Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல்
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

நெஞ்சினார்க்கு - நெஞ்சத்தை உடையவர்க்கு

இல்லை - இல்லை

இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

சேர்ந்த -  சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

புகல் - புகுகை; இருப்பிடம்; துணை; பற்றுக்கோடு; தஞ்சம்; உடம்பு; தானியக்குதிர்; வழிவகை; போக்கு; சொல்; விருப்பம்; கொண்டாடுகை; பாடும்முறை; வெற்றி; புகழ்; புரையுள்ளது.

முழுப்பொருள்
இருள் என்னும் அறியாமை என்னும் தீங்குதரும் இன்னா (துன்பமான) உலகம் ஆனது மிக கொடியது ஆகும். ஆனால் நெஞ்சத்தில் அருள் என்னும் கருணை, (பிறருக்கு) நல்வினை செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளோர்க்கு அத்தகைய இருண்ட உலகத்தில் இடம் இல்லை.

ஏனெனில் அறியாமை என்னும் இருள் அவர்கள் மனதில் இல்லை. அறிந்தும் மனதில் கருணை இல்லை என்றால் அவர்கள் மனதில் இருள் இருக்கிறது என்றே பொருள் (ஏனெனில் அறிந்ததை கடைப்பிடித்தால் தான் அறிதல்). ஒருக்கால் ஒரு நல்வினை ஆற்றும் பொழுது துன்பங்கள் வந்தாலும் அவர்களுக்கு வாழ்வின் மீது உள்ள நம்பிக்கை ஒளியாய் அவர்களை இருளில் (துன்பத்தில்) இருந்து விலக்கி ஊக்கம் தந்து முன்னே வழி நடத்தி காப்பாற்றும்.

இருள் இல்லையேல் அருள் உண்டு.
அருள் இல்லையே இருள் நிறைந்துவிடும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).

மணக்குடவர் உரை
அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.

மு.வரதராசனார் உரை
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

குறள் 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
உரை - urai   n. உரை&sup4;-. [K. ore, M. ura.]1. Speaking, utterance; உரைக்கை உரைமேற்கொண்டு (திவ். இயற். 1, 25). 2. Word, expression,saying; சொல் (திவா.) 3. Explanation, interpretation, commentary, exposition, gloss; வியாக்கியானம் உரையாமோ நூலிற்கு நன்கு (நாலடி, 319).4. Sound of a letter; எழுத்தொலி. (பிங்.) 5.Fame, reputation; புகழ் உரைசால் பத்தினிக்கு(சிலப். பதி 56). 6. Sacred writings, holy writ;ஆகமப்பிரமாணம். (சி. சி அளவை, 1.) 7. Roar,loud noise; முழக்கம் குன்றங் குமுறியவுரை (பரிபா.8, 35). 8. Mantra recited aloud; பிறருக்குக்கேட்கும்படி செபிக்கும் வாசக செபம் (சைவச.பொது. 151.)  

உரைப்பார் - உரைப்பவர்கள்; வியக்கியானம் செய்பவர்கள்; முழக்கமிடுவோர்

உரைப்பவை - உரைக்கை - விரித்துச்சொல்லுகை 

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரப்பார்க்கு - (பொருள்) வேண்டுபவர்க்கு

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

ஈவார் - கொடை அளிப்பவர்

மேல் - mēl   [T. K. mēlu, M. mēl.] n. 1.That which is above or over; upper side; surface; மேலிடம். ஒலை . . . தொட்டு மேற்பொறியை; மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

நிற்கும் - நிற்பது - niṟpatu   n. நில்-. The immoveables, as the vegetable kingdom; தாவரம் நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க (திருவாச. 3, 53).  

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

முழுப்பொருள்
உரைப்பவர்கள் என்றால் முழக்கமிடுபவர்கள், எழுத்தின் மூலமாகவும் பறைசாற்றுபவர்கள் என்று அர்த்தம். அத்தகையவர்கள் பிறரிடமும் ஊர்மக்களிடமும் வரும் சந்ததியினரிடமும் மற்றொருவரைப் பற்றி கூறுவது ஒன்றை மட்டும் தான். அவர் செய்த கொடையை பற்றி மட்டும் தான். ஒரு பொருள் அல்லது உதவி வேண்டி இரந்தவருக்கு (இரக்கும் முன்னரே கூட) உதவி செய்து (கொடை அளித்து) செய்யும் கொடை வள்ளல் பற்றியே உரைப்பவர்கள் புகழ் பாடுவார். ஆதலால் பிறருக்கு உதவி செய்பவர்களின் மேல் என்றும் புகழ் வானம் போல் நிற்கும்.

பரிபாடல் திரட்டில் ஈவார்மேல் புகழ் நிற்றலை இவ்வாறு கூறப்படுகிறது: “ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக்கூடல்”. “இருள் பொழியும் குற்றம் பலவரினும் யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ்”. தண்டியலங்காரத்தில் மேற்கோள் பாடலாகச் கீழ்கண்ட செய்யுள் சொல்வது இக்கருத்தைத்தான்.

“வெய்ய குரல்தோன்றி, வெஞ்சினஏறு உட்கொளினும்,
பெய்யும் மழைமுகிலைப் பேணுவரால்; – வையத்து,
 இருள்பொழியும் குற்றம் பலவரினும், யார்க்கும்
 பொருள்பொழிவார் மேற்றே புகழ்”

புகழ் என்பது “உரையும்,பாட்டுமென” இருவகைப்படும். “உரையும் பாட்டும் உடையோர் சிலரே” என்னும் புறநானூற்று வரியும் அதையே சொல்கிறது. சொல்வழக்கில் சொல்வதும், புலவோர் பாடிப் புகல்வதும் புகழே என்பதால், பரிமேலழகர், “பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம் என்பதூஉம் பெற்றாம்” என்பார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உரைப்பார் உரையுகந்து” (சுந்தரர்.அவிநாசி 4)

“ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும்
சேய்மாடக் கூடல்” (பரிபா.திரட்டு 11)

“கொடைப்பெரும் புகழார்” (திருவாய் 8.4:9)

“இருள்பொழியும் குற்றம் பலவரினும் யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ்” (தண்டி.47 மேற்)

பரிமேலழகர் உரை
உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.).

மணக்குடவர் உரை
சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

மு.வரதராசனார் உரை
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

சாலமன் பாப்பையா உரை
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

024 புகழ்

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - புகழ்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு

குறள் 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்

குறள் 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

குறள் 236


குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம்

குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர்

பதிவு வரிசை


023 ஈகை

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - ஈகை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

குறள் 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

குறள் 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்


பதிவு வரிசை



சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
சாதலின் - சாதல் - cātal   n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).  ; iṟappu   n. id. 1. Transgression,trespass; அதிக்கிரமம் பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152). 2. Going, passage, passing;போக்கு. (பிங்.) 3. Death; மரணம் (திருவாச. 5,12.) 4. Excess, abundance; மிகுதி (பிங்.) 5.That which is superior; உயர்ந்தபொருள். ஒப்பிறப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75). 6.Heavenly bliss, emancipation; மோக்ஷம். இறுகலிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10).7. [M. iṟa.] Inside or under part of a slopingroof, eaves; வீட்டிறப்பு இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328). 8. (Gram.) past tense; இறந்தகாலம் இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல் 202).

இன்னாது - iṉṉātu   n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.)  

இன்னாதது - துன்பமானது வேறு

இல்லை - இல்லை

இனிது - iṉitu   இனி-மை. n. 1. Thatwhich is sweet, pleasing, agreeable; இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ 303). 2. Thatwhich is good; நன்மையானது.--adv. Sweetly,favourably; நன்றாக புலியூர்ப் புக்கினி தருளினன்(திருவாச. 2, 145).  

அதூஉம் - அதுவே

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

இயை - அழகு; புகழ் இசைப்பு வாழை
கடை - kaṭai   n. 1. [T. M. kaḍa, K. Tu.kaḍe.] End, termination, conclusion; முடிவு (பிங்.) 2. Place; இடம் (திவா.) 3. Limit,boundary; எல்லை கடையழிய நீண்டகன்ற கண்ணாளை (பரிபா. 11, 46). 4. Shop, bazaar, market;அங்காடி. (பிங்.) 5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst; கீழ்மை நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு (திருவாச. 1,60). 6. Degraded person, man of low caste;தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம்(நாலடி, 255). 7. Entrance, gate, outer gate-way; வாயில் கடைகழிந்து (அகநா. 66). 8. Clasp,fastening of a neck ornament; பூண்கடைப்புணர்வு (திவா.) 9. Handle, hilt; காம்பு கடைகுடை யெஃகும் (மலைபடு. 490).--adj. Succeeding,following; பின் கடைக்கால் (பழ. 239).--part.1. (Gram.) Sign of the locative; ஏழனுருபு. (நன்.302.) 2. Verbal prefix; ஓர் உபசருக்கம் கடைகெட்ட(திருப்பு. 831). 3. Termination of a verbalparticiple; ஒரு வினையெச்ச விகுதி ஈத லியையாக்கடை (குறள், 230).

இயையாக்கடை - செய்யமுடியாமல் போகும்போது

முழுப்பொருள்
மரணம் என்பது கொடுமையானது ஆகும். அதற்கு அஞ்சுகிறான் மனிதன். மரணம் பற்றிய சிந்தனையே பல நேரங்களில் உவப்பானது கிடையாது. மரணத்தின் நினைப்பு அவனுக்கு துன்பத்தை தரும்.

பிறருக்கு கொடுப்பதே அறம். அதுவே இல்லற வாழ்வின் கடமையாகும். ஆனால் அத்தகைய நேரங்களில் ஒருவரால் பிறருக்கு கொடுக்க முடியவில்லை என்றால் அக்கணமே இறந்து விடுதல் போன்று இனிமையானது வேறு ஏதும் இல்லை. ஏனெனில் நம்மால் பிறருக்கு உதவ முடியவில்லையே என்று வரும் காலங்களில் பலமுறை வருந்துவதை (இறப்பதை) விட ஒரு முறை சாதலே இனிது ஆகும். பிறருக்கு உதவ முடியாத தேகம் வாழ்தலை விட இறத்தல் இனிது. 

மகாபாரதப்போரில் கர்ணன், ஒரு சில விநாடிகள் தன்னை அண்டி, தானம் யாசிக்கும் கண்ணனுக்கு கொடுக்கவொன்றுமில்லையே என்று வருந்தினாலும், தன்னுடைய புண்ணியங்களின் பலன்களை கொடுப்பதால், தன்னுடைய உயிரையே இழக்க நேரிடுமென்று அறிந்தும் உவகையோடு கொடுக்கிற காட்சி உண்டு. அது இத்தகைய ஈகையை காட்டும் சித்திரம். தருமம் தலையைக் காக்கும், அது நீங்கினால் தலையை எடுக்கும் என்பதையும் உணர்த்தும் சித்திரம்.

சாதல் என்ன துன்பமா? பிறந்து முடிதல் இயற்கையெனினும், மீண்டும் சேரமுடியாத பிரிவு துன்பமே. “சாதல் அன்ன பிரிவு” என்கிறது அகநானூற்றுப் பாடல், (339:14). கலித்தொகைப் பாடல் (43:26.7), “இன்மையுரைத்தார்க் கதுநிறைக்கா லாற்றாக்கால் தன்மெய் துறப்பான் மலை” என்கிறது, ஈகையை தன் உயிரினும் மேலாக நினைப்பாரை.

நாலடியார் பாடல் பசியால் வாடிவருபவருக்கு, உள்ளிருந்தும், ஒன்றுமே ஈயாதான், இருப்பதைவிட இறந்து வானுலகுக்கு விருந்தாவதே  நன்று என்கிறது. இருந்து-வுக்கு எதுகையாக விருந்து இருந்தாலும், ஈயாத கருமிகள் எப்படி வானுலகிற்கு விருந்தாவர்? வேண்டுமானால் நரகத்திற்கு விருந்தாகலாம்.

உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்(கு)
உள்ளூர் இருந்தும்ஒன் றாற்றாதான் – உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று (நாலடி 288)

“தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்துனை யிரந்தவர்க் கிருநிதி யவளை
வேண்டி யீதியோ வெள்குதி யோவிம்மல் நோயால்
மாண்டு போதியோ மறுத்தியோ வெங்ஙனம் வாழ்தி” (கம்ப.மந்தரை 72)

மேலும்: அஷோக் உரை



குறளின் அடிப்படை அறங்களாக முன்வைக்கப்படுபவை கொல்லாமை, ஈகை, பொறையுடைமை போன்றவையே. அவையும்கூட மிக மென்மையாக மனசாட்சியை நோக்கிப் பேசப்படும் தொனியிலேயே வலியுறுத்தப்படுகின்றன.
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்
ஈதல் இயையா கடை
சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று வகுக்கிறது சமண மரபு. அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று ஆணையிட வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறியமைகிறது.

பரிமேலழகர் உரை
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

022 ஒப்புரவறிதல்

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - ஒப்புரவறிதல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு

குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற

குறள் 214
ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் 
செத்தாருள் வைக்கப் படும்

குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

குறள் 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்



ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து ஒழுகல்; உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல்.

ஊருணி  - ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை; ஊரையடுத்த குளம்; ஊரார் நீர் முகக்கும் குளம்; ūr-uṇi   n. id. + உண்-. Publicdrinking water tank in a village or town; ஊராருண்ணுநீர்நிலை. ஊருணி நீர்நிறைந் தற்றே (குறள், 215)  

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை; மழை; மேகம்

நிறைதல் - நிறைதல் நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

அற்றேல் - அப்படியானால்.

நிறைந்தற்றே - (மழையினால்) நிறைந்த/ நிரம்பிய குளம் போலும்

உலகு உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

அவாம் - 
பேர் அறிவாளன்  - பல நூல்களை கற்று என்ன பயன் நாம் அறிவுக்கு அறிவானவனின், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன்; pēr-aṟivāḷaṉ   n. id. +அறிவு +. Person of mature understanding,wise man; உயர்ந்த ஞானமுடையவன். உலகவாம்பேரறிவாளன்றிரு (குறள், 215).

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

முழுப்பொருள்
ஒரு ஊரில் உள்ள குளம் ஊரில் உள்ள மக்களுக்கு உண்ணுவதற்காக பயன்படும் நீர் நிலையாகும். அத்தகைய நீர் தானாக வந்தது இல்லை. அது மேகத்தில் இருந்து பெய்த மழையும் ஊற்றுகளில் இருந்து வந்தது ஆகும். அந்த குளம் அந்த ஊருக்கு பொதுவானது சொந்தமானது.

குளத்தில் உள்ள நீரை போலவே செல்வந்தர்களின் செல்வமும். இவர்களின் செல்வம் தானாக முளைத்தது இல்லை. இவர்களின் உழைப்பு ஒரு பக்கம் (குளம் கட்டுவதற்கான கட்டுமானார்களின் உழைப்புப் போல)இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அது உலகிற்கு சொந்தமானது. கொஞ்சம் ஆழாமாய் பார்த்தால் வானமும் மண்ணும் அளித்த இயற்கை பொருட்களே விலை என்ற பெயரில் பணமாக செல்வமாக அவர்களிடம் போய் சேர்ந்து உள்ளது. ஆக அந்த செல்வம் ஊர் மக்களுக்கு உதவ வேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அதனை உடையவனே பேரறிவாளன். அவனுடைய செல்வம் ஊருணி நீர் போன்று உலகத்திற்கானது. மக்கள் உரிமை கொண்டாடலாம் என்று அர்த்தமில்லை. அச்செல்வத்தை அவன் மட்டும் அனுபவிக்காமல் அந்த மக்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்.

ஊருணி இருப்பது என்பதற்க்காக மழைப்பெய்யவில்லை. ஊருணி இயற்க்கையின் கொடையை சேமித்துத்துவைத்துள்ளது. அதுப்போல் ஒருவர் சூழ்நிலைகளால் நல்ல அறிவு பெற்றுவிடுகிறார். அவர் தானாக இவ்வுலகில் கற்றது என்று என்பது மிக மிக குறைவே. அவர் காலச்சங்கிலியில் ஒரு கொப்பளம் போன்ற மிக மிக சிறிய ஒன்று. அவர் முந்ததைய சந்ததியரின் அறிவு செயல்பாட்டின் ஒரு சிறு துளி மட்டுமே. ஆதலால் அவ்வறிவுச்செல்வம் பொதுவானது. அதனை பிறர்க்கு பயன்படும் வண்ணம் பகிர்ந்தளிப்பதே அறமாகும். அதேப்போல் பொருட்செல்வமும் பலரின் உழைப்பால் குவிந்தவை. அவற்றை பகிர்ந்தளிப்பதே அறமாகும்.

நீர் என்பது அத்தியாவசிய தேவை. ஒரு ஒப்புரவாளன் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கொடுக்கிறவனாக இருக்க வேண்டும். அதுப்போல் அறிவும் செல்வமும் அத்தியாவசியம் ஆகும்.
=====
கேணி, பிரத்யேகக் குடும்பக் கேணி அல்ல. ஊருண் கேணி. இந்த வார்த்தையே வெகு அழகு. கிணறுகளில் தண்ணீர் சேந்த மறுக்கப்பட்ட வரலாறு கொண்ட இச்சமூகத்தில் , இந்த வார்த்தை முக்கியமானது.
அந்தக் கேணி நீர் நிறைந்திருப்பது இன்னொரு நல்லூழ்.
பேரறிவாளன் செல்வம் அது போன்றது. என்றால், பேரறிவு என்பது தான் ஈட்டிய பொருள் தனது மட்டுமே என்று கருதாத அறிவு.
எல்லோராலும் பொருள் ஈட்ட இயலாது. ஈட்டுபவர்கள் அதைத் தேவைப்படுவோர்க்குத் தந்துவுவதே சமூக அறம்.
காந்தியின் தர்மகர்த்தா முறை.
=====

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர் உவந்த உவகை” (அகநா 42:9-11)

“ஊருணி நிறையளவும் .... மறுக்கின்றார்கள் யார்” (கம்ப..மந்திரப் 82)

“வள்ளிய ராயோர் செல்வம் மன்னுயிர்க் குதவு மன்றோ” (கம்ப.சேதுபந்தன 24)

“ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்” (அப்பர்.மறைக்காடு 5)

“ஊருணி யுற்றவர்க்கு” (திருக்கோவையார்.400)


ஊருணியின் நீர் அந்த ஊருக்குள் பெய்யும் மழை. அந்த ஊரின் ஊற்று. அந்த ஊருணி நிறைவது மழையாலும் ஊற்றாலும். ஆகவே அது ஊருக்குச் சொந்தமானது. அவ்வாறுதான் செல்வனின் செல்வமும். அவனுடையது அல்ல அது. வானமும் மண்ணும் அவனுக்கு அளித்தது அது. ஆகவே அது ஊருக்கு உதவவேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அப்பேரறிவை உடையவனின் திருவே ஊருணி போல உலகாக்குவது. இந்த வாசிப்பை கவிதையின் தனிமொழி அடைந்தவனே செய்வான். அவனே கவிதைவாசகன். அவனுக்கே இது கவிதை.

பரிமேலழகர் உரை
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
Corporate Social Responsibility (CSR) is the development of the twentieth century management practice. There have been debates on the relevance of Corporate Social Responsibility and doing charity with shareholders' money. “Corporate Social Responsibility is sincerely considering the impact of the company's actions on society,” 

(Koontz, 1990). Corporate Social Responsibility includes social responsiveness also. “Social Responsiveness is the ability of a corporation to relate its operations and policies to the social environment in ways that are mutually beneficial to the company and to the society,” (Koontz, 1990). Valluvar anticipated the need for organizations to be socially responsible and provided his views on the importance and objectives of Corporate Social Responsibility. Kurals support the need for business organizations to serve the society in which they operate.

Valluvar presented his views on social obligations of an organization in Kural 215. He uses a rich simile to advocate the importance of service to the society.

The wealth of a wise philanthropist 
Is a village pool ever full.

The wealth with a person, who considers it as an obligation to help the needy, is like a fountain in a village that keeps giving water for the needs of all the people in that village. The fountain is always overflowing. There is no lack of water. Similarly, wealth keeps increasing in a person who uses his wealth to the welfare and the development of his society. 

English Meaning - As I taught a kid - Rajesh
Water accumulated in a pond gathered from rain and other drainage sources is common for the uses of entire people in the village/city/world. Because rain showered for the entire village/world. Not just for the pond.

Similarly, a knowledgeable intelligent person and wealthy person should contribute and benefit the society. Because the knowledge a person has is not just his/her knowledge. He/She didn't start from scratch. They have gained knowledge from the society which has carried it over centuries. Hence, knowledge and wealth of an intelligent person should be useful for many people.

Questions that I ask to the kid
How would you relate a water pond with knowledge?
Is Pond water common for all? What would you relate this to? Why? Why a person who has worked hard to gain knowledge should not think that it is his earned knowledge?