Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஊழிற் பெருவலி யாவுள

குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.
ஊழின் - தலைவிதியின்

வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு.
பெருவலி - மிகு வலிமையுடையது; பெருநோவு.

உளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல்.
யா - யாவை
உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

மற்று - மற்றப்படி
ஒன்று - மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்;
மற்று ஒன்று - வேறு ஒன்றும்
சூழினும் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.
தான்  - தன், தனது, acc. தன்னை, dat. தனக்கு, சுயம்
முந்துதல் - மேலெழுதல், விரைதல், எதிர்ப்படுதல், காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல், முதன்மையாதல், சிறத்தல்

முழுப்பொருள்
நமது முன் ஜென்ம தீ வினைகளின் பயனை நாம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம் - அதனை ஊழ் எனலாம். நாம் பிறக்கும் பொழுதே நமது வாழ்க்கை எழுதப்பட்டு இருக்கும் - அதனை தலைவிதி என்பர் அல்லது விதி என்பர் - அதாவது ஊழ். பொதுவாக இந்த ஜென்மத்தில் என்ன என்ன இன்ப துன்பங்களை சந்திக்க வேண்டும் என்று வரையருக்கபட்டு இருக்கிறதோ அதுவே ஊழ்.

இந்த ஊழ் என்பது மிகுந்த வலிமையானது. அது கொடுக்கும் சோதனைகளும், துன்பங்களும், சஞ்சலங்களும், வலிகளும் மிக மிக கொடுமையானவை. அதனால் தான் திருவள்ளுவர் ஊழிற் பெருவலி என்கிறார். ஊழ் கொடுக்கும் மிக பெரிய வலி. இத்தகைய வலி என்பது எவ்வாறு எல்லாம் உண்டாக வேண்டும் என்று இருக்கிறதோ அவ்வாறு எல்லாம் உண்டாகிவிடும். அதனை தடுக்க முடியவே முடியாது.

என் விதியை நான் மாற்றி விடுவேன் என்று வரிஞ்சிக்கட்டிக்கொண்டு மாற்ற முயன்றால் நம் விதி நமக்கு முன்பு சென்று இன்னும் அதிக இன்னல்களை கொடுக்கும்.

ஆதலால் விதியை வெல்ல முடியாது - இது மிக மேலோட்டமான அர்த்தம் ஆகும். சற்று உள்ளே செல்வோம்.

இங்கே நான் எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைகள் தொகுதியில் இருந்து  பெருவலி [பெருவலி - 1, பெருவலி - 2] என்கிற  சிறுகதையில்  இருந்து நான் பெற்றுக் கொண்ட பாடங்களை துணுக்குகளாக அப்படியே கத்திரி போட்டு இங்கு சேர்த்துள்ளேன்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] ஜெயமோகன், இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்ப பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சுண்டு படுத்தி எடுத்திரும். ஆனா இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம், என்ன?

[ராஜேஷ்] துன்பம் என்பது வாழ்வில் வந்துக்கொண்டே இருக்கும். அதனை கண்டு வருந்தாமல், நேரத்தை வீணாக்காமல், மனதை குழப்பிக்கொள்ளாமல் அதனை ஏற்றுக்கொண்டு முன்னே எப்படி செல்வது என்று பார்க்கவேண்டும். குழந்தை ஒரு பெரியவனாக பல வருடங்கள் ஆகும். ஒரு குழந்தையை முதலில் கஷ்டங்களை கொடுக்கும். பின்பு பழகிவிடும்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] எத்தனை ஆயிரம் பறவைகள் பறந்தாலும் வானத்திலே ஒரு தடம்கூட இல்லேன்னு ஒரு கவிதை இருக்கே, அதைமாதிரி

[ராஜேஷ்] வாழ்வில் நாம் எவ்வளவு துன்பங்கள் சந்தித்தாலும் பின் பார்க்கும் பொழுது அந்த துன்பத்தின் தடங்கள் எல்லாம் தெரியாது.

[பெருவலி சிறுகதையில் இருந்து] நல்ல ஆரோக்கியம் இருந்தாலே போறது கஷ்டம்’ என்றேன் ‘நல்ல ஆரோக்கியமிருக்கிறவங்க போறது கஷ்டம்தான். அவங்களுக்கு போய்ட்டு வரணும்னு இருக்கும். திரும்பி வரவேணாம்னு நினைச்சா எங்க வேணுமானாலும் போய்டலாம்…

[ராஜேஷ்] ஐயோ நமக்கு மட்டுமே இப்படி ஒரு பிரச்சினை வந்து விட்டதே. நன்கு படித்தவர்களாலும், நன்கு வசதியாக இருப்பவர்களாலும் கூட இதனை கடக்க முடியவில்லை. என்னால் எப்படி முடியும் என்று எல்லாம் நினைக்க கூடாது. ஏன் எனில் நாம் ஒரு செயலை செய்யும் பொழுது முடிவு இனிதாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் வழியில் சிறு துன்பம் வந்தாலும் நமக்கு முடிவின் மீது ஐயம் வரும். ஆனால் அதுவே முடிவைப் பற்றிய கவலை இல்லாமல் சென்றால் எதிரே வரும் அனைத்து இடர்களையும் கையாலலாம்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] வலி இருக்கு இல்லசார்?’ அபத்தமான, ஒருவேளை குரூரமான, கேள்வி. ஆனால் அதைத்தவிர அங்கே என்ன பேசுவது? ‘ஊழிற்பெருவலி யாவுள?’ என்று சொல்லி உதடுகோண புன்னகை செய்தார். அவரை கோமல் என்று அகம்நம்பியது அச்சிரிப்பைக் கண்ட பிறகுதான். ‘பெருவலின்னு சொல்றார் பார்த்தீங்களா? தமிழிலே இப்டி நெறைய சிக்கல்கள் இருக்கு. வலிமைக்கும் வலிக்கும் என்ன சம்பந்தம்? வலி இல்லென்னா வலிமை கெடையாதா? இல்ல வலிமை ஜாஸ்தியா இருந்தா வலி ஜாஸ்தியா? ஆனா அந்த வார்த்தை பிடிச்சிருக்கு. பெருவலி…நெறையவாட்டி அதைச் சொல்லிட்டே இருக்கேன்..

[ராஜேஷ்]  வலியில் இருந்து வலிமை பிறக்கிறது (வலி இல்லாமல் வலிமை இல்லை என்று பொருள் அல்ல). ஆதலால் இவ்வலியினை வலிமையடைய ஒரு கருவியாகவும் கருதலாம். வாழ்வில் பல பேர் தனக்கு வந்த இன்னல்களையும் சவால்களையும் முன்னேற ஒரு வாய்ப்பாக கருதி முன்னே சென்று இருக்கிறார்கள். இன்னலை இன்னலாக பார்த்தவர் துவண்டு அங்கேயே இருந்து இருக்கிறார்.

அதுமட்டுமின்றி மெய் உணர வலியும் ஒரு வழியே. இருளின் உச்சத்தில் ஒளி இருப்பது போல. கோடையின் உச்சத்தில், அனல் காற்றின் உச்சத்தில் மழை இருப்பது போல, வலியின் உச்சத்தில் மெய் இருக்கிறது. 

[பெருவலி சிறுகதையில் இருந்து] முனகி முனகிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொண்டிருந்தார். பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை விரும்பினார் என்று தோன்றியது. ‘வலிமரப்புக்கு ஊசி ஒண்ணும் போடலையா?’ ‘எல்லாம் போட்டாச்சு. மடைன்னா அடைக்கலாம். உடைப்புன்னா ஒண்ணும் பண்ண முடியாதுல்ல’ அவரது தஞ்சைப் பின்னணி எப்போதாவதுதான் வார்த்தைகளில் வரும் 

[ராஜேஷ்] நாம் வாழ்வில் ஒவ்வொரு வலியினை அடைக்க முற்பட்டால் அது முட்டாள் தனமாகும். ஏன் என்றால் வலிகலெல்லாம் மடையல்ல அவை உடைப்பு. அவற்றை அடைக்க முடியாது.

[பெருவலி சிறுகதையில் இருந்து]  உயரம்தான் இமயமலை. காலடியிலே இருந்து இறங்கி சரசரன்னு கிலோமீட்டர் கிலோமீட்டரா போய்ட்டே இருக்கிற பாதாளம் கூட பெரிய உயரம்தான், என்ன தலைகீழா நிக்கிற மாதிரி யோசிச்சுப்பாக்கணும். மனுஷனை சின்னச்சின்னதா எறும்புகளா ஆக்கற உயரம். அந்தி மாதிரி எப்பவும் ஒரு கருக்கிருட்டு. மலையோட இடுப்பில சுத்தின அர்ணாக்கொடி மாதிரி பாதை. கொஞ்ச தூரம் போனதும் பக்கவாட்டிலே இருந்து பெரிய மலை அப்டியே திரும்பி கண்முன்னாடி எழுந்திரிச்சு வந்து நின்னுட்டிருக்கும். இதோ இருக்கேன்னு…பிரம்மாண்டமான பூதம். பூதகணங்கள் தலையிலே வளைவா வானத்தை தாங்கிண்டு நிழலும் இருளுமா நீலமும் கருப்புமா ஒக்காந்திண்டிருக்கு. ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டு தியானத்திலே இருக்கிற மாதிரி.

[ராஜேஷ்]  வலி என்பது இமயமலையின் உயரம் போன்றது. நாம் எவ்வளவு முன்னே சென்றாலும் உயரம் குறைந்தது போன்று தோன்றாது. அது இன்னும் வலியினையே தரும். ஆதலால் இமயத்தின் உயரத்தை பார்த்தால் ஏற முடியாது. வலியின் வலியை பார்த்தால் வாழ முடியாது.

ஒரு சிறிய பொடி கல்லினை கண் அருகே வைத்துப்பார்த்தால் அது பாறைப்போலவே தெரியும். ஆதலால் அதனை தூரத்தில் வைத்து பார்க்கவேண்டும்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] அந்த மலை ஏறுற வழி முழுக்க வடநாட்டுக்கார பக்தர்ங்க கைதட்டி ஆடிட்டே பாடிட்டே வர்ரதை கவனிச்சப்ப நானும் அதேமாதிரி ஆடிட்டே ஏறணும்னு நெனைச்சேன். ஆனால் அந்த வலி இல்லாம இருந்தாக்கூட ஆடியிருப்பேன்னு சொல்ல முடியாது. வலி இல்லாம இருந்திருந்தா மலைக்கு வந்திருப்பேனாங்கிறதே சந்தேகம்தான். அப்ப ஆடணும்ணு தோணிச்சு. ஆனா என்னை அந்த உடம்புக்குள்ளே இருந்து வெளியே கொண்டுவர முடியலை. அப்ப பீதி வந்திட்டுது. இதுக்குள்ளே மாட்டிண்டு இங்கேயே கெடக்கப்போறானா? பொறியிலே மாட்டிண்டு பொறியோட மட்கி அழுகிப்போற காட்டெலி மாதிரி…

[ராஜேஷ்] நாம வாழ்க்கையில் வலியினை சந்திப்பதென்பது ஒரு பேரனுபவத்திற்கான ஆயுத்தமாகக்கூட இருக்கலாம். நாம் எங்கேயும் செல்லலாம். ஒரே இடத்தில் இருந்தால் நாம் எங்கேயும் செல்ல முடியாது. வலி இருக்கிறதே என்று அங்கேயே இருந்தால் அங்கேயே இருக்க வேண்டியது தான். அது ஒரு நரகமாவே இருக்கும். முன்னே செல்ல வேண்டும். அது நல்லதில் முடியுமா என்று சொல்ல முடியாது. ஆனால் நல்லதில் முடிய வாய்ப்பு இருக்கிறது. 

[பெருவலி சிறுகதையில் இருந்து] ‘சாயங்காலம் மூணு மூணரைதான் இருக்கும். ஆனா அங்க நேரமே கெடையாது. ஏன் காலமே கெடையாது. மலைச்சிகரங்களுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்? அதெல்லாம் அப்டியே காலாதீதமா ஒக்காந்திண்டிருக்கு. சீக்கியர்கள் அவங்க கடவுளை சத்ஸ்ரீ அகால்னு கும்பிடுறாங்க. அகாலம். அகால். என்ன ஒரு வார்த்தை. அகாலத்திலே யாராச்சும் காலமாக முடியுமா என்ன? காலா சற்று என்னருகே வாடா உன்னை உதைக்கிறேன். ஏன் வலிக்கவே இல்லை? வலிங்கிறது வாழ்க்கை. வாழ்க்கைமேலே படியற மரணத்தோட அதிர்வு. வாழ்வும் மரணமும் இல்லாத எடத்திலே ஏது வலி.

[ராஜேஷ்] வாழ்வும் மரணமும் இல்லாத இடத்தில் வலி இல்லை. வாழ்வு இருந்தால் மரணம் இருக்கும். இவை இருக்கும் இடங்களில் வலி இருக்கும்.


[பெருவலி சிறுகதையில் இருந்து] ’அங்க நின்னுட்ட்டிருந்த எம்பது பேரும் கண்ணிர் விட்டுட்டிருந்தாங்கன்னு சொன்னா நீங்க நம்பமாட்டீங்க. ஏன் கண்ணீர்? துக்கமா துக்கம் வழிஞ்சு போன ஆனந்தமா? ஒவ்வொரு மனசும் ஒரு பிரபஞ்சம். அங்கே ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு சொற்கமும் நரகமும். ஆனா பொதுவா எல்லாருமே மனுஷங்கதானே. சின்னப்பூச்சிங்க ஒரு கூழாங்கல்லிலே ஒண்டிக்கிட்டு நிக்கிற மாதிரி. இவ்ளவு அற்பமா இவ்ளவு கேவலமா வாழ விதிக்கப்பட்டிருந்தாலும், இவ்ளவு துக்கத்தையும் வலியையும் அனுபவிச்சு அர்த்தமில்லாம சாக விதிக்கப்பட்டிருந்தாலும் யாரோ மானுடம் மேலே இந்த மகத்தான மணிமுடிய சூட்டியிருக்காங்களே! தாங்க முடியலை. அந்த மகத்தான கௌரவத்தை குடுத்த அது எதிர்பார்க்கிறத்தான் செய்றோமா?

’அய்யய்யோ அய்யய்யோன்னு அகம் கூப்பாடு போடுது…கூசி சிலுத்துட்டுது உடம்பு. என்னென்னமோ கீழ்மையெல்லாம் ஞாபகம் வந்து மனசு கொந்தளிக்குது. கீழ்மைகளைப்பாத்து பாத்து கண்புளிக்கிற ஒரு துறையிலே இருந்தவன் நான் மோகன். பெரியவங்களோட கீழ்மை. சிறியவங்களோட கீழ்மை. இத்தனை கீழ்மைகளுக்கும் மேலே இந்த கிரீடத்தை தூக்கி வச்சு மனுஷனை ஆசீர்வதிச்ச முட்டாள் யாரு? மனுஷன் எத்தனை மகத்தான வார்த்தை. சொல்லிட்டான். ஆனா, நான் எட்டு பேராலே ராவெல்லாம் கற்பழிக்கப்பட்ட பன்னிரண்டு வயசுப்பொண்ண கைத்தாங்கலா அவ அம்மா தூக்கிண்டு போறத பாத்திருக்கேன் மோகன். எட்டு பேரும் பொண்களை பெத்த அப்பாக்கள். ஈவிரக்கமில்லாம ஏமாத்தப்பட்ட பொண்கள் நின்னு கதறுறத பாத்திருக்கேன். அநீதிகளை விழுங்கி விழுங்கி வயிறே ஆசிட்டால நிறைஞ்சுடுத்து


’கபோதி, உனக்கெதுக்குடா முதுகெலும்பு ?. நீ நின்னு எரிஞ்சிருக்க வேண்டிய எடங்களிலே எல்லாம் குளுந்து கல்லா நின்ன கோழை தானேடா? அன்னிக்கு உன் வாயிலே எழுந்த சாபத்தையெல்லாம் துப்பாம உள்ளுக்குள்ள சேத்து வச்சிட்டே. எல்லாம் படிஞ்சு உன் முதுகெலும்பு உளுத்துப்போச்சு. உப்பு பட்ட இரும்பு மாதிரி துருப்பிடிச்சு தொங்கி போச்சு. இந்தா, என் முதுகெலும்பு ஒண்ணை ஒண்ணு கவ்விண்டிருக்கிற நூறு தேளு மாதிரி இருக்கு. நூறு கொடுக்கு. நூறு வெஷம்… என் மேலேயா தூக்கி வச்சிருக்கே இந்த பொற்கிரீடத்த? வெளையாடுறியா? கேலி பண்றியா? நான் பட்ட சிறுமைக்குமேலே இன்னும் சிறுமைப்பட்டு கூசி புழுவா மலமா இங்க நிக்கணும்னு நெனைக்கறியா?

[ராஜேஷ்]  நாம் அறச்சீற்றத்துடன் இருந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகளில் அறம் அற்று நமக்குள் அடக்கிக்கொண்டவையே, நம் மனசாட்சியாக நம்முள் இறங்கி வலியாக உருவெடுத்து, சிலகாலம் கழித்து நோயாக (புற்றுநோய்)  தாக்கி இருக்கிறது. அதுவே ஊழ்.

மேலும்: பாரதியார் சொல்கிறார்

விதி மதி இரண்டில் எது வலியது என்பது பற்றிய தன் கருத்தைச் சுருக்கமாக அழகுத் தெய்வம் என்னும் பாடலில் கூறுகிறார்,

காலத்தின் விதி மதியை வெல்லுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாமென்றாள்.

ஆம். மதியைத் தெளிவாக வைத்திருந்தால் விதி வசத்தால் துன்பம் நேர்கையில் அதைப் போக்கிக் கொள்ளச் செயல்படத் தூண்டும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற மொழிப்படி செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்ற விதியின் நி்யமத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் துன்பத்திலிருந்து விடுதலை அடையலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க்கின்று காப்பாரார்” (திருவாய் 5.1:1)
“எம்மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்” (திருவாய் 7)
“விதியது வலியினும் இசைந்தார்” (கம்ப.மந்திரப் 33)
“விதியது வலியினானும்” (கம்ப.மாரீசன் 86)
“வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ” (கம்ப.சடாயு 15)
“ஊழ்முறையல்லது வலியதொன் றில்லென” (கம்ப.ஊர்தேடு 205)

“பொறியின் வகைய கருமம் அதனால்
அறிவினை யூழே அடும்” (கம்ப.நகர்நீங்கு 163)

“சூழ்வினை நான்முகத் தொருவற் சூழினும்
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ” (கம்ப.சடாயு 193)

“விதிவயம் என்பதை மேற்கோ ளாவிடின்
மதிவலி யான்விதி வெல்ல வல்லமோ” (கம்ப.சடாயு 194)

“பிரிவுசெய் துலகெலாம் பெறுவிப்பான்தலை
அரிவுசெய் விதியுனுக் கரிதூண் டாகுமோ” 
“அரிது போகவோ விதிவலி கடத்தல்என் றஞ்சி” (கம்ப.காட்சி.9)

யாதனா யக்ஞம் என அதை சொல்கின்றனர் முனிவர். ஒவ்வொரு உடலணுவிலும் பெருவலியை நிறைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலத்துளியையும் துயரென்றே உணர்ந்தபடி, கண்ணீரும் அலறலுமாகச் செய்யும் வேள்வி அது. நோயுற்ற உடல்கள் அதை இயற்றுகின்றன. நலிந்து இறக்கும் உயிர்கள் அதனூடாகவே விடுதலை பெறுகின்றன.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது. 


பரிமேலழகர் உரை
மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஊழின் பெருவலி யா உள - ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை வேறு எவையிருக்கின்றன ? ; மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - அதை விலக்குதற்கு வேறொரு வழியை ஆய்ந்து எண்ணினும், அவ்வழியையே தனக்கும் வழியாகக்கொண்டு அது அவ்வெண்ணத்தின் முற்பட்டு வந்து நிற்கும்.

உறுவலி, மதவலி என்பனபோலப் பெருவலி என்பது ஆகுபெயர். சூழினும் என்பது எச்சவும்மை. 'சூழினுந்தான் முந்துறும்' என்றமையால், சூழ்ச்சியை நிறைவேற்றுதல் ஒருகாலுங் கூடா தென்பதாம். சூழ்தலாவது நாற்புறமும் வளைந்து முற்றுகையிடுதல்போலப் பகைவர் ஒருவழியாலும் தப்பமுடியாவாறு தீரஎண்ணுதல். இங்குப் பகை ஊழ்.

மணக்குடவர் உரை
ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.

மு.வரதராசனார் உரை
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

பொருள்: ஊழின் பெரு வலி யா உள - விதியைப் போலப் பெரிய வலியையு டையவை எவை உள்ளன? மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - விதியை மாற்றும் ஒன்றை எண்ணினும் அவ் விதியே முற்பட்டுப் பொருந்தும்.

அகலம்: ஒருவன் விதைத்த வித்தின் விளைவை விட்டு வேறு வித்தின் விளைவை அடைய முடியாதது போல, ஒருவன் செய்த வினையின் பயனை விட்டு வேறொரு வினையின் பயனை அடைய முடியாதென்றார். அஃதாவது, ஒருவன் ஒரு வினையைச் செய்து அதன் பயன் அவனைப் பொருந்தும் காலையில் அப் பயனை மாற்றுதற்கு அவன் விரும்பின், அவனால் அதனை மாற்ற முடியாது. அப் பயனை மாற்றத் தக்க வேறு ஒரு வினையைச் செய்து, அதன் விளைவாகிய வேறு ஒரு விதியை ஆக்கி, அதனால் அப் பயனை மாற்ற வேண்டும். வலியை யுடையவற்றை வலி என்றார்.

கருத்து: விதியைப்போல வலி யுடையது வேறு யாதொன்றும் இல்லை.

Thirukkural - Management - Fate
There have always been debates on fate and fatalism. There are different schools of thoughts on the existence of fate and the impact of fate on one's life. There are researches on the role of luck and luck factors. “Fate,” according to Oxford Advanced Learner's Dictionary, “is the power believed to control all events in a way that cannot be resisted.” Valluvar has written about the existence of fate. From the chapternumber 62‘Manliness' assures that a person with determination can defeat fate.

Is there anything stronger and more powerful than fate? If you try to find out strategies, methods, and techniques to fight your fate, your fate will interfere with your attempt and spoil your ability to fight your fate, fatalistically mourns Kural 380.

What is stronger than fate which foils
£very ptoy to counter it.

Your fate acts before you act and that is fate. Fatalism is to accept that a person is a puppet in the hands of fate. The reader may have many personal experiences to agree or disagree with this thought.

English Meaning - As I taught a kid - Rajesh
Is there anything mightier than ool/karma? It remains dominant despite all plans devised to counter it. Ool or karma, in an Indian context as per Hindu, Jain and Buddhist traditions, and as rightly put in OED, is the sum of a person’s actions in this and previous states of existence, viewed as deciding their fate in future

We are today because of the sum of our actions in this and previous states of existence. When we are born itself, our life(birth chart) would have been written. In general, ool is whatever good and bad that we have to go through in this current life/existence. 

Ool/karma is mightier. It gives lots of challenges, pain, difficulties, distractions, dilemma etc. Hence, it is very painful. No one can stop these pain and difficulty. If someone says he will change it, most probably he will end up inviting more pain only.

If everything is pre-written, Does it mean we should not try and persevere? Certainly we should persevere. Because sum of our current actions would reflect in next existence. For e.g. due to previous birth's karma, a person might be born with lot of debt (inherited from his parents). If a person doesn't do try and do his work, this debt would increase in the form of interests, penalties etc. However, if a person put his effort, during the initial years, most of his effort will go in repaying the debt and reducing it. Slowly, his interest also comes down and he can pay back even faster. He can save more and invest more for the future. Whereas if he didn't do work at all, he would have gone even worse.

Also, we can compare our life to fridge card puzzle game (or another game Rummy). We can't choose our cards. Whatever cards can be considered as a result of our previous actions. However, without giving up, if one plays the game consistently without giving up, one has the chance to win as well. At least, we can try to be in a better position than the worst of not doing anything. 

In Jeyamohan's short story பெருவலி / Peru-vali (Great pain), there is lots of discussion around pain, ool/karma. Some of it are paraphrased here.

Pain/difficulties will keep coming in life. Without looking into (without worrying about it), without wasting our time thinking about it, without confusing our mind with random futile thoughts, we should accept what we have and try to improve and progress. A kid takes many years to become an adult. Initially a kid will give lots of pain. But, we will get used to it. Later, the kid will do better.

In life, we might see many pain/difficulties. But, at a later point, when we look back, we won't see any footmarks of pain.

When we do our work, we should not expect the end to be happy. Because if we get even a small difficulty or pain the middle, then we will doubt over the result. That doubt itself will turnout into worry. If we don't have worries, we can face our hurdles and cross them. 

Strength comes out of pain when we face it. That is why we can choose this pain as a tool to progress. If we see the challenge as a pain, then they will dwell, sulk, tire, stagnate and give up there itself.

Remember, at the end of darkness, there is light. At the end of summer there is rain.

Remember, if we try stopping all the pain/challenges, then it is stupidity. Because pain are not holes that can be fixed. They are openings cannot be shuttered like a dam.

Pain is like a Himalayan / Mount Everest height. However progress we have made, we won't get a feeling that height has reduced. We might endure more pain. So, if we are going to see the height, we can't climb. If we start measuring our pain, we can live. 

A small pebble went kept near our eyes will seem like a huge rock. We can keep it in far.

The pain we are facing could be a tool for a bigger experience in life. If we stagnate, we cannot go anywhere in the life. If we wonder about pain and dwell about it, we will stagnate and it will end up as a hell. We have to move forward. We cannot say it will end positively or successfully. But there is a chance for it.

So, if we understand all these, keep our mind with clarity, we can face the challenges/pain in life. We can reduce the pain. Our efforts will give its due results. We can even attain moksha.

Questions that I ask to the kid
Is there anything stronger than karma? Why? If everything is predestined, should we give up?  Explain with an easy to understand example.

கண்ணின் துனித்தே கலங்கினாள்

குறள் 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் 
என்னினும் தான்விதுப் புற்று.
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
கண்ணின் - கண்ணின் அளவு சிறிதான
துனித்தே - துனி - வெறுப்பு (ஊடல்); சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

கலங்கினாள் - கலங்குதல் - நீர் முதலியன குழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல்.

புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

என்னினும் - என்றாலும்

தான் - தான்

விதுப்பு - நடுக்கம்; விரைவு; பரபரப்பு; வேட்கை (Desire, longing).
உற்று - uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  

விதுப்புற்று - விரைந்து வேட்கை தீர்த்துக்கொண்டாள்

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் சில காரணங்களால் பிணக்குக்கொண்டு ஊடலில் தவிக்கின்றனர். தலைவியின் ஊடலோ கண்ணின் அளவு மிக மிக மிக சிறிதாக இருக்கிறது. இந்த கோவம் என்பது தீயினைப் போன்றது. எது மெல்ல மெல்ல தான் தணியும்.

ஆனால் ஊடலில் என்னுடன் பேசமுடியாமல் மிகுந்து துன்புற்று இருக்கிறாள் இவள். ஆதலால் என்னை பார்த்தவுடன், என் மீது கொண்ட காதலால், தான் இப்போது ஊடிக்கொண்டு இருக்கிறோம் என்பதனைக்கூட மறந்து, அதனை துட்சமாக எண்ணித், தலைவன் மீது மின்னல் வேகத்தில் துள்ளி குதித்துப் பாய்ந்தாள் புணர்ந்தாள் வேட்கை தீர்த்துக்கொண்டாள். அவளுடைய காதலை தலைவன் புணரும் பொழுது உணரலாம்.  இங்கே ஏன் திருவள்ளுவர் தலைவியை பற்றி மட்டும் தான் சொல்கிறார் என்றால் ஒரு காரணம் இருக்கலாம் - தலைவன் வேலைக்கு செல்கிறான் - அவனுக்கு வீட்டில் உள்ள ஊடலை பற்றி கவலைப்பட நேரமில்லை - ஆனால் தலைவியோ வீட்டில் இருக்கிறாள் - துன்பத்தில் ஏக்க நோய் கொண்டு அவள் மெல்லிய தோளில் பசலை நோயும் படரும் என்று நாம் அறிவோம். இருப்பினும் (என்னை பொருத்த வரையில்) கோபத்தை துட்சமாக எண்ணியவர் (தலைவனாகவும் இருக்கலாம்)  விரைவாக  துள்ளி குதித்து கூடுவர்.

எந்த ஒரு போபத்தை தணிக்க வல்லது அகம் சார்ந்த காதலாகும். நாம் என்ன நினைத்தாலும் நமது அகம் நினைப்பது வேறு. நம் அகம் சொல்வதையே நம் உடல் கேட்கிறது.





Image result for run and hug

Image result for run and hug

Image result for run and hug

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”கவவுக் கடுங்குரையள்” (குறுந் 132:1)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
கண்ணின் துனித்தே-முன்னொருநாள் தழுவல் விதுப்பினாற் சென்ற என்னொடு கண்ணளவாக மட்டும் காதலியூடி; என்னினும் தான் புல்லுதல் விதுப்புற்றுக் கலங்கினாள்-என்னினும தான் தழுவல் விதுப்புற்றதினால் அக் கண்ணளவூடலையும் மறந்து அப்பொழுதே கூடிவிட்டாள் . அதனால் , யான் இத்தன்மையேனாய் ஏங்கிநிற்கவும் விதுப்பின்றி யூடிநிற்கின்ற இவள் அவளல்லள்.

கண்ணளவாக வூடுதல் சொல் நிகழ்ச்சியின்றிக் கண்சிவத்தல்.அவளாயின் ஊடற்கண் நீடாமை பயன் . ஏகாரம் பிரிநிலை.

மணக்குடவர் உரை
கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

சாலமன் பாப்பையா உரை
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.

தனியே இருந்து நினைத்தக்கால்

குறள் 1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 
தினிய இருந்ததென் நெஞ்சு.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
தனியே - தன்னந்தனியே - taṉṉantaṉiyē   adv. quite alone
தனி - ஒற்றை; தனிமை; ஒப்பின்மை; உரிமை; கலப்பின்மை; உதவியின்மை; சீட்டாட்டத்தில்ஒருவனேஎல்லாச்சீட்டையும்பிடிக்கை; தேர்நெம்புந்தடி.
தனி-த்தல் - taṉi-   11 v. intr. தனி¹. 1.To be alone, single, solitary; ஒன்றியாதல்.(W.) 2. To be separate, detached from company; ஏகாந்தமாதமல். தனித்தே யொழிய (கலித். 114).3. To have no equal or match; நிகரற்றிருத்தல்.4. To be deserted, forsaken, helpless, as by thedeparture or death of friends; உதவியற்றிருத்தல்.(W.)

இருந்து - இருந்துக்கொண்டு

நினைத்தக்கால் - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

என்னைத் - என்னை

தினிய - தின்றுக்கொன்று இருக்கிறது
தினிசு - tiṉicu   தினுசு, தினுசவாரி, s. kind, sort, வகை. தீ தீ , s. fire, நெருப்பு; 2. the elementary principle of fire; 3. hell, நரகம்.

இருந்தது- இருக்கிறது
என் - என்னுடைய
நெஞ்சு - நெஞ்சம்,மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
நான் எனது தலையாய காதலுக்கு பாத்திரமானவர் (பாத்திரமானவள்) உடன் இல்லாத பொழுது (பிரிவால ஏற்பட்ட தனிமை) தனியே வாடுகிறேன். அப்பொழுது அவருடன் (அவளுடன்) சேர்ந்து இருந்த பொழுதுகளை நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சம் என்னை தின்றுவிடுகிறது. அவரது நினைவுகள் என்னை கொல்கிறது. நினைவு என்னும் கோல் புண்களில் பட்டு ரணமாய் வலிக்கிறது.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
தனியே இருந்து நினைத்தக்கால்-காதலரைப் பிரிந்திருந்து அவர் செய்த கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால் ; என்னைத் தினிய என் நெஞ்சு இருந்தது-என்னைப் பிய்த்துத் தின்பதுபோல் துன்பஞ் செய்தற்கே என்உள்ளம் என்னொடுகூட இருந்தது.

என் நெஞ்சு என்னோடிருந்தது.அவர் செய்த கொடுமைகளை எண்ணி எனக்கு ஆற்றாமைமேலுந் துன்பஞ் செய்தற்கேயன்றி , இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன் றென்பதாம்.

மணக்குடவர் உரை
என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது. இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

சாலமன் பாப்பையா உரை
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

ஊடலில் தோற்றவர் வென்றார்

குறள் 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]

பொருள்
ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

தோற்றவர் - தோற்றல் - தோன்றுகை; வலிமை; புகழ்; தோல்வி; வீண்எண்ணம்; வெற்றியின்மை

வென்றார் - வெற்றி - வென்றி; வாகைசூடுதல், வெல்-. Victory, success,conquest, triumph; செயம்.

அது - அஃதானது

மன்னும் - மன் - மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல்.
மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

கூடலின் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

காணப்படும் - உணரலாம்

முழுப்பொருள்
ஊடல் என்பது தலைவன் தலைவியின் இடையில் உண்டாகும் ஒரு பொய்யான பிணக்கு. பிணக்கு உள்ள காலங்களில் ஒருவரை ஒருவர் வெறுப்பர். யார் விட்டுக்கொடுப்பது என்று சண்டை வரும். எந்த ஒரு சண்டையிலும் ஒருவர் தானே வெற்றி பெற முடியும். ஆதலால் மற்றொருவர் தோல்வியடைவர்.

தோல்வியடைந்தவர் தோல்வியில் துவண்டு இருப்பார். ஆனால் வெற்றி பெற்றவரோ சிறிது நேரம் சந்தோஷமாய் இருந்தாலும் தோல்வியடைந்தவரை கண்டு வருத்தம் கொள்வார். என்னால் தானே எனது தலையாய காதலுக்கு பாத்திரமானவர் துவண்டுள்ளார் என்று தன்னை வெறுப்பர். இந்த நிலைமை மாற்றுவதற்காக இருவரும் இரவில் கூடுவர். இரவு புணரும் பொழுது தோல்வியடைந்தவரின் அகம் உணரும் இந்த கோபம் எல்லாம் பொய் என்று. ஆதலால் இவையெல்லாம் தோல்வியல்ல என்று. கூடலில் மகிழ்ச்சி அடைவதனால் அவர் இறுதியில் வெற்றி பெற்றவர் ஆகிறார். இதுவே பெரும்பான்மையாக நடக்கும் [சில சமயம் அப்படி நடக்காமலும் போகலாம்]

ஒப்புமை
”தோற்றாரே வெல்வர் துணைமிசையார் கோட்டியானை
ஏற்றுக் கழல்தொடியார் மிக்காரை யாவரைவர்
போற்றளி கூடல் கரி” (இன்னிலை 29)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
ஊடலில் தோற்றவர் வென்றார் - ஊடலில் தோற்ற மகளிர் வென்றவராவர்; அது மன்னும் கூடலிற் காணப்படும்- அவ்வெற்றி மிகுதியும் பின்னர்ப் புணர்ச்சிக்கண் அவரால் அறியப்படும்.

தோற்றவர் ஊடலைக் கடைப்பிடிக்காது இடையில் விட்டு விட்டவர். அவர் கலவிக்கண் பேரின்பம் பெறுதலால் வென்றாராயினர். 'மன்' மிகுதிப் பொருளது.தலைமகன் கலவியால் பேரின்பம் பேறும்போதே தலைமகளும் பெறுதல் கண்டானாதலாலும், அவள் ஊடல் நீங்கிய பொழுது ஒருவகைத் தோல்வி மனப்பான்மை கொண்டிருந்ததனாலும் , அவளைப் பாராட்டி ஊக்குமுகமாகத் 'தோற்றவர் வென்றார்' என்றான். ஊடல் ஆடவருக்கின்மையின், தலைமகன் ஊடலில் தோற்றானென்று கூறுவது பெருந்திணையாகுமேயன்றி அன்பினைந்திணையாகாதென அறிக. அடுத்த குறளையும் பார்க்க.

மணக்குடவர் உரை
ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.

மு.வரதராசனார் உரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.

உப்பமைந் தற்றால் புலவி

குறள் 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்.
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல், இனிமை, பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு

அமைந்து -  அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
அற்று - aṟṟu   அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது. (கந்தபு.உருத்திரர்கே. 6.)--v. Is like, of the same kind,impers. sing. finite appellative verb; அதுபோன்றது.--part. An adverbial word of comparison; ஒர் உவமவுருபு (தொல். பொ 286, உரை )

அமைந்தற்றால் - உணவின் அளவிற்கேற்ப / சுவைக்கேற்ப அமைவது போன்றது

புலவி - ஊடல்; வெறுப்பு; பிணக்கு
அது - அதானது
சிறிது - சிறிய அளவு,சிறுமை, சின்ன
மிக்க - மிகுந்த; உயர்ந்த.
மிக்கற்றால்
நீள - நெடுந் தொலைவாக; நெடுங் காலமாக; வெகு தொலைவில்.
விடல் - முற்றும் நீங்குகை (Leaving;renunciation) ; ஊற்றுகை; குற்றம்.

முழுப்பொருள்
நாம் அன்றாடும் வாழ்வதற்கு உணவை உண்ணுகிறோம். உணவுகளில் பல சுவைகள் உள்ளன. பல நாடுகளில் பல உணவுவகைகள் இருக்கின்றன. பல பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. பல மசாலா சாமான்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் (நான் அறிந்த வரையில்) உப்பு என்பது எல்லா நாடுகளிலும் எல்லா மக்களாலும் உணவில் பொதுவாக சேர்த்துக்கொள்ளப்படும்  ஒரு பொருள். சுவையற்று இருக்கும் உணவிற்கு சிறிது உப்பு சேர்ப்பதனால் உணவில் சுவை கூடுகிறது. அவரவர் சுவைக்கேற்ப உணவில் உப்பின் அளவு மாறு படும். ஆனால் பொதுவாக யாரும் ஒரு அளவிற்கு மேல் உப்பை சேர்க்க மாட்டார்கள். ஏன் என்றால் உப்பு கரிக்க துவங்கிவிடும். உவர்ப்பான சுவையினை நமது நாக்கு ஏற்றுக்கொள்ளாது.

ஆதலால் உப்பினை சிறிது அளவே சேர்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிகம் ஆனாலும் உணவு உவர்ப்பாகிவிடும். உணவின் நற்சுவைக்கு தேவையான சிறிதளவு உப்பைப் போலவே காதல் வாழ்க்கை சுவைக்க காதலர்களுக்கு நடுவே சிற்சில பிணக்குகள் (ஊடல்) விளையாட்டுக்கள் இருக்கலாம். இந்த ஊடல் முடிந்ததும் கூடலில் வரும் இன்பத்தில் ஊடலின் சிறப்பை சுவைக்கலாம். [குறல் 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. குறள் 1326 - உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. குறள் 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்]  ஆனால் இந்த பிணக்குகள் சிறிதுக்காலம் மட்டுமே நீடிக்க வேண்டும். நெடுந்நேரம் நீடித்தால் அது வாழ்க்கைக்கு உவர்ப்பினை கொடுக்கும். சுவை குறையும், காதல் குறையும்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது.) புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும். (நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல். 'சிறிது நீள விடலாகாது' என்றாள், நேர்விக்கின்றாளாகலின். 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(புலவி தீர்ந்து வாயில் நேரும்வகை தோழி சொல்லியது.)

புலவி உப்பு அமைந்த அற்று -புலவி கலவி இன்பஞ் செய்தற்கு வேண்டிய அளவாயிருத்தல்; உப்புச் சமைத்தவுணவு இன்சுவையாதற்கு வேண்டும் அளவினதாயிருத்தல் போலும்;சிறிது நீள விடல் அது மிக்க அற்று - இனி, அப்புலவியை அவ்வளவினுஞ் சிறிது மிக விடுதல் அவ்வுப்பு அளவிற்கு மிஞ்சினாற் போலும்.

பழகப் பழகப் பாலும் புளிப்பதுபோல, நாள்தொறும் நுகர்ந்து வரும் கலவியின்பம் நாளடைவிற் சுவைகுன்றியபோது அதற்குச் சுவையூட்டுதலின், புலவியை உப்பு என்றாள். ஆயினும் உப்பு மிக்கவிடத்து உணவுச்சுவை கெட்டாற்போல், புலவி அளவிற்குமேல் நீண்டவிடத்துக் கலவியின்பங்கெடும் என்றவாறாம். புலவியை நீளவிடுதலாவது, கலவிமேலெழுந்த குறிப்பும் ஆசையும் அடங்குமளவு புலத்தல் , வாயில் நேர்விக்கின்றாளாதலின், சிறிதும் நீளவிடலாகாது என்றாள். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை.

மணக்குடவர் உரை
நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி: அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம். இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.

கரப்பினுங் கையிகந் தொல்லாநின்

குறள் 1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
கரப்பினும் - கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

கையிகந்து - கையிக-த்தல் - அளவுக்கு மேற்படுதல், மீறுதல்

ஒல்லல் - ஒல்லுதல்; இயலுதல்; பொருந்துதல்; இசைதல்; ஊடல்; தீர்க்கை
ஒல்லா - இயல முடியவில்லை என்றால்

நின் - உன்னுடைய

உண்கண் - மைதீட்டியகண்

உரைக்கல் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

உறுவது - வரற்பாலது; இலாபம்; ஒப்பது (That which resembles); தருவது.

ஒன்று - ஒன்று

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
நீ என்னிடம் சொல்ல கூடாது என்று நினைக்கும் அந்த சொற்களை மறைக்க முற்படுகிறாய். ஆனால் அன்பின் ஆழத்தில் இருந்து வரும் அந்த சொற்கள் அன்பின் மிகுதியால் மறைக்கமுடியாது போகிறது. ஏன் என்றால் நீ சொல்ல வேண்டும் என்ற சொற்களை கண்ணில் மையிட்டுக்கொண்டு மறைக்க முற்படுகிறாய். ஆனால் மைதீட்டிய உன் கண்களோ எனக்கு உண்மையை குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. நீ என்ன சொல்ல முற்படுகிறாய்? சொல் கண்ணே.

இங்கே இரண்டு சூழ்நிலைகள் இருக்க வேண்டும் - ஒன்று பிரிந்த சோகத்தில் ஏக்க நோயால் வாடும் தலைவி களைப்புற்று வரும் தலைவனிடம்  தனது சோகத்தினை காண்பிக்க கூடாது என்று மைதீட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போல பொய் தோற்றம் கொள்ளலாம் - இரண்டு வேலைக்காக பிரிந்து செல்லும் கணவரிடம் பிரிவின் சோகம் தன்னை (தலைவியை) ஆட்க்கொள்ள துவங்கிய பின்னும் அவரை வழி அனுப்பும் பொழுது இன் முகம் காண்பிக்க வேண்டும் என்று நினைத்து மைதீட்டுக்கொண்டு இருக்கலாம்.

ஒப்புமை
”இன்றிவ்வூர் அலர்தூற்ற வெய்யாநீ துறத்தலின்
நின்றதன் எவ்வநோய் என்னையும் மறைத்தாள்மன்
வென்றவேல் நுதியேய்க்கும் விறல்நலன் இழந்தினி
நின்றுநீர் உகக்கலுழும் நெடும்பெருங்கண் அல்லாக்கால்” (கலித் 124:13-6)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் , தலைமகள் , தோழி என்ற இவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் . இது பிரிந்து போய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின் ,அவர் வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.]

(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகுதியினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது வொன்றுடைத்தென அஞ்சிய வழி , அதை யவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது.)

கரப்பினும்-நீ சொல்லாது மறைத்தாலும் , ஒல்லாகை இகந்து-அதற்குடம்படாது உன்கட்டை மீறி , நின் உண் கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு-உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவதொரு செய்தியுள்ளது . இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக.

தலைமகனின் வரையிறந்த பாராட்டில் மீண்டும் பிரிதற் குறிப்புள்ளதாகத் தலைமகள் கருதி வேறுபட்டதை , அவட்கெடுத்துச்சொல்லித் தன் பிரியாமையை யுணர்த்தியவாறு . கரத்தல் நாணாலடக்குதல்.


மணக்குடவர் உரை
நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.

மு.வரதராசனார் உரை
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்

குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
அவர்வயின்விதும்பல் - பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்லவிரைதல்

காண்க - பார்க்கும்படி செய்தல்.
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு

காண்கமன் - வருங்காலத்தில் காணும் பொழுது

கொண்கனைக் - கொண்கன் - கணவன் -  [கூடிய கொண்கன் குறுக (பு. வெ. பெண்பாற். 12, 11)], ஆவியின் இனிய கொண்கர் (கம்பரா. வரைக்காட்சி) - உயிரினும் இனியரான கணவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஆர - A sign of comparison; ஓர் உவமச்சொல் (தொல். பொ 286, உரை )--adv. [T. āra.] Fully, abundantly; மிக ஆரப்பருக (திவ். திருவாய். 10, 10, 5).

கண்டபின் - கண்ட பிறகு

நீங்கும் -  நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

என் - என்னுடைய
மென்- மெல்லிய
தோட் - தோள்
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்; மயக்கம்; காதலனைப் பிரிந்திருக்கும் காதலி பொலிவு இழந்து நிறம் மாறுபடுவதைப் பசலை என்றும், பசப்பு என்றும் கூறுவர். இது ஒருவகை ஏக்க-நோய். மன ஏக்கம் உடலில் தோன்றுவது பசலை.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து இருக்கும் பொழுது அவள் ஏக்கத்தால் வாடுகிறாள். இந்த ஏக்க நோய் அவளை வாட்டுகிறது. ஆதலால் அவளுடைய மெல்லிய தோள் பொலிவிழந்து நிறம் மாறுகிறது. இதனையே பசலை என்கிறோம்.

தலைவி பிரிவால் வாடும் பொழுது தலைவனை சந்திக்கும் நாளை அன்புடன் எதிர்நோக்குகிறாள். அவள் நினைக்கிறாள் உயிரினும் இனிய என் கணவரை காணும் பொழுது என் கண்கள் அவரை மனமார பார்த்துக்கொள்ள வேண்டும். என் கண் காண்பித்துத் தான் தன் நெஞ்சமே தலைவனை முதலில் பார்த்தது. கண் பார்த்தால் நெஞ்சமே பார்த்தது போலும் ஆகும். (குறள் - 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று என்பதை நினைவில் கொள்க). ஆதலால் இத்தனை நாள் பார்க்காததற்கும் சேர்த்து வைத்து பார்க்க வேண்டும். என் கண்கள் மூலம் என் உடம்பு பசியை (வேட்கையை) தீர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பசி ஆர பார்த்து தீர்த்தால் தான் அவள் மேல் படர்ந்து உள்ள ஏக்க நோயின் விளைவான பசலை நிறம் அவள் மெல்லிய தோளகளில் இருந்து நீங்கும். ஏனெனில் நெஞ்சத்தில் (இதயத்தில்) இருந்தே இரத்தம் உடம்பில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்லும்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும். ('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தலைமகன் வரவு கூறி, ஆற்றாயாய்ப் பசக்கற் பாலை யல்லை யென்ற தோழிக்குச் சொல்லியது.)

கண் ஆரக் கொண்கனைக் காண்க- என் கண்கள் நிறைவு பெறும் வகை என் காதலரை நான் காண்பேனாக; கண்ட பின் என் மேல் தோள் பசப்பு நீங்கும்- அங்ஙனங் கண்ட பின் என் மெல்லிய தோளின்கண் உள்ள பசலை தானே நீங்கி விடும்.

நிறைவுபெறும் வகை காணுதலாவது ஆசை தீரக் காண்டல். காண்க என்னும் வியங்கோள் ஆர்வமிகுதி பற்றியது. 'மன்' அது, இன்றியமையாததென்னும் பொருள்பட நின்றமையின் ஒழியிசை. காதலர் வரவைக் கண்ணாற் கண்டாலன்றிக் காதாற் கேட்டதினால் மட்டும் பசலை நீங்கா தென்பதாம்.

மணக்குடவர் உரை
என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.

மு.வரதராசனார் உரை
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.