும் - களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

உள்ளக்களிப்பு - மனமகிழ்ச்சி

காண - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

மகிழ்தலும் - மகிழ்தல் - அகங்களித்தல்; உணர்வழியஉவகைஎய்துதல்; குமிழியிடுதல்; விரும்புதல்; உண்ணுதல்.

கள்ளுக்கு - கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

இல் - இல்லை

காமத்திற்கு - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச் சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
என் காதலரை பற்றியும் எங்கள் காதலை பற்றியும், நாங்கள் புணர்ந்ததைப் (கலவிக் கொண்டது) பற்றியும், நான் நினைத்தால் என் உள்ளம் (மனம்) களிப்படைகிறது (உள்ளத்திற்கு ஊக்கம் என்ற பொருளும் உண்டு. ஆதலால் நான் இன்னும் பல நாள் என் காதலருடன் வாழ ஊக்கம் கொள்கிறேன்), என் காதலரை கண்டால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் (ஏனெனில் என் கவலைகள் யாவும் மறக்கிறேன். நாங்கள் கொள்ளப்போகும் புணர்ச்சியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்). ஆக காதலினால் நினைத்தாலும், கண்டாலும் காதலர்களுக்கு இன்பமே. இவர்கள் ஒருவரை ஒருவர் நுகரவோ, தீண்டவோ, தழுவவோ, புணரவோக் கூட தேவையில்லை. ஆனால் இன்பம் உண்டு. அதுவே இவர்கள் புணரும் பொழுதும் இன்பம். புணர்ந்த பின்பும் இன்பம்.

ஆனால் இந்த பண்புகள் கள்ளுற்கு இல்லை. கள் தனை நினைத்தாலே சிறிது நேர கிளர்ச்சி இருக்கலாம் களிப்பு இருக்காது. அதுப்போல கள் புட்டிகளை கண்டால் எந்தவித ஒரு மகிழ்ச்சியும் இருக்காது. அதுவே கள் தனை உண்டால் மனிதன் மகிழ்ச்சி அடைகிறான். இதுவும் இந்த கள் உடலில் உள்ளவரை மட்டுமே அந்த போதை இருக்கும். மறுநாள் காலை அந்த போதை இருக்காது.

ஆக, புறவயமான தீண்டுதலிலான இன்பங்களும் இருப்பினும், காதல் (காமம்) கொடுக்கும் இன்பம் அகவயமானது. அதனை நினைத்தாலும் கண்டாலும் மகிழ்ச்சி தான். ஆனால் கள் இந்த அகவயமான இன்பங்களை கொடுக்காது. அது வெறும் தற்காலிகமான உடலில் உள்ளவரையிலான புறவயமான இன்பத்தை உண்டால் மட்டுமே தரும்.

மேலும்: அஷோக் உரை

அரசே, இன்று தங்கள் மணநாள் இரவு” என்றாள். ஆமென அவன் தலையசைத்தான். “பிறபெண்டிரை நீ இதுவரை அறிந்ததில்லை என்று அறிவேன்” என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “காமத்தையே உண்மையுருவில் இப்போதுதான் காணப்போகிறாய். உள்ளக்காமம் சொல்லில் படர்ந்து கனவில் ஊடுருவி வளர்ந்து எழுவது. அரசே, ஆனால் அதைவிடவும் பேருருக்கொண்டது உடற்காமம்” என்றாள்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விரைதல் . மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பு அறிவுறுத்தத் தலைமகள் , அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னும் தன்கண்ணே நிகழ்தலான் . இது குறிப்பு அறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.]

(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு. (களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு. கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.

மு.வரதராசனார் உரை
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

கண்ணின் துனித்தே கலங்கினாள்

குறள் 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் 
என்னினும் தான்விதுப் புற்று.
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
கண்ணின் - கண்ணின் அளவு சிறிதான
துனித்தே - துனி - வெறுப்பு (ஊடல்); சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

கலங்கினாள் - கலங்குதல் - நீர் முதலியன குழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல்.

புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

என்னினும் - என்றாலும்

தான் - தான்

விதுப்பு - நடுக்கம்; விரைவு; பரபரப்பு; வேட்கை (Desire, longing).
உற்று - uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  

விதுப்புற்று - விரைந்து வேட்கை தீர்த்துக்கொண்டாள்

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் சில காரணங்களால் பிணக்குக்கொண்டு ஊடலில் தவிக்கின்றனர். தலைவியின் ஊடலோ கண்ணின் அளவு மிக மிக மிக சிறிதாக இருக்கிறது. இந்த கோவம் என்பது தீயினைப் போன்றது. எது மெல்ல மெல்ல தான் தணியும்.

ஆனால் ஊடலில் என்னுடன் பேசமுடியாமல் மிகுந்து துன்புற்று இருக்கிறாள் இவள். ஆதலால் என்னை பார்த்தவுடன், என் மீது கொண்ட காதலால், தான் இப்போது ஊடிக்கொண்டு இருக்கிறோம் என்பதனைக்கூட மறந்து, அதனை துட்சமாக எண்ணித், தலைவன் மீது மின்னல் வேகத்தில் துள்ளி குதித்துப் பாய்ந்தாள் புணர்ந்தாள் வேட்கை தீர்த்துக்கொண்டாள். அவளுடைய காதலை தலைவன் புணரும் பொழுது உணரலாம்.  இங்கே ஏன் திருவள்ளுவர் தலைவியை பற்றி மட்டும் தான் சொல்கிறார் என்றால் ஒரு காரணம் இருக்கலாம் - தலைவன் வேலைக்கு செல்கிறான் - அவனுக்கு வீட்டில் உள்ள ஊடலை பற்றி கவலைப்பட நேரமில்லை - ஆனால் தலைவியோ வீட்டில் இருக்கிறாள் - துன்பத்தில் ஏக்க நோய் கொண்டு அவள் மெல்லிய தோளில் பசலை நோயும் படரும் என்று நாம் அறிவோம். இருப்பினும் (என்னை பொருத்த வரையில்) கோபத்தை துட்சமாக எண்ணியவர் (தலைவனாகவும் இருக்கலாம்)  விரைவாக  துள்ளி குதித்து கூடுவர்.

எந்த ஒரு போபத்தை தணிக்க வல்லது அகம் சார்ந்த காதலாகும். நாம் என்ன நினைத்தாலும் நமது அகம் நினைப்பது வேறு. நம் அகம் சொல்வதையே நம் உடல் கேட்கிறது.





Image result for run and hug

Image result for run and hug

Image result for run and hug

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”கவவுக் கடுங்குரையள்” (குறுந் 132:1)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
கண்ணின் துனித்தே-முன்னொருநாள் தழுவல் விதுப்பினாற் சென்ற என்னொடு கண்ணளவாக மட்டும் காதலியூடி; என்னினும் தான் புல்லுதல் விதுப்புற்றுக் கலங்கினாள்-என்னினும தான் தழுவல் விதுப்புற்றதினால் அக் கண்ணளவூடலையும் மறந்து அப்பொழுதே கூடிவிட்டாள் . அதனால் , யான் இத்தன்மையேனாய் ஏங்கிநிற்கவும் விதுப்பின்றி யூடிநிற்கின்ற இவள் அவளல்லள்.

கண்ணளவாக வூடுதல் சொல் நிகழ்ச்சியின்றிக் கண்சிவத்தல்.அவளாயின் ஊடற்கண் நீடாமை பயன் . ஏகாரம் பிரிநிலை.

மணக்குடவர் உரை
கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

சாலமன் பாப்பையா உரை
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.

மலரினும் மெல்லிது காமம்

குறள் 1289 
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் 
செவ்வி தலைப்படு வார்.
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
மலர் பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர்.

இனும் -  இன்னும்

மலரினும் - மலரை விட.

மெல்லிது - மென்மைவாய்ந்தபொருள்; ஒல்லி.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை, காதல் (புணர்ச்சி).

சிலர் - சிலபேர், மிக சிலர் மட்டுமே.

அதன் - அதனுடைய, It's   It's   It's  

செவ்வை - நேர்மை; மிகுதி; வழிமுதலியவற்றின்செப்பம்; சரியானநிலை
செவ்வை - cevvai   n. id. 1. [M. cevva.]Correctness, fitness, accuracy, straightness;நேர்மை. தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி(சிலப். வழக். 68). 2. Abundance; மிகுதி செவ்வையாய்க் கொடுத்தான். 3. Evenness, smoothness வழி முதலியவற்றின் செப்பம் அந்தவழி செவ்வையாகஉள்ளது. 4. Sound condition, as of mind, body,etc.; சரியான நிலை அவனுக்குத் தேகம் செவ்வையில்லை.  
செவ்வை - cevvai   s. evenness, straightness, correctness, uprightness, செம்மை; 2. cleanness, pureness, சுத்தம்.

செவ் - cev   adj. from. செவ்வை (used only before words beginning with வ or a vowel, before vowels வ் is doubled), same as செம் which see.

செவ்வி - நலனையும் பயனையும் அறிந்து; காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள்.

தலைப்படுதல் - ஒன்றுகூடுதல்; எதிர்ப்படுதல்; மேற்கொள்ளுதல்; பெறுதல்; முன்னேறுதல்; தலைமையாதல்; புகுதல்; வழிப்படுதல்; தொடங்குதல்.

தலைப்படுவார் - செயல்படுவார்கள்.

ஒப்புமை
”ஐதே காமம்” (குறுந்:217:6)

எழுத்தாளர் திரு ஜெயமோகன் வலைபக்கத்தில் இருந்து (சுட்டியை சொடுக்கவும்)
காமத்தைக் குறித்து சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ஒரு குறள்

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார்

மிக மென்மையான அகம் சார்ந்த விஷயம் காமம் என்பது. இயல்பிலேயே அப்படியா அல்லது மனிதன் தன் பண்பாட்டு வளர்ச்சிப்போக்கில் அப்படி உருவாக்கிக்கொண்டானா என்பதை உணர்வது கடினம் . ஆனால் அதைக்குறித்து போகிறபோக்கில் எதையும் சொல்லிவிடமுடியாதென்றே எண்ணுகிறேன். கோட்பாடுகள் வந்து போய்க்கொண்டே இருக்கும். அது என்றென்றும் அதற்கான நுண்ணிய மர்மத்துடன் தான் நீடிக்கும்.

காமம் என்றல்ல வாழ்க்கையின் எந்த ஒரு விஷயத்தையும் அதன் உச்சம் அதீதம் நோக்கிக் கொண்டுசெல்ல இயற்கை அனுமதிப்பதில்லை. இயற்கை எல்லாவற்றையும் அதற்கு இணையான எதிர் ஆற்றலால் சமப்படுத்தியே வைத்துள்ளது. அதீதமாக எது சென்றாலும் அந்த எதிர் ஆற்றலும் அதே அளவுக்கு அதீதமாகும். அது அழிவை உருவாக்கும்.

காமம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட இன்பம். அவனுடைய படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண். அவனை உயிர்த்துடிப்புடன் அது வைத்திருக்கிறது. ஆனால் அதன்பொருட்டு அவன் உறவுகளை இழந்தானென்றால், நுண்ணுணர்வுகளை இழந்தானென்றால், அறவுணர்ச்சியை இழந்தானென்றால், ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டானென்றால் காலப்போக்கில் காமத்தையும் இழந்துவிடுவான்.

ஆகவே காமத்தைப்பற்றி மட்டுமல்ல எல்லாவற்றைப் பற்றியும் நான் சொல்வதும் குறளின் உவமையே ‘அகலாது அணுகாது தீக்காய்தல்’

ஜெ

வெண்முரசு - நூல் ஒன்று – முதற்கனல் - 18`இல் இருந்து (ஜெயமோகன்) (சுட்டியை சொடுக்கவும்)
கங்கை சுழித்துச் சீறிவிலகும் ஒரு பாறையின்மேல் கட்டப்பட்ட குடிலில் அவளுடன் சந்தனு தங்கினான். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு உறுப்பாலும் காமத்தை அறிந்தான். குருகுலத்தவனே, நீருள்நீர் போல சேர்வதே உயர்காமம். நீரில் உள்ளன காமத்தின் விதிகள். நீரில் நிகழ்வன காமத்தின் எல்லைகள். மழைக்கால நதியும் கோடைகாலநதியும் பெண்ணே. குளிர்கால உறைவும் வெம்மை கரந்த வசந்தமும் பெண்ணே. மலர்சூடிச்செல்லும் ஓட்டமும் உள்ளொழுக்குகள் காலைக்கவ்வி இழுக்கும் சுழிப்பும் அவளே. அவளை முடிவில்லாத அலைகளையே புரளும் ஏடுகளெனக் கொண்ட நூலாக அறிந்துகொண்டிருந்தான்.

நீரின் மாயத்தை சொல்லிவிடும் சூதன் எங்குள்ளான்? மெருகேறிய மென்பரப்புகள், மின்னும் வளைவுகள், உயிரின் அலைப்பரப்புகள், ஆழம்குவிந்த சுழிகள், ஒசிந்த குழைவுகள், நுரைத்ததும்பல்கள், பாசிமணக்கும் பாறைப்பரப்புகள், துள்ளிச்சிரிக்கும் வெள்ளிமீன்கள், கண்களாக மட்டுமே தெரியும் ஆழத்தின் மாபெரும் மீன்கள்.. அவள் அவனை முழுமையாக தன்னுள் இழுத்துக்கொண்டாள். சந்தனுவின் மைந்தனே, நீராடிமுடிக்கத்தக்க நதியும் காமத்தால் தாண்டிச்செல்லத்தக்க பெண்ணும் பிரம்மன் அறியாதவை. உன் அடையாத காமத்தால் அவன் அடைந்த காமத்தை ஆயிரம்முறை பெரிதாக நீ அறியமாட்டாயா என்ன?

முழுப்பொருள்
மலர் என்றென்பது எல்லாவற்றினும் மென்மையானதாக கருதப்படுவது. ஆனால் அதை விட மென்மையானது காமம் என்கிறார் திருவள்ளுவர். காமத்தின் சிறப்பை உணர்த்துவதற்காகவே மலரை உவமையாக்குகிறார் திருவள்ளுவர். மிக மென்மையான அகம் சார்ந்த விஷயம் காமம் என்பது.

அத்தகைய காமம் விளைவிக்கும் பயன் எல்லோரும் அடைவதில்லையாம். காமத்தின் உச்சத்தை அடைபவர்களுக்கே அது கிட்டும். அப்படி காமத்தின் சிறப்பை மென்மையை அருமையை நுட்பத்தை அறிந்து செயல்படுபவர்கள் மிக சிலரே என்கிறார் திருவள்ளுவர்.

காமத்தின் உச்சத்தையும் பயனையும் அடைய வேண்டுமானால் குறிப்பும், வேட்கையும், நுகர்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து (ஒரே நேரத்தில் ஒன்றாக) நுகரவேண்டும் இருவரும். அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர். 

அத்தகைய காமத்தில் ஒருவர் சிறிது வேறுபட்டாலும் அதனுடைய பயனை அடைய அவர்கள் மாட்டார்கள். ஆகவே (பெரும்பாலும்) கணவன் துணைவியின் குறிப்பு அறிந்து புணர்ச்சியில் செயல்பட வேண்டும். அதாவாது தனது வேட்கையை காண்பித்து இன்பமுற்று துணைவியை பாதியில் விட்டுவிட கூடினால் காமத்தில் பயனை அவர்கள் பெற மாட்டார்கள். ஆகவே குறிப்பு கண்டு கூடலில் ஈடுபட வேண்டும். அதனை வேட்கையுடன் செயல் பட வேண்டும். உள்ளத்தின் உணர்வுகளைத்  தூண்டி(அகம் சார்ந்த விஷயம் காமம் என்று முன்பே கூறி குறிப்பிட்டிருந்த்தேன்) உச்சத்தை அடைய வேண்டும். மலரை நுகர்வதுப்போல மென்மையாக நுகர வேண்டும். அப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறிப்பு கண்டு ஒரு காலத்தின் கண் ஒத்து நுகர்ந்தால் (இருவரும் உச்சத்தை அடைந்தால்) அவர்கள் காமத்தின் பயனை அடைவர். அப்படி நுகர்வதே காமத்தின் உச்சம்.

காமத்தின் பயனாக ஊடல் தீரும் என்கிறார் திருவள்ளுவர். 

அதுமட்டும் இன்றி காமம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட இன்பம். அவனுடைய படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண். அவனை உயிர்த்துடிப்புடன் அது வைத்திருக்கிறது. ஆனால் அதன்பொருட்டு அவன் உறவுகளை இழந்தானென்றால், நுண்ணுணர்வுகளை இழந்தானென்றால், அறவுணர்ச்சியை இழந்தானென்றால், ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டானென்றால் காலப்போக்கில் காமத்தையும் இழந்துவிடுவான்.

குறிப்பு: இது கற்பியல் தொகுதியில் வரும் அதிகாரம் ஆகும். ஆதலால் ஒழுக்கத்தை முன் வைப்பதாக இருக்கிறது.

கவிஞர் இசை
மலரினும் மெல்லியது காமம். சிலரே அதன் அருமையும் நுட்பமும் அறிவர்.

‘மலரினும் மெல்லிது . . .’ அவ்வளவு நுட்பமானது என்பதாலேயே அது லாவகமாக ஒளிந்துகொள்கிறது. “ஒளிந்திருந்து மணம் வீசும் மலர் . . .” இந்த மணம் எங்கிருந்து வருகிறதென்று தெரியாமல் காட்டிற்குள் தேடியலைவது ஒரு அலாதியான அனுபவம் இல்லையா? 

வெளிப்படையானது எவ்வளவு பெரிதாயினும் அது அளவில் சிறியதே. ஒளிந்திருப்பது எவ்வளவு சிறிதாயினும் அது பெரிதினும் பெரிதே. 

‘மலரினும் மெல்லியது’ என்று உணர்ந்துகொண்ட மனம் பெண்களை நடுரோட்டில் கையைப் பிடித்து இழுக்காது.கட்டிவைத்து பெல்ட்டால் அடிக்காது. ஆபாசப் படம் எடுத்து மிரட்டாது. ஆசிட் வீசி எரிக்காது. சின்னஞ்சிறு குழந்தைகளை நாயைப்போலக் குதறி வைக்காது.

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு ஷண்முகசுந்தரர் கூறிய விளக்கம்
புணர்ச்சி என்பது மிகவும் புனிதமானது. அதனால் தான் அது கோவிலின் கோபுரங்களில் கோலம் கொண்டு உள்ளது. 

காமம் என்பது வேருமென இரண்டு உடல்கள் சேர்வது அல்ல. துணையின் உடைய உள்ளத்தைத் தொட்டு உணர்வுகளை தூண்டி உச்சத்தை தொடுவது தான் உண்மையான காமம். ஆனால் ஒரு புள்ளி விபரம் சொல்கிறது காமத்தில் உச்சத்தை தொட்டவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. அதுவும் பெண்களின் சதவிகிதம் மிக மிக குறைவு என்று சொல்கிறது. 

காமம் என்பது மலரைவிட மென்மையானது. அதனுடைய சிறப்பை அறிந்தவர்கள் மிகவும் சிலரே என்கிறார் திருவள்ளுவர்

நன்றி: திரு ஷண்முகசுந்தரர் [Star Vijay தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு] (சுட்டியை சொடுக்கவும்)

In the episode of Koffee with Karan -4 ShowLink (Time 29:12 to 29:28 Splicd Link)
Karan: One thing men should know about women but dont? (பெண்களைப் பற்றி ஆண்கள் தெரிந்திருக்க வேண்டியது ஆனால் தெரியாது)
Vidya: That women like it, need it and want it as much as they do (பெண்கள் அதனை விரும்புவார்கள், அவர்களுக்கு அது தேவை, அவர்களுக்கு அது வேண்டும் - ஆண்களுக்கு எப்படியோ அதே அளவிற்கு)

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

உலகெங்கும் ஆண்களும் பெண்களும் வாழ்கின்றார்
உண்மையில் வாழ்கின்றாரா
சிலர் மட்டும் வாழ்கின்றார் பலர் வாழவில்லையாம்
சிறப்பான செய்தி ஒன்றை
மலர் கொண்டு சொல்கிறார் மனம் கொண்ட வள்ளுவர்
மனத்திலே கொள்ள வேண்டும்
பலர் வாழ்வின் உண்மையைப் பளிச்செனச் சொல்கிறார்
பாடமாய்க் கொள்ள வேண்டும்

உடல் என்ற ஒன்றினை உணர்வோடு உள்ளதாய்
உணர்ந்தார்கள் வாழுகின்றார்
உளம் கொண்ட மங்கையர் உடல் வேண்டி நிற்பதை
உணராதார் வீழுகின்றார்
கடல் போன்ற காமத்தின் ஒரு துளி காணாதார்
கடல் போல அதிகம் உள்ளார்
கண்டவர் மிகச் சிலர் மிகச் சிலர் அவர் மட்டும்
காதலால் வெல்லுகின்றார்

ஒப்புமை:
ஐதே காமம் (குறுந்தொகை 217:6)

கவிதைகள்
முதல் முதலாக காமத்தை
அறிவியல் வகுப்புகளில்
எதிர்கொண்ட தருணம்
நினைவில் இருக்கிறது.
உடல் உறுப்புகள்,திரவங்கள்
பற்றிய தகவல்கள்,
வரைபடங்கள்...
பிறகு உளவியலும் பரிணாமவியலும் அளித்த விளக்கங்கள்.
பிராய்டு
டார்வின்...
மதங்களும் தத்துவங்களும் அளித்த வரையறைகள் ஏலவே கனக்க உண்டு.
ஒவ்வொன்றைப் படிக்கும்போதும்
நான் என் சன்னலைத் திறந்து
வெளியே பார்ப்பேன்.
சாத்தியமானால் ஒரு நடை செல்வேன்.
மரங்களையும்
மலர்களையும் காண்பேன்.
நூலகங்களுக்குச் சென்று
காவியங்களையும்
கவிதைகளையும் வாசிப்பேன்.
ஓவியங்களைப் பார்ப்பேன்.
இசை கேட்பேன்.
உயர்ந்த இடம் ஒன்றில் அமர்ந்துகொண்டு
திருவிழா ஒன்றைக் காண்பேன்.
எனக்கு நானே அப்போது சொல்லிக்கொள்வேன்.
காமம் உருவாக்கியதே 
இவை எல்லாம்.
என் பாடப்புத்தகங்கள்
சிறிய பார்வை கொண்டவை.
குறைந்த காட்சிகளைக் காட்டுபவை.
மானுடர் காமம் 
என்னைப்போல்
மலை மேல் நின்றுகொண்டு
எல்லாம் காண்பது.
மலரினுள் ஒளிந்துகொண்டு
கடவுளரையும்  உருவாக்குவது.
-- போகன் சங்கர்

பரிமேலழகர் உரை
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. காமம் மலரினும் மெல்லியது - காம இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் - அங்ஙனம் மெல்லியதாதலை யறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். 

விளக்கம் 
(தொட்ட துணையானே மனச் செவ்வி அழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லியது என்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், 'அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின், 'மலரினும் மெல்லியது' என்றும் கூறினான். 'குறிப்பு ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன்' என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன்.)

மணக்குடவர் உரை
எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்: அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின் ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்புமென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சொடு கூறியது.
சாலமன் பாப்பையா உரை
காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.

ஒரு திரைப்பாடல் 
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: நாடோடி மன்னன்

கொஞ்சிப்பேசும் கிளியே! -நல்
இன்பம் தரும் ஜோதியே!
மானே! மலரினும் மெல்லியது காதலே!
மகிழ்வோம் நாமே! புதுமை வாழ்விலே!

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். (குறள்)

`மலரைவிடக் காமம் மென்மையானது. அந்த உண்மையை அறிந்து காமத்தின் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலர்தான்.’

காமத்தை இந்தக் குறளைவிட நுட்பமாகச் சொல்லிவிட முடியாது.

பூக்கள் அரும்பாக, மொட்டாக இருக்கும் காலத்தைவிட அவை மலர்ந்திருக்கும் காலத்தில் விவரிக்க இயலா மென்மையுடன் இருக்கும். அதன் மென்மைக்கு அது மட்டுமே உவமை. காமம் இதையும்விட மென்மையானதோர் உணர்வு. தன் மகரந்தப் படுக்கையில் மயங்கிக்கிடக்கிற வண்டு, மூச்சு விடுவதற்காகத் தன் இதழ்களைத் தளர்வாக மூடிக்கொள்கிற மாலை நேரத்து தாமரைபோல, தன் சிறகை படபடத்து தாமரையின் இதழ்களைக் கிழிக்காத வண்டைப்போல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் காயப்படுத்தாத உணர்வே காமம்.

காமத்தைப்போலச் சரிசமமான பகிர்தல் வேறொன்றில்லை. `ஒருவர் மட்டுமே கொடுத்து ஒருவர் மட்டுமே பெற்று’ என்கிற ஓரவஞ்சனையெல்லாம் காமத்துக்குத் தெரியாது. உடல்கூறுபடி ஆணையும் பெண்ணையும் இயற்கையே அப்படித்தான் படைத்திருக்கிறது. நான், தான், ஆண் இவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு நம்மை நாம் அவதானித்தாலே இது புரிந்துவிடும்.

விண்கற்கள் விழுந்து; கடல் நீர் நிலத்துக்குள் புகுந்து; சூரியன் சுருங்கி; மாயன் காலண்டர் முடியும்போது என்று அறிவியலில் ஆரம்பித்து ஆன்மிகம் வரைக்கும் `உலகம் இப்போ அழிஞ்சுடும், அப்போ அழிஞ்சுடும்’ என்று ஆரூடம் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் உலகம் அழியுமா என்பது தெரியவில்லை. ஆனால், மனிதன் மனதில் காமம் குறைய ஆரம்பித்தால், ஜனித்தலும் குறைந்து ஒரு காலகட்டத்தில் மனித இனம் நிச்சயம் அழிந்துவிடும்.

மனதுக்குப் பிடித்த காமத்தை அடையவே மனிதர்கள் உழைக்கிறார்கள்; ஜெயிக்கிறார்கள்; விதவிதமாய் உடுத்துகிறார்கள்; ஒன்றுமே செய்ய இயலாதபோது பிழைத்துக்கிடக்கவாவது பிரயத்தனப்படுகிறார்கள்.

பலரும் எட்ட முடியாத உயரங்களை எட்டுகிற ஒரு சிலரின் வாழ்க்கையை உற்று நோக்கினால், காதலும் காமமும் பொங்கிப் பிரவாகிக்கிற துணையொன்று அவர்களின் தோளோடு தோளாக ஒட்டி நின்றுகொண்டிருப்பது தெரியும்.

இங்கு காமம் என்றாலே அது பேசக்கூடாத விஷயம் போலவே நடந்துகொள்கிறார்கள். காதல் என்றால், `ஆஹா... அது எவ்ளோ புனிதமான உறவு’ என்று கொண்டாடுகிறார்கள். அவர்கள் வழிக்கே செல்வோம். `நீங்கள் கொண்டாடுகிற காதலை மட்டும்தான் உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும். `உவ்வேக்’ என்கிற காமத்தை அனுபவிக்கவே கூடாது’ என்றால், ஒத்துக்கொள்வார்களா? முடியாதல்லவா... வாய் வார்த்தைகளால் தன்னை வெறுக்கிறவர்களைக்கூட அன்பு குழைத்த ஒரு முத்தத்துக்காக ஏங்க வைப்பது இது.

''சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைகளை நம்ப முடியாதுன்னு சொன்னாங்க!'' - சாந்தா தனஞ்ஜெயன்
கற்பு போலவே காமமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். ஆணுக்கு அது உடலிலிருந்து மனம் நோக்கிப் பாய்கிற உணர்வு. பெண்ணுக்கோ மனம் நிறைந்து வழிந்த பிறகே அவள் உடலுக்கான சாவிகளை உணர்வுகள் தேட ஆரம்பிக்கும். யதேச்சையாகக் கண்ணில்பட்ட அல்லது கண்ணில்பட வைத்த கிளிவேஜிலேயே தொபுக்கடீர் என்று விழுந்துவிடலாம் ஆணின் காமம். மனதுக்குள் நுழையாத ஆண் எத்தனை இன்ச் காட்டினாலும் `போங்கடா நீங்களும் உங்க............’ என்று கடந்துவிடும் பெண்ணின் காமம். அதனால்தான், காலங்காலமாக `காதல் வலைவிரித்து’ அதாவது, பெண்களை நம்ப வைத்து காமம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் சில ஆண்கள்.

காதலில் தோல்வியுற்றவர்களை இரக்கத்துடன் பார்க்கிற நம் சமூகம், காமத்தில் தோற்றவர்களை அவ்வளவு ஈர மனதுடன் அணுகுவதில்லை. தன் நம்பிக்கை பொய்த்துப்போய் நிற்கிற அவர்களுக்கு, நியாயப்படி நம்பிக்கை வார்த்தைகள் சொல்ல வேண்டிய சமூகம்தான் அவர்களுடைய ஒழுக்கத்தின் மீது கற்களை வீசிக்கொண்டிருக்கும். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? காதலைவிட காமம் அப்பாவி. `இத்தனை மணிக்கு மேல் போன் செய்யாதே, வீட்டுப் பக்கம் வரவே வராதே’ என்று தனக்கான பாதுகாப்பில் காதல் படு உஷார். காமமோ, தன்னுடைய இணை காமத்தை `அவன் இருக்கான் எனக்கு/ அவ இருக்கா எனக்கு’ எனப் பரிபூரணமாக நம்பி தன்னையே ஒப்புவிக்கும்.


எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சில பத்திகள் கீழே (அத்தியாயம் - 7 இல் இருந்து)

காதலின் உச்சமாகக் காமம் அமைதல் வேண்டும். காதல் முதலில் தோன்றிப் பின்னர் அதுவே காமமாக மலர்தல் வேண்டும். ஆயினும், நம் சமுதாயத்தில், காமம் முதலில் நடைபெறுகிறது. நம்முடைய திருமண முறையும் இதையே பரிந்துரைக்கிறது. பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணங்களில், காமம், காதலுக்கு முன்னரே நடைபெறுகிறது. சில நேரங்களில் காதலே மலராமல் கூடப் போகிறது. ‘காதல் திருமணங்கள்’ என்று கருதப்படும் உறவுகளில், உடற்கவர்ச்சியே காதல் என்று கருதப்படுகிறது. காமம் குறித்த கல்வியை, அறிவோட்டத்தை ஒடுக்கியதன் மூலம், நாம் காதல் என்னும் உறவின் அர்த்தத்தையே கேவலப்படுத்திவிட்டோம்.

காமம் என்பது உடலுடன் மட்டுமே தொடர்பு கொண்டது என்னும் நம்பிக்கையில், உடலுறவில் ஈடுபடும் போதெல்லாம், மக்கள் பொதுவாக, தான் உறவுகொள்பவரிடம், மனரீதியாகவும், இதயபூர்வமாகவும் தொடர்பு கொள்வதில்லை. இந்த நிலையில், காமம் என்பது வெறும் உடலைத் திருப்தி படுத்தக்கூடிய, உடல் சார்ந்த செயலாகவே ஆகிறது. இந்த அற்பக் காரணத்தை வைத்துக்கொண்டு, அந்த உறவு எத்தனைக் காலம் நீடிக்கும்? அடுத்த ஓர் உடல் ஒருவரைக் கவரும்வரை? அடுத்தவரோடு உடலுறவு கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை? 

நம் இணையருடன் தேவையான மனரீதியான தொடர்பு, நெருக்கம் ஏற்படாத இடத்தில் அவரும் இன்பம் அடைவது குறித்து  நாம் கவலைப்படுவதில்லை. அந்த உடலுக்கு, அதைச் சார்ந்த உணர்வுகளுக்கு நாம் மரியாதை தருவது இல்லை. மனம் ஒன்றுபட்டு இருவர் உடலுறவில் ஈடுபடும்போது, அது எந்த அளவிற்கு உள்ளும் புறமும் இன்புறும் என்று நாம் அறிவதில்லை. அடுத்தவரின் மகிழ்ச்சியைப் பற்றி நாம் கவலைப்பட்டாலும், அவர் எதனால் மகிழ்வடைவார் என்று உணராதவராய் உள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாய், நம் நரம்புகளில் ஏறிய உணர்வு அழுத்தத்தை விடுவிப்பதற்கான அவசர நிலையில் உள்ளோம்.

புணர்ச்சிக்கு முன்னர் உறவுகொள்ளப்போகும் நபரைத் தயார் செய்யும் ‘முன் விளையாட்டு’ எனப்படும் வகையை அறிந்தவராகவே ஒருவர் இருந்தாலும், அந்தச் செயலை எந்திரகதியில் செய்துவிட்டு அதனால் அந்தப்பெண் கிளர்ச்சி அடைவாள் என்று எண்ணுகின்றனர்.  ஒருவரது காதல், மோகம், மற்றும் உறவுகொள்ளப்போகும் பெண்ணின் உடலின் மீதான மரியாதை ஆகியவற்றை  ‘முன் விளையாட்டு’ தூண்டும் என்பதை அறியாது இருக்கின்றனர். நாம் சோகமாகவோ அல்லது துக்கத்திலோ இருக்கும்போது, வேறொருவர், நம் கரங்களைப் பற்றுவதாலோ, அல்லது தோள்களில் ஆதரவாக அணைப்பதாலோ, நூறு வார்த்தைகளாலும் விளக்க முடியாத அளவிற்கான மன அமைதியை அடைகிறோம். சொற்கள் வெறும் சொற்களே; தொடுதல் நமக்குள் ஒரு மின்னலையைக் கடத்த வல்லது. எல்லா மனநிலையையும் பொய்யாக ஏற்படுத்த முடியாது என்று நாம் அறிதல் வேண்டும். மறைக்கப்பட இயலாத சில உண்மைகள் எப்போதும் உள்ளன.

(அத்தியாயம் 8)
காமம் காதலின் உச்சத்தின் வெளிப்பாடாக இருந்தால்தான் அது  காமத்திற்கு அழகும் கூட.  காமம் என்பது கரைபுரண்டோடும் காதலின் விளைவு; அதுவே காதலின் உச்சகட்ட வெளிப்பாடு. எடுத்துக்காட்டாக, ஒரு தாய், தான் கருவுற்றதிலிருந்தே தன் குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிடுகிறாள். சில நேரங்களில் அவள் தன் அன்பை மிக மென்மையாகவும், சில நேரங்களில் அழுத்தமான முறையில் முத்தங்களின் மூலமாகவும் தழுவுவதன் மூலமாகவும் வெளிப்படுத்துகிறாள். இந்த மெல்லிய அல்லது அழுத்தமான முனைவு, அவளுள்ளத்தில் அன்பு ஓடும் ஆழத்தைப் பொறுத்தது. காமம் என்பதும், இதயத்துள் கரைகடந்தோடும் காதலின் வெளிப்பாடே; இந்த வேகம், நாம் ஒரு குறிப்பிட்ட கணத்தில் எவ்வாறு உணர்கிறோமோ, அப்போக்கிலேயே வெளிப்படுகிறது. அந்த வேகம் அதிகரிக்கும்போது (நாம் அனைவரும் உடலியல் ரீதியாகத் தொடர்புடையவராக இருப்பதால், இது இயல்பாகவே, சாத்தியப்படுகிறது), அது காமத்தில் வந்து முடிகிறது. இதன் காரணமாகவே, பாலுறவு கொள்ளும் செயலைக் “காதல் புரிகிறோம்” (Love Making) என்கிறோம், மாற்றாக “காமம் புரிகிறோம்”  (Lust Making) என்று சொல்வதில்லை. காதல் தன் நிலையிலிருந்து திரிந்து, உடல்சார்ந்து காமமாக வளர்கிறது என்ற இந்தக் காரணத்தினாலேயே, இதைக் ‘காதல் மலரும் நிலை” என்கிறோம்.

(அத்தியாயம் 9)
திருமணம் என்பது நம் வசதிக்காக, நம் சமுதாயத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முறை. அந்த உறவு வெற்றியடைய நாம் முயன்றுகொண்டே இருத்தல் வேண்டும். 
இரண்டு இதயங்களுக்கிடையே ஆழமான நேசம் இருக்கும் போது, உடலுறவைவிட, ஓர் அழுத்தமான தழுவலோ அல்லது அன்பார்ந்த முத்தமோ பெருத்த உற்சாகத்தைத் தருவதாக அமையும் என்பது நம்மில் எத்தனைபேர் உணர்ந்துள்ளோம்? இரண்டு இதயங்கள் சேராதபோது, அங்கே எத்தகைய செயலும் இன்பத்தைத் தராது.

(அத்தியாயம் 19)
உண்மை எதுவாகினும், பெண்ணின் பிறப்புறுப்பு துவாரமானது, ஆண்கள் தத்தம் விந்துவைக் கழிக்க அமரும் ‘கழிவறை இருக்கை’ ஆகவே உபயோகப்படுத்தப் படுகிறது.

இணையர்கள் தங்களுக்கிடையேயான பாலுறவில் நிறைவைப் பெற, சில யுக்திகளை கையாளலாம்: 
1. ​பெண்கள் தங்கள் மனத்தடையை மெல்ல மெல்ல அகற்றி, தங்கள் விருப்பு, வெறுப்புகள் குறித்து, வெளிப்படையாகப் பேசுதல் வேண்டும்.  
2. ​அத்தகைய நிலையில், பெண்கள் தங்கள் மனத்தடையை அகற்றி வரும்வரை, ஆண்கள் பொறுமையைக் காத்தல் அவசியம்.
3. ​இருவரின் ஒருமித்த ஈடுபாடே இன்பத்தை அடையச் செய்யும் என்பதை உணர்தல் வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதலும் அவசியம். 
4. ​இருவரும், தங்களுக்கிடையே விருப்பு வெறுப்புகளைக் குறித்துப் பகிர்ந்து கொள்வதில் பொறுமையையும், விழைவையும் காட்டுதல் அவசியம். 

காமம் என்பது பகிர்ந்து கொள்ளும் செயலே அன்றி   அது பெண்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டிய பொருள் இல்லை என்பதை ஆண்கள் உணர்தல் அவசியம்.  இதை உணர்ந்தால் மட்டுமே அவன் பெண்ணைக் கவர இயலும்; இல்லையெனில், விரைவில், அவள், தனக்குத் தலைவலி என்று தொடங்கி, உடலுறவிலிருந்து விலக விழையும் மனப்பான்மையைக் காண நேரிடும். காலம் கடக்கும்போது, பெண் தன்னுடைய வயதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, உடலுறவைத் தவிர்ப்பாள். அவள், தான் தன் இளமையைக் கடந்துவிட்டதாகவும், சக்தியற்று இருப்பதாகவும் கூறத்தொடங்குவாள். இது அந்த ஆணுக்கு இதயத்தை நொறுக்கும் விளைவை ஏற்படுத்தும்.