Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

036 மெய்யுணர்தல்

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - மெய்யுணர்தல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு

குறள் 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

குறள் 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து

குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி

குறள் 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

குறள் 358

குறள் 359

குறள் 360

இருள்நீங்கி இன்பம் பயக்கும்

குறள் 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
மாசறு காட்சி யவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

நீங்கி - நீங்கல் - விலகுகை; பிளப்பு; புறம்பு.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு.

நீங்கி - - நீங்கல் - விலகுகை; பிளப்பு; புறம்பு.

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அறு - aṟu   II. v. i. break as a rope does be cut asunder; அறுக்கப்படு; 2. be decided, be ended, தீர்க்கப்படு., aṟu   IV. v. i. cease, end, தீரு; 2. vanish, become extinct, இல்லாமல் போ, aṟu   VI. v. t. cut off, part asunder, வெட்டு; 2. kill by cutting the throat; 3. reap, அரி; 4. root out; 5. distribute, பகிர், 6. tease, worry, வருத்து; v. i. become a widow.

அறுதல்- கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

அவர்க்கு - அவருக்கு

முழுப்பொருள்
இன்பம் பயக்கும் மெய்யறிவு, வீடுபேறு என்கிற காட்சியை வேண்டுபவர் தன்னுள் உள்ள இருள் (எனும் மயக்கம், அறியாமை, துன்பம், குற்றங்களை) நீக்கிக்கொள்ள வேண்டும், எதன் மேலும் மயக்கம் அல்லது வியப்பு கொண்டு இருந்தால் அதில் இருந்து நீங்க/விலக வேண்டும், தன்னுள் உள்ள எவ்வித ஒரு மாசு (அழுக்கு, தீமை, பாவம், குற்றம், இருள்) ஆகியவற்றை அறுத்தல் வேண்டும்.

(தன்னுள் உள்ள அறியாமை நீக்கி மயக்கத்தை நீக்கி மாசினை அறுத்தால்) அவ்வாறு செய்தால்  அவர் இன்பம் பயக்கும் மெய்யுணர்ச்சியை அடைவார்.

கீழ்காணும் கம்பனின் கார்காலப் படலப்  (105) பாடல், மெய்யுணர்வால் பொருள்கள் மீது பற்று நீங்கதலை பாடுகிறது.
தீவினை, நல்வினை, என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்தனைஅறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு அணுக, ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது -மாரிப் பேர் இருள்

பொருளாசையானது தீவினையை நல்வினை என எண்ணச் செய்யும். மெய் உணர்வால் பொருள் மீதுள்ள பற்றாகிய மாயை நீங்கும்.  அதுபோல முன்பனிப் பருவம் வந்தவுடன் மழைக்காலத்துச் செறிந்த இருள் நீங்கியது என்பது இவ்வுவமையின் கருத்து.

“மருளில் வண்குரு கூர்வண் சடகோபன்
தெருள்கொள்ளச் சொன்ன ஓரா யிரத்துள்” (திருவாய்.2.10:11)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மருள்நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும். (இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.

மு.வரதராசனார் உரை
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Darkness will give way to joy/happiness (that will lead to moksha), when delusion / deception / fantasy is replaced with a flawless (pure) vision. Many of us would have lots of impurities (impure thoughts), perform wrong actions, delusional thoughts. If one gets conscious of those and replaces them with a flawless vision, we can come out of the darkness and enjoy true happiness.

Questions that I ask to the kid
What to do to move out of darkness? 
Delusion vs flawless vision. Which one will you choose? Why?


035 துறவு

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - துறவு

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்

குறள் 342
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டுஇயற் பால பல

குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

குறள் 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

குறள் 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

குறள் 346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்

குறள் 347


குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை

குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.

வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

ஐந்தன் - ஐந்து
புலத்தை - புலன்கள் - ஐம்புலன் நுகர்ச்சி யாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவை; பொறி; கருமேந்திரியம்; அறிவுடைமை; அறிவுக்கூர்மை; வெளிப்படக்காண்டல்; உறுப்பு; வயல்; நூல்வனப்புள்ஒன்று.

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்.


வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

வேண்டிய - vēṇṭiya   adj. id. 1. Indispensable; இன்றியமையாத. 2. Required; தேவையான. 3. Sufficient; போதுமான. 4. Many;மிகுதியான. வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ(தாயு. மண்டலத். 10)

எல்லாம் - முழுதும்

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு.

முழுப்பொருள்
அடல் என்றால் வலிமை, வெற்றி என்ற பொருளிலே இங்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் ஒருவருக்கு வலிமை வேண்டும் என்றால் அவர் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும், நாம் ஆசைப்படுகின்ற எல்லாவற்றையும் ஒருசேர விட்டொழிய வேண்டும். அவ்வாறு செய்தால் அது நமக்கு வலிமையே. முன்பு குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் சொன்னதுப்போல வேண்டாம் என்று விடுவதனால் நமக்கு இன்பமே. அதுப்போலவே இக்குறளில் சொல்லப்படுவது என்னவென்றால் விட்டொழிவதனால் வலிமை நமக்கு என்கிறார் திருவள்ளுவர். வலிமை வேண்டும் என்றால் வலிமைக்கு தடைகற்களாய் இருக்கின்ற அனைத்தையும் (ஐம்புலன்கள், ஆசைகள்) ஒருசேர விட்டொழிய வேண்டும். 

ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் கருவி என்றால் அது நமது மனசாகும். உதாரணமாக, ஒருவருக்கு கண்ணைத் திறந்துக்கொண்டே தூங்கும் பொழுது  (அது உண்மையில் ஒரு நோயும் குட) அவர் எதையும் பார்ப்பது இல்லை. ஏனெனில் அவர் மனசு தான் பார்க்கிறது (அறிவியலாக பார்த்தால் ஒருவர் தூங்கும் பொழுது கண்ணுக்கும் மூலைக்கும் உள்ள ஒரு நரம்பு செயலில் இருக்காது). ஆதலால் வலிமை வேண்டும் என்றால் ஐம்புலன் நுகர்ச்சி யாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவற்றை அடக்க வேண்டும். அதனால் வரும் ஆசைகள் அனைத்தையும் விட்டொழிய வேண்டும். 

பரிமேலழகர் உரை “வீடு எய்துவாருக்கு”என்கிறது. மறுப்பதற்கு இல்லையென்றாலும், அவர் கீழ்காணும் நாலடியாரின் பாடலையொட்டி பொருள் செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. அப்பாடலானது:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும். (நாலடி 59)

“கசட்டுறு வினைத்தொழிற் கள்வ ராயுழல்
அசட்டர்கள் ஐவரை அறுவ ராக்கிய
வசிட்டன்” (கம்ப.திருவவதார.77)

“ஐந்தொ டாகிய முப்பகை மருங்கற அகற்றி
உய்ந்து போயினர்” (கம்ப.மந்திர 64_

“மிடலுறு புலன்கள் வென்ற மெய்த்தவர்”
“அடக்கிஐம் புலன்கள் வென்ற தவப்பயன்’ (கம்ப.கடல்தாவு.11,29)

“வீடுமின் முற்றவும்” (திருவாய் 1.2:1)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.

மு.வரதராசனார் உரை
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.

034 நிலையாமை

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - நிலையாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

குறள் 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று

குறள் 333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

குறள் 334
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

குறள் 335

குறள் 336

குறள் 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

குறள் 338

குறள் 339



நாளென ஒன்றுபோல் காட்டி

குறள் 334
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு
நாள் - nāḷ   n. 1. [T. nāḍu, M. nāḷ.] Dayof 24 hours; தினம் சாதலொருநா ளொருபொழுதைத் துன்பம் (நாலடி, 295). 2. [T. nāḍu, M. nāḷ.]Time; காலம் பண்டைநாள் (கம்பரா. நட்பு 43).3. Lifetime, life; ஆயுள் நாளோடு வாள்கொடுத்தநம்பன் றன்னை (தேவா. 219, 10). 4. Auspiciousday; நல்ல நாள் நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து(நாலடி, 86). 5. Early dawn; காலை நாண்மோர்மாறும் (பெரும்பாண். 160). 6. Forenoon; முற்பகல் நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை(நாலடி, 166). 7. Lunar asterism; நட்சத்திரம் திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286).8. Lunar day, period of the moon's passagethrough an asterism; திதி (W.) 9. Freshness,newness; புதுமை கோதையை நாணீராட்டி (சிலப்.16, 8). 10. Youth, juvenility, tenderness;இளமை. நௌவி நாண்மறி (குறுந். 282). 11. New-blown flower; அன்றலர்ந்த பூ பொன்குறையுநாள்வேங்கை நீழலுள் (திணைமாலை. 31). 12. Asymbolic expression of the last metrical footof one syllable, in veṇpā

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு; eṉṟu   என்-. part. 1. That, usedas a relative part. when it ends a quotationand connects it with the following part of thesentence; என்றுசொல்லி. 2. In special orelliptical constructions, in which it is used as aconnective part. (a) between verbs, as in நரைவரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between anoun and a pronoun, as in பாரியென் றொருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: (d) between an imitative soundand a verb, as in ஒல்லென் றொலித்தது: (e) between an abstract noun and a verb, as in பச்சென்று பசந்தது: (f) between words defining thingsenumerated, as in நிலனென்று, நீரென்று; வினைபெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றிவரும் இடைச் சொல் (தொல். சொல், 261, உரை: நன் 424.) 3. An expletive; ஒரு சொல்லசை. கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.  

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்; pōl   போலே, போல, a particle of comparison, as, so as, like.

காட்டி - காட்டுதல்காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

ஈரும் - அரிதல்; அறுத்தல் இழுக்கப்படுதல்.

வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு

வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.- 

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணர்வார்ப் - உணர்ந்து (அதன் படி நடப்பவர்)

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள் (ஜெயமோகன் அவர்களின் உரைகள் இரண்டுமே மகத்தான விளக்கங்கள்)
ஜெயமோகன் உரை [நாள் என]
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்;
வாள் அது உணர்வாற் பெறின்.

உணர்ந்து பார்ப்பவரின் கண்ணில் பார்வைக்கு ஒன்றுபோலவே இருக்கக்கூடிய பற்பல நாட்களாகத் தன்னைப் பிரித்துக்காட்டும் அது ஒரே வெட்டாக உயிரை வெட்டித்தறிக்கும் வாள் போன்றதாகும்.

காலம் நம்மால் துளித்துளியாக உணரப்படுகிறது. நொடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் வருடங்கள். இவை நம் பிரக்ஞையால் உணரப்படுபவை. துண்டுபட்ட காலம் இது. [கண்டகாலம்].

ஆனால் இந்தப் பகுப்புக்கு அப்பால் காலம் என்பது என்ன? அது ஒரே பெருநிகழ்வு. துண்டுபடாத காலம் அது [ அகண்டகாலம்] பிரபஞ்சம் என்பது ஒரே பெருநிகழ்வு. நாம் பிரித்துக்கொள்ளும் காலம் இல்லையேல் அது ஒரு கணம் என்றே சொல்லலாம்.

இருவகைக் காலத்தையும் ஒரேவரியில் சொல்கிறது இக்குறள். மின்னல் போலக் கண்ணிமைக்கும் கணத்தில் நிகழ்வதை நாள் நொடி எனப்பிரித்து உணர்ந்து அதில் திளைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.

ஜெயமோகன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து எடுத்த ஒரு பகுதி உரைநடையாக [குறளிது - நாள் 3 பகுதி 1 @ 44:35 to 48:00]


வானவன் மாதேவி அவர்கள் (2017 ஜனவரியில் இறந்தார்கள்) தசைச்சிதைவு நோயால் பல நாட்கள் அவதிப்பட்டு இறந்துப்போனார்கள்.  ”நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்”. இந்த நாள் தான் மறுநாள் என்று ஒன்றுபோல் காட்டி உயிரை வெட்டிச் செல்லும் வாள் அது உணர்வார் பெறின். அதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் உங்களுடைய உயிரை கொஞ்சம் வெட்டி எடுக்கக் கூடிய ஒரு வாள் அது. நமது ஊர்களில் ஒரு பெரிய வெல்லம் (jaggery) மனையினை வைத்து இருப்பார்கள் குறிப்பாக திருச்செந்தூர் திருவிழாவில். ஒரு நல்ல (nice or soft) வாளினால் அதனை சீவி (வெட்டி) கொடுப்பார்கள் (ஒரு பைசா/ரூபாய் இரண்டு பைசா/ரூபாய் என்று விற்பார்கள். பையன்கள் விளையாட்டாக வாங்கி சாப்பிடுவார்கள்). அந்த வாள் போன்று ஒவ்வொரு நாளும் நீங்கள் கொண்ட உயிர் என்ற வெல்ல கட்டியை சீவி சீவி எடுக்கிறது அந்த வாள்.

(நாள் என ஒன்று) நிகழ்வதே தெரியாமல் ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் உணர்வார் பெறின். பெரும்பாலானவர்கள் அதனை உணர்வது இல்லை. தருமன் யக்ஷனை சந்திக்கும் பொழுது யக்ஷன் கேட்கிறான், இப்பூமியில் மாபெரும் அதிசயம் என்பது என்ன? ஒவ்வொரு நாளும் மானிடர் இறந்துக்கொண்டு இருந்தாலும் நான் மட்டும் கடைசிவரைக்கும் வாழ்வேன் என்று ஒவ்வொருவரும் நினைப்பது போல மகத்தான விந்தையான ஏதும் பூமியில் இல்லை என்று தருமன் பதில் சொல்கிறான். சரியான பதில் என்று யக்ஷன் ஒத்துக்கொள்கிறான்.

(எனக்கு தெரிந்த வரையில் எனக்கு தெரிந்த நபர்களில்/நண்பர்களில்) வானவன் மாதேவி அளவிற்கு அறத்தின் பொருட்டென வாழ்ந்த என்றும் பிறர்க்கென வாழ்ந்த யாரும் கிடையாது. தன் துயரை பிறர் மகழிச்சிக்கென மாற்றிக்கொண்டு வாழ்ந்தார்கள்.  ஏன் அவர்களுக்கு அத்தகைய வாழ்க்கை வாய்த்தது? அவ்வளவு மகத்தான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நிறைவை அடைய முடிந்தது என்றால் அதற்கு காரணம் நாட்கள் எண்ணி தரப்பட்டு இருக்கின்றன என்ற எண்ணம் வானவன் மாதேவி அவர்களுக்கு வந்தது. வானவன் மாதேவி வளரும் பருவத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறார்கள். உயர்நிலை பள்ளியில் கால் தடுக்கி ஒரு நாள் கீழ் விழுகிறார்கள். ஐந்துமுறை கால் தடுக்கும் பொழுது கால் கொஞ்சம் வளைகிறது.  ஒரு மருத்துவர் சொல்கிறார் இது தசைச்சிதைவு நோய். அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள்.



ஐந்து ஆண்டுகள் என்று தெரிந்த உடனே வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு பொருள் இல்லாமல் போய்விடுகிறது. சொத்து சேர்க்க வேண்டியதில்லை, பிள்ளைகளை கரைசேர்க்க தேவையில்லை, பேர குழந்தைக்கு கல்யாணம் செய்துவைக்கத் தேவையில்லை.

ஐந்து ஆண்டுகள் தான். அந்த ஐந்து ஆண்டுகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் முக்கியமாகிவிடுகிறது. ஒரு கணம் கூட தனக்கென முக்கியமாகபடவில்லை (வானவன் மாதேவிக்கு). அவ்வளவு மகத்தான வாழ்க்கை அமைய காரணம் நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளினை  (தசையிருக்க நோயை / ஐந்து ஆண்டு என்று) கண்ணால் அவர்கள் பார்த்தது தான்.

திருக்குறளைப் போன்ற ஒரு நூலை படிக்கும் பொழுது யாக்கை (உடம்பு) நிலையாமை பற்றிய அதிகாரத்தை பார்க்கிறோம். என்ன இது ஒரே பண்டார(ம்) தனமாய் இருக்கிறது என்று நமக்கு தோன்றும். ஆனால் வாழ்க்கையை கொண்டாடுவதற்கும்  வாழ்க்கைய அனுபவிப்பதற்கும் வாழ்க்கையை வகுத்துக்கொள்வதற்கும் தான் நாம் நூல்களை (பொதுவாக) படிக்கிறோம்.. இதெல்லாம் கோப்பலங்கள், எல்லாம் அழிந்துப்போய்விடும் என்று ஒருவர் சொல்லும் பொழுது, அதான் தெரிந்ததே வேறு விஷயம் சொல்லு என்று நாம் சொல்வோம்.

ஆனால் இந்த வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த வாள் அதன் நிழல் நம் தலைக்கு மேல் அவ்வப்போது கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. நாம் அனைவரும் செய்யாத ஒன்றை (வானவன் மாதேவி) அவர்களால் செய்ய முடிகிறது என்றால் அதற்கு காரணம் அதனை அவர்கள் உணர்ந்ததனால் தான்.


வானவன் மாதேவி பற்றி
1) வானம்
2) மகத்தான சந்திப்பு
3) அஞ்சலி : வானவன் மாதேவி
4) வானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா
5) வானதி- நினைவுகளினூடாக…
6) நம்பிக்கை மனுஷிகள்  -- காணொளி
7) என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு
8) Care for the Future

(குறும்படம் - காணொளி)


ஒப்புமை
”வாள்போல் வைகறை வந்தன்றால்” (குறுந்தொகை 157:4)

“தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்” (நாலடி.7)

“வாள்க ளாகி நாள்கள் செல்ல” (திருச்சந்த விருத்தம் 112)

”நாளடி யிடுதல் தோன்று நம்முயிர் பருகும் கூற்றின்
வாளின் வாய்த் தலைவப் பாக்கும்ச் செல்கின்றோம் வாழ்கின் றோமே” (குண்டல)

மேலும்: அஷோக் உரை

மானுடர் மறக்கவிரும்புவது எதை? ஒவ்வொரு கணமும் உள்ளத்தில் பொத்தி அணைத்திருக்கும் அனைத்தையும்தானா? நிணம்வழுக்க குருதிமழைக்க தலைகள் காலில் இடறும் போர்க்களத்தில் அவன் அக்களியாட்டை கண்டிருக்கிறான். இறந்த முகங்களிலும் சிலைத்திருக்கும் அக்களிவெறி. மானுடர் வெறுப்பது பொழுதென்று சுருண்டு எழுந்து நாள்என்று நெளிந்து காலமென்று படமெடுக்கும் நச்சை. காலத்தை வெல்வதே அமுது. அமுதுண்டவர் இவர். தேவர்கள் இவர்கள்.

நாளடைவில் ஒவ்வொன்றும் அதன் ஒழுக்கை தானே அடைகின்றது. நதிப்பெருக்கில் வீசப்பட்ட பொருட்கள் பெருகுதிசைக்கு முகம் திருப்பி, ஒன்றோடொன்று முட்டிமோதி தங்கள் ஒழுகுவடிவை தாங்களே அமைத்துக்கொள்வதுபோல. அன்றாடம் என்னும் பெருக்கு. அரிதையும் பெரிதையும் எளிதுக்கும் சிறிதுக்கும் வேறுபாடில்லாமலாக்கி தன்னுள் அடக்க அதனால் இயலும். சென்றதையும் வருவதையும் அக்கணம் என்று உருமாற்றகூடிய மாயம்  அது. அன்றாடத்தில் அனைத்தும் பயன்பாட்டுப் பொருள் மட்டுமே கொள்கின்றன. செயல்பாட்டு வடிவம் மட்டும் பூண்கின்றன. ஆகவே அனைத்தும் தங்கள் உட்பொருள் அழிகின்றன. நிலைவடிவு கரைகின்றன.

உட்பொருளும் நிலைவடிவும் அழிந்த ஒன்று இல்லை என்றாகிறது. அன்றாடத்தில் அன்றாடம் அன்றி பிறிதொன்றில்லை. அதை அறியும் உள்ளத்தின் தன்னிலை அன்றி பிறர் எவரும் இல்லை. அன்றாடத்திற்கு அப்பால் உண்மையில் ஏதேனும் உள்ளதா? அது அன்றாடத்தின் எளிமைகண்டு அகம்கசிந்த உள்ளம் விழைவது மட்டும்தானா? வெறும் எண்ணம் மட்டுமா? ஈவிரக்கமற்றது, இடைவெளியின்றி நிறைவது, எதிரீடற்றது, இறைவடிவமோ என்று மயங்கச்செய்வது. அன்றாடத்தின் பெருக்கில் முற்றிலும் மூழ்கி மறைந்து காலத்துளி ஒன்றாக மாறிப்போனான் ஆயுஸ்.

பரிமேலழகர் உரை
நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.).

மணக்குடவர் உரை
நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Time shows that each and every day are same. However, like a sharp sword, time slices and takes away each day away from our life. Hence, those who realizes that our life is short, we wont' live forever, our life is volatile and, there is no guarantee and choice on death date will intensely utilize every day of their life effectively and do productive works to make their life and world better. They will not post pone stuffs. So, அன்றறிவாம் என்னாது அறம்செய்க.
In Mahabharata, when Yakshan asks Dharma what is the most amusing thing on the earth? Dharma replies that everyday humans see many humans are born and die. Yet, humans believes that nothing will happen to them/their health and they will live for ever. This illusion/maya is the most amusing thing on the earth. Dharma says correct.

Questions that I ask to the kid
Are all days same? Give an example related to it

033 கொல்லாமை

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - கொல்லாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று

குறள் 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை

குறள் 328

குறள் 329
 
குறள் 330